ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

25. ஏகலைவனின் ஏந்திழையாள்- விமர்சன திரி

Gowri

Well-known member
#TT_24

#கௌரிவிமர்சனம்

#ஏகலைவனின்_ஏந்திழையாள்…

ஆன்டி ஹீரோ கதை🤩🤩🤩🤩

பாடகியான மான்சியை, விஜித் கடத்த….இவன் தான் கடத்தினான்னு தெரியாம அவனையே காதலிக்க….

நம்ம வேலை ஈஸினு, அவளை யோசிக்க விடாம கல்யாணம் வரை கொண்டு வந்தரான்……

தீரா பகை மான்சி அப்பா அம்மா மேல…..

அவனோட வஞ்சத்தை, நஞ்சா அவங்க மேல காட்ட….

இனி உன்ன கட்ட மாட்டேனு மான்சி ஜூட் விட…..

ஒரு விடியோவ்வில் அவன் ஆப்பை அனுப்ப…..

அப்பறம் என்ன டும் டும் டும் தான்….

இனி வரது எல்லாம் தரமான செய்கைகள் மான்சி ஓடது…..

அம்மாவுக்காக பழிவாங்க நினைச்ச விஜித்….

அவங்க உண்மை முகம் தெரிய வந்தால்?????

தப்பை உணர்ந்து அதை சரி செய்ய நினைக்க காலம் கடந்து விட்டது…..

ஏன் இவளோ வன்மம்????

கதை பரபரப்பா கொண்டு போய் இருக்கரங்க ரைட்டர்….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
#ஏகலைவனின்_ஏந்திழையாள்

#Trending_Templates

#Anti_hero

#கதை_விமர்சனம்_1

#மதுஷா_வஞ்சிக்கொடி

View attachment 1973
தன் பெண்ணே உலகம் என்று வாழ்ந்து வருகின்றனர் திலகன் - வெண்பா தம்பதியினர்.. அவர்களுக்கு ஒரே பெண் மான்சி ஏந்திழையாள்…


இளம் பாடகியாக வலம் வரும் மான்சி ஏந்திழையாள் விருது விழா ஒன்றில் காணாமல் போகிறாள்.. அவளை கடத்தியது யார்? என வலைப் போட்டுத் தேடும் வேளையில் விஜித் ஏகலைவன் அவளை காப்பாற்றி மீட்டுக் கொண்டு வருகிறான்..


தன்னைக் காப்பாற்றிய ஏகலைவன் மீது காதல் கொள்கிறாள் ஏந்திழையாள். விஜித் அவளிடம் தன் காதலை சொல்லுமுன்பே, பெற்றோரிடம் எதையும் மறைக்காத ஏந்திழையாள் தனக்குள் வேரூன்றி முளைத்த காதலை பற்றியும் சொல்லி விடுகிறாள்…


பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சி தான். இருவருக்குள்ளும் மிகப்பெரிய போராட்டம் ஒன்று நிகழ்கிறது..


போராட்டம் தான்.. தன் பெண் மான்சிக்கு இருக்கும் குறையை உலகிற்கே தெரியாமல் மறைத்து வாழும் அவர்கள் விஜித் ஏகலைவனை சற்றும் நம்ப மறுக்கின்றனர்..


அதற்கும் ஏற்றாற்போன்று விஜித்தின் குணங்கள் இருக்கின்றது.. நிச்சயதார்த்த விழாவில் ஆரம்பித்து கல்யாணம் முடியும் விஜித் ஏகலைவன் அவன் நினைத்ததை மட்டுமே நடத்தி முடிக்கிறான்…


மான்சியை அவளே அறியாமல் அவளின் பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுக்கிறான்…


அவன் மேல் இருக்கும் காதலில் தன் பெற்றோரிடமிருந்து விலகுவதைக்கூட அறியாமல் இருக்கிறாள் மான்சி…


தன் பெண்ணின் மனதுக்குப் பிடித்தவனை கல்யாணம் செய்து கொள்வதற்காக எல்லா விஷயத்திலும் விட்டுக் கொடுத்துச் செல்கின்றனர் திலகன் - வெண்பா தம்பதியினர்..


திருமண வரை மனச்சுணக்கத்தில் இருந்து வரும் திலகன் - வெண்பா தம்பதியினர் விஜித் ஏகலைவனின் தாயை பார்த்து வெகுவாக அதிர்ந்து நிற்கின்றனர்..


ஒரு புறம் அதிர்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் இனி தன் மகளை பற்றிய கவலையில்லை என்ற நிம்மதியுடன் தாங்கள் பலகாலம் வாழ்ந்த மலைப்பகுதிக்கு செல்கின்றனர் திலகன் - வெண்பா தம்பதியினர்..


விஜித்துடன் தன் கல்யாணக் கனவை எண்ணி மனதில் சந்தோஷத்துடன் அடியெடுத்து வைக்கும் மான்சிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியையும், வேதனையையும் மட்டுமே கொடுக்கிறான் விஜித் ஏகலைவன்..


அவளின் குறையை பற்றி அறிந்துக் கொள்ளும் விஜித் ஏகலைவன், அதையே பகடைக்காயாய் எண்ணி அவளை அவமானப்படுத்த எண்ணுகிறான்… அவனின் எண்ணம் நிறைவேறியதா??


தன் தாய் தந்தையை பிரிந்திருந்தாலும் அவர்களின் நினைவில் மான்சி வாழ்வதை நினைக்கும் பொழுதே விஜித்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை…


திட்டம் போட்டு மான்சியின் தந்தை திலகனை ஜெயிலுக்கு அனுப்புகிறான்.. அதுவும் ஒரு பெண்ணை கற்பழிக்கபட்ட குற்றத்தில்.‌‌.. திலகனுக்கு எதிரான அத்தனை ஆதாரங்களையும் மிகவும் ஸ்டாரங்காக வைத்துள்ளான் விஜித்..


தன் தந்தையின் மேலுள்ள பாசத்தில் முக்கிய முடிவு எடுக்கும் மான்சிக்கு காதல் வலியை மட்டுமே கொடுக்கிறது…


விஜித் தன் கர்வத்தில் இருந்து இறங்கி வருவானா? 😡


மான்சி தன் பெற்றோரை காப்பாற்றுவாளா


உலகிற்கே மறைக்கும் மான்சியின் குறை தான் என்ன 🤔🤔🤔🤔


விஜித் ஏன் திலகாவையும் வெண்பாவையும் இப்படி பாடாய்படுத்துகிறான் 🤔🤔🤔🤔


திலகாவும் - வெண்பாவும் விஜித்தின் தாயைப் பார்த்து ஏன் அதிர்ச்சியாகின்றனர் 🤔🤔🤔


இத்தனைக்கு விடை தெரிய வேண்டுமென்றால் கதையை மிஸ் பண்ணாமல் படிக்க ஆரம்பிங்க 🤗🤗🤗😘😘😘


இப்படி பல வினாக்களோடு கதையை மிகவும் சுவாரசியமாக கொண்டு சென்ற ரைட்டருக்கு வாழ்த்துக்கள் 🤝🤝🤝


போட்டியில் வெற்றி பெற மீண்டும் வாழ்த்துக்கள் மா 🤝🤝🤝❤️❤️❤️
கவர் பிக் செம டியர்..
விமர்சனம் ரொம்ப சூப்பர்.
தேங்க்யூ சோ மச்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
#TT_24

#கௌரிவிமர்சனம்

#ஏகலைவனின்_ஏந்திழையாள்…

ஆன்டி ஹீரோ கதை🤩🤩🤩🤩

பாடகியான மான்சியை, விஜித் கடத்த….இவன் தான் கடத்தினான்னு தெரியாம அவனையே காதலிக்க….

நம்ம வேலை ஈஸினு, அவளை யோசிக்க விடாம கல்யாணம் வரை கொண்டு வந்தரான்……

தீரா பகை மான்சி அப்பா அம்மா மேல…..

அவனோட வஞ்சத்தை, நஞ்சா அவங்க மேல காட்ட….

இனி உன்ன கட்ட மாட்டேனு மான்சி ஜூட் விட…..

ஒரு விடியோவ்வில் அவன் ஆப்பை அனுப்ப…..

அப்பறம் என்ன டும் டும் டும் தான்….

இனி வரது எல்லாம் தரமான செய்கைகள் மான்சி ஓடது…..

அம்மாவுக்காக பழிவாங்க நினைச்ச விஜித்….

அவங்க உண்மை முகம் தெரிய வந்தால்?????

தப்பை உணர்ந்து அதை சரி செய்ய நினைக்க காலம் கடந்து விட்டது…..

ஏன் இவளோ வன்மம்????

கதை பரபரப்பா கொண்டு போய் இருக்கரங்க ரைட்டர்….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
தேங்க்யூ சோ மச் டியர். விமர்சனம் ரொம்ப அருமையா இருக்கு. நன்றி
 
Top