santhinagaraj
Active member
ஏகலைவனின் ஏந்திழையாள்
விமர்சனம்
பாசம் காதல் கலந்த ஆன்டி ஹீரோ கதை.
திலகன் வெண்பாவின் மகள் மான்சி திரைப்படத் துறையில் பிரபல பாடகியாக இருப்பவள்.
திரைத்துறையின் பிரபலமான மான்சியை வன்மத்தோடு கடத்துகிறார்கள் அவர்களிடம் இருந்து தப்பி வரும் மான்சி கடத்தியவனிடமே காப்பாற்றும் படி கேட்டு அவனின் மீது காதலில் விழுகிறாள்.
பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக விஜித் கடத்திய தன்னிடமே அடைக்கலம் கேட்பவளை வன்முத்தோடு பார்த்து அவள் காதலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவளை தனக்கு கீழ் கொண்டு வர முயற்சிக்க, மாமியின் மருத்துவ அறிக்கை அவன் கைவசம் வருகிறது.அவன் போடும் கட்டுப்பாடுகளிலும் அதிரடி முயற்சிகளிலும் மான்சி அவன் இன்னொரு முகத்தை தெரிந்து கொண்டு அவன் மீது காதல் இருந்தாலும் விலக முயற்சிக்க அவளின் தந்தையின் ஒரு வீடியோவை காரணம் காட்டி மிரட்டி கல்யாணம் செய்து கொள்கிறான்.
விஜித்துக்கு அப்படி என்ன வன்மம் மான்சி குடும்பத்து மேல?
மான்சிக்கு என்ன பிரச்சனை எதுக்கு அவ மருத்துவ குறிப்புகளை ஆராய்ச்சி பண்றான்?
மான்சியிடம் அப்படி என்ன வீடியோவை காட்டி மிரட்டுகிறான்.? விஜித் கொடுக்கும் குடைச்சல்களையும் மான்சி எப்படி எதிர்கொள்கிறாள் என்று கதை ரொம்ப சுவாரசியமாக கொண்டு போயிருக்காங்க ரைட்டர்..
விஜயாவின் சுயநலத்தால் வெண்பாவின் குடும்பம் அனுபவிக்கும் கொடுமைகள் ரொம்ப அதிகம்..
தாய் மீது இருக்கும் பாசத்தில் விஜித் செய்யும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் உச்சம்.
வெண்பா திலகன் இருவரின் மான்சியின் மீதான பாசம் ரொம்ப நெகிழ வைக்குது. தங்கள் குழந்தையின் குறையை சாபமாக நினைக்காமல் வரமாக நினைத்து அவளின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் பெற்றோர்களின் தியாகமும் உழைப்பும்அருமை.
இப்படி ஒரு இப்படி ஒரு பெற்றோருக்காக தன் காதலையும் விட்டுக் கொடுக்க நினைக்கும் மான்சியின் பாசமும் சூப்பர்
வெண்பா ஒவ்வொரு இடத்திலும் மகளுக்கு அரணாகவும் அவளுக்கு தேவையான நேரத்தில் தக்க அறிவுரையும் வழங்குவதும் மான்சிக்கான வெண்பாவின் ஒவ்வொரு செயல்களும் அருமை
குழந்தைகளின் பெயர்கள் ரொம்ப அருமையா இருந்தது.
கதை படிக்க சுவாரசியத்தோடு ரொம்ப நல்லா இருந்தது சூப்பர்
வாழ்த்துக்கள்
விமர்சனம்
பாசம் காதல் கலந்த ஆன்டி ஹீரோ கதை.
திலகன் வெண்பாவின் மகள் மான்சி திரைப்படத் துறையில் பிரபல பாடகியாக இருப்பவள்.
திரைத்துறையின் பிரபலமான மான்சியை வன்மத்தோடு கடத்துகிறார்கள் அவர்களிடம் இருந்து தப்பி வரும் மான்சி கடத்தியவனிடமே காப்பாற்றும் படி கேட்டு அவனின் மீது காதலில் விழுகிறாள்.
பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக விஜித் கடத்திய தன்னிடமே அடைக்கலம் கேட்பவளை வன்முத்தோடு பார்த்து அவள் காதலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவளை தனக்கு கீழ் கொண்டு வர முயற்சிக்க, மாமியின் மருத்துவ அறிக்கை அவன் கைவசம் வருகிறது.அவன் போடும் கட்டுப்பாடுகளிலும் அதிரடி முயற்சிகளிலும் மான்சி அவன் இன்னொரு முகத்தை தெரிந்து கொண்டு அவன் மீது காதல் இருந்தாலும் விலக முயற்சிக்க அவளின் தந்தையின் ஒரு வீடியோவை காரணம் காட்டி மிரட்டி கல்யாணம் செய்து கொள்கிறான்.
விஜித்துக்கு அப்படி என்ன வன்மம் மான்சி குடும்பத்து மேல?
மான்சிக்கு என்ன பிரச்சனை எதுக்கு அவ மருத்துவ குறிப்புகளை ஆராய்ச்சி பண்றான்?
மான்சியிடம் அப்படி என்ன வீடியோவை காட்டி மிரட்டுகிறான்.? விஜித் கொடுக்கும் குடைச்சல்களையும் மான்சி எப்படி எதிர்கொள்கிறாள் என்று கதை ரொம்ப சுவாரசியமாக கொண்டு போயிருக்காங்க ரைட்டர்..
விஜயாவின் சுயநலத்தால் வெண்பாவின் குடும்பம் அனுபவிக்கும் கொடுமைகள் ரொம்ப அதிகம்..
தாய் மீது இருக்கும் பாசத்தில் விஜித் செய்யும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் உச்சம்.
வெண்பா திலகன் இருவரின் மான்சியின் மீதான பாசம் ரொம்ப நெகிழ வைக்குது. தங்கள் குழந்தையின் குறையை சாபமாக நினைக்காமல் வரமாக நினைத்து அவளின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் பெற்றோர்களின் தியாகமும் உழைப்பும்அருமை.
இப்படி ஒரு இப்படி ஒரு பெற்றோருக்காக தன் காதலையும் விட்டுக் கொடுக்க நினைக்கும் மான்சியின் பாசமும் சூப்பர்
வெண்பா ஒவ்வொரு இடத்திலும் மகளுக்கு அரணாகவும் அவளுக்கு தேவையான நேரத்தில் தக்க அறிவுரையும் வழங்குவதும் மான்சிக்கான வெண்பாவின் ஒவ்வொரு செயல்களும் அருமை
குழந்தைகளின் பெயர்கள் ரொம்ப அருமையா இருந்தது.
கதை படிக்க சுவாரசியத்தோடு ரொம்ப நல்லா இருந்தது சூப்பர்
வாழ்த்துக்கள்