ஏகலைவனின் ஏந்திழையாள் எனது பார்வையில். திலகன் வெண்பா தம்பதிகளின் ஒரே மகள் மான்சி ஏந்திழையாள் திரைப்படங்களில் பாடகியாக பிரபலம் ஆகிறாள். இந்தக் குடும்பத்தை பழிவாங்க எல்லா சொத்துக்களையும் மான்சி பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டு மான்சியை அவள் அப்பாவிற்கு பிரச்சினைகள் வராமல் இருக்க வேண்டும் என்றால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டி திருமணம் செய்கிறான். திருமணம் முடிந்ததும் மான்சியை பெற்றோரை விட்டுப் பிரிக்கிறான்.
ஏகலைவன் செயல்களுக்கு மான்சியின் எதிர் நடவடிக்கைகள் என்ன என்பதையும் ஏகலைவன் ஏன் அப்படி நடந்துக் கொள்கிறான் என்பதையும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். ஏகலைவன் எதிர்மறை நாயகனாக நாம் வெறுக்கும் கதாபாத்திரம். மான்சி முதலில் காதல் என்று நம்பி அவனை விரும்புவதும் பிறகு அவனது செயல்களை உணர்ந்து மாற்றம் கொள்வதும் நன்று. வெண்பா அம்மாவாக தன் பெண்ணிற்கு தரும் கவனிப்பு யதார்த்தமாக இருக்கிறது. திலகனின் மனைவி மற்றும் மகளுக்காக மாறுவதும் நன்று.