ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

18. சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் - நாவலுக்கான விமர்சனங்கள்

T22

Well-known member
Wonderland writer
பொம்மு நாவல்ஸ் குறுநாவல் போட்டி

T22விதையில்இருந்துவிருட்சம்வரை

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம்

கதைஇல18

ஷாயினிகதைவிமர்சனம்15

எனது பார்வையில்!

வித்தியாசமான கவரும் வகையில் இக் கதை தலைப்பு! அதுவே கதையை மேலும் படிக்க தூண்டும் வகையில் அமைந்துள்ளது! சாதகமான விடயம் கதைக்கு மிகவும் பொருத்தமான தலைப்பும் கூட, இவ் குறு நாவலின் ஆசிரியர்க்கு எனது பாராட்டுக்கள்💐

கதையை படிக்க ஆர்வத்தை தூண்டி,
அதனோடு ஒன்றிபோக வைத்து நம்
அனைவரினையும் எம்மை பற்றிய சுய பரீசிலனையை செய்ய வைத்த கதை! இது என்றால் மிகையாகாது!🥰😘💕

மித்ரதுளசி, சாதாரண குடும்பத்தில் உறவுகளுடன் பிறந்து அதனை அறிய முன்னமே தனிமை வாழ்வை பெற்ற பெண்!. நமது வரையறைகளுக்கு இவள் அப்பாற்பட்டவள் இவளைச் சுற்றிய கதைகளமே இக்கதை!💕💕

மித்ரா, இவள் நம் அன்றாட வாழ்வில்
சந்திக்க கூடிய மனிதர்களிலும் நம்
அனைவரிலும் காண கூடிய நிறை குறை போன்ற இயல்புகள் கொண்ட பெண்.

பெண்ணவளிடம் இருக்கும் குறைகள்
நிறைகளை தாண்டி செல்லும் நிலை வரும் போது , விளைவுகள் அவளின் நினைப்பிற்கு அப்பாற்பட்டதாக ஒரு கட்டத்தில் மாற அவள் செய்த செயல் வினைகள் இறுதியில் பெண்ணவள் தீர்ப்பாகும் போது, அவளின் நிலை!
அவளுக்கு வாழ்வு என்றால் என்னது என்பது புரியும் போது மித்ரா வாழ்வு பாடமாக மாறுகின்றது!

நாம் விளையாட்டுக்கு செய்யும் சில
செயல்கள் வரைமுறையை தாண்டி
செல்ல நேர்ந்தால் அதன் விளைவு
கனவிலும் ஜீரணிக்க முடியததாக மாறும் அதுவே மித்ரதுளசி வாழ்வில்
நடப்பது!.

இதுவே #சாஸ்தீரம்மீறியகீர்த்தனம்!

என்று அவளுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் புரிய வருவது! இக்
கதைக்கு கிடைத்த வெற்றி 😘💕💐💐

மேலும், நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்கள் செய்யும்
செயல்களில் இருக்கும் குறைகளை கண்டுபிடித்து அதற்கு நீதிபதியாக தீர்ப்பு வழங்க எத்தனிக்கின்றோமே அன்றி எமது செயல்களில் உள்ள சரி
பிழைகளை பகுத்தறிய (ஒரு சிலரை தவிர) பலர் சிறிது கூட நினைப்பது இல்லை!

மற்றவர்க்கு தீர்ப்பை வழங்கவே நாம் ஆர்வம் கொண்டுள்ளோமோ தவிர எமது தப்புக்களை தீர்வின்றி பழியை மட்டும் அடுத்த நபரின் மேல் தள்ளவே
நிறைய விடயங்களின் மனித மூளை
நாட்டம் கொள்கிறது! 😓😓😓😓

இக் கதையில் மித்ராவை மட்டுமே
தப்பானவளாக நாம் குறை சொல்ல முடியாது ! என்றதும் அவளை சுற்றிய
நபர்களின் இறுதி முடிவு மரணமாக
மாறியதால் அவர்கள் மீது தவறே இல்லை என்பதையும் கூற முடியாது என்பதை கதையாசியர் சுட்டிக்காட்டிய
விதம் அருமையிலும் அருமை! எந்த
விதத்திலும் தற்கொலை எதற்கும்
தீர்வல்ல!

நம் செய்யும் வினைகளுக்கு தீர்ப்பை
வழங்க நம்மை படைத்த இறைவன்
ஒருவனுக்கே உரிமை உண்டு!அவன்
முன்னாடி நாம் அனைவரும் ஒன்றே!

தமது வினைகளுக்கு தாமே முடிவை தேடிய சரவணன், அமரன் , அருணா
சாத்வி இவர்கள் தமது முடிவுகளை தாமே விரும்பி ஏற்றனர்! ஆனால் அதனால் இவர்களுடன் கூடவே இருந்த நபர்களுக்கு ஏற்பட்டது?😭

இவர்கள் ஒரு சிலரை தவிர மற்றைய சிலரின் மித்ரா தாய், சித்தப்பா , அண்ணன் என்று இருக்கும் வெற்றி இத்தகைய நபர்களின் போலி விம்பம்
முன்னாடி மித்ரா கூட மன்னிக்க பட
கூடியவள் என்ற எண்ணம் மனதில் தோன்றுவதை தடுக்க முடியவில்லை!

ஆக மொத்தத்தில் இக் கதை மட்டும்
அல்ல! வாழ்விற்கான பாடம் ஒன்றே!

போட்டியில் வெற்றிபெற அத்தனை
அம்சங்களும் கொண்ட கதையாக
இக் கதை இருப்பது! அனைத்திலும்
சிறப்பு! 💐💐💐💕💕

கதை இறுதி அத்தியாயங்களில் கதையை மையப்படுத்தி ஆசியர் பகிர்ந்த சில விடயங்கள் அருமை!💕

கதை படிக்க கதை திரி👇 கருத்து பகிர கருத்து திரி 👇

❤️❤️❤️

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் கதை திரி


சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் கருத்து திரி

View attachment 1520
மிக்க நன்றி தோழி ❤️
 

T22

Well-known member
Wonderland writer
#கௌரிவிமர்சனம்

#videoediting

#சாஸ்திரம்_மீறிய_கீர்த்தனம்

ரொம்ப எதார்த்தமான கதை, நாம் செய்யும் ஒரு ஒரு தப்புக்கும் கண்டிப்பா தண்டனை இருக்கு…..

அதை சரியா புரிஞ்சி நடந்தா வாழ்க்கை நல்ல இருக்கும், ஆன இங்க நிறைய பேருக்கு அது புரியல🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

மித்ரா - இவளை சுத்தி தான் கதையே, இவ நிறைய தப்பு பண்ணி இருந்தாலும் அதுக்கு அடிதளம் அமைச்சு கொடுத்தது அவ வீடு தான்😒😒😒😒😒

அம்மா ஓட சரியான வழிகாட்டுதல் இல்ல, அண்ணன் ஓட கண்டிப்பு கலந்த பாசம் இல்ல, இப்படி எதுவும் இல்லாம வளர பொண்ணு எப்படி இருப்பா தான்தோன்றி தனமா தானே இருப்பா??????

அதுக்கு ஆன தண்டனையும் கிடைக்குது கடைசில……

இவ தப்புனா இவளால பாத்திக்க பட்டவங்களும் தப்பு தான்…..

இவ நல்லவன்னு சொல்ல வரல,இவ கேரக்டர் இது தான்…..

படைத்தவன் நீ எனில் பாவம் மட்டும் எனதா?????

இது எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது…..

மலர் - ஈடு இணை இல்ல பாசம் மித்ரா மேல இவளுக்கு அவளுக்கு அப்படியானு கேட்ட இல்ல தான்🙄🙄🙄🙄

கடைசி வரை இவ அன்பு மாறல🤩🤩🤩🤩

வெற்றி - என்ன மனுஷன் இவன் எல்லாம், பொண்டாட்டி மேல இருக்கற கொஞ்சம் அக்கறையை கூட பிறந்தவா மேல காட்டி இருந்து இருக்கலாம் இவன், அதை செய்யல, ஆன அவ தப்பு பண்ணினா மட்டும் தண்டிகர உரிமை மட்டும் உண்டா உனக்கு😤😤😤😤😤

மித்ரா அம்மா - தான் திருடி பிறரை நம்ப மாட்டாங்க அப்படிகரது இவங்க விசயத்தில் நூறு சதவீதம் உண்மை😬😬😬😬😬

இவங்க கேரக்டர்🤬🤬🤬🤬🤬🤬

அருணா - தன் வாழ்க்கையை ஒழுங்காக வாழ தெரியாத முட்டாள்😏😏😏😏

அவ சொன்னா உனக்கு எங்க போச்சி அறிவு😤😤😤😤

முதலில் தான் சொல்லல, அப்பறம் ஆவது உன் குடும்பத்தை சந்தித்து உண்மையை விளக்கி இருக்கலாம் இல்ல…..

எந்த இடத்தில் பேசணும் எந்த இடத்தில் அமைதியா இருக்கணும்னு தெரியாம இருந்துட்டு, இவ பாட்டுக்கும் போய்ட்டா…..

இதில் முழுக்க பாதிச்சது நிலா பாப்பா தான்…..

மனைவியா தான் சரியா வாழலை, அம்மா வா கூட🤐🤐🤐🤐🤐….

அந்த குழந்தை என்ன பாவம் செய்தது, இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லையே இருந்து இருக்கலாம் 🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

சஞ்சீவ் - ஆரம்பத்தில் ஆன்டி ஹீரோ போல தெரிஞ்சாலும், ரொம்ப நல்லவன்…..

இவன் காதலை அனுகின விதம் வேணும்னா தப்பா இருக்கலாம் ஆன இவன் காதல் ரொம்ப அழகானது & ஆழமானதும் கூட…..

ஒரு கணவனா ஜெயிச்சிடான் & அப்பாவாவும் ஜெயிப்பான்👍👍👍👍👍

அமரன் - ரொம்ப நல்ல மனிதன், இவன் சொன்ன மாதிரியே செய்துடான் 😥😥😥😥😥

சாந்தினி - இவளுக்கும் அருணக்கும் பெரிய வித்தியாசம் இல்ல, ரெண்டு பேருமே குழந்தையை பத்தி யோசிக்கவே இல்ல…..

அதுவா வந்து உங்க கிட்ட பிறக்கணும்னு கேட்டுச்சு, நீங்களே தானே சுமந்திங்க அப்பறம் என்ன 🤐🤐🤐🤐 அதை பத்தி கூட யோசிக்காம🥺🥺🥺🥺……

சரவணன் - ரொம்ப பாவம் இவன்🤧🤧🤧🤧🤧

ருத்ரன் - சரவணனுக்கு நல்ல அண்ணனா தான் இருந்து இருக்கான்……

அருணா அப்பா - 🥶🥶🥶🤮🤮🤮🤮🤮🤮

ரஹீம் - நண்பனுக்கு நல்ல நண்பன் தான், ஆன ஒரு தாய் ஓட வலி புரியாம நடந்துக்கிடான்…….

நஸ்ரின் - நினைத்த வாழ்க்கை இவளுக்கு மட்டும் தான் கிடைத்து இருக்கு…..

ரஹீம் மேல இவ வெச்சி இருந்த காதலிலா காதல் அழகு🤩🤩🤩🤩🤩

யாரும் இந்த கதையில் நூறு சதவீதம் நல்லவங்கலும் இல்ல கெட்டவங்களும் இல்ல…..

எல்லார்கிட்டயும் நெகாடிவ் ஷேடு இருக்கு….

இப்படி இருக்கற கேரக்டர்ஸ் வெச்சி செம்மையாக கொண்டு போய்டிங்க ரைட்டர் ஜீ, அதுக்கு பெரிய பெரிய ஹாட்ஸ் ஆஃப்👏👏👏👏👏…..

கண்டிப்பா நீங்க போட்டியில் வெற்றி பெருவீங்க அப்படிகர நம்பிக்கை எனக்கு இருக்கு🥰🥰🥰

ட்ரீட் தரணும் சரியா ஜீ🤩🤩🤩🤩

வாழ்த்துக்கள் ஜீ, இன்னும் நிறைய நிறையா எழுதணும்💐💐💐💐
மிக்க நன்றி தோழி
 

T22

Well-known member
Wonderland writer
#சாஸ்திரம்_மீறிய_கீர்த்தனம்

கதையின் தலைப்பு முதலில் கவர்ந்த போல கொஞ்சம் வித்தியாசமான கதை...

தப்பு செஞ்சா சின்னதோ பெருசோ தண்டனை உண்டு என்பதை strict ஆ ரைட்டர் கடைப்பிடிச்சது பிடிச்சது❤️

மித்ரா இவளால் தான் எல்லாம்... தன்னலம் மட்டுமே கருத்தில் கொண்டு யார் எப்படி போனா எனக்கு என்ன, நான் சந்தோஷமா இருப்பேன் என்ற கேரக்டர்... இவளின் தப்புகளால் பாதிக்கப்பட்டது நிறைய பேர்...

ஓரிருவரை தவிர எல்லோரிடமும் தவறுகள் உண்டு... அவரவர் நிலையில் அவருக்கு தேவையான போன சுயநலமாக தப்புகள் உண்டு... எல்லாருக்கும் தண்டனை கிடைச்சு இருக்கு என்பதே எனக்கு ஹேப்பி😝😝

யார் என்ன தவறு செய்தது...? அதற்கான தண்டனை என்ன...? பெரும்பான்மையான தப்புகளின் காரணகர்த்தா மித்ரா(அவ செஞ்சது) அவளுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்பதை கதையில் தெரிஞ்சுக்கோங்க...

மித்ரா அடியோடு வெறுத்த ஒருத்திக்காக வருத்தம் வருமா..? பாவம் பார்ப்பாங்களா....? அப்படினா அதற்கு காரணம் அவ செயலா🤔🤔 என்னை பொறுத்தவரை இல்லை, அந்த எழுத்து💖 அது தான் அந்த மேஜிக் செஞ்சு இருக்கு... கலந்து கொடுத்த விசயங்கள் தான் தப்புக்களின் வீரியத்தை மீறி வருத்தப்பட வைக்கும்... வைக்குது இங்கே....!!!

இரண்டு மூன்று🤔 பேர் தவிர எனக்கு வேறு யாரையும் நல்லவர் என்று சொல்ல வரலை.... ஆனால் ஒரு சிலரை அவங்க தவறுகளை மீறியும் பிடிச்சது💛 காரணம்🤔 தெரியலை ஆனால் பிடிச்சது💛

வெற்றி இவன் எல்லாம்🤐🤐🤐 ஆரம்பத்தில் இருந்தே இந்த சுயநலவாதியை திட்டி திட்டி, அவன் கோபத்தில் நியாயம் (half) இருந்த போது கூட திட்ட தான் வந்துச்சு😂😂😂 ஏன்னா அய்யா பெர்பார்மன்ஸ் அப்படி😆😆😆 ஆனால் குருடன் போல இவன் இருப்பதும், எய்தவனை விட்டு அம்பை உடைக்கும் இவன் செயலும் எரிச்சலை கிளப்புச்சு...

இவனுக்கு எதுவும் தெரியவே இல்லையா🙄🙄இல்லை தெரிஞ்சும் அப்படி இருந்தானா😡😡😡

மலர் 🧡 என்ன சொல்ல தெரியலை... ஆனால் மித்ராவ இவ தாங்கி support பண்ணும் இடம் எல்லாம் என்ன நட்பு அப்படி தான் தோணுச்சு... ஆனால் பாவம் தான் அவ😥

ருத்ரன்😡 இவன் மேல கடுப்பு தான் வந்துச்சு... மித்ரா வை படுத்தியதால் அல்ல😒😒 ஆனால் அவன் நிலையில், நேரடியாக நிற்க முடியாது பின் இருந்து செய்தாலும் ஏனோ அது கொஞ்சம் கூட பிடிக்கல.. சரணை கொஞ்சம் முன்னே இவன் கவனித்து இருந்து இருக்கணும்...

சஞ்சீவ் 🤐 செம்ம கடுப்பு இவன் மேல😡😡😡 செய்யுறது எல்லாம் செஞ்சிட்டு அப்பறம் மாறினா மட்டும்🤬🤬 போடா போடா அவளே மனம் மாறிய போது கூட எனக்கு அவ்ளோ ஒன்னும் உன்னை பிடிக்கலை... ஆனால் நல்ல அப்பா... சரியான நேரம் நிலாவை சரிபடுதிட்டான்...

ரஹீம் 🙄இவனை தான் நான் எப்படி நினைக்கிறேன் அப்படினு எனக்கு புரியவே இல்ல... கோபமா, சரி என்ற உணர்வா, தவறு என்ற உணர்வா, வருத்தமா, இப்படி என்ன அப்படினு புரியாம தான் சுத்திக்கிட்டு இருக்கேன்... முதலில் இவன்செயல் எல்லாம் ரொம்ப திருப்தி... பின்னாடி தான் என்ன உணர்வு அப்படினு புரியல🙄🙄

எதையுமே என்னால ஜீரணிக்கவே முடியலை டா😰😰😰 வருத்தம் வந்தாலும் எனக்கு அது வேறு விதமாக வந்துட்டு😢😢😢

துளசி அம்மா🤬🤬🤬

அமரன் இரு இடம் தவிர பெருசா எனக்கு கோபம் வரலை😒😒😒

அருணா அப்பா🤮🤮🤮

அருணா பாவப்பட்ட ஜீவன்😰😰 எதுவும் செய்திருக்க முடியுமா அப்படினு எனக்கு தெரியலை...

ஒரு மரணத்தில் தொடங்கிய அனர்த்தங்கள், அதனால் எத்தனை மரணம், எத்தனை வேதனை😥😥

மன மகிழ்வுக்கோ/கூக்குரலுக்கோ/ஆசைக்கோ/அகங்காரத்துக்கோ, தன் துன்பத்தால் மன இன்பத்தின் தேவைக்கோ ஒருவன் தீனி போடுவான் என்றால் அவன் என்ன எல்லாம் அனுபவிப்பான் என்பதற்கு இங்கு பலரின் வாழ்வு இதில் சாட்சி...

தண்டனைகளில் மகிழ்வோ/வருத்தமோ(சில தவிர) இல்லை... அவரவரின் செயலுக்கான எதிர்வினை இயற்கையிடம் என்ற எண்ணம் கொண்டு கடந்து போகும் எண்ணத்தில் நான்....!!

நிறைய சொல்ல தோணுது, சிலரை பயங்கரமா திட்ட தோணுது ஆனால் ஆல்ரெடி பெருசா போய்கிட்டு இருக்கு அதனால் ஸ்டாப் பண்றேன்🙏🙏

வித்தியாசமான முயற்சிக்கும், போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துகள்💐💐💐
மிக்க நன்றி தோழி ❤️
 

T22

Well-known member
Wonderland writer
#Uma_View

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம்

கதையில் பெரிதாக காதல் இல்லை, ரொமன்ஸ் இல்லை, மனதிற்கு இதம் தரும் மனிதர்கள் இல்லை இதில் சிலரின் தவறுகளும் அதற்கான தண்டனையுமே இந்த சாஸ்திரம் மீறிய கீர்த்தனம்.

வெற்றி ஆரம்பத்தில் மித்ரா மீது இவன் காட்டிய வெறுப்பும். அவளை நடத்திய விதமும் கோவத்தை வர வரவழைத்தாலும் அதற்கு எல்லாம் தகுதி உடையவள் தான் இந்த மித்ரா.

அருணா

மித்ரா இவளின் அலட்சியத்தாலும், சுயநலத்தாலும் மடிந்த ஜீவன்.

அருணா எந்த ஒரு பெண்ணுக்கும் வர கூடாத பழி. வீட்டு ஆண் மகன்கள் தவிர வேறு யாரையும் நிமிர்ந்து பார்க்கா பெண்ணவளுக்கு கிடைத்த பட்டம் ஒழுக்கம் கெட்டவள். 🥺🥺🥺. இவள் நல்லவள் மிக நல்லவள் அந்த குணமே இவள் உயிர் போக காரணமா அமைஞ்சி போச்சி. 🥺🥺🥺🥺.

அருணா மட்டும் அல்ல இந்த மித்ராவின் குண இயல்புகளால் அந்த காலனின் கைப்பிடிக்குள் கைதான உயிர்களின் எண்ணிக்கை இன்னும் சில. 🥺🥺🥺🥺

ஆனால் அவர்களுக்கு அதுவும் ஒரு வித தண்டனையே.

சஞ்சீவ் தவறு செய்தவன் தான், பொண்ணின் நுண் உணர்வுககளை புரிந்து கொள்ளாதவன் தான் அதை மதிக்காதவன் தான். ஆனால் இவன் காதல் உண்மை தன்னவளை எந்த நிலையிலும் அப்படியே ஏற்று கொள்ளும் மாறா நேசம் கொண்டவன் இவன்.

தன்னவள் கற்று தந்த பாடத்தில் மகள் மீது இவன் காட்டிய நிதானம் சற்று ஆறுதல்.

எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு. மித்ரா செய்த பாவத்திற்கு எதிர்வினை புரிய வந்தவர்கள் தான் அமரன், ருத்ரன், ரஹீம்.

இவங்க மூணு பேரும் பெரிதா மனசில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால் அமரன் இவன் தன் கொள்கைகளுக்கும் மனசாட்சிக்கும் உண்மையா நேர்மையா இருந்தான் . எப்போ ஒரு நல்லவன் என்னால பாதிக்கபடுகிறானோ அப்போவே எனகான தண்டனை ஏற்று கொள்வேனு எப்போ சொன்னானோ அப்போவே தெரிஞ்சு போச்சு இவனோட முடிவு என்ன என்று. ஆனால் கடைசி வருவான் என்று ஒரு சின்ன நட்பாசை இருந்தது

கடைசியாக ரஹீம் பண்ணியது ரொம்பவே பெரிய தப்பு.

ஆனா சும்மா சொல்ல கூடாது என்ன தான் மித்ரா பன்றது பிடிக்கல என்றாலும் இவ கிட்ட ஆச்சரியமா பார்த்தா ஒரு விசயம் அந்த மன தைரியமும் உறுதியும் தான் ருத்ரன் அவன் கை பாவையா இவளை ஆட்டுவிக்கும் போதும் அமரன் இவளிடம் அத்து மீறும் போதும் நடந்தது நடந்து விட்டது அடுத்து என்ன என்று அதை தொடச்சி போட்டு போறது எல்லாம் ஆத்தி பொண்ணா இது 😳😳😳😳.

இதுல மித்ரா மூலம் சொல்ல பட்ட விசயம் நூறு சதவீதம் உண்மை. karma is boomerang

எப்போவும்மே நான் ஸ்ட்ராங்கா நம்புர ஒரு விசயம் நம்ம பன்ற எல்லாமே Each and Every Movement இந்த universe கவனிக்கும் நல்லதோ கெட்டதோ நம்ம பண்ணியத விட பல மடங்கு நமக்கு திருப்பி கிடைக்கும் . நேரடியா சம்பந்தபட்ட ஆளுக மூலம் நமக்கு கிடைக்க வில்லை என்றாலும் வேற வடிவத்தில் வேறு ஒரு நபர் மூலம் கண்டிப்பா கிடைக்கும்.

அது மட்டுமல்லாமல்
.
ஒரு கதை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். ஒரு மெயின் ஹீரோ. கதாநாயகி மிக நல்லவளாக அக்கறையாக இருப்பது போல தான் பெரும்பாலும் வரும்.

இப்படி ஸ்ட்ராங்கான ஆண் கதாபாத்திரம் இல்லாமல் சுயநலவாதியாக, மற்றவர்கள் உணர்ச்சி களுடன் விளையாடும் பெண்ணாக தன்னலமே பெரிதென கருதும் இந்த மித்ரா போன்ற ஒருத்தியை மட்டும் மைய புள்ளியாக வச்சி கதை சொன்னதுக்கு எல்லாம் தில்லு வேணும். இப்படிபட்ட வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுகள் ரைட்டரரே .

மித்ரா கதையின் மைய புள்ளி என்பதால் அவள் தவறு நம்ம கண்ணுக்கு பெருசா தெரியலாம். ஆனா மற்ற கதாபாத்திரம் எல்லாம் ரொம்பவே சரி Perfect கிடையாது தான். அவரவருக்கு அவரவர் நியாயம் தர்மம். அவங்க முடிவுக்கும் நிலமைக்கும் மித்ரா மட்டும் அல்ல அவங்க அவங்க குணஇயல்புகளும் ஒரு விதத்தில் காரணம் தான்.

அருணா நல்லவள் தான் ஆனால் பலகீனமானவள்.

சஞ்சீவ் காதல் உண்மை ஆனால் அவன் தேர்ந்தேடுத்த வழி தவறு.

சாந்தினி காதலிக்க தகுதி இல்லாதவள், பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியா கோழை.

வெற்றி தான்தோன்றிதனமானவன் சிறந்த கணவன் ஆனால் நல்ல அண்ணன் இல்லை.

அமரன் அவசரகாரன். கண்ணால் கண்டதை உண்மை என்று நம்பியவன் ஆழ்ந்து யோசிக்காதவன்.

மித்ரா தாய் இவள் எல்லாம் என்ன பிறவி. இந்த கதைல ரொம்பவே மோசமான ஆளு என்றால் இவள் தான். சரியான ஈன பிறவி.

மித்ரா என்ன சொல்ல ஆரம்பத்தில் இவள் மீது அவ்ளோ கோவம் ஆனா கடைசில இவள பார்க்கிற பார்வை மொத்தமா மாறி விட்டது.

இவள் நினைச்சி இருந்தா ஈஸியா அவள் முடிவை தேடி இருக்கலாம். அவள் வலி வேதனைக்கு விடுதலை குடுத்து இருக்கலாம். ஆனா அவள் அப்படி பண்ண வில்லை அதுக்கு அவள் கூறிய இரண்டு காரணம் 🥺🥺🥺🥺. மனசை தொட்டு விட்டாள்.

மகன் மீது இவள் கொண்ட பாசம். அவன் நலனுக்காக அவனை கேட்காமல் இருப்பது. அவன் மீது உங்கான பாசம் குறைந்து விட்டது என்றால் என்னிடம் தந்து விடு அவன் தாங்க மாட்டான்.

ஒரு தாயா என் மனசில் ஜெயித்து விட்டாள்.

அது மட்டும் இல்லாமல் மித்ரா இவள் சாமானிய பெண் இல்லை. என்ன தைரியம், மன உறுதி, வாழ வேண்டும் என்ற வைராக்கியம். இதில் பாதி நமக்கு இருந்தால் கூட போதுமே நமது முழு வாழ்கையும் இந்த பூமியில் வாழ்ந்து விடலாமே .

சஞ்சீவ் கடைசியாக செய்த உதவி சொல்றதுக்கு வார்த்தை இல்லை செம்ம இவன். அவ்ளோ பிடிச்சி இருக்கு இவனை.

மித்ரா

ஆரம்பத்தில் அப்பாவி பெண்ணாக அறிமுகம் ஆகி

அநியாய பெண்ணாக நம்மில் வலம் வந்து

முடிவில் என்னை நெகிழ வைத்து பிரமிக்க வைத்த பெண்ணவள் இவள்.

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் உண்மையிலேயே வழக்கத்தை மீறிய மாறுபட்ட ஒரு கதை தான்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் 😘🤩♥️🥳🥰🎉😘
மிக்க நன்றி தோழி ❤️
 
#priyareviews

கதை எண் 18

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம்

யோவ் யாரு யா ரைட்டர் 🤧🤧🤧 உங்களுக்கு தெரி(றி)யும் க்கு ஸ்பெல்லிங் தெரியுமா தெரியாதா அந்த வார்த்தையை போட்டு படாத பாடு படுத்தி வைச்சு இருக்கீங்க 🙄🙄🙄 இன்னும் கூட எழுத்து பிழை இருக்கு திருத்திக்கோங்க 🙃🙃🙃

மித்ரா இவள் வாழ்வில் அவளே எதிர் பாராத பல திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறும் நிலையில் அதில் இருந்து மீண்டு வருவாளா? அல்லது 🙄🙄🙄

ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் ரைட்டர் இதை எல்லாம் எப்படி கொண்டு போவீங்க என்று ஆர்வமா ஆவலாய் இருக்கும் போது ஒவ்வொன்றையும் இணைத்த விதம் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்ல 😱😱😱 அதுவும் பல விஷயங்கள் வடிவேல் ஸ்டைல்ல சொல்லணும்னா அப்படியே ஷாக் ஆகிட்டேன் 😉😉

ரஹீம் வாவ் என்ன ஒரு அருமையான கதாபாத்திரம் 🥰🥰 இவன் வரும் இடங்கள் எல்லாம் செம 👌👌👌👌 இவனின் பாத்திர படைப்பு சூப்பர் அவ்வளவு பிடித்தது அவனை எல்லாம் சரி தான் ஒரு விஷயம் தான் கொஞ்சம் கடுப்பை கிளப்பியது ஒரு பக்கமே பார்த்து விட்டானே என்று வருத்தம் இன்னொரு பக்கமும் பார்த்து இருக்கலாம் 😔😔😔

மலர் நட்புக்கு புது இலக்கணம் தான் இவள் எல்லாரும் திட்டும் போது கூட தன் நட்புக்கு துணை நிற்பவள் நிற்க வேண்டிய நேரத்தில்?

வெற்றி இவன் சரியான அவசர குடுக்கை என்றே தோன்றியது சுற்றி என்ன நடக்குது என்று கொஞ்சம் பார்த்து இருக்கலாம் இவன் எல்லாம் என்ன 😬😬😬🤬🤬🤬

நஸ்ரின் இது ஒரு அப்பாவி ஜீவன் ஆனால் காதல் என்று வந்து விட்டால் அப்பாவி கூட அடப்பாவி ஆகி விடுகிறார்கள் 🤭🤭

அருணா 🤧🤧🤧🤧 தனக்கு என்ன வேண்டுமோ அதை சரியான நிலையில் இருந்து முடிவு எடுத்து இருக்கணும் கொஞ்சம் கூட தைரியம் இல்லாம இவள் செய்யும் தவறு 🤐🤐🤐

அமரன் சிறிது தான் வருகிறான் இன்னும் கொஞ்சம் காட்டி இருக்கலாமே 🤔🤔🤔 இவன் கொஞ்சம் சிந்தித்து செயல்பட்டு இருக்கலாம் இவ்வளவு அவசரம் அவசியம் இல்ல 😒😒😒😒 அதுவும் இவன் எடுத்த ஒரு முடிவு ஏற்று கொள்ள முடியவில்லை 🤧🤧🤧

ருத்ரன் அடப்பாவிங்களா எங்க இருந்து டா எல்லாம் கிளம்பி வரீங்க 🙄🙄🙄

சஞ்சீவ் முதலில் அவ்வளவு கோபமாக வந்தது அதன்பின் பரிதாபம் தான் வந்துச்சு 😔😔 எந்த ஒரு விஷயத்தையும் விருப்பதோடு செய்யணும் பிடிக்காமல் திணிக்க முற்பட்டால் அதற்கு உரியதை அனுபவித்து தான் ஆகணும் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் 🥴🥴🥴🥴

ஆழமான அழுத்தமான எழுத்து நடை சபாஷ் போட வைக்கும் விஷயங்கள் இவ்வளவு சிக்கலான கதை களத்தை எடுத்து குழப்பம் இல்லாம அதை நேர்த்தியாக கொண்டு சென்ற விதம் அற்புதம் அவ்வளவு முதிர்ச்சியான எழுத்து நடை சில விஷயங்களை நீங்கள் கையாண்ட விதம் மிகவும் நன்று 👏👏👏 நிறைய இடங்களில் அந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு நீங்கள் கொடுத்த ஒவ்வொரு விளக்கமும் அற்புதம் 👌👌

எந்த ஒரு விஷயத்திலும் விளையாட்டு தனம் இருக்க கூடாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த கதை ஒருவர் செய்யும் தவறால் ஏற்படும் பின்விளைவுகளை யோசிச்சு செயல்பட்டால் நல்லது 😒😒😒

மித்ரா பற்றி என்ன சொல்வது என்றே தெரியல கொஞ்சம் பாவம் தான் ஆனால்?

கடைசியில் வந்த சில ட்விஸ்ட் எல்லாம் 😱😱😱 அடேய் கதைக்குள்ள ட்விஸ்ட் வைக்கணும் ட்விஸ்ட் குள்ள கதை வைக்க கூடாது அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்று டென்ஷன் பண்ணி கொண்டு தியேட்டர்ல படம் பார்க்கும் போது சீட் நுனியில் உட்கார்ந்து இருக்கும் பீல் 😲😲 கடைசியில் மனம் கனம் ஆகி விட்டது வேற மாதிரி இருந்து இருக்கலாமோ 🤔🤔🤔

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

லிங்க் 👇👇👇

 
Top