பொம்மு நாவல்ஸ் குறுநாவல் போட்டி
T22விதையில்இருந்துவிருட்சம்வரை
சாஸ்திரம் மீறிய கீர்த்தனம்
கதைஇல18
ஷாயினிகதைவிமர்சனம்15
எனது பார்வையில்!
வித்தியாசமான கவரும் வகையில் இக் கதை தலைப்பு! அதுவே கதையை மேலும் படிக்க தூண்டும் வகையில் அமைந்துள்ளது! சாதகமான விடயம் கதைக்கு மிகவும் பொருத்தமான தலைப்பும் கூட, இவ் குறு நாவலின் ஆசிரியர்க்கு எனது பாராட்டுக்கள்
கதையை படிக்க ஆர்வத்தை தூண்டி,
அதனோடு ஒன்றிபோக வைத்து நம்
அனைவரினையும் எம்மை பற்றிய சுய பரீசிலனையை செய்ய வைத்த கதை! இது என்றால் மிகையாகாது!
மித்ரதுளசி, சாதாரண குடும்பத்தில் உறவுகளுடன் பிறந்து அதனை அறிய முன்னமே தனிமை வாழ்வை பெற்ற பெண்!. நமது வரையறைகளுக்கு இவள் அப்பாற்பட்டவள் இவளைச் சுற்றிய கதைகளமே இக்கதை!
மித்ரா, இவள் நம் அன்றாட வாழ்வில்
சந்திக்க கூடிய மனிதர்களிலும் நம்
அனைவரிலும் காண கூடிய நிறை குறை போன்ற இயல்புகள் கொண்ட பெண்.
பெண்ணவளிடம் இருக்கும் குறைகள்
நிறைகளை தாண்டி செல்லும் நிலை வரும் போது , விளைவுகள் அவளின் நினைப்பிற்கு அப்பாற்பட்டதாக ஒரு கட்டத்தில் மாற அவள் செய்த செயல் வினைகள் இறுதியில் பெண்ணவள் தீர்ப்பாகும் போது, அவளின் நிலை!
அவளுக்கு வாழ்வு என்றால் என்னது என்பது புரியும் போது மித்ரா வாழ்வு பாடமாக மாறுகின்றது!
நாம் விளையாட்டுக்கு செய்யும் சில
செயல்கள் வரைமுறையை தாண்டி
செல்ல நேர்ந்தால் அதன் விளைவு
கனவிலும் ஜீரணிக்க முடியததாக மாறும் அதுவே மித்ரதுளசி வாழ்வில்
நடப்பது!.
இதுவே #சாஸ்தீரம்மீறியகீர்த்தனம்!
என்று அவளுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் புரிய வருவது! இக்
கதைக்கு கிடைத்த வெற்றி
மேலும், நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்கள் செய்யும்
செயல்களில் இருக்கும் குறைகளை கண்டுபிடித்து அதற்கு நீதிபதியாக தீர்ப்பு வழங்க எத்தனிக்கின்றோமே அன்றி எமது செயல்களில் உள்ள சரி
பிழைகளை பகுத்தறிய (ஒரு சிலரை தவிர) பலர் சிறிது கூட நினைப்பது இல்லை!
மற்றவர்க்கு தீர்ப்பை வழங்கவே நாம் ஆர்வம் கொண்டுள்ளோமோ தவிர எமது தப்புக்களை தீர்வின்றி பழியை மட்டும் அடுத்த நபரின் மேல் தள்ளவே
நிறைய விடயங்களின் மனித மூளை
நாட்டம் கொள்கிறது!
இக் கதையில் மித்ராவை மட்டுமே
தப்பானவளாக நாம் குறை சொல்ல முடியாது ! என்றதும் அவளை சுற்றிய
நபர்களின் இறுதி முடிவு மரணமாக
மாறியதால் அவர்கள் மீது தவறே இல்லை என்பதையும் கூற முடியாது என்பதை கதையாசியர் சுட்டிக்காட்டிய
விதம் அருமையிலும் அருமை! எந்த
விதத்திலும் தற்கொலை எதற்கும்
தீர்வல்ல!
நம் செய்யும் வினைகளுக்கு தீர்ப்பை
வழங்க நம்மை படைத்த இறைவன்
ஒருவனுக்கே உரிமை உண்டு!அவன்
முன்னாடி நாம் அனைவரும் ஒன்றே!
தமது வினைகளுக்கு தாமே முடிவை தேடிய சரவணன், அமரன் , அருணா
சாத்வி இவர்கள் தமது முடிவுகளை தாமே விரும்பி ஏற்றனர்! ஆனால் அதனால் இவர்களுடன் கூடவே இருந்த நபர்களுக்கு ஏற்பட்டது?
இவர்கள் ஒரு சிலரை தவிர மற்றைய சிலரின் மித்ரா தாய், சித்தப்பா , அண்ணன் என்று இருக்கும் வெற்றி இத்தகைய நபர்களின் போலி விம்பம்
முன்னாடி மித்ரா கூட மன்னிக்க பட
கூடியவள் என்ற எண்ணம் மனதில் தோன்றுவதை தடுக்க முடியவில்லை!
ஆக மொத்தத்தில் இக் கதை மட்டும்
அல்ல! வாழ்விற்கான பாடம் ஒன்றே!
போட்டியில் வெற்றிபெற அத்தனை
அம்சங்களும் கொண்ட கதையாக
இக் கதை இருப்பது! அனைத்திலும்
சிறப்பு!
கதை இறுதி அத்தியாயங்களில் கதையை மையப்படுத்தி ஆசியர் பகிர்ந்த சில விடயங்கள் அருமை!
கதை படிக்க கதை திரி
கருத்து பகிர கருத்து திரி
சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் கதை திரி
சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் _ கதை திரி
pommutamilnovels.com
சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் கருத்து திரி
சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் _ கருத்து திரி
www.pommutamilnovels.com
View attachment 1520