ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

18. சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் - நாவலுக்கான விமர்சனங்கள்

வணக்கம் சகோதரிகளே ..

#பவாவிமர்சனம்

#சாஸ்திரம்_மீறிய_கீர்த்தனம்

#விருட்சம்18

கீர்த்தனைகள் பூஜைக்கு மட்டுமே அல்ல
தென்றலான நடனவடிவங்களுக்குமே..
ஏனோ இங்கே முரண்பாடான தொகுப்பாய்
பலவித கீர்த்தனை சாரங்கள்..

தாளம் தப்பினால் கீர்த்தனைகளும் தடுமாறும்
ஆதார சுருதியே இங்கே தப்பான தாளங்களாக
உருவகநிலையில் தொடரிசை நடனமாய்..

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம்
கேள்வி குறியான நிலையில்..!!

முதலில் ஒரு போட்டிக் கதைக்கு இப்படி ஒரு கதையை தெரிவுசெய்தது அசத்தலான துணிச்சல் உங்களுக்கு தோழியே
அதற்கு என் வாழ்த்துக்கள் . "அவள் ஒரு தனிமரம்" என்பதே சரியாக எனக்கு தோன்றியதுமா.❤❤❤

மித்ரதுளசி: பெயரை போல நட்பு நேசம் தூய்மை அற்ற ஒரு பெண்
ஆனால் பீனிக்ஸ் பறவையாக உருமாரும் போது இப்பெயர் இவளுக்கு சரியே.👌👌👌👏👏👏

எதுவா இருந்தால் எனக்கென்ன என் வாழ்வு என் கையில் அதற்காக யாரையும் எளிதில் சாடுவேன் என்ற நிலையில் நடந்த போது .இவளின் மேல் நிறைய கோபம் வந்தது. ஆனாலும் சில விஷயங்கள் காரணமில்லா காரியம் ஆகாதே.👌👌👌👌

தப்பு செய்தால் உடனே கிடைக்காத தண்டனை தாமதமாக வந்து பல நூறூ மடங்காய் வதைப்பது கவலையே. ஏதாவது ஒருவகையிலேனும் இவளுக்கு ஆறுதல் இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும் .😥😥

அருணா: காதல் வந்தபோது கானல் என நினைத்து தன் வாழ்வையே சரியாக புரிந்து வாழாத முட்டாள் பெண்.😟😞😞

தேன்மலர் : காதல்,பாசம், நட்பு,உயர்வு என உயர்ந்த பெண்.💞💞🌹

மித்ரா அம்மா: இவரால் ஒரு பெண்ணின் வாழ்வே கேள்விகுறியானதுக்கு இவரே பொறுப்பு அதுவும் கடைசிவரை திருந்தாத ஜடம்.😡😡😡

நிலா: எனக்கு கண்களில் நீரை திரையிட்ட சின்ன மொட்டு .கடைசியில் சேரும் இடம் வந்தபோதே எனக்கு நிம்மதி ஆச்சு. இல்லை என்றால் இவளும் பின்னாளில் இன்னொமொரு சாம்பல் பறவையாக உருவாகி இருப்பாள்.😘😘😘😘

வெற்றி : நல்ல காதல்கணவன் மட்டுமே .வீட்டில் என்ன நடக்கிறது என தெரியாத கண்ணிருந்தும் காதிருந்தும் குருடுசெவிடான ஜட மனிதன். இவன் கொஞ்சம் பார்த்திருந்தால் தன் தங்கை இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டாளே.❤😡

ரஹீம்: புரிந்து கொள்ளவே முடியாத மனிதன். இவ்வளவு அக்கரை கொண்டவன் கடைசியாக செய்த காரியம் அவனுக்கு நேர்மை என்றாலும் ,ஒரு தாய்க்கு வலியே.❤😥😥

அமரன்: நல்லவன் ஆனாலும் இவனின் விபரீத முடிவால் ஒரு தாய் ஒரு குழந்தை இப்போ நடுவீதியில்.❤😥

சஞ்சீவ்: ஆரம்பத்தில் ஏதோ ஒன்றாக இருந்தாலும் முடிவில் கண்கலங்க வைத்த நல்ல மனிதன். இவனை மட்டுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சட்டென கோபம் வரும் இவனிடம் வாழ்க்கை தந்த பாடத்தால் சாந்தமானவனாக மாறியது நெகிழ்ச்சியே.💞💞💞

சரவணன் மற்றும் சாந்தினி விட்டில் பூச்சிகள் .😟😟

அருணா அப்பா, தன் சுகபோகமே போதும் மற்றவர்களின் வாழ்க்கை எப்படி போனால் என்ன என்று வாழ்ந்த கேவலான பிறவி அதனால் தான் அவர் மகளுக்கு இந்த நிலையோ.😡😡

ஆசிரிய தோழியே : பிரமிப்பு உச்சம் என்பதே என் கருத்து.🌹🌹

இந்த கதையில் யாரும் நல்லவர்களும் இல்லை கெட்டவர்களும் இல்லை நம்மில் நடமாடும் பல வடிவங்கள் இப்படி தான் என்பதை யதார்த்தமாக கூறி சென்றது அருமைமா.👌👌👌

ஒரு நாயகியை சுற்றி மட்டுமே கதை. அதில் அவளுக்கு நடக்கும் பல சம்பவங்கள் , சுற்றி இருக்கும் நபர்கள் என போராடி வாழும் வாழ்க்கையை பல வலிகளோடு கூறி சென்றது அருமைமா.👏👏👏

அதோடு நாயகன் நாயகி என்றால் நூறுவீதம் நல்லவர்களாகவே காட்டுவதை நிறுத்தி அவர்களும் யாதார்த்த மனிதர்களே என காட்டி அதை முறியடித்து சென்றதும் அருமை.👌👌👌👌

நாம் யாராக இருந்தாலும் தப்பு செய்தால் தண்டனை உண்டு என்பதையும் .அதை திரும்ப பெறும் போது ஏற்படும் வலியையும் யாராலும் விலக்க முடியாது என்பதே விதி.😥😥

அந்த சலங்கை அந்த கால் விழிநீரே.ஏன் இவ்வளவு பெரிய தண்டனை என அங்கலாயித்து போனேன். ஏற்கனவே ஒருவலி அதோடு இதுவுமா என இருந்தது எனக்கு. 😙😙

முடிவில் இந்த நாயகிமை நினைத்து பிரமித்து போனேன். எதையும் தூக்கிபோட்டு நிமிரும் பல இடங்கள் சபாஷ். ஒரு வாழ்க்கை அதையும் முட்டி மோதி வாழ்ந்து பார்ப்போமே என நடைபோடும் புரட்சி பெண்ணே தான் இவள். 👌👌💕💕

இவள் கோழை அல்ல மீண்டும் மீண்டும் பிறக்கும் சாம்பல் பறவையே .👏❤❤

வாழ்த்துக்கள் மா.👏👏👏👏👏

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.💐💐💐
 
  • Love
Reactions: T22

Ruby

Well-known member
#சாஸ்திரம்_மீறிய_கீர்த்தனம்

கதையின் தலைப்பு முதலில் கவர்ந்த போல கொஞ்சம் வித்தியாசமான கதை...

தப்பு செஞ்சா சின்னதோ பெருசோ தண்டனை உண்டு என்பதை strict ஆ ரைட்டர் கடைப்பிடிச்சது பிடிச்சது❤️

மித்ரா இவளால் தான் எல்லாம்... தன்னலம் மட்டுமே கருத்தில் கொண்டு யார் எப்படி போனா எனக்கு என்ன, நான் சந்தோஷமா இருப்பேன் என்ற கேரக்டர்... இவளின் தப்புகளால் பாதிக்கப்பட்டது நிறைய பேர்...

ஓரிருவரை தவிர எல்லோரிடமும் தவறுகள் உண்டு... அவரவர் நிலையில் அவருக்கு தேவையான போன சுயநலமாக தப்புகள் உண்டு... எல்லாருக்கும் தண்டனை கிடைச்சு இருக்கு என்பதே எனக்கு ஹேப்பி😝😝

யார் என்ன தவறு செய்தது...? அதற்கான தண்டனை என்ன...? பெரும்பான்மையான தப்புகளின் காரணகர்த்தா மித்ரா(அவ செஞ்சது) அவளுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்பதை கதையில் தெரிஞ்சுக்கோங்க...

மித்ரா அடியோடு வெறுத்த ஒருத்திக்காக வருத்தம் வருமா..? பாவம் பார்ப்பாங்களா....? அப்படினா அதற்கு காரணம் அவ செயலா🤔🤔 என்னை பொறுத்தவரை இல்லை, அந்த எழுத்து💖 அது தான் அந்த மேஜிக் செஞ்சு இருக்கு... கலந்து கொடுத்த விசயங்கள் தான் தப்புக்களின் வீரியத்தை மீறி வருத்தப்பட வைக்கும்... வைக்குது இங்கே....!!!

இரண்டு மூன்று🤔 பேர் தவிர எனக்கு வேறு யாரையும் நல்லவர் என்று சொல்ல வரலை.... ஆனால் ஒரு சிலரை அவங்க தவறுகளை மீறியும் பிடிச்சது💛 காரணம்🤔 தெரியலை ஆனால் பிடிச்சது💛

வெற்றி இவன் எல்லாம்🤐🤐🤐 ஆரம்பத்தில் இருந்தே இந்த சுயநலவாதியை திட்டி திட்டி, அவன் கோபத்தில் நியாயம் (half) இருந்த போது கூட திட்ட தான் வந்துச்சு😂😂😂 ஏன்னா அய்யா பெர்பார்மன்ஸ் அப்படி😆😆😆 ஆனால் குருடன் போல இவன் இருப்பதும், எய்தவனை விட்டு அம்பை உடைக்கும் இவன் செயலும் எரிச்சலை கிளப்புச்சு...

இவனுக்கு எதுவும் தெரியவே இல்லையா🙄🙄இல்லை தெரிஞ்சும் அப்படி இருந்தானா😡😡😡

மலர் 🧡 என்ன சொல்ல தெரியலை... ஆனால் மித்ராவ இவ தாங்கி support பண்ணும் இடம் எல்லாம் என்ன நட்பு அப்படி தான் தோணுச்சு... ஆனால் பாவம் தான் அவ😥

ருத்ரன்😡 இவன் மேல கடுப்பு தான் வந்துச்சு... மித்ரா வை படுத்தியதால் அல்ல😒😒 ஆனால் அவன் நிலையில், நேரடியாக நிற்க முடியாது பின் இருந்து செய்தாலும் ஏனோ அது கொஞ்சம் கூட பிடிக்கல.. சரணை கொஞ்சம் முன்னே இவன் கவனித்து இருந்து இருக்கணும்...

சஞ்சீவ் 🤐 செம்ம கடுப்பு இவன் மேல😡😡😡 செய்யுறது எல்லாம் செஞ்சிட்டு அப்பறம் மாறினா மட்டும்🤬🤬 போடா போடா அவளே மனம் மாறிய போது கூட எனக்கு அவ்ளோ ஒன்னும் உன்னை பிடிக்கலை... ஆனால் நல்ல அப்பா... சரியான நேரம் நிலாவை சரிபடுதிட்டான்...

ரஹீம் 🙄இவனை தான் நான் எப்படி நினைக்கிறேன் அப்படினு எனக்கு புரியவே இல்ல... கோபமா, சரி என்ற உணர்வா, தவறு என்ற உணர்வா, வருத்தமா, இப்படி என்ன அப்படினு புரியாம தான் சுத்திக்கிட்டு இருக்கேன்... முதலில் இவன்செயல் எல்லாம் ரொம்ப திருப்தி... பின்னாடி தான் என்ன உணர்வு அப்படினு புரியல🙄🙄

எதையுமே என்னால ஜீரணிக்கவே முடியலை டா😰😰😰 வருத்தம் வந்தாலும் எனக்கு அது வேறு விதமாக வந்துட்டு😢😢😢

துளசி அம்மா🤬🤬🤬

அமரன் இரு இடம் தவிர பெருசா எனக்கு கோபம் வரலை😒😒😒

அருணா அப்பா🤮🤮🤮

அருணா பாவப்பட்ட ஜீவன்😰😰 எதுவும் செய்திருக்க முடியுமா அப்படினு எனக்கு தெரியலை...

ஒரு மரணத்தில் தொடங்கிய அனர்த்தங்கள், அதனால் எத்தனை மரணம், எத்தனை வேதனை😥😥

மன மகிழ்வுக்கோ/கூக்குரலுக்கோ/ஆசைக்கோ/அகங்காரத்துக்கோ, தன் துன்பத்தால் மன இன்பத்தின் தேவைக்கோ ஒருவன் தீனி போடுவான் என்றால் அவன் என்ன எல்லாம் அனுபவிப்பான் என்பதற்கு இங்கு பலரின் வாழ்வு இதில் சாட்சி...

தண்டனைகளில் மகிழ்வோ/வருத்தமோ(சில தவிர) இல்லை... அவரவரின் செயலுக்கான எதிர்வினை இயற்கையிடம் என்ற எண்ணம் கொண்டு கடந்து போகும் எண்ணத்தில் நான்....!!

நிறைய சொல்ல தோணுது, சிலரை பயங்கரமா திட்ட தோணுது ஆனால் ஆல்ரெடி பெருசா போய்கிட்டு இருக்கு அதனால் ஸ்டாப் பண்றேன்🙏🙏

வித்தியாசமான முயற்சிக்கும், போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துகள்💐💐💐
 
  • Love
Reactions: T22

Shayini Hamsha

Active member
பொம்மு நாவல்ஸ் குறுநாவல் போட்டி

T22விதையில்இருந்துவிருட்சம்வரை

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம்

கதைஇல18

ஷாயினிகதைவிமர்சனம்15

எனது பார்வையில்!

வித்தியாசமான கவரும் வகையில் இக் கதை தலைப்பு! அதுவே கதையை மேலும் படிக்க தூண்டும் வகையில் அமைந்துள்ளது! சாதகமான விடயம் கதைக்கு மிகவும் பொருத்தமான தலைப்பும் கூட, இவ் குறு நாவலின் ஆசிரியர்க்கு எனது பாராட்டுக்கள்💐

கதையை படிக்க ஆர்வத்தை தூண்டி,
அதனோடு ஒன்றிபோக வைத்து நம்
அனைவரினையும் எம்மை பற்றிய சுய பரீசிலனையை செய்ய வைத்த கதை! இது என்றால் மிகையாகாது!🥰😘💕

மித்ரதுளசி, சாதாரண குடும்பத்தில் உறவுகளுடன் பிறந்து அதனை அறிய முன்னமே தனிமை வாழ்வை பெற்ற பெண்!. நமது வரையறைகளுக்கு இவள் அப்பாற்பட்டவள் இவளைச் சுற்றிய கதைகளமே இக்கதை!💕💕

மித்ரா, இவள் நம் அன்றாட வாழ்வில்
சந்திக்க கூடிய மனிதர்களிலும் நம்
அனைவரிலும் காண கூடிய நிறை குறை போன்ற இயல்புகள் கொண்ட பெண்.

பெண்ணவளிடம் இருக்கும் குறைகள்
நிறைகளை தாண்டி செல்லும் நிலை வரும் போது , விளைவுகள் அவளின் நினைப்பிற்கு அப்பாற்பட்டதாக ஒரு கட்டத்தில் மாற அவள் செய்த செயல் வினைகள் இறுதியில் பெண்ணவள் தீர்ப்பாகும் போது, அவளின் நிலை!
அவளுக்கு வாழ்வு என்றால் என்னது என்பது புரியும் போது மித்ரா வாழ்வு பாடமாக மாறுகின்றது!

நாம் விளையாட்டுக்கு செய்யும் சில
செயல்கள் வரைமுறையை தாண்டி
செல்ல நேர்ந்தால் அதன் விளைவு
கனவிலும் ஜீரணிக்க முடியததாக மாறும் அதுவே மித்ரதுளசி வாழ்வில்
நடப்பது!.

இதுவே #சாஸ்தீரம்மீறியகீர்த்தனம்!

என்று அவளுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் புரிய வருவது! இக்
கதைக்கு கிடைத்த வெற்றி 😘💕💐💐

மேலும், நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்கள் செய்யும்
செயல்களில் இருக்கும் குறைகளை கண்டுபிடித்து அதற்கு நீதிபதியாக தீர்ப்பு வழங்க எத்தனிக்கின்றோமே அன்றி எமது செயல்களில் உள்ள சரி
பிழைகளை பகுத்தறிய (ஒரு சிலரை தவிர) பலர் சிறிது கூட நினைப்பது இல்லை!

மற்றவர்க்கு தீர்ப்பை வழங்கவே நாம் ஆர்வம் கொண்டுள்ளோமோ தவிர எமது தப்புக்களை தீர்வின்றி பழியை மட்டும் அடுத்த நபரின் மேல் தள்ளவே
நிறைய விடயங்களின் மனித மூளை
நாட்டம் கொள்கிறது! 😓😓😓😓

இக் கதையில் மித்ராவை மட்டுமே
தப்பானவளாக நாம் குறை சொல்ல முடியாது ! என்றதும் அவளை சுற்றிய
நபர்களின் இறுதி முடிவு மரணமாக
மாறியதால் அவர்கள் மீது தவறே இல்லை என்பதையும் கூற முடியாது என்பதை கதையாசியர் சுட்டிக்காட்டிய
விதம் அருமையிலும் அருமை! எந்த
விதத்திலும் தற்கொலை எதற்கும்
தீர்வல்ல!

நம் செய்யும் வினைகளுக்கு தீர்ப்பை
வழங்க நம்மை படைத்த இறைவன்
ஒருவனுக்கே உரிமை உண்டு!அவன்
முன்னாடி நாம் அனைவரும் ஒன்றே!

தமது வினைகளுக்கு தாமே முடிவை தேடிய சரவணன், அமரன் , அருணா
சாத்வி இவர்கள் தமது முடிவுகளை தாமே விரும்பி ஏற்றனர்! ஆனால் அதனால் இவர்களுடன் கூடவே இருந்த நபர்களுக்கு ஏற்பட்டது?😭

இவர்கள் ஒரு சிலரை தவிர மற்றைய சிலரின் மித்ரா தாய், சித்தப்பா , அண்ணன் என்று இருக்கும் வெற்றி இத்தகைய நபர்களின் போலி விம்பம்
முன்னாடி மித்ரா கூட மன்னிக்க பட
கூடியவள் என்ற எண்ணம் மனதில் தோன்றுவதை தடுக்க முடியவில்லை!

ஆக மொத்தத்தில் இக் கதை மட்டும்
அல்ல! வாழ்விற்கான பாடம் ஒன்றே!

போட்டியில் வெற்றிபெற அத்தனை
அம்சங்களும் கொண்ட கதையாக
இக் கதை இருப்பது! அனைத்திலும்
சிறப்பு! 💐💐💐💕💕

கதை இறுதி அத்தியாயங்களில் கதையை மையப்படுத்தி ஆசியர் பகிர்ந்த சில விடயங்கள் அருமை!💕

கதை படிக்க கதை திரி👇 கருத்து பகிர கருத்து திரி 👇

❤️❤️❤️

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் கதை திரி


சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் கருத்து திரி

eiLN68D81583.jpg
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
yagnithaareview

👏👏 #சாஸ்திரம்_மீறிய_கீர்த்தனம்👏👏

முதல்ல இப்படி ஒரு வித்தியாசமான கான்செப்ட் யோசித்தற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

ஒரு பெண்ணின் துணிச்சல், அறியாமை, சுயநலம், அன்பு ,காதல் இது எல்லாத்தையும் மையமாகக்கொண்டு ரைட்டர் இந்தக்கதையை புது விதமா எடுத்துட்டுப் போறாங்க....

நம்ப நாயகிய வில்லினு சொல்றத விட சராசரியா நம்ப பக்கத்து வீட்ல சந்திக்கிற ஒரு நபரா தான் எனக்கு தெரியுது....

நண்பர்களுடன் விளையாட்டாக செய்த செயல் விபரீதமானதே இக்கதை..

மித்ரா தாய் அண்ணன் இருந்தும், அவள் அறியாமல் செய்த தவறினால் எவரின் அரவணைப்பும் இல்லாமல் தனித்து வாழ்கிறார்.. இவள் வாழ்வில் வரமாக நினைத்த அனைவரும் சாபமாக மாறியது ஏனோ🤧🤧🤧 இவள் மீது சிறு சிறு தவறு இருப்பினும் இவளை குற்றம் சொல்ல முடியாத நிலை ஏனோ..... அதுவும் அந்த சலங்கை 🤧🤧 ""ஒருவன் இருந்தாலும் பேசுவார்கள்... இறந்தாலும் பேசுவார்கள்...""" உண்மையான வார்த்தை...

"படைத்தவன் நீயெனில் பாவம் மட்டும் என்னுடையதா?"😔😔

மலர் மித்ராவின் ஒரே உயிர்ப்பு, ஆரம்பத்தில் மித்ராவுக்கு உறுதுணையாக இருந்தது அருமை, அதே நம்பிக்கை அவள்மீது கடைசி வரையும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் 🤧🤧.... அதுவும் கடைசியா அப்படி ஒரு நிலமையில்🤬

வெற்றி நோண்ணனு பேருக்கு இருந்தா பத்தாது வீட்ல என்ன நடக்குது, யாரு என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணும், அத விட்டுட்டு மத்தவங்கள தப்பு சொல்ல கூடாது....

ரஹீம் இவனின் நட்பு காதல் அனைத்தும் அழகு..... ஆனால் தன் துளசியின் மனதை உணர்ந்து கொள்ளாதது விதியின் செயலே..... பச்ச துரோகி 🤬🤬என் ____ குழந்தை மட்டும் ஆ 🤬🤬🤬 கடைசியா கூட நீ புரிஞ்சுக்கல என்கிற ஆதங்கம் எனக்கு நிறைய இருக்கு ரஹீம் 🤧...

அமரன் கதையின் திருப்புமுனை, தீயதை அழிக்கும் ருத்ரமூர்த்தி இவன், இவனின் அவசர புத்தியினால் இழந்தது பல 🤬🤬🤬 இவன் விரும்பி ஏற்ற வாழ்க்கையை உணராதது விதியோ.....

நஸ்ரின் பாவப்பட்ட ஜீவன், தலையும் புரியாமல் காலும் புரியாமல், இந்தப் பிள்ளையை நல்லா எல்லாரும் யூஸ் பண்ணிக்கிட்டங்க.. என்னதான் சொன்னாலும் இவள் காதல் ஸ்ட்ராங்....

அருணா வாழ்க்கையில ஏதோ ஒரு இடத்திலயாவது துணிச்சல் வேணும்... ஆனா நீ பேச வேண்டிய இடத்தில் பேசவே இல்ல . அடுத்தவர் கை பொம்மையா ஆட்டி வைத்ததன் விளைவு 🤬🤬

சஞ்சய் இவனுடைய காதலுக்காக இன்னும் போராடி இருக்குமோன்னு தோணுது.... வற்புறுத்தி வரவைக்கிறது காதல் இல்ல, அத புரிய வைக்கிறது தான் காதல்... ஆனா ஒரு தகப்பனா 👏👏👏👏

சரவணன் காதலித்த பாவத்திற்காக அவனுக்கு கிடைத்த தண்டனை அதிகமே..... குடி குடியை கெடுக்கும் 🤬

சாந்தினி பிரச்சனைகளை கண்டு பூனையாக பதுங்கமல்,புலியாக சீறீ இருந்தால் நன்றாக இருந்திருக்கும், இவளின் விபரீத முடிவினால், இழந்தது ஒன்றல்ல இரண்டல்ல மூன்று🤬🤬

ருத்ரன் சட்டத்தின் நிழலில் இருப்பவன், தன் சுயநலத்திற்காக சட்டத்தை கையில் எடுத்தது ஏனோ🤬

நம்ப எல்லாம் மித்ராவை திட்டிக் கொண்டே இருந்தோம் ஏன் இப்படி இருக்க ஏன அதற்கு மூல காரணமே சாட்சாத் நம்ப மித்ரா உடைய அம்மாவே காரணம், எவ்வளவு சுயநலம், ஏம்மா தெரியாம தான் கேக்குறேன் புதுசு வந்தா பழச மறந்து விடுவாயா 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 ஒரு பொண்ணு, ஆறுதலுக்கு ஒரு மடி தேடுறது ஒன்று தொப்புள் கொடி உறவா இருக்கும் இல்ல தாலிக்கொடி உறவாய் இருக்கும், அதில் முதலிடம் தொப்புள் கொடி உறவு, ஆனா நீ நாய்க்கு சமமாக பெத்த பிள்ளையை பேசுற🤬🤬🤬 என்ன சொன்ன உனக்கு வேணா குழந்தை என்கிறது சாதாரணமா இருக்கலாம் 🤬🤬🤬 இது எல்லாத்தையும் விட எப்படி உன்னால இவ்வளவு கேவலமான ஒரு செயலை செய்ய முடிஞ்சுச்சு🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 இந்த பூமிக்கு பாரம் மித்ரா இல்ல நீ தான் 🤬🤬🤬 உனக்கு மித்ரா ஆயிரம் மடங்கு பரவாயில்லை.....

அருணாவின் அப்பா நோ கமெண்ட்ஸ் பண்ண பாவம் எங்கேயும் கொண்டுபோய் கரைக்க முடியாது 🤬🤬

( இந்த கதையில வர்ற விஷயம் எல்லாமே நம்ப வாழ்க்கையில சிறிய தவறுன்னு நினைக்கிற ஒரு விஷயம் தான் , விளையாட்டு விளையாட இருக்கிறவரைக்கும் எல்லாமே நல்லதுதான், ஆனா ஏதோ ஒரு இடத்தில நம்ப அறியாமல் செய்த தவறு எத்தனை பேத்தை பாதிக்க படுது😔.... இந்த கதையை படித்து என்ன நான் சுய ஆலோசனை செய்ய முடிந்தது..)

தவறு செய்யாத மனிதர்கள் யாரும் இல்லை.......

உண்மையிலே ரொம்ப அருமையான கதை போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍😍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

மிக்க நன்றி தோழி ❤️
 

T22

Well-known member
Wonderland writer
கதை அருமை. மித்ரா சுற்றி நகருகிறது. மித்ரா அன்புக்கு ஏங்குகிறவள். தான் நினைத்ததை செய்பவள் .தைரியம் . முதலில் புயலாக இருப்பவள் பின்னர் தெளிந்து அமைதியாகி விடுவாள் தாயாக நிமிர்ந்து நிற்கிறாள். தண்டனைஅனுபவிக்கிறாள்.மனிதர்கள் யாருமே நல்லவர் இல்லை தனக்கு நியாயமான செயல் அடுத்தவர் தப்பு தானே. அதை அழுத்தமாக கூறியிருப்பது அழகு. கர்மாவின் பயனை எல்லோரும் அனுபவிக்க வேண்டும். அருணா இவள் கோழை நல்லவள் ஆனால் கணவனின் அன்பை புரிந்து ஏற்றுக் கொள்ளதவள்.சஞ்சீவ் இவன் காதலை சரியான முறையில் சொல்லதவன் அவளுக்கு எதையும் செய்பவன் அவசரகுடுக்கை. ரஹீம் இவன் நட்பு கொடுத்ததை நம்பியவளுக்கு கொடுக்க வில்லை இவன் சுயநலவாதி. நஸ் ரீன் மலர் இருவரும் சூப்பர். அமரன் இவன் அவசரகுடுக்கை தான் விசாரணை பண்ணாமலே கொலை செய்தவன். சாந்தினி இவள் கோழை காதலிக்க லாயக்குஇல்லதவள்.சரவணன் சூப்பர். ருத்ரன் சுயநலவாதி. வெற்றி இவன் சீ மனைவி மகனுக்கு மட்டுமே நல்லவன். மித்ரா அம்மா 👻. சித்தப்பா நம்பிக்கை துரோகி. ராகவன் டூ மச். மொத்தத்தில் கதை பிள்ளைகள் அன்பாக கவனிக்க வேண்டும். கர்மாவை எல்லோரும் அனுபவிக்க வேண்டும். மித்ரா முதலில் பிடிக்க வில்லை என்றாலும் அவள் தைரியம் எதையும் கடந்து போகும் நிலை தெளிவான பின் தன்னை பார்க்க தான் மட்டும் தான் என்பதை உணர்ந்து இருக்கும் வரை தன்னம்பிக்கை இருக்கவேண்டும் அழுத்தமாக உணர்த்துவது அருமை. கதை நாயகி செம. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி தோழி
 
Top