BawaniBala
Member
வணக்கம் சகோதரிகளே ..
#பவாவிமர்சனம்
#சாஸ்திரம்_மீறிய_கீர்த்தனம்
#விருட்சம்18
கீர்த்தனைகள் பூஜைக்கு மட்டுமே அல்ல
தென்றலான நடனவடிவங்களுக்குமே..
ஏனோ இங்கே முரண்பாடான தொகுப்பாய்
பலவித கீர்த்தனை சாரங்கள்..
தாளம் தப்பினால் கீர்த்தனைகளும் தடுமாறும்
ஆதார சுருதியே இங்கே தப்பான தாளங்களாக
உருவகநிலையில் தொடரிசை நடனமாய்..
சாஸ்திரம் மீறிய கீர்த்தனம்
கேள்வி குறியான நிலையில்..!!
முதலில் ஒரு போட்டிக் கதைக்கு இப்படி ஒரு கதையை தெரிவுசெய்தது அசத்தலான துணிச்சல் உங்களுக்கு தோழியே
அதற்கு என் வாழ்த்துக்கள் . "அவள் ஒரு தனிமரம்" என்பதே சரியாக எனக்கு தோன்றியதுமா.❤❤❤
மித்ரதுளசி: பெயரை போல நட்பு நேசம் தூய்மை அற்ற ஒரு பெண்
ஆனால் பீனிக்ஸ் பறவையாக உருமாரும் போது இப்பெயர் இவளுக்கு சரியே.
எதுவா இருந்தால் எனக்கென்ன என் வாழ்வு என் கையில் அதற்காக யாரையும் எளிதில் சாடுவேன் என்ற நிலையில் நடந்த போது .இவளின் மேல் நிறைய கோபம் வந்தது. ஆனாலும் சில விஷயங்கள் காரணமில்லா காரியம் ஆகாதே.
தப்பு செய்தால் உடனே கிடைக்காத தண்டனை தாமதமாக வந்து பல நூறூ மடங்காய் வதைப்பது கவலையே. ஏதாவது ஒருவகையிலேனும் இவளுக்கு ஆறுதல் இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும் .❤
அருணா: காதல் வந்தபோது கானல் என நினைத்து தன் வாழ்வையே சரியாக புரிந்து வாழாத முட்டாள் பெண்.
தேன்மலர் : காதல்,பாசம், நட்பு,உயர்வு என உயர்ந்த பெண்.
மித்ரா அம்மா: இவரால் ஒரு பெண்ணின் வாழ்வே கேள்விகுறியானதுக்கு இவரே பொறுப்பு அதுவும் கடைசிவரை திருந்தாத ஜடம்.
நிலா: எனக்கு கண்களில் நீரை திரையிட்ட சின்ன மொட்டு .கடைசியில் சேரும் இடம் வந்தபோதே எனக்கு நிம்மதி ஆச்சு. இல்லை என்றால் இவளும் பின்னாளில் இன்னொமொரு சாம்பல் பறவையாக உருவாகி இருப்பாள்.
வெற்றி : நல்ல காதல்கணவன் மட்டுமே .வீட்டில் என்ன நடக்கிறது என தெரியாத கண்ணிருந்தும் காதிருந்தும் குருடுசெவிடான ஜட மனிதன். இவன் கொஞ்சம் பார்த்திருந்தால் தன் தங்கை இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டாளே.❤
ரஹீம்: புரிந்து கொள்ளவே முடியாத மனிதன். இவ்வளவு அக்கரை கொண்டவன் கடைசியாக செய்த காரியம் அவனுக்கு நேர்மை என்றாலும் ,ஒரு தாய்க்கு வலியே.❤
அமரன்: நல்லவன் ஆனாலும் இவனின் விபரீத முடிவால் ஒரு தாய் ஒரு குழந்தை இப்போ நடுவீதியில்.❤
சஞ்சீவ்: ஆரம்பத்தில் ஏதோ ஒன்றாக இருந்தாலும் முடிவில் கண்கலங்க வைத்த நல்ல மனிதன். இவனை மட்டுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சட்டென கோபம் வரும் இவனிடம் வாழ்க்கை தந்த பாடத்தால் சாந்தமானவனாக மாறியது நெகிழ்ச்சியே.
சரவணன் மற்றும் சாந்தினி விட்டில் பூச்சிகள் .
அருணா அப்பா, தன் சுகபோகமே போதும் மற்றவர்களின் வாழ்க்கை எப்படி போனால் என்ன என்று வாழ்ந்த கேவலான பிறவி அதனால் தான் அவர் மகளுக்கு இந்த நிலையோ.
ஆசிரிய தோழியே : பிரமிப்பு உச்சம் என்பதே என் கருத்து.
இந்த கதையில் யாரும் நல்லவர்களும் இல்லை கெட்டவர்களும் இல்லை நம்மில் நடமாடும் பல வடிவங்கள் இப்படி தான் என்பதை யதார்த்தமாக கூறி சென்றது அருமைமா.
ஒரு நாயகியை சுற்றி மட்டுமே கதை. அதில் அவளுக்கு நடக்கும் பல சம்பவங்கள் , சுற்றி இருக்கும் நபர்கள் என போராடி வாழும் வாழ்க்கையை பல வலிகளோடு கூறி சென்றது அருமைமா.
அதோடு நாயகன் நாயகி என்றால் நூறுவீதம் நல்லவர்களாகவே காட்டுவதை நிறுத்தி அவர்களும் யாதார்த்த மனிதர்களே என காட்டி அதை முறியடித்து சென்றதும் அருமை.
நாம் யாராக இருந்தாலும் தப்பு செய்தால் தண்டனை உண்டு என்பதையும் .அதை திரும்ப பெறும் போது ஏற்படும் வலியையும் யாராலும் விலக்க முடியாது என்பதே விதி.
அந்த சலங்கை அந்த கால் விழிநீரே.ஏன் இவ்வளவு பெரிய தண்டனை என அங்கலாயித்து போனேன். ஏற்கனவே ஒருவலி அதோடு இதுவுமா என இருந்தது எனக்கு.
முடிவில் இந்த நாயகிமை நினைத்து பிரமித்து போனேன். எதையும் தூக்கிபோட்டு நிமிரும் பல இடங்கள் சபாஷ். ஒரு வாழ்க்கை அதையும் முட்டி மோதி வாழ்ந்து பார்ப்போமே என நடைபோடும் புரட்சி பெண்ணே தான் இவள்.
இவள் கோழை அல்ல மீண்டும் மீண்டும் பிறக்கும் சாம்பல் பறவையே .❤❤
வாழ்த்துக்கள் மா.
போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.
#பவாவிமர்சனம்
#சாஸ்திரம்_மீறிய_கீர்த்தனம்
#விருட்சம்18
கீர்த்தனைகள் பூஜைக்கு மட்டுமே அல்ல
தென்றலான நடனவடிவங்களுக்குமே..
ஏனோ இங்கே முரண்பாடான தொகுப்பாய்
பலவித கீர்த்தனை சாரங்கள்..
தாளம் தப்பினால் கீர்த்தனைகளும் தடுமாறும்
ஆதார சுருதியே இங்கே தப்பான தாளங்களாக
உருவகநிலையில் தொடரிசை நடனமாய்..
சாஸ்திரம் மீறிய கீர்த்தனம்
கேள்வி குறியான நிலையில்..!!
முதலில் ஒரு போட்டிக் கதைக்கு இப்படி ஒரு கதையை தெரிவுசெய்தது அசத்தலான துணிச்சல் உங்களுக்கு தோழியே
அதற்கு என் வாழ்த்துக்கள் . "அவள் ஒரு தனிமரம்" என்பதே சரியாக எனக்கு தோன்றியதுமா.❤❤❤
மித்ரதுளசி: பெயரை போல நட்பு நேசம் தூய்மை அற்ற ஒரு பெண்
ஆனால் பீனிக்ஸ் பறவையாக உருமாரும் போது இப்பெயர் இவளுக்கு சரியே.
எதுவா இருந்தால் எனக்கென்ன என் வாழ்வு என் கையில் அதற்காக யாரையும் எளிதில் சாடுவேன் என்ற நிலையில் நடந்த போது .இவளின் மேல் நிறைய கோபம் வந்தது. ஆனாலும் சில விஷயங்கள் காரணமில்லா காரியம் ஆகாதே.
தப்பு செய்தால் உடனே கிடைக்காத தண்டனை தாமதமாக வந்து பல நூறூ மடங்காய் வதைப்பது கவலையே. ஏதாவது ஒருவகையிலேனும் இவளுக்கு ஆறுதல் இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும் .❤
அருணா: காதல் வந்தபோது கானல் என நினைத்து தன் வாழ்வையே சரியாக புரிந்து வாழாத முட்டாள் பெண்.
தேன்மலர் : காதல்,பாசம், நட்பு,உயர்வு என உயர்ந்த பெண்.
மித்ரா அம்மா: இவரால் ஒரு பெண்ணின் வாழ்வே கேள்விகுறியானதுக்கு இவரே பொறுப்பு அதுவும் கடைசிவரை திருந்தாத ஜடம்.
நிலா: எனக்கு கண்களில் நீரை திரையிட்ட சின்ன மொட்டு .கடைசியில் சேரும் இடம் வந்தபோதே எனக்கு நிம்மதி ஆச்சு. இல்லை என்றால் இவளும் பின்னாளில் இன்னொமொரு சாம்பல் பறவையாக உருவாகி இருப்பாள்.
வெற்றி : நல்ல காதல்கணவன் மட்டுமே .வீட்டில் என்ன நடக்கிறது என தெரியாத கண்ணிருந்தும் காதிருந்தும் குருடுசெவிடான ஜட மனிதன். இவன் கொஞ்சம் பார்த்திருந்தால் தன் தங்கை இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டாளே.❤
ரஹீம்: புரிந்து கொள்ளவே முடியாத மனிதன். இவ்வளவு அக்கரை கொண்டவன் கடைசியாக செய்த காரியம் அவனுக்கு நேர்மை என்றாலும் ,ஒரு தாய்க்கு வலியே.❤
அமரன்: நல்லவன் ஆனாலும் இவனின் விபரீத முடிவால் ஒரு தாய் ஒரு குழந்தை இப்போ நடுவீதியில்.❤
சஞ்சீவ்: ஆரம்பத்தில் ஏதோ ஒன்றாக இருந்தாலும் முடிவில் கண்கலங்க வைத்த நல்ல மனிதன். இவனை மட்டுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சட்டென கோபம் வரும் இவனிடம் வாழ்க்கை தந்த பாடத்தால் சாந்தமானவனாக மாறியது நெகிழ்ச்சியே.
சரவணன் மற்றும் சாந்தினி விட்டில் பூச்சிகள் .
அருணா அப்பா, தன் சுகபோகமே போதும் மற்றவர்களின் வாழ்க்கை எப்படி போனால் என்ன என்று வாழ்ந்த கேவலான பிறவி அதனால் தான் அவர் மகளுக்கு இந்த நிலையோ.
ஆசிரிய தோழியே : பிரமிப்பு உச்சம் என்பதே என் கருத்து.
இந்த கதையில் யாரும் நல்லவர்களும் இல்லை கெட்டவர்களும் இல்லை நம்மில் நடமாடும் பல வடிவங்கள் இப்படி தான் என்பதை யதார்த்தமாக கூறி சென்றது அருமைமா.
ஒரு நாயகியை சுற்றி மட்டுமே கதை. அதில் அவளுக்கு நடக்கும் பல சம்பவங்கள் , சுற்றி இருக்கும் நபர்கள் என போராடி வாழும் வாழ்க்கையை பல வலிகளோடு கூறி சென்றது அருமைமா.
அதோடு நாயகன் நாயகி என்றால் நூறுவீதம் நல்லவர்களாகவே காட்டுவதை நிறுத்தி அவர்களும் யாதார்த்த மனிதர்களே என காட்டி அதை முறியடித்து சென்றதும் அருமை.
நாம் யாராக இருந்தாலும் தப்பு செய்தால் தண்டனை உண்டு என்பதையும் .அதை திரும்ப பெறும் போது ஏற்படும் வலியையும் யாராலும் விலக்க முடியாது என்பதே விதி.
அந்த சலங்கை அந்த கால் விழிநீரே.ஏன் இவ்வளவு பெரிய தண்டனை என அங்கலாயித்து போனேன். ஏற்கனவே ஒருவலி அதோடு இதுவுமா என இருந்தது எனக்கு.
முடிவில் இந்த நாயகிமை நினைத்து பிரமித்து போனேன். எதையும் தூக்கிபோட்டு நிமிரும் பல இடங்கள் சபாஷ். ஒரு வாழ்க்கை அதையும் முட்டி மோதி வாழ்ந்து பார்ப்போமே என நடைபோடும் புரட்சி பெண்ணே தான் இவள்.
இவள் கோழை அல்ல மீண்டும் மீண்டும் பிறக்கும் சாம்பல் பறவையே .❤❤
வாழ்த்துக்கள் மா.
போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.