ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

18. சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் - நாவலுக்கான விமர்சனங்கள்

pommu

Administrator
Staff member
சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் - நாவலுக்கான விமர்சனங்கள்
 
yagnithaareview

👏👏 #சாஸ்திரம்_மீறிய_கீர்த்தனம்👏👏

முதல்ல இப்படி ஒரு வித்தியாசமான கான்செப்ட் யோசித்தற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

ஒரு பெண்ணின் துணிச்சல், அறியாமை, சுயநலம், அன்பு ,காதல் இது எல்லாத்தையும் மையமாகக்கொண்டு ரைட்டர் இந்தக்கதையை புது விதமா எடுத்துட்டுப் போறாங்க....

நம்ப நாயகிய வில்லினு சொல்றத விட சராசரியா நம்ப பக்கத்து வீட்ல சந்திக்கிற ஒரு நபரா தான் எனக்கு தெரியுது....

நண்பர்களுடன் விளையாட்டாக செய்த செயல் விபரீதமானதே இக்கதை..

மித்ரா தாய் அண்ணன் இருந்தும், அவள் அறியாமல் செய்த தவறினால் எவரின் அரவணைப்பும் இல்லாமல் தனித்து வாழ்கிறார்.. இவள் வாழ்வில் வரமாக நினைத்த அனைவரும் சாபமாக மாறியது ஏனோ🤧🤧🤧 இவள் மீது சிறு சிறு தவறு இருப்பினும் இவளை குற்றம் சொல்ல முடியாத நிலை ஏனோ..... அதுவும் அந்த சலங்கை 🤧🤧 ""ஒருவன் இருந்தாலும் பேசுவார்கள்... இறந்தாலும் பேசுவார்கள்...""" உண்மையான வார்த்தை...

"படைத்தவன் நீயெனில் பாவம் மட்டும் என்னுடையதா?"😔😔

மலர் மித்ராவின் ஒரே உயிர்ப்பு, ஆரம்பத்தில் மித்ராவுக்கு உறுதுணையாக இருந்தது அருமை, அதே நம்பிக்கை அவள்மீது கடைசி வரையும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் 🤧🤧.... அதுவும் கடைசியா அப்படி ஒரு நிலமையில்🤬

வெற்றி நோண்ணனு பேருக்கு இருந்தா பத்தாது வீட்ல என்ன நடக்குது, யாரு என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணும், அத விட்டுட்டு மத்தவங்கள தப்பு சொல்ல கூடாது....

ரஹீம் இவனின் நட்பு காதல் அனைத்தும் அழகு..... ஆனால் தன் துளசியின் மனதை உணர்ந்து கொள்ளாதது விதியின் செயலே..... பச்ச துரோகி 🤬🤬என் ____ குழந்தை மட்டும் ஆ 🤬🤬🤬 கடைசியா கூட நீ புரிஞ்சுக்கல என்கிற ஆதங்கம் எனக்கு நிறைய இருக்கு ரஹீம் 🤧...

அமரன் கதையின் திருப்புமுனை, தீயதை அழிக்கும் ருத்ரமூர்த்தி இவன், இவனின் அவசர புத்தியினால் இழந்தது பல 🤬🤬🤬 இவன் விரும்பி ஏற்ற வாழ்க்கையை உணராதது விதியோ.....

நஸ்ரின் பாவப்பட்ட ஜீவன், தலையும் புரியாமல் காலும் புரியாமல், இந்தப் பிள்ளையை நல்லா எல்லாரும் யூஸ் பண்ணிக்கிட்டங்க.. என்னதான் சொன்னாலும் இவள் காதல் ஸ்ட்ராங்....

அருணா வாழ்க்கையில ஏதோ ஒரு இடத்திலயாவது துணிச்சல் வேணும்... ஆனா நீ பேச வேண்டிய இடத்தில் பேசவே இல்ல . அடுத்தவர் கை பொம்மையா ஆட்டி வைத்ததன் விளைவு 🤬🤬

சஞ்சய் இவனுடைய காதலுக்காக இன்னும் போராடி இருக்குமோன்னு தோணுது.... வற்புறுத்தி வரவைக்கிறது காதல் இல்ல, அத புரிய வைக்கிறது தான் காதல்... ஆனா ஒரு தகப்பனா 👏👏👏👏

சரவணன் காதலித்த பாவத்திற்காக அவனுக்கு கிடைத்த தண்டனை அதிகமே..... குடி குடியை கெடுக்கும் 🤬

சாந்தினி பிரச்சனைகளை கண்டு பூனையாக பதுங்கமல்,புலியாக சீறீ இருந்தால் நன்றாக இருந்திருக்கும், இவளின் விபரீத முடிவினால், இழந்தது ஒன்றல்ல இரண்டல்ல மூன்று🤬🤬

ருத்ரன் சட்டத்தின் நிழலில் இருப்பவன், தன் சுயநலத்திற்காக சட்டத்தை கையில் எடுத்தது ஏனோ🤬

நம்ப எல்லாம் மித்ராவை திட்டிக் கொண்டே இருந்தோம் ஏன் இப்படி இருக்க ஏன அதற்கு மூல காரணமே சாட்சாத் நம்ப மித்ரா உடைய அம்மாவே காரணம், எவ்வளவு சுயநலம், ஏம்மா தெரியாம தான் கேக்குறேன் புதுசு வந்தா பழச மறந்து விடுவாயா 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 ஒரு பொண்ணு, ஆறுதலுக்கு ஒரு மடி தேடுறது ஒன்று தொப்புள் கொடி உறவா இருக்கும் இல்ல தாலிக்கொடி உறவாய் இருக்கும், அதில் முதலிடம் தொப்புள் கொடி உறவு, ஆனா நீ நாய்க்கு சமமாக பெத்த பிள்ளையை பேசுற🤬🤬🤬 என்ன சொன்ன உனக்கு வேணா குழந்தை என்கிறது சாதாரணமா இருக்கலாம் 🤬🤬🤬 இது எல்லாத்தையும் விட எப்படி உன்னால இவ்வளவு கேவலமான ஒரு செயலை செய்ய முடிஞ்சுச்சு🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 இந்த பூமிக்கு பாரம் மித்ரா இல்ல நீ தான் 🤬🤬🤬 உனக்கு மித்ரா ஆயிரம் மடங்கு பரவாயில்லை.....

அருணாவின் அப்பா நோ கமெண்ட்ஸ் பண்ண பாவம் எங்கேயும் கொண்டுபோய் கரைக்க முடியாது 🤬🤬

( இந்த கதையில வர்ற விஷயம் எல்லாமே நம்ப வாழ்க்கையில சிறிய தவறுன்னு நினைக்கிற ஒரு விஷயம் தான் , விளையாட்டு விளையாட இருக்கிறவரைக்கும் எல்லாமே நல்லதுதான், ஆனா ஏதோ ஒரு இடத்தில நம்ப அறியாமல் செய்த தவறு எத்தனை பேத்தை பாதிக்க படுது😔.... இந்த கதையை படித்து என்ன நான் சுய ஆலோசனை செய்ய முடிந்தது..)

தவறு செய்யாத மனிதர்கள் யாரும் இல்லை.......

உண்மையிலே ரொம்ப அருமையான கதை போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍😍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

 

S. Sivagnanalakshmi

Active member
கதை அருமை. மித்ரா சுற்றி நகருகிறது. மித்ரா அன்புக்கு ஏங்குகிறவள். தான் நினைத்ததை செய்பவள் .தைரியம் . முதலில் புயலாக இருப்பவள் பின்னர் தெளிந்து அமைதியாகி விடுவாள் தாயாக நிமிர்ந்து நிற்கிறாள். தண்டனைஅனுபவிக்கிறாள்.மனிதர்கள் யாருமே நல்லவர் இல்லை தனக்கு நியாயமான செயல் அடுத்தவர் தப்பு தானே. அதை அழுத்தமாக கூறியிருப்பது அழகு. கர்மாவின் பயனை எல்லோரும் அனுபவிக்க வேண்டும். அருணா இவள் கோழை நல்லவள் ஆனால் கணவனின் அன்பை புரிந்து ஏற்றுக் கொள்ளதவள்.சஞ்சீவ் இவன் காதலை சரியான முறையில் சொல்லதவன் அவளுக்கு எதையும் செய்பவன் அவசரகுடுக்கை. ரஹீம் இவன் நட்பு கொடுத்ததை நம்பியவளுக்கு கொடுக்க வில்லை இவன் சுயநலவாதி. நஸ் ரீன் மலர் இருவரும் சூப்பர். அமரன் இவன் அவசரகுடுக்கை தான் விசாரணை பண்ணாமலே கொலை செய்தவன். சாந்தினி இவள் கோழை காதலிக்க லாயக்குஇல்லதவள்.சரவணன் சூப்பர். ருத்ரன் சுயநலவாதி. வெற்றி இவன் சீ மனைவி மகனுக்கு மட்டுமே நல்லவன். மித்ரா அம்மா 👻. சித்தப்பா நம்பிக்கை துரோகி. ராகவன் டூ மச். மொத்தத்தில் கதை பிள்ளைகள் அன்பாக கவனிக்க வேண்டும். கர்மாவை எல்லோரும் அனுபவிக்க வேண்டும். மித்ரா முதலில் பிடிக்க வில்லை என்றாலும் அவள் தைரியம் எதையும் கடந்து போகும் நிலை தெளிவான பின் தன்னை பார்க்க தான் மட்டும் தான் என்பதை உணர்ந்து இருக்கும் வரை தன்னம்பிக்கை இருக்கவேண்டும் அழுத்தமாக உணர்த்துவது அருமை. கதை நாயகி செம. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.
 
  • Love
Reactions: T22
#Uma_View

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம்

கதையில் பெரிதாக காதல் இல்லை, ரொமன்ஸ் இல்லை, மனதிற்கு இதம் தரும் மனிதர்கள் இல்லை இதில் சிலரின் தவறுகளும் அதற்கான தண்டனையுமே இந்த சாஸ்திரம் மீறிய கீர்த்தனம்.

வெற்றி ஆரம்பத்தில் மித்ரா மீது இவன் காட்டிய வெறுப்பும். அவளை நடத்திய விதமும் கோவத்தை வர வரவழைத்தாலும் அதற்கு எல்லாம் தகுதி உடையவள் தான் இந்த மித்ரா.

அருணா

மித்ரா இவளின் அலட்சியத்தாலும், சுயநலத்தாலும் மடிந்த ஜீவன்.

அருணா எந்த ஒரு பெண்ணுக்கும் வர கூடாத பழி. வீட்டு ஆண் மகன்கள் தவிர வேறு யாரையும் நிமிர்ந்து பார்க்கா பெண்ணவளுக்கு கிடைத்த பட்டம் ஒழுக்கம் கெட்டவள். 🥺🥺🥺. இவள் நல்லவள் மிக நல்லவள் அந்த குணமே இவள் உயிர் போக காரணமா அமைஞ்சி போச்சி. 🥺🥺🥺🥺.

அருணா மட்டும் அல்ல இந்த மித்ராவின் குண இயல்புகளால் அந்த காலனின் கைப்பிடிக்குள் கைதான உயிர்களின் எண்ணிக்கை இன்னும் சில. 🥺🥺🥺🥺

ஆனால் அவர்களுக்கு அதுவும் ஒரு வித தண்டனையே.

சஞ்சீவ் தவறு செய்தவன் தான், பொண்ணின் நுண் உணர்வுககளை புரிந்து கொள்ளாதவன் தான் அதை மதிக்காதவன் தான். ஆனால் இவன் காதல் உண்மை தன்னவளை எந்த நிலையிலும் அப்படியே ஏற்று கொள்ளும் மாறா நேசம் கொண்டவன் இவன்.

தன்னவள் கற்று தந்த பாடத்தில் மகள் மீது இவன் காட்டிய நிதானம் சற்று ஆறுதல்.

எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு. மித்ரா செய்த பாவத்திற்கு எதிர்வினை புரிய வந்தவர்கள் தான் அமரன், ருத்ரன், ரஹீம்.

இவங்க மூணு பேரும் பெரிதா மனசில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால் அமரன் இவன் தன் கொள்கைகளுக்கும் மனசாட்சிக்கும் உண்மையா நேர்மையா இருந்தான் . எப்போ ஒரு நல்லவன் என்னால பாதிக்கபடுகிறானோ அப்போவே எனகான தண்டனை ஏற்று கொள்வேனு எப்போ சொன்னானோ அப்போவே தெரிஞ்சு போச்சு இவனோட முடிவு என்ன என்று. ஆனால் கடைசி வருவான் என்று ஒரு சின்ன நட்பாசை இருந்தது

கடைசியாக ரஹீம் பண்ணியது ரொம்பவே பெரிய தப்பு.

ஆனா சும்மா சொல்ல கூடாது என்ன தான் மித்ரா பன்றது பிடிக்கல என்றாலும் இவ கிட்ட ஆச்சரியமா பார்த்தா ஒரு விசயம் அந்த மன தைரியமும் உறுதியும் தான் ருத்ரன் அவன் கை பாவையா இவளை ஆட்டுவிக்கும் போதும் அமரன் இவளிடம் அத்து மீறும் போதும் நடந்தது நடந்து விட்டது அடுத்து என்ன என்று அதை தொடச்சி போட்டு போறது எல்லாம் ஆத்தி பொண்ணா இது 😳😳😳😳.

இதுல மித்ரா மூலம் சொல்ல பட்ட விசயம் நூறு சதவீதம் உண்மை. karma is boomerang

எப்போவும்மே நான் ஸ்ட்ராங்கா நம்புர ஒரு விசயம் நம்ம பன்ற எல்லாமே Each and Every Movement இந்த universe கவனிக்கும் நல்லதோ கெட்டதோ நம்ம பண்ணியத விட பல மடங்கு நமக்கு திருப்பி கிடைக்கும் . நேரடியா சம்பந்தபட்ட ஆளுக மூலம் நமக்கு கிடைக்க வில்லை என்றாலும் வேற வடிவத்தில் வேறு ஒரு நபர் மூலம் கண்டிப்பா கிடைக்கும்.

அது மட்டுமல்லாமல்
.
ஒரு கதை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். ஒரு மெயின் ஹீரோ. கதாநாயகி மிக நல்லவளாக அக்கறையாக இருப்பது போல தான் பெரும்பாலும் வரும்.

இப்படி ஸ்ட்ராங்கான ஆண் கதாபாத்திரம் இல்லாமல் சுயநலவாதியாக, மற்றவர்கள் உணர்ச்சி களுடன் விளையாடும் பெண்ணாக தன்னலமே பெரிதென கருதும் இந்த மித்ரா போன்ற ஒருத்தியை மட்டும் மைய புள்ளியாக வச்சி கதை சொன்னதுக்கு எல்லாம் தில்லு வேணும். இப்படிபட்ட வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுகள் ரைட்டரரே .

மித்ரா கதையின் மைய புள்ளி என்பதால் அவள் தவறு நம்ம கண்ணுக்கு பெருசா தெரியலாம். ஆனா மற்ற கதாபாத்திரம் எல்லாம் ரொம்பவே சரி Perfect கிடையாது தான். அவரவருக்கு அவரவர் நியாயம் தர்மம். அவங்க முடிவுக்கும் நிலமைக்கும் மித்ரா மட்டும் அல்ல அவங்க அவங்க குணஇயல்புகளும் ஒரு விதத்தில் காரணம் தான்.

அருணா நல்லவள் தான் ஆனால் பலகீனமானவள்.

சஞ்சீவ் காதல் உண்மை ஆனால் அவன் தேர்ந்தேடுத்த வழி தவறு.

சாந்தினி காதலிக்க தகுதி இல்லாதவள், பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியா கோழை.

வெற்றி தான்தோன்றிதனமானவன் சிறந்த கணவன் ஆனால் நல்ல அண்ணன் இல்லை.

அமரன் அவசரகாரன். கண்ணால் கண்டதை உண்மை என்று நம்பியவன் ஆழ்ந்து யோசிக்காதவன்.

மித்ரா தாய் இவள் எல்லாம் என்ன பிறவி. இந்த கதைல ரொம்பவே மோசமான ஆளு என்றால் இவள் தான். சரியான ஈன பிறவி.

மித்ரா என்ன சொல்ல ஆரம்பத்தில் இவள் மீது அவ்ளோ கோவம் ஆனா கடைசில இவள பார்க்கிற பார்வை மொத்தமா மாறி விட்டது.

இவள் நினைச்சி இருந்தா ஈஸியா அவள் முடிவை தேடி இருக்கலாம். அவள் வலி வேதனைக்கு விடுதலை குடுத்து இருக்கலாம். ஆனா அவள் அப்படி பண்ண வில்லை அதுக்கு அவள் கூறிய இரண்டு காரணம் 🥺🥺🥺🥺. மனசை தொட்டு விட்டாள்.

மகன் மீது இவள் கொண்ட பாசம். அவன் நலனுக்காக அவனை கேட்காமல் இருப்பது. அவன் மீது உங்கான பாசம் குறைந்து விட்டது என்றால் என்னிடம் தந்து விடு அவன் தாங்க மாட்டான்.

ஒரு தாயா என் மனசில் ஜெயித்து விட்டாள்.

அது மட்டும் இல்லாமல் மித்ரா இவள் சாமானிய பெண் இல்லை. என்ன தைரியம், மன உறுதி, வாழ வேண்டும் என்ற வைராக்கியம். இதில் பாதி நமக்கு இருந்தால் கூட போதுமே நமது முழு வாழ்கையும் இந்த பூமியில் வாழ்ந்து விடலாமே .

சஞ்சீவ் கடைசியாக செய்த உதவி சொல்றதுக்கு வார்த்தை இல்லை செம்ம இவன். அவ்ளோ பிடிச்சி இருக்கு இவனை.

மித்ரா

ஆரம்பத்தில் அப்பாவி பெண்ணாக அறிமுகம் ஆகி

அநியாய பெண்ணாக நம்மில் வலம் வந்து

முடிவில் என்னை நெகிழ வைத்து பிரமிக்க வைத்த பெண்ணவள் இவள்.

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் உண்மையிலேயே வழக்கத்தை மீறிய மாறுபட்ட ஒரு கதை தான்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் 😘🤩♥️🥳🥰🎉😘
 
  • Love
Reactions: T22

Gowri

Well-known member
#கௌரிவிமர்சனம்

#videoediting

#சாஸ்திரம்_மீறிய_கீர்த்தனம்

ரொம்ப எதார்த்தமான கதை, நாம் செய்யும் ஒரு ஒரு தப்புக்கும் கண்டிப்பா தண்டனை இருக்கு…..

அதை சரியா புரிஞ்சி நடந்தா வாழ்க்கை நல்ல இருக்கும், ஆன இங்க நிறைய பேருக்கு அது புரியல🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

மித்ரா - இவளை சுத்தி தான் கதையே, இவ நிறைய தப்பு பண்ணி இருந்தாலும் அதுக்கு அடிதளம் அமைச்சு கொடுத்தது அவ வீடு தான்😒😒😒😒😒

அம்மா ஓட சரியான வழிகாட்டுதல் இல்ல, அண்ணன் ஓட கண்டிப்பு கலந்த பாசம் இல்ல, இப்படி எதுவும் இல்லாம வளர பொண்ணு எப்படி இருப்பா தான்தோன்றி தனமா தானே இருப்பா??????

அதுக்கு ஆன தண்டனையும் கிடைக்குது கடைசில……

இவ தப்புனா இவளால பாத்திக்க பட்டவங்களும் தப்பு தான்…..

இவ நல்லவன்னு சொல்ல வரல,இவ கேரக்டர் இது தான்…..

படைத்தவன் நீ எனில் பாவம் மட்டும் எனதா?????

இது எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது…..

மலர் - ஈடு இணை இல்ல பாசம் மித்ரா மேல இவளுக்கு அவளுக்கு அப்படியானு கேட்ட இல்ல தான்🙄🙄🙄🙄

கடைசி வரை இவ அன்பு மாறல🤩🤩🤩🤩

வெற்றி - என்ன மனுஷன் இவன் எல்லாம், பொண்டாட்டி மேல இருக்கற கொஞ்சம் அக்கறையை கூட பிறந்தவா மேல காட்டி இருந்து இருக்கலாம் இவன், அதை செய்யல, ஆன அவ தப்பு பண்ணினா மட்டும் தண்டிகர உரிமை மட்டும் உண்டா உனக்கு😤😤😤😤😤

மித்ரா அம்மா - தான் திருடி பிறரை நம்ப மாட்டாங்க அப்படிகரது இவங்க விசயத்தில் நூறு சதவீதம் உண்மை😬😬😬😬😬

இவங்க கேரக்டர்🤬🤬🤬🤬🤬🤬

அருணா - தன் வாழ்க்கையை ஒழுங்காக வாழ தெரியாத முட்டாள்😏😏😏😏

அவ சொன்னா உனக்கு எங்க போச்சி அறிவு😤😤😤😤

முதலில் தான் சொல்லல, அப்பறம் ஆவது உன் குடும்பத்தை சந்தித்து உண்மையை விளக்கி இருக்கலாம் இல்ல…..

எந்த இடத்தில் பேசணும் எந்த இடத்தில் அமைதியா இருக்கணும்னு தெரியாம இருந்துட்டு, இவ பாட்டுக்கும் போய்ட்டா…..

இதில் முழுக்க பாதிச்சது நிலா பாப்பா தான்…..

மனைவியா தான் சரியா வாழலை, அம்மா வா கூட🤐🤐🤐🤐🤐….

அந்த குழந்தை என்ன பாவம் செய்தது, இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லையே இருந்து இருக்கலாம் 🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

சஞ்சீவ் - ஆரம்பத்தில் ஆன்டி ஹீரோ போல தெரிஞ்சாலும், ரொம்ப நல்லவன்…..

இவன் காதலை அனுகின விதம் வேணும்னா தப்பா இருக்கலாம் ஆன இவன் காதல் ரொம்ப அழகானது & ஆழமானதும் கூட…..

ஒரு கணவனா ஜெயிச்சிடான் & அப்பாவாவும் ஜெயிப்பான்👍👍👍👍👍

அமரன் - ரொம்ப நல்ல மனிதன், இவன் சொன்ன மாதிரியே செய்துடான் 😥😥😥😥😥

சாந்தினி - இவளுக்கும் அருணக்கும் பெரிய வித்தியாசம் இல்ல, ரெண்டு பேருமே குழந்தையை பத்தி யோசிக்கவே இல்ல…..

அதுவா வந்து உங்க கிட்ட பிறக்கணும்னு கேட்டுச்சு, நீங்களே தானே சுமந்திங்க அப்பறம் என்ன 🤐🤐🤐🤐 அதை பத்தி கூட யோசிக்காம🥺🥺🥺🥺……

சரவணன் - ரொம்ப பாவம் இவன்🤧🤧🤧🤧🤧

ருத்ரன் - சரவணனுக்கு நல்ல அண்ணனா தான் இருந்து இருக்கான்……

அருணா அப்பா - 🥶🥶🥶🤮🤮🤮🤮🤮🤮

ரஹீம் - நண்பனுக்கு நல்ல நண்பன் தான், ஆன ஒரு தாய் ஓட வலி புரியாம நடந்துக்கிடான்…….

நஸ்ரின் - நினைத்த வாழ்க்கை இவளுக்கு மட்டும் தான் கிடைத்து இருக்கு…..

ரஹீம் மேல இவ வெச்சி இருந்த காதலிலா காதல் அழகு🤩🤩🤩🤩🤩

யாரும் இந்த கதையில் நூறு சதவீதம் நல்லவங்கலும் இல்ல கெட்டவங்களும் இல்ல…..

எல்லார்கிட்டயும் நெகாடிவ் ஷேடு இருக்கு….

இப்படி இருக்கற கேரக்டர்ஸ் வெச்சி செம்மையாக கொண்டு போய்டிங்க ரைட்டர் ஜீ, அதுக்கு பெரிய பெரிய ஹாட்ஸ் ஆஃப்👏👏👏👏👏…..

கண்டிப்பா நீங்க போட்டியில் வெற்றி பெருவீங்க அப்படிகர நம்பிக்கை எனக்கு இருக்கு🥰🥰🥰

ட்ரீட் தரணும் சரியா ஜீ🤩🤩🤩🤩

வாழ்த்துக்கள் ஜீ, இன்னும் நிறைய நிறையா எழுதணும்💐💐💐💐
 
  • Love
Reactions: T22
Top