ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

'விழி தீயிலொரு தவம்' - கதைத் திரி

Status
Not open for further replies.

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 05






இந்திரசேனா சொன்னதைக் கேட்டு யாழ்மொழி அதிர்ந்துப் போய் நிற்க, அவளோ கண்ணீர் வடித்தபடி ஜன்னல் வழியே வெளியே வெறித்துக்கொண்டு நின்றிருந்தாள்.



"இப்போது எதற்கு அழுகுறீர்கள் இளவரசி, அரசருக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்து நான்தான் அழ வேண்டும்" என்று அவள் சொல்ல, தோழியை நிமிர்ந்து பாவமாகப் பார்த்தாள் மற்றவள்.



"சரி விடுங்கள், மனதை பறி கொடுத்த பிறகு செய்வதற்கு எதுவுமில்லை. ஆனால், இதை அரசர் ஏற்றுக்கொள்வார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?" என்று யாழ்மொழி கூரிய பார்வையோடுக் கேட்க, விழிகள் கலங்க நின்றிருந்த இந்திராவுக்கு நிஜமாகவே அதற்கான பதில் தெரியவில்லை.



"இளவரசர் நந்தனுக்கும் உங்களுக்கும் திருமணம் பேசி முடிவு செய்துவிட்டார்கள், இப்போது சென்று நீங்கள் காதலிப்பதை சொன்னால்... அதுவும் சாதாரண மக்களில் ஒருவனை நீங்கள் காதலிப்பதாக சொன்னால் அவர் ஏற்றுக்கொள்வார் என்பது சந்தேகம்தான். அப்படி இருக்கையில் இது எந்த வகையில் சாத்தியமாகும் என்று எண்ணுகிறீர்கள் இளவரசி, எனக்கு என்னவோ இது சரியான முடிவாக தோன்றவில்லை" என்று தன் கருத்தை அவள் சொல்லி முடிக்க, இந்திரசேனாவோ பதறியேவிட்டாள்.



"யாழ், வீராவை மறந்து விடு என்று மட்டும் சொல்லாதே! நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன், என்னால் முடியவில்லை. எனக்கு இந்த ராஜ்ஜியம், ஆடம்பரம், பணம் எதுவுமே வேண்டாம். அவனோடு வாழ்ந்தால் மட்டும் போதும் என்று தோன்றுகிறது" என்று அவள் சொல்ல, தன் இளவரசியை வாயைப் பிளந்துக்கொண்டு பார்த்தாள் யாழ்மொழி.



"என்ன, நீங்கள் தெரிந்து பேசுகறீர்களா, இல்லை தெரியாமல் பேசுகிறீர்களா! காதலுக்காக ராஜ்ஜியத்தை உதறி தள்ளுவதா! இப்போது தான் நிஜமாகவே எனக்கு மயக்கம் வருவது போலிருக்கிறது. இருந்தாலும், உங்களின் வாழ்க்கை என்னை போன்ற பல பேரின் கனவு, இப்போது வந்த ஒருவனுக்காக மொத்தத்தையும் உதறுவேன் என்று கூறுவது மடத்தனமாக இல்லையா?" என்று சொல்லி விட்டுதான் சுதாகரித்தவள், "அய்யோ இளவரசி, எல்லை மீறி பேசிவிட்டேன். மன்னித்து விடுங்கள்! ஏதோ ஒரு ஆசேத்தில் ஏதேதோ பேசிவிட்டு.. ச்சே!" என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.



ஆனால், இந்திரசேனாவோ விரக்தியாகப் புன்னகைத்தாள்.



"நீ இதுவரை யாரையாவது காதலித்திருக்கிறாயா?" என்று தோழியின் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்து அவள் கேட்க, யோசனையோடு இல்லையெனும் விதமாக தலையசைத்தாள் யாழ்மொழி.



"காதலித்து பார் புரியும்" என்று மட்டும் சொன்னவள் அங்கிருந்து நகரப் போக, வேகமாக சென்று இந்திராவின் முன்னே நின்றுக்கொண்டவள், "இதற்கு என்ன அர்த்தம்?" என்று கேட்டாள் குழப்பத்தோடு.



"காதலித்தால் மட்டுமே அந்த உணர்வை புரிந்துக்கொள்ள முடியும். தன்னவனுக்காக என்ன வேண்டுமானாலும் மனம் செய்யத் துடிக்கும். அத்தனை அழகான ஒரு உணர்வு, அதை உன்னால் இப்போது புரிந்துக்கொள்ள முடியாது" என்று இந்திரா சொல்லிவிட்டு செல்ல, தலையை சொரிந்துக்கொண்டாள் யாழ்மொழி.



"இவர்கள் காதலித்ததே தவறு என நான் இவர்களை தடுக்க முயன்றால், என்னையும் சேர்ந்து காதலிக்க சொல்கிறார்களே! ஓஹோ.. என்னையும் கூட்டுக்களவாணியாக மாற்றப் பார்க்கிறார்களோ... இருக்கலாம் இருக்கலாம். காதலாவது மண்ணாவது! இருக்கும் பிரச்சனையில் இது வேற" என்று சலிப்பாக விழிகளை உருட்டியவாறு தன் வேலைகளை கவனிக்கச் சென்றாள் அவள்.



அடுத்த இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், ஊரே மன்னர் எடுத்திருக்கும் முடிவைப் பற்றி அறிந்து பரபரப்பாக இருந்தது.



மக்களுக்கிடையில் கிட்டத்தட்ட மன்னருக்கு எதிரான புரட்சி வெடிக்க காத்திருக்க, சந்தையில் கூட்டமாக நின்றிருந்தனர் மக்கள் கூட்டம்.



"இது மண்ணுல எங்களுக்கும்தானே உரிமை இருக்கு, இந்த மண்ணோட வளங்கள அந்த வெள்ளைக்காரனுங்களுக்கு கொடுக்க மன்னர் எப்படி சம்மதிப்பாரு? இதை என்னால கொஞ்சம் கூட ஏத்துக்க முடியல..." என்று ஒரு பெண்மணி கத்த, "ஆமா ஆமா, இந்த வளங்கள் நமக்கு சொந்தமானது. காசுக்காக மன்னர் எடுத்த முடிவு நாம ஆமோதிக்கவே கூடாது. இதுக்கு எதிரா நாம புரட்சி பண்ணணும்" என்று குரல் கொடுத்தான் ஒருவன்.



"வெள்ளைக்காரங்களோட அராஜகத்த ஏற்கனவே தாங்க முடியல. இதுல இந்த உரிமைகளையும் தூக்கி கொடுத்தா நாம எங்கதான் போறது, சொந்த மண்ணுலயே அடிமையா வாழ்ந்துட்டு இருக்கோம், இன்னும் எத்தனை காலத்துக்கு இது நீடிக்குமோ தெரியல. அவனுங்கள துரத்துறது விட்டுட்டு உரிமைய தூக்கி கொடுக்குறதா. அரசரோட செயல நாங்க வன்மையா கண்டிக்குறோம்"



என்று ஆளாளுக்கு கோபமாகப் பேச, இதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த வீராவோ எல்லோர் முன்னும் வந்து நின்றான்.



"கொஞ்ச நேரம் எல்லாரும் அமைதியா இருங்க, அரசர் பண்ணத என்னாலயும் ஏத்துக்க முடியலதான். ஆனா, எனக்கென்னவோ அரசர் விருப்பப்பட்டு பண்ண மாதிரி தெரியல. இந்த வெள்ளைக்காரனுங்களோட வற்புறுத்தலா இல்லன்னா மிரட்டலா கூட இருக்கலாமே!" என்று அவன் சொல்ல, "ஏன் வீரா, நம்மள பாதுகாக்குறது அரசரோட கடமை. நமக்காக அவங்கள எதிர்த்து நின்னிருக்கலாமே!" என்று பதிலுக்கு கேட்டான் ஒருவன்.



வீராவோ விரக்தியாகப் புன்னகைத்தவன், "அவங்கள எதிர்த்து நிக்குற படை பலமும் ஆயுத பலமும் நம்ம அரசர்கிட்ட இருந்திருந்தா எப்போவோ அவங்கள அடிச்சி விரட்டியிருக்கலாம். ஆனா, அந்த வெள்ளைக்காரனுங்க கிட்ட ஆயத பலம் ஜாஸ்தி, அவங்க நினைச்சா அவங்களோட நாட்டுலயிருந்து ஆயுதங்கள இறக்குமதி பண்ணலாம். ஒருவேள அவங்களோட ஒப்பந்தத்துக்கு அரசர் சம்மதிச்சிருக்கலன்னா நஷ்டம் நமக்குதான். நம்ம நிலத்தையே அழிச்சிருவானுங்க" என்று தெளிவாக சொல்லி முடித்தான்.



அவனுக்கு முன்னே இருந்த மக்களோ ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, "இப்போதான் புரியுது வீரா, இவனுங்கள சீக்கிரம் நாட்டை விட்டு ஓட விடணும். வரிப்பணமும் அதிகரிச்சிக்கிட்டே போகுது, கொடுக்கலன்னா தண்டிக்கிறாங்க. இல்லன்னா நம்ம வீட்டு பொண்ணுங்களையே தூக்கிட்டு போறானுங்க" என்று வேதனையோடு சொன்னார் கூட்டத்திலிருந்த பெரியவர்.



"அவனுங்களுக்கு எதிரா நாம புரட்சி பண்ணிக்கிட்டே இருக்கணும், பண்ணணும்..." என்று அழுத்தமாக சொன்னான் வீரா.



அன்றிரவு, ஆங்கிலேய அரண்மனையிலுள்ள பாரில் அமர்ந்திருந்தனர் சில அதிகாரிகள், லியோ உட்பட.



வில்லியமோ கையிலிருந்த பெரிய க்ளாள் ஜாரிலிருந்த மதுவை குவளையில் ஊற்றி அதை வாயில் சரிக்க, ஆளாளுக்கு தத்தமது குவளைகளில் ஊற்றி மூக்கு முட்ட குடித்தனர்.



"அரசரோட அரண்மனையில எவ்வளவு அழகான பொண்ணுங்க, வாவ்! பார்த்துட்டே இருக்கலாம்னு தோனுச்சு அதுவும் அந்த ஒரு பொண்ணு. இந்த ட்ரிங்க்ஸோட அவளும் பக்கத்துல இருந்தா, இட் வில் பீ ஃபீல் லைக் ஹெவென்" என்று வில்லியம் யாழ்மொழியை நினைத்தவாறு சொல்ல, "ரியலி! அப்போ எடுத்துக்க வேண்டியதுதானே" என்று கேலியாக சொல்லி சிரித்தனர் மற்றவர்கள்.



லியோவோ அவன் பேசுவதை அமைதியாகக் கேட்டவாறு மதுவை அருந்திக்கொண்டிருக்க, வில்லியமோ சிரித்தவாறு இல்லை எனும் விதமாக தலையசைத்தான்.



"அரண்மனையில வேலை பார்க்குற பொண்ணு, அவ்வளவு சீக்கிரம் கை வச்சிர முடியாது. வில் சீ..." என்ற வில்லியமைப் பார்த்து போதையில் சிரித்தான் லியோ.



அவன் சிரிப்பதை முதல் முறை பார்க்கின்றனர் மொத்தப் பேரும். போதை தலைக்கேறியதில் அவன் தன்னை மீறி சிரிக்க, "சார், வாட் ஹேப்பன்ட்?" என்று சற்று மரியாதையாகவே கேட்டான் வில்லியம்.



"யூ நோ வாட், நான் பார்த்த பொண்ண நீ பார்த்திருந்தா இப்படி பேச மாட்ட. வாவ்! எவ்வளவு அழகான கண்கள் தெரியுமா... ஒரே பார்வைதான், க்ரிஸ்ட்டிய கூட நான் மறந்துட்டேன்" என்று போதையில் அவன் குளறியபடி பேசிக்கொண்டு போக, அவனை அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தனர் மற்ற அதிகாரிகள்.



"வூ இஸ் ஷீ?" என்று அவனையே குறுகுறுவெனப் பார்த்தவாறு வில்லியம் கேட்க, "ஐ டோன்ட் நோ, பட் ஷீ இஸ் பியூட்டிஃபுல்" என்று மனக்கண் முன் தோன்றிய அவளுடைய முகத்தையே பார்த்தவாறு சொன்னான் லியோ.



"சாருக்கு போதை ஏறிடுச்சுன்னு நினைக்கிறேன்" என்று ஜேம்ஸ் தன் பக்கத்திலிருந்தவனின் காதில் கிசுகிசுக்க, தள்ளாடியபடி அறைக்கு நடந்துச் சென்றான் லியோ.



அன்றைய நாள் கழிந்து அடுத்த நாளும் விடிந்தது.



லியோவோ நேற்றிரவு அதிகமாக குடித்ததில் உண்டான தலைவலியில் நெற்றியை நீவி விட்டவாறு தன் ஆஃபீஸ் அறையில் அமர்ந்திருக்க, அப்போது உள்ளே வந்த ஜேம்ஸ் அவனை அடக்கப்பட்ட சிரிப்போடு பார்த்தான்.



அதை கவனித்தவன் விழிகளை நிமிர்த்தி அவனை ஒரு பார்வைப் பார்த்து, "வாட்?" என்று காட்டமாகக் கேட்க, "நேத்து ராத்திரி போதையில நீங்க ஒரு பொண்ண பத்தி சொன்னீங்கல்ல சார், அது அந்த பொண்ணுதானே!" என்று சிரித்தவாறுக் கேட்டான் ஜேம்ஸ்.



"வாட்?" இப்போது அவனுடைய குரல் அதிர்ச்சியோடு ஒலித்தது.



மற்றவனும் அவன் பேசியது அத்தனையையு ஒன்று விடாமல் சொல்லி முடிக்க, அதிர்ந்துப் பார்த்தவன் உள்ளுக்குள் தன்னைத்தானே திட்டிக்கொண்டு ஒரே நொடியில் தன் முகபாவனையை கோபமாக மாற்றினான்.



"இல்ல சார், அது.. நேத்து ராத்திரி நீங்க..." என்று அவனின் கோபமான முகத்தைப் பார்த்ததும் ஜேம்ஸிற்கு வார்த்தைகள் தடுமாற, "வாட் ரப்பிஷ்! போய் வேலைய கவனி" என்று மற்றவன் அடித் தொண்டையிலிருந்து கத்தினான்.



அதற்குமேல் அவன் அங்கு இருப்பானா என்ன!



விட்டால் போதுமென்று ஜேம்ஸ் ஓடியிருக்க, 'நான் அப்படி பேசினேனா என்ன, ச்சே! இனி குடிக்கவே கூடாது' என்று ஒரு முடிவு எடுத்தவனாக சலிப்பாக விழிகளை உருட்டினான் லியோ.



கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிந்திருக்க, அன்று வீராவின் தலைமையில் புரட்சியாளர்கள் ஆங்கிலேய அரண்மனையை தாக்கக் கிளம்பினர்.



"இன்னைக்கு இவனுங்கள சும்மா விடக் கூடாது வீரா, இன்னும் விட்டா நம்ம மண்ணுல இருக்குற எல்லாத்தையும் அவனுங்களுக்கு சொந்தமாக்கிருவானுங்க" என்று ஒருவன் சொல்ல, "அவனுங்கள தாக்குங்க, ஆனா அவங்க துப்பாக்கியால சுடும் போது நீங்களும் கவனமா இருங்க. சொல்றது புரியுதா?" என்று எச்சரித்தான் வீரா.



"ம்ம்.. புரியுது வீரா" என்று எல்லோரும் சொல்லிக்கொள்ள, மரத்திற்கு பின்னே சிலர் மறைந்து நின்றுக்கொண்டிருக்க, சிலர் மரத்திற்கு மேலே ஏறி கிளைகளுக்கு நடுவே மறைந்திருந்து தாக்க ஆரம்பித்தனர்.



ஆங்கிலேய அரண்மனையில் கண்ணாடிகளை கற்களால் வீசி அவர்கள் உடைக்க, வீராவோ ஈட்டியை ஒரு அதிகாரியின் மேல் குறி வைத்து செலுத்தினான்.



"ஆஃபீஸர்ஸ், நம்மள சுத்தி புரட்சியாளர்கள் இருக்காங்க. இன்னைக்கு ஒருத்தரும் ஊர் போய் சேர கூடாது, எல்லாரையும் தாக்குங்க" என்று வில்லியம் கத்த, ஆங்கிலேய அதிகாரிகள் துப்பாக்கியை தயார்படுத்தி சுட ஆரம்பித்தனர்.



"அவங்க சுட ஆரம்பிச்சிட்டாங்க, யாரும் மறைஞ்சிருக்குற இடத்துலயிருந்து வெளியில வராதீங்க" என்று கத்திய வீரா, ஆங்கிலேயர்களின் துப்பாக்கி குண்டுகளிலிருந்து தப்பித்து ஒரு பெரிய கல்லிற்கு பின்னே மறைந்துக்கொண்டவாறு ஈட்டியால் குறி வைத்து தாக்க, இந்த குறியும் தப்பவில்லை.



சரியாக ஒரு அதிகாரியின் வயிற்றை கிழித்துக்கொண்டு அந்த ஈட்டி செல்ல, இதை தன் அறை பால்கனியிலிருந்து முகம் சிவக்க பார்த்துக்கொண்டிருந்தான் லியோ.



"ஹவ் டேர் இஸ் ஹீ..." என்று பற்களைக் கடித்தவன், தன் கையிலிருந்த துப்பாக்கியில் புல்லட்டை செலுத்தி கீழே செல்ல போக, அவனின் மூளைக்குள் ஒரு மின்னல் வெட்டியது.



உடனே விஷம சிரிப்போடு கட்டிடத்தின் மாடிக்கு சென்று மேல் இருந்து கீழே துப்பாக்கியால் குறி வைத்த லியோ, அங்கிருந்த புரட்சியாளன் ஒருவனை குறி வைத்து சுட்டிருந்தான்.



அவனோ வலியில் அலறிக்கொண்டு தரையில் விழுந்து விட, எல்லாருக்கும் அத்தனை அதிர்ச்சியாக இருந்தது.



மாடியில் நின்றிருந்தவனுக்கு கீழே மறைந்து நின்றிருந்தவர்கள் நன்றாகத் தெரிய, ஒவ்வொருவரையும் அவன் சுட்டுத் தள்ள, வீராவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.



மரங்களுக்கிடையே மறைந்திருந்து வேகமாக அவனுக்கு அருகில் ஓடி வந்த பாலா, "நம்ம ஆளுங்கள பாதிப்பேர கொன்னுட்டாங்க வீரா, இப்போ என்ன பண்றது?" என்று பதற்றமாகக் கேட்க, "பாலா, இதுக்கு மேல இங்க இருக்குறது பாதுகாப்பு இல்லை. நான் இவனுங்கள திசை திருப்புறேன். நீ இங்க இருந்து எல்லாரையும் அழைச்சுக்கிட்டு போயிரு!" என்றான் மற்றவன் தீவிரமான குரலில்.



"வீரா, என்ன சொல்லுற? அவனுங்ககிட்ட நீ தனியா சிக்கினா நிஜமாவே உன்னையும் கொன்னுடுவாங்க" என்று பாலா பயத்தோடு சொல்ல, "அதை நான் பார்த்துக்குறேன். எப்படியாச்சும் அவனுங்கிட்ட இருந்து தப்பிச்சு நம்ம இடத்துக்கு வந்துடுறேன். நான் சொன்னதை மட்டும் நீ பண்ணு!" என்று வீரா முகத்தை மறைத்துக்கொண்டு அவர்களை நோக்கிச் சென்றான்.



லியோவோ விழிகளை சுருக்கி வேறு யாராவது புரட்சியாளர்கள் இருக்கின்றார்களா என பார்த்துக்கொண்டிருக்க, ஆங்கிலேய அதிகாரிகளின் விழிகளுக்கு பட காட்டு வழியே ஓடினான் வீரா.



உடனே லியோ அவனுக்கு குறி வைத்து சுட, வீராவோ அதிகாரிகளின் துப்பாக்கி தாக்குதலிலிருந்து தப்பித்து ஓடி மறைந்திருந்தான்.



ஆனால், இந்த முறை லியோ விடவில்லை. கோபத்தில் காலை தரையில் உதைத்தவன், வேகமாக அரண்மனையிலிந்து வெளியேறி வீராவை துரத்தியவாறு காட்டுப் பாதைக்குள் ஓட, இதற்கிடையில் பணிப்பெண்கள் உறங்கிக்கொண்டிருக்கும் அறையில் ரகசியமாக நுழைந்தது ஒரு உருவம்..



யாழ்மொழியோ நன்றாக உறங்கிக்கொண்டிருக்க, மெல்ல அவளை நெருங்கிய அந்த உருவம் படுத்திருந்தவளை மெல்ல தட்டி எழுப்ப, விழிகளைத் திறந்தவளோ அதிர்ச்சியின் உச்சகட்டத்தில் கத்தப் போனாள்.



உடனே அவளின் வாயைப் பொத்திய இந்திரசேனா, "யாழ், நான் தான். பயப்படாதே! என்னுடன் வா..." என்று ஹஸ்கி குரலில் சொல்லி அவளை அந்த அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல, அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே யாழ்மொழிக்கு சில நிமிடங்கள் பிடித்தன.



"இளவரசி, என்ன இது?" என்று மேலிருந்து கீழ் அவளை அதிர்ச்சியாகப் பார்த்தவாறு யாழ்மொழி கேட்க, முகம் மட்டும் தெரிவது போல் தலைக்கவசத்துடன் கூடிய நீண்ட கவுன் போல் ஒரு பெரிய ஆடையை அணிந்திருந்த இந்திரா பாவம் போல் தோழியைப் பார்த்தாள்.



"எனக்கு இப்போதே வீராவை பார்க்க வேண்டும் போலிருக்கிறது யாழ், அவனுக்கு ஏதோ ஆபத்து என்று மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. எனக்கு உன்னை விட்டால் வேறு யாருமில்லை. அதுமட்டும் இல்லாமல் அரண்மனையிலிருந்து வெளியே செல்ல எனக்கு ஒரு ரகசிய வழி தெரியும். இருவரும் சேர்ந்து சென்று பார்த்து விட்டு வரலாம், நான் அணிந்திருப்பது போல் உனக்கும் ஒரு ஆடையை தயாராகத்தான் வைத்திருக்கிறேன். ஹிஹிஹி..."



என்று இந்திரா தன் திட்டத்தை சொல்லி அசடுவழிய, ஸ்தம்பித்துப் போய்விட்டாள் யாழ்மொழி.



**********

'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>

India link 👇
https://www.amazon.in/dp/B0FLYRBNZG

Usa link 👇https://www.amazon.com/dp/B0FLYRBNZG


என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>

INDIA link👇

https://www.amazon.in/dp/B0FL2S9LYC

USA link 👇

https://www.amazon.com/dp/B0FL2S9LYC
 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 06








இந்திரசேனா சொன்னதைக் கேட்ட யாழ்மொழிக்கு கிட்டத்தட்ட மயக்கமே வந்துவிட்டது.



"இளவரசி, நீங்கள் தெரிந்துதான் பேசுகிறீர்களா, காலையில் பல முறை யாருக்கும் தெரியாமல் அரண்மனையை விட்டு வெளியில் சென்றிருக்கிறோம். ஆனால் இன்று... என்னால முடியாது, அரசர் என்னை தூக்கிலிடுவாரோ இல்லையோ! நீங்கள் செய்யும் காரியத்தால் உண்டாகும் பயத்தில் நானே தற்கொலை செய்துக்கொள்வேன் போல!"



என்று அவள் படபடவென பொரிந்துக்கொண்டே போக, இந்திராவோ பாவமாகப் பார்த்தாள்.



"இப்படி சொல்லாதே யாழ், நான் மட்டும் இப்போது வீராவை பார்க்காவிட்டால் உறக்கமே செல்லாது. சிறிது நேரம்தான், வேகமாகச் சென்று பார்த்து பேசிவிட்டு உடனே வந்து விடலாம். முடியாது என்று மட்டும் சொல்லாதே! என்னால் உனக்கு எந்த பிரச்சனையும் வராது, என்னை நம்ப மாட்டாயா?" என்று இந்திரசேனா கேட்ட விதத்தில் யாழ்மொழியால் மறுக்கவும் முடியவில்லை.



"அய்யோ இளவரசி, உங்களை எப்படி நம்பாமல்... சரி வருகிறேன், முடியாது என்றால் விடவா போகிறீர்கள்!" என்று எரிச்சலாக முணுமுணுத்தவாறு இந்திரசேனா கொடுத்த ஆடையை அணிந்துக்கொண்டாள் மற்றவள்.



"இந்த ஆடையை எங்கிருந்துதான் கண்டுபிடித்தீர்களோ, மந்திரவாதி போல் இருக்கிறேன்" என்று யாழ் முணுமுணுக்க, "எப்படி இருந்தால் என்ன யாழ், யாருக்கும் நம்மை தெரியாமல் இருந்தால் போதும். சரி வா வா, காவலர்களின் கண்களுக்கு சிக்கும் முன் சீக்கிரமாக அந்த ரகசிய பாதையின் கதவுக்கு சென்றுவிட வேண்டும்" என்று தோழியை யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்றாள் இந்திரசேனா.



அவள் அழைத்துச் செல்லும் பாதையை கவனித்தவளுக்கு விழிகள் ஆச்சரியத்தில் விரிந்துக்கொண்டன.



அரண்மனையில் யாரும் பயன்படுத்தாத ஒரு அறைக்குள்ளிருந்த ரகசிய கதவைத் திறந்து படிக்கட்டுகள் வழியே கீழ் பகுதிக்கு செல்ல, அங்கு ஒரு பாதை அமைக்கப்பட்டு வெளியே செல்வதற்கான வழியும் இருந்தது.



"இங்கு இப்படி கூட வழிகள் இருக்கிறதா!எத்தனை வருடங்கள் இங்கு இருந்திருக்கேன், இதை நான் அறியவே இல்லையே!" என்று யாழ்மொழி அதிர்ச்சியில் வாயைப் பிளக்க, "அரச பரம்பரையில் இருப்பவர்கள் மாத்திரமே அறிந்து வைத்திருக்கும் ரகசியம். ஏதாவது ஆபத்து என்றால், அரசரும் அவரை சார்ந்தவர்களும் இது வழியாக தப்பித்து விடுவார்கள். அதற்காகத்தான்" என்ற இந்திரசேனா அந்த பாதையின் முடிவுக்கு கிட்டத்தட்ட அவளை அழைத்தே சென்றிருந்தாள்.



ஆனால் யாழ்மொழிக்குதான் இதெல்லாம் புதிதாக இருந்தது. பின் இருவரும் யாருடைய கண்ணிலும் சிக்காமல் ஊருக்குள் நுழைய, கிட்டத்தட்ட இரவு தாமதமாகியிருந்ததால் எல்லா வீட்டுக் கதவுகளும் பூட்டப்பட்டிருந்தன.



"இளவரசி, ஏதாவது பேய் பிசாசு இருக்கப் போகிறது. எனக்கென்றால் பயமாக இருக்கிறது. பேசாமல் அரண்மனைக்கே திரும்பி சென்று விடலாமா?" என்று யாழ் பயந்தபடிக் கேட்க, "அய்யோ யாழ், நான்தான் உன்னுடன் இருக்கிறேனே, அப்போது எதற்கு பயம்?" என்று சுற்றி முற்றி தன்னவனைத் தேடியபடிக் கேட்டாள் இந்திரா.



"நீங்கள்தான் என் பயமே!" என்று மெல்ல முணுமுணுத்தவள், "தங்களுக்கு வீராவின் வீடு எங்கு இருக்கிறது என்று தெரியும் அல்லவா!" என்று கேட்க, "இல்லை தெரியாது, இதற்கு பிறகுதான் தேட வேண்டும்" என்று மற்றவள் சொல்ல, யாழ்மொழிக்கு இவளை என்ன செய்தால் தகும் என்றுதான் நினைக்கத் தோன்றியது.



இரு பெண்களும் மறைந்தவாறு வீராவைத் தேடிச் செல்ல, இங்கு காட்டுப் பாதைக்குள் ஓட ஆரம்பித்த வீராவோ எப்படியோ ஊருக்குள் வருவதற்கான வழியைக் கண்டுபிடித்து ஊருக்குள் புகுந்து விட, அவனை விடாது துரத்தி வந்தான் லியோ.



தலைத் தெறிக்க ஓடி வந்த வீராவுக்கு தன் இடத்தைப் பார்த்ததும் கேலியாக இதழ்கள் வளைய, 'இதுக்கப்பறம் அவனால என்னை பிடிக்கவே முடியாது' என்று வாய்விட்டே சொல்லிக்கொண்டவன், அங்கிருந்த குடிசைகளுக்குள் ஓடி மறைந்திருக்க, மற்றவனுக்கு எந்த திசையில் செல்வது என்று கூட தெரியவில்லை.



கையிலிருந்த துப்பாக்கியை இறுக்கிப் பிடித்தவாறு அவன் மெல்ல செல்ல, இங்கு ஒரு கிணற்றுக்கு பின்னே மறைந்திருந்தவாறு எட்டிப் பார்த்த இரு பெண்களின் விழிகளுக்கும் அவனின் முகம் அந்த நடுநிசி இருட்டில் கொஞ்சமும் தெரியவில்லை.



"இளவரசி, யார் அவன் ஒருவேளை திருடனாக இருப்பானோ? கடவுளே என்னை உயிரோடு அரண்மனைக்கு கொண்டு சேர்த்து விடு, அப்படி மட்டும் நடந்தால் நான் உனக்கு படையல் போடுகிறேன்" என்று இரு கைகளை தலைக்கு மேல் உயர்த்தி யாழ்மொழி வேண்டிக்கொள்ள, இப்போது லேசாக இந்திராவுக்கும் பயம் எட்டிப் பார்க்கத்தான் செய்தது.



'என் ஆசைக்காக நானே இவளை வம்பில் சிக்க வைக்க போகிறேன். வீரா எங்கு இருக்கிறான் அவனை எப்படி சந்திப்பது என்று கூட தெரியவில்லை. இதற்கு நடுவில் இவன் வேறு, இவனால் என்ன ஆபத்து காத்திருக்கிறதோ...' என்று உள்ளுக்குள் யோசித்தவள், தோழியை அழைத்துக்கொண்டு மெல்ல கோயிலை நோக்கிச் செல்ல, வீராவும் மெல்ல கோயிலின் பின்புறம்தான் நின்றிருந்தான்.



இரு பெண்கள் கோயிலுக்குள் நுழைவதை லியோ கண்டுவிட, விழிகளை சந்தேகமாக சுருக்கியவன் வேகமாக அத்திசை நோக்கி வந்தான்.



அப்போதுதான் அவன் வருகிறானா இல்லையா என எட்டிப் பார்த்த வீராவுக்கு இந்திராவைப் பார்த்ததுமே அவள் தன்னவள்தான் என புரிந்துப் போக, ஒருகணம் ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டான்.



"இவ இந்த நேரத்துல இங்க என்ன பண்றா, அதுவும் இப்படி ஒரு சூழ்நிலையில. அரண்மனைய விட்டு வெளியில வந்திருக்கான்னா ஏதாவது பிரச்சனையா இருக்குமோ? ஆனா இப்போ இதையெல்லாம் பத்தி யோசிக்க நேரமில்ல. அந்த வெள்ளைக்காரன் கண்ணுல இந்திரா படக் கூடாது. அதுக்குள்ள எப்படியாச்சும் இவள காப்பாத்தணும்"



என்று தீவிரமாக யோசித்தவன் அவர்களையே மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருக்க, லியோவோ அதிரடியாக கோயிலுக்குள் நுழைந்தான். ஆனால், அங்கு யாருமே இல்லை.



ஏற்கனவே ஏதோ ஒரு நிழல் தங்களை நெருங்கி வருவதை கண்ட யாழ்மொழி வேகமாக இந்திராவை இழுத்துக்கொண்டு ஒரு பெரிய கோயில் தூணிற்கு பின்னால் மறைந்துக்கொள்ள, வீராவும் மெல்ல அவர்களை நெருங்கினான்.



'இன்னைக்கு விட போறதில்ல' என்று லியோவோ பற்களைக் கடித்தவாறு வீராவைத் தேட, அப்போதுதான் அவனை விழிகளை சுருக்கி உற்றுப் பார்த்த யாழ்மொழிக்கு அந்த ஆங்கிலேயன் யாரெனப் புரிந்தது.



"அய்யய்யோ! இவனா..." என்று அவள் அதிர்ந்துப் போய் வேகமாக இந்திராவைத் திரும்பிப் பார்க்க, அங்கு அவள் இருந்தால்தானே!



"இளவரசி..." என்று அதிர்ந்துப் போய் தேடிக்கொண்டே முன்னே சென்றவளின் கரத்தை ஒரு வலிய கரம் பிடித்திழுக்க, அவனின் மார்பிலேயே சென்று மோதி நின்றாள் யாழ்மொழி.



"ஆஆ..." என்று நெற்றியை தேய்த்து விட்டவாறு அவள் நிமிர்ந்துப் பார்க்க, யாழ்மொழி அதிர்ந்தாளோ இல்லையோ அந்த இடத்தில் அவளை எதிர்பார்க்காது லியோதான் அதிர்ந்துப் போய்விட்டான்.



"ஓடிவிடு யாழ்!" என்று மூளை எச்சரிக்க, அவனிடமிருந்து தப்பித்து ஓடப் போனவளை மீண்டும் பிடித்திழுத்தவன், அவளை சுவற்றில் சாய்த்து இரு பக்கமும் அணைக் கட்டிக்கொள்ள, பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டாள் அவள்.



அதேநேரம் இந்திராவின் வாயைப் பொத்தி வீரா தன்னோடு அணைத்திருக்க, இந்திசேனாவிற்கு நடப்பை உணரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டன.



"நான்தான் இந்திரா, பயப்படாத!" என்று அவன் மெல்ல காதில் கிசுகிசுக்க, தன்னை ஆசுவாசப்படுத்தியவாறு திரும்பி அவனைப் பார்த்தவள், "வீரா..." என்றழைத்தவாறு அவனை அணைத்துக்கொள்ள, இதை எதிர்பார்க்காதவனாய் சிலையாகிவிட்டான் அவன்.



"அந்த ஆங்கிலேய அதிகாரிக்கு பயந்து ஓடி வந்தவன் நீதானா வீரா, நிஜமாகவே நான் பயந்தே போய்விட்டேன். ஆனால், அவன் ஏன் உன்னை துரத்துகிறான்?" என்று அவனை அணைத்தவாறு அவள் கேட்க, அவனுக்குதான் பேச்சே வரவில்லை.



"அது... அது வந்து..." என்று அவனின் வார்த்தைகள் தடுமாற, "எதற்கு இத்தனை தடுமாற்றம்?" என்று கேட்டுக்கொண்டே நிமிர்ந்துப் பார்த்தவள் அப்போதுதான் அவனுடைய முகத்தைப் பார்த்துவிட்டு தான் செய்யும் காரியத்தை உணர்ந்தாள்.



நாக்கைக் கடித்துக்கொண்டவாறு மெல்ல அவனிடமிருந்து அவள் விலக, "இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ற இந்திரா?" என்று கேட்டான் சந்தேகமாக.



"தங்களை பார்க்கத்தான்" என்று அவள் தயங்கியவாறு சொல்ல, ஒருகணம் அதிர்ந்து விழித்தவன் பின் குறும்பாகப் புன்னகைத்தான்.



"இளவரசிக்கு என்னை பார்க்க இந்த நடுராத்திரி அரண்மனைய விட்டு வெளியில வர்ற அளவுக்கு தைரியம் இருக்கா? ஆச்சரியமா இருக்கே முருகா..." என்று அவன் போலியாக ஆச்சரியப்படுவது போல் விழிகளை உருட்ட, அவனை முறைத்துப் பார்த்தவள் உதட்டை சுழித்தவாறு திரும்பி செல்லப் போனாள்.



உடனே அவளை இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டவன், "இப்போ போக முடியாது இந்திரா, அந்த வெள்ளைக்காரன் என்னைதான் தேடிட்டு இருக்கான்" என்று ஹஸ்கி குரலில் சொல்ல, அப்போதுதான் யாழ்மொழியின் ஞாபகம் வந்தவளாக சுற்றி முற்றி தேட ஆரம்பித்தாள் அவள்.



வீராவோ தன்னவளை கேள்வியாகப் பார்க்க, "யாழ், எங்கே அவள்? என்னுடன் அல்லவா வந்தாள், நா.. நான் அவளை தொலைத்து விட்டேனா?" என்று நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு அவள் பதற, இங்கு லியோவின் பார்வைக்கு முன் நடுங்கியபடி நின்றுக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.



"நா.. நான் போக வேண்டும், என்னை விடு!" என்று அவள் செல்ல முயற்சிக்க, மேலும் அவளை நெருங்கி நின்றான் லியோ.



ஏனோ அவனின் நெருக்கத்தில் அவளால் மூச்சு விடக் கூட முடியவில்லை. மூச்சு விடக் கூட சிரமப்பட்டவளாக, அவள் அதிர்ந்துப் போய் நிற்க, "நீ இங்க என்ன பண்ற?" என்று அழுத்தமாகக் கேட்டான் அவன்.



"அது நா.. நான் இங்கு..." என்று என்ன சொல்வதென்று தெரியாமல் யாழ் தடுமாற, அவளை விழிகளை கூர்மையாக்கி சந்தேகமாகப் பார்த்தவன், "நீயும் புரட்சிகாரங்கள்ல ஒருத்திதான், இப்போ என்கிட்ட இருந்து தப்பிச்சவனும் கண்டிப்பா உன்னை சேர்ந்தவனாதான் இருக்கணும். இந்த நேரத்துல இங்க இருக்கேன்னா இதை தவிர வேற என்ன காரணம் இருக்க போகுது?" என்றான் கர்ஜிக்கும் குரலில்.



அவன் சொன்னதை கிரகிக்கவே அவளுக்கு சில நிமிடங்களாக உடனே சுதாகரித்தவள், "என்ன! புரட்சியா... சாதாரண பூச்சியைப் பார்த்தாலே பயந்து நடுங்கும் நான், புரட்சிக் குழுவில் இருக்கிறேனா? வாய் இருக்கிற என்று எதை வேண்டுமானாலும் பேசுவீரா?" என முயன்று தைரியத்தை வரவழைத்துப் பேசினாள்.



தலையை சற்று சரித்து அவளை ஆழ்ந்த பார்வைப் பார்த்தவன், "அப்போ இந்த நேரத்துல யாருக்கும் தெரியாம இங்க எதுக்காக சுத்திட்டு இருக்க? பாவமா முகத்த வச்சுக்கிட்டா எதையும் நம்பிருவேன்னு நினைச்சியா, நெவர்! என்னை ஏமாத்த முடியாது. உன்கூட இன்னொருத்தரும் இருந்தாங்க, வூ இஸ் தட்? யாருன்னு சொல்லு" என்று கிட்டத்தட்ட உறும, அவன் பேசியது பாதி புரிந்தும் புரியாமலும் இருந்தது அவளுக்கு.



மிரட்சியாக அவனைப் பார்த்த யாழ்மொழிக்கு உண்மையை சொல்லவும் முடியவில்லை, சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.



மீண்டும் தைரியத்தை வரவழைத்து அவனை முறைத்துப் பார்த்தவள், "நா.. நான் எதற்கு தங்களிடம் சொல்ல வேண்டும்? அது என் தனிப்பட்ட ரகசியம், முதலில் என்னை விட்டு தள்ளி நில்லுங்கள், நான் போக வேண்டும். நீங்கள் கேட்கும் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை" என்றுவிட்டு அவனை கரத்தை தட்டிவிட, மின்னல் வேகத்தில் மீண்டும் அவளை சுவற்றில் சாய்த்து அவள் தாடையைப் பற்றி தன் முகம் நோக்கி நிமிர்த்தினான் லியோ.



"ஹவ் டேர் யூ... என்கிட்ட யாரும் இப்படி பேசினது கிடையாது. ஆஃப்டர் ஆல் ஒரு பொண்ணு அதுவும் யூ ஆர் ஜஸ்ட் அ சேர்வன்ட். நீ என்னை எதிர்த்து பேசுறியா!" என்று விழிகள் சிவக்கப் பேச, யாழ்மொழிக்கு பயத்தில் விழிகள் கலங்கி கண்ணீர் கன்னத்தின் வழியே உருண்டோடியது.



"என்னை விடு!" என்று உதடுகள் துடிக்க பயத்தோடு அவள் சொல்ல, அவளை நெருங்கி நின்றிருந்தவனுக்கும் அவளுக்கும் வெறும் நூலிடைவெளிதான்.



இருவரின் மூச்சுக்காற்றும் கலக்க, அவளின் முகத்தையே பார்த்திருந்த லியோவின் கோப முகம் அவளின் அழகில் மெல்ல மறைந்து மென்மையை தத்தெடுத்தது.



ஏனோ அவளின் விழிகளை விட்டு அவனால் பார்வையைத் திருப்ப முடியவில்லை. தன்னை மறந்த நிலையில் அவளையே லியோ பார்த்திருக்க, அவனின் முகத்தில் தெரியும் மாற்றத்தையும் அவளின் தாடையைப் பற்றியிருந்த அவனுடைய கரங்களில் உணர்ந்த தளர்ச்சியையும் உணர்ந்த யாழ்மொழிக்கு ஒரு யோசனைத் தோன்றியது.



உடனே அவனை தள்ளிவிட்டு ஓடப் போக, சுதாகரித்தவன் அவளைப் பாய்ந்து பிடித்து முழங்கையைப் பற்றியிழுத்து அவள் கரத்தை மடக்கி பின்னாலிருந்து அணைத்துக்கொண்டான்.



"கொஞ்சம் அசந்ததும் என்னையே ஏமாத்த பார்க்குறல்ல, சும்மா சொல்லக் கூடாது அழகு மட்டுமில்ல உனக்கு தைரியமும் ஜாஸ்திதான், இருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் என்கிட்ட இருந்து தப்ப முடியாது. உன்னால நான் ரொம்ப டென்ஷன் ஆகியிருக்கேன், இப்போ... புரட்சிக்காரங்க தப்பிச்சு ஓடுற நேரமா பார்த்து நீயும் திருட்டுத்தனமா இங்க நடமாடிக்கிட்டு இருக்க. ஒழுங்கா உண்மைய சொல்லிரு, இல்லன்னா..." என்று கிட்டத்தட்ட அவன் மிரட்ட, அவனின் பிடியில் உண்டான வலியில் முகத்தை சுருக்கியவளுக்கு பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது.



"அது... அது நான் என் காதலனை சந்திக்க வந்தேன். அவ்வளவுதான்" என்று அவள் இந்திராவை காட்டிக் கொடுக்காது தான் காதலிப்பதாக சொல்லிவிட, சில கணங்கள் அவளை வெறித்துப் பார்த்திருந்தவனுக்கு தான் என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை.



அவனோ மெல்ல அவளை விட்டு, "யார் அவன்?" என்று இறுகிய குரலில் கேட்க, "அது... சந்தையில் வேலை செய்யும் ஒருவன்தான். அவனைக் காணத்தான் அரண்மனையை விட்டு என் தோழியை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தேன். ஆங்... அவன் யாராக இருந்தால் தங்களுக்கு என்ன? தாங்கள் யாரை தேடி வந்தீர்களோ, அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று வெடுக்கென சொல்லி உதட்டை சுழித்தாள் யாழ்.



லியோ எந்த பதிலும் சொல்லவில்லை. இறுகிய முகமாக அவளைப் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு காரணமே இல்லாமல் மனம் வெறுமையாக இருப்பது போலிருந்தது.



அதேநேரம் வீராவோடு சேர்ந்து தூணிற்கு பின்னே மறைந்திருந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த இந்திரா, "என் தேவைக்காக அழைத்து வந்து அவளை பிரச்சனையில் சிக்க வைக்க எனக்கு விருப்பமில்லை வீரா, நான் இப்போதே சென்று அவளை அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு திரும்புகிறேன். மறுபடியும் சந்திக்கலாம்" என்று புன்னகையோடு சொல்லிவிட்டு நகரப் போக, அவள் கரத்தைப் பற்றியிழுத்தான் வீரா.



அவளின் பின்னந்தலையைப் பற்றி அவளிதழில் அழுந்த முத்தத்தைப் பதித்து விட்டு விலகியவன், "மறுபடியும் பார்க்குற வரைக்கும் நியாபகம் இருக்கட்டும்" என்று சொன்னவாறு அந்த இடத்திலிருந்து ஓடி மறைந்திருக்க, வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைத்தவாறு தோழியைத் தேடிச் சென்றாள் அவள்.



************

மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க 😍😍
 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 07






யாழ்மொழி சொன்னதைக் கேட்டு லியோ இறுகிப் போய் நின்றுக்கொண்டிருக்க, அவளோ இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது எனத் தெரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டு நின்றிருந்தாள்.



சரியாக, "யாழ்... யாழ்மொழி, இந்த பக்கம்" என்று இந்திரா கையை அசைத்து தோழியை அழைக்க, விருட்டென திரும்பிப் பார்த்தவள் இந்திராவை அதிர்ச்சியாகப் பார்த்துவிட்டு உடனே திரும்பிப் பார்த்தாள்.



அவனோ விழிகளை சுருக்கி தூரத்தில் நின்றிருந்தவளை பார்த்தவாறு ஒரு அடி முன்னே வைக்க, வேகமாக யோசித்த யாழ் கீழே கிடந்த மண்ணை வாரி அவனின் முகத்தில் தூவி விட்டு, "முன்னே ஓடுங்கள்... ஓடுங்கள்..." என்று கத்தியவாறு இந்திராவை நோக்கி வந்தாள்.



மற்றவளும் அணிந்திருந்த ஆடையைத் தூக்கிக்கொண்டு வேகமாக ஓட, "ஆஆ... யூ ப்ளடி... உங்கள விட மாட்டேன்" என்று கத்திக்கொண்டே வேகமாக கண்ணைக் கசக்கிவிட்டு அவள் சென்ற திசையை பார்த்தவனுக்கு கோபம் உச்சத்தை தொட்டிருந்தது.



இரு பெண்களும் எப்போதோ ஓடி மறைந்திருக்க, வந்த ரகசிய வழியாகவே அரண்மனைக்குள் நுழைந்து விட்டனர் இருவரும்.



அணிந்திருந்த ஆடையை கழற்றி எரிந்த யாழ், தன் அறை வாசலில் நின்று நிம்மதி பெருமூச்சு விட்டவாறு இந்திராவை முறைத்துப் பார்த்தாள்.



"இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும் இளவரசி, இப்போதுதான் போன உயிரே வந்தது போல இருக்கிறது" என்று வேகமாக அடித்துக்கொள்ளும் இதயத்தை அமைதிப்படுத்த யாழ் படாத பாடுபட, "எனக்கு உன்னை விட்டால் வேறு யார்தான் இருக்கிறார்கள்?" என்று பாவமாக பேச வந்தவளை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தாள் மற்றவள்.



"உங்களுக்கு என்னை விட்டால் வேறு யாருமில்லை. ஆனால் எனக்கு என்னை விட்டால் வேறு யாருமில்லை" என்று அழாத குறையாக யாழ் சொல்ல, "ஏன் உனக்காக நான் இருக்கிறேனே?" என்றாள் இந்திரா வேகமாக.



மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க முறைத்துப் பார்த்தவள், "வேண்டாம் இளவரசி போய் விடுங்கள், நானே தற்கொலை செய்யும் வரை விட மாட்டீர்கள் போல" என்றுவிட்டு பணிப்பெண்கள் தங்கும் அறைக்குள் நுழைந்து விட, அதன் பின் இந்திராவும் தனதறையை நோக்கிச் சென்றுவிட்டாள்.



அதேநேரம், ஆங்கில அரண்மனைக்கு வந்த லியோவிற்கு அத்தனை நெருக்கத்தில் பார்த்த யாழ்மொழியின் முகம்தான் மீண்டும் மீண்டும் ஞாபகத்திற்கு வந்துக்கொண்டே இருந்தது.



இதில் அவள் சொன்னதை நினைக்கும் போது உள்ளுக்குள் யாரோ ஈட்டியால் குத்துவது போல் அவனுக்கு வலிக்க, ஜன்னலின் அருகே சென்று வானத்தை வெறித்தவாறு நின்றுக்கொண்டான்.



"நிஜமாவே அவ காதலிக்கிறாளா, அவள பார்த்தா அந்த மாதிரி தெரியல்லையே! ஒருவேள பொய் சொல்லியிருப்பாளோ... ச்சே ச்சே இருக்காது. இருந்தாலும் திஸ் இஸ் நொன் ஆஃப் மை பிஸ்னஸ், தென் வை ஆம் ஐ வொர்ரீட் அபௌட் திஸ்? சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு"



என்று வாய்விட்டே சொன்னவனுக்கு சட்டென பழைய காதலியின் நினைவு வர, முகம் பாறை போல் இறுகியது.



'லியோ, வீ ஆர் நொட் டூகெதர் எனிமோர். நான் உன் ஃப்ரென்ட் ஸ்மித் கூட ரிலேஷன்சிப்ல இருக்கேன். என்ட், உன்னை மாதிரி ஃபீலிங்ஸே இல்லாத ஒருத்தன் கூட என்னால இதை கன்டினியூ பண்ண முடியல. ஐ ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட். நம்ம என்கேஜ்மென்ட்ட ப்ரேக்அப் பண்ணிக்கலாம். திஸ் இஸ் நொட் அ பிக் டீல்'



என்ற க்ரிஷ்டியின் இறுதி வார்த்தைகள் அவனின் சிந்தனைக்குள் ஓட, விழிகளை அழுந்த மூடித் திறந்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டான்.



"யாழ்மொழி... என்னை யாரும் மறுபடியும் ஏமாத்த முடியாது. அரண்மனையில வேலை பார்க்குற ஒரு சாதாரண பொண்ணுகிட்ட ஹையர் ஆஃபீசர் லியோ ஜார்ஜ் மயங்குறதா, வாய்ப்பே இல்லை. இந்த இந்தியன் பீபளே நம்மளோட ஸ்லேவ்ஸ். அவங்கள நமக்கு ஈக்குவலா பக்கத்துல உக்கார வைக்கணும்னு நினைக்க கூடாது. மறுபடியும் அவ முன்னாடி வரட்டும். அப்போ இருக்கு அவளுக்கு"



என்று கடுப்பாக முணுமுணுத்தவன், நீண்ட நேரம் விட்டத்தை வெறித்தவாறு விழித்திருக்க, எப்படியோ அன்றைய நாள் கழிந்து அடுத்த நாளும் விடிந்தது.



அன்று,



ராதா முகத்தை உம்மென்று வைத்தவாறு அமர்ந்திருக்க, தோழியை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு கண்டுகொள்ளாதது போல் தன் நீண்ட கூந்தலுக்கு சாம்பிராணி பிடித்துக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.



"இப்போதெல்லாம் என்னிடமே மறைக்க ஆரம்பித்துவிட்டாய் அல்லவா! நான்தான் எனக்கென்று இருக்கும் ஒரே நண்பி நீதான் என்று பிதற்றிக்கொண்டிருக்கிறேன். ஒழுங்கு மரியாதையாக நேற்றிரவு எங்கு சென்றாய் என்ற உண்மையை சொல்லிவிடு! இல்லையெனில்..." என்று ராதா கோபமாகக் கேட்க, "இளவரசி அழைத்தார்கள் என சென்றிருந்தேன், அவ்வளவுதான்" என்று சமாளிக்க முயன்றாள் மற்றவள்.



ஆனால், ராதா எதையும் கேட்பதாக இல்லை.



"அப்படியா சரி! காய்கறி முத்தினால் சந்தைக்குக்கு வந்துதானே ஆக வேண்டும்" என்று முறைத்தவாறு சொல்லிவிட்டு அவள் முகத்தை திருப்பிக்கொள்ள, ஏனோ யாழ்மொழிக்கு தோழியை அப்படி காண முடியவில்லை.



மெல்ல நெருங்கியவள் சுற்றி முற்றி யாராவது இருக்கின்றார்களா என பார்த்துவிட்டு, "இளவரசியோடு அரண்மனையை விட்டு வெளியில் சென்றிருந்தேன் ராதா, ஊரை சுற்றிப் பார்க்க. அவர்கள் அழைக்கும் போது என்னால் மறுக்க முடியவில்லை. அதனால்தான்..." என்று பாதி பொய்யும் பாதி மெய்யுமாக சொல்ல, ராதாவோ ஆச்சரியமாகப் பார்த்தாள்.



"கொடுத்து வைத்தவள் யாழ் நீ! இளவரசிக்கு உன் மேல் தனிப் பிரியம்" என்று சிறு பொறாமையோடு அவள் சொல்ல, 'என் உயிர் பயத்தில் ஊசழாடுவதை நான் அல்லவா அறிவேன்!' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவள், "ஹிஹிஹி..." என்று அசடுவழிந்தாள்.



சரியாக அங்கு ஓடி வந்த மற்ற பணிப்பெண்களில் ஒருத்தி, "முக்கியமான செய்தி, நாளை அரசர் வேந்தனின் பிறந்தநாள். அரண்மனையில் ஏதோ விசேஷம் நடக்கின்றதாம், அதில் நாட்டியம் கற்றுக்கொண்டவர்கள் சிறப்பு நிகழ்ச்சியை நிகழ்த்த வேண்டுமென்று அரசரின் கட்டளை. யாழ் தயாராக இரு!" என்று சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு சென்றுவிட, அதிர்ந்து விழித்தாள் யாழ்மொழி.



"அய்யோ கடவுளே! இது என்ன புது சோதனை? அத்தனை பேருக்கு மத்தியில் நடனமா? முடியாது முடியாது.. முடியவே முடியாது" என்று அவள் பதற ஆரம்பிக்க, "நீண்ட நாட்கள் கழித்து உன் நடனத்தை காணப் போகிறேன், நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. உன்னுடன் இணைந்து இன்னும் சில பெண்கள் நடனமாடப் போகிறார்கள். பிறகு ஏன் இந்த தயக்கம்? உன்னால் முடியும் யாழ்" என்று தோழியின் கரத்தை ஆறுதலாகப் பற்றினாள் ராதா.



ஆனால், யாழ்மொழிக்கு எதுவும் மூளைக்கு ஏறவில்லை. இப்போதே தான் நடனமாடப் போவதை நினைத்து பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டாள் அவள்.



இங்கு இவ்வாறு இருக்க, தன் ஆங்கிலேய அரண்மனையிலுள்ள ஆஃபீஸ் அறையில் அமர்ந்திருந்த லியோவின் முன் வந்து நின்றான் ஜேம்ஸ்.



"சார்..." என்று அவன் தயக்கமாக அழைக்க, கையிலிருந்த காகிதமொன்றை படித்தவாறு அமர்ந்திருந்த லியோவோ, "ம்ம் சொல்லு ஜேம்ஸ்" என்றான் நிமிர்ந்தும் பார்க்காமல்.



"டுமோர்ரோ கிங் வேந்தன்ஸ் பர்த்டே, பேளஸ்ல ப்ரோக்ரேம் நடக்குதாம், நம்ம ஆஃபீசர்ஸ்ல ரெண்டு பேர இன்வைட் பண்ணியிருக்காங்க" என்று ஜேம்ஸ் சொல்ல, "ஐ டோன்ட் ஹேவ் டைம். நீ யாரையாச்சும் கூட்டக்கிட்டு போ. ஐ டோன்ட் மைன்ட்" என்றான் லியோ அலட்சியமாக.



"ரியலி... ஓகே சார்" என்று சொல்லி விட்டு ஜேம்ஸ் வெளியேறப் போக, திடீரென மற்றவன் என்ன நினைத்தானோ!



வேகமாக நிமிர்ந்துப் பார்த்தவன், "ஜேம்ஸ்... ஜேம்ஸ்..." என்று கத்தி அழைத்தவாறு அறையிலிருந்து வெளியேறிச் செல்ல, சத்தம் கேட்டு நின்று திரும்பிப் பார்த்தான் ஜேம்ஸ்.



"அது... என்னை இன்வைட் பண்ணியிருக்கும் போது நான் போகாம இருக்குறது தப்பு. சோ, நான் போறேன், நீ என் கூட வா" என்றுவிட்டு ஆஃபீஸ் அறைக்குள் சென்றுவிட, தலையை சொரிந்தவாறு புரியாமல் பார்த்தான் மற்றவன்.



அடுத்தநாள், காலையிலிருந்தே அரண்மனை பரபரப்பாக இருந்தது. அலங்காரங்களை செய்வதிலும் விருந்தை தயார் படுத்துவதிலும் எல்லோரும் பம்பரம் போல் சுழன்றுக்கொண்டிருக்க, இந்திராவின் அறைக்குள் பதற்றமாக இருந்தாள் யாழ்மொழி.



"பயத்தில் கற்றுக்கொண்டதெல்லாம் மறந்து விடும் போல இருக்கிறது. கடவுளே, நான் என்ன செய்வேன்? ஒருவேளை நான் தடுமாறி கீழே விழுந்துவிட்டால், இல்லை இல்லை நினைக்கும் போதே அவமானமாக இருக்கிறதே! அய்யோ..." என்று புலம்பிக்கொண்டே அவள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக்கொண்டிருக்க, இந்திராவோடு சேர்த்து மற்ற பணிப்பெண்களும் பக்கென்று சிரித்துவிட்டனர்.



திடீரென கதவைத் தட்டி விட்டு அரசர் வேந்தன் உள்ளே நுழைய, பணிப்பெண்களோ ஒதுங்கி நின்றுக்கொண்டார்கள் என்றால், தந்தையை புன்னகையோடுப் பார்த்தாள் இந்திரா.



"பிறந்தநாள் வாழ்த்துக்கள் தந்தையே! தங்களை காண நானே வருவதாக இருந்தேன், ஆனால் அதற்குள் தாங்கள் தரிசனம் கொடுத்துவிட்டீர்கள்" என்று அவள் சொல்ல, மகளின் தலையை வாஞ்சையோடு வருடியவர், "மகளைக் காண நான் எதற்கு காத்திருக்க வேண்டும்? தோன்றியது, உடனே வந்துவிட்டேன். ஆங்... முக்கியமான விடயம், இன்று சற்று நன்றாகவே அலங்காரம் செய்துக்கொள் இந்திரா" என்றார் குறும்புச் சிரிப்போடு.



தந்தையின் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை உணராதவள், "புரியவில்லை தந்தையே!" என்று அவரை குழப்பமாக நோக்க, "இளவரசர் நந்தன் இன்று விழாவுக்கு வருவதாக இருக்கிறார், ஏற்கனவே என் மகள் தேவதைதான். அவருடைய பார்வைக்கு இன்னும் என் மகள் பேரழகியாக தெரிய வேண்டாமா!" என்றார் வேந்தன்.



அதைக் கேட்ட இந்திராவின் முகமே இருண்டுப் போக, விழிகள் கூட சட்டென கலங்கி விட்டன.



அதை இமை சிமிட்டி அடக்கிக்கொண்டவள், வரவழைக்கப்பட்ட புன்னகையோடு தந்தையைப் பார்க்க, யாழ்மொழியோ அவளின் மனதிலிருப்பதை உணராமல் இல்லை.



தன் இளவரசியை வேதனையோடு அவள் பார்த்துக்கொண்டு நிற்க, அறையிலிருந்து வெளியேறப் போன அரசர் வேந்தன் சட்டென நின்று, "யாழ்மொழி..." என்று அழைத்தவாறு அவளை திரும்பிப் பார்த்தார்.



உடனே பதறிப்போனவளாக, "சொல்லுங்கள் அரசரே!" என்று பணிவாக அவள் சிரம் தாழ்த்த, "நடனத்திற்கு அனைவரும் தயார் அல்லவா! எந்த தவறும் நிகழக் கூடாது" என்று கட்டளையாக சொல்லிவிட்டு சென்றார் அவர்.



அதைக் கேட்ட மற்ற பெண்களோ வாய்விட்டு சிரித்துவிட, யாழ்மொழியின் நிலைதான் பரிதாபம்!



அன்று விழாவுக்கான நேரம் நெருங்க, விருந்தினர்கள் ஒவ்வொருவராக அரண்மனைக்குள் வரத் தொடங்கினர்.



பூக்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு அரண்மனை கோலாகலமாக இருக்க, அரசர் வேந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு ஊர் மக்களுக்கும் இலவச உணவுகள் உடை என்பன வழங்கப்பட்டன.



சரியாக அந்த வெள்ளை நிற கார் அரண்மனைக்கு முன் நிற்க, தான் அணிந்திருந்த கோட்டை சரிசெய்தவாறு காரிலிருந்து இறங்கினான் லியோ. கூடவே ஜேம்ஸும் இறங்க, சுற்றி முற்றி பார்த்தவாறே அரண்மனைக்குள் நுழைந்தனர் இருவரும்.



"வாவ்! இந்த பேளஸ் ரொம்ப அழகா இருக்கு" என்று ஜேம்ஸ் அலங்காரங்களை ரசித்தவாறு சொல்ல, "ஆங்..." என்று கேட்டவாறு லியோ சுற்றி முற்றி எதற்காக தேடுகிறோம் என்று தெரியாமலேயே யாழ்மொழியைத் தேடிக்கொண்டிருக்க, திடீரென வாசலில் சலசலப்பு சத்தம் கேட்டது.



எல்லோரும் அந்த திசைக்கு திரும்பிப் பார்க்க, அங்கு இளவரசர் நந்தன் தன் ஆட்களோடு உள்ளே வர, அரசர் வேந்தனும் ஆரவாரமாக மருமகனை வரவேற்றார்.



பரிசுப்பொருட்களும் இனிப்புகளும் பரிமாற்றப்பட, இதை மேலிருந்து சிறிய ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்த இந்திராவுக்கு தன் காதலை எப்படி தந்தையிடம் சொல்வதென்றே தெரியவில்லை.



'வீராவை காதலிக்கிறேன் என்று நான் தந்தையிடம் எப்படி சொல்வேன், சாதாரண ஒருவனை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? நாம் வேண்டுமானால் இளவரசர் நந்தனிடம் பேசிப் பார்க்கலாமா? அவர் நம்மை புரிந்துக்கொள்ளலாம் அல்லவா!'



என்று தனக்குள் யோசித்துக்கொண்டவள் ஒரு முடிவு எடுத்தவளாக தந்தையின் அருகே சென்று நிற்க, அப்போதுதான் அவளை விழிகளை கூர்மையாக்கிப் பார்த்தான் லியோ.



'ஏதோ பழக்கப்பட்ட முகம் மாதிரி தெரியுதே, ஆனா எங்க?' என்று தீவிரமாக அவன் யோசித்துக்கொண்டு நிற்க, "மிகவும் அழகாக இருக்கிறீர்கள் இளவரசி இந்திரசேனா" என்று வருங்கால மனைவியை ரசித்துக்கொண்டு சொன்னான் நந்தன்.



"நன்றி, தங்களும் அழகாகத்தான் இருக்கிறீர்கள்" என்ற இந்திரசேனாவின் குரல் அவர்களுக்கு பின்னே நின்றிருந்த லியோவின் காதிற்கு ஒலிக்க, "ஐ கொட் இட். அன்னைக்கு யாழ் கூட இருந்தது இளவரசிதான். யெஸ் ஐ நோ... இருடீ உன்னை இதை வச்சே என்ன பண்றேன் பாரு, பட் நவ் வெயார் ஆர் யூ மை ஸ்வீட்ஹார்ட்?" என்று விஷமமாக சிரித்தவனுக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும் சீண்டிப் பார்க்க மனம் ஏங்கியது.



அரசர் வேந்தனும் மற்றவர்களும் அந்த இடத்தை விட்டு சென்றுவிட, "நா.. நான் உங்களிடம் ஒரு முக்கியமான விடயம் பற்றி பேச வேண்டும்" என்று இந்திரசேனா மெல்ல பேச்சை ஆரம்பிக்க, நந்தனோ அவளை கேள்வியாகப் பார்த்தான்.



ஆனால் விழா ஆரம்பமாக நடனத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையை நோக்கி வரத் தொடங்கினர் பெண்கள். லியோவோ யாழ்மொழியை சுற்றி முற்றி தேடியவாறு எதேர்ச்சையாக நடனத்திற்காக நின்றிருந்த பெண்களைப் பார்க்க, அடுத்தகணம் அவனுடைய விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிந்தன.



அரக்கு நிறத்தில் பரதநாட்டியத்திற்கான சேலை அணிந்து அலங்காரத்தோடு யாழ்மொழி நின்றிருக்க, அதிர்ந்துப் போய் வாயைப் பிளந்தவாறு பார்த்துக்கொண்டிருந்த லியோவோ அவளுடைய அழகில் சொக்கித்தான் போனான்.



நாட்டியத்திற்கான இசை வாசிக்கப்பட, யாழ்மொழியோ உள்ளுக்குள் பயத்தை மறைத்தவாறு உடலை வளைத்து விழிகளில் நயத்தோடு நடனமாடினாள்.



நடனமாடும் அனைத்து பெண்களின் சலங்கை சத்தமும் அந்த இசையோடு இணைந்து அந்த அரண்மனையிலுள்ள அத்தனை பேரையும் மயக்க, அவள் நடனமாடும் அழகை தன்னை மறந்த நிலையில் பார்த்துக்கொண்டிருந்தான் லியோ.



யாழ்மொழியோ நடனமாடியவாறு எதேர்ச்சையாக லியோவை பார்த்துவிட, அங்கு அவனை எதிர்பார்க்காது அப்படியே சிலையாகி விட்டாள் அவள்.



'இவனா... அய்யோ என் கால்கள் நகரக் கூட மறுக்கின்றதே, ஏற்கனவே பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும் என்னை ஏன் கடவுளே மேலும் சோதிக்கிறாய்? இவன் வேறு நம்மை வெறித்து வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறான். பயத்துடன் சேர்த்து வெட்கம் வேறு வந்து தொலைக்கிறதே'



என்று தனக்குள்ளேயே பேசியவாறு அவள் அப்படியே நின்றிருக்க, யாழ்மொழியின் ஒவ்வொரு முகபாவனைகளையும் விழிகளாலேயே தனக்குள் பதித்துக்கொண்டான் லியோ.



*************

'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>

India link 👇
https://www.amazon.in/dp/B0FLYRBNZG

Usa link 👇https://www.amazon.com/dp/B0FLYRBNZG



என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>

INDIA link👇
https://www.amazon.in/dp/B0FL2S9LYC

USA link 👇
https://www.amazon.com/dp/B0FL2S9LYC



 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 08






லியோவைப் பார்த்ததும் அதிர்ந்துப் போய் யாழ்மொழி சிலை போல் நின்றுக்கொண்டிருக்க, அவனும் அவளையேதான் பார்த்துக்கொண்டிருந்தான்.



"யாழ், என்ன சிலை போல் நின்றுக்கொண்டிருக்கிறாய். எல்லோரும் உன்னைதான் பார்க்கிறார்கள், சொல்வது புரிகிறதா இல்லையா?" என்று பக்கத்தில் நடனமாடிக்கொண்டிருந்த அவளுடைய தோழி முட்டியால் அவளைக் குத்த, அதில் நடப்புக்கு வந்தவள் அவர்களோடு இணைந்து நடனமாட ஆரம்பித்தாள்.



லியோவின் பார்வையில் அவளுக்கு சற்று தடுமாற, அதை உணர்ந்தவனோ முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை இதழுக்குள் அடக்கிக்கொண்டான்.



முயன்று அவன் பக்கம் பார்வையைத் திருப்பாது நடனமாடி முடித்தவள், கூட்டத்தோடு கூட்டமாக அங்கிருந்து ஓடியே விட, சுற்றி முற்றிப் பார்த்தவன் யாரும் தன்னை பார்க்கவில்லை என்பதை உணர்ந்து மெல்ல யாழ்மொழி சென்ற திசைக்குச் சென்றான்.



அதேநேரம், இளவரசர் நந்தனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தாள் இந்திரா.



"நடனத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை. சிறப்பு..." என்று அவன் சொல்ல, "நா.. நான் உங்களிடம் முக்கியமான விடயமொன்று சொல்ல வேண்டும்" என்றாள் அவள் தயங்கியவாறு.



"நீண்ட நேரமாக நீ எதையோ சொல்ல முயல்கிறாய், என்ன இந்திரா?" என்று இப்போது தீவிர முகபாவனையோடு நந்தன் கேட்டதும், "என்னுடன் வாருங்கள்" என்று அவனின் கரத்தைப் பற்றி தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள் அவள்.



இதை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அரசர் வேந்தனோ திருப்தியாக புன்னகைத்துக்கொள்ள, நந்தனை தோட்டத்திற்கு அழைத்து வந்தவளோ கைகளைப் பிசைந்தவாறு நின்றிருந்தாள்.



"இதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்கு இந்த திருமணம்..." என்று இந்திரா ஆரம்பிக்க, "ஆங்... அதற்கு முன் நான் உனக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும்" என்ற நந்தன் தன் விரலிலிருந்த ஒரு மோதிரத்தை கழற்றி அவளுடைய விரலில் போட்டு விட, அதை அதிர்ச்சியாகப் பார்த்தாள் அவள்.



"விலை மதிக்க முடியாத ஒரு அரிய வகை ரத்தினக்கல் இதில் பதிக்கப்பட்டிருக்கிறது. யாராலும் இதன் பெறுமதியை கணக்கிட முடியாது. உனக்காக இதை கொண்டு வந்தேன் இந்திரா, பிடித்திருக்கிறதா?" என்று ஹஸ்கி குரலில் அவன் கேட்க, இவளுக்கோ என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.



"எதற்கு இத்தனை விலை கொடுத்து இதை எனக்காக..." என்று வார்த்தைகள் தடுமாற நின்றிருந்த இந்திரசேனா எதேர்ச்சையாகத் திரும்ப, அடுத்தகணம் அவளுடைய விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.



"வீரா..." என்று அவளுடைய இதழ்கள் முணுமுணுக்க, அங்கு பெரிய மரத்திற்கு பின்னால் குறும்புச் சிரிப்போடு அவளை ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தான் வீரா.



இந்திராவின் நிலை இவ்வாறு இருக்க, தனக்குத்தானே புலம்பியவாறு வராண்டாவில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.



"இப்போது இவனை யார் முதலில் விழாவுக்கு அழைத்தது? ஏதோ பெண்களையே பார்க்காதவன் போல் வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தான். இதில் ஆங்கிலேய உயர் அதிகாரியாமே! பதவிக்கேற்ப வேலையா செய்கிறான் இவன், ச்சே! இவனை சந்தித்திருக்கவே கூடாது"



என்று வாய்விட்டே புலம்பிக்கொண்டு அவள் செல்ல, திடீரென ஒரு வலிய கரம் அவளைப் பற்றியிழுக்க, ஒருகணம் ஸ்தம்பித்துப் போய்விட்டாள் யாழ்மொழி.



"யா.. யார் இது?" என்று பயத்தில் அவள் கத்தப் போக, உடனே வாயைப் பொத்திக்கொண்ட லியோ, "இப்போ எதுக்கு கத்துற? சும்மா பேச்சு மட்டும்தான். ஆனா முன்னாடி நின்னதுக்கு பயந்து நடுங்குற. என்னை பார்த்தா அவ்வளவு பயமா யாழ் உனக்கு?" என்று ஏளனப் புன்னகையோடுக் கேட்டான்.



"அது... நா.. நான் ஒன்றும் பயப்படவில்லை, முதலில் என்னை விடு! இது ஒன்றும் உன் அரண்மனை கிடையாது, என் அரண்மனை, சிறு சத்தம் காதில் விழுந்தாலும் உன் தலையை கொய்து விடுவார் அரசர்" என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டலாக அவள் சொல்ல, அவளுடைய விரலை மடித்து அவன் முறுக்கவும், "ஆஆ..." என்று வலியில் கத்தச் சென்று பற்களைக் கடித்து வலியை பொறுத்துக்கொண்டாள் அவள்.



"ஏதோ நீ இளவரசி மாதிரி உன் அரண்மனைன்னு சொல்ற, ஓஹோ... அதனாலதான் தைரியமா நடுராத்திரி இளவரசி இந்திரசேனாவ கூட்டிக்கிட்டு வெளியில வந்தியா, நான் வேணா இதை அரசர் வேந்தன்கிட்ட சொல்லட்டுமா?" என்று கேட்டு அவன் இரு புருவங்களை ஏற்றி இறக்க, விழி விரித்து அவனைப் பார்த்தவளோ பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டாள்.



"வேண்டாம், தன்னை மறந்து என் அரண்மனை என்று சொல்லிவிட்டேன். எனக்கு சித்தம் கலங்கிப் போய்விட்டது. ஹிஹிஹி... நமக்குள் இருக்கும் பிரச்சனைகளை இன்றே இந்த நொடியே மறந்து விடுவோம். இதற்குப் பிறகு தங்களின் முன்னால் வரவே மாட்டேன், என்னை நம்புங்கள்!" என்று அவள் அவனிடம் சமரசம் பேச, தன்னை மீறி அவளை ரசிக்கத் துடித்த மனதை கடிவாளமிட்டு அடக்கிக்கொண்டான் ஆடவன்.



'பரவாயில்லையே! அம்மணிக்கு பயம் இருக்கத்தான் செய்யுது. இருந்தாலும், உன்னை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன். லியோ ஜார்ஜ், இந்த ஊருக்கு வந்திருக்குற உங்க உயரதிகாரி. அது உனக்கு எப்போவும் நியாபகம் இருக்கட்டும். ஒருவேள மறுபடியும் என்னை டென்ஷன் பண்ணேன்னா... நேரா அரசர்கிட்ட வந்து உண்மைய எல்லாம் சொல்லிடுவேன். புரியுதா?" என்று அவளின் தாடையைப் பற்றி தன் முகம் நோக்கி நிமிர்த்திக் கேட்க, அவனை முறைத்துப் பார்த்தாள் யாழ்.



இருவருக்கும் வெறும் நூலிடைவெளிதான். அவளை அத்தனை நெருக்கத்தில் தனிமையில் பார்த்தவனுக்கு ஒரு ஆண்மகனாக ஏதேதோ உணர்ச்சிகள் கிளர்ந்தெழ, அவனோ தன்னை மீறி அவளை மேலும் நெருங்கினான்.



இத்தனை நேரம் அவன் பேசிய பேச்சில் அவனை கோபமாக பார்த்துக்கொண்டிருந்த யாழ்மொழிக்கு இப்போது ஏதோ ஒன்று வித்தியாசமாகத் தோன்ற, பதறிப்போய் அவனிடமிருந்து வேகமாக விலகப் போனாள் அவள்.



ஆனால், அவன் விட்டால்தானே!



லியோவின் மற்ற கரம் யாழின் இடையை வளைத்து தன்னோடு நெருக்கிக்கொண்டிருக்க, எச்சிலை விழுங்கிக்கொண்டவளுக்கு இப்போது வேகமாக மூச்சு வாங்கியது.



"நா.. நான் போக வேண்டும், என்னை விடுங்கள் அதிகாரி" என்று திக்கித்திணறி வார்த்தைகளைக் கோர்த்து அவள் சொல்ல, ஏற்கனவே தேவதைப் போல் இருப்பவள் இப்போது அலங்காரத்தில் பேரழகியாக தெரிய, லியோவுக்கு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவே முடியவில்லை.



தன்னை மீறி அவளிதழை நோக்கி குனிந்தவன், கிட்டத்தட்ட அவளிதழோடு தன்னிதழை ஒற்றி விட, யாழ் திக்குமுக்காடி போய்விட்டாள் என்றால், "சார்..." என்று அதிர்ந்து விழித்தது ஜேம்ஸின் குரல்.



லியோவோ அப்போதே தான் செய்யும் காரியம் உணர்ந்து வேகமாக விலகியவன், பதற்றமாக யாழ்மொழியை பார்க்க, அவளோ அசையாமல் விழி விரித்தபடி அப்படியே நின்றிருந்தாள்.



"சார், வாட் இஸ் ஹேப்பனிங் ஹியர்?" என்று ஜேம்ஸ் அதிர்ச்சி குறையாத குரலில் கேட்க, அவனை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தவன் வேகமாக அரண்மனையிலிருந்து வெளியேறி காரில் ஏறி அமர்ந்துக்கொண்டான்.



"ஊஃப்ப்..." என்று பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவன், ஜேம்ஸை திரும்பிப் பார்க்க, அவனோ தன் உயரதிகாரியைதான் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தான்.



"ஜேம்ஸ், இதை இப்போவே மறந்துரு. சும்மா எதையும் நீயா நினைச்சுக்காத புரிஞ்சதா! இது ஜஸ்ட் கிஸ்தான், இதுல வேற எதுவும் இல்ல" என்று சொல்லி அலட்சியமாக தோளைக் குலுக்கியவன், "காரை எடு!" என்றுவிட்டு அவன் பாட்டிற்கு ஜன்னல் வழியே வெறிக்கத் தொடங்க, தான் பார்த்த காட்சியிலிருந்து மீண்டு வரவே ஜேம்ஸிற்கு சில கணங்கள் தேவைப்பட்டன.



இதில் யாழ்மொழியின் நிலைதான் பரிதாபம்!



முதல் தடவை ஒரு ஆணின் ஸ்பரிசத்தையும் தொடுகையையும் உணர்ந்திருக்கிறாள். இந்த முத்தம் எல்லாம் அவள் நினைத்து கூட பார்த்ததில்லை.



ஏதோ மந்திரித்து விட்டது போல் அவள் தனதறை நோக்கி நடந்துச் செல்ல, இங்கு நந்தனோடு பேசிக்கொண்டிருந்த இந்திராவின் விழிகள் அதிர்ச்சியில் தெறித்து விடுமளவிற்கு விரிந்திருந்தன.



"என்ன நடந்தது இந்திரா, ஏதோ சொல்ல நினைக்கிறாய், ஆனால் ஏன் என்னிடம் சொல்ல இத்தனை தயக்கம்?" என்று அவன் புரியாமல் கேட்க, "அது... ஆங் மறந்தே போய்விட்டேன் இளவரசரே, தங்களை சந்திக்க வேண்டுமென்று என் பாட்டி சொல்லிக்கொண்டிருந்தார். அதை சொல்ல நினைத்து பின் ஏதேதோ யோசித்து..." என்று சமாளித்தவள், "சீக்கிரம் செல்லுங்கள், அவர் உங்களுக்காக அவருடைய அறையில் காத்துக்கொண்டிருக்கிறார்" என்று வாயிற்கு வந்த பொய்யை சொன்னாள்.



"பாட்டியா! இதைப் பற்றி அரசர் சொல்லவே இல்லையே..." என்று வாய்விட்டே கேட்டுக்கொண்டு நந்தன் அரண்மனைக்குள் நுழைய, வேகமாக வீராவை நோக்கிச் சென்றவள் அவனோடு மரத்திற்கு பின்னே ஒளிந்துக்கொண்டாள்.



"இங்கே எதற்கு வந்தாய் வீரா, காவலர்கள் யாராவது உன்னை சந்தித்தால் அவ்வளவுதான். இத்தனை தைரியம் ஆகாது உனக்கு?" என்று இந்திரா பதற்றமாகப் பேச, அலட்சியமாக தோளைக் குலுக்கியவாறு, "என்னை அழைச்சுட்டு வந்ததே காவலர்கள்தான், அரண்மனையில ஏதோ விழா, வேலைக்கு ஆள் தேவைன்னு கூப்பிட்டாங்க. அதான் இருக்குற எல்லா வேலையையும் விட்டுட்டு உன்னை பார்க்கலாம்னு அரண்மனை வேலைக்காரனா வந்துட்டேன். இல்லன்னாலும் நான் ஒன்னும் இளவரசன் இல்லைதான்.." என்று சொல்லி ஒற்றைக் கண்ணை சிமிட்டினான் அவன்.



இந்திராவிற்கு முகம் வெட்கத்தில் குப்பென்று சிவக்க, விழிகளில் காதல் மிதக்க அவனைப் பார்த்தவள், "தாங்கள் எனக்கு எப்போதும் இளவரசன்தான்" என்று சொல்ல, அவளின் நெற்றியோடு நெற்றி முட்டிய வீரா, "ஆமா... அதுதான் உன்னை கட்டிக்க போறவனா?" என்று கேட்டான் சந்தேகமாக.



அவன் கேட்ட விதத்தில் முறைத்துப் பார்த்தவள், "தங்களை நினைத்த மனம் ஒருபோதும் இன்னொரு ஆடவனை சுமக்காது" என்றாள் அழுத்தமாக.



பின் ஒரு பெருமூச்சுவிட்டு, "அவர்தான் ஆற்றுக்கு மறுபுறத்திலுள்ள குறுநில இளவரசர் நந்தன். என்னை அவருக்கு மணமுடித்து கொடுப்பதுதான் ஆசையே, ஆனால்..." என்று தயக்கமாக இழுக்க,"ஆனா, இந்த இளவரசி சாதாரணமா சந்தையில வேலைப் பார்க்குற ஒருத்தன காதலிக்க ஆரம்பிச்சிட்டா. அப்படிதானே! இதை கேள்விப்படும் போது அரசராலயே ஜீரணிக்க முடியாது" என்று சொல்லி சிரித்தான் வீரா.



ஆனால் அவனுடைய வார்த்தைகளிலுள்ள வலியை இந்திராவால் புரிந்துக்கொள்ள முடிந்தது.



அவனை பாவமாகப் பார்த்தவள், "தந்தை எப்போதும் என் ஆசையை மறுத்ததில்லை, நிச்சயமா என் காதலை ஏற்றுக்கொள்வார். என.. எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று சொல்ல, வழக்கம் போல் தன் அலட்சிய புன்னகையை சிந்தியவன், "என்ன நடந்தாலும் நீ எனக்கானவ இந்திரசேனா, உன்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுர மாட்டேன்" என்று அவளுடைய இதழில் அழுந்த முத்தம் பதித்தான்.



அவளும் விழிகளை மூடிக்கொண்டு அவனின் இதழுக்குள் மூழ்கிவிட, திடீரென அந்த பக்கமாக காலடி சத்தம் கேட்கவும் வேகமாக அவளிடமிருந்து விலகிய வீரா தன்னவளின் கன்னத்தை கிள்ளி விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடி மறைந்திருந்தான்.



"இளவரசி, இங்கு தனிமையில் என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்? அரசர் தங்களை அழைத்து வர சொன்னார்" என்று அவளைத் தேடி வந்த அமைச்சர் சொல்ல, "வருகிறேன் அமைச்சரே!' என்று சிறு பதற்றத்தோடு சொன்னவள் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தியவாறு மீண்டும் அரண்மனைக்குள் நுழைந்துக்கொண்டாள்.



அடுத்தநாள், இந்திரசேனாவின் ஆடைகளை மடித்து வைத்துக்கொண்டிருந்த யாழ்மொழியோ ஒரு இடத்தையே வெறித்தவாறு நின்றிருக்க, காலையிலிருந்து அவளைதான் கவனித்துக்கொண்டிருந்தனர் அனைவரும்.



"என்ன ஆயிற்று இவளுக்கு, ஏன் வித்தியாசமாக நடந்துக்கொள்கிறாள்?" என்று இந்திரா சந்தேகமாகக் கேட்க, பக்கத்தில் இந்திராவின் கால்களை அழுத்தி விட்டுக்கொண்டிருந்த ராதாவுக்கும் அதே சந்தேகம்தான்.



"நானும் அதைதான் யோசிக்கிறேன் இளவரசி, நேற்றிரவு முழுக்க யாழ் உறங்கவே இல்லை. காலையில் எழுந்தவள் ஏதோ பிரம்மை பிடித்தவள் போல் அறைக்குள்ளேயே நடமாடிக்கொண்டிருந்தாள், நான்தான் அவளை குளியலுக்காக இழுத்துக்கொண்டு சென்றேன். எனக்கு என்னவோ நேற்றிரவு யாழ் எதையோ பார்த்து பயந்திருக்கிறாள் என்று தோன்றுகிறது" என்று ராதா தீவிர முகபாவனையோடு சொல்ல, "யாழ்..." என்று அழைத்தாள் இந்திரா.



"ஆங்.. சொல்லுங்கள் இளவரசி" என அப்போதுதான் விழித்தது போல அவள் மலங்க மலங்க விழிக்க, "கண்ணாடிக்கு முன்னே உள்ள முத்துக்கள்.." என்று மற்றவள் சொல்லி முடிக்கும் முன், "என்ன, முத்தங்களா! வேண்டாம் வேண்டாம்" என்று விழிகளை மூடி பதற ஆரம்பித்துவிட்டாள் யாழ்மொழி.



இந்திரசேனாவோ அவளை அதிர்ச்சியாகப் பார்த்தவள், "இப்போது நான் என்ன கேட்டுவிட்டேன் என்று இத்தனை அதிர்ச்சியாகிறாய்?" என்று புரியாமல் கேட்க, "அது... நான்... என்னை மன்னித்து விடுங்கள் இளவரசி" என்றுவிட்டு அறையிலிருந்து வேகமாக வெளியேறியவள் பணிப்பெண்கள் தங்கியிருக்கும் அறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.



"அவனின் முத்தத்திலிருந்து மீளவே முடியவில்லையே!" என்று வாய்விட்டு யாழ்மொழி எரிச்சலாக சொல்ல, "முத்தமா?" என்ற ராதாவின் குரல் பின்னால் அதிர்ச்சிக் குரலில் கேட்டது.



வேகமாகத் திரும்பிப் பார்த்தவள், "முத்தமா! நா.. நான் ஒன்றும் அப்படி சொல்லவில்லையே.. நா.. நான் என்ன சொன்னேன்? அய்யோ நேரத்திற்கு எதுவும் நியாபகத்திற்கு வேறு வர மறுக்கிறதே..." என்று என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாற, மற்றவளோ சலிப்பாக விழிகளை உருட்டினாள்.



"அதையெல்லாம் விடு யாழ், எனக்காக நீ ஒன்று செய்ய வேண்டும். என்னையும் அரண்மனையை விட்டு வெளியே குதிரையில் அழைத்துச் செல்வாயா? முடியாது என்று மட்டும் மறுத்து விடாதே!" என்று ராதா விழிகள் மின்ன கேட்க, வெளிப்படையாக தலையிலடித்துக்கொண்டாள் யாழ்மொழி.



அதேநேரம், இங்கு ஆங்கிலேய அதிகாரி ரொனேல்டின் அரண்மனையில், கத்தி கத்தி களைத்துப் போய், அழுது சிவந்து வீங்கிய முகத்தொடு அந்த இளம்பெண் உடலில் சக்தியற்று மஞ்சத்தில் கிடக்க, அவளிடமிருந்து விலகிப் படுத்தார் ரொனேல்ட்.



"நொட் செடிஸ்ஃபைட்!" என்று வாய்விட்டு சொன்னவர், எழுந்து ஆடைகளை போட்டவாறு அந்த இளம்பெண்ணை அலட்சியமாகப் பார்த்தார்.



அவளோ தன்னிலையை நினைத்து முகத்தை மூடிக்கொண்டு கதறியழ, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அறையிலிருந்து வெளியேறியவர் மற்ற அறைக்குள் நுழைய, அங்கு அவருக்காக காத்திருந்தான் வில்லியம்.



"தினமும் ஒரு பொண்ணு.. தினமும் என்ஜாய்மென்ட். எனக்கே உங்கள பார்க்க பொறாமையா இருக்கு சார்" என்று அவன் சொல்லி சிரிக்க, "அன்னைக்கு பேளஸ்ல அவள பார்த்ததிலிருந்து இப்போ எல்லாம் எனக்கு எதுவுமே திருப்தியா இல்லை வில்லியம். எனக்கு அவ வேணும்... அதுக்கு என்ன பண்ணணும்?" என்று நேரடியாக தன் மனதிலுள்ளதை கேட்டுவிட்டார் ரொனேல்ட்.



தன் மகளின் வயதிலிருக்கும் ஒரு பெண்ணை உடலுறவுக்காக கேட்கிறேன் என்ற வெட்கம் கொஞ்சம் கூட இல்லை அந்த வயதானவருக்கு.



"சாதாரண ஊர் பொண்ணா இருந்தா எதை பத்தியும் கவலைப்பட தேவையில்ல, பட் இவ பேளஸ்ல இருக்குறவ, கொஞ்சம் ரிஸ்க்தான். பட் நான் ட்ரை பண்றேன் சார். உங்களுக்காகன்னு இல்லை, ஃபார் மீ ஆல்சோ..."



என்று வில்லியம் கேலியாக இதழை வளைக்க, விழிகள் மின்ன பார்த்தார் ரொனேல்ட்.



************


 
Status
Not open for further replies.
Top