ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பெண்ணியம் பற்றி உங்கள் கருத்து என்ன??

pommu

Administrator
Staff member
பெண்ணியம் பத்தி ஏதேதோ சொல்லுவாங்க. சில பேருக்கு ஆண்கள் பண்ற எல்லாம் பெண்களாலும் பண்ண முடியும்னு காட்டுறது பெண்ணியம். இன்னும் சிலருக்கு அவங்க இஷ்டபடி வாழுறது. இதெல்லாம் பெண்ணியம்னு நினைக்கிறாங்க.

என்ன பொறுத்தவரைக்கும் நாம என்ன எதிர் பாக்குறோமோ அதே மாதிரி அவங்களுக்கும் எதிர் பார்ப்பு இருக்கும்.

ரெண்டு பேரும் அவங்க அவங்க விருப்பத்தை அடுத்தவங்க மேல திணிக்காம நம்ம கோட்பாடுல வாழுறது தான்.


யாரும் யாருக்கும் அடிமை இல்லை ஆணும் பெண்ணும் சமம் சொல்றதெல்லாம் படிக்க ஈஸியா இருக்கலாம் நெறய இடத்தில நடக்கலாம் ஆனா இன்னும் ஒவ்வொரு விஷயத்துக்கும் வீட்டு ஆண்களை சார்ந்து இருக்குற பெண்கள் இருக்காங்க.


அவங்க கிட்ட பெண்ணியம் பத்தி கேட்டா அவங்க பதில் வேற மாதிரி இருக்கும்.


அங்க அவங்க எதிர் பாக்குறது அவங்களுக்கான மரியாதை மட்டும் தான்.

பெண்ணுக்கான மரியாதை தான் பெண்ணியம்
அழகான விளக்கம் பேபி...
 

pommu

Administrator
Staff member
பெண்ணியம்: பெண்ணவளின் கண்ணியமும் சுயமரியாதையும் பிறாரால் குழைக்கப் படும் போது அதனை காக்கும் பொருட்டு மனம் துடித்து எழுந்து எதிர்த்து நிற்பது பெண்ணியம். ஆண் பெண் இருவருக்கும் பெண்ணியம் வேண்டும்.
சிலர் பண்ற மாதிரி சமையல் செய்ய மாட்டேன் சட்னி செய்ய மாட்டேன்... இது இல்லை பெண்ணியம்....
அது எல்லாம் வேலைக் கள்ளம்... :LOL::LOL:
 

pommu

Administrator
Staff member
அது மருந்து மாதிரி... அளவோடு இருக்க வேண்டும்..
அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகும்.
பெண்ணியம் என்கிற பெயரில் நிறைய வரைமுறை தாண்டி சமுதாய சீர் கேடுகளும் நடக்கின்றன.
 

Sivaharivijay

New member
பெண்ணியம் னா என்ன ??? ஆணும் பெண்ணும் சமம் அப்டிங்கறதா... இல்ல பெண்தான் உயர்ந்தவ அப்டிங்கறதா???... என்ன பொறுத்தவரை இது இடத்துக்கு இடம் மாறும் ..... ஒரு ஆண்.. 40வயது வரை திருமணம் செய்ய வில்லை... சொந்தம் என்று ஒரு சிறிய வீடு மட்டுமே... அனாதை.. ஆனால் முயன்று கூலி வேலைசெய்து படித்து இடைநிலை ஆசிரியர் ஆகிய பிறகு நன்கு படித்த ஆசிரியை ஒருவரை மணக்கிறார்.. வயது வித்தியாசம் 17ஆண்டுகள்... வந்த பிறகு என்ன நினைத்தாரோ அவள வேலைக்கு செல்லகூடாது என தடுத்து விட்டார். . அந்த பெண் அழகு .. நிமிர்வு.. எனவே சரி என பிள்ளை வளர்த்துக்கொண்டே வயல் வேலை செய்து காசு தனக்கு சேர்க்கிறார்.. மனம் முழுக்க குமுறல் ஒரு பட்டதாரியை இப்படி செய்து விட்டாரே என... காட்சி மாறுகிறது.. இப்போது90வயது அந்த ஆளுக்கு மனைவி73 வயது.. மனைவியை நம்பி வங்கி கணக்கு எதயும் கொடுக்கவில்லை பென்ஷனையும் தற் கையில் வைத்துக்கொள்வார்... ஆனால் மனைவிக்கு இப்போது பயமில்லை.. போடாவாடா என்று பேசுவது... சமையத்தில் கெஞ்சி இறங்கி போகிறார் கணவர்.. இதில் மகனுக்கு திருமணம் முடித்தனர் ... மனைவி வேலைக்கு செல்லும் பெண்தான் வேண்டும் என்று தேடிபிடித்து... ஆனால் மகன் மனைவிக்கு உதவினால் சற்றும் பொருக்காத குணம்... இன்னும் இருவரையும் மனதளவில் பிரித்து வைத்து இன்பம் காண்கிறார்... இந்த பட்டதாரி தமிழ் பண்டிட் மாமியார்... இவர் மருமகளிடம் அடிக்கடி கூறும் வார்த்தை... என்ன பாவம் செய்தோ பெண்ணாய் பிறந்து விட்டாய்.. அவனிடம் வீட்டு வேலை சொல்லி செய்ய வைத்து மேலும் பாவம் சேர்க்காதே .. உன் உடைகளை அவன் தொடுவது பாவம்... மடிக்க சொல்லாதே என்பார்.... என்ன படித்தார் இவர்... எங்கே பெண்ணியம் பேசினாலும்.. இந்த கருத்துக்கள் குடும்பத்துக்கு உதவாது என்பார்... கணவர் மாமனார் மாமியார் அனைவரிடமும் போராடியே களைத்து போக வேண்டியது தான்... எதற்கும் தன் கணவரை முன்னிருத்தி காரியம் சாதிப்பது அந்த பெண்மணி... ஆனால் கூறுவது என்னை யார் மதிப்பார்கள் என்று.... போங்க பெண்ணியம் பேசி ஒரு பயனும் இல்லை
 

Aruna jayakumar

New member
Feminism is about all genders having equal rights and opportunities.... அதுக்காக கெட்ட விஷயங்களை சொல்லல, கம்பெனில ஆண் பெண் ஒரே வேலை செய்யும் போது ஆணுக்கு நிகரான சம்பளம் பெண்ணுக்கு பல இடங்களில் கொடுப்பது இல்லை, பையன் கல்யாணம் ஆகாம இருந்தா பிரச்னை இல்ல ஆனா பொண்ணு கல்யாணம் ஆகாம இருந்தா அந்த பொண்ணு பத்தி கண்டிப்பா தப்பா பேசுவாங்க, கல்யாணம் ஆகி டிவோர்ஸ் வாங்கிட்டா கூட பையன யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க ஆனா பொண்ண தான் திட்டுவாங்க, அது என்ன பொண்ணு தான் எப்பவும் எல்லாம் வேலையும் செய்யணுமா ஆணும் பெண்ணும் வேலைக்கு போகும் போது வீட்டு வேலைய ரெண்டு பேரும் பகிர்ந்து செய்யணும் வேலை ரெண்டு பேருக்கும் பொதுவானது ஆனா இத நம்ம மக்கள் அக்ஸ்ப்ட் பண்ண மாட்டாங்க. எதுவா இருந்தாலும் பொண்ணு மட்டும் தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும் பையன்னா அப்டி தான் இருப்பான்ன்னு ஒரே வார்த்தையில முடிச்சுருவாங்க. And rape விஷயத்துல கூட பொண்ணு நீ தான் அடக்க ஒடுக்கமா இருக்கனும் நீ அடங்காம இருப்ப அதான் அவன் இப்படி செஞ்சுட்டான்ன்னு சொல்ற ஊரு நம்ம ஊரு, சின்ன பொண்ணு என்ன செஞ்சுச்சாம்? பொண்ணு இப்படி தான் இருக்கனும் னு ஒரு definition வச்சு இருகாங்க அது ஏன் பசங்களுக்கு இல்ல? பொண்ணும் சக மனுஷி தான்ண்ணு ஏன் சொல்லி கொடுக்க மாட்டேங்கறாங்க? பையன் நீயும் இப்படி இருன்னு ஏன் யாரும் சொல்றது இல்ல? பொண்ணுன்னா மட்டும் தக்காளி தொக்கா? இந்த மாதிரி விஷயங்கள்ள தான் equal rights கேக்குறோம் இது தான் பெண்ணியம் னு நினைக்குறேன்.
 
Top