Lakshmi CT
Member
இந்த மாதிரி சூழ்நிலைல கூட கஜன் எவ்ளோ நிதானமா யோசிக்கிறான் செம அர்ஜுன் தான் பாவம் இத்தன நாள் போட்ட ஆட்டத்துக்கு இப்டி வச்சு செஞ்சுட்டீங்களே பொம்மு...
சரியா சொன்னீங்க சிஸ் எனக்கும் இப்ப ராகவிய புடிக்கலஉருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 67)
அது சரி, இந்த ராகவி, கோபத்தை எங்க காட்டியிருக்கனுமோ அங்க காட்டலை, எப்ப காட்டனுமோ அப்ப காட்டலை, எவன் கிட்ட காட்டனுமோ அவன் கிட்டேயும் காட்டலை. இப்ப தும்பை விட்டு வாலை பிடிச்ச கதையா, பல்லவி கிட்ட கோவத்தைக் காட்டி என்ன பிரயோஜனம்..? இதுல அர்ஜூனை மட்டும் உள்ளே விடலைன்னா சக்திவேலோட குடும்பமே இன்னைக்கு சந்தோஷமா இருந்திருக்கும்னு உளற வேற செய்யுறா. சக்திவேலோட வீட்ல முதல்ல அர்ஜூனா நுழைஞ்சான்...? இல்லையே... சுகானா ராம்குமார் காதல் தானே அர்ஜூனையே உள்ள கொண்டு வந்தது. அந்த சம்பந்தத்தை பத்தி பேசப்போய் தானே, பல்லவி கஜன், அர்ஜூன் ராகவின்னு அதிரடியா உள்ளே நுழைஞ்சாங்க. அர்ஜூனே அப்படி வலுக்கட்டாயமா ராகவியை கட்டியிருந்தாலும், போக போக இவளும் தானே அவனை விரும்ப ஆரம்பிச்சிட்டா. இப்ப அவனை மட்டும் திட்டி என்ன பிரயோஜனம்...? கஜனுக்கு அர்ஜூனோட காதல் புரிஞ்ச அளவுக்கு கூட இந்த ராகவிக்கு புரியலையே...? முதல்ல இவளே அவனை காதலிக்கலை, அப்பவும் சரி, இப்பவும் சரி. அதான் உண்மை. அதனாலத் தான் இந்த ராகவியால அர்ஜூனை புரிஞ்சிக்க முடியலை. இவ வெறும் செக்ஸூக்காக மட்டும் தான் அவனோட சேர்ந்து கூடி குலாவியிருக்க. ஏன்னா, அந்த வயசு அப்படி. அதான் போக, போகக்கூட அவனோட உண்மையான காதலைக்கூட அவளால உணர முடியலை. ஆனா, அர்ஜூனை முதல்ல இருந்தே அவ ஏதோ ஒரு விதத்துல பாதிச்சதாலத்தான், அதிரடியா அவளைத்தூக்கி மிரட்டி, பலவந்தமா கட்டாயப்படுத்தி அவளை மணந்திருந்தாலும், போகப்போக அவளோட இஷ்டப்பட்டுத்தான் வாழ்ந்திருக்கான். அவ கூட காதலோடத்தான் வாழ்ந்திருக்கான். இதுதான் நிதர்சனம். அதோட எஃபக்ட் தான் டிரைவர், கேர் டேக்கர், அயன்காரன், சமையல்காரன்னு, ஒவ்வொரு அவதாரமா எடுத்து மாப் போடறதுல இருந்து க்ளீனிங் வரைக்கும் படிப்படியா முழு வேலைக்காரனா மாறினதோட,
அவளை ராணி கணக்கா ஃபீல் பண்ணவும் வைச்சிருக்கான். என்னவொன்னு, கொஞ்சம் அதிகமா யூஸ்லெஸ் டாக் விடுவான். அதோட விளைவு தான் இன்னைக்கு அவனை
இங்க கொண்டு வந்து நிப்பாட்டிடுச்சு. இதுக்குத்தான் ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்ன்னு சொல்றது. இன்னைக்கு பாருங்க அவனோட வாய் வார்த்தையே அவனுக்கு எதிராக மாறினதும் இல்லாம அவன் வாழ்க்கை பாதையையே தடம் புரள வைச்சிடுச்சு.
ஆனா,அதுக்காக ஜீவிதனுக்கும், கஜனுக்கும் இருக்கிற நம்பிக்கை கூட இவளுக்கு இல்லாம போனது தான் கொடுமை. உண்மையை திரை போட்டு மறைத்தாலும், கட்டிப்போட்டு பூட்டி வைச்சாலும் ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் வெளிய வந்து தான் ஆகணும், நிச்சயம் நீதி ஒரு நாள் வெல்லும், நின்று நிலைக்கும்.
God see's the truth, but wait...!
CRVS (or) CRVS 2797