தூவானம் 🌧 29
கண்கள் பார்த்துக்கொள்ளவில்லை
கைகள் கோர்த்து கொள்ளவில்லை
காதல் மொழி பேசவில்லை
ஆனால் காதல் செடி
வளர்ந்து நின்றதே
இரு நெஞ்சத்தில்
காதல் ஒரு அபூர்வம்
நாட்கள் நகர்ந்தது, ஊட்டியில் இருந்து வந்ததில் தொடர்ந்து , விக்ரம், காவ்யாவின் நட்பு மேலும் ஆழமானது,எப்படி இல்லாமல் போகும், ஒரு வருட, இருவருட காதலா அது .
ஆனால் அந்த உண்மை என்னவோ இன்றும் விக்ரம் மட்டும் அறிந்ததே பாவம் பேதை அவள் அறியவில்லை அவள் அவன் மேல் கொண்டது வெறும் நட்பு மட்டுமே, அந்த ஒரு சின்ன ஈர்ப்பும் விக்ரம் என்ற பெயருக்காக மட்டுமே.
ஊரில் இருந்து வந்த புதிதில் காவ்யா யாருடனும் பேசவில்லை, ஏன் அலுவலகம் கூட வரவில்லை காரணம், அவள் காதல் அவள் கழுத்தில் இல்லை, இத்தனை வருடமாக அவள் யாருக்கும் தெரியாமல் பாதுகாத்த பொக்கிஷம் இன்று அவளிடம் இல்லை,
அதுமட்டுமல்லாமல், அங்கு நடந்த சம்பவம், ராக்கி இருமுறை அவளிடம் தவறாக நடக்க முயன்றது.
நினைத்து கொண்டாள் அன்று அவள் விக்ரமை, அவன் வரமாட்டான் என அறிந்தும் , வந்தது என்னவோ விக்ரம் பெயரில் இருக்கும் அவனது தோழன் விக்ரம் ,யாரெனும் காப்பாற்ற வரமாட்டார்களா எனமனது அலறித்துடித்த நேரத்தில் அவளை காத்தான் அவள் நண்பன் விக்ரம்.,
அந்தத்தருணம் விக்ரம் அவள் மனதில் ஆழமாக அங்குரம் போட்டு நிலைத்துவிட்டான்.
தன் குழந்தை காதல் ஒருபுறம், தன் கண்முன் நிற்கும் நட்பு காதலாக மாற துடிக்கும் மனது ஒரு புறம் என இருதலைக்கொல்லி எறும்பாய் அவள் துடித்து போனாள்.
இவள் இப்படி இருக்க,
அவனோ ,நாட்களை எரித்துக்கொண்டிருந்தான், எத்தனையோ வருடங்கள் கழித்து கண்பார்த்த காதல் ,கை கோர்க்க முடியவில்லையே, வருடங்களை மிக எளிதாக கடந்தவனாள் இந்த நாட்களை கடக்க மிகவும் திண்டாடுகிறான், அது சரி கண்முன்னே தன் பாலிய காதல் இருந்தும் ,அதனை வெளிபடுத்த முடியாத நிலையிலே உள்ளான், எல்லாம் அவள் சந்தோஷத்திற்காக, தன் காதலை அவளிடம் அவள் பிறந்த தினத்தில் அவளிடம் பரிசாக கூற எண்ணியே இந்த காத்திருப்பு.
மெல்ல மெல்ல தன் மனதளவில் தேரியவளோ, மீண்டும் அலுவலகம் வர ,தன் நண்பர்கள், தன் குழுவுடன் உற்சாகமாக வேலை செய்ய என நாட்கள் சென்றது.
இன்று காவ்யா அலுவலகம் நுழைகிறாள், நிஷா இல்லாமல் தனியாக, எதோ வேலையாக தன் காதலன் அமரன் அழைக்க தட்டி கழிக்க முடியாமல் சென்று விட்டாள்,
அலுவலகம் நுழைந்தவள் கண்டது வெறும் இருட்டுதான்,பகலாக இருந்தாலும் அந்த பில்டிங்கில் அலுவலகம் ஆள் அரவமின்றி சற்று கருமையாகவே இருந்தது.
ஏனென்று யோசிப்பதற்க்குள், டப் டப் என்ற சத்தம் கேட்டிட பயந்தவளோ கண்களை தன் கைகளை கொண்டு இருக்க மூடிக்கொண்டாள்.
வெளிச்சம் பரவ, வண்ண விளக்குகள் மின்ன, அலுவலகம் முழுதும் அலங்காரமே, ஹேப்பி பர்த்டே டூ யூ என் அனைவரும் இணைந்து பாட ,அப்பொழுது தான் உள்ளே வந்த நிஷாவும் சிலையாகிப்போனால் காவ்யாவை பார்த்து.
இன்னும் நடந்ததை சுய உணர்வுக்கு கொண்டு வரவில்லை காவ்யா, அந்த அழகிய நீல வண்ண கேக் பின்னாடி, பூங்கொத்துடன் காத்து கொண்டிருந்தான், விக்ரம் அழகிய புன்னகையை முகத்தில் ஏந்தி ஹேப்பி பர்த்டே காவ்யா என அவன் கூறிய அடுத்த நிமிடம்,சட்டென நிலை உணர்ந்து பாய்ந்து ஓடிவந்தவள் புயலென அவன் கையில் உள்ள பூங்கொத்தை பீய்த்து எரிந்தது மட்டும் அல்லாமல் இடியென கத்திக்கொண்டே , பைத்தியம் பிடித்தவள் போல அந்த அழகிய கேக் யை அலங்கோலமாக்கினாள் நோ. என்ற கத்தலோடு.
ஒரு கணம் அங்கு நடந்ததை கண்டு காவ்யாவா இப்படி என்பது போல் அதிர்ச்சியடைந்தனர் அங்கு கூடி இருந்த அனைவரும்.
விக்ரம் முன் வந்து காவ்யா தோள்களை பிடித்து குலுக்கி கேட்டான் "என்னாச்சு காவ்யா, ஏன் இப்படி பண்ற"
"நீ............ ஏ..........ன்.......இப்.......படி பண்....... என கண்ணை மூடிக்கொண்டு, வாயை இழுத்துக்கொண்டு திக்கி திக்கி பேசினாள்.
பட்டாசு வெடித்தார் போல் பட் பட் என பேசும் காவ்யா விற்கு இப்படி திக்குவாயா என அனைவருக்கும் மேலும் அதிர்ச்சி.
அனைத்தையும் நிர்மூலமாக்கிவிட்டு ஓடினாள் அலுவலகத்தின் மேல் மொட்டை மாடிக்கு...
"என்ன நிஷா என்னாச்சு ஏன் இவ இப்படி பண்றா" - விக்ரம்.
அது தெரியாது விக்ரம் ஆனா நானும் அவ சேர்ந்த புதுசுல ஹாஸ்டல் அ சர்பிரைஸ் பர்த்டே பார்ட்டி ரெடி பண்ணப்ப இதே மாதிரி தான் நடந்துகிட்டா , காரணம் சொல்லல ஆனா இந்த மாதிரி இன்னொரு தடவை செஞ்சிறாதன்னு கேட்டா அப்போவும் அவ திக்குனா, அவள் உணர்ச்சி வசப்பட்டாலோ, அதிர்ச்சி ஆனாலோ அவ திக்குறா விக்ரம், விடு ஒரு அரைமணிநேரத்தில் சரியாகிடும்.
எனகூறவும் அனைவரும் கலைந்து சென்றனர்.
ஆனால் காதலிப்பவன் எப்படி விட்டு செல்வான், காவ்யாவை தேடி சென்றான்.
அலுவலக வளாகத்தின் டெரஸ் எனப்படும், மொட்டை மாடியில் நின்றாள், சத்தம் வரவில்லை, ஆனால் உடல் குலுங்கியது, அதிலிருந்து அவள் அழுகிறாள் என புரிந்து கொண்டான்,மாயவன் அவன்.
"காவ்யா " - விக்ரம்
"த......ய......வு... செ..ஞ்சி போ..... ங்க , நான் நான் யா.. யா .யாரையும் பார்க்க விரும்பவில்லை" -காவ்யா .
"காவ்யா கொஞ்சம் என்ன சொல்லவறேன்னு கேளு "
"வேண்டாம் " என பைத்தியம் பிடித்தார் போல் கத்திக்கொண்டே அங்கிருந்த செடிகளை தொட்டியுடன் தள்ளி விட்டாள் மங்கை அவள்.
எவ்வளவு பேசி பார்த்தும் அவள் எதையும் காதல் வாங்க வில்லை , திரும்பி பார்க்கவும் இல்லை ,ஆனால் கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டிருந்தது..
விக்ரம் இன் பேச்சுகள் அனைத்தும், காற்றில் கரைந்த கற்பூரமாய் மாறியதே தவிர ,காவ்யா மனதில் எந்த மாற்றமும் இல்லை...
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், கூப்பிட்டான் காவியாவை...
"தீ ......"
தீ என்ற வார்த்தையை தன் செவியில் வாங்கியவள் , சட்டென அழுகை நின்று, கண்கள் விரிந்தது காவ்யா விற்கு..
மீண்டும் விக்ரம் அழைத்தான்
"தீ.... என்ன பாக்க மாட்டியா"
கண்களை மூடியவள் செவியில் மீண்டும் அதே குரல் ..... இருப்பினும் உறைந்தவள், உறைந்தவள் தான் திரும்ப வில்லை...
"தீ ... நான் விக்ரம் " என கூறவும் அப்படி யே சிலைபோல் திரும்பினாள்.
"உன் விக்ரம் தீ ...... உன்னோட விக்ரம் "
"நீ ...... நீ ..... என மீண்டும் அதே திக்கல் வார்த்தைகள் ... தன் ஆள்காட்டி விரலை விக்ரம் நோக்கி உயர்த்தி கேட்டாள் காவ்யா.
சட்டென தன் பாக்கெட்டில் இருந்து அந்த செயினில் உள்ள பெண்டன்ட்யை திறந்து காமித்து ,
"உன் விக்ரம், இந்த படத்தில் உன் கூட நிற்கும் உன் நண்பன், இப்போது உனக்காக காத்திருக்கும் உன் காதலன் விக்ரம், தீ..... இப்ப கூட என்கிட்ட வரமாட்டியா" என தன் இரு கைகளையும் விரித்து இத்தனை காலம் பிரிந்த ஏக்கப்பார்வையுடன் பார்த்த விக்ரமை நோக்கி ஓடிவந்து கட்டிக்கொண்டாள் காவ்யா...
"விக்ரம் என் விக்ரம் நீயா டா, வந்துட்டியா டா எனக்காக வந்துட்டியாடா ஏன் இவ்வளவு நாள் என்னை காக்க வைச்ச நாயே பேயே" என அவனை தன் இருகைகளாலும் மாறி மாறி அடித்தவள் கைகள் இரண்டையும் பிடித்தான் விக்ரம்.
ஒரு சேர கைகள் இரண்டையும் பிடித்தவன், அவளையே பார்க்க, அவளும் அவன் கண்களையே பார்தாள் பல வருட ஏக்கம் தீர அவனை பார்வையாலே பருகி தன் தாகம் தீர்த்திட எண்ணினாள் .
அவனோ , பிடித்திருந்த அவன் கைகளில் மெதுவாக தன் இதழ்களை ஒத்தி எடுத்து பின் ஒருகாலை மடக்கி, ஒரு காலை நிமிர்த்தி , அவள் வலது காலை தன் தொடையின் மேல் வைத்து அதில் அவளுக்காக வாங்கிய மெட்டியை இரு கால் விரல்களிலும் அணிவித்தான் விக்ரம்.
"தீ..... என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா, ப்ளீஸ்" என அவள் மெட்டியிட்ட பாதங்களில் தன் இதழால் முத்த பரிசளித்தான்.
என்ன பதில் சொல்வாள், மங்கையவள், அன்றயநாள் அப்படி, அதனால் மொட்டாய் இதழ் மூடி இருந்தாள்.
"என் காதலை நான் இப்படி சொல்லுவேனு, நான் நினைச்சுகூட பார்க்கல தீ ... ஏன் இப்படி பண்ண என்னாச்சு, இந்த நல்ல நாள் ல " என அவன் சொல்லி முடிக்கவில்லை அவன் வாயை பொத்தினாள் .
"நல்ல நாள் இல்லை விக்ரம் , நான்.... நான்... அனாதையான நாள் , உங்களோட தீ ....
....இந்த தீஷா யூவாஞ்சலின் அனாதையான நாள் என கதறி கொண்டே அவன் மேல் சாய்ந்தாள்"
கண்கள் பார்த்துக்கொள்ளவில்லை
கைகள் கோர்த்து கொள்ளவில்லை
காதல் மொழி பேசவில்லை
ஆனால் காதல் செடி
வளர்ந்து நின்றதே
இரு நெஞ்சத்தில்
காதல் ஒரு அபூர்வம்
நாட்கள் நகர்ந்தது, ஊட்டியில் இருந்து வந்ததில் தொடர்ந்து , விக்ரம், காவ்யாவின் நட்பு மேலும் ஆழமானது,எப்படி இல்லாமல் போகும், ஒரு வருட, இருவருட காதலா அது .
ஆனால் அந்த உண்மை என்னவோ இன்றும் விக்ரம் மட்டும் அறிந்ததே பாவம் பேதை அவள் அறியவில்லை அவள் அவன் மேல் கொண்டது வெறும் நட்பு மட்டுமே, அந்த ஒரு சின்ன ஈர்ப்பும் விக்ரம் என்ற பெயருக்காக மட்டுமே.
ஊரில் இருந்து வந்த புதிதில் காவ்யா யாருடனும் பேசவில்லை, ஏன் அலுவலகம் கூட வரவில்லை காரணம், அவள் காதல் அவள் கழுத்தில் இல்லை, இத்தனை வருடமாக அவள் யாருக்கும் தெரியாமல் பாதுகாத்த பொக்கிஷம் இன்று அவளிடம் இல்லை,
அதுமட்டுமல்லாமல், அங்கு நடந்த சம்பவம், ராக்கி இருமுறை அவளிடம் தவறாக நடக்க முயன்றது.
நினைத்து கொண்டாள் அன்று அவள் விக்ரமை, அவன் வரமாட்டான் என அறிந்தும் , வந்தது என்னவோ விக்ரம் பெயரில் இருக்கும் அவனது தோழன் விக்ரம் ,யாரெனும் காப்பாற்ற வரமாட்டார்களா எனமனது அலறித்துடித்த நேரத்தில் அவளை காத்தான் அவள் நண்பன் விக்ரம்.,
அந்தத்தருணம் விக்ரம் அவள் மனதில் ஆழமாக அங்குரம் போட்டு நிலைத்துவிட்டான்.
தன் குழந்தை காதல் ஒருபுறம், தன் கண்முன் நிற்கும் நட்பு காதலாக மாற துடிக்கும் மனது ஒரு புறம் என இருதலைக்கொல்லி எறும்பாய் அவள் துடித்து போனாள்.
இவள் இப்படி இருக்க,
அவனோ ,நாட்களை எரித்துக்கொண்டிருந்தான், எத்தனையோ வருடங்கள் கழித்து கண்பார்த்த காதல் ,கை கோர்க்க முடியவில்லையே, வருடங்களை மிக எளிதாக கடந்தவனாள் இந்த நாட்களை கடக்க மிகவும் திண்டாடுகிறான், அது சரி கண்முன்னே தன் பாலிய காதல் இருந்தும் ,அதனை வெளிபடுத்த முடியாத நிலையிலே உள்ளான், எல்லாம் அவள் சந்தோஷத்திற்காக, தன் காதலை அவளிடம் அவள் பிறந்த தினத்தில் அவளிடம் பரிசாக கூற எண்ணியே இந்த காத்திருப்பு.
மெல்ல மெல்ல தன் மனதளவில் தேரியவளோ, மீண்டும் அலுவலகம் வர ,தன் நண்பர்கள், தன் குழுவுடன் உற்சாகமாக வேலை செய்ய என நாட்கள் சென்றது.
இன்று காவ்யா அலுவலகம் நுழைகிறாள், நிஷா இல்லாமல் தனியாக, எதோ வேலையாக தன் காதலன் அமரன் அழைக்க தட்டி கழிக்க முடியாமல் சென்று விட்டாள்,
அலுவலகம் நுழைந்தவள் கண்டது வெறும் இருட்டுதான்,பகலாக இருந்தாலும் அந்த பில்டிங்கில் அலுவலகம் ஆள் அரவமின்றி சற்று கருமையாகவே இருந்தது.
ஏனென்று யோசிப்பதற்க்குள், டப் டப் என்ற சத்தம் கேட்டிட பயந்தவளோ கண்களை தன் கைகளை கொண்டு இருக்க மூடிக்கொண்டாள்.
வெளிச்சம் பரவ, வண்ண விளக்குகள் மின்ன, அலுவலகம் முழுதும் அலங்காரமே, ஹேப்பி பர்த்டே டூ யூ என் அனைவரும் இணைந்து பாட ,அப்பொழுது தான் உள்ளே வந்த நிஷாவும் சிலையாகிப்போனால் காவ்யாவை பார்த்து.
இன்னும் நடந்ததை சுய உணர்வுக்கு கொண்டு வரவில்லை காவ்யா, அந்த அழகிய நீல வண்ண கேக் பின்னாடி, பூங்கொத்துடன் காத்து கொண்டிருந்தான், விக்ரம் அழகிய புன்னகையை முகத்தில் ஏந்தி ஹேப்பி பர்த்டே காவ்யா என அவன் கூறிய அடுத்த நிமிடம்,சட்டென நிலை உணர்ந்து பாய்ந்து ஓடிவந்தவள் புயலென அவன் கையில் உள்ள பூங்கொத்தை பீய்த்து எரிந்தது மட்டும் அல்லாமல் இடியென கத்திக்கொண்டே , பைத்தியம் பிடித்தவள் போல அந்த அழகிய கேக் யை அலங்கோலமாக்கினாள் நோ. என்ற கத்தலோடு.
ஒரு கணம் அங்கு நடந்ததை கண்டு காவ்யாவா இப்படி என்பது போல் அதிர்ச்சியடைந்தனர் அங்கு கூடி இருந்த அனைவரும்.
விக்ரம் முன் வந்து காவ்யா தோள்களை பிடித்து குலுக்கி கேட்டான் "என்னாச்சு காவ்யா, ஏன் இப்படி பண்ற"
"நீ............ ஏ..........ன்.......இப்.......படி பண்....... என கண்ணை மூடிக்கொண்டு, வாயை இழுத்துக்கொண்டு திக்கி திக்கி பேசினாள்.
பட்டாசு வெடித்தார் போல் பட் பட் என பேசும் காவ்யா விற்கு இப்படி திக்குவாயா என அனைவருக்கும் மேலும் அதிர்ச்சி.
அனைத்தையும் நிர்மூலமாக்கிவிட்டு ஓடினாள் அலுவலகத்தின் மேல் மொட்டை மாடிக்கு...
"என்ன நிஷா என்னாச்சு ஏன் இவ இப்படி பண்றா" - விக்ரம்.
அது தெரியாது விக்ரம் ஆனா நானும் அவ சேர்ந்த புதுசுல ஹாஸ்டல் அ சர்பிரைஸ் பர்த்டே பார்ட்டி ரெடி பண்ணப்ப இதே மாதிரி தான் நடந்துகிட்டா , காரணம் சொல்லல ஆனா இந்த மாதிரி இன்னொரு தடவை செஞ்சிறாதன்னு கேட்டா அப்போவும் அவ திக்குனா, அவள் உணர்ச்சி வசப்பட்டாலோ, அதிர்ச்சி ஆனாலோ அவ திக்குறா விக்ரம், விடு ஒரு அரைமணிநேரத்தில் சரியாகிடும்.
எனகூறவும் அனைவரும் கலைந்து சென்றனர்.
ஆனால் காதலிப்பவன் எப்படி விட்டு செல்வான், காவ்யாவை தேடி சென்றான்.
அலுவலக வளாகத்தின் டெரஸ் எனப்படும், மொட்டை மாடியில் நின்றாள், சத்தம் வரவில்லை, ஆனால் உடல் குலுங்கியது, அதிலிருந்து அவள் அழுகிறாள் என புரிந்து கொண்டான்,மாயவன் அவன்.
"காவ்யா " - விக்ரம்
"த......ய......வு... செ..ஞ்சி போ..... ங்க , நான் நான் யா.. யா .யாரையும் பார்க்க விரும்பவில்லை" -காவ்யா .
"காவ்யா கொஞ்சம் என்ன சொல்லவறேன்னு கேளு "
"வேண்டாம் " என பைத்தியம் பிடித்தார் போல் கத்திக்கொண்டே அங்கிருந்த செடிகளை தொட்டியுடன் தள்ளி விட்டாள் மங்கை அவள்.
எவ்வளவு பேசி பார்த்தும் அவள் எதையும் காதல் வாங்க வில்லை , திரும்பி பார்க்கவும் இல்லை ,ஆனால் கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டிருந்தது..
விக்ரம் இன் பேச்சுகள் அனைத்தும், காற்றில் கரைந்த கற்பூரமாய் மாறியதே தவிர ,காவ்யா மனதில் எந்த மாற்றமும் இல்லை...
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், கூப்பிட்டான் காவியாவை...
"தீ ......"
தீ என்ற வார்த்தையை தன் செவியில் வாங்கியவள் , சட்டென அழுகை நின்று, கண்கள் விரிந்தது காவ்யா விற்கு..
மீண்டும் விக்ரம் அழைத்தான்
"தீ.... என்ன பாக்க மாட்டியா"
கண்களை மூடியவள் செவியில் மீண்டும் அதே குரல் ..... இருப்பினும் உறைந்தவள், உறைந்தவள் தான் திரும்ப வில்லை...
"தீ ... நான் விக்ரம் " என கூறவும் அப்படி யே சிலைபோல் திரும்பினாள்.
"உன் விக்ரம் தீ ...... உன்னோட விக்ரம் "
"நீ ...... நீ ..... என மீண்டும் அதே திக்கல் வார்த்தைகள் ... தன் ஆள்காட்டி விரலை விக்ரம் நோக்கி உயர்த்தி கேட்டாள் காவ்யா.
சட்டென தன் பாக்கெட்டில் இருந்து அந்த செயினில் உள்ள பெண்டன்ட்யை திறந்து காமித்து ,
"உன் விக்ரம், இந்த படத்தில் உன் கூட நிற்கும் உன் நண்பன், இப்போது உனக்காக காத்திருக்கும் உன் காதலன் விக்ரம், தீ..... இப்ப கூட என்கிட்ட வரமாட்டியா" என தன் இரு கைகளையும் விரித்து இத்தனை காலம் பிரிந்த ஏக்கப்பார்வையுடன் பார்த்த விக்ரமை நோக்கி ஓடிவந்து கட்டிக்கொண்டாள் காவ்யா...
"விக்ரம் என் விக்ரம் நீயா டா, வந்துட்டியா டா எனக்காக வந்துட்டியாடா ஏன் இவ்வளவு நாள் என்னை காக்க வைச்ச நாயே பேயே" என அவனை தன் இருகைகளாலும் மாறி மாறி அடித்தவள் கைகள் இரண்டையும் பிடித்தான் விக்ரம்.
ஒரு சேர கைகள் இரண்டையும் பிடித்தவன், அவளையே பார்க்க, அவளும் அவன் கண்களையே பார்தாள் பல வருட ஏக்கம் தீர அவனை பார்வையாலே பருகி தன் தாகம் தீர்த்திட எண்ணினாள் .
அவனோ , பிடித்திருந்த அவன் கைகளில் மெதுவாக தன் இதழ்களை ஒத்தி எடுத்து பின் ஒருகாலை மடக்கி, ஒரு காலை நிமிர்த்தி , அவள் வலது காலை தன் தொடையின் மேல் வைத்து அதில் அவளுக்காக வாங்கிய மெட்டியை இரு கால் விரல்களிலும் அணிவித்தான் விக்ரம்.
"தீ..... என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா, ப்ளீஸ்" என அவள் மெட்டியிட்ட பாதங்களில் தன் இதழால் முத்த பரிசளித்தான்.
என்ன பதில் சொல்வாள், மங்கையவள், அன்றயநாள் அப்படி, அதனால் மொட்டாய் இதழ் மூடி இருந்தாள்.
"என் காதலை நான் இப்படி சொல்லுவேனு, நான் நினைச்சுகூட பார்க்கல தீ ... ஏன் இப்படி பண்ண என்னாச்சு, இந்த நல்ல நாள் ல " என அவன் சொல்லி முடிக்கவில்லை அவன் வாயை பொத்தினாள் .
"நல்ல நாள் இல்லை விக்ரம் , நான்.... நான்... அனாதையான நாள் , உங்களோட தீ ....
....இந்த தீஷா யூவாஞ்சலின் அனாதையான நாள் என கதறி கொண்டே அவன் மேல் சாய்ந்தாள்"