இந்த கௌதம் எல்லாம் மனிதனே இல்ல... இவனை போய் நல்லவன் சொல்லுறீங்க... நல்லவன் செய்யுற வேலையா இவன் செஞ்சு வச்சு இருக்கான்... அது எப்படி ஒருத்தி பின் சுத்தி அவளை ஏமாத்தி கல்யாணம் பண்ணி குழந்தை வந்த பின்னும் இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ண தோணும்.. அதுவும் பழி வாங்க ஆனால் அவகிட்டயும் மூணு மாசமா நல்லா நடிச்சு தான் இருந்து இருக்கான் நல்லவன் போல... இப்போ அவளை தீரன் தூக்கிட்டான், அவளை தேடனும் அவ வேணும் ஆனால் அதே சமயம் அல்லியும் வேணும் அவ கூடவும் சரசம் பண்ணனும் இவனெல்லாம் ஆண் என்று சொல்ல தகுதியே இல்லை அல்லி சொன்னது போல... இவ்வளவு கீழ்தரமா நடந்துக்குறான்.. இவன் லட்சணம் அஸ்வினுக்கு தெரிய வரட்டும் அப்பறம் இருக்குது அவனுக்கு கச்சேரி... ராதிகா அண்ட் கணவர் இருவரும் ஆளும் மூஞ்சிய பாரு பெத்த புள்ளை லட்சணம் தெரியலை அடுத்தவன் அழிவை பார்த்து இருக்காங்க...
சோ தீரணின் கடந்தகாலம் அதில் இவங்களுக்கு பங்கு உண்டு போல... எல்லாம் அந்த விருஷா பண்ணும் வேலை... அப்படி என்ன காரணம் இந்த அஸ்வினி விடாது கௌதம் பிடிக்க, அப்படி என்ன வன்மம், தீரன் மீது பகை அவனுக்கு பிடித்த அஸ்வினியைப் பிடிச்சு வச்சு அவனை பழி தீர்க்க நினைக்கிறான் போல, ஆனால் உண்மை தெரிஞ்சா அஷ்வினியே உன்னை உன் குடும்பத்தை வச்சு செய்வா... மூஞ்சிகளை பாரு..
அப்போ அஸ்வினி தீரனின் சிறு வயதில் இருந்த பழக்கமா, அதான் அவளுக்கு அவன் ஞாபகம் இல்லை, ஆனால் அவனின் தொடுகை ஞாபகம் இருக்கு போல... அதான் முகம் காட்ட மறுக்கிறானா?
மோகினி பிசாசே என்ன வேலை பார்த்து வச்சு இருக்க... தேஜு கிட்ட கௌதம் என்ன சொல்லி தொலைச்சானோ தெரியலையே.. ஆனால் நீ செஞ்சுடாத தேஜ்... கௌதமுக்க்கு அன்னைக்கு ஒரு புல்லட் பத்தாது நாலு புல்லட் இறக்கி அவனை கொண்ணுடு.. அல்லியாவது நிம்மதியா இருக்கட்டும்.. அவ்ளோ சீக்கிரம் அல்லி அவனை ஏத்துக்க கூடாது.. அஷ்வினி அவன் பற்றி தெரிஞ்சு பிரியட்டும்.. இவனை நல்லா வச்சு செய்யணும் .. எனக்கு அவனை பிடிக்கவே இல்லை...
அல்லி மேலயும் தப்பு இருக்கு .. அவன் சொன்னா அவளுக்கு இருக்கு ஒரே உறவு தாயை மறந்து எப்படி அவள் அவனோட சேர்ந்து தப்பு பண்ணலாம், அப்போ இதெல்லாம் அம்மாவை ஏமாற்றியதற்கு அவளுக்கு தேவை தான்.. எனக்கு அவள் மேல் பரிதாபம் கூட வரலை.. ஒரு குழந்தை வந்தும் அவன் சொல்லலை என்றால் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாள் போல, அப்படி என்ன பெரிய வெங்காய காதல் வேண்டி இருக்கு.. அவன் என்ன சொன்னாலும் நம்ப அவனை பற்றி என்ன தெரியும் இவளுக்கு... பொண்ணா எந்த ஒரு யோசனை, வாழ்க்கை பற்றிய எண்ணம், அம்மா பற்றிய நினைப்பு எதுவும் இல்லாமல் ஒருத்தன் மயக்குனா மயங்கி போன அவளுக்கு இதுவும் தேவை இன்னமும் தேவை.. ஸ்டுபிட் girl.. neenga பண்ணின தப்புக்கு அந்த குழந்தையை ஏன் சாகடிக்க போன ஸ்டுபிட்..
தீரன் அண்ட் கௌதம் ஒரே குடும்பம் போல.. அதான் மரகதம் அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு... அப்போ அல்லி நிலையும் மரகதம் அவங்களுக்கு தெரிய வந்துடிச்சா இல்லையா? அல்லியை காத்தது தீரன் தான்... அவள் மூலம் எல்லாம் தெரிய வந்து இருக்கும் போல் தீராக்கு..
Nice sis.. today only read pending epis..