அத்தியாயம் 10
திருமணம் நன்முறையில் நடைபெற்றதில் இன்னிலாவின் பெற்றோருக்கு மனநிறைவு. சட்டென அனைத்தும் நடந்து முடிந்தவாறு இருந்தாலும், இனி மகளின் வாழ்க்கை நன்றாக அமையும் என நம்பிக்கை கொண்டனர்.
அந்த அளவு ஈஷ்யுகன் மீதான நன்மதிப்பு அதிகரித்தது.
இளைய மகள்களோ "மாமா மாமா" என ஈஷ்யுகனின் மீது அதிக பாசம் வைத்திருக்க, அதற்கு குறைவில்லாமல் அவனும் அவர்களை அன்பாய் நடத்தினான்.
'உண்மையில் தான் இந்த சிடுமூஞ்சி சின்னப்பனைத் தான் திருமணம் செய்திருக்கிறோமா? அல்லது இவரை க்ளோன் எதுவும் செய்து விட்டார்களா' என்ற சந்தேகத்திலேயே அன்றைய நாள் கழிந்தது இன்னிலாவிற்கு.
இரவு புதுமண தம்பதிகளுக்காக முதலிரவு அறைத் தயாராக, ஜீவித் தான் முன்னே நின்று அனைத்தும் செய்தான். அவனுக்கும் நண்பனின் திருமணத்தை எண்ணி மகிழ்வே. நிமிஷாவின் நினைவு அவ்வப்பொழுது வாட்டினாலும், தோழனுக்காக மனதைத் தேற்றிக்கொண்டான்.
அறைக்கு வந்த ஈஷ்யுகன் தான், "என்னடா இது?" என அறையில் இருந்த அலங்காரங்களைப் பார்த்து கேட்க,
"ஃபர்ஸ்ட் நைட் செட்டப்டா. தெரியாத மாதிரி கேட்குற" என அவன் வயிற்றில் குத்திய ஜீவித்தைக் கண்டு புன்னகைத்தான்.
மனத்திலோ, 'ம்ம்க்கும்... இதை பார்த்து அவள் ஓடாம இருந்தா சரி...' என்று முணுமுணுத்துக் கொள்ள, "என்னடா?" எனக் கேட்டதும், "ப்ச் அவளுக்கு அடிபட்டு இருக்கு. இப்போ இது தேவையா" என லேசாய் முறைத்ததில், "கேட்கணும்ன்னு நினைச்சேன். ஏன் அடிபட்டுருக்கு அவளுக்கு" என்றான் அப்போது தான் சந்தேகம் வந்து.
"ப்ச் சூசைட் அட்டெம்ப்ட்டா." என்று வெகு சலிப்பாய் கூற, ஜீவித் அதிர்ந்தான்.
"என்னைக் கல்யாணம் பண்ணியே ஆகணும்ன்னு படிக்கட்டுல இருந்து உருண்டு சூசைட் பண்ணிக்க போய்ட்டா. அப்பறம் காப்பாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்" என்று பிசிறு இல்லாமல் உருட்ட, "அடப்பாவமே" என்று வாயில் கை வைத்தான் ஜீவித்.
"ஆனா, அவள் ரொம்ப அமைதியாச்சேடா. அவளுக்கு எப்படி லவ் வந்துச்சு" என்று ஜீவித் புரியாமல் கேட்க, "அதை அவள்கிட்ட தான் கேட்கணும்" என்று தோளைக் குலுக்கினான்.
இன்னிலாவை அலங்காரம் செய்த நீலவேணியிடம் மறுக்கவும் இயலாமல் தவித்திட, உடல் வேறு அசதியாக இருந்தது.
இன்னும் காயங்கள் முழுதாய் சரி ஆகவில்லை. தோழியின் இழப்பையும் முழுதாய் மனது ஏற்கவில்லை. இந்நிலையில் திருமணமே அதிகப்படி. அதிலும் கட்டாயப்படுத்தி ஒரு ஒப்பந்தத்திற்காக நடந்து முடிந்த திருமணத்திற்கு இதெல்லாம் அவசியமா என்றிருந்தது.
ஆனால், கணவன் தான் நடிக்க வேண்டும் என்று விட்டானே! அதில் நொந்து அவளும் அமைதியாக இருந்து விட்டாள்.
அன்று இரவே, அவளது குடும்பத்தார் திருச்சி செல்வதாக இருக்க, இன்னிலாவிற்கு பயம் அப்பிக்கொண்டது. இவனுடன் தனியாகவா? எனப் பதறியவள்,
"ஏம்மா உடனே கிளம்புறீங்க இருந்துட்டுப் போங்க" என்று நீலவேணியிடம் கெஞ்ச, அந்நேரம் ஈஷ்யுகனும் ஜீவித்தும் பேசியபடி அங்கு வந்தனர்.
அவளது கண்ணில் இருந்த கலவரத்தைக் கண்டுகொண்ட ஈஷ்யுகன் அவளை நோக்கி அர்த்தப்பார்வை வீச, நீலவேணியோ "ஏற்கனவே ரெண்டு நாளுக்கு மேல ஆகிடுச்சு இனி. உன் தங்கச்சிங்களுக்கும் ஸ்கூல் இருக்குல்ல. நீயும் மாப்பிள்ளையும் மறுவீட்டுக்கு வாங்க" என்றார்.
ஈஷ்யுகன் தான், "இங்க கொஞ்சம் முடிக்க வேண்டிய வேலை இருக்கு அத்தை. கூடிய சீக்கிரம் எல்லாம் முடிஞ்சதும் வரோம்" என்று பதில் அளித்திட அதற்கு மேல் அவனை வற்புறுத்த வழியில்லாது போனது.
பின் குடும்பத்தார் கிளம்பி விட்டதும், ஜீவித்தும் "என்ஜாய் மச்சி" என்று கண் சிமிட்டி விட்டு கிளம்பிட, இன்னிலாவிற்கு இதயத்துடிப்பு வெளியில் கேட்டது.
அவள் இதுவரை இருந்த அறையிலேயே அங்கும் இங்கும் வேலை செய்வது போல சுற்றிக்கொண்டிருந்தாள்.
அவசியமே இல்லாமல் ட்ரெஸ்ஸிங் டேபிளைத் திறப்பதும், அதில் இருக்கும் பொருட்களை மாற்றி வைப்பதும், பின் ஒரு ஹேர் பின்னை கூட விடாமல் எடுத்து வைப்பதுமாக சில்லிட்டுப் போன மனதை அடக்க வழி தெரியாமல் பயத்தில் ஏதேதோ செய்ய, அந்த அறையை விட்டு நகராமல் கையைக் கட்டிக்கொண்டு அவளது தவிப்புகளை வேடிக்கைப் பார்த்தான் ஈஷ்யுகன்.
"ரூமை க்ளீன் பண்ணி முடிச்சுட்டியா?" ஆழமாய் வந்த அவனது குரலில் திடுக்கிட்டவள், "ஹான்... அது அது... ப... பண்ணிட்டேன்." என்று தலையாட்டிட, "சரி அப்போ வா... நம்ம ரூமை கொஞ்ச நேரம் க்ளீன் பண்ணலாம்." என்றான் விஷமத்துடன்.
நெஞ்சில் கை வைத்துக் கொண்டவள், "இல்ல சார். இங்கயே இருக்கேன். நீங்க போங்க" என்று வேகமாக பதில் கூற, "சார்?" எனக் கேட்டவனின் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது.
"இங்க யாரும் இல்லைல. நடிக்கத் தேவை இல்லையே" அவள் தலையைக் குனிந்து கொண்டு கூறியதில்,
"தனியா இருக்கும் போதும் அதே நடிப்பை ஃபாலோ பண்ணுனா தான் எல்லாரும் இருக்கும்போது அது சரளமா வரும் ஸ்வீட்மூன்." என்றபடி அவளை நோக்கி அழுத்த நடையுடன் முன்னேறினான்.
"சரிங்க யுகி. நான் ஃபாலோ பண்ணிக்கிறேன். இந்த ரூம்ல இருந்தே..." என்று மேலும் கூறும் முன் அவளைக் கையில் மிதக்க விட்டிருந்தான் ஆடவன்.
அவளோ திகைத்துப் பதறி அழுத்தம் அதிகமாகி மயங்கியே விட்டாள்.
"ஏய் ஏய் மூன்..." என அவளை எழுப்பிட அவளிடம் அசைவே இல்லை.
'இவளை வச்சுக்கிட்டு' என்று புலம்பிக்கொண்டவன் அவனது அறைக்குத் தூக்கிச் சென்றான்.
மலர்களால் நிறைந்திருந்த மஞ்சத்தில் பெண்ணவளைக் கிடத்தியவன், அவளை உச்சி முதல் பாதம் வரை விழிகளால் வருடினான்.
சிவப்பு நிற மெல்லிய புடவையில் செழிப்பாய் காட்சியளித்த பாவையின் வறண்ட இதழ்கள் அவனை உசுப்பேற்றியது.
ஆள்காட்டி விரலால், அவ்விதழ்களை மெல்ல வருடிக் கொடுத்தவன், "யூ டெம்ப்ட் மீ." என்று அவளையே குற்றம் சொன்னான் சலிப்பாக.
அவளது கையில் இருந்த காயம் அவனது எண்ணத்தை சிதறடிக்க, அவனால் ஏற்பட்ட காயத்தை மென்மையாய் நெருடியவன், பெருமூச்சுடன் ஆயின்மெண்ட்டை எடுத்து வந்தான்.
மறுநாள், உறக்கம் கலைந்து எழுந்த இன்னிலாவிற்கு மூச்சு முட்டியது. "என்னது இது... கரும்பு மெஷினுக்குள்ள மாட்டிக்கிட்ட மாதிரி உடம்பே வலிக்குது." என்ற குழப்பத்துடன் கண்ணைக் கசக்கி விழித்தவள் அதிர்ந்து போனாள்.
ஈஷ்யுகன் தான் அவளை இறுக்கமாக அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தான்.
அவளது ஆடைகள் வேறு கலைந்திருந்ததில், அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது.
வெகு நேரமாய் எழ முயற்சி செய்தவளுக்கு பாவம் அவனது சுண்டு விரலைக் கூட அசைக்க இயலவில்லை. வெகு அண்மையில் தெரிந்த ஆணவனின் அழுத்த முகமும், கன்னத்தைத் தீண்டி காயப்படுத்திய சூடான மூச்சுக்காற்றும் அவளை என்னவோ செய்தது.
அவன் வேறு சட்டை இல்லாமல், வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு வெற்று மார்போடு அவளை அணைத்திருந்தான்.
கழுத்தில் ஊர்ந்த அவன் அணிவித்த மாங்கல்யத்தையும், உரிமையான அவனது அணைப்பில் அடங்கிப்போன தனது மேனியையும் நிந்தித்துக் கொண்டாள்.
"யுகி" ஹஸ்கி குரலில் இன்னிலா அழைக்க, "ம்ம்" எனப் புருவத்தைச் சுருக்கிக் கொண்டவன், இன்னும் வாகாக அவளை நெருங்கி உறக்கத்தைத் தொடர, "யுகி கையை எடுங்க. எந்திரிக்கணும்." என்றாள் மெல்லமாக.
"எந்திரிச்சு என்ன பண்ணப் போற. இன்னைக்கு ஆபிஸ் போற மூட் இல்லை. கெட் சம் ஸ்லீப்." என்றான் கண்ணைத் திறவாமல்.
அவளோ நெளிந்தபடி, "வாஷ்ரூம் போகணும்" என்றிட, பட்டென விலகியவன், "போயிட்டு சீக்கிரம் வா" என்று குப்புறப்படுத்து தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொள்ள, "என்னது வரவா?" என்று மிரண்டாள்.
வேகமாக எழுந்தவளின் புடவை தலைப்பு கீழே சரிய, அதனை அவசரமாகப் பிடித்து தன்னை மறைத்துக் கொண்டவளுக்கு அதிர்ச்சி பரவியது.
'புடவையை பின் குத்தி தான கட்டி இருந்தேன். எப்படி அவுந்துச்சு.' என்ற பீதியில், சுகமாய் உறங்கிக்கொண்டிருந்தவனை மிரட்சியுடன் பார்த்தாள்.
உதட்டைப் பிதுக்கி கண்ணில் நீர் வைத்தவள், "ஏன் இப்படி பண்ணுனீங்க?" என்று தேம்ப,
திடீரென கேட்ட அழுகுரலில் கண்ணைக் கசக்கிய படி அவள் புறம் திரும்பியவன், "ஏய் எதுக்குடி காலைலயே ஒப்பாரி வச்சுட்டு இருக்க" என்றான் கடுப்பாக.
மூக்கை உறிஞ்சியவள், "அக்ரிமெண்ட் மேரேஜ், லவ் பண்ற மாதிரி நடிக்கலாம்ன்னு தான சொன்னீங்க. இப்போ ஏன் இப்படி பண்ணுனீங்க. அதுவும் நான் சுயநினைவுல இல்லாதப்ப." என்று கேவியதில், குழப்பத்துடன் எழுந்தவன், அருகில் இருந்த டீ - ஷர்ட்டை அணிந்து கொண்டான்.
அதில் தலையைக் குனிந்து கொண்டு கண்ணீர் வடித்தவளிடம், "ஹே ஸ்வீட்மூன். வாட்ஸ் ராங் வித் யூ?" என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்து.
அவளோ தேய்ந்து போன ரெக்கார்டராக "ஏன் இப்படி பண்ணுனீங்க" என்று ஆரம்பிக்க, "ஏய் பைத்தியம். என்ன செஞ்சேன்னு சொல்லிட்டு புலம்பு" என்று உறுமிட, அவள் இன்னும் சத்தமாக அழுதாள்.
அவனோ சில நொடிகள் அவளைக் குழப்பத்துடன் பார்த்து விட்டு, பின் அவள் புடவையை மார்போடு அணைத்துப் பிடித்திருந்த கோலம் கண்டு, அவளது எண்ணத்தைப் புரிந்து கொண்டவன், பட்டென புன்னகைத்தான்.
கட்டிலுக்கு அருகில் டேபிளில் இருந்த ஆயின்மெண்ட்டை எடுத்து அவள் மீது விட்டெறிந்தவன், "உன்னை ரேப் பண்ணனும்ன்னா, எதுக்குடி கல்யாணம் பண்றேன். உன்னைத் தூக்கிட்டு வந்து நினைச்சதை முடிக்க, எனக்கு ரொம்ப நேரம் ஆகாது மூன். உனக்கு ஆயின்மெண்ட் தான் போட்டு விட்டேன். தேவை இல்லாமல், நீயே என்னைத் தூண்டி விட்டு உன்னை ரேப் பண்ண வச்சுடாத" என்றான் அழுத்தம் திருத்தமாக.
அவள் தான் கண்ணீரைக் கூட துடைக்காமல் திகைத்துப் பின் அசடு வழிந்தாள்.
' ச்சே... அவசரப்பட்டுட்டோமே' என நொந்தாலும், வேகமாக "ஆயின்மெண்ட் நானே போட்டுப்பேன். நீங்க ஏன் போட்டு விட்டீங்க எங்க போட்டு விட்டீங்க?" எனப் பதறி கேட்டாள்.
"எங்க எங்க போட்டேன்னு விளக்கமா சொல்லவா? இல்ல தொட்டுக் காட்டவா?" சீண்டலாய் கேட்டதில்,
"இல்ல இல்ல வேணாம்" என்றவளுக்கோ ஐயோ என்றிருந்தது.
"அடிச்ச எனக்கு தெரியும் எங்க எங்க காயமாகி இருக்கும்ன்னு... தொடர்ந்து மருந்து போட்டா தான் காயம் ஆறும். அதான் போட்டு விட்டேன்." என்றிட, அவனால் காயமானது ஒரு புறம் வலித்தாலும், அக்காயங்கள் இருக்கும் இடத்திலெல்லாம் மருந்து போட்டு விட்டானா என்றெண்ணி தடுமாறவும் செய்தாள்.
"அதுக்காக சேரியை ரிமூவ் பண்ணிட்டா..." எனப் பேச இயலாமல் தவிக்க, அரை நொடிக்கும் அதிகமாக அவளை அமைதியாக ஏறிட்டவன், பாவையை அப்படியே தூக்கி தனது மடியில் அமர வைத்தான்.
அந்த திடீர் ஆக்கிரமிப்பில் அவளது புடவை தலைப்பு கீழே சரிய, அவளோ கையால் தன்னை மறைத்துக் கொண்டாள்.
திகைத்த அவளது விழிகளை நேராய் பார்த்தவன், "இங்க பாரு... என் முன்னாடி நீ ஒட்டுத்துணி இல்லாம இருந்தாக்கூட, நீயா என் டச்சிங்க அக்செப்ட் பண்ற வரைக்கும், உன் கூட லவ் மேக் பண்ற ஐடியா எனக்கு இல்லை. உனக்கு மருந்து போட்டப்ப நான் தப்பாவும் யோசிக்கல. நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம். இனி தினமும் நான் தான் உனக்கு மருந்து போட்டு விடுவேன். என்னை வக்கிரம் புடிச்சவன்னு கூட நினைச்சுக்கோ ஐ டோன்ட் கேர்." என்று தோளைக் குலுக்கினான்.
இன்னிலா தான் பேச்சிழந்து போனாள்.
மெல்ல அவனை விட்டு விலகி கட்டிலில் இருந்து இறங்கியவள், அவன் முகம் காணாமல் குளியலறைக்குள் புகுந்து கொள்ள, அவன் மீண்டும் கட்டிலில் விழுந்தான்.
'இடியட்... இவளால நைட்டும் தூங்க முடியல. பகல்லையும் தூங்க முடியல. வச்சுருக்காங்க பேர் ஸ்வீட்மூனாம். ஹாட்மூன்னு வச்சிருக்கணும்." என்று புலம்பும் போதே மெலிதான சிரிப்பும் எழுந்தது.
குளித்து முடித்து வெளியில் எட்டிப் பார்த்த இன்னிலா, அறையில் ஈஷ்யுகன் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தாள்.
அந்நேரம் வேலையாள் டீ - ட்ரேயுடன் வந்து கதவைத் தட்ட, அதனை வாங்கி தனக்கு ஒரு கப்பை ஊற்றிக் கொண்டு பால்கனியில் சென்று நின்றாள்.
இங்கிருந்த இந்த இரண்டு நாட்களில், வீட்டின் நடைமுறை சற்றே பழகி விட்டது. நேரம் தவறாமல், டீ, ஜூஸ், பழங்கள் என அனைத்தும் அவள் அறைக்கு வந்து விடும். உணவு தயாரானதும் அவளை வேலையாள் வந்து அழைப்பு விடுத்து விடுவார்.
இரண்டு செஃப்களை வேலைக்கு அமர்த்தி இருந்தான். தலையைத் துவட்டியபடி தேநீரை அருந்திக் கொண்டிருந்தவளின் பின்னால் ஆடவனது ஸ்பரிசம் உணர, உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு வியர்வையைத் துடைத்தபடி அவளை நெருங்கி நின்றான் ஈஷ்யுகன்.
அவனது நெருக்கம் இதயத்தைப் படபடக்க வைக்க, "உங்களுக்கு டீ?" எனக் கேட்டாள்.
பின்னிருந்தே அவள் கையில் வைத்திருந்த தேநீர் கோப்பையை அவள் கையைப் பிடித்தே அவனும் உறிஞ்சினான்.
"ம்ம். சுகர் அதிகம் போட்டுட்டியோ" சந்தேகமாய் அவன் கேட்டதில், சிவந்து போனவள், "வேற கப்ல எடுத்துட்டு வரேன்" என்று அவனை நிமிர்ந்து பாராமல் நகர எத்தனிக்க, அவளால் நகர தான் இயலவில்லை.
ஒரு கையால் அவள் நகர இயலாதவாறு அவளை இடித்தவாறு பால்கனி கம்பியைப் பிடித்துக் கொண்டவன், அவனது மார்பு முழுதும் அவள் முதுகைத் துளைப்பது போல நெருங்கி நின்று, மறுகையால் அவள் கையில் வைத்திருந்த கப்பைப் பிடித்துக் குடிக்கத் தொடங்க, அவளுக்கு தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்தது.
ஒவ்வொரு முறை அவன் தேநீரை சுவைக்க முன் வரும் போதும், அவனது கன்னம் அவள் கன்னத்தோடு உரசிச் சென்றது.
ட்ரிம் செய்திருந்தவனின் குட்டி குட்டி தாடி அவள் கன்னத்தைப் பதம் பார்க்க, மெல்லிய எரிச்சலைக் கொடுத்தது.
ஆனால், அந்த எரிச்சலில் ஒரு வித இனிமை இருப்பதை உணர்ந்தவளுக்கு கன்னத்தில் புது இரத்தம் பாய்ந்தது போல செங்கொழுந்தாய் சிவந்து போனாள்.
"நீ குடிக்கல?" ஹஸ்கி குரலில் அவள் செவிமடலில் மூச்சுக்காற்று உரச அவன் வினவினான்.
சிலிர்த்து குறுகிய இன்னிலா, "நான் அப்பறம் குடிச்சுக்குறேன்." என்றாள் வார்த்தைக்கும் வலிக்கும்படி.
"சேர்ந்தே குடிக்கலாம்..." என்றவன், அவள் கையில் இருந்த குவளையை அவளது இதழ்களுக்கு அருகில் கொண்டு செல்ல, வேறு வழியற்று தேநீரை அருந்தியவளுக்கு, வெட்கம் பிய்த்துத் தின்றது.
"ஃபர்ஸ்ட் குடிச்சத விட இது டேஸ்ட் அதிகம்ல?" கேள்வி போல வந்த ஆடவனின் குரலில், அதரங்களை அழுந்தக் கடித்தவள், "ஒரே மாதிரி தான் இருக்கு" என்றாள் எழுந்த சில்லென்ற உணர்வை ஒப்புக்கொள்ள இயலாமல்.
"ரியலி? அப்போ கொஞ்சம் ஸ்வீட் கம்மியா தான் இருக்கா." மீண்டுமொரு ஒரு குறுகுறுப்பு அவனது கேள்வியில்.
பதில் கூற தெரியாமல் "ஆம்" என தலையாட்டிட, விஷமப் புன்னகை பூத்தவன்,
"நான் ஒர்க் அவுட் பண்ணிட்டு ஸ்வெட் ஆகி வந்தேன் ஸ்வீட்மூன் சோ... என் லிப்ஸ்ல இருக்குற சால்ட்னெஸ் 'டீ'ல இருக்குற ஸ்வீட்னெஸை கம்மி பண்ணிடுச்சு. பட் நீ இப்போ தான் பிரெஷா குளிச்சு இருக்க. உன் பேர்லேயே ஸ்வீட் இருக்குறனால நான் குடிக்கும் போது உன் லிப்ஸோட ஸ்வீட்னெஸ் எக்ஸ்டராவா தெரியுது. காட் மை பாயிண்ட்" என்று வெகு தீவிரமாய் விளக்கம் கூறி, அவளது மூக்கு நுனி சிவப்பதை கண்ணெடுக்காமல் ரசித்தான்.
இத்தகைய விளக்கத்தை எதிர்பாராத இன்னிலாவிற்கு நாணம் மூச்சை அடைத்தது.
கணவனின் கள்ளப் பேச்சிலும், மென்மையாய் தன்னை கையாளும் விதத்திலும் இளகிக் கொண்டிருந்தாள் பாவை.
திருமணம் நன்முறையில் நடைபெற்றதில் இன்னிலாவின் பெற்றோருக்கு மனநிறைவு. சட்டென அனைத்தும் நடந்து முடிந்தவாறு இருந்தாலும், இனி மகளின் வாழ்க்கை நன்றாக அமையும் என நம்பிக்கை கொண்டனர்.
அந்த அளவு ஈஷ்யுகன் மீதான நன்மதிப்பு அதிகரித்தது.
இளைய மகள்களோ "மாமா மாமா" என ஈஷ்யுகனின் மீது அதிக பாசம் வைத்திருக்க, அதற்கு குறைவில்லாமல் அவனும் அவர்களை அன்பாய் நடத்தினான்.
'உண்மையில் தான் இந்த சிடுமூஞ்சி சின்னப்பனைத் தான் திருமணம் செய்திருக்கிறோமா? அல்லது இவரை க்ளோன் எதுவும் செய்து விட்டார்களா' என்ற சந்தேகத்திலேயே அன்றைய நாள் கழிந்தது இன்னிலாவிற்கு.
இரவு புதுமண தம்பதிகளுக்காக முதலிரவு அறைத் தயாராக, ஜீவித் தான் முன்னே நின்று அனைத்தும் செய்தான். அவனுக்கும் நண்பனின் திருமணத்தை எண்ணி மகிழ்வே. நிமிஷாவின் நினைவு அவ்வப்பொழுது வாட்டினாலும், தோழனுக்காக மனதைத் தேற்றிக்கொண்டான்.
அறைக்கு வந்த ஈஷ்யுகன் தான், "என்னடா இது?" என அறையில் இருந்த அலங்காரங்களைப் பார்த்து கேட்க,
"ஃபர்ஸ்ட் நைட் செட்டப்டா. தெரியாத மாதிரி கேட்குற" என அவன் வயிற்றில் குத்திய ஜீவித்தைக் கண்டு புன்னகைத்தான்.
மனத்திலோ, 'ம்ம்க்கும்... இதை பார்த்து அவள் ஓடாம இருந்தா சரி...' என்று முணுமுணுத்துக் கொள்ள, "என்னடா?" எனக் கேட்டதும், "ப்ச் அவளுக்கு அடிபட்டு இருக்கு. இப்போ இது தேவையா" என லேசாய் முறைத்ததில், "கேட்கணும்ன்னு நினைச்சேன். ஏன் அடிபட்டுருக்கு அவளுக்கு" என்றான் அப்போது தான் சந்தேகம் வந்து.
"ப்ச் சூசைட் அட்டெம்ப்ட்டா." என்று வெகு சலிப்பாய் கூற, ஜீவித் அதிர்ந்தான்.
"என்னைக் கல்யாணம் பண்ணியே ஆகணும்ன்னு படிக்கட்டுல இருந்து உருண்டு சூசைட் பண்ணிக்க போய்ட்டா. அப்பறம் காப்பாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்" என்று பிசிறு இல்லாமல் உருட்ட, "அடப்பாவமே" என்று வாயில் கை வைத்தான் ஜீவித்.
"ஆனா, அவள் ரொம்ப அமைதியாச்சேடா. அவளுக்கு எப்படி லவ் வந்துச்சு" என்று ஜீவித் புரியாமல் கேட்க, "அதை அவள்கிட்ட தான் கேட்கணும்" என்று தோளைக் குலுக்கினான்.
இன்னிலாவை அலங்காரம் செய்த நீலவேணியிடம் மறுக்கவும் இயலாமல் தவித்திட, உடல் வேறு அசதியாக இருந்தது.
இன்னும் காயங்கள் முழுதாய் சரி ஆகவில்லை. தோழியின் இழப்பையும் முழுதாய் மனது ஏற்கவில்லை. இந்நிலையில் திருமணமே அதிகப்படி. அதிலும் கட்டாயப்படுத்தி ஒரு ஒப்பந்தத்திற்காக நடந்து முடிந்த திருமணத்திற்கு இதெல்லாம் அவசியமா என்றிருந்தது.
ஆனால், கணவன் தான் நடிக்க வேண்டும் என்று விட்டானே! அதில் நொந்து அவளும் அமைதியாக இருந்து விட்டாள்.
அன்று இரவே, அவளது குடும்பத்தார் திருச்சி செல்வதாக இருக்க, இன்னிலாவிற்கு பயம் அப்பிக்கொண்டது. இவனுடன் தனியாகவா? எனப் பதறியவள்,
"ஏம்மா உடனே கிளம்புறீங்க இருந்துட்டுப் போங்க" என்று நீலவேணியிடம் கெஞ்ச, அந்நேரம் ஈஷ்யுகனும் ஜீவித்தும் பேசியபடி அங்கு வந்தனர்.
அவளது கண்ணில் இருந்த கலவரத்தைக் கண்டுகொண்ட ஈஷ்யுகன் அவளை நோக்கி அர்த்தப்பார்வை வீச, நீலவேணியோ "ஏற்கனவே ரெண்டு நாளுக்கு மேல ஆகிடுச்சு இனி. உன் தங்கச்சிங்களுக்கும் ஸ்கூல் இருக்குல்ல. நீயும் மாப்பிள்ளையும் மறுவீட்டுக்கு வாங்க" என்றார்.
ஈஷ்யுகன் தான், "இங்க கொஞ்சம் முடிக்க வேண்டிய வேலை இருக்கு அத்தை. கூடிய சீக்கிரம் எல்லாம் முடிஞ்சதும் வரோம்" என்று பதில் அளித்திட அதற்கு மேல் அவனை வற்புறுத்த வழியில்லாது போனது.
பின் குடும்பத்தார் கிளம்பி விட்டதும், ஜீவித்தும் "என்ஜாய் மச்சி" என்று கண் சிமிட்டி விட்டு கிளம்பிட, இன்னிலாவிற்கு இதயத்துடிப்பு வெளியில் கேட்டது.
அவள் இதுவரை இருந்த அறையிலேயே அங்கும் இங்கும் வேலை செய்வது போல சுற்றிக்கொண்டிருந்தாள்.
அவசியமே இல்லாமல் ட்ரெஸ்ஸிங் டேபிளைத் திறப்பதும், அதில் இருக்கும் பொருட்களை மாற்றி வைப்பதும், பின் ஒரு ஹேர் பின்னை கூட விடாமல் எடுத்து வைப்பதுமாக சில்லிட்டுப் போன மனதை அடக்க வழி தெரியாமல் பயத்தில் ஏதேதோ செய்ய, அந்த அறையை விட்டு நகராமல் கையைக் கட்டிக்கொண்டு அவளது தவிப்புகளை வேடிக்கைப் பார்த்தான் ஈஷ்யுகன்.
"ரூமை க்ளீன் பண்ணி முடிச்சுட்டியா?" ஆழமாய் வந்த அவனது குரலில் திடுக்கிட்டவள், "ஹான்... அது அது... ப... பண்ணிட்டேன்." என்று தலையாட்டிட, "சரி அப்போ வா... நம்ம ரூமை கொஞ்ச நேரம் க்ளீன் பண்ணலாம்." என்றான் விஷமத்துடன்.
நெஞ்சில் கை வைத்துக் கொண்டவள், "இல்ல சார். இங்கயே இருக்கேன். நீங்க போங்க" என்று வேகமாக பதில் கூற, "சார்?" எனக் கேட்டவனின் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது.
"இங்க யாரும் இல்லைல. நடிக்கத் தேவை இல்லையே" அவள் தலையைக் குனிந்து கொண்டு கூறியதில்,
"தனியா இருக்கும் போதும் அதே நடிப்பை ஃபாலோ பண்ணுனா தான் எல்லாரும் இருக்கும்போது அது சரளமா வரும் ஸ்வீட்மூன்." என்றபடி அவளை நோக்கி அழுத்த நடையுடன் முன்னேறினான்.
"சரிங்க யுகி. நான் ஃபாலோ பண்ணிக்கிறேன். இந்த ரூம்ல இருந்தே..." என்று மேலும் கூறும் முன் அவளைக் கையில் மிதக்க விட்டிருந்தான் ஆடவன்.
அவளோ திகைத்துப் பதறி அழுத்தம் அதிகமாகி மயங்கியே விட்டாள்.
"ஏய் ஏய் மூன்..." என அவளை எழுப்பிட அவளிடம் அசைவே இல்லை.
'இவளை வச்சுக்கிட்டு' என்று புலம்பிக்கொண்டவன் அவனது அறைக்குத் தூக்கிச் சென்றான்.
மலர்களால் நிறைந்திருந்த மஞ்சத்தில் பெண்ணவளைக் கிடத்தியவன், அவளை உச்சி முதல் பாதம் வரை விழிகளால் வருடினான்.
சிவப்பு நிற மெல்லிய புடவையில் செழிப்பாய் காட்சியளித்த பாவையின் வறண்ட இதழ்கள் அவனை உசுப்பேற்றியது.
ஆள்காட்டி விரலால், அவ்விதழ்களை மெல்ல வருடிக் கொடுத்தவன், "யூ டெம்ப்ட் மீ." என்று அவளையே குற்றம் சொன்னான் சலிப்பாக.
அவளது கையில் இருந்த காயம் அவனது எண்ணத்தை சிதறடிக்க, அவனால் ஏற்பட்ட காயத்தை மென்மையாய் நெருடியவன், பெருமூச்சுடன் ஆயின்மெண்ட்டை எடுத்து வந்தான்.
மறுநாள், உறக்கம் கலைந்து எழுந்த இன்னிலாவிற்கு மூச்சு முட்டியது. "என்னது இது... கரும்பு மெஷினுக்குள்ள மாட்டிக்கிட்ட மாதிரி உடம்பே வலிக்குது." என்ற குழப்பத்துடன் கண்ணைக் கசக்கி விழித்தவள் அதிர்ந்து போனாள்.
ஈஷ்யுகன் தான் அவளை இறுக்கமாக அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தான்.
அவளது ஆடைகள் வேறு கலைந்திருந்ததில், அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது.
வெகு நேரமாய் எழ முயற்சி செய்தவளுக்கு பாவம் அவனது சுண்டு விரலைக் கூட அசைக்க இயலவில்லை. வெகு அண்மையில் தெரிந்த ஆணவனின் அழுத்த முகமும், கன்னத்தைத் தீண்டி காயப்படுத்திய சூடான மூச்சுக்காற்றும் அவளை என்னவோ செய்தது.
அவன் வேறு சட்டை இல்லாமல், வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு வெற்று மார்போடு அவளை அணைத்திருந்தான்.
கழுத்தில் ஊர்ந்த அவன் அணிவித்த மாங்கல்யத்தையும், உரிமையான அவனது அணைப்பில் அடங்கிப்போன தனது மேனியையும் நிந்தித்துக் கொண்டாள்.
"யுகி" ஹஸ்கி குரலில் இன்னிலா அழைக்க, "ம்ம்" எனப் புருவத்தைச் சுருக்கிக் கொண்டவன், இன்னும் வாகாக அவளை நெருங்கி உறக்கத்தைத் தொடர, "யுகி கையை எடுங்க. எந்திரிக்கணும்." என்றாள் மெல்லமாக.
"எந்திரிச்சு என்ன பண்ணப் போற. இன்னைக்கு ஆபிஸ் போற மூட் இல்லை. கெட் சம் ஸ்லீப்." என்றான் கண்ணைத் திறவாமல்.
அவளோ நெளிந்தபடி, "வாஷ்ரூம் போகணும்" என்றிட, பட்டென விலகியவன், "போயிட்டு சீக்கிரம் வா" என்று குப்புறப்படுத்து தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொள்ள, "என்னது வரவா?" என்று மிரண்டாள்.
வேகமாக எழுந்தவளின் புடவை தலைப்பு கீழே சரிய, அதனை அவசரமாகப் பிடித்து தன்னை மறைத்துக் கொண்டவளுக்கு அதிர்ச்சி பரவியது.
'புடவையை பின் குத்தி தான கட்டி இருந்தேன். எப்படி அவுந்துச்சு.' என்ற பீதியில், சுகமாய் உறங்கிக்கொண்டிருந்தவனை மிரட்சியுடன் பார்த்தாள்.
உதட்டைப் பிதுக்கி கண்ணில் நீர் வைத்தவள், "ஏன் இப்படி பண்ணுனீங்க?" என்று தேம்ப,
திடீரென கேட்ட அழுகுரலில் கண்ணைக் கசக்கிய படி அவள் புறம் திரும்பியவன், "ஏய் எதுக்குடி காலைலயே ஒப்பாரி வச்சுட்டு இருக்க" என்றான் கடுப்பாக.
மூக்கை உறிஞ்சியவள், "அக்ரிமெண்ட் மேரேஜ், லவ் பண்ற மாதிரி நடிக்கலாம்ன்னு தான சொன்னீங்க. இப்போ ஏன் இப்படி பண்ணுனீங்க. அதுவும் நான் சுயநினைவுல இல்லாதப்ப." என்று கேவியதில், குழப்பத்துடன் எழுந்தவன், அருகில் இருந்த டீ - ஷர்ட்டை அணிந்து கொண்டான்.
அதில் தலையைக் குனிந்து கொண்டு கண்ணீர் வடித்தவளிடம், "ஹே ஸ்வீட்மூன். வாட்ஸ் ராங் வித் யூ?" என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்து.
அவளோ தேய்ந்து போன ரெக்கார்டராக "ஏன் இப்படி பண்ணுனீங்க" என்று ஆரம்பிக்க, "ஏய் பைத்தியம். என்ன செஞ்சேன்னு சொல்லிட்டு புலம்பு" என்று உறுமிட, அவள் இன்னும் சத்தமாக அழுதாள்.
அவனோ சில நொடிகள் அவளைக் குழப்பத்துடன் பார்த்து விட்டு, பின் அவள் புடவையை மார்போடு அணைத்துப் பிடித்திருந்த கோலம் கண்டு, அவளது எண்ணத்தைப் புரிந்து கொண்டவன், பட்டென புன்னகைத்தான்.
கட்டிலுக்கு அருகில் டேபிளில் இருந்த ஆயின்மெண்ட்டை எடுத்து அவள் மீது விட்டெறிந்தவன், "உன்னை ரேப் பண்ணனும்ன்னா, எதுக்குடி கல்யாணம் பண்றேன். உன்னைத் தூக்கிட்டு வந்து நினைச்சதை முடிக்க, எனக்கு ரொம்ப நேரம் ஆகாது மூன். உனக்கு ஆயின்மெண்ட் தான் போட்டு விட்டேன். தேவை இல்லாமல், நீயே என்னைத் தூண்டி விட்டு உன்னை ரேப் பண்ண வச்சுடாத" என்றான் அழுத்தம் திருத்தமாக.
அவள் தான் கண்ணீரைக் கூட துடைக்காமல் திகைத்துப் பின் அசடு வழிந்தாள்.
' ச்சே... அவசரப்பட்டுட்டோமே' என நொந்தாலும், வேகமாக "ஆயின்மெண்ட் நானே போட்டுப்பேன். நீங்க ஏன் போட்டு விட்டீங்க எங்க போட்டு விட்டீங்க?" எனப் பதறி கேட்டாள்.
"எங்க எங்க போட்டேன்னு விளக்கமா சொல்லவா? இல்ல தொட்டுக் காட்டவா?" சீண்டலாய் கேட்டதில்,
"இல்ல இல்ல வேணாம்" என்றவளுக்கோ ஐயோ என்றிருந்தது.
"அடிச்ச எனக்கு தெரியும் எங்க எங்க காயமாகி இருக்கும்ன்னு... தொடர்ந்து மருந்து போட்டா தான் காயம் ஆறும். அதான் போட்டு விட்டேன்." என்றிட, அவனால் காயமானது ஒரு புறம் வலித்தாலும், அக்காயங்கள் இருக்கும் இடத்திலெல்லாம் மருந்து போட்டு விட்டானா என்றெண்ணி தடுமாறவும் செய்தாள்.
"அதுக்காக சேரியை ரிமூவ் பண்ணிட்டா..." எனப் பேச இயலாமல் தவிக்க, அரை நொடிக்கும் அதிகமாக அவளை அமைதியாக ஏறிட்டவன், பாவையை அப்படியே தூக்கி தனது மடியில் அமர வைத்தான்.
அந்த திடீர் ஆக்கிரமிப்பில் அவளது புடவை தலைப்பு கீழே சரிய, அவளோ கையால் தன்னை மறைத்துக் கொண்டாள்.
திகைத்த அவளது விழிகளை நேராய் பார்த்தவன், "இங்க பாரு... என் முன்னாடி நீ ஒட்டுத்துணி இல்லாம இருந்தாக்கூட, நீயா என் டச்சிங்க அக்செப்ட் பண்ற வரைக்கும், உன் கூட லவ் மேக் பண்ற ஐடியா எனக்கு இல்லை. உனக்கு மருந்து போட்டப்ப நான் தப்பாவும் யோசிக்கல. நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம். இனி தினமும் நான் தான் உனக்கு மருந்து போட்டு விடுவேன். என்னை வக்கிரம் புடிச்சவன்னு கூட நினைச்சுக்கோ ஐ டோன்ட் கேர்." என்று தோளைக் குலுக்கினான்.
இன்னிலா தான் பேச்சிழந்து போனாள்.
மெல்ல அவனை விட்டு விலகி கட்டிலில் இருந்து இறங்கியவள், அவன் முகம் காணாமல் குளியலறைக்குள் புகுந்து கொள்ள, அவன் மீண்டும் கட்டிலில் விழுந்தான்.
'இடியட்... இவளால நைட்டும் தூங்க முடியல. பகல்லையும் தூங்க முடியல. வச்சுருக்காங்க பேர் ஸ்வீட்மூனாம். ஹாட்மூன்னு வச்சிருக்கணும்." என்று புலம்பும் போதே மெலிதான சிரிப்பும் எழுந்தது.
குளித்து முடித்து வெளியில் எட்டிப் பார்த்த இன்னிலா, அறையில் ஈஷ்யுகன் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தாள்.
அந்நேரம் வேலையாள் டீ - ட்ரேயுடன் வந்து கதவைத் தட்ட, அதனை வாங்கி தனக்கு ஒரு கப்பை ஊற்றிக் கொண்டு பால்கனியில் சென்று நின்றாள்.
இங்கிருந்த இந்த இரண்டு நாட்களில், வீட்டின் நடைமுறை சற்றே பழகி விட்டது. நேரம் தவறாமல், டீ, ஜூஸ், பழங்கள் என அனைத்தும் அவள் அறைக்கு வந்து விடும். உணவு தயாரானதும் அவளை வேலையாள் வந்து அழைப்பு விடுத்து விடுவார்.
இரண்டு செஃப்களை வேலைக்கு அமர்த்தி இருந்தான். தலையைத் துவட்டியபடி தேநீரை அருந்திக் கொண்டிருந்தவளின் பின்னால் ஆடவனது ஸ்பரிசம் உணர, உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு வியர்வையைத் துடைத்தபடி அவளை நெருங்கி நின்றான் ஈஷ்யுகன்.
அவனது நெருக்கம் இதயத்தைப் படபடக்க வைக்க, "உங்களுக்கு டீ?" எனக் கேட்டாள்.
பின்னிருந்தே அவள் கையில் வைத்திருந்த தேநீர் கோப்பையை அவள் கையைப் பிடித்தே அவனும் உறிஞ்சினான்.
"ம்ம். சுகர் அதிகம் போட்டுட்டியோ" சந்தேகமாய் அவன் கேட்டதில், சிவந்து போனவள், "வேற கப்ல எடுத்துட்டு வரேன்" என்று அவனை நிமிர்ந்து பாராமல் நகர எத்தனிக்க, அவளால் நகர தான் இயலவில்லை.
ஒரு கையால் அவள் நகர இயலாதவாறு அவளை இடித்தவாறு பால்கனி கம்பியைப் பிடித்துக் கொண்டவன், அவனது மார்பு முழுதும் அவள் முதுகைத் துளைப்பது போல நெருங்கி நின்று, மறுகையால் அவள் கையில் வைத்திருந்த கப்பைப் பிடித்துக் குடிக்கத் தொடங்க, அவளுக்கு தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்தது.
ஒவ்வொரு முறை அவன் தேநீரை சுவைக்க முன் வரும் போதும், அவனது கன்னம் அவள் கன்னத்தோடு உரசிச் சென்றது.
ட்ரிம் செய்திருந்தவனின் குட்டி குட்டி தாடி அவள் கன்னத்தைப் பதம் பார்க்க, மெல்லிய எரிச்சலைக் கொடுத்தது.
ஆனால், அந்த எரிச்சலில் ஒரு வித இனிமை இருப்பதை உணர்ந்தவளுக்கு கன்னத்தில் புது இரத்தம் பாய்ந்தது போல செங்கொழுந்தாய் சிவந்து போனாள்.
"நீ குடிக்கல?" ஹஸ்கி குரலில் அவள் செவிமடலில் மூச்சுக்காற்று உரச அவன் வினவினான்.
சிலிர்த்து குறுகிய இன்னிலா, "நான் அப்பறம் குடிச்சுக்குறேன்." என்றாள் வார்த்தைக்கும் வலிக்கும்படி.
"சேர்ந்தே குடிக்கலாம்..." என்றவன், அவள் கையில் இருந்த குவளையை அவளது இதழ்களுக்கு அருகில் கொண்டு செல்ல, வேறு வழியற்று தேநீரை அருந்தியவளுக்கு, வெட்கம் பிய்த்துத் தின்றது.
"ஃபர்ஸ்ட் குடிச்சத விட இது டேஸ்ட் அதிகம்ல?" கேள்வி போல வந்த ஆடவனின் குரலில், அதரங்களை அழுந்தக் கடித்தவள், "ஒரே மாதிரி தான் இருக்கு" என்றாள் எழுந்த சில்லென்ற உணர்வை ஒப்புக்கொள்ள இயலாமல்.
"ரியலி? அப்போ கொஞ்சம் ஸ்வீட் கம்மியா தான் இருக்கா." மீண்டுமொரு ஒரு குறுகுறுப்பு அவனது கேள்வியில்.
பதில் கூற தெரியாமல் "ஆம்" என தலையாட்டிட, விஷமப் புன்னகை பூத்தவன்,
"நான் ஒர்க் அவுட் பண்ணிட்டு ஸ்வெட் ஆகி வந்தேன் ஸ்வீட்மூன் சோ... என் லிப்ஸ்ல இருக்குற சால்ட்னெஸ் 'டீ'ல இருக்குற ஸ்வீட்னெஸை கம்மி பண்ணிடுச்சு. பட் நீ இப்போ தான் பிரெஷா குளிச்சு இருக்க. உன் பேர்லேயே ஸ்வீட் இருக்குறனால நான் குடிக்கும் போது உன் லிப்ஸோட ஸ்வீட்னெஸ் எக்ஸ்டராவா தெரியுது. காட் மை பாயிண்ட்" என்று வெகு தீவிரமாய் விளக்கம் கூறி, அவளது மூக்கு நுனி சிவப்பதை கண்ணெடுக்காமல் ரசித்தான்.
இத்தகைய விளக்கத்தை எதிர்பாராத இன்னிலாவிற்கு நாணம் மூச்சை அடைத்தது.
கணவனின் கள்ளப் பேச்சிலும், மென்மையாய் தன்னை கையாளும் விதத்திலும் இளகிக் கொண்டிருந்தாள் பாவை.