அத்தியாயம் 5
கனகா கூறிய செய்தியில் அதிர்ந்து போன இன்னிலா, "ஏன் கனகாம்மா பொய் சொல்றீங்க. நீங்க ஞாயித்துக்கிழமை நைட்டு எட்டரை மணிக்கு வந்தீங்க தான." என்று பரிதாபத்துடன் வினவ,
"ஐயா! நீங்க அடிச்சதுல இந்தப் பிள்ளைக்கு மண்டைக்கோளாறு ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன். அதான் என்னை மாட்டி விடுது. இனிம்மா... நான் எப்ப வீட்டுக்கு வந்தேன். திருப்பதி போறேன்னு சொல்லிட்டுப் போனேன் தான." என்று கனகா குழம்பியபடி பேச,
"திருப்பதி போறேன்னு சொல்லிட்டுத் தான் போனீங்க. ஆனா, சீக்கிரமே வந்துட்டேன்னு சொன்னீங்களே. சார் சத்தியமா வந்தாங்க சார்." என்றாள் ஆதரவற்ற தொனியில்.
"இதுல யார் சொல்றது உண்மைன்னு நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க." என்று இடுப்பில் கை வைத்து இருவரையும் தீயாய் முறைத்த ஈஷ்யுகனிடம்,
"ஐயா... நிஜமாவே நான் வீட்டுக்குப் போகலைங்கய்யா. எட்டரை மணிக்குப் போய் சாப்பாடு செஞ்சு எப்போ இவங்க சாப்புடுறது சொல்லுங்க." என்று தனது பக்க வாதத்தை வைத்தவர், "இனி கண்ணு, பயத்துல பேசுதுய்யா." என்றார்.
"இல்ல இல்ல... நான் ஏன் பொய் சொல்லணும்." என்ற இன்னிலாவிற்கு தனது பக்க நியாயத்தைக் கூற கூட ஆற்றல் இல்லை.
உடலில் பல இடங்களில் வீங்கி கன்றிப் போய் விண் விண்ணென்ற வலியைக் கிளப்பியது. ஆகாரமற்ற உடம்பில் பேசுவதற்கு கூடத் தெம்பு இல்லை. அடி வயிறு வேறு கொடூரமாக வலித்தது. எப்போது வேண்டுமானாலும் மாதவிடாய் ஆவதற்கான அறிகுறிகள் வேறு. இதில் எங்கிருந்து பேசுவது... வாழ்க்கையே சிறைச்சாலையில் முடிந்து விடும் என்ற முடிவில் தொய்ந்து அமர்ந்து விட்டாள்.
அந்நேரம் மிதிலேஷ் உள்ளே வந்து ஈஷ்யுகனின் காதில் ஏதோ ஓதிட, ஈஷ்யுகன் கண்ணைக் காட்டியதும் அவன் வெளியில் சென்றான். கழுத்தைத் தேய்த்து ஏதோ யோசித்தவன், சுருண்டிருந்த பாவையைப் பார்த்து, "ஏய் எந்திரி" என்றான்.
அடுத்து என்ன செய்யப் போகிறானோ என்ற அச்சம் அதிகமாக, இனி என்னவானாலும் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற விரக்தியே எழுந்தது அவளுக்கு.
தட்டுத் தடுமாறி எழுந்து நின்றவளின் கன்னம் பற்றி திருப்பி அவனைப் பார்க்க வைத்தான்.
சோர்வும் பசி மயக்கமும் வலியின் வீரியமும் ஒரு சேர தாக்கினாலும் அதில் மரண பயமே எஞ்சி நின்றது.
"நீ சொல்றது உண்மையா?" விழி இடுங்க அவன் கேட்டதில், கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.
"என் அப்பா, அம்மா மேல சத்தியமா உண்மை தான் சார். ஆனா நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும். விட்டுருங்க சார். என்னை ஜெயில்ல போட்டுடுங்க. இதுக்கு மேல அடிச்சா செத்துடுவேன். இங்கேயே செத்து நீங்க என்னை வீடியோ எடுத்துப் போட்டு செத்தும் அசிங்கப்படுறதுக்கு ஜெயிலுக்குப் போற வரை உசுரைக் கைல பிடிச்சுக்குறேன்." என்றவளின் வார்த்தைகளில் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அழுத்தம் அதிகம் தெரிந்தது.
"நீ எங்க சாகணும்ன்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்." சற்றும் அவளது அழுத்தத்திற்குக் குறைவில்லாமல் கூறியவன், திரும்பி கனகாவைப் பார்த்தான்.
"என்ன திடீர்ன்னு திருப்பதிக்கு விசிட்?" சட்டென அவன் கேள்வி கேட்டதும் விழித்தவர் "வேண்டுதலுங்கய்யா." என்றார் தயக்கமாக.
"என்ன வேண்டுதல்? என் தங்கச்சிக்கு விஷம் வைக்கிற வேண்டுதலா?" என்றவனின் கேள்வியில் ஆத்திரம் மின்னியது.
அவரோ திகைத்து "ஐயா... என்னைப் போய் சந்தேகப்படுறீங்களே நிம்மிம்மா என் பொண்ணு மாதிரி!" என்றிட,
"பொண்ணு மாதிரின்னா, அவள் சொத்துல பங்கு கேட்பீங்களோ?" மீண்டும் ஒரு நக்கல் வினா.
"அய்யயோ இல்லைங்கய்யா." என்று வேகமாக பதறும் போதே வெளியில் சென்ற மிதிலன் மீண்டும் வந்தான். அவன் கையில் இப்போது இரும்பு ராட் இருந்தது.
அதனைக் கண்டு உயிரே போய் விட்டது இன்னிலாவிற்கு.
"கனகாம்மா... இந்தக் கம்பில அடிச்சா அதுவும் மிதிலன் அடிக்கிற ஃபோர்ஸ்க்கு நீங்க வெறும் மூணு அடிக்கு மட்டும் தான் உயிரோட இருப்பீங்க. நாலாவது அடில பேச்சு மூச்சு இருக்காது. சோ முதல் அடியிலேயே உண்மையைச் சொல்லிட்டா வயசான காலத்துல எலும்பு உடையாம தப்பிக்கலாம்." என்றான் அசட்டையாக.
கனகாவிற்கு அடி வாங்காமலேயே உடல் வலித்த உணர்வு. பயம் மெல்ல மெல்ல அவரைத் தாக்க, "ஐயா நான் எந்த உண்மையை சொல்லணும். எனக்குப் புரியலைங்கய்யா. நான் எதையும் மறைக்கல" என்று அழுது மன்றாடி, "பதினஞ்சு வருஷமா நீங்க போட்ட சோத்தை சாப்பிட்டு இருக்கேன். உங்களுக்கு துரோகம் பண்ணுனா அது எனக்கே துரோகம் பண்ணிக்கிட்ட மாதிரிங்கய்யா." என்று கேவினார்.
"மிதிலன் டைம் வேஸ்ட் பண்ணாம ஸ்டார்ட் பண்ணு." என்றதில், அவன் ஓங்கி ஒரு அடி அடிக்க, கனகாவிற்கு கிறுகிறுவென வந்து விட்டது. அவரை அடித்த அடியில் பயந்து இன்னிலா மடங்கி அமர்ந்து காலைக் குறுக்கிக்கொள்ள, மிதிலன் அடுத்த அடியை இன்னும் பலம் கூட்டி அடித்தான்.
கனகா வலியில் கதறி துடிக்க, இன்னிலாவால் அதனைக் கண் கொண்டு பார்க்க இயலவில்லை.
"சார் வேணாம் சார்" என்று நிமிர்ந்து ஆடவனிடம் பேசத் தொடங்க, "உனக்கு ஒரு அடி குடுக்க சொல்லவா." என்று அடிக்குரலில் சீறினான் ஈஷ்யுகன்.
'அடிக்க வரும்போதே அல்பாயுசில் போய்டுவேனே' என்ற மிரட்சியுடன் வாயை மூடிக்கொண்டவளது மனம் கனகாவிற்காக மன்றாடியது.
மூன்றாவது அடிக்கு கையை ஓங்கும் போது கனகா, "ஐயா வேணாம்... அடிக்காதீங்க. நான் உண்மையை சொல்லிடுறேன்" என்று நடுங்கிக்கொண்டு பதறியவர், "விஷம் வச்சது நான் தான். என்னை விட்டுடுங்க. தெரியாம பண்ணிட்டேன்." என்று ஈஷ்யுகனின் காலில் விழுக, அவன் புழுவைப் போல அவரைத் தள்ளி விட்டான்.
"துரோகி... உன்னை அம்மா ஸ்தானத்துல பார்த்த பொண்ணுக்கு விஷம் வச்சுருக்கியே. ச்சீ... நீ எல்லாம் ஒரு பொம்பள." என்று அருவருப்பாய் முகத்தைச் சுளித்தவன், "எதுக்காக இப்படி செஞ்ச?" என்று சீறினான்.
கனகாவிற்கு நெஞ்சில் கடும் வலி ஏற்பட, "சங்கர நாராயணன் ஐயா தான், அவரு சொல்லி தான் நான்..." என்று பேச இயலாமல் மூச்சு வாங்கியவர், "எப்படினாலும் நிம்மியையும் இவளையும் கொலைப் பண்ண தான் போறாங்க. பண்ணிடுவாங்க" என்று கூறியபடியே அடங்கிப்போனது அவரது இத்தனை வருட ஆட்டமும்.
கனகாவைப் பற்றி அறிந்து அதிர்ந்து போன இன்னிலாவிற்கு, அவர் துடித்து இறந்ததை நேரில் கண்டதில் மயக்கமே வரும் போல இருந்தது.
ஆனாலும் மயங்காமல் வீம்பாகக் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டாள். தன் மீது தவறு இல்லையென இப்போதாவது ஈஷ்யுகனுக்குப் புரிந்திருக்கும் என்றாலும், இன்னும் பயம் அகலவில்லை பேதைக்கு.
மயங்கியதும், அவன் சொன்னது போன்றே வீடியோ எடுத்து விட்டால்? அந்நினைவே அவளுக்கு பயத்தீயை மூட்டியது.
ஈஷ்யுகனோ ஆத்திரம் அடங்காமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். 'பெத்த மகளைக் கொலை செய்யச் சொல்லி இருக்கிறானே அந்த நாராயண மூர்த்தி. எல்லாம் அதிகாரத் திமிர். மொத்தமா அடக்குறேன்.' என்று மனதினுள் வீசிக்கொண்டிருந்தப் புயலை அடக்க வழி இன்றி "மிதிலேஷ்" என்று கர்ஜித்தவன், "மினிஸ்டரைப் பார்க்க ஏற்பாடு பண்ணு" என்றான்.
மிதிலேஷ் உடனடியாக அங்கிருந்து விரைய, அடுத்ததாக தன்னை என்ன செய்யப் போகிறான்... என்ற பீதியில் அவன் முகத்தை அரண்டு பார்த்திருந்தப் பெண்ணைக் கண்டு முதன் முறை அவனுள் ஒரு குற்ற உணர்வு!
இதுவரை தவறிழைக்காத யாரையும் இப்படி துன்புறுத்தியது இல்லையே. அவள் அப்பாவி என்று ஒரு மனம் கூக்குரலிட்டது தான், ஆனால், இவ்வுலகத்தில் நிறம் மாறும் மனிதனின் பண்பை நன்கு அறிந்தவனுக்கு, இவளையும் நம்பத் தோன்றவில்லை.
விளைவு, அவனது அதிகபட்ச சினத்தின் வீரியத்தில் உடலிலும் மனதிலும் பெரும் அடிகளை வாங்கிக்கொண்டாள்.
"எந்திரி..." இம்முறை சற்று மென்மையாக அவன் அவளது கையைப் பிடிக்க, அவளுக்கு அது கோபத்தின் வெளிப்பாடாகவே தெரிந்தது.
"சார்... இப்பவும் நீங்க என்னை நம்பலைன்னா, என்னை ஜெயில்ல போட்டுடுங்க சார். ப்ளீஸ் வீடியோ எதுவும் எடுத்துடாதீங்க. அப்பாவுக்கு எதுவும் தெரிய வேணாம் சார். ப்ளீஸ்." என்று கெஞ்சத் தொடங்க, ஈஷ்யுகனின் முகம் இறுகிப் போனது.
"முதல்ல எந்திரி" என்றவனின் கைப்பற்றி எழப்போனவள், எழ இயலாமல் மீண்டும் கீழே விழப்போக, அவளது இடையைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டான் ஆடவன்.
"ஸ்... ஆ..." எனத் துடித்துப் பின்னால் நகர்ந்தவளுக்கு உடலில் எங்கு தொட்டாலும் வலித்தது. அவனது பெல்ட் கொடுத்த வீக்கங்கள் உடலெங்கும் பதம் பார்த்திருந்து.
செய்யாத தவறுக்காக வலியில் துடிப்பவளைப் பார்த்தவனுக்கு தன் மீதே சினம் மிகுந்தது. அந்த வலிக்குக் காரணமானவனே அதனை சரி செய்யவும் எத்தனிக்க, "ஹாஸ்பிடல் போகலாம்." என்றான்.
அதில் கண்களை விரித்தவள், "அப்போ என்னை நம்புறீங்களா. நிம்மி... நிம்மிக்கு நிஜமா நான் விஷம் வைக்கலைன்னு நம்புறீங்க தான்." எனப் பரிதாபமாகக் கேட்க,
"ம்ம். முதல்லயே தெளிவா சொல்ல வேண்டியது தான். அப்பவே இந்த ஜந்துவை விசாரிச்சு இருப்பேன்." என்று கனகாவைக் கை நீட்டிப் பேசியவன், "சாரி..." என்றிட, அவளுக்கு அதெல்லாம் கருத்தில் பதியவில்லை.
"நா... நான் ஊருக்குப் போறேன் சார். ஹாஸ்பிடல் எல்லாம் வேணாம். அப்பா வேற என்னைக் காணோம்ன்னு பதறி இருப்பாரு. என்னை விடுங்க சார்" என்றதும்,
"ஏய்... இவ்ளோ காயத்தோட ட்ராவல் பண்ணப் போறியா?" ஈஷ்யுகன் கேட்டதில்,
"ப... பரவாயில்லை சார். நான் போயிடுறேன். போற வழில காயத்துக்கு மருந்துப் போட்டுக்குறேன்." என்று ஒரு அடி எடுத்து வைத்தவளுக்கு வயிற்றில் சுளீரென வலி எடுக்க, மடங்கி அமர்ந்து விட்டாள்.
அதில் தன்னிச்சையாக அவனும் அதே போல் மடங்கி அவளருகில் அமர்ந்து விட, "என்னடி ஆச்சு?" என்று குரலில் ஒரு பதற்றத்தை ஏற்றுக் கேட்க,
"ஒ... ஒன்னும் இல்ல. எங்க எங்கயோ வலிக்குது. என்னை விடுங்க சார்" என்று மீண்டும் அதே வரிகளில் நின்றதில்,
"பைத்தியம். உன்னால நடக்கவே முடியல. இதுல என்னமோ ஊருக்கு நடந்தே போற மாதிரி விடுங்க விடுங்கன்னு புலம்பிட்டு இருக்க. உன்னை இப்ப எங்கயும் விட முடியாது." என்றவன், அவளைக் கைகளில் அள்ளிக்கொள்ள, அவளுக்கு வெடவெடத்து விட்டது.
அதில் மயங்கியே விட்டாள். 'இவ்ளோ நேரம் கோபத்துல அடிச்சப்ப மயங்காம, புருஞ்சு பேசித் தூக்குறப்ப மயங்குறா. என்ன பொண்ணோ' என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவனுக்கு இதயத்தில் ஒரு வித வலி கனன்று கொண்டே இருந்தது.
சில மணி நேரம் கழித்துக் கண் விழித்த இன்னிலாவிற்கு முதலில் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை. அதன் பிறகே இருக்கும் மருத்துவமனையில் இருப்பது புரிந்து படக்கென எழ முயன்றாள்.
கையில் ஏறிக்கொண்டிருந்த ட்ரிப்ஸ் சுருக்கென வலிக்க, "ஆ..." என வலியில் கத்தியதில், அத்தனை நேரமும் சோபாவில் சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்த ஈஷ்யுகன் பட்டெனக் கண்ணைத் திறந்து அவளருகில் சென்றான்.
"இடியட் எதுக்கு எந்திரிக்கிற. டேக் ரெஸ்ட்." என்று மீண்டும் அவளைப் படுக்க வைக்க, "நான்... நான் எப்படி இங்க வந்தேன்." என்றாள் மருண்ட விழிகளுடன்.
அதற்கு பதில் கூறாதவனாக, "உன்னைப் படுன்னு சொன்னேன்." என்று அதட்டியதில், "அப்பா என்னைப் பார்க்க வெய்ட் பண்ணிட்டு இருப்பாரு சார். நான் போகணும்" என்று மீண்டும் அதே பல்லவியைப் பாட,
"ஊஃப் உனக்கு சென்ஸ் இருக்கா இல்லையா. இப்படி உடம்பு முழுக்க அடியோட உன் அப்பாவைப் பார்க்கப் போறியா? என்ன ஆச்சுன்னு கேட்டா என்ன சொல்லுவ. நான் அடிச்சேன்னு சொல்லி என்னை வயலன்ஸ்ல உள்ள போடுவியா?" என்றான் புருவம் உயர்த்தி.
"ஐயோ இல்ல சார். நான் யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன். என்னை விட்டீங்கன்னா போதும். இதுக்கு அப்பறம் நீங்க இருக்குற திசைப்பக்கம் கூட நான் வரமாட்டேன்." என்று பதறினாள்.
"ஏன் சொல்ல மாட்ட? நியாயமா இந்நேரம் நீ என்மேல போலீஸ் கம்பளைண்ட் தான குடுக்கணும்?" கையைக்கட்டிக்கொண்டு அவன் எதிர்கேள்விக் கேட்க,
"கம்பளைண்ட் குடுத்து எந்த பிரயோஜனமும் இல்லையே சார். நீங்க ஈஸியா வெளில வந்துடுவீங்க. பணம் இருக்கு செல்வாக்கு இருக்கு. ஆனா எனக்கு அப்படி இல்ல. எனக்கு அடுத்து ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. அவங்க வாழ்க்கையும் இதனால கேள்விக்குறியாகிடக் கூடாது." என்று மெல்லிய குரலில் கூறியவனை அழுத்தமாக ஏறிட்டவன், "அப்போ எனக்கு எந்த தண்டனையும் தர மாட்டியா?" என்றான் கூர்பார்வையுடன்.
"தண்டனையா? உங்களைத் தண்டிக்கிற அளவு எனக்குப் பலம் இல்லை சார். என்னை விடுங்களேன்." அவள் மன்றாட,
"முதுகெலும்பு இல்லாத கோழை. நான் உன்னை வீடியோ எடுத்து ரிலீஸ் பண்ணிருந்தா கூட, இப்படி தான் போராட முடியாதுன்னு போயிருப்பியா?" என்றான் அடிக்குரலில்.
"ஆமா போராட முடியாது. செத்துருப்பேன்." அவள் உடனடியாய் பதில் கூற,
"உன்னை பெல்டால அடிச்சு இருக்கக் கூடாது. பெரிய பாறையா தூக்கித் தலையில போட்டு இருக்கணும்." என சீறினான்.
"வேற என்ன செய்ய சொல்றீங்க சார். இதுக்காக நான் போராடுனா எனக்கு என்ன கிடைக்கும்? ஒரு ரெண்டு நாளைக்கு சோசியல் மீடியால 'ஜஸ்டைஸ் பார் இன்னிலா'ன்னு போஸ்டும் ரீல்ஸ்ஸும் வரும். உயிரோட இருந்தாலும் சாகத் தூண்டுவாங்க. செத்தாலும் குழில தோண்டி போட்டோ எடுப்பாங்க. என் குடும்பமே கன்டென்ட் ஆகும். என் போட்டோ வைரல் ஆகும்.
என்னை தங்கச்சி மாதிரின்னு எனக்கு நீதி கேட்டு போஸ்ட் போடுறவன் கூட என் வீடியோவை பத்தாயிரம் தடவை பார்த்திருப்பான்.
இன்னும் கொஞ்சம் போய், அந்த பொண்ணு ஏன் வெளியூருக்கு வேலைக்குப் போச்சு. ஏன் பிஜில தனியா தங்குச்சுன்னு பேசிப் பேசி கடைசில என் கேரக்டர் சரி இல்லாததுனால தான் இந்த நிலைமைன்னு பிரேம் பண்ணி, எனக்கு ஏத்துன மெழுகுவர்த்தியை அணைச்சு உள்ள வச்சுடுவாங்க.
ஆக மொத்தம், தப்புப் பண்ணவங்களுக்கு இதனால ஒரு பாதிப்பும் இல்ல. அவங்களை எங்கையாவது ரீல்ஸா போட்டு, போஸ்ட்டா போட்டு, சோசியல் மீடியால கண்டிச்சுப் பார்த்து இருக்கீங்களா. இல்ல அவங்க போட்டோ தான் வெளில வந்துருக்கா. வராது! இப்படி எதுக்குமே யூஸ் ஆகாத போராட்டத்துல நான் கலந்துக்கிட்டு என்ன சாதிக்கப் போறேன்.
இதுக்கு ஒண்ணுமே சொல்லாம சத்தமில்லாத செத்துட்டா, கொஞ்ச நாள் ஏன் செத்தேன்னு தெரிய நோண்டுவாங்க, ஒரு அளவுக்கு மேல கேஸை நடத்த என் அப்பாவுக்குத் தெம்பு இருக்காது. சோ விட்டுடுவாரு. அப்படியே நான் மறக்கப்பட்டுடுவேன்" என்று நீளமாய் பேசி முடித்தாள் இன்னிலா.
இதுவரையில் தன்னிடம் இரு வார்த்தைக்கு மேல் பேசிடாத பாவையின் கூற்றில் இருந்த உண்மை சுட்டது அவனுக்கு.
உண்மையில் இப்போதிருக்கும் போராட்டங்கள் அனைத்தும் பிரயோஜனமில்லாததாகத் தானே இருக்கிறது. இப்போதிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒரு புறமிருக்க, பாதிக்கப்பட்டாலும் கூட அப்பெண் உலகில் வாழத் தகுதி இல்லாத உயிரினமாக மாற்றி விடுகிறது சமூக வலைத்தளங்கள்.
தன்னையும் அவள் அப்படிப்பட்ட தர்ட்ரேட் பொறுக்கியாக நினைத்து விட்டாளோ? என உணர்ந்தவன், இயல்புக்கு மீறி அவளிடம் விளக்கமளித்தான்.
"இங்க பாரு இன்னிலா. உன்னை மிரட்டத் தான் அப்படி சொன்னேன். மத்தபடி எந்தப் பொண்ணோட சுண்டு விரலையும் நான் தொட்டதும் இல்லை. யாரோட அந்தரங்கத்தையும் படம் பிடிச்சு ரசிச்சதும் இல்லை. நீ உண்மையை சொல்லலைன்னாலும் வேற விதமா டார்ச்சர் பண்ணிருப்பேனே தவிர்த்து, உன்னை வன்புணர்வு செய்ற அளவு நான் சேடிஸ்ட் இல்லை. முதல் தடவை உங்கிட்ட என் கணிப்பு தோத்துப் போய்டுச்சு. நான் என் தோல்வியை ஒத்துக்குறேன். ஐ ஆம் சாரி.
நீ சொன்னது தான் இப்போ இருக்குற சமூகம். ஐ அக்ரீ, ஆனா அதுக்காக போராடுறதை விட்டுட்டா, பின்னாடி வர்ற சந்ததிகளுக்கு போராடுற குணமே இல்லாம போய்டும்." என்றான் உணர்ச்சித் துடைத்த முகத்துடன்.
அவள் எதற்கும் எதிர்வினை ஆற்றாமல் தலையைக் குனிந்து அமர்ந்திருக்க, "சரி சொல்லு. இப்ப எனக்கு என்ன தண்டனை தருவ?" என்றான் மீண்டும்.
அதில் நிமிர்ந்தவள், "நீங்க தான் வீடியோ எடுக்கலையே" என முணுமுணுத்திட, "அது மட்டும் தான் அபியூஸா?" என்றான் கடைப்பார்வையில் அவளைத் துளைத்து.
அவளுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. "இப்போ தண்டனை எதுவும் தோணல சார்." என்று உள்ளே சென்ற குரலில் கூறிட, "ஓகே தோணுனா சொல்லு. என்ன தண்டனையா இருந்தாலும் நான் ஏத்துப்பேன்" என உறுதியுடன் கூறியவனின் கண்களில் இருந்த உண்மைத்தன்மை அவளைத் திகைக்க வைக்க, இருந்தும் பயம் அகலாதவள், "அப்பா?" என்றாள் கேள்வியாக.
"உன் அப்பாவை ஊருக்கு அனுப்பியாச்சு. ஆபிஸ்ல இருந்து வேலை விஷயமா நீ வெளியூர் போயிருக்கன்னு சொல்லியாச்சு. நீ கால் பண்ணிப் பேசிக்க" என்று அவளது அலைபேசியை நீட்டினான்.
அதனை வாங்கி உடனடியாக தந்தையிடம் பேசி, அவரை ஆறுதல் படுத்திய பிறகே அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.
"நிம்மி இப்போ எப்படி இருக்கா?" மென்குரலில் இன்னிலா வினவ, "இன்னும் க்ரிக்டிகல் தான்." என்றவன் மீண்டும் சோபாவிற்கு சென்று பின்னால் சாய்ந்து அமர்ந்தான்.
எண்ணங்கள் நிமிஷாவைச் சுற்றியே வலம் வந்தது.
கனகா கூறிய செய்தியில் அதிர்ந்து போன இன்னிலா, "ஏன் கனகாம்மா பொய் சொல்றீங்க. நீங்க ஞாயித்துக்கிழமை நைட்டு எட்டரை மணிக்கு வந்தீங்க தான." என்று பரிதாபத்துடன் வினவ,
"ஐயா! நீங்க அடிச்சதுல இந்தப் பிள்ளைக்கு மண்டைக்கோளாறு ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன். அதான் என்னை மாட்டி விடுது. இனிம்மா... நான் எப்ப வீட்டுக்கு வந்தேன். திருப்பதி போறேன்னு சொல்லிட்டுப் போனேன் தான." என்று கனகா குழம்பியபடி பேச,
"திருப்பதி போறேன்னு சொல்லிட்டுத் தான் போனீங்க. ஆனா, சீக்கிரமே வந்துட்டேன்னு சொன்னீங்களே. சார் சத்தியமா வந்தாங்க சார்." என்றாள் ஆதரவற்ற தொனியில்.
"இதுல யார் சொல்றது உண்மைன்னு நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க." என்று இடுப்பில் கை வைத்து இருவரையும் தீயாய் முறைத்த ஈஷ்யுகனிடம்,
"ஐயா... நிஜமாவே நான் வீட்டுக்குப் போகலைங்கய்யா. எட்டரை மணிக்குப் போய் சாப்பாடு செஞ்சு எப்போ இவங்க சாப்புடுறது சொல்லுங்க." என்று தனது பக்க வாதத்தை வைத்தவர், "இனி கண்ணு, பயத்துல பேசுதுய்யா." என்றார்.
"இல்ல இல்ல... நான் ஏன் பொய் சொல்லணும்." என்ற இன்னிலாவிற்கு தனது பக்க நியாயத்தைக் கூற கூட ஆற்றல் இல்லை.
உடலில் பல இடங்களில் வீங்கி கன்றிப் போய் விண் விண்ணென்ற வலியைக் கிளப்பியது. ஆகாரமற்ற உடம்பில் பேசுவதற்கு கூடத் தெம்பு இல்லை. அடி வயிறு வேறு கொடூரமாக வலித்தது. எப்போது வேண்டுமானாலும் மாதவிடாய் ஆவதற்கான அறிகுறிகள் வேறு. இதில் எங்கிருந்து பேசுவது... வாழ்க்கையே சிறைச்சாலையில் முடிந்து விடும் என்ற முடிவில் தொய்ந்து அமர்ந்து விட்டாள்.
அந்நேரம் மிதிலேஷ் உள்ளே வந்து ஈஷ்யுகனின் காதில் ஏதோ ஓதிட, ஈஷ்யுகன் கண்ணைக் காட்டியதும் அவன் வெளியில் சென்றான். கழுத்தைத் தேய்த்து ஏதோ யோசித்தவன், சுருண்டிருந்த பாவையைப் பார்த்து, "ஏய் எந்திரி" என்றான்.
அடுத்து என்ன செய்யப் போகிறானோ என்ற அச்சம் அதிகமாக, இனி என்னவானாலும் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற விரக்தியே எழுந்தது அவளுக்கு.
தட்டுத் தடுமாறி எழுந்து நின்றவளின் கன்னம் பற்றி திருப்பி அவனைப் பார்க்க வைத்தான்.
சோர்வும் பசி மயக்கமும் வலியின் வீரியமும் ஒரு சேர தாக்கினாலும் அதில் மரண பயமே எஞ்சி நின்றது.
"நீ சொல்றது உண்மையா?" விழி இடுங்க அவன் கேட்டதில், கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.
"என் அப்பா, அம்மா மேல சத்தியமா உண்மை தான் சார். ஆனா நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும். விட்டுருங்க சார். என்னை ஜெயில்ல போட்டுடுங்க. இதுக்கு மேல அடிச்சா செத்துடுவேன். இங்கேயே செத்து நீங்க என்னை வீடியோ எடுத்துப் போட்டு செத்தும் அசிங்கப்படுறதுக்கு ஜெயிலுக்குப் போற வரை உசுரைக் கைல பிடிச்சுக்குறேன்." என்றவளின் வார்த்தைகளில் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அழுத்தம் அதிகம் தெரிந்தது.
"நீ எங்க சாகணும்ன்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்." சற்றும் அவளது அழுத்தத்திற்குக் குறைவில்லாமல் கூறியவன், திரும்பி கனகாவைப் பார்த்தான்.
"என்ன திடீர்ன்னு திருப்பதிக்கு விசிட்?" சட்டென அவன் கேள்வி கேட்டதும் விழித்தவர் "வேண்டுதலுங்கய்யா." என்றார் தயக்கமாக.
"என்ன வேண்டுதல்? என் தங்கச்சிக்கு விஷம் வைக்கிற வேண்டுதலா?" என்றவனின் கேள்வியில் ஆத்திரம் மின்னியது.
அவரோ திகைத்து "ஐயா... என்னைப் போய் சந்தேகப்படுறீங்களே நிம்மிம்மா என் பொண்ணு மாதிரி!" என்றிட,
"பொண்ணு மாதிரின்னா, அவள் சொத்துல பங்கு கேட்பீங்களோ?" மீண்டும் ஒரு நக்கல் வினா.
"அய்யயோ இல்லைங்கய்யா." என்று வேகமாக பதறும் போதே வெளியில் சென்ற மிதிலன் மீண்டும் வந்தான். அவன் கையில் இப்போது இரும்பு ராட் இருந்தது.
அதனைக் கண்டு உயிரே போய் விட்டது இன்னிலாவிற்கு.
"கனகாம்மா... இந்தக் கம்பில அடிச்சா அதுவும் மிதிலன் அடிக்கிற ஃபோர்ஸ்க்கு நீங்க வெறும் மூணு அடிக்கு மட்டும் தான் உயிரோட இருப்பீங்க. நாலாவது அடில பேச்சு மூச்சு இருக்காது. சோ முதல் அடியிலேயே உண்மையைச் சொல்லிட்டா வயசான காலத்துல எலும்பு உடையாம தப்பிக்கலாம்." என்றான் அசட்டையாக.
கனகாவிற்கு அடி வாங்காமலேயே உடல் வலித்த உணர்வு. பயம் மெல்ல மெல்ல அவரைத் தாக்க, "ஐயா நான் எந்த உண்மையை சொல்லணும். எனக்குப் புரியலைங்கய்யா. நான் எதையும் மறைக்கல" என்று அழுது மன்றாடி, "பதினஞ்சு வருஷமா நீங்க போட்ட சோத்தை சாப்பிட்டு இருக்கேன். உங்களுக்கு துரோகம் பண்ணுனா அது எனக்கே துரோகம் பண்ணிக்கிட்ட மாதிரிங்கய்யா." என்று கேவினார்.
"மிதிலன் டைம் வேஸ்ட் பண்ணாம ஸ்டார்ட் பண்ணு." என்றதில், அவன் ஓங்கி ஒரு அடி அடிக்க, கனகாவிற்கு கிறுகிறுவென வந்து விட்டது. அவரை அடித்த அடியில் பயந்து இன்னிலா மடங்கி அமர்ந்து காலைக் குறுக்கிக்கொள்ள, மிதிலன் அடுத்த அடியை இன்னும் பலம் கூட்டி அடித்தான்.
கனகா வலியில் கதறி துடிக்க, இன்னிலாவால் அதனைக் கண் கொண்டு பார்க்க இயலவில்லை.
"சார் வேணாம் சார்" என்று நிமிர்ந்து ஆடவனிடம் பேசத் தொடங்க, "உனக்கு ஒரு அடி குடுக்க சொல்லவா." என்று அடிக்குரலில் சீறினான் ஈஷ்யுகன்.
'அடிக்க வரும்போதே அல்பாயுசில் போய்டுவேனே' என்ற மிரட்சியுடன் வாயை மூடிக்கொண்டவளது மனம் கனகாவிற்காக மன்றாடியது.
மூன்றாவது அடிக்கு கையை ஓங்கும் போது கனகா, "ஐயா வேணாம்... அடிக்காதீங்க. நான் உண்மையை சொல்லிடுறேன்" என்று நடுங்கிக்கொண்டு பதறியவர், "விஷம் வச்சது நான் தான். என்னை விட்டுடுங்க. தெரியாம பண்ணிட்டேன்." என்று ஈஷ்யுகனின் காலில் விழுக, அவன் புழுவைப் போல அவரைத் தள்ளி விட்டான்.
"துரோகி... உன்னை அம்மா ஸ்தானத்துல பார்த்த பொண்ணுக்கு விஷம் வச்சுருக்கியே. ச்சீ... நீ எல்லாம் ஒரு பொம்பள." என்று அருவருப்பாய் முகத்தைச் சுளித்தவன், "எதுக்காக இப்படி செஞ்ச?" என்று சீறினான்.
கனகாவிற்கு நெஞ்சில் கடும் வலி ஏற்பட, "சங்கர நாராயணன் ஐயா தான், அவரு சொல்லி தான் நான்..." என்று பேச இயலாமல் மூச்சு வாங்கியவர், "எப்படினாலும் நிம்மியையும் இவளையும் கொலைப் பண்ண தான் போறாங்க. பண்ணிடுவாங்க" என்று கூறியபடியே அடங்கிப்போனது அவரது இத்தனை வருட ஆட்டமும்.
கனகாவைப் பற்றி அறிந்து அதிர்ந்து போன இன்னிலாவிற்கு, அவர் துடித்து இறந்ததை நேரில் கண்டதில் மயக்கமே வரும் போல இருந்தது.
ஆனாலும் மயங்காமல் வீம்பாகக் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டாள். தன் மீது தவறு இல்லையென இப்போதாவது ஈஷ்யுகனுக்குப் புரிந்திருக்கும் என்றாலும், இன்னும் பயம் அகலவில்லை பேதைக்கு.
மயங்கியதும், அவன் சொன்னது போன்றே வீடியோ எடுத்து விட்டால்? அந்நினைவே அவளுக்கு பயத்தீயை மூட்டியது.
ஈஷ்யுகனோ ஆத்திரம் அடங்காமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். 'பெத்த மகளைக் கொலை செய்யச் சொல்லி இருக்கிறானே அந்த நாராயண மூர்த்தி. எல்லாம் அதிகாரத் திமிர். மொத்தமா அடக்குறேன்.' என்று மனதினுள் வீசிக்கொண்டிருந்தப் புயலை அடக்க வழி இன்றி "மிதிலேஷ்" என்று கர்ஜித்தவன், "மினிஸ்டரைப் பார்க்க ஏற்பாடு பண்ணு" என்றான்.
மிதிலேஷ் உடனடியாக அங்கிருந்து விரைய, அடுத்ததாக தன்னை என்ன செய்யப் போகிறான்... என்ற பீதியில் அவன் முகத்தை அரண்டு பார்த்திருந்தப் பெண்ணைக் கண்டு முதன் முறை அவனுள் ஒரு குற்ற உணர்வு!
இதுவரை தவறிழைக்காத யாரையும் இப்படி துன்புறுத்தியது இல்லையே. அவள் அப்பாவி என்று ஒரு மனம் கூக்குரலிட்டது தான், ஆனால், இவ்வுலகத்தில் நிறம் மாறும் மனிதனின் பண்பை நன்கு அறிந்தவனுக்கு, இவளையும் நம்பத் தோன்றவில்லை.
விளைவு, அவனது அதிகபட்ச சினத்தின் வீரியத்தில் உடலிலும் மனதிலும் பெரும் அடிகளை வாங்கிக்கொண்டாள்.
"எந்திரி..." இம்முறை சற்று மென்மையாக அவன் அவளது கையைப் பிடிக்க, அவளுக்கு அது கோபத்தின் வெளிப்பாடாகவே தெரிந்தது.
"சார்... இப்பவும் நீங்க என்னை நம்பலைன்னா, என்னை ஜெயில்ல போட்டுடுங்க சார். ப்ளீஸ் வீடியோ எதுவும் எடுத்துடாதீங்க. அப்பாவுக்கு எதுவும் தெரிய வேணாம் சார். ப்ளீஸ்." என்று கெஞ்சத் தொடங்க, ஈஷ்யுகனின் முகம் இறுகிப் போனது.
"முதல்ல எந்திரி" என்றவனின் கைப்பற்றி எழப்போனவள், எழ இயலாமல் மீண்டும் கீழே விழப்போக, அவளது இடையைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டான் ஆடவன்.
"ஸ்... ஆ..." எனத் துடித்துப் பின்னால் நகர்ந்தவளுக்கு உடலில் எங்கு தொட்டாலும் வலித்தது. அவனது பெல்ட் கொடுத்த வீக்கங்கள் உடலெங்கும் பதம் பார்த்திருந்து.
செய்யாத தவறுக்காக வலியில் துடிப்பவளைப் பார்த்தவனுக்கு தன் மீதே சினம் மிகுந்தது. அந்த வலிக்குக் காரணமானவனே அதனை சரி செய்யவும் எத்தனிக்க, "ஹாஸ்பிடல் போகலாம்." என்றான்.
அதில் கண்களை விரித்தவள், "அப்போ என்னை நம்புறீங்களா. நிம்மி... நிம்மிக்கு நிஜமா நான் விஷம் வைக்கலைன்னு நம்புறீங்க தான்." எனப் பரிதாபமாகக் கேட்க,
"ம்ம். முதல்லயே தெளிவா சொல்ல வேண்டியது தான். அப்பவே இந்த ஜந்துவை விசாரிச்சு இருப்பேன்." என்று கனகாவைக் கை நீட்டிப் பேசியவன், "சாரி..." என்றிட, அவளுக்கு அதெல்லாம் கருத்தில் பதியவில்லை.
"நா... நான் ஊருக்குப் போறேன் சார். ஹாஸ்பிடல் எல்லாம் வேணாம். அப்பா வேற என்னைக் காணோம்ன்னு பதறி இருப்பாரு. என்னை விடுங்க சார்" என்றதும்,
"ஏய்... இவ்ளோ காயத்தோட ட்ராவல் பண்ணப் போறியா?" ஈஷ்யுகன் கேட்டதில்,
"ப... பரவாயில்லை சார். நான் போயிடுறேன். போற வழில காயத்துக்கு மருந்துப் போட்டுக்குறேன்." என்று ஒரு அடி எடுத்து வைத்தவளுக்கு வயிற்றில் சுளீரென வலி எடுக்க, மடங்கி அமர்ந்து விட்டாள்.
அதில் தன்னிச்சையாக அவனும் அதே போல் மடங்கி அவளருகில் அமர்ந்து விட, "என்னடி ஆச்சு?" என்று குரலில் ஒரு பதற்றத்தை ஏற்றுக் கேட்க,
"ஒ... ஒன்னும் இல்ல. எங்க எங்கயோ வலிக்குது. என்னை விடுங்க சார்" என்று மீண்டும் அதே வரிகளில் நின்றதில்,
"பைத்தியம். உன்னால நடக்கவே முடியல. இதுல என்னமோ ஊருக்கு நடந்தே போற மாதிரி விடுங்க விடுங்கன்னு புலம்பிட்டு இருக்க. உன்னை இப்ப எங்கயும் விட முடியாது." என்றவன், அவளைக் கைகளில் அள்ளிக்கொள்ள, அவளுக்கு வெடவெடத்து விட்டது.
அதில் மயங்கியே விட்டாள். 'இவ்ளோ நேரம் கோபத்துல அடிச்சப்ப மயங்காம, புருஞ்சு பேசித் தூக்குறப்ப மயங்குறா. என்ன பொண்ணோ' என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவனுக்கு இதயத்தில் ஒரு வித வலி கனன்று கொண்டே இருந்தது.
சில மணி நேரம் கழித்துக் கண் விழித்த இன்னிலாவிற்கு முதலில் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை. அதன் பிறகே இருக்கும் மருத்துவமனையில் இருப்பது புரிந்து படக்கென எழ முயன்றாள்.
கையில் ஏறிக்கொண்டிருந்த ட்ரிப்ஸ் சுருக்கென வலிக்க, "ஆ..." என வலியில் கத்தியதில், அத்தனை நேரமும் சோபாவில் சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்த ஈஷ்யுகன் பட்டெனக் கண்ணைத் திறந்து அவளருகில் சென்றான்.
"இடியட் எதுக்கு எந்திரிக்கிற. டேக் ரெஸ்ட்." என்று மீண்டும் அவளைப் படுக்க வைக்க, "நான்... நான் எப்படி இங்க வந்தேன்." என்றாள் மருண்ட விழிகளுடன்.
அதற்கு பதில் கூறாதவனாக, "உன்னைப் படுன்னு சொன்னேன்." என்று அதட்டியதில், "அப்பா என்னைப் பார்க்க வெய்ட் பண்ணிட்டு இருப்பாரு சார். நான் போகணும்" என்று மீண்டும் அதே பல்லவியைப் பாட,
"ஊஃப் உனக்கு சென்ஸ் இருக்கா இல்லையா. இப்படி உடம்பு முழுக்க அடியோட உன் அப்பாவைப் பார்க்கப் போறியா? என்ன ஆச்சுன்னு கேட்டா என்ன சொல்லுவ. நான் அடிச்சேன்னு சொல்லி என்னை வயலன்ஸ்ல உள்ள போடுவியா?" என்றான் புருவம் உயர்த்தி.
"ஐயோ இல்ல சார். நான் யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன். என்னை விட்டீங்கன்னா போதும். இதுக்கு அப்பறம் நீங்க இருக்குற திசைப்பக்கம் கூட நான் வரமாட்டேன்." என்று பதறினாள்.
"ஏன் சொல்ல மாட்ட? நியாயமா இந்நேரம் நீ என்மேல போலீஸ் கம்பளைண்ட் தான குடுக்கணும்?" கையைக்கட்டிக்கொண்டு அவன் எதிர்கேள்விக் கேட்க,
"கம்பளைண்ட் குடுத்து எந்த பிரயோஜனமும் இல்லையே சார். நீங்க ஈஸியா வெளில வந்துடுவீங்க. பணம் இருக்கு செல்வாக்கு இருக்கு. ஆனா எனக்கு அப்படி இல்ல. எனக்கு அடுத்து ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. அவங்க வாழ்க்கையும் இதனால கேள்விக்குறியாகிடக் கூடாது." என்று மெல்லிய குரலில் கூறியவனை அழுத்தமாக ஏறிட்டவன், "அப்போ எனக்கு எந்த தண்டனையும் தர மாட்டியா?" என்றான் கூர்பார்வையுடன்.
"தண்டனையா? உங்களைத் தண்டிக்கிற அளவு எனக்குப் பலம் இல்லை சார். என்னை விடுங்களேன்." அவள் மன்றாட,
"முதுகெலும்பு இல்லாத கோழை. நான் உன்னை வீடியோ எடுத்து ரிலீஸ் பண்ணிருந்தா கூட, இப்படி தான் போராட முடியாதுன்னு போயிருப்பியா?" என்றான் அடிக்குரலில்.
"ஆமா போராட முடியாது. செத்துருப்பேன்." அவள் உடனடியாய் பதில் கூற,
"உன்னை பெல்டால அடிச்சு இருக்கக் கூடாது. பெரிய பாறையா தூக்கித் தலையில போட்டு இருக்கணும்." என சீறினான்.
"வேற என்ன செய்ய சொல்றீங்க சார். இதுக்காக நான் போராடுனா எனக்கு என்ன கிடைக்கும்? ஒரு ரெண்டு நாளைக்கு சோசியல் மீடியால 'ஜஸ்டைஸ் பார் இன்னிலா'ன்னு போஸ்டும் ரீல்ஸ்ஸும் வரும். உயிரோட இருந்தாலும் சாகத் தூண்டுவாங்க. செத்தாலும் குழில தோண்டி போட்டோ எடுப்பாங்க. என் குடும்பமே கன்டென்ட் ஆகும். என் போட்டோ வைரல் ஆகும்.
என்னை தங்கச்சி மாதிரின்னு எனக்கு நீதி கேட்டு போஸ்ட் போடுறவன் கூட என் வீடியோவை பத்தாயிரம் தடவை பார்த்திருப்பான்.
இன்னும் கொஞ்சம் போய், அந்த பொண்ணு ஏன் வெளியூருக்கு வேலைக்குப் போச்சு. ஏன் பிஜில தனியா தங்குச்சுன்னு பேசிப் பேசி கடைசில என் கேரக்டர் சரி இல்லாததுனால தான் இந்த நிலைமைன்னு பிரேம் பண்ணி, எனக்கு ஏத்துன மெழுகுவர்த்தியை அணைச்சு உள்ள வச்சுடுவாங்க.
ஆக மொத்தம், தப்புப் பண்ணவங்களுக்கு இதனால ஒரு பாதிப்பும் இல்ல. அவங்களை எங்கையாவது ரீல்ஸா போட்டு, போஸ்ட்டா போட்டு, சோசியல் மீடியால கண்டிச்சுப் பார்த்து இருக்கீங்களா. இல்ல அவங்க போட்டோ தான் வெளில வந்துருக்கா. வராது! இப்படி எதுக்குமே யூஸ் ஆகாத போராட்டத்துல நான் கலந்துக்கிட்டு என்ன சாதிக்கப் போறேன்.
இதுக்கு ஒண்ணுமே சொல்லாம சத்தமில்லாத செத்துட்டா, கொஞ்ச நாள் ஏன் செத்தேன்னு தெரிய நோண்டுவாங்க, ஒரு அளவுக்கு மேல கேஸை நடத்த என் அப்பாவுக்குத் தெம்பு இருக்காது. சோ விட்டுடுவாரு. அப்படியே நான் மறக்கப்பட்டுடுவேன்" என்று நீளமாய் பேசி முடித்தாள் இன்னிலா.
இதுவரையில் தன்னிடம் இரு வார்த்தைக்கு மேல் பேசிடாத பாவையின் கூற்றில் இருந்த உண்மை சுட்டது அவனுக்கு.
உண்மையில் இப்போதிருக்கும் போராட்டங்கள் அனைத்தும் பிரயோஜனமில்லாததாகத் தானே இருக்கிறது. இப்போதிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒரு புறமிருக்க, பாதிக்கப்பட்டாலும் கூட அப்பெண் உலகில் வாழத் தகுதி இல்லாத உயிரினமாக மாற்றி விடுகிறது சமூக வலைத்தளங்கள்.
தன்னையும் அவள் அப்படிப்பட்ட தர்ட்ரேட் பொறுக்கியாக நினைத்து விட்டாளோ? என உணர்ந்தவன், இயல்புக்கு மீறி அவளிடம் விளக்கமளித்தான்.
"இங்க பாரு இன்னிலா. உன்னை மிரட்டத் தான் அப்படி சொன்னேன். மத்தபடி எந்தப் பொண்ணோட சுண்டு விரலையும் நான் தொட்டதும் இல்லை. யாரோட அந்தரங்கத்தையும் படம் பிடிச்சு ரசிச்சதும் இல்லை. நீ உண்மையை சொல்லலைன்னாலும் வேற விதமா டார்ச்சர் பண்ணிருப்பேனே தவிர்த்து, உன்னை வன்புணர்வு செய்ற அளவு நான் சேடிஸ்ட் இல்லை. முதல் தடவை உங்கிட்ட என் கணிப்பு தோத்துப் போய்டுச்சு. நான் என் தோல்வியை ஒத்துக்குறேன். ஐ ஆம் சாரி.
நீ சொன்னது தான் இப்போ இருக்குற சமூகம். ஐ அக்ரீ, ஆனா அதுக்காக போராடுறதை விட்டுட்டா, பின்னாடி வர்ற சந்ததிகளுக்கு போராடுற குணமே இல்லாம போய்டும்." என்றான் உணர்ச்சித் துடைத்த முகத்துடன்.
அவள் எதற்கும் எதிர்வினை ஆற்றாமல் தலையைக் குனிந்து அமர்ந்திருக்க, "சரி சொல்லு. இப்ப எனக்கு என்ன தண்டனை தருவ?" என்றான் மீண்டும்.
அதில் நிமிர்ந்தவள், "நீங்க தான் வீடியோ எடுக்கலையே" என முணுமுணுத்திட, "அது மட்டும் தான் அபியூஸா?" என்றான் கடைப்பார்வையில் அவளைத் துளைத்து.
அவளுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. "இப்போ தண்டனை எதுவும் தோணல சார்." என்று உள்ளே சென்ற குரலில் கூறிட, "ஓகே தோணுனா சொல்லு. என்ன தண்டனையா இருந்தாலும் நான் ஏத்துப்பேன்" என உறுதியுடன் கூறியவனின் கண்களில் இருந்த உண்மைத்தன்மை அவளைத் திகைக்க வைக்க, இருந்தும் பயம் அகலாதவள், "அப்பா?" என்றாள் கேள்வியாக.
"உன் அப்பாவை ஊருக்கு அனுப்பியாச்சு. ஆபிஸ்ல இருந்து வேலை விஷயமா நீ வெளியூர் போயிருக்கன்னு சொல்லியாச்சு. நீ கால் பண்ணிப் பேசிக்க" என்று அவளது அலைபேசியை நீட்டினான்.
அதனை வாங்கி உடனடியாக தந்தையிடம் பேசி, அவரை ஆறுதல் படுத்திய பிறகே அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.
"நிம்மி இப்போ எப்படி இருக்கா?" மென்குரலில் இன்னிலா வினவ, "இன்னும் க்ரிக்டிகல் தான்." என்றவன் மீண்டும் சோபாவிற்கு சென்று பின்னால் சாய்ந்து அமர்ந்தான்.
எண்ணங்கள் நிமிஷாவைச் சுற்றியே வலம் வந்தது.