4 சிவப்பழகியே...
இரவு உணவு அமைதியாக முடிந்தது. குழலி தான் தயங்கிக்கொண்டே நின்றிருந்தாள், எதாவது சொல்லிவிட்டாள் தாங்க முடியாதே என்று.
'விக்கி பசிக்குது, என்னை சாப்பிட சொல்லமாட்டியா?' அவனது கடைக்கண் பார்வைகூட அவள் மீது பதிக்கவில்லை. அனைவரும் சாப்பிட்டு முடிக்கவும், மலர்கொடி அவளது குழந்தைக்கு ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தாள்.
'மா சாரி மா... உங்களை தலை குனிய வச்சதுக்கு ஒரே நாளில் இவ்வளவு பட்டுட்டேன். என்னை மன்னிச்சிடு மா' மனதாள் மட்டுமே குழலியால் மன்னிப்பு கேட்க முடிந்தது.
உணவு ஊட்டிக்கண்டிருந்த கொடி, புதிதாக உறவு கொண்டாட வந்தவள் மீது ஆத்திரமாக வந்ததே, 'எப்படியாவது இவளை துரத்திடனும் ச்சை... நம்ம ராணி போல இங்க வந்து வாழலாம்ன்னு பார்த்தா இது வேற இடஞ்சலா வந்து நிக்குது'
குழந்தையிடம் அவனது தங்கை கண்டித்து வைத்திருந்தாள், 'இனி அத்தை என யாரையும் அழைக்க கூடாது, அதே சமயத்தில் குழலியிடம் பேசக்கூடாது. அருகில் கூட செல்ல கூடாது' என மிரட்டியதில் இருந்து அந்த பாப்பா இவளை திரும்பி கூட பார்க்கவில்லை. பெரியவர்களின் ஒதுக்கத்தை தாங்கிக்கொண்டவளால் அந்த பச்சை குழந்தையின் ஒதுக்கத்தை ஏனோ தாங்க முடியவில்லை, 'அப்படி என்ன பெரிய பாவம் செய்துவிட்டேன்' தனக்குள் எழுந்த கேள்வியை கேட்க நா துடித்தது. கேட்டால் மட்டுமென்ன விடையா கிடைத்துவிட போகிறது இங்கு என வந்த உணர்வு நிறைந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டாள், ஆனால் அது ஜீரனம் தான் ஆகவில்லையே.
அனைவரும் சாப்பிட்டு முடிக்க பவளம் கிட்சனில் முணுமுணுத்துக்கொண்டே பாத்திரத்தோடு சேர்த்து குழலியையும் கழுவி ஊத்திக்கொண்டிருந்தார்.
"கண்ணுல கொள்ளி வைக்க, என் மவனை வெறிச்சி வெறிச்சி பார்த்துட்டு இருக்கா, முதல்ல சுத்தி போடனும் திமிர் எடுத்தவ. என் பேத்தி மேலையே கை வச்சி இருக்கா அதை தட்டிக்கேட்க போனா மயக்கம் போட்டு விழுந்து ஒரு நாடகம் வேற ஆடுறா" அவர் மெதுவாக முணுமுணுத்தது பாவம் குழலிக்கு கேட்கவில்லை.
"அத்த... சா..." சாப்பாடு என முடிக்ககூட இல்லை, அவர் பார்த்த பார்வையில் அத்தையை விழுங்கி.
"எனக்கு பசிக்குது... சாப்பாடு" அத்தையை கண்டு, அந்த பயம் இருக்கட்டும் என்பது போல பார்வை பார்த்துவைத்தார்.
"சாப்பாடு..."
"அது எல்லாமில்லை, தனியா சமைச்சிக்க சொன்னேன்"
"தனியா சமைக்க எதும் இல்லையே"
"அந்த பாத்திரத்தில் இருப்பதை போட்டுக்கோ"
"தேங்ஸ்..." தட்டில் சாப்பாடு போட்டுக்கொண்டு வெளியே வர, குழலியை பவளம் குரல் தடுத்தது.
"இன்னைக்கு மட்டும் தான்.. நாளைக்கும் இப்படி வந்து நிற்க்காதே. ஒரு பருக்கை சோறு கூட தரமாட்டேன்" அப்போது தான் அக்கா மகளிடம் விளையாடிவிட்டு உறங்க போனவனுக்கு நன்றாக காது கேட்டது.
திரும்பி வந்தவனை பார்த்து குழலிக்கு மிகுந்த மகிழ்ச்சி, நமக்காக தான் வருகிறான் என நினைத்தவள் அவனை ஆசையோடு பார்வையால் பருகினாள்.
"மா... நாளைக்கு கூட்டிட்டு போய் கடை எங்கே இருக்குன்னு காட்டிடுங்க, இனி தனியா சமைச்சிப்பா. நீங்க டென்சன் ஆகாதிங்க மா. ஏற்கனவே பிபி ஏகத்துக்கு ஏறிட்டு இருக்கு" தாயின் உடல் நலத்துக்காக பேசியவனை என்ன சொல்வது தாய் மீது பாசம் வைக்காத சொல்லும் அளவுக்கு குழலி சுயநலம் பிடித்தவளில்லை. தனக்காக ஒரு வார்த்தை கூடவா பேசக்கூடாது என மனம் குமுறியது.
"சரி நான் டென்ஷன் ஆகலை டா... இன்னைக்கு சாப்பாடு எப்படி இருந்தது சொல்லவே இல்லை" பவளம் மகனிடம் செல்லமாக கோபித்துக்கொள்ள.
"எப்பவும் போல டேஸ்ட் செம மா... இதுக்கு எல்லாம் எதுக்கு கோபம் சொல்லுங்க... அலுப்பாக இருக்குமா"
"தூங்க போட்டா, சரி... அந்த பொண்ணு எங்க தூங்கும்"
"உங்க இஷ்டம் மா உங்க கூட தூங்க வச்சிக்கோங்க, அப்பா வெளியே தானே படுக்கிறார்" தாயின் பதிலை கூட எதிர் பார்க்காமல் வேகமாக மாடி படிகளில் ஏறியவனை வெறித்தது குழலியின் கண்கள்.
'இதை எல்லாம் எதிர் பார்த்துதானே வந்தாய் கலங்காதே குழலி' தனக்கு தானே ஆறுதல் படுத்திக்கொண்டு... விக்கி பின் சென்றாள், கையில் சாப்பாடு தட்டை எடுத்துக்கொண்டு.
"ஏய் நீ எங்க போற?" பவளத்தின் குரல் இடைமறிக்க.
"சாப்பிட..."
"ஏன் இங்க உட்கார்ந்து சாப்பிட்டா இறங்காதா? என் பையனை நிம்மதியா தூங்க கூட விடமாட்டியா?"
"இங்.. இங்கே உட்கார்ந்து சாப்பிடுறேன்"
'மா உன்னை கஷ்டபடுத்தியதுக்கு தண்டனை மா இது எல்லாம்'
அந்த பெரிய அறையில் ஒரு ஓரமாக உட்கார்ந்து சாப்பாட்டில் கை வைக்கும் போதே... வெளியே கார் வந்து நிற்க்கும் அரவம் கேட்கவும்.
தனது அறையில் இருந்து வேகமாக வந்த மலர்கொடி, "மா... இவளை எங்காவது போக சொல்லு, அவர் சீக்கிரம் வந்துட்டார் போல"
"இன்னும் மாப்பிள்ளைக்கிட்ட சொல்லலையா?"
"இல்ல மா வந்ததும் சொல்லிக்கலாம்'ன்னு விட்டுட்டேன்"
"நேரம் பாத்து சொல்லு மாப்பிள்ளை கோபித்துக்கொள்ள போறார்"
"நான் பார்த்துக்கிறேன் மா"
"என் வெறிக்க பார்த்துட்டு இருக்க, அதான் சொல்லுறா இல்ல, வேகமா போ"
"எங்க போவது?"
"தம்பி ரூமிர்க்கு போ" மலர்கொடி சொல்ல, பவளம் படபடத்து நின்றார். குழலி தலை மறையும் வரை பார்த்து நின்றவர், அவள் சென்றதை உறுதிபடுத்திக்கொண்டு வாசலுக்கு சென்றார்,
"வாங்க மாப்பிள்ளை..." பவளமும், ரங்கராஜனும் அழைக்க.
"அட... என்ன மாமா அத்தை உங்ககிட்ட எவ்வளவு முறை சொல்லுறது சுதாகர் சொல்லி கூப்பிடுங்கன்னு"
"ஹா... ஹா எனக்கு மாப்பிள்ளை கூப்பிட தான் பிடிச்சி இருக்கு" ரங்கராஜன் சொல்ல.
"என் குட்டி என்ன செய்யுறா?" மனைவியிடம் தவப்புதல்வியை பற்றி கேட்க.
"சாப்பிட்டதும் தூங்கிட்டாங்க"
"சரி... சரி"
"வாங்க சாப்பிடலாம்..." மலர்கொடி அழைக்க,
"நான் வெளியே சாப்பிட்டுட்டேன் கொடி, டயார்டா இருக்கு அதான் ஒரு நாள் முன்னவே வந்துட்டேன். நாளைக்கு எங்காவது வெளியே போய் சுத்தி பார்த்துட்டு வரலாம். கொஞ்ச நாள் லீவ் எடுத்து இருக்கேன்"
'அவங்க அம்மா பார்க்க கூட்டிட்டு போயிட்டா என்ன செய்யுறது' மலர்கொடி மனம் பதறியது.
"எங்கங்க" மனதில், 'கடவுளே அவங்கவீட்டுக்குமட்டும் போக கூடாது' மனதில் அனைத்து கடவுளையும் வேண்டினாள்.
"இன்னும் முடிவு செய்யலை தூரமா போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரலாம்"
"சரிங்க... நீங்க தூங்குங்க, நான் தேவையானதை எடுத்து வைக்கிறேன்"
"சரி கொடி... நீ போ, நான் மாமாகிட்ட பேசிட்டு வரேன்" மாமாவும் மருமகனும் வரவேற்ப்பறையில் பேசிக்கொண்டிருக்க, பவளம் மகளுக்கு உதவி செய்ய அறையில் புகுந்துகொண்டார்.
"மா இப்போதைக்கு தெரியவேண்டா வெளியே அப்புறம் நிம்மதியா இருக்க முடியாது வந்ததும் சொல்லுறேன்"
"சரி மா" பவளத்துக்கு மகனின் வாழ்க்கையை நினைத்து கலக்கமாக இருந்தது.
***
"எங்க உட்கார்ந்து சாப்பிடுறதாம், இப்படி தட்டோடு எழுப்பி அனுப்பிட்டாங்க. அவங்க மாமாவை கட்டியது போல நானும் அவங்க புள்ளையை தானே கட்டி இருக்கேன். எப்படிதான் இப்படி நடந்துக்க முடியுதோ" அவனது அறை வாசலில் நின்றவளுக்கு உள்ளே எப்படி போவது என தயக்கமாக இருந்தது.
"இப்படி ஓரமா உட்கார்ந்து சாப்பிட்டுக்கலாம்" , மாடிக்கு போக வழி தெரிந்தது. குளிரில் யார் போவது என ஓரமாக உட்கார்ந்து சாப்பிடத் துவங்க, கொலை பசி, வேகவேகமாக சாப்பிட்டவளுக்கு விக்கிக்கொண்டது. தட்டை ஓரமாக வைத்துவிட்டு இரும்பியவள் தண்ணீயை எடுத்துவராத தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டாள்.
இவளது இரும்பல் சத்தம் கேட்டு ராஜா எட்டி பார்க்க.
"ஏய் இங்கே என்ன செஞ்சிட்டிருக்க" சைகையால் தண்ணீர் என கேட்க, வேற்றாளை பார்ப்பது போல பார்த்து வைத்தான். சட்டென முகத்தை இயல்பாக வைத்து.
"லவ் யூ டி குட்டி" என்றான் காதல் வழிய. அவன் சொன்னதில் விக்கல் நின்று அவனை ஆச்சரியமாக பார்த்தவளுக்கு எல்லையில்லாத ஆனந்தம்.
"விக்கி... கோபம் போச்சா !"
"ராஜா... ஜஸ்ட் சாக் ட்ரீட்மென்ட்... ஐ ஹேட் யூ பாரெவர்" என்றவன் கைக்கட்டி நின்று அவளது கண்களை உத்து பார்த்தான்.
அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் திரும்பி கையில் தட்டை எடுத்து, இந்த முறை பொறுமையாக சாப்பிட்டாள்.
"இங்கே எதுக்கு உட்கார்ந்து இருக்க?"
"உங்க மாமா கீழே வந்திருக்காங்க, என்னை அவங்க பார்த்திடக் கூடாதுன்னு எங்கயாவது போக சொன்னாங்க. நான் உங்க ரூம்க்கு தான் வரதா இருந்தேன், உங்களுக்கு தான் நான் வந்தா பிடிக்காதே... அதான் இங்கே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சிட்டேன்" தலை குனிந்துகொண்டு சொல்லி முடித்தவள், சாப்பிட துவங்கி இருந்தாள்.
"உள்ளே வா.."
"இல்ல நான் இங்கவே..."
"உள்ள வான்னு சொன்னேன்" அவன் சீர..
"தட்டோடு உள்ளே வந்தவள் தரையில் ஒரு ஓரமாக ஒடுங்கி அமர்ந்துகொண்டாள்.
"மேலையே உட்காரு எதும் பிரச்சனை இல்லை"
"பரவாயில்லங்க" சாப்பிட்டு முடித்தவள் தண்ணீரில் கை கழுவிதட்டை ஓரமாக வைத்துவிட்டு. அவனை பார்த்தவாறு உட்கார்ந்துகொண்டாள்.
தனது அறையில் ஒருவள் இருப்பதை கூட கவனிக்காமல் அவன் எதோ தேடிக்கொண்டு இருந்தான்.
"விக்கி... என்னா தேடுறீங்க?"
"ராஜா..." அழுத்தம் திருத்தமாக சொன்னான், "ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்காதே"
"ம்ம்ம்" எவ்வளவு நேரம் தான் அங்கயே உட்கார்ந்து இருப்பது, எழுந்து அவனுக்கு பிடித்த இடத்திற்க்கு வந்தாள். அந்த குடை ஊஞ்சலில் மெல்ல அமர்ந்தவள்.
"இங்கே இருந்து தானே என்கிட்ட பேசுவ விக்கி... அந்த நாட்கள் எல்லாம் திரும்ப வரவே வராதில்ல" தன்னவனை பார்த்து ஏக்கமாக கேட்டாள் இந்த பாவை.
விடுமுறை தினங்களில் ஊருக்கு ஓடிவந்துவிடுவான் விக்கி. தன்னை பற்றி ஒன்றுவிடாமல் சொல்லத் தெரிந்த அவளுக்கு ஒரு வார்த்தை கூட அவனை பற்றி கேட்கவில்லை. அவனும் பெரியதாக எதையும் பகிர்ந்துகொண்டதில்லை.
முதலில் இது எல்லாம் சாதாரணமாக தெரிந்தாலும் போக போக குழலிக்கு ஒரு நெருடலாக உணரந்தாள்.
எங்கெங்கோ நினைவு சென்று கடைசியில், அவர்களது ரம்மியமான போன் காலில் வந்து நின்றது.
"விக்கி... எனக்கு கண்பியுசிங்கா இருக்கு"
"என்னாவாம் என் குட்டிக்கு?"
"உன்னை பிடிக்குது, உன் கூட இருந்தா அவ்வளவு ஹேப்பியா பீல் செய்யுறேன். எப்பவும் உன் கூடவே இருக்க நினைக்கிறேன் ஆனா... இது லவ்வான்னு தெரியலை"
"இது எல்லாம் லவ் தான் டி, என் குட்டி ராட்சசி"
"எனக்கு என்னவோ... இது பிரண்சிப்ன்னு தான் தோனுது" குழலி பதிலுறைக்க.
"சரி உனக்கு பிரண்டாவே இருக்கட்டும், ஆனா நான் எப்பவும் லவ் யூ தான்"
"எப்படி உன்னால இப்படி இருக்க முடியுதோ..." அவளது குரல் தடித்து வரவும்.
"வீடியோ கால் செய்தான்"
"இப்ப எதுக்கு வீடியோ கால்?"
"கேள்வி கேட்காம அட்டன்ட் செய்"
முகத்தையும் கலைந்திருந்த தலையையும் அவதியாக சரி செய்து முடித்து மெதுவாக கால் அட்டன்ட் செய்ய.
"எதுக்கு இந்த மூக்கு சிவந்து இருக்கு? எமோசன் ஆ ?"
"இல்லையே..."
"பொய் சொல்லாத டி"
"நீ டி கூப்பிட்டா பிடிக்குது" அவனை பார்த்து சொல்ல, அதற்க்கு மேல் அவனால் கோபத்தை இழுத்துபிடிக்க முடியவில்லை.
மெல்லிய புன்னகையை அவளை நோக்கி உதிர்த்தவன், "இங்கே பாரு குட்டி..."
"ம்ம்ம்" ஒன்றும் அறியாத சிறுமி போல முகத்தை வைத்திருந்தாள்.
"இந்த மூஞ்சை எங்கடா வாங்கின கியூட்டா அழகா இருக்கு, இந்த மூக்கு இருக்கு பாரு போதை ஏத்துது"
"ஏத்தும் ஏத்தும்... எனக்கு ஏதோ போல இருக்கு, இது எல்லாம் சரி வரும்'ன்னு எனக்கு தோனலை. நம்ம பெஸ்டியாவே இருந்துக்கலாமா? இது எல்லாம் வேண்டா உனக்கான நல்ல பெண் கிடைப்பா"
"வாயை மூடு..." அவனது கடுமையான குரலும், சிவப்பேறிய கண்களும் பார்க்கவே பயமாக இருந்தது.
"விக்..."
"என் பேர் சொல்லி கூப்பிடாதே" ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தான்.
"நீ ஏன் கோபப்படுற"
"வாயை மூடு டி" இதுவே இவனது முதல் கோபம், சிறு சிறு விஷயத்துக்கு கோபம் வரும்தான், ஆனால் இந்த கோபத்தை அவளால் தாங்க முடியவில்லை.
இங்கே விழுந்தவளால் பின் எழமுடியாமல் போகும் என முன்பே தெரிந்திருந்தாள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருப்பாள்.