சங்கவி அறிவு அப்படினு ஒண்ணுமே இல்ல... இவ மனசுல இருக்கறதை பேசி புரிய வைக்கணும்... இவங்கலால் தான் வேந்தன் ஃபேமிலி kku கஷ்டம்... அவங்க மட்டுமா பொண்ணை கேட்டாங்க, உங்க அம்மா சொன்னதும் குடும்பத்துக்காக நீ ஏன் போய் மணவறையில் உட்கார்ந்த...
உன் அக்கா நல்லா வாழனும் அப்போ நீ கட்டிட்டு போனவன்... Pg படிக்கிற பொண்ணு என்னவோ இப்போ ஸ்கூல் பொண்ணு போல behave பண்ணி கடுப்பை கிளப்பி கிட்டு...
இந்த ராஜா இன்னொரு பக்கம் எரிச்சலா வருது.... பிடிக்கல அப்படினா மூடிட்டு அமைதியா இருக்க வேண்டியது தான... பிடிக்காத அவ ஏன் இவனுங்க பேச்சை ketkanum...
அவன் அம்மா அப்பா அதுக்கும் மேல... என்ன லூசா அவங்க... புருஷன் கூட போய் வாழ மகளுக்கு புத்தி சொல்லாம இப்போ தான் கொஞ்சி கிட்டு இருக்காங்க...
இத்தனை வருஷம் வாழ்ந்து அனுபவம் உள்ளவங்களுக்கு புரியுமா புரியாதா இல்ல ஒண்ணுமே தெரியாதா
இதுல ஊருக்கு நியாயம் வேற ஊரு விளங்கிடும்
மலர் நிசமாவே இது எல்லாம் என்ன டிசைன்
சுதகராதியாகுவா
இவன் அதுக்கும் மேல... என்ன கருமம் பிடிச்ச சத்தியம், கல்யாணம்... இவன் கோபம் எல்லாம் அவ்வளவு தானா இவன் எல்லாம் லாயக்கு இல்ல சாப்ட் ஆக இருக்கலாம், ஆனால் ஏமாளியா இருக்க கூடாது...
எவனுக்குமே அவ ஆட்டம் புரியலை அது தான் கடுப்பாக வருது... எப்படி அப்படி இருக்கும்
இவ அதுக்கும் மேல...ஒரு நாளைக்கு ஒரு முடிவு பண்ணிக்கிட்டு.... வர தைரியம் இருக்கும் அதே தைரியம் இப்ப இல்லையா