அத்தியாயம் 2
சசிதரன் இன்று சில வருடங்களுக்குப் பிறகு இந்தியா வருகின்றான்.
அவன் தனது மேற்படிப்புக்காக லண்டன் சென்றவன் தான்..
அங்கு நண்பர்களுடன் சேர்ந்து படித்து முடித்ததுமே கம்பெனி ஒன்றை ஆரம்பித்தான். சில காலம் அங்கேயே தங்கி அதனை கவனித்தவன் இப்போது அங்கு உள்ள ஒரு நண்பனிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு சொந்த நாட்டிற்கே திரும்புகிறான் ..
அவனது மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.. நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் தாய்நாடு வருவதே அதற்கு காரணம்.. அவனது குடும்பத்தினர் தான் லண்டன் சென்று அவனை பார்த்து விட்டு வருவார்கள்.. இவன் இத்தனை நாட்களில் இங்கு வந்ததே இல்லை..
அவன் தான் அந்த வீட்டின் மூத்த வாரிசு .அவனுக்கு ஒரு தம்பி மட்டுமே இருக்கிறான் .அவன் அருந்ததியை விட ஒரு வயது சிறியவன்.. தாய் தேவகி.. தந்தை பாலகிருஷ்ணன்.. தம்பி தேவ்.. தேவன் தான் அவனை அழைத்து வர வேண்டி விமான நிலையம் சென்று இருந்தான்.
தாயும் தந்தையும் அவர்களுடன் சேர்ந்து அருந்ததியும் அவனது வருகைக்காக வாசலிலேயே காத்துக் கொண்டு இருந்தனர்.
கார் கேட்டில் இருந்து உள்ளே வர இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் அருந்ததி.. கிட்டத்தட்ட அவனை நேரில் கண்டு ஐந்து வருடங்களாவது இருக்கும்..
அவளது 17 வயதிலேயே ஆரம்பித்த காதல் தான் இது .அந்த வயதில் அது வெறும் இருக்கும் என்று நினைத்திருந்த அவளுக்கு அவன் இங்கிருந்து சென்றதுமே அது வெறும் ஈர்ப்பு அல்ல காதல் தான் என்று புரிந்தது.
அவனை போட்டோவில் பார்ப்பது மட்டுமே தான் ..தேவ் வீடியோ கால் பேசும் போதெல்லாம் பின்னால் இருந்து பார்க்க சொல்லி மனம் ஏங்கிய போதும் வெட்கம் காரணமாக இது வரை அவள் அவனைப் பார்த்தது இல்லை..
கார் வேகமாக வழுக்கி கொண்டு வந்து அவர்கள் முன் நின்றது ..அதிலிருந்து தேவ் முதலில் இறங்க அவனைத் தொடர்ந்து ஸ்டைலாக காரின் பின் கதவை திறந்து கொண்டு இறங்கினான் சசிதரன் .அவனுக்கு வயது இருபத்தி ஆறு தான் இருக்கும் ...6 அடி உயரம் ,செதுக்கி வைத்த சிலை போல இருந்தான் அவன், ஜிம் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தான்.
ஆண் அழகன் என்றே கூறலாம் அவனை ..இப்போது அருந்ததியோ அவனை நேரில் கண்டதில் பரவசமாக பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவர்களை நோக்கி வந்தவன் தாய் தந்தை இருவரையும் கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தி விட்டு அதன் பிறகே அங்கு இருந்த அருந்ததியை கண்டான் ..
"இது?" என்று திரும்பி தேவை பார்க்க
"அதுவா அண்ணா ..நம்ம வீட்டு பக்கத்திலேயே இருந்தாளே ஒரு அறுந்த வாலு பொண்ணு ..அந்த அருந்ததி தான் இவ.." என்று அவளை பார்த்துக் கண் சிமிட்டியபடி கூற சசியின் முன் அவனை அடிக்க முடியாமல் முறைத்துப் பார்த்தாள் அருந்ததி.
"ஐயோ நம்ம அருந்ததியா இது ?இவ்வளவு வந்துட்டாளா?" என்றவன் "ஹாய்..." என்று தனது கைகளை நீட்டினான்..
அவளும் பரவசத்தில் தனது கையை அவன் முன் நீட்ட அதை பற்றி குலுக்கியவன் அவர்களுடன் பேசியவாரே உள்ளே சென்றான்..
அவன் முன் இருப்பதற்கு சங்கடப் பட்டு அனைவரிடமும் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டாள். அன்றைய நாளை அவன் நினைவிலேயே கழித்தாள் பெண்ணவள். இப்படியாக அவளது நாட்கள் அவன் நினைவிலும் ,அவனை நேரில் பார்த்து ரசிப்பதிலும் சென்றது..
அவன் அவளிடம் பேசினாலே தவிர அவளாக சென்று பேசுவது இல்லை.. எல்லோரிடமும் வாயாடிப்பவள் அவனிடம் மட்டும் நல்ல பிள்ளையாக இருந்து கொண்டாள். அவனும் இதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. அவனது நாட்களோ தந்தையின் பிசினஸை கவனிப்பதிலேயே சென்றது ..
தந்தையே ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டு தானே அனைத்தினையும் பார்த்துக் கொண்டான்.
இப்படியே நாட்கள் கழிய இங்கு அருந்ததியும் தன்னுடைய வேலைகளில் ஈடுபட்டாள். அது வேறொன்றுமில்லை ..வீட்டில் வேலை செய்பவர்களை வம்பிழுப்பது, அக்கம்பக்கத்தினரை வம்பிழுப்பது, எப்போதாவது தந்தையுடன் ஆபீஸ் செல்வது ,புகைப்படம் எடுப்பது என்று நாட்களைக் கழித்தாள்..
இடையிடையே சசிதரனை சைட் அடிக்கவும் மறக்கவில்லை அவள் ..ஆனால் இந்த விடயம் அவளுடன் தோழன் போல் பழகும் தேவிற்குக் கூட தெரியாது.
அத்தனை சாமர்த்தியமாகத் தனது சைட் அடிக்கும் வேலையை செய்தாள் அவள்.
ஒரு நாள் மாலை நேரம் தனது வீட்டில் அக்கா குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள்.. அப்போது அங்கு வந்த தேவ்
" அடியே அருந்ததி.." என்று அருந்ததி படத்தில் வில்லன் அழைப்பது போன்று அழைத்தவாறு அங்கு வந்தான்.
அவன் அழைத்த விதத்தில் அவளது மூத்த அக்காவின் மகள் அனன்யா வாயில் கை வைத்து சிரித்தாள் தனது சித்தியை பார்த்து .மற்றவனுக்கு இது தெரியாவிடினும் அக்கா சிரிப்பதைப் பார்த்து அவனும் சிரித்தான்.. அவன் மூன்று வயதான ஆதர்ஷ் .இரண்டாவது அக்காவின் குழந்தை ..
அனன்யாவுக்கு இப்போது எட்டு வயது ..அதில் மூவரையும் தீயென முறைத்துப் பார்த்தாள் அருந்ததி.
" சரி செல்லம் கோச்சுக்காத.. அப்புறம் என்ன நம்ம வீட்டு பக்கம் ஆளையே காணோம். இன்னைக்கு அண்ணனோட பிரெண்ட்ஸ் வராங்களாம்.. நீயும் வா சூப்பரா இருக்கும்.." என்று அவளை அவன் வீட்டிற்கு அழைக்க ..
"அது வந்து ..அங்க வந்து நான் என்னடா பண்ண.." என்றாள் சற்றே தயங்கி ..
"என்ன நீ அப்படி கேட்டுட்ட.. அவர் ஃப்ரெண்ட்ஸ கூப்பிட்டுட்டு வர்றாரு.. நாம அவங்களை நம்ம முறைப்படி வரவேற்க வேணாம்?அதனால நான் என்ன சொல்ல வரேன்னா இன்னைக்கு நீ அங்க வர்ற .ஓகே பாய்..." என்றவன் வந்த வேகத்திலேயே இவளது பதிலை எதிர் பார்க்காமல் சென்று விட்டான்.
இவளோ போகவா? வேண்டாமா ?என்று மனதில் பட்டி மன்றம் நடத்திக் கொண்டு இருந்தாள். பிறகு "போலாம்... போலாம் ...அப்போ தான் நம்ம ஆளை பக்கத்துல இருந்து சைட் அடிக்கலாம் ..வேற என்ன வேலை நமக்கு .."என்று தனக்குத் தானே கூறியவள் மீண்டும் குழந்தையுடன் விளையாட ஆரம்பித்து விட்டாள்..
பகல் உணவை ஒரு கட்டு கட்டிவிட்டு குட்டி தூக்கம் போட்டு விட்டு எழுந்து அழகாக உடையணிந்து அவனைப் பார்க்க கிளம்பினாள்..
" ஏ ஆள பாக்க போறே...லால லாலா... லால லா.." என்று வாயில் பாட்டு வேறு ..குஷியாக சென்று கொண்டிருந்தாள் அவள்.
அவள் அங்கு செல்கையில் அவளுக்காக காத்து கொண்டு இருந்தான் தேவ்.
"ஹே வா வா .."என்று ஏகபோக வரவேற்பு அவளுக்கு.. அவனை சந்தேகமாக பார்த்த படியே உள்ளே சென்றவள்
"என்னடா இவ்வளவு பெருசா வரவேற்பு எல்லாம் ..."என்று கேட்டாள்..
அதில் அவளை முறைத்தவாறு உள்ளே அழைத்துச் சென்றான். அங்கே ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து இருந்தான் சசி தரன் .. அவனைக் கண்டதும் அவளது வேக நடை தளர்ந்து செம்மை படர்ந்தது முகத்தில்..."வா
அருந்ததி.." என்று கூறி விட்டு தனது வேலையான போன் பார்பதை தொடர்ந்தான்.
"ம்..."என்று மட்டுமே கூறினாள் அரு.. அப்போது வெளியே கார்களின் சத்தம் கேட்டது ..சசிதரன் வேகமாக எழுந்து வெளியே சென்றான். அவன் பின்னால் இவர்களும் சென்றனர் ..அங்கு தொடர்ந்து மூன்று கார்கள் இருந்தன..
அதிலிருந்து இறங்கி வந்தனர் மூன்று ஆண்கள் மற்றும் 2 பெண்களும்..
ஜீன்ஸ் டி-ஷர்ட் தான் அணிந்து வந்து இருந்தனர் அந்தப் பெண்கள்.அதில் அனைவரையும் கட்டி அணைத்து வரவேற்றவன் ஒரு பெண்ணை மட்டும் பார்க்கவே இல்லை..
அதில் அப்பெண்ணின் முகம் சுருங்கினாலும் மற்றவர்கள் முன் எதையும் காட்டிக் கொள்ளவில்லை அவள் ."அண்ணா
அவங்கங்களை எங்களுக்கு இன்ட்ரோ குடு.." என்று சொல்ல முதலில் அவன் ஆண்களை அறிமுகம் செய்தான்..
ஷ்யாம், தனுஷ், விதுன் என்று படிப்படியாக கூறி விட்டு அங்கு இருந்த இரு பெண்களையும் அனிதா மற்றும் ஹாசினி என்றான் ..ஹாசினி என்று அவன் கூறிய பெண்ணோ அவனையே தன் பார்த்தபடி இருந்தாள்..
இவன் தான் அவளை தவிர்த்தான்.. பிறகு அருந்ததி மற்றும் தேவையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான் . ஹாசினி மற்றும் சசிதரனின் கண்ணாமூச்சி ஆட்டத்தை பார்த்து கொண்டு தான் இருந்தாள் அருந்ததி..
தொடரும்.....
கருத்துகளை இங்கே பதிவிடவும் நண்பர்களே...
pommutamilnovels.com