அத்தியாயம் 4
சென்னையில்...
மாலை நேரத்தில் அந்த பெரிய வரவேற்பு அறையில் தன்முன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த தன் பெரியப்பா பையனான ஆருஷியைக் கண்டு எச்சில் கூட்டி விழுங்கி கொண்டு 'இவனுக்கு அவனுங்களே பரவாயில்லை.. அவனுங்களாவது கை கால தான் ஒடச்சானுங்க இவன் நம்மள பார்வையாலையே எரிப்பானே... கடவுளே எப்படியாவது என்ன இவன்ட இருந்து காப்பாத்து..." என மனதினுள் புலம்பிக் கொண்டு இருந்தான் விக்னேஷ்.. அவனின் தந்தையும் சற்று பயத்துடனே அவன் முன் அமர்ந்திருந்தார்.
அந்நேரம் உள்ளே நுழைந்தவர்களை கண்டு "அப்பாடா தப்பிச்சேன்.. இனி பெரியப்பா பாத்துக்குவாரு.." என சற்று ஆசுவசமானான். உள்ளே வந்த கிருஷ்ணன் தன் தம்பியை வரவேற்று பின் இருக்கையில் உடலில் கட்டுடன் அமர்ந்திருந்த விக்னேஷை கண்டு அதிர்ந்தார்.
" டேய் விக்கி.. என்னாச்சு டா.. " கிருஷ்ணன்.
"ஒன்னும் இல்லை பெரியப்பா தடுக்கி விழுந்துட்டேன்".. விக்னேஷ். இதைக் கேட்ட ஆருஷி தீயாய் அவனை முறைத்தான்.
"என்னாச்சு ஆருஷி ஏன் அவனை முறைக்குற.. என்ன நடந்தது.." கிருஷ்ணன்.
"ஒன்னும் இல்லை ப்பா... ஒழுங்கா நடக்க கூட தெரியல .. இன்னும் என்ன சின்ன பிள்ளையா!" என சமாளித்தான் ஆருஷி.
"ஹப்பாடா ... தப்பிச்சோம்..." என நிம்மதி ஆனான்.. ஏனெனில் நடந்த உண்மையை சொன்னால் இவரே கொண்டு போய் மறுபடியும் அவன்களிடமே ஒப்படைத்து விடுவார் அவ்வளவு நேர்மையான மனிதர்..
கிருஷ்ணன் அவருடைய தம்பி அன்புசெல்வன்.. சிறுவயதிலேயே தந்தையை இழந்த நிலையில் தாய் சொத்துக்களை விற்று சொந்த ஊரான கோவையிலேயே வாகனங்கள் உதிரி பாகங்கள் செய்யும் தொழில் தொடங்கினர்... இருவரும் கடுமையான உழைப்பாளிகள்... தொழிலும் வளர ஆரம்பித்தது... இருவருக்கும் அவர்களின் அத்தை மகள்களையே மணம் முடித்தனர்.
கிருஷ்ணன்-கீதா தம்பதியருக்கு ஆருஷி - அபிநந்தன் இருமகன்கள். அன்பு - செல்வி தம்பதியருக்கு விக்னேஷ் ஒரே மகன். கிருஷ்ணன் சற்று நேர்மைவாதி.. தொழிலும் சரி வாழ்க்கையிலும் சரி...ஆருஷி நல்ல அறிவாற்றல் கொண்டவன்.. சென்னையில் கல்லூரி படித்து முடித்து அங்கேயே தன் தந்தையின் தொழிலை தொடங்கிவெற்றி கண்டான். மூன்று ஆண்டுகள் உழைப்பில் வளரும் இளம் தொழிலதிபர் வரிசையில் உள்ளான்.. அங்கேயே வீடு கட்டி தன் பெற்றோர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டான். கோவை நிறுவனத்தின் முழுப் பொறுப்பும் தன் தம்பியான அன்புவிடம் ஒப்படைத்து விட்டு சென்னை வந்து விட்டார் கிருஷ்ணன். அபிநந்தன் வெளிநாட்டில் தொழில் கல்வி படிக்கிறான்.
அவரவர் அறைக்கு சென்றபின் விக்னேஷ் அறைக்கு சென்று
"உன்னை அடிச்சது யாரு??" என இரு கைகளையும் கட்டி கூர்மையாக அவனை பார்த்தவாரே வினவினான். அதில்'உண்மையை என்னிடம் மறைக்காதே!! ' என்ற கட்டளையுடனே!!
அவன் இங்கு வந்தவுடனேயே கண்டுகொண்டான்
யாரோ அவனை நன்றாய் அடி வெளுத்துள்ளனர் என்று...இவனோ சற்று பயத்துடனே நடந்தவற்றை கூறினான்..
ராமிடம் பேசிவிட்டு கிட்டதட்ட அவன் அந்த விசயத்தை மறந்தே போனான். வழக்கம் போல் அவன் செல்லும் பப்பிற்கு அந்த வீக்கென்டும் செல்ல அங்கு வந்த ரவி விஷ்ணு ராம் மூவரும் முகத்தை மறைத்து கைக்குட்டையை கட்டிக்கொண்டு அவன் வெளிவர காத்திருந்தனர்.. முழு போதையில் வெளிவந்த விக்கியை முகத்தை மூடி வெளியில் ஒதுக்குபுறம் இழுத்து வந்து அடி வெளுத்துவிட்டனர். இறுதியில் இனி அவளை தூக்குவேன்.. ஏன் அவ நினைப்பே உனக்கு வர கூடாது நாளைக்கே நீ இந்த ஊருல இருக்க கூடாது என மிரட்டி அவன் சட்டைப்பையில் 'உன் பையன் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் இந்த ஊரில் இருக்க கூடாது' என எழுதிய கடிதத்தை வைத்து விட்டு அவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சென்றனர்.
"போலீஸ் கம்ளைன்ட் எதுவும் வேண்டாம். தப்பு உன் மேலையும் இருக்குனு சொல்லி கொஞ்சநாள் இங்க இருக்க சொல்லி என்ன கூட்டிட்டு வந்துட்டாரு அண்ணா " என கூறி முடிக்கும் முன் அவனை ஓங்கி அறைந்திருந்தான் ஆருஷி.
" ஏண்டா அறிவுகெட்டவனே அந்த பொண்ணு வேணானு சொன்னா தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுவியா அவ்வளவு தைரியமா உனக்கு"
"சாரிண்ணா ... எனக்கு அவளை பார்த்ததும் பிடிச்சுருச்சு அண்ணா ராம் வேணானு சொல்லும் போது இன்னும் ஆர்வமாகிருச்சு அண்ணா.. அவன் என்னை அவமான படுத்த அப்படி பேசிட்டேன் அண்ணா மத்தபடி தப்பான எண்ணம் லா எதுவும் இல்லை.. இன்ஃபேக்ட் அவங்க அடுச்சதுல தப்பே இல்லணா எந்த அண்ணா முன்னாடியும் இப்படி தங்கச்சிய தூக்குவேன்னு சொன்னாளும் இப்படி தான் நடந்துக்குவாங்க.. நானா இருந்தாலும் இதுவும் இதுக்கு மேலயும் செய்வேன்.. " என தன்னிலை விளக்கத்தை கொடுத்தான்..
தன் மீதே தவறு என்பதை தெளிவாய் உணர்ந்தவனை மேலும் திட்டாமல் அவனை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு வெளியே வந்தவன் கோவையில் உள்ள தன் நண்பனுக்கு அழைத்து விவரம் கூறி அந்த பெண்ணின் முழுவிவரமும் கேட்டான்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் அழைத்த அவன் நண்பன் "அந்த பொண்ணு என் தங்கச்சியோட காலேஜ்மெட் மச்சி நல்ல பொண்ணு.. மிடில் கிளாஸ் ஃபேமிலி கூடப்பிறந்த அண்ணன் விஷ்ணு.. சித்தப்பா பசங்க ஐந்து பேரு அவளுக்கு ஒன்னுன்னா இவனுங்க உயிர கூட கொடுப்பானுங்க.. நல்ல குடும்பம் டா எதுவும் பண்ணிராதடா " என சற்று
வருத்தத்துடன் சொன்னான் ..
ஏனெனில் எதிரிகளை முளையிலேயே கிள்ளி எறிய நினைப்பவன் ஆருஷி என தன் நண்பனை பற்றி தெரிந்தவனாக..
ஆருஷியோ.."ச்ச ச்ச அப்டியெல்லாம் இல்ல மச்சி அவனுங்க அடிச்சி ஹாஸ்பிடல் சேர்த்துட்டு போயிருக்கும் போதே நல்லவன்னு தெரிஞ்சுது .. நான் அவங்க இடத்துலே இருந்தாலும் இப்படி தான் நடந்துப்பேன் .. கொஞ்ச நாள் போய் அப்பவும் விக்கி அந்த பொண்ண விரும்புனா முறைப்படி பொண்ணு கேட்க தான் உன்கிட்ட கேட்டேன்" என கூற அப்போதுதான் அவன் நண்பனுக்கு நிம்மதியாக இருந்தது. பின் "அந்த பொண்ணு போட்டோ மெயில் பண்ணிருக்கேன் பாரு... " என கூறி அழைப்பை துண்டித்தான்.
மெயிலில் வந்த புகைப்படத்தை பார்த்த ஆருஷின் இதயம் வேகமாக துடித்தது.. வேகமாக விக்கி அறைக்கு சென்று " இன்னும் நீ அந்த பொண்ண உண்மையா விரும்புகிறாயா" என கேட்டான். விக்கி " தெரியல அண்ணா இப்போ மனசு முழுக்க குற்ற உணர்ச்சி தான் இருக்கு.. அவ ரொம்ப இரக்க குணம் உள்ளவள். இந்த மாதிரி அவனுங்க அண்ணனுங்க ஒருத்தனை அடிச்சுருக்காங்கன்னு தெரிஞ்சாலே எனக்கு பரிதாபபட்டு அண்ணனுக்கு கூடதான் சண்டை போடுவா ... நான் தான் சின்னபுள்ள தனமாக நடந்துட்டேன்.. நல்லவேளை அவளுக்கு தெரியாது தெரிஞ்சுது அவ்வளவு தான்." என்றான்.
அதைக்கேட்ட ஆருஷி" சரி நீ குணமானதும் அபி கூட போய் தொழில் பயிற்சி எடுத்துக்கோ முடிஞ்சதும் நம்ம பிசினஸ்அ விரிவுபடுத்தாலாம்" என கூறிவிட்டு சென்றான். ஆருஷி அவன் அறைக்கு வந்து தன் நண்பன் அனுப்பிய புகைப்படத்தை பார்த்து அதை தன் விரல்களால் வருடி ஒரு விஷம புன்னகையுடன் இரசித்துக் கொண்டிருந்தான். கனவிலும் நினைக்காத வகையில் அவர்களின் சந்திப்பு நடக்க போவதை அறியாமல் அவன் ஒரு கணக்கை வகுத்துக் கொண்டிருந்தான்.
-----------------------------------------------
விக்னேஷை அடித்து விட்டு வந்ததிலிருந்தே மூவருக்குள்ளும் பயம் இருந்து கொண்டே தான் இருந்தது ... எங்கே மீண்டும் பிரச்சனை வந்துவிடுமோ என...
அவனை பற்றி முழுவிவரம் விசாரிக்கும் போது ஒரே பையன் என்றும்.. பணக்காரர்கள் என்றாலும் அவரின் தந்தை அவ்வளவு தைரியசாலி இல்லை தான் உண்டு தன் வேலையுண்டு என தொழில் முடிவுகள் கூட வேறு ஒருவர் தான் எடுப்பர் என்றும் அறிந்தவர்கள் வருவதை பார்த்து கொள்ளலாம் என தான் இறங்கிவிட்டனர்.
அதுவும் தங்கையை தூக்குவேன் என சொல்லியவனை சாதரணமாக விட அவர்கள் ஒன்றும் அவ்வளவு நல்லவர்கள் இல்லையே.. ரவி கூட முதலில் தவறு என நினைத்தவன் பேசி பார்கலாம் என்று தான் நினைத்தான் ஆனால் அவன் மேலும் கோபம் கொண்டு ஸ்ரீ க்கு ஏதும் தொல்லை கொடுத்தால் என்ன செய்ய என்றே சரி என்று கூறினான்.
நினைத்தை செய்த பின் அவர் தந்தை டீசி வாங்கி வருவதை கண்டு தான் சற்று நிம்மதி ஆனார்கள். அதன்பின் அவன் வெளியூர் அனுப்பபட்டான் என்று கேள்வி பட்டதிலிருந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இருந்தும் ஸ்ரீ க்கு மிகுந்த பாதுகாப்பு செய்தனர். ராம் முன்பை விட அவளுக்கு நிழலாகிபோனான்.அதைவிட முக்கியமாக இந்த விசயத்தை அவளுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.இல்லையேல் ஸ்ரீ யே அனைவரையும் கூட்டி பஞ்சாயத்து வைத்து வீட்டை விட்டு துரத்தி விடுவாள். ஏனெனில் அவ்வளவு கண்டிப்பு தன்னால் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதில் அவ்வளவு உறுதியானவள்.
நாட்கள் வாரங்களாக அன்று ரவி தன் ஐபிஎஸ் பயிற்சிக்காக டெல்லி செல்லவுள்ளான்..அங்கு அண்ணன் தம்பி என அனைவரின் வீடே பரபரப்பாக இருந்தது..பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா என அனைவரும் ரவியை மாறி மாறி அறிவுரை கூறி உணவுகளை ஊட்டிவிட்டு என வீடே அல்லோலப்பட்டது.. ரவியோ அனைவரின் பாசமழையிலும் விருப்பியே நனைந்தான் எனலாம்..
இரவு கோவையில் பஸ் ஏறி விடியற்காலை ஐந்து மணிக்கு சென்னையில் உள்ள டெல்லி செல்லும் விமானத்தை பிடிக்க வேண்டும்.. விஷ்ணு வையும் ரவியையும் தனியாக அழைத்து ஸ்ரீ யை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொன்னான்.
ஸ்ரீ ரவியை கட்டிக் கொண்டு ஆல் த பெஸ்ட் சொல்ல ரவியோ தனியாக எங்கும் செல்ல கூடாது என்று பல அறிவுரைகள் கூறினான். இதுவே அவன் ஸ்ரீ யை கடைசியாக பார்ப்பது என தெரியாமல் அறிவுரை கூறிக் கொண்டிருந்தான்..
பெரியவர்களிடம் ஆசி வாங்கி கொண்டும் அனைவரிடமும் பிரியாவிடை பெற்று தன் கனவை நினைவாக்க சென்றான்.
காலச்சக்கரம் யாருக்கும் காத்திராமல் அதன் பணியை செவ்வனே செய்ய ராமும் ஸ்ரீ யும் கல்லூரியில் இறுதி கட்டத்தில் இருந்தனர். ராமிற்கு பெங்களூரில் உள்ள பிரபல நிறுவனத்திலும், ஸ்ரீ க்கு கோவையிலேயே ஒரு நிறுவனத்திலும் வேலை கிடைத்தது..
ஸ்ரீ க்கு மூன்று மாதங்கள் பயிற்சிக்காக சென்னை செல்லவும் அழைப்பு வந்தது. முதலில் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஸ்ரீ தனியாக சென்னை செல்வதில் சற்றும் விருப்பம் இல்லை ... அதுவும் ராம் பெங்களூர் செல்ல அவனும் இல்லாது எவ்வாறு தனியே அனுப்புவது என்பதில் துளியும் ஆர்வம் இல்லை..
பின்னர் தான் 'பெண்பிள்ளை சொந்தகாலில் நின்று பழகட்டும் மூன்று மாதங்கள் தானே அதன்பின் கோவையே வந்துவிடலாம்.. சென்னையில் தன் நண்பன் வீடு உள்ளது அவனுடைய பெண்ணும் அதே நிறுவனத்தில் வேலை செய்கிறாள் .. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்' என்று கோபால் பலவாறு பேசியே அனைவரையும் சம்மதிக்க வைத்தார்..
ஏனெனில் ஸ்ரீ அவரின் செல்லமகள் ஆம் அவரின் மனைவி இறந்த பிறகு அவருக்கு ஸ்ரீ யே பெரும் ஆறுதல்.
மற்றவர்கள் தடுக்க ஸ்ரீ நேராக வந்தது தன் கோபால் சித்தாப்பாவிடமே. படித்தவர் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள் என்பதே அவளின் எண்ணம்..
அவர் கூறியதும் சரியென படவே அனைவரும் சம்மதித்தனர். இருந்தும் வள்ளி அப்பத்தாவை சமாளிப்பதற்குள் அனைவருக்கும் தான் போதும் போதும் என்றாகி விட்டது.
இறுதியில் அனைவரிடமும் கெஞ்சி கொஞ்சி என சம்மதம் பெற்று என அவள் சென்னை கிளம்பும் நாளும் வந்தது ... மனோஜ் தான் ஸ்ரீ யை கட்டிக் கொண்டு ஒரே அழுகை. பின் அவனை சமாதானம் செய்து அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று கிளம்பினாள்..
இரவு எட்டு மணிக்கு இரயில் குடும்பம் மொத்தமும் ரயில்வே ஸ்டேஷனில் குவிந்து விட்டனர். தாயும் சித்திகளும் அவளுக்கு பல அறிவுரைகள் கூறி சவிதா வாழ்த்துகள் கூறியும் வழியனுப்பினர். உடன் ஸ்ரீ யின் தந்தை, விஷ்ணு, கோபால்,ராம், சென்றனர்.
வண்டி கிளம்பும் அறிவிப்பு வர இவளோ வண்டியின் படிகளில் நின்று தன் குடும்பத்தை கண்களால் நிரப்பிக் கொண்டாள்.. ஏனோ மனம் பாரமாக இருப்பது போல் உணர்ந்தால்... பிறந்ததிலிருந்து குடும்பத்தையே பிரிந்து இருந்திராதவள் மூன்று மாதங்கள் எவ்வாறு இருக்க போகிறாள்..
இனி இவர்களை காணவே முடியாதோ என தோன்றிய நொடி இதயம் வேகமாக துடிக்க நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்து பயத்தை போக்க முயற்சித்தாள்.. இரயில் வண்டி நகரத்துவங்க அவளும் அனைவருக்கும் கையசைத்து விடை பெற்றாள்.. மூன்று மாதங்கள் எவ்வாறு அவளை விட்டு இருக்க போகிறோம் என பெரியவர்கள் கண்கலங்கினர்..
இவர்களை கண்ட விதியோ இனி ஆயுசு முழுக்க இதே நிலை தான் என அகோரமாக சிரித்தது...
பார்ப்போம் விதி ஜெயிக்குமா!!! இல்லை இவர்களின் பாசம் ஜெயிக்குமா என்று இனி வரும் நாட்களில்....
(இக்கதையின் போக்கை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே... சரியாக தான் கதை செல்கிறதா என்பதில் சிறு பயம்... உங்கள் கருத்துக்கள் நிறையாயினும் குறைகளாயினும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன்.... உங்கள் கருத்துக்களே என் ஊக்கம்... நன்றி ?)