ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனிக்கும் விஷமடி நீ- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
இனிக்கும் விஷம் நீயடி


அத்தியாயம் 1


மதுரை மாவட்டம் திருவிழாவுக்கு பேர் போன ஊர்! சோழவந்தான் அருகே கச்சிராப்பு கிராமம் அய்யனார் சுவாமி, ஊர்காவலன் சுவாமி, கோடிப்புலி கருப்புசாமி திருவிழா கோலாகலமாக நடந்துக் கொண்டிருந்தது. அங்கே குதிரை எடுப்பு திருவிழா பல ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவிருந்தது.

அங்காளி, பங்காளி, மாமன், மச்சான் என்று அனைத்து வீடுகளிலும் சொந்தங்கள் வரிசை கட்டி நிரம்பி வழிந்தது... புரவி எடுப்பவர் ஏழு நாளும் விரதம் இருப்பார்கள்... வண்ண கோலங்கள் வாசலை நிறைத்து போட்டிருந்தனர் வீட்டுப் பெண்கள்... குழந்தைகளும் விளையாட்டு சத்தமும், குமரிகளின் சிரிப்பும் ஒவ்வொரு வீட்டிலும் கடல் அலை போல எதிரொலித்துக்கொண்டிருந்தது.

அந்த ஊர் நட்டாமைக்குடும்பம் வீரய்யன் நாச்சியம்மாள் பரம்பரை பணக்காரர்கள்... நெல், கரும்பு, வெற்றிலை தோட்டம் என கண்ணுக்கெட்டும் தூரம் அவர்களுக்கு சொந்தமான பூமி... வீரய்யனுக்கு வயதாகிவிட்டாலும் இன்னும் நரைத்த மீசையை முறுக்கிக்கொண்டு நிற்பார்... அந்த வீட்டில் பெண்களை தெய்வமாக மதிப்பார்கள்.

வீரய்யன் குடும்ப விசயத்தில் நாச்சியை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க மாட்டார்... அவ்வளவு அன்னியோன்யமான தம்பதிகள் இருவரும்... அவர்களது மகன் ஐய்யனார் வீரய்யனுக்கு பிறகு இந்த ஊர் நாட்டாமை பதவியை ஏற்றுக்கொண்டார்... எந்த ஊரில் பஞ்சாயத்து என்றாலும் ஐய்யனாரை கூப்பிடாமல் நடத்தமாட்டார்கள்... அவரது பேச்சு வெட்டு ஒன்று துண்டு என்று இருக்கும்... ஐய்யனாருக்கு பாதுகாப்பாய் அவரது மகன் துரைசிங்கம் அருவாளை வைத்துக்கொண்டு கருப்ப சாமியை போல நிற்பான்... நம் கதையின் நாயகன் துரைசிங்கத்தை மீறி ஐய்யானாரின் முடியைக்கூட தொட முடியாது... அப்படி தொட நினைத்தால் அவர்களின் கை வெட்டுப்பட்டு நிலத்தில் விழுந்துவிடும்...

துரைசிங்கம் பெயரை கேட்டாலே அந்த ஊர் மக்களுக்கு கொஞ்சம் பயம் வரும்தான்... தவறு செய்பவர்களுக்கு கருப்பசாமியாய் நின்று தண்டனை கொடுப்பான் துரைசிங்கம்... குடித்துவிட்டு வீதியில் ஆட்டம் போட்டால் அவர்களின் கைகளை உடைத்து புத்தூர் கட்டு போட வைத்து விடுவான் தன் சொந்த செலவில். அதே சமயம் அவன் மீசையை முறுக்கி ராயல் என்ஃபீல்டை ஓட்டும் அழகில் அந்த ஊர் பெண்கள் பார்த்து மயங்காமல் இருந்ததில்லை.

இளவட்ட பசங்க பஸ்ஸ்டாப்பில் பெண்களிடம் வம்பு இழுத்துவிடுவான்களென்று காலையில் பஸ் ஸ்டாப் பக்கம் வண்டியை விட்டு விடுவான் துரைசிங்கம். அவன் ஊருக்கு மட்டும் காவலன் கிடையாது பெண்களுக்கும் பாதுகாப்பு கவசமாக இருப்பவன் துரைசிங்கம்...

இப்படித்தான் அந்த ஊருக்கு புதிதாய் வந்த போஸ்ட் மாஸ்டர் மகன் காலேஜ் போகும் பெண்களிடம் வம்பு இழுத்துக்கொண்டிருந்தான்... பக்கத்து ஊருக்கு பஞ்சாயத்துக்குச் சென்றவன் அந்த வழியே வந்ததும் வேகமாய் வண்டியை விட்டு இறங்கியவன் வம்பு செய்துக் கொண்டிருந்தவன் சட்டையை இழுத்து பிடித்து எலும்பை எண்ணிவிட்டான்.

போஸ்ட் மாஸ்டர் துரைசிங்கம் காலில் விழுந்து “என் மகன் இனிமே பொண்ணுங்களை கிண்டல் பண்ணமாட்டான்” கெஞ்சியதும்தான் அவனை விட்டான் துரைசிங்கம்

"இனிமேல் இவன் கண்ணு எங்க ஊரு பொண்ணுங்க மேல தப்பா விழுந்துச்சு!! கண்ணை நோண்டி எங்க ஊரு வைகை ஆத்துல போட்டிருவேன்” என்று மீசையை முறுக்கி சட்டை காலரை இழுத்து விட்டுக்கொண்டு ஆத்திரம் அடங்காதவனாக நின்றிருந்தான்.

என் மகனை இந்த ஊருக்காக வளர்த்திருக்கேன் என்று மார்த்தட்டிக்கொள்வார் ஐய்யனார்.

துரைசிங்கத்துக்கு தும்பை பூ வெள்ளை சட்டையும், ப்ளு ஜுன்ஸும்தான் அவனின் பிரத்யேக உடை... ஏதாவது விசேஷம் என்றால் பட்டு வேஷ்டி, பட்டு சட்டைதான் போடணும் என்று நாச்சியாரின் ஆணை வந்து விழும். நாச்சியாருக்கு செல்லப்பேரன் துரைசிங்கம்தான்... குமரனிடம் சண்டை போட்டுக் கொண்டேயிருப்பார் நாச்சி. இப்போதும் பல வருடங்களுக்கு பிறகு நடக்கும் திருவிழாவில் எதிரி ஊர்காரர்கள் தங்களது திருவிழாவில் அசம்பாவிதம் ஏற்படுத்திவிடுவார்கள் என்று கண்கொத்தி பாம்பாக கோவிலையே சுத்தி வந்துக் கொண்டிருக்கிறான் நம் நாயகன் துரைசிங்கம்.

ஆறடிக்கும் கொஞ்சம் அதிகம் உயரமானவன்! பச்சை முட்டையும், கறியும், மீனும் சாப்பிட்டு உடலை திடகாத்திரமாக வைத்திருக்கும் கட்டிளம் காளை... எதிரிகளை தன் பார்வையால் அஞ்சி நடுங்க வைப்பான்... பத்து பேர் அரிவாளோடு வந்து நின்றாலும் அசராது சுத்தி சுத்தி பேசும் அவன் கையில் இருக்கும் அரிவாள்... அவனிடம் முன்னே நின்று பேசவே பயந்து நடுங்குவார்கள் அவர்கள் வீட்டில் இருப்பவர்களே! குமரனோ “அண்ணா” என்று பேச்சோடு நிறுத்திக்கொள்வான்... ஆனால் தம்பிக்கு என்ன தேவையென்று அறிந்து அடுத்த நிமிடம் செய்துவிடுவான்... இருவரும் முகம் கொடுத்து பேசிக்கொள்ள மாட்டார்கள்.

துரைசிங்கம் சிரித்து பேசுகிறான் என்றால் அது வீரய்யனிடம் மட்டுமே!! அதுவும் அவனது சிரிப்பு அளவெடுத்து தான் இருக்கும். நாச்சியார் பேச்சை கேட்பான்! துரைசிங்கம் தினமும் வெளியேபோகும் முன் அவனது தாய் கோமதியின் காலில் விழாமல் கூட இருந்து விடுவான்!! ஆனால் நாச்சியார் காலில் விழாமல் எந்த பஞ்சாயத்திற்கும் போகமாட்டான் துரைசிங்கம்.

துரைசிங்கம் கண்ணிலும் மண்ணைத்தூவ காத்துக்கொண்டிருந்தார் ஒருகாலத்தில் ஐய்யனாரின் நண்பனாக இருந்து அவரது குடும்பத்திற்கே துரோகம் செய்து விட்ட ஆதிபெருமாள்.

நாச்சியோ "ஏத்தா மருமகளே என்ற மூத்த பேராண்டி எங்கன காலையிலிருந்து என் கண்ணுலயே படலயே!" என்றார் வெத்தலையை மென்றபடி.

"உங்க பேரன்தானே இன்னிக்கு திருவிழாவுல யாரும் தண்ணியை போட்டுக்கிட்டு வம்பிழுப்பானுக அவனுங்க சுளுக்கு எடுக்கணும்னு வெள்ளனவே கிளம்பி போய்ட்டானுங்க அத்தை! "

"சின்னவன் குமரன் எங்கன அவனையும் காணோமே அங்காளி பங்காளி வந்திருக்காங்க அவங்களை வரவேற்கணும்ல" என்றார் இழுவையாக.

"சின்னவன் தோட்டத்துக்கு வாழை இலை அறுக்க போயிருக்கான் அத்தை இதோ வந்துட்டான் பாருங்க" என்றபடியே சமையல்கட்டுக்குள் சென்றார் ஐய்யனாரின் மனைவி கோமதி.

"என்னடா சின்னவனே சாப்பாடு போடுற இடத்தில சலசலப்பு கேட்குது பாரு!! அங்கன என்ன வேணும்னு கேட்டு சொந்தங்களை கவனி பேராண்டி" என்றார் காதில் போட்டிருந்த பெரிய லோலாக்கு ஆட

"எனக்கு தெரியும் அப்பத்தா! நீ முகத்தை ஆட்டாத! உன் காதில் போட்டிருக்க தோடு அவிழ்ந்து விழுந்துடும் போல" என்று அவன் கேலி பேசி சிரித்தபடி வாழை இலையோடு பந்தி நடக்கும் இடத்திற்குச் சென்றான்.

"டேய் லந்தா பேசுறியா... என் பெரிய பேரன் வரட்டும் அவன்கிட்ட சொல்லி இதை விட பெரிய தோடா வாங்கி மாட்டுவேன்... உன்னை பத்தி ரெண்டு வார்த்தை அதிகமா அள்ளி வீசுறேன் பாரு" என்றார் காரை பல்லைக்காட்டி சிரித்து.

பந்தியை சரி பார்த்துக்கொண்டிருந்த குமரன் காதில் நாச்சியார் பேசியது கேட்டுவிட்டது. "சாப்பிடுங்க மாமா இதோ வரேன்" என்று நாச்சியாரிடம் வந்தவன் "அப்பத்தா நான் உனக்கு என்ன பாவம் செய்தேன்! சும்மா உன்கிட்ட விளையாடினேன்! நானே உனக்கு பெரிய தோடா வாங்கித்தரேன் அண்ணாகிட்ட என்னை எக்குதப்பா சொல்லிடாதே" அவர் முன்னே மண்டியிட்டான்.

"அப்படி வாடா பொடிப்பயலே என்னையே நீ பரிகாசம் பண்ணி சிரிக்கறவன்.. இன்னும் எதாவது என்கிட்ட கிறுக்குத்தனம் செய்தா உன் காதல் விவகாரத்தை உன் அண்ணன்கிட்ட சொல்லிபுடுவேன்" என்றார் தலையை ஆட்டிக்கொண்டே

"அப்பத்தா நான் உன் காலுல விழுந்துட்டேன் ஐ ஆம் சரண்டர்" என்று சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டான்.

"என்னடா சின்ன பேராண்டி இப்பவே உங்க அப்பத்தா காலுல விழற... நான்தான் தினமும் அவ காலுல விழறேன்" என்று நரைத்த மீசையை முறுக்கிக் கொண்டு வந்தார் வீரய்யன்.

"நல்லவேளை தாத்தா நீங்க வந்தீங்க! உங்க சம்சாரத்தை எப்படித்தான் சமாளிக்குறீங்களோ" என்று தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து பந்தியை பார்க்கச் சென்று விட்டான்.

நாச்சியார் முகத்தில் ஒரு இனம் புரியாத கலவரம் இருந்ததை கண்ட வீரய்யனோ "என்ன நாச்சி திருவிழாவுல ஏதாவது அசம்பாவிதம் நடந்திரும்னு நீ பயப்படறியா! நம்ம சிங்கக்குட்டி பேராண்டி இருக்கும்போது நீ கலங்குவது சரியில்லடி" என்றார் மீசையை தடவிக்கொண்டு

"என் பேரன் சிங்கம்போல தனியா நின்று எதிரியை தொடை நடுங்க ஓட வைப்பானு எனக்கு தெரியும்... ஆனா என் மனசு சரியில்லைங்க ஏதோ வெடவெடனு வருது... வெளியில சிரிக்குறேன்... உள்ளுக்குள்ள தவிப்பா இருக்கு என் சிங்கத்துக்கு ஒரு கால் கட்டு போட்டுடணும்... உங்க பேச்சுக்கு மட்டும்தான் சிங்கம் கட்டுப்படுவான்!" கணவனின் கையை பிடித்துக்கொண்டு "திருவிழா முடிச்சதும் நம்ம துரை சிங்கத்துக்கும் அலர்விழிக்கும் கல்யாணத்தை பண்ணிடலாம்" என்றார் நாச்சியார்.

"ஏலேய் பக்கத்து ஊருல பல வருசமாக நடக்காத இருந்த ஊர் திருவிழா இந்த வருசம் நடக்குதே! திருவிழால கலாட்டா பண்ணாம இருந்தா எப்படிடா! என்னை அவங்க ஊருக்குள்ள கோமணத்தோட ஓட ஓட விரட்டி அடிச்சு அனுப்பினதை நான் மறந்துருவேனா! என்ன? இப்போ ஊர் திருவிழாக்குள்ள கலாட்டா பண்ணுங்க! எவனாவது ஒருத்தன் கையை வெட்டிக்கொண்டு வாங்க நான் பேரானந்தம் படுவேன்" என்று வன்மம் கொண்டு கைகளை அகல விரித்து சிரித்தார் ஆணவத்தில்.

ஆணவத்தில் ஆடியவர்கள் இந்த அகிலத்தில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை ஆதிபெருமாள்.

ஆனால் ஆதிபெருமாளின் ஆட்களில் ஒருவன் தலையை சொறிந்துக் கொண்டு கையை கட்டி ஆதி பெருமாளின் முன்னே தலைகுனிந்து "ஐயா திருவிழா நடக்குற இடத்துல ஐய்யனார் மகன் துரைசிங்கம் இருப்பாரே!! அவரை மீறி நம்மாள ஒரு துரும்பை கூட அசைக்க முடியாதுங்க" என்றான் எச்சிலை விழுங்கிக்கொண்டு

"துரைசிங்கம்!! துரைசிங்கம்!! அவனுக்கு என்ன பெரிய கொம்பா முளைச்சிருக்கு... என்னை கறுவறுத்த குடும்பத்துல அத்தனை பேரையும் காவு வாங்காம விடமாட்டேன் இந்த ஆதிப்பெருமாள்" என்று தொடை தட்டினார் ஆதிப்பெருமாள்.. அங்கே காபி கப்புடன் வந்த கோதையை பார்த்து "எல்லாம் இவளால வந்தது" என்று சினம் கொண்டு ஆத்திரத்துடன் கோதையின் கையிலிருந்த காபி கப்பை வாங்கி சுவற்றில் விசிறி அடித்தார் ஆதிபெருமாள். காபி கப் சுக்கு நூறாக நொறுங்கியது

"என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது அந்த கிராமத்துல ஊர் திருவிழா நல்லபடியா நடக்ககூடாது" என்றார் ஆதிபெருமாள் கருப்பன் சக்தி அறியாமல்

தந்தையின் ஆணவ கோபத்தை கண்ட ஆதிபெருமாள் மகன் பொன்வண்ணனோ 'இவரு ஏன் காட்டு மிராண்டியா இருக்காருனு தெரியலையே' என்று தலையை குலுக்கிக்கொண்டுச் சென்றான்.

பொண்வண்ணன் டாக்டராக இருக்கிறான்... ஆதிபெருமாளின் குணம் இவனிடம் இல்லை... அன்பே உருவான கோதையின் அம்சம் பொண்வண்ணன்.

இதோ வானவேடிக்கைகள் வெடிக்கத் தொடங்கியது... புரவிக்கு கண்திறந்து சுமந்துச் சென்றனர்... கிராமத்து மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கருப்பசாமியாக துரைசிங்கம் கழுத்தில் ரோஜாப்பூ மாலையோட கையில் அருவாள் ஏந்திக் கொண்டு நாக்கை கடித்துக்கொண்டு “ம்ம்” உறுமல் போட்டு அருளோடு நடந்து சென்று அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு தோளை உலுக்கிக் கண்ணை அகல விரித்து பார்ப்பவர்கள் பயந்து நடுங்கும் விதமாக இருந்தான் துரைசிங்கம்.

இதில் பாட்டு கச்சேரி நடத்துபவர்கள் குழுவும் இவர்களுடன் நடந்து வந்தது.

கருப்பன் வாரான் எங்கள் கருப்பசாமி

கார்மேகம் போலே வாரான் கருப்பசாமி.

முன்கொண்டைக்காரன் வாரான் கருப்பசாமி

முன்கோபக்காரன் வாரான் கருப்பசாமி.

சாய்ந்த கொண்டைக்காரன் வாரான் கருப்பசாமி

சாஸ்தா காவல்காரன் வாரான் கருப்பசாமி.

பம்பை பாலன் காவல் காரன் கருப்பசாமி

பதினெட்டாம் படி காவல் கருப்பசாமி.

சந்தனப் பொட்டுக்காரன் கருப்பசாமி

சபரிமலைக் காவல்காரன் கருப்பசாமி.

சல்லடையைக் கட்டி வாரான் கருப்பசாமி

சடைமுடிக்காரன் வாரான் கருப்பசாமி.

கச்சையைக் கட்டி வாரான் கருப்பசாமி

கை அரிவாள் காட்டி வாரான் கருப்பசாமி.

மீசையை முறுக்கி வாரான் கருப்பசாமி

முச்சந்தியில் நடந்து வாரான் கருப்பசாமி.


பாடிக்கொண்டு வர... கூட்டத்தில் ஆதிபெருமாளின் ஆட்களும் நுழைந்து விட்டனர்... துரைசிங்கத்திடம் கூட தப்பித்து விடலாம் கருப்பசாமியிடம் தகராறு பண்ண வந்தவர்களை கருப்பு விடுமா..! இதோ அத்தனை கூட்டத்திலும் கருப்பு ஆடுகளை கண்டு ஒவ்வொருவரையும் பிடித்து தள்ளி விடுவதிலே அவனது கைகால்கள் இருக்கும் இடம் தெரியாது மாறிப்போனது.

“கருப்பன்டா நான் என்னைய மீறி இங்க எதுவும் நடக்காது” என்று துள்ளிக்குதித்து ஆடினான்... அந்த ஊரை காக்கும் கருப்ப சாமியான துரைசிங்கம்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
2. அத்தியாயம்

புரவிகளை அபிஷேக ஆராதனைகளோடு அம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து வைத்தபின் பெண்கள் மாவிளக்கு எடுத்து குலவி போட்டு பாட்டு பாடினார்கள். வீரய்யன் நாச்சியம்மாள் குடும்பம் கோவிலில் வந்தவர்கள் சாமி ஆடி வரும் துரை சிங்கத்தை பார்க்க நின்றிருந்தனர்.

துரைசிங்கம் மேல் இருந்த கருப்பண்ணன் சாமி அவனை விட்டு இறங்கியதும் நாச்சியம்மாள் சாமியாடி வந்த பேரனுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி கருப்பண்ண சாமியின் உக்கிரத்தை குறைத்தார். துரைசிங்கம் கையில் வைத்திருந்த அருவாளை வீரய்யன் வாங்கி கோவில் பூசாரியிடம் “பத்திரம்” என்று கொடுத்துவிட்டார்.

துரைசிங்கம் அம்மன் முன்பு நிலத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு எழுந்தான். கோமதி மகனுக்கு மாற்று உடையை கொடுக்க ஈர சட்டையை கழட்டியவனோ “அப்பத்தா” என்றதும் "ராசா" என்று பேரனிடமிருந்து சட்டை வேஷ்டியை வாங்கிக்கொண்டார்.

“ஏய்யா உடம்பு ஏதும் வம்பு பண்ணுதோ! சித்த இப்படி வந்து உட்காரு” என்று வீரய்யனுக்காக போட்டிருந்த நாற்காலியை கண்காட்டினார் நாச்சியார்.

வேஷ்டியை கட்டி முடித்த துரைசிங்கமோ “அப்பத்தா என் உடம்புக்கு என்ன வரப் போகுது! இதோ நல்லா திடகாத்திரமா இருக்கேன் பாருங்க” என்று நெஞ்சை நிமிர்த்தி காட்டி சிங்கப்பல் தெரிய புன்முறுவல் பூத்தான் துரை சிங்கம்.

“இல்ல கண்ணு எம்மா தொலைவு சாமியாடி வந்திருக்க... கொஞ்சம் உடம்புக்கு ஓய்வு கொடுக்கணும்ல" என்று பேரனின் மீது கரிசனையாக துரைசிங்கத்தின் தோளை தொட்டார் நாச்சியார்.

“ஏன் டி நாச்சி என் பேரன் இளவட்ட பையன்!! ஓடுற பாம்பை காலுல மிதிக்கிற வயசு என்ற பேரனுக்கு... அவன் உடம்பு நோகுமா என்ன? நீ ஏதாவது உளறிக்கிட்டு நிக்காத அப்படி போய் உட்காரு! உனக்குத்தான் பேசவே மூச்சு வாங்குது” என்று மனைவியை கிண்டல் செய்தார் வீரய்யன்.

“கிழவனுக்கு குசும்பு இன்னும் போகலையே! இராவுக்கு கை வலிக்குது, கால் வலிக்குது அமுக்கி விடுனு என் கிட்டதான் வரணும் ம்க்கும்" என்று குமட்டில் இடித்து நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டார் நாச்சி.

வயதானாலும் இருவரும் போடும் சண்டையை பார்க்க துரைசிங்கத்திற்கு சிரிப்பு வரும்... அவன் சிரிப்பதே அரிது... இப்போதும் “அப்பத்தா திருவிழாவுல அசலூர் ரவுடி பயலுக பொண்ணுங்ககிட்ட உரண்டையை இழுப்பானுவக அவனுங்களுக்கு சுளுக்கு எடுக்கணும்ல. அதுமட்டுமா அப்பாவுக்கு காவலா நிக்கணும் நான் வாரேன்!" மீசையை திருகிவிட்டு பறந்துவிட்டான் துரைசிங்கம்.

துரைசிங்கம் போன் அடிக்க “சொல்லுவே என்ன பதட்டமா இருக்க!” என்றான் கர்ஜனை குரலோடு.

“அண்ணே ஐய்யாவ சம்பவம் பண்ணனும்னு ஒரு கும்பல் ஊருக்குள்ள சுத்துதுனு எனக்கு இரகசிய தகவல் வந்திருக்கு கொஞ்சம் சூதானமா இருங்க!" என்றான் முருகன்... துரை சிங்கத்தின் நம்பிக்கைக்குரியவன்...

“ஏலே அவனுங்கள நேருக்கு நேர் மோதிப் பார்க்க சொல்லுவே! என் அப்பாவை தொட்டா கண்டம் துண்டமா வெட்டி போட்டுவேன் தெரிஞ்சும் மோதுறாங்கன்னா அவனுங்கள கண்டிப்பா அந்த ஆள் அனுப்பி இருக்கணும்... என்னை மீறி எங்கப்பாவை ஒண்ணும் பண்ணமுடியாதுவே நீ அங்கனயே இருந்து அங்க நடக்குற செய்தியை சொல்லு” என்றான் அவனது கோபத்தில் உச்சி முடி நட்டுக்கொண்டது.

கோவிலில் கூட்டம் அலைமோதியது. அதில் இரண்டு பேர் துரைசிங்கத்தை பார்த்து மறைந்தனர் முதுகில் சொருகி வைத்திருந்த அருவாளை தொட்டுப்பார்த்துக் கொண்டு மெதுவாக புலியை போல பதுங்கி பதுங்கிச் சென்றான் துரைசிங்கம்.

துரைசிங்கம் பின் தொடர்கிறான் என்று தெரிந்து விட்டது போலும் அவர்களுக்கு கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போய் விட்டனர்.

துரைசிங்கம் சுற்றிப் சுற்றிப் பார்த்துக்கொண்டே போனவன் குமரன் மீது இடித்து நின்றான். குமரனோ முகமூடி மாஸ்க்கை போட்டிருக்க தான் தேடி வந்தவர்களென நினைத்து அவனது கழுத்தில் கைபோட்டு மடக்கிப்பிடித்தான்.

குமரனால் “அண்ணா” என்று கத்த கூட முடியவில்லை துரைசிங்கத்தின் பிடி உடும்பு பிடியாக இருந்தது. தூரிகாவோ குமரனின் கழுத்தை இறுக்கிப்பிடித்து நிற்கும் துரைசிங்கத்தை பார்த்து வாயிலிருந்து சேமியா ஐஸ்குச்சியை கீழே போட்டு “அ.அண்ணே குமரன் அண்ணாவை விடுங்கண்ணா” என்று மூச்சிரைக்க துரைசிங்கத்தின் கையை தொட்டாள்.

துரைசிங்கமோ “குமரனாஆஆ” என்று உதட்டை கடித்து தனது பிடியை தளர்த்தி விட்டான்.

“லொக்!! லொக்” என்று இருமிய படியே கழுத்தை நீவிக் கொண்டு உட்கார்ந்து விட்டான் குமரன்.

“நீயெல்லாம் ஆம்பிள்ளை பையனாடா சும்மா கழுத்தை இறுக்கிப்பிடிச்சதுக்கு இப்படியா இருமி திணறுவ! சத்துக்கு செத்த பயலா நீ!! நாளைக்கு அப்பத்தாகிட்ட சொல்லி நல்லி எலும்பா சமைச்சு கொடுக்கச் சொல்லு!!” என்றவன் அப்போதும் அவனது பார்வை எதிரிகள் கொம்பேரி மூக்கனை போல கூட்டத்தில் அலைய விட்டிருந்தாலும் தங்கையிடம் “நீ இங்கன என்ன பண்ணுற அம்மாகூட நிற்க வேண்டியது தானே... தாவணியை தொங்க விடாதேனு சொல்லியிருக்கேன்ல!! ஏதாவது மாட்டி இழுத்தா என்ன பண்ணுவ புள்ள! உனக்கு எத்தனை முறை சொல்லுறது ஹான்!" என கண்ணை உருட்டி அதட்டினான் தூரிகாவை.

துரைசிங்கம் சொன்னதும் அடுத்த நொடி தொங்க விட்டிருந்த முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு “இனி கவனமா இருக்கேனுங்கண்ணா” என பயந்து போய் மெதுவாய் பேசி தலையை ஆட்டினாள்.

“புரவி எடுப்பு பார்த்தாச்சுல... காலையில கோவிலுக்கு வரலாம் இப்ப குமரன் கூட வீட்டுக்கு கிளம்பு தூரி” என்றவனோ அடுத்து அப்போது எழுந்து நின்ற குமரனிடம் “தங்கச்சியை தனியா விட்டு இங்கன வந்து யாரை சைட் அடிச்சிட்டு நிற்குற ம்ம்” என்று உறுமினான் குமரனிடம்.

“அ.அது அண்ணே தங்கச்சி ஐஸ் வாங்கிட்டு வரேனு போச்சு அதான்” என்று பூசி மொழுகினான் குமரன்.

“சரி!! சரி! வெட்டியா காரணம் பேசாம பாப்பாவை கூட்டிட்டு இடத்தை காலி பண்ணு” வேஷ்டியை மடித்துக்கட்டி திரும்பினான்.

ஐய்யனார் ஊர் பெரியவர்களுடன் பேசியபடியே நடந்து வந்துக் கொண்டிருந்தார்... ஏத்தி கட்டிய வேஷ்டியை இறக்கி விட்டு நெஞ்சை நிமிர்த்தி மார்புக்கு குறுக்கே கையை கட்டி சிரித்தாற் போல நின்றிருந்தான் துரைசிங்கம்.

“என்னப்பா துரைசிங்கம் அப்படியே கட்டபொம்மன் கணக்கா இருக்கப்பா!! நாளைக்கு ஒரு எட்டு எங்க வீட்டுக்கு வந்துட்டு போயிடு!! உங்க அத்தை கலையரசி என் மருமவன்கிட்ட நம்ம வீட்டு விருந்துக்கு அழைப்பு சொல்லிடுங்கனு பத்து முறை சொல்லி அனுப்பிச்சாப்பா” என்று சத்தமாக சிரித்தவர் அப்போதுதான் இருமி முடித்து நார்மலாகி நின்ற குமரனிடம் “என்ன சின்னமருமவனே நீங்களும் வந்துருங்க! மச்சான் மறுபடியும் உங்ககிட்ட சொல்லுறேன் நீங்களும் ஒரு எட்டு வந்துட்டு போயிடுங்க உங்க தங்கச்சி சொல்லி அனுப்பிச்சா அப்புறம் நான் வரேன்" என்று ஐய்யனாரிடம் சொல்லி மீசையை முறுக்கினார் கண்ணன்.

தூரிகாவோ “மாமா அத்தை தினமும் வீட்டுக்கு வரும்போதெல்லாம் எங்க வீட்டு கெடா விருந்துக்கு வந்துடுங்கனு பத்து முறை சொல்லிட்டாங்க!! உங்க வீடும் எங்கவீடும் ஒட்டுனாப்பலதானே இருக்கு... திருவிழா காப்பு கட்டுன நாளுல இருந்து நீங்களும் அத்தையும் நூறு முறை வந்துருங்கனு சொல்லிட்டீங்க” என்று குறும்பாக பேசியவளை துரைசிங்கம் ஒரு பார்வைதான் பார்த்தான்.

“என்ன பாப்பா பொது இடத்துல இப்படித்தான் கேலி பேசுவியா மாமாகிட்ட” என்று அதற்கும் தூரிகாவை அதட்டினான் துரைசிங்கம்.

தூரிகாவோ இதழை பிதுக்கி அழுகைக்கு தயாராக இருந்தவளை “விடு துரை சின்னபுள்ளதானே என் மருமவ மாமன்னு உரிமையா பேசியிருக்கா அதுக்கு போய் கோபப்படலாமா எனக்கு மட்டும் பையன் இருந்திருந்தா இந்த அழகி பொண்ணை என்வீட்டுக்கே கூட்டிட்டு போயிருப்பேன்” என்றார் கண்ணன் சத்தமாக சிரித்தார்.

வீட்டுக்கு போனா அண்ணன் திட்டுமோ என்று கண்ணில் பயத்தோடு நின்றிருந்த மகளை தலையசைத்து கூப்பிட ஒரே தாவில் ஐய்யனாரின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள் தூரிகா.

“என்ன பாப்பு அண்ணன் வைஞ்சிட்டானு வருத்தமா இருக்கா! துரைசிங்கம் சொன்னா அதுல அர்த்தம் இருக்கும் சரியா” என்று மகளின் தலையை வாஞ்சையாக வருடிக்கொடுத்தவர் “அச்சோ நம்மளையும் எதாவது சொல்லிடுவாரே அண்ணன்” என்று பம்மியபடியே நின்றிருந்த குமரனை பார்த்தவர் “நீ அண்ணன் கூட இருக்கியா இல்ல வீட்டுக்கு என்னோட வரியா?” என்று கேட்டபடியே காருக்கு பக்கம் சென்றார் ஐய்யனார்.

குமரனோ “நான் என் ப்ரண்ட்ஸ் கூட இருந்துட்டு வாரேனுங்கப்பா” என்று சொல்லி முடிக்கவில்லை...

"அடுத்த வாரம் செமஸ்டர் வருதுல திருவிழா கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் புத்தகத்தை கொஞ்சம் புரட்டிப்பாரு!! இந்த வருசமாவது டிகிரியை முழுசா அரியர் இல்லாம பாஸாகணும்னு!! அப்பத்தா வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு நெய்விளக்கு போடுறாங்க!! நீயும் பாஸாகறது போலயே இல்ல!! இப்ப வீட்டுக்கு கிளம்பு குமரா! நான் விடியற்காலை வூட்டுக்கு வாரேனுங்கப்பா” என்று ஐய்யனாரிடம் சொல்லியவன் காலரை தூக்கி விட்டு அவன் தேடி வந்த ஆட்கள் கண்ணுக்கு தெரிகிறார்களா என்று கழுகு பார்வை பார்த்து சுற்றிக்கொண்டிருந்தான் துரைசிங்கம்.

துரைசிங்கம் இன்றுதான் தன்னிடம் நீளமாக பேச்சு கொடுத்திருக்கிறான் என்று சந்சோத்தில் காரில் ஏறினான் குமரன்...

ஆதிபெருமாள் ஆட்கள் துரைசிங்கத்தின் கண்ணில் படாமல் மறைந்துக் கொண்டே சென்றார்கள்... திருவிழா கடைகளை தார்பாய்களை கொண்டு மூடிக்கொண்டிருந்தனர்.

துரைசிங்கமோ “டேய் முருகா எங்கடா இருக்க ரொம்ப நேரமா போன் போடுறேன் கோவிலுக்கு விரசா வந்து சேரு” என்று கணீர் குரலில் பேச “அண்ணே இன்னும் ஐஞ்சு நிமிசத்துல வந்து நிற்பேன் உங்க முன்னால” என்று பம்மி பேசினான் முருகன்.

“சீக்கிரம் வந்து சேரு” போனை வைத்தவன் முன்னே தலை நிறைய மல்லிகையும் கனகாம்பரமுமாய் தாவணியை இடுப்பில் சொருகிக் கொண்டு வளையல் கடைக்காரரிடம் “யோவ் 3 டஜன் கண்ணாடி வளையல் 100 ரூபாய் சொல்லுற 50 ரூபாய்தான் தருவேன் கொடு இல்லைனா கடையை காலி பண்ணுடுவேன் பார்த்துக்கோ” என்று வரிந்து கட்டி சண்டைக்கு நின்றிருந்தாள் அலர்விழி.

“என்னம்மா உன்னோட வம்பா போச்சு 50 ரூபாய்க்கு கட்டுப்படியாகாது... நாங்களும் இங்க கடைக்கு வாடகை கட்டித்தான் கடையை போட்டிருக்கோம் எனக்கு லாபம் கிடைக்கறது அஞ்சோ பத்தோ... அதுல தர ரேட்டுக்கு குறைச்சு கேட்டா என்னால கொடுக்க முடியாது வம்பு பண்ணாம இடத்தை காலி பண்ணுமா தூக்கம் வருது” என்று கடை தார்பாயை இழுத்து விட போனார்.

“யோவ் நான் யாரு தெரியுமா இந்த ஊரை காக்குற காவல்காரன் துரைசிங்கத்தோட பொண்டாட்டியாக போறவ!! நான் கேட்ட விலையில வளையலை கொடுக்க மாட்டியா! நாளைக்கு உன்னை கடையே இல்லாம பண்ணிடுவேன் பார்த்துக்கோ" புயலாக பேசியவளை கண்டு கடைக்காரோ “ஏம்மா பொண்ணு நீ துரைசிங்கம் ஐயாவோட முறைப்பொண்ணா ஆரம்பத்துலயே சொல்லியிருந்தா வளையலை காசு வாங்காமயே கொடுத்துருப்பேன்” என்று சிரித்தவரோ அவள் கேட்ட வளையலை எடுத்துக்கொடுத்தார்.

‘ஹான் நம்ம துரை மச்சான் பெயரை சொன்னா உலகத்தையே வாங்கலாம் போல’ என்று வளையலை வாங்கிக்கொண்டு திரும்ப துரைசிங்கம் கையை கட்டி தோரணையாக அவளை முறைத்திருந்தான்.

அலர்விழிக்கு அல்லுவிட்டது. “அ.அது மா.மாமா வ.வளையல் வா.வாங்க உ.உங்க பேரை” என்று தலையை இருபக்கமும் ஆட்டியவளுக்கு கைகள் நடுங்கி வளையல் கீழே விழும் முன் வளையலை பிடித்திருந்தான் துரைசிங்கம்.

“வளையல் வாங்கினா காசு கொடுக்க தெரியாதா புள்ள... உங்க அப்பாகிட்ட இல்லாத பணமா 100 ரூபாய் வளையலுக்கு பேரம் பேசுறவ... ஒழுங்கா வளையல்காரர் வளையலுக்கு கேட்ட காசை கொடுத்துட்டு வா! ஐய்யனாரோட மருமகள் ஏழைகளுக்கு உதவியா இருக்கணுமே தவிர இப்படி அவங்ககிட்ட இலவசமா பொருளை வாங்கக்கூடாது” என்று அவளுக்கு பாடம் எடுத்து கண்ணாலேயே மிரட்டினான் துரைசிங்கம்.

அலர்விழி தான் பொண்டாட்டி என்று நாச்சியின் மனதில் இருப்பது துரைசிங்கத்துக்கு தெரியாமல் இல்லை... அதுதான் அலர்விழியை ஐய்யனார் மருமகள் என்று சொல்லி விட்டான்.

அலர்விழியோ “மன்னிச்சிடுங்க மாமா இனிமே இப்படி பண்ண மாட்டேன்” என்று தலையை அசைத்து வளையல்காரரிடம் திரும்பி பர்ஸில் இருந்த பணத்தை கொடுத்தாள்.

வளையல்காரரோ “தம்பி நீங்க எங்களுக்கு குறைஞ்ச வாடகைக்கு தான் கடையை கொடுத்திருக்கீங்க இந்த வளையல் உங்க கல்யாணத்துக்கு என்னோட அன்பளிப்பா நினைச்சுக்கோங்க” என்று கடைக்காரர் பெருந்தன்மையாக பேசினார் துரைசிங்கத்திடம்.

“உங்க அன்பளிப்பு எனக்கு வேணும்தான் என் கல்யாணத்துல வந்து சாப்பிட்டு மனசார எங்களை வாழ்த்துங்க அதுவே போதும்” என்று தன் சட்டை பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து கடைக்காரரின் கையை பிடித்து வைத்துவிட்டான்.

அலர்விழியோ 'அச்சோ மாமா இந்த நேரம் எதுக்கு கடைக்கு வந்தேனு திட்டுமே!' என்று உதறலுடன் கையை பிசைந்துக் கொண்டு நின்றாள்.

அவள் பயந்தது போல “ஏ புள்ள நடுஜாமத்துல வெளியே வரதே தப்பு அதுவும் திருவிழா நேரம் அசலூர் காரணுவ ஐய்யனார் குடும்பத்தை வச்சு செய்யலாம்னு கங்கனம் கட்டி திரியறானுக... இப்படி ராத்திரி ஒத்தையா சுத்தினா என்ன அர்த்தம் ஹான்!" அவளை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு வந்தான் துரைசிங்கம்.

“அடி ஆத்தி” என்று முகத்தை தள்ளி வைத்து “எல்லாம் நீங்க இருக்க தைரியம்தான் மாமோய்” என்றாள் கண்ணைச்சிமிட்டி.

“அடிச்சு பல்லை பேத்திருவேன் பார்த்துக்கோ எல்லாம் உங்கப்பா கொடுக்குற செல்லம்தான் நீ இப்படி தனியா சுத்தறவ.” என்று அவளை மிரட்டியவனோ முருகன் பைக்கில் வர “டேய் முருகா பைக்கை கொடு விழியை விட்டுட்டு வரேன்” என்று “பைக்கில ஏறு” என்று அவனது புல்லட்டில் ஏறி உட்கார்ந்ததும் அலர்விழியோ ‘அச்சோ மாமா கூட பைக்குல் போறோமா செம ஜாலி... இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்குமா கல்யாணத்துக்கு முன்னால பைக்குல போறது செம கிக்கு’ என்று தோளைக்குலுக்கிக் கொண்டு சந்தோசத்தில் பைக்கில் ஏறி துரைசிங்கத்திடம் நெருங்கி உட்கார்ந்தாள்.

“தள்ளி உட்காரு விழி” என்றான் மிரட்டலாகதான்.

“அய்யே சும்மா ரொம்ப பிகு பண்ணாத மாமா திருவிழா முடிச்சதும் கல்யாணம்தானே" என அவளுக்குள் மெதுவாய் பேசியவள் “இப்ப நெருங்கி உட்கார்ந்தா என்ன?” அவள் சலித்துக்கொள்ள கண்ணாடி வழியே அலர்விழியை கண்ணை உருட்டி விழித்தான் துரைசிங்கம் அவனது பார்வையில் தள்ளி உட்கார்ந்துக் கொண்டாள்.

பைக்கை மெதுவாகவே ஓட்டினான். ‘ம்க்கும் கல்யாணத்துக்கு முன்ன அவன் அவன் கரும்புகாடு, சவுக்கு தோப்புனு சுத்துறாங்க நாம பக்கத்துல கூட போக முடியலை' என்று பெரும்மூச்சு விட்டுக்கொண்டாள் பெண்ணவள்.

அலர்விழி வீடு வந்ததும் “இறங்கு புள்ள” என்று பைக்கை முறுக்கிக்கொண்டே இருந்தான்.

பைக் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த கலையரசியோ “அட துரை!! வாய்யா வீட்டுக்குள்ள! சர்பத் கலக்கி தாரேன் குடிச்சிட்டு போலாம்” என்று மலர்ந்த புன்னகையுடன் மருமகனிடம் பாசமாக கேட்டார்.

“இருக்கட்டும் அத்தை நாளை விருந்துக்கு வந்து சாப்பிடுறேன்... அலர்விழி வெளியே எழுந்து வரதுகூட தெரியாம நீங்க தூங்கிட்டு இருந்திருக்கீங்க பாருங்க உங்களைச்சொல்லணும்!!” என்று அவருக்கும் திட்டிவிட்டு பைக்கை முறுக்கிச் சென்றுவிட்டான் துரைசிங்கம்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
“நீ எங்கடி துரை தம்பி கூட வர... என்கூடத்தானே தூங்கிட்டிருந்த எழுந்து பார்த்து இல்லைனதும் இப்பதான் உங்கப்பாகிட்டே கேட்டுக்கிட்டு இருந்தேன். என் மானத்தை வாங்குற நீ உன் கூட பிறந்தவ தாரகை எப்படி அமைதியா அடக்கம் ஒடுக்கமா இருக்கா!” என அலர்விழியை கறுவியபடியே அவள் காதை பிடித்து திருகினார்.

'போச்சு அம்மாகிட்ட மாட்டிவிட்டு போறாரு இந்த மாமா' என்று சிணுங்கியவள் “ம்மா எனக்கு நாளைக்கு போட்டுக்கற சேலை கலருக்கு வளையல் இல்ல!! அதான் வளையல் வாங்க கடைக்கு போயிருந்தேன். அதான் உங்க அண்ணன் மகன் காவலுக்கு இருக்க என்னை யாரும் எதுவும் பண்ணிட முடியுமா” என்றாள் தெனாவெட்டாக.

“எல்லாம் உங்கப்பன் கொடுக்கற செல்லம்!! நீ வாய் பேசுவ! வாடி உள்ளே!” அலர்விழியின் காதை விட்டு கையை பிடித்துச் சென்றார் கலையரசி.

குமரனோ தாரகைக்கு போனில் அழைத்தான். தாரகையோ அப்போது தான் ரெக்கார்டை எழுதி முடித்து படுக்கபோனாள்.

“சொ.சொல்லுங்க மாமா இந்த நேரம் போன் பண்ணியிருக்கீங்க!” என்றாள் காற்றை விட சன்னமான குரலில்.

“ம்க்கும் பகலில நான் போன் பண்ணி நீ எடுத்துட்டாலும் ஏன் சொல்லணும்!! அய்யோ அப்பா வந்துட்டாரு... அம்மா வந்துட்டாங்கானு போனை கட் பண்ணிவிடற போடி இவளே! ஒரு கிஸ் கூட கொடுக்க மாட்டே அண்ணனுக்கு கல்யாணம் ஆகி அடுத்து தூரிகாவுக்கு ஆகணும் அதுவரை ஒத்த முத்தத்துக்கு உன்கிட்ட நான் நாக்கை தொங்க போட்டு அலையணும் இல்லடி” என்று ஏறுக்கு மாறாக பேச “போ மாமா நீ நீ கெட்ட பையன் நா.நான் கல்யாணத்துக்கு முன்னால முத்தம் கொடுக்க மாட்டேன்... ஏதாவது இடக்கு மடக்கா பேசினா துரை மாமாகிட்ட சொல்லிப்புடுவேன்” என்று பெரிய ஆயுதத்தை கையில் எடுத்தாள்.

“ஆத்தா அங்காள பரமேஸ்வரி போதும் நீங்க உங்க முத்தத்தை நீங்களே வச்சுக்கோங்க!! என் முதுகுல அடி வாங்க தெம்பு இல்ல நாளைக்கு கோவில்ல பார்க்கலாம்” என்று டக்கென கட் செய்தான்.

விடிய விடிய கோவிலுக்கு காவலுக்கு இருந்தவன் விடியற்காலை வீட்டுக்கு வந்து குளிச்சு முடித்து பட்டுவேஷ்டி கட்டி பட்டுசட்டையின் முதல் பட்டனை போடாமல் விட்டான்... அவனது மார்பில் இருக்கும் புலி பல் நகம் வைத்த டாலர் செயின் அவனது கருமையான நிறத்தை எடுத்துக்காட்டியது. தலை முடியை ஜெல் வைத்து அடக்கியவன் மீசையை சீப்பு வைத்து சீவி கையால் முறுக்கி விட்டு டேபிள் மேல வைத்திருந்த தங்க காப்பை போட்டு முழங்கை வரை ஏத்தி விட்டு வேஷ்டியின் நுனியை பிடித்து வெளியே வந்தவனை கண்ட நாச்சியோ “அடி கோமதி சமையல் கட்டுக்கு போய் ஒரு கைப்பிடி மிளகாயை அள்ளிக்கொண்டா!! என் பேரனுக்கு சுத்திப்போடணும்” என்று நிலத்தில் கையை ஊன்றி எழுந்து நின்று துரைசிங்கத்தின் கன்னத்தை பிடித்து நெட்டி எடுத்து பேரனின் உச்சியில் முத்தம் கொடுத்தார் நாச்சி.

எப்போதும் போல துரைசிங்கம் நாச்சியின் காலில் விழுந்தான். “அடுத்தவருசம் திருவிழாக்கு மூணுபேரா காலுல விழணும் பேராண்டி!” என்று துரைசிங்கத்தின் கன்னத்தை தட்டினார்.

“ம்ம் இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம் அப்பத்தா” என்றான் இதழ் புன் முறுவலுடன்.

“ஐயா தங்கமே!! இந்த அப்பத்தாவோட ஆசை திருவிழா முடிச்சதும் உனக்கும் அலர்விழிக்கும் கல்யாணத்தை நடத்திபுடணும் இப்ப எல்லாம் நெஞ்சுக்குள்ள ஏதோ பண்ணுது... உன்னை மாலையும் கழுத்துமா பார்த்துபுட்டா என்னோட கட்டை போகும்” என்று தன் பேரனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க ஒரு நாடகத்தை நடித்தார் நாச்சி.

“அப்பத்தா என்ன பேச்சு இது! உங்களுக்கு நான் கல்யாணம் கட்டிக்கிடணும் அவ்ளோதானே திருவிழா முடியட்டும் உங்க விருப்பப்படியே பண்ணிக்குறேன் போதுமா” என்று நாச்சியை கட்டிக்கொண்டான் துரைசிங்கம்... நாச்சி என்றால் துரைசிங்கத்திற்கு அலாதி பிரியம்... கோமதிக்கு துரைசிங்கம் பிறந்ததும் டைபாய்டு காய்ச்சல் அவரால் குழந்தையை தொட முடியாது போனது ஒரு மாட்டுப்பால் துரைசிங்கத்துக்கு கொடுத்து வளர்த்தார் நாச்சி... குழந்தைக்கு காய்ச்சல் வந்துவிடுமென்று குழந்தையை மூணுமாசம் தன் வயிற்றுக்குள் போட்டு வளர்த்தவர் நாச்சி. கோமதியிடம் வளர்ந்தாலும் நாச்சியிடம் மட்டும் அவனுக்கு ப்ரியம் அதிகம்.

“நான் முன்ன கோவிலுக்கு கிளம்புறேன் அப்பத்தா!! நீங்க குமரனை காரை எடுக்க சொல்லி வந்துடுங்க!! அப்பா கோவில்ல இருக்காரு! அவரு பக்கத்துல நிற்கணும்" என்று கிளம்பிவிட்டான்.

துரைசிங்கம் சென்றதும் அங்கே வந்த வீரய்யன் “என்ன நாச்சி நாம பேசி வச்ச படி பேரன் கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்ட போலயே!” என மனைவியின் பக்கம் வந்தவரிடம் “ஆமாங்க எப்படியோ என் சிங்கத்தை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சுட்டேன்” என்று பூரிப்பாக பேசினார் நாச்சி.

“அப்போ இப்போவே ஒரு பத்திரிக்கை பிரிண்ட் போட்டு கோவிலுக்கு எடுத்து வர சொல்லுறேன்” என்று சின்ன பிள்ளை போல துள்ளி குதித்து ப்ரஸுக்கு போன் செய்து தகவல் கொடுத்து பத்திரிக்கையை கோவிலுக்கு கொண்டு வர சொல்லி விட்டார்.

அடுத்து ஐய்யனார்க்கு போன் போட்டு துரைசிங்கம் கல்யாணத்தை பத்தி சொல்ல “உங்க பேரன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டு கல்யாணத்தை முடிவு பண்ணலாம்” என நெற்றியை தடவினார்.

“அதெல்லம் உங்க அம்மா சிங்கத்துக்கிட்ட சம்மதம் வாங்கிட்டா பா" என்றதும் “சந்தோசம்ப்பா திருவிழா முடிஞ்சு தேர்தல் வேலை இருக்கும்... நீங்க கல்யாண வேலையை பார்த்துக்கோங்க” என்று சொல்லி விட்டார் ஐய்யனார்.

அடுத்து கண்ணனுக்கு போன் போட்டு கல்யாணம் விபரம் சொல்ல “இது நாம முன்னமே பேசி வச்சது தானே மாமா சும்மா கல்யாணத்தை பெருசா நடத்தி புடலாம்" என்று சந்தோசமாக சொன்னவரோ "உங்க மக கிட்ட பேசிடுங்க" என்று பக்கம் நின்ற கலையரசியிடம் போனை கொடுத்தார் கண்ணன்.

“அப்பா ரொம்ப சந்தோசமா இருக்குங்க ப் பா! கோதை” என்று கலையரசி ஆரம்பிக்க “போனை வைக்குறேன்டா” என்று வைத்துவிட்டார் வீரய்யன்.

கருப்பண்ணசாமிக்கு அபிஷேகம் அலங்காரம் பூஜை ஆரம்பித்தது. ஒரு பக்கம் ஐய்யனார் குடும்பமும் மறுபக்கம் கண்ணன் குடும்பமும் சாமியை கும்பிட்டுக்கொண்டிருந்தனர். தீபாராதனை காட்டி அனைவரும் சாமியை கும்பிட்டனர். பிரசாதம் கொண்டு வந்த பூசாரியிடம் தாம்பூலத்தில் வைத்து "துரைசிங்கம் அலர்விழி கல்யாண பத்திரிக்கையை சாமி பாதத்துல வைச்சு கொண்டு வாங்க" என்றார் வீரய்யன்.

“நல்லது ஐயா” என்று தாம்பூலத்தை வாங்கி பத்திரிக்கையை எடுத்து கருப்பண்ணசாமி பாதத்தில் வைத்து எடுத்து வந்து வீரய்யனிடம் கொடுத்தார் பூசாரி.

'அதுக்குள்ள பத்திரிக்கை அடிச்சாச்சா!' துரைசிங்கம் நாச்சியை பார்த்து மெல்ல இதழ் விரித்தான்.

“பத்திரிக்கை அடிச்சிட்டு தான் பேராண்டி உன்கிட்ட பர்மிஷன் கேட்டா என்ற பொண்டாட்டி” என்றார் மீசையை தடவிக் கொண்டு சிரித்தார் வீரய்யன்.

ஐய்யனாரும் துரைசிங்கத்தின் கல்யாண விசயத்தை வீரய்யன் நாச்சியின் பொறுப்பில் விட்டிருந்தார்.

அலர்விழியோ கல்யாணம் என்றதும் துரைசிங்கத்துடன் வாய்க்கா வரப்பு கனவில் டூயட் பாட ஆரம்பித்தாள்.

கிடாவெட்டி பொங்கல் வைத்தனர் வீரய்யன் குடும்பமும்... கண்ணன் குடும்பமும். கோமதியும் கலையரசியும் சமையலை கவனித்தனர். விருந்துக்கு வந்தவர்களிடம் துரைசிங்கம், அலர்விழி கல்யாணத்தை பற்றி பேச ஆரம்பித்தார் நாச்சி.

நாச்சியின் வயதுகார பெண்மணியோ “ம்ம் நாச்சி உன்னோட இரண்டாவது பொண்ணு கோதையை கல்யாணத்துக்கு கூப்பிட்டிருக்கீங்களா?” என நீட்டி முழக்கினார் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல.

நாச்சியோ "அவ பண்ணிட்டு போன காரியத்துக்கு எப்படியம்மா கல்யாணத்துக்கு கூப்பிட முடியும்“ என்று அவரது குரலில் வேதனை ததும்பியது.

நாச்சியின் முகம் மாறுதலை கண்ட துரைசிங்கமோ “அப்பத்தா” என்று அவர் பக்கம் உட்கார்ந்தான்.

“சாப்பிட்டியா தங்கம்?” என்று பேச்சை மாத்தினார்.

“இல்ல அப்பத்தா இப்போதான் வாரேன் இனிமேல் தான் சாப்பிடணும்” என்றான் நாச்சியின் முகத்தை பார்த்தவாறே.

“அப்போ நான் வாரேன் நாச்சி” என்று அந்த பெண்மணி கிளம்பிவிட்டார்.

“அப்பத்தா உங்க முகம் கலையா இல்லையே ஏன்! காலையில நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னப்ப இருந்த அப்பத்தா முகம் வாடிப்போயிருக்கு” என்று அவரது கையை பிடித்தான் துரைசிங்கம்.

“ஒண்ணுமில்லை ராசா” என்று கலங்கி இருந்த கண்ணை முந்தானையால துடைத்தார் நாச்சி.

துரைசிங்கமோ “நம்ம வீட்டுக்கு துரோகம் பண்ணி நம்ம குடும்ப மானத்தை வாங்கிட்டு போனவங்களை பத்தி நீ கவலைப்படற மாதிரி இருக்கே அப்பத்தா!” என்று கோபத்தில் பல்லைக்கடித்தான்.

“கோதையை பெத்தவ ஆச்சே அங்கலாய்ப்பு கண்ணு” என்று விசும்பல் வந்தது நாச்சியிடம்.

“நமக்கு வேண்டாதவங்க பேச்சு இங்க அடிபடுது ஐய்யனார்” முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு பேசினார்.

“ம்க்கும் ஒண்ணுமில்லைங்கப்பா நீங்க சாப்பிட போங்க” என்று சொம்பில் தண்ணீரை எடுத்து கொடுக்க “நான் கொடுக்குறேன் மாமா” என்று தண்ணீர் சொம்பை வாங்கி ஐய்யனாரிடம் கொடுத்தாள் அலர்விழி.

துரைசிங்கம் அலர்விழியை ஒரு பார்வை பார்த்து விட்டு நாச்சியின் பக்கம் சென்றான்.

சாப்பிட்டு முடித்தவர்கள் திருமண பேச்சை பேசிக்கொண்டனர்.

தூரிகாவோ “எனக்கு கல்யாணத்துக்கு லெஹங்கா வேணும்... ரிசப்சனுக்கு பட்டு தாவணி வேணும்” என்று லிஸ்ட் போட்டுக்கொண்டுச் சென்றாள்.

நாச்சியோ “உன் அண்ணன்கிட்ட கேளு எல்லாம் வாங்கித்தருவான்” என்று சிரித்தார்.

“ம்ம் கேட்குறேன் அப்பத்தா” என்றவளோ ஐய்யனாரின் தோளில் சாய்ந்துக் கொண்டு தனக்கு வேண்டியதை கேட்க “அவரோ இந்த வீட்டு இளவரசி நீ கேட்கறது எல்லாம் வாங்கி தரேன்” என்றவரோ மகளின் தலையை வருடியபடியே “சிங்கம் தங்கச்சி கேட்கறது எல்லாம் வாங்கிக்கொடுத்துடு” என்றதும் “சரிங்கப்பா இந்த லெஹங்கா அதெல்லாம் வேண்டாம் பட்டுப்பாவாடை தாவணி, பட்டுச் சேலை எவ்ளோ விலையில வேணா வாங்கித்தாரேனுங்கப்பா! கோவிலுக்கு கிளம்புறேன்” என்று தூரிகாவை ஒரு பார்வை பார்த்தவன் பைக்கில் கிளம்பிவிட்டான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 3


தூரிகாவோ “ப்பா இந்த அண்ணா எனக்கு இஷ்டப்பட்ட ட்ரஸ் கூட வாங்கி தரமாட்டேன்கிறாரு! பெருசா நான் இந்த வீட்டு இளவரசினு சும்மா சொன்னா போதுமாங்கப்பா!! நான் கோபமா போறேன்!! யார் கூடவும் பேசமாட்டேன்!! எனக்கு லெஹங்கா வாங்கிக் கொடுத்தா தான் கல்யாணத்துக்கு இணைச்சீர் உடுத்த அண்ணன் பக்கத்துல வந்து நான் நிற்பேன் பார்த்துக்கோங்க!!" என்று மூக்கு விடைக்க விரலை நீட்டி இதழை கோணி கொண்டு பொய் அழுகாச்சியுடன் "நான் கேட்டதை வாங்கிக்கொடுக்கலைனா இன்னிக்கு முழுசும் சாப்பிடமாட்டேன்” என்று அடம் பிடித்த பேத்தியை பார்த்து சிரித்த வீரய்யனோ “என்னோட தங்கப் பொண்ணு அழாதடியம்மா!! உன் அண்ணன் வாங்கித்தரலைனா என்ன? இந்த தாத்தன் எதுக்கு இருக்கேன் நீ கேட்ட உடுப்பை உனக்கு வாங்கித்தாரேன் இப்பவே வா கடைக்கு போலாம்” என வீரய்யன் தூரிகாவை அணைத்துக்கொண்டார்.

“இன்னிக்கு நைட் பாட்டுக்கச்சேரி இருக்குல... நாளைக்கு கூட்டிட்டு போய் நான் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுங்க!” என்று தான் ஆசைப்பட்டது கிடைக்க போகிறதென்ற மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து ஓடினாள் தூரிகா.

திருவிழா என்பதால் மெடிக்கல் கேம்ப் போட்டிருந்தனர்... பொண்வண்ணன் கேம்ப் இன்சார்ஜ் டாக்டராக வந்திருந்தான். அவனுக்கு தன் அம்மா வாழ்ந்த ஊரை பார்க்க வேண்டுமென்ற ஆவல் சின்ன வயசிலிருந்தே இருக்கின்றது ஆனால் அதற்கு வாய்ப்பே அளிக்கவில்லை ஆதிபெருமாள்.

பொண்வண்ணன் டாக்டராக வந்திருக்க அவனை ஊருக்குள் விட்டிருந்தனர் சோழவந்தான் கிராம மக்கள்... கேம்ப் வரும் முன்னே ஆதிபெருமாளுக்கு போன் போட்டு “அப்பா நான் அம்மாச்சி ஊருக்கு மெடிக்கல் கேம்ப்க்கு போறேன்” என்று தகவலாக சொல்லிய மகனிடம் "நீ நீ அந்த ஊருக்கு போகவேணாம்... உன்னை மதிக்க கூட மாட்டானுங்க! நீதான் மூக்கறு பட்டு வரணும்... வேற டாக்டர் உனக்கு பதிலா போய்க்கட்டும்!! இந்த ஆதிபெருமாள் மகன் எவன்கிட்டயும் தலைகுனிஞ்சு நிற்க கூடாது... நீ உடனே வீட்டுக்கு கிளம்பி வா” என்று பொண்வண்ணனை அதட்டினார் ஆதிபெருமாள்.

“அப்பா நான் உயிரை காப்பாத்துற தொழிலை பார்க்குறேன்... இந்த ஊரு எம்.எல்.ஏ தான் எங்க ஹாஸ்பிட்டல இருந்து கேம்ப் போடச் சொல்லியிருக்காங்க!! நான் கேம்ப்க்கு போவேன்!! என்னைய யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க!! நீங்க சொல்றதை நான் கேட்கமாட்டேன்” என்று அடம்பிடித்து பிடிவாதமாக பொண்வண்ணன் சோழவந்தான் கிராமத்திற்கு வந்துவிட்டான்...

‘இந்த ஊரு அழகா இருக்கு... ஆனா என்னோட ஆளைத்தான் பார்க்க முடியலை’ என்று கவலைப்பட்டுக்கொண்டு கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு நடந்துக் கொண்டிருந்தான். அன்று தூரிகாவை மஞ்சள் தாவணியில் பார்த்த நினைவு அவன் கண்ணில் இன்னும் மறையவில்லை.

போன வருசம் பொண்வண்ணனின் பிறந்தநாள் அன்று கோதை மகனுடன் கோவிலுக்கு வந்திருந்த சமயம் ஐய்யனார் குடும்பமாக கோவிலுக்கு வந்திருந்தார்... கோதையை திரும்பிக்கூட பார்க்கவில்லை யாரும்... கோதையோ ஐய்யனாரை பார்த்து “அண்ணா என் கூட பேசுங்களேன்” என்று ஐய்யனார் முகம் பார்க்க அவரோ யாரோ புதிதாக ஒருவரை பார்ப்பவரை போல கண்டும் காணாதது போல கோதையை கடந்துச் சென்றுவிட்டனர்.

தூரிகாதான் கோதையை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டுச் சென்றாள்.

கோதையோ கண்ணீருடன் சாமி கும்பிட்டு மகனை அழைத்துக்கொண்டு கோவில் மண்டபத்திற்குள் உட்கார்ந்தவர் “டேய் இவங்கதான் உன் மாமா குடும்பம்!! பெரிய மீசையா நின்னாரே அவருதான் உன் மாமா ஐய்யனார்! பச்சை சாரி உடுத்தியிருந்தவங்க உன் அத்தை! அடுத்து மஞ்சள் தாவணி” என்று கோதை பேச ஆரம்பிக்கும் முன் "அவ என் மாமன் மகள் என்னோட முறைப்பொண்ணு ரொம்ப அழகா முக ஜாடை உன்னை போலவே இருக்கா!! அவளை எனக்கு பிடிச்சிருக்கு பொண்ணு கேட்டா தருவாங்களா!!" என்று ஏதோ டெய்ரிமில்க் சாக்லேட்டை கேட்பவனை போல கண்கள் மின்ன ஆசையாக கேட்டுவிட்டான்.

“முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படுவது போல இருக்கு உன் ஆசை வண்ணா” என்று கவலையாய் கண்ணீருடன் பேசிய அன்னையை கண்டு “நான் உங்க கவலையை போக்குறேன் அம்மா” என்று தனக்குள் சபதம் எடுத்துக்கொண்டான்.

பொண்வண்ணனை ஆறு வயதாக இருக்கும்போதே லண்டனில் இருக்கும் தன் தங்கை மீனாட்சி வீட்டில் தங்கி படிக்க அனுப்பிவிட்டார் ஆதிபெருமாள்.

டாக்டர் படிப்பு முடிந்துதான் இந்தியாவே வந்திருந்தான்... கோதை என் பிள்ளைங்களை பார்க்கணும்னு ஆதிபெருமாளிடம் கண்ணைக் கசக்கினால்தான் கருணை அடிப்படையில் வருடத்திற்கு ஒரு முறை கோதையை லண்டன் கூட்டிக்கொண்டு போவார் ஆதிபெருமாள்.

மஞ்சள் தாவணி கட்டியிருந்த தூரிகாவின் முகம் பொன்வண்ணன் மனதில் ஆழமாய் பதிந்து போனது... அவள்தான் தனக்கு மனைவியாக வேண்டுமென்று முடிவே எடுத்துவிட்டான்... லண்டன் கலாச்சாரத்தில் வாழ்ந்தாலும் தாய்நாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்தவன் பொன்வண்ணன்... தூரிகாவை கல்யாணம் செய்துக் கொள்வதற்கு அதற்கு அவன் ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டவேண்டுமென்றும் இவையெல்லாம் கடந்து வந்தாலும் பெரிய மாமிச மலையாக நிற்கும் துரைசிங்கத்தை பற்றி பொன்வண்ணன் அறிந்திருக்கவில்லை.

அப்படியே வயல் ஓரம் பச்சைநெல் வயல்களை பார்த்துக்கொண்டே நடந்துக் கொண்டிருந்தவன் தெரு ஓரத்தில் பூத்திருக்கும் மஞ்சள் பூக்களை பார்த்ததும் தூரிகாவின் நினைவுதான் வந்தது பொன்வண்ணனுக்கு... என்னோட மஞ்சள் தாவணி பொண்ணே என்று மனதிற்குள் மகிழ்ந்து அவனது இதழும் தானாக பூத்தது. பாட்டும் பாடத்தோணியது அவனுக்கு... மாலை வேளை முடியும் தருவாயில் சூரியன் மேற்கே மறைந்துக் கொண்டிருக்கும் சமயம்

‘மஞ்சள் காட்டு மைனா என்னை கொஞ்சி கொஞ்சி போனா

மஞ்சள் காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா

காதல் கலவரம் பூக்கும் அது இரவினில் வெயிலும் தாக்கும்

பூக்கள் பொதுக்குழு கூட்டும் நீ தலைமை தாங்க கேட்கும்

கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு

இரவெல்லாம் லாபமே இழப்பது கிடையாது

மாயனே மாயனே இது மன்மத கதை கேளாய்

என் சுவாசம் என்னிடம் இல்லை இது காதல் தேசத்தின் எல்லை’

என்ற பாடலை முணுமுணுத்துக்கொண்டு வயலோரம் நடந்துக் கொண்டிருந்தவனை பார்த்தபடியே தூரிகா ஸ்கூட்டியில் வந்துக் கொண்டிருந்தாள். ‘இவன் யாரு டாக்டர் போல ஸ்டெதஸ்கோப் கழுத்துல மாட்டியிருக்கான் ஒருவேளை பைத்தியக்கார ஹாஸ்பிட்டல இருந்து தப்பிச்சு வந்துட்டானா... இல்ல நல்லா ஹான்ட்சம்மா இருக்கானே நிஜம் டாக்டர் தான் போல’ என தூரிகாவோ பொன்வண்ணனை அக்குவேறு ஆணிவேறாக பார்த்துக்கொண்டிருந்தவள் வண்டியை பிரேக் போட்டு நிறுத்தி இறங்கினாள்.

பொன்வண்ணனோ தூரிகாவை நினைத்துக் கொண்டு வயல்வெளியை வேடிக்கை பார்த்து வந்தவன் தன் இதயத்தை வென்றவள் தன் முன்னே வந்ததை பார்க்கவில்லை... மார்புக்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு “யோவ் டாக்டரே!” என்று இனிய பெண் குயிலோசை கேட்டதும் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவன் ஒரு நிமிடம் கண் இமைக்க மறந்துவிட்டான்.

தான் காண ஆசைப்பட்டு வந்தவளை நேரில் பார்த்ததும் மெர்சலாகி நின்றதை பார்த்து “என்ன டாக்டரே இந்த பக்கம் போறீரு திருவிழாவுல தானே கேம்ப் போட்டிருக்காங்க!! இன்னும் கொஞ்சம் இருட்டிப்போச்சுனா மோகினி பிசாசு சுத்தும் பார்த்துப்போங்க” என்று சில்லறையை சிதறிவிட்டாற் போல சிரித்தவளை கண்டு மெய்மறந்து நின்றான் பொன்வண்ணன்.

"சரியான ஜொள்ளு பார்ட்டி போல இந்த டாக்டரு!" என்றவளோ “யோவ் டாக்டரே! என்னை முழுங்கிவிடறது போல பார்க்குறீரு... எந்த ஊரு ஆளு முழுசா ஊரு போய் சேருற எண்ணம் இருக்கா?” என்று அவள் நக்கலாக கேட்டுக்கொண்டிருக்க அவனோ ஆதியும் அந்தமுமாய் பெண்ணவளை இரசித்துக்கொண்டிருந்தான் பொன்வண்ணன்.

இவனுக்கு கிறுக்கு பிடிச்சிருச்சு போல என்று தலையை ஆட்டிக்கொண்டு ஸ்கூட்டியில் ஏறப்போனவளின் தாவணியை பிடித்து இழுத்துவிட்டான் பொன்வண்ணன் நடக்க போகும் விபரீதம் தெரியாமல்.

தூரிகாவுக்கோ பயங்கர கோபம் வந்துவிட்டது. ஒரு முறை சுற்றிப்பார்த்துக்கொண்டாள். யாரும் அங்கேயில்லை... திருவிழா என்பதால் ஊர் மக்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தனர். “யோவ் தாவணியை விடுயா என்ன கொழுப்பு இருந்தா துரைசிங்கம் தங்கச்சி தாவணியை பிடிப்ப” என்று சட்டென்று பொன்வண்ணனின் கன்னத்தில் அறைந்துவிட்டாள்.

எந்த ஆணாக இருந்தாலும் ஒரு பெண் அடித்துவிட்டால் கோபம் வரத்தானே செய்யும் பொன்வண்ணனோ அவளை அடிக்கவில்லை மாறாக அவளது கண்களை பார்த்தான் துரைசிங்கத்தின் தங்கச்சி ஆச்சே அவள்... கோபம் கொப்பளிக்க நின்றிருந்தவளை நெருங்கிச்சென்றவன் அவள் எதிர்பார்க்கா நேரம் அவளது கன்னத்தை பிடித்து இதழ் முத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டான்.

(இப்போ மட்டும் துரைசிங்கம் வரட்டும் பொன்வண்ணன் தலையை வெட்டி நொய்யல் ஆற்றில் விட்டிருப்பான்)

தூரிகாவின் கண்கள் காலையில் சூரியனை கண்டு மலரும் தாமரை போல கண்களை விரித்தவள் அவன் மார்பில் கையை வைத்து தள்ளினாள். வாய்க்குள் முணக கூட விடவில்லை அவளை இதழை சுவிங்கமாய் மென்றுக் கொண்டிருந்தான்... அவனுக்கு பிடித்த சாக்லேட் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சி வெள்ளத்தில்.

இருளும் சூழ்ந்துவிட்டது... லண்டனில் முத்தம் கொடுப்பது ஒன்றும் தவறாக பார்ப்பதில்லை. தூரிகாவோ அவனது கழுத்தில் போட்டிருந்த ஸ்டெதஸ்கோப்பை உருவி அதிலே அடித்தாள் அவனோ முத்தம் கொடுப்பதில் மும்மரமாக இருந்தாலும் முத்தத்தை தடுக்க நினைப்பவளின் கையிலிருந்த ஸ்டெதஸ்கோப்பை பிடிங்கி கீழே போட்டு முத்தத்தை தொடர்ந்தான். எதிர்த்து பார்த்தவள் ஒரு கட்டத்தில் முடியாமல் போக அவன் மீதே மயங்கிச் சரிந்தாள்.

தன் இதயராணி மயங்கிச் சரிந்ததும் தான் சுய நினைவு வந்தது பொன்வண்ணனுக்கு...

"ஷிட் இடியட் போல பண்ணிவச்சிருக்க" என்று தன்னையே திட்டிக்கொண்டு சரிந்தவளை மெதுவாக நிலத்தில் படுக்க வைத்து பக்கத்தில் அவளது வண்டியில் தண்ணீர் பாட்டில் இருக்கா என்று எட்டிப்பார்க்க வெறும் பாட்டில் இருக்க பாட்டிலை எடுத்துக் கொண்டு குட்டி வாய்க்காலில் தண்ணி ஓடிக்கொண்டிருக்க பாட்டிலில் தண்ணீரை எடுத்து வந்து அவள் முகத்தில் தெளிக்க மெல்ல கண்திறந்து எழுந்து உட்கார்ந்த தூரிகாவோ பொன்வண்ணனின் கன்னத்தில் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தவள் முகத்தை பொத்திக்கொண்டு அழுக ஆரம்பித்தாள்.

தான் செய்தது மிகப்பெரிய தவறு என்று தெரிந்தாலும் தனக்காக பிறந்த பெண் இவள் என்று அவள் கொடுத்த அறையை வாங்கிக்கொண்டு “இப்ப எதுக்கு அழற நான் முத்தம்தானே கொடுத்தேன் வேற என்ன ரேப்பா பண்ணினேன்” என்று அவன் குரலை உயர்த்த

“என்னடா வெறும் முத்தம்தான் கொடுத்தியா” மீண்டும் அவன் கன்னத்தில் அறைய அவளது கையை பிடித்தவனோ “ஐ.லவ்.யு மஞ்சள் காட்டு மைனா” என்றவனை பார்த்து இவன் பைத்தியக்காரனா அச்சோ யாராவது என்னை காப்பாத்துங்களேன் என்று முகத்தில் பயம் ரேகை தோன்றியது தூரிகாவுக்கு.

“ஹேய் மஞ்சள் பியூட்டி நான் உன்னோட கோதை அத்தை மகன் பொன்வண்ணன்!! நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கற முறை” என்று அவன் சொன்னதும்தான் அவளுக்கு இவன் யார் என்று கொஞ்சம் கொஞ்சமாக புரியத்தொடங்கியது.

தூரிகாவோ பாவாடையை பிடித்துக்கொண்டு எழுந்தவள் “டேய் நீ என்னை எதாவது செய்துடாத!! என் அண்ணா ரொம்ப கோவக்காரரு நீ இது போல என்கிட்ட பேசாத என் அண்ணா சொல்ற பையனைதான் நான் கல்யாணம் பண்ணுவேன்... கோதை அத்தை தப்பு பண்ணிடாங்க!! அவங்களை வீட்டை விட்டு அனுப்பி வச்சிட்டாங்க தாத்தாவும் அப்பாவும். நீ என் கூட பேசக்கூடாது போடா” என்று திக்கி திணறி பேசியவள் ஸ்கூட்டியில் ஏறிவிட்டாள்.

பொன்வண்ணனோ ஸ்கூட்டியின் முன்னே நின்று “ஹேய் மஞ்சள் மைனா எனக்கு உன்னை பிடிச்சிருக்கு!! பெரியவங்க சண்டை தனியா இருக்கட்டும்!! நீயும் நானும் லவ் பண்ணுவோம் இந்த வீக் எனக்கு டெல்லி கான்பிரன்ஸ் இருக்கு நான் போயிடுவேன் அடுத்த வாரம் இதே இடத்துக்கு வருவேன் நீ என் லவ்வை அக்சப்ட் பண்ணிக்கோ இல்ல உன்னை தாலி கட்டி தூக்கிட்டு போயிடுவேன்” என்று அராஜகமாய் பேசியவனை கண்டு எச்சில் விழுங்கினாள் தூரிகா... அதே சமயம் துரைசிங்கத்தின் பைக் சத்தம் தூரிகாவின் காதில் கேட்டது... அவளது கால்கள் நிலத்தில் வலுவின்றி தள்ளாடியது.

“யோவ் டாக்டர் துரைசிங்கம் அண்ணா வராங்க!! உன்னை பார்த்தா அவ்ளோதான் கொன்னே போடுவாரு போடா!! இங்கிருந்து போடா” என்று தூரிகா அவனிடம் கையெடுத்து கெஞ்சி கேட்டவளை பார்த்து “நான் போகமாட்டேன் நீ இப்போ ஐலவ்யூ சொல்லு அப்போ போறேன்” என்று மெயின் பாயிண்டாக பிடித்து தலையை ஆட்டி பேசியவனிடம் “யோவ் டாக்டரே நேரம் காலம் தெரியாம விளையாடாதே! அண்ணா அருவாளை முதுகுல சொருகியிருக்கும் ஒரே வெட்டு உன் தலை நொய்யல் ஆத்துல போய் விழுந்துடும் போயிடுய்யா” என்று கண்ணைச்சுருக்கியவளை கண்டு “நீ ஐலவ்யூ சொல்லு” என்று கண்ணைச்சிமிட்டி சிரித்தவனை கண்டவளோ “அச்சோ இதென்ன வம்பா இருக்கு” என்று பயந்தவளுக்கு துரைசிங்கத்தின் வண்டிச்சத்தம் பக்கத்தில் கேட்டது.

ஆபத்துக்கு பாவமில்லை ஒருவன் உயிர் போகக்கூடாதென “ஐ.ஐலவ்யு ஓடிப்போடா மக்கட்டையா” என்று அவனை பிடித்து மரத்திற்கு பின்னால் தள்ளிவிட்டாள் தூரிகா.

துரைசிங்கம் பைக் தூரிகாவின் ஸ்கூட்டியின் பக்கம் வந்து விட்டது. புருவச்சுளிப்போடு பைக்கை நிறுத்தியவன் வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு “என்ன பாப்பா இந்த இருட்டுல தனியா நிற்குற உனக்கு அறிவு இருக்கா இல்லையா! எனக்கு போன் போட மாட்டியா இல்ல வீட்டில உன்ன சின்ன அண்ணன் இருப்பான் அவனை கூட்டிட்டு வரமாட்டியா?” என்று துரைசிங்கம் பல்லைக்கடித்து மிரட்டியதும்

“அ.அது அண்ணா ஸ்கூட்டி பிரேக் ஓயர் கட் ஆகி வண்டி ஸ்டார்ட் ஆகலை.” என்று தடுமாறி பேசியவளை கண்டு “ஏன் போன் எதுக்கு இருக்கு போன் போட தோணலையா உனக்கு?” என்று அதற்கும் அவளை கடிந்துக் கொண்டான் துரைசிங்கம்.

“என்ன மச்சான் ரொம்ப விறைப்பா இருக்காரு” என்று மரத்திற்கு பின்னால் ஒளிந்து இருந்தவன் தன்னவளுக்காக வருத்தப்பட்டான்.

“போ.போன்ல சார்ஜ் இல்ல அண்ணா” என்றவளை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்தவன் “என்ன பாப்பா இது ஸ்கூல் படிக்கற பொண்ணு போல ஒவ்வொண்ணுக்கும் காரணம் சொல்லிக்கிட்டு உன்னோட பேச்சே சரியல்லையே!” என்று சந்தேக கண் கொண்டு அந்த இடத்தை சுற்றிப்பார்த்து பொன்வண்ணன் மறைந்திருந்த மரத்துக்கு பக்கம் போனான்.

“அண்ணா எனக்கு மயக்கம் வரது போல இருக்கு... மதியம் சாப்பிடலை இப்போ பசிக்குது வீட்டுக்கு போகலாம்” என்று தலையை பிடித்து கீழே போனவளை தாங்கிப்பிடித்து “இந்த அப்பத்தாவும் தாத்தாவும் உனக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்காங்க வண்டியில ஏறு போகலாம்” என்று எரிந்து விழுந்தவன் தூரிகா பைக்கில் ஏறியதும் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

தூரிகாவோ ‘அப்பாடா தப்பிச்சிட்ட டாக்டரே’ என்று நெஞ்சில் கையை வைத்து இதழ் குவித்து ஊதிக்கொண்டாள்.

ஆனால் துரைசிங்கத்திற்கு சந்தேகம் வலுத்துவிட்டது. வண்டி ஓட்டியபடியே மெதுவாய் திரும்பிபார்த்தான்.

“அண்ணா மயக்கமா வருது” என்று துரைசிங்கம் மேல் சாய்ந்துக் கொண்டாள் தூரிகா.

போகும் வழியில் கடை பக்கம் நிறுத்தி தங்கைக்கு மாதுளை ஜுஸ் வாங்கி கொடுத்து குடிக்க வைத்தவன் அவள் ஜுஸ் குடித்ததும் “அவன் யாரு மரத்துக்கு பின்னால நின்னது?” என்று கோபமாக கேட்டு பளாரென அறைந்து விட்டான் தங்கையின் கன்னத்தில்.

“அண்ணா” என்று கன்னத்தை பிடித்துக்கொண்டாள் தூரிகா.

“இந்த ஊருக்குள்ள சின்ன குண்டூசி விழுந்தாலும் என் கண்ணுக்கு தப்பாது பாப்பா!” என்றான் கர்ஜனை குரலுடன் துரைசிங்கம்.
 
Status
Not open for further replies.
Top