ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

9. நெருப்பாகும் உன் தீண்டல்கள்- நாவலுக்கான விமர்சனங்கள்

pommu

Administrator
Staff member
9. நெருப்பாகும் உன் தீண்டல்கள்- நாவலுக்கான விமர்சனங்கள்
 
பொம்மு நாவல்ஸ் குறுநாவல் போட்டி

T22 விருட்சம் போட்டிக்கதை


T22விதையில்இருந்துவிருட்சம்வரை

போட்டிக்கதைஇல9

நெருப்பாகும் உன் தீண்டல்கள்!

ஷாயினி விமர்சனம்

அறையில் கட்டப்பட்டிருக்கும் பெண் ஒருத்தியை கடத்துபவரின் கூடவே இருக்கும் ஒருவரே தப்பிக்க வைக்க, ஆரம்பமே கதையில் டுவிஸ்ட்🤣🤣🤣

( அந்த சீனில் ஒருத்தங்க ரியாக்சன் பார்த்து பக்குனு சிரிச்சிட்டேன்)
😁😂🤣🤣😂😂

நாயகன் சங்கரின் வீட்டிற்கு எதிர்பக்க வீட்டிற்கு, அவனது நீண்ட கால நண்பி மற்றும் காதலியாக சொல்லப்படும் மதி, வீட்டிற்கு குடும்ப சமேதராக குடி வருகிறாள்..

நாயகி மதி, மதியின் கைகளில் கைக்குழந்தை பிரத்யூ, தந்தை ஆறுமுகம், தாய் மேகலை என இவர்கள் மூவரும் குடிவரும் போதே;

சங்கரின் வீட்டினர்க்கு, அவர்கள் திரும்ப முன் வீட்டிற்கு குடிவருவது தெரியவர, அவர்களையே கண்டு உரையாட எத்தனிக்க;

அதற்கு பலனின்றி வீட்டு கதவினை இழுத்து அடித்து சாற்றுகிறாள் மதி.

ஈஸ்வரின் நினைப்பிலயே கையில், கைக்குழந்தையுடன் இருக்கும் மதி!

தனது காதலி கண் முன்னே இருந்தும், சேர முடியாத குற்ற உணர்ச்சியில் சங்கர்,

மதியின் கைகளில் குழந்தை எப்படி?

அவள் சங்கரின் காதலியாக அறியப் பட்டவள் , அவ்வாறே இருந்தால் வேறு திருமணம் எவ்வாறு நடந்தது?

அவளின் குடும்பத்தினரிற்கு, சங்கர் குடும்பம் மீதான , வெறுப்பு மற்றும் அலட்சியம் எதற்காக?

மதிக்கு திருமணம் நடந்தவளாக அனைவராலும் அறியப்பட, மதியின்
உண்மை தெரிந்து, அவர் எதிர்பாரத தருணத்தில் தாலி கட்டி மனைவி
ஆக்கும் சங்கர்.

அதற்கு மதி மற்றும் அவளை சார்ந்த நபர்களின் பிரதிபலிப்பு எவ்வாறு இருந்தது ?


நாயகனை சுற்றிய, கொட்டும் விஷப் பாம்புகளாக அவனையே சுற்றி கூட இருந்தே அவனின் வாழ்க்கையை குழி பறிக்கும் நால்வர் ! 🤧😭🤬அதனை அறியும் போது, அவனின் நிலை?

இவர்களுடன் கூடவே, கதையில் பிரதான மாந்தர்களாக மதியின் பெற்றோர் சண்முகம் மேகலை தம்பதி!சங்கரின் குடும்பத்தை சேர்ந்த நபர்களாக முனியம்மாள், ஆறுமுகம், மீனாட்சி !

சங்கர் மதியின் உறவு , சண்முகம் ஆறுமுகத்தின் நட்பு! மீனாட்சியின் தமயன் மீதான பாசமும் அரசுவின் மைத்துனனின் அக்கறையும் அருமை!
👏👏💕💕💕

வாழ்க்கையில் எந்த வித தடைகள் வந்தாலும் சில உறவுகளின் சங்கமம்!
யாராலும் தடுக்க முடியாது! என்பதை கிராமத்து குடும்ப பிண்ணனியில் கதையாக , பொருத்தமான கதை தலைப்புடன் அழகுற வடிவமைத்த கதையின் ஆசிரியரான விருட்சம் பிரியாணி ஒன்பது க்கு போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்😍😍🤩💐💐💐



Post in thread '"நெருப்பாகும் உன் தீண்டல்கள்" - கதை திரி' https://pommutamilnovels.com/index.php?threads/நெருப்பாகும்-உன்-தீண்டல்கள்-கதை-திரி.936/post-22153
Thread '"நெருப்பாகும் உன் தீண்டல்கள்" - கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/நெருப்பாகும்-உன்-தீண்டல்கள்-கருத்து-திரி.937/

Thread '9. நெருப்பாகும் உன் தீண்டல்கள்- நாவலுக்கான விமர்சனங்கள்' https://pommutamilnovels.com/index.php?threads/9-நெருப்பாகும்-உன்-தீண்டல்கள்-நாவலுக்கான-விமர்சனங்கள்.1029/
 
  • Love
Reactions: T22
#நெருப்பாகும்_உன்_தீண்டல்கள்

சிறு வயதில் இருந்தே பாசம் கொண்டு நேசமாகி கரம் பிடிக்க காத்து இருக்கும் வேலையில் தங்கை, பாட்டியின் சூழ்ச்சியால் தன்னவளை காயப்படுத்தி அவளை இழக்கும் சங்கு😡😡

நேசித்தவனை சதியால் கைப்பிடிக்க முடியாது, தந்தையின் தேர்வை மணந்து போனவள் சிறிது நாட்களில் அவனை இழந்து பெண் குழந்தையுடன் தனித்து நிற்கும் மதி😰😰

காதலனை கரம் பிடிக்க, தனக்கு பிடிக்காத மதியை பழிவாங்க என பாட்டி மற்றும் வருங்கால நாத்தனாரின் பேச்சை கேட்டு
கீழ்த்தரமாக நாடகம் ஆடும் விசாலாட்சி(விஷம்🤬🤬) துணைக்கு ஆடும் பாட்டி, சலங்கை சேர்க்க அம்மா அமுதா என சரியான விஷங்கள்🤬🤬🤬

சங்கு வாழ்வு யாரோடு...!? சதியை தெரிந்து என்ன செய்வான்....!? மதியின் வாழ்வு என்ன ஆகும்...!? என்பதே கதை....

விஷம்🤬🤬🤬 எத்தனை பட்டும் அடங்காத ஜென்மம் இது எல்லாம்🤬🤬🤬🤬 சீதா வயசுக்கு தகுந்த நடவடிக்கை இல்ல, கொஞ்சம் கூட சம்பந்த வீட்டில் நடந்து கொள்ளும் முறையும் தெரியலை😡😡😡 இதோட போதனையில் சீரழிந்து போன விஷம் 😡😡😡

அமுதா😡😡 அம்மாவா இருக்க தகுதியே இல்ல... சரியான பைத்தியம்....

அரசு பரவால்ல லேட் என்றாலும் பேசிட்டான்... சரியான நேரத்தில் சரியா அவங்களை வெளிய அனுப்பி இருக்கான்... அதைவிட அடிமையாய் இருந்த வாழ்வில் இருந்து மீண்டு மனைவி தாய் என அழகா போயிட்டு... மனைவிக்காக, தங்கள் தவறு புரிந்து முன் வருவது nice....

காளி,முனி பாட்டி இவங்களை தான் எனக்கு பிடிச்சது...

மீனு தப்பு எல்லாம் இவங்க குடும்பத்து மேல வச்சுக்கிட்டு அந்த இடத்தில் ஒடிஞ்சு போய் நின்ன அவளை குறை சொல்லுறது எனக்கு சரியா பாடலை... எப்போவும் அவனுக்கு தங்கைகள் மட்டும் தான் முக்கியம் அப்படினு திரும்ப திரும்ப நிரூபிக்கிறது போல இருக்கு அவனோட பேச்சு.. இப்போ அவ மீனை பேசினதில் என்ன குறைந்து போச்சு எனக்கு புரியலை... அப்படி எதிர்பார்த்த நீ கையை பிடிச்சு கூட்டி கிட்டு போறது, இல்ல உன் புருஷன் அமைதியா இருந்தப்போ பேசுறது, இல்ல உங்க அண்ணன் சரி சொன்ன அப்போ பேசுறது, இதெல்லாம் உனக்கும் தா பொருந்தும்

சண்மு கொஞ்சம் அவசர பட்டுட்டார்... ஆனால் பாவம் அவர்... சங்கு அவன் பேசினது எல்லாம் செம்ம எரிச்சல்😡😡 எங்குமே எதையும் யோசிக்காத, மூளையை எதுக்கு வச்சு இருக்கான் தெரியலை, இப்போ வந்து ஓவரா வழின்சுட்டு😡😡😡 ஏனோ சங்கு மேல எனக்கு செம்ம கடுப்பு😡😡😡

அத்தனை தப்பும் இவன் பண்ணிட்டு பெரிய இவன் மாதிரி அவளை பேசுறது🤬🤬🤬 அவ சொன்னதில் என்ன தப்பு இருக்கு... என்னமோ இவன் தெரியாம பண்ண மாதிரி பேசுறான்... ஆளும் மண்டையும்...

வடிவு, சுதா🤬🤬🤬 chaik கொஞ்சம் கூட மானம் ரோஷம் இல்லாத ஆட்கள்... மகள் வளர்ந்து நின்ன லட்சணத்தில் எவன் கட்டுவான்🤬🤬🤬🤬 அவளுக்கு ரெண்டாவது கல்யாணம் ஆனால் மேடம் ரெண்டாம் தாரமா போக மாட்டாங்க🤬🤬🤬 என்ன கொடுமை டா...

ஆறுமுகம் பாவம் உங்களுக்கு இப்படி ஒரு மனைவி, பிள்ளைகள்🤣🤣 குடும்ப தலைவரா பேசாமல் இருந்ததுக்கு உமக்கு வேண்டும் இது எல்லாம்😂😂😂

மதியை எனக்கு ரொம்ப பிடிச்சது... ஒவ்வொருமுறை ஏமாற்றம் வந்த போதும் அவனுக்காக என்று எவ்வளவு பொறுத்து போனா... என்னை பொறுத்தவரை அவளுக்கு அவன் சரியான ஜோடி இல்ல... குட்டி அணுகுண்டு செம்ம😍😍 ஷாலினி அண்ட் கோ 🥰🥰🥰

Congratulations ரைட்டர் ஜி💐💐💐 bp ஏத்தி இறக்கி ஒருவழியா சுபம் போட்டிட்டீங்க சூப்பர்...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐💐
 
வணக்கம் சகோதரிகளே .

#பவாவிமர்சனம்

#நெருப்பாகும்_உன்_தீண்டல்கள்

விருட்சம் பிரியாணி ஒன்பது

உறவின் நிலையில் மழலை நேசம்
உறவின் தோளில் ஊஞ்சலாட..
பேசிய சிறு நொடிகள் விதியாட
உறவு தேங்கிய குட்டை நீராய்..

காதல் தீண்டல்கள் எல்லாமே தூரமாக
காதல் நிலைகளை கடக்க நினைக்க
காதல் நில்லாது போய்விட
காதலாட காதலே காதலாக சேமித்த விதியோ..

தீயாய் போன நிமிடங்கள் மீண்டும்
தீண்டல்களாக தொடர்ந்தனவோ..!!

சங்கமேஸ்வரன்.: சிறுவயதிலே காதலை சுமந்து உலாவரும் இடமும். இவனுக்கு காதல் அரும்பும் இடமும் அழகு என்றால்.
கோபமே இவனுக்கான அடுத்த கெடுதல்.💕💕

தங்கைமேல் பாசம் வைக்கலாம் கண்மூடிதனமாக வைத்து அல்லல் படுவது பாவாமே. அதுவும் பொய்த்து போன போது இவனின் அழுகைக்கு எந்த ஞாயமும் கூற இயலாதே.அதே நேரம் இவன் மேல் எனக்கு கோபமும் நிறையவே உண்டு.😠😠

காதலும் இவனை சதியால் பிரியும் நிலையும் மிகவும் கவலைப்பட வைத்தது . அதுவும் அந்த மணநாள் அழுகை ஆண்பிள்ளையாயினும் இவனின் கண்ணீர் கவலையே.😥😥

மதிவதனா. :அருமையான பாத்திர படைப்பு ஆரம்பத்திலிருந்தே விட்டுக் கொடுத்து விட்டு கொடுத்தே பழகி கடைசியில் அதே சதிவலையில் இவள் விழ்ந்து காதலை தொலைப்பதும் கவலையே.🌺😐

கல்யாண வாழ்வும் நில்லாம் பாதியில பல விபரித செயல்களை தருவதும் பாவமே. ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது என தன் அப்பாவிடம் கேட்கும் போது மிகவும் வலியே.🙄😥

வாத்துக்குஞ்சு சூட்டிகை குட்டி சங்குவும் இவளும் சண்டையிடும் இடமெல்லாம் அழகே அழகு.😘😘

விசாலம் :? நல்ல பெயர் வச்சிங்கமா .விஷம் என்று மருவிடும் போது தான் சூப்பர் .😡😡

அமுதா.: இவர் ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு வைக்கும் சிறந்த தாய்.😠😠😠

காளி, பாட்டி , மீனு நல்ல பாத்திர படைப்புகள்.💞💞💞

ஆறுமுகம் சண்முகம் நல்ல நட்பு.💕💕

ஆசிரிய தோழியே : அருமையான கூட்டு குடும்ப கதை.அதை அழகாக நகர்த்தி சென்றது அருமைமா.😘😘

சில நேரங்களை தாமத படுத்தி இருந்தால் பல விபரீத செயல்களை தடுத்து இருக்கலாம் என நினைத்தபோது எனக்கும் கவலையே வந்தது. உண்மைமா.😗😗

நவக்கிரகம் போல உறவுகளின் பிடியில் இருக்கும் மனிதர்கள் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். அதிலும் விஷமாய் இருப்பவர்களால் பலர் பாதிக்கப்படுவது கவலை தான்.😐

மதி சங்கு காதலை அழகாக காட்டி சென்றீர்கள். மீண்டும் சேர்ந்த போது நான் நினைத்த சில நிகழ்வுகள் சரியாக வந்தது இவர்கள் இடத்தில் . கொஞ்சமே மாறுபட்டது.😍😍

ஒரு நிறைவான அருமையான உறவுகளை சுற்றிய கதை படித்த உணர்வு வாழ்த்துக்கள் மா.👏👏❤❤

போட்டியில் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள் மா.👏👏👏💐💐
 
  • Love
Reactions: T22
Top