ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

17 ஆஹா கல்யாணம் கதைக்கான விமர்சனங்கள்

T21

Well-known member
Wonderland writer
கதை என்ன 17

ஆஹா கல்யாணம்

ஆரம்பம் முதல் இறுதி வரை ரைட்டர் என்னை சுத்தலில் விட்ட கதை ??

ஷன்மதி தன் குடும்பத்திற்கு பயந்து நல்ல பிள்ளையாக வேலை பார்க்கும் ஒரு சராசரி பெண் இவள் வீட்டில் இவளுக்கு திருமணம் பேச அதை ஏற்று கொள்ள முடியாத நிலையில் இவள் அப்படி என்ன தான் நடந்து இருக்கும் இந்த பச்ச மண்ணுக்கு???

ஷன்மதி ரொம்ப அப்பாவியான பெண் ஆசை பட கூடாத விஷயத்தை ஆசை பட்டு அதனால் இவள் சந்திக்கும் பிரச்சனைகள் பல இவளின் வாழ்வில் தென்றலாய் வரும் என்று நினைக்கும் விஷயம் சூறாவளியாய் புரட்டி போட்டு விட அதில் இருந்து மீழ்வாளா??

என்னை மிகவும் கவர்ந்தது ஷரத் இவனை பார்த்ததத்தில் இருந்து இறுதி வரை மனதை கொள்ளை கொண்டு சென்று விட்டான் இவனின் காதலும், அதை கையாளும் விதமும், இவனின் நேர்மையும் அவளை சீண்டி கொண்டே இருப்பதும் ??? அருமையான ஆண்மகன் ஒரு பெண் எதிர்பார்க்கும் நம்பிக்கை & பாதுகாப்பு இரண்டையும் அளிக்கும் அற்புதமான துணைவன் ??

வான்மதி இவ வரும் ஒவ்வொரு காட்சியும் என்டேர்டைன்மெண்ட் தான் ??? அவனிடம் பல்பு வாங்குவது துறு துறு விளையாட்டு காதலை ஒத்து கொள்ளாமல் சுத்தலில் விடுவது ஓவியம் பற்றி தெரிய வந்து பயம் கொள்வது ஷியாமை அலற விடுவது எல்லாமே செம செம ☺️☺️வளர்ந்த குழந்தை இவள் ??

லீலாவதி சூப்பரான பெண்மணி முதலில் இவர் மீது கோபம் வந்தாலும் எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டு மதிக்கு துணை நின்று மகனை எதிர்ப்பது ????

சண்முகம் பெண்களை கட்டுப்படுத்தலாம் தப்பில்ல ஆனால் அவள் மனதில் இருப்பதை சொல்லும் அளவுக்கு அவளுக்கு சுதந்திரம் குடுக்கணும் ??

சரண் எனக்கு என்னவோ கடைசி வரை இவனை பிடிக்கவே இல்ல இவன் செயலுக்கு இவன் சரியான விளக்கம் கொடுக்கவே இல்ல ??ஒரு பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை மதிக்க தவறி விட்டான் அவள் முக்கியமாக எதிர்பார்ப்பதை கொடுக்க தவறியதால் அவளும் கஷ்டப்பட்டு இவனும் கஷ்டப்பட்டு ?‍♀️?‍♀️?‍♀️ அவ்வளவு என்ன ஈகோ மற்ற பெண்களை மதித்து ??எங்க சரியாக நடக்கணுமோ அங்க ??? என்னால இவனை மன்னிக்கவே முடியல ??

உங்களின் எழுத்து நடையும் அதை ஸ்வரசியமாக கொண்டு சென்ற விதமும் அவ்வளவு அழகு ??

காதல், பாசம், என்டேர்டைன்மெண்ட், கலாட்டா நகைச்சுவை, வலி என்று எல்லாம் கலந்த கலவை ???

பின்குறிப்பு :(இதுல எந்த ட்விஸ்ட் உம் இல்லையே ???மறந்துட்டீங்களா ??இல்லை என் கண்ணில் படலையா )

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ????

லிங்க் ???

நீங்க தான் ஃபர்ஸ்ட ரேவியூ. Thank you so much dharshu ??????????????
 

T21

Well-known member
Wonderland writer
வணக்கம் சகோதரிகளே ..

#ஆஹா_கல்யாணம்

கதை எண் 17

பொம்மு நாவலின் போட்டிக் கதை,

அதீத காதல் செயல் ஆளுமை வடிவிலே
அருகில் நெறுங்கி வருகையில்..
விலகல் வழியிலே..

பிழை என நினைக்காது தொடரும்
காதல் விழிப்பு..
அதுவே சேதாரத்தின் முதல் படி..

காதலா... இதுவா...என
என போராடி போராடி விடைதெறியாது
பயணிக்கையில்..

ஆஹா.. கல்யாண வைபோக உருவில்
உடைந்த காதல் விளையாட்டோ..

இரு காதல் நிலைகள் தென்றலாய்.. புயலாய்
காலநிலை மாற்றத்தில்..

சரண் நம் நாயகனின் அதீத காதல் தப்பால் தடுமாறும் நாயகி.
அவன் அவளின் காதலை அடைய செய்திடும் வழிகளெல்லாம். இவன் மனதில்.. என்னத்தான் ஓடுகிறது என புரிந்தும் புரியாத நிலை. தன் திருத்த நிலையில் சரண் சந்நதி காதல் மீதுற அழகு.
ஏனோ சரணை பிடித்தம் செய்தும் கொண்டது.

ஷன்மதி உள்ளே வெளியே என போராட்ட வாழ்க்கை வாழும். விட்(டு) டில் பூச்சி. உள்ளே இருந்த நேசம். காதல் அல்லாது மறித்து திருமண பந்தத்தில் நுழையும் இடமெல்லாம் கவலையே..
இவளின் அதீத காதலும் வாழ்வா .. சாவா என்ற நிலையே..

சரத் மதி காதல் மிகவும் புரிந்துணர்வான அழகு காதல். இவளின் காதல் கலாட்டக்கள் சங்கீதமான கீதம். அவளை அறிந்தே அவன் பின் தொடரும் இடமெல்லாம் காதல்... காதல்.. மட்டுமே .
வளையும் இடத்தில் வளைந்து .. அடக்கும் இடத்தில் அன்பால் அடக்குவது மிகவும் புரிதலான செயல் இவர்களுக்கு .

ஓ.. தனிக்குடித்தனம் போவதற்கு இப்படியும் காரணம் உண்டு என இவ்வளவு நாள் தெறியாமல் போயிற்றே.. சிரிப்பின் உச்சம். அங்கே.

பெண்களை கட்டுபடுத்துவதில் தப்பில்லை. அதிலும் அன்பு இருந்தால் சில பிழைகளை தவிர்க்கலாம்.

உங்களின் எழுத்து வடிவங்கள் மிகவும் அருமை ஆசிரிய தோழியே. அழகாக கதையை நகர்த்தி சென்றில். அந்த ரகசிய குறீயிடு நாம எப்போதோ தெறிந்து கொண்டோம் இது தான் என்று. நீங்கள் அதை எப்படி தருவீர்கள் என காத்திருந்தோம்.

இந்த கதையில் இரு நிலைகளை அழகாக்கி சென்றீர்கள் ஒன்று எழுத்து மற்றது ஓவியம். இரண்டுமே பொக்கிஷ ரசனைகள்.

எல்லை மீறும் காதலுக்கு வலியே பிரதானம் என சுட்டிக்காட்டிருப்பது மிகவும் அருமை.காதலும் உணர்வின் ஒரு வடிவமே என நிலைபெற வைத்தது அழகு.

ஆஹா கல்யாணம் எல்லா உணர்வுகளின் விருந்து.
அருமையான கதைவடிவமும் கூட. வாழ்த்துக்கள் மா

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.

இப்பவும் சொல்கிறேன் நான் சரண் பக்கம் தான்.அவினில்லா கதையே இல்லை.❤❤❤❤❤❤
Wow super darling... Thank you so much... ?????????????
 

T21

Well-known member
Wonderland writer
#Twist21

#No17_ஆஹா_கல்யாணம்

ஒரு பெண்ணின் உணர்வுகளையும், அது சரியாக கையாளபடாவிட்டால் வியம் விளைவுகளையும் வேதனைகளையும் அழகா சொல்லி இருக்காங்க...

ஷன்மதி காதலிப்பதில் இருக்கும் தைரியம் அதை சொல்லுவதில் இல்லை... சொல்லும் முன்பே அவளின் காதல் கருகி போய் விடுது, காரணம் அவளின் ஆசையே... நிச்சயம் இல்லா உலகில் இவள் செய்த ஒரு விசயம் எனக்கு பிடிக்கல... தென்றலாக வேண்டியது புயலாக மாறி சுருட்டி போட, காதல் துறந்து, பெற்றோர் சொல்லும் மாப்பிள்ளையும் கரம் பிடிக்க முடியாது இவள் படும் துன்பங்களை பார்த்தா பாவமா இருக்குது... ??? இவ என்ன பண்ணுனா? ஏன் அவளுக்கு, யாரால், என்ன, பிரச்சனை? அவள் மனதை மீட்பானா? ஊஞ்சலாடும் மனதை நிறுத்தி திருமணம் நடக்குமா?

சரண்குமார், தப்பை செஞ்சுட்டு அவன் ஒத்துக்கவே மாட்டுரான்??? அதில் அவன் மேல் செம்ம கடுப்பு... அவன் சொல்லுவது தான் அவனுக்கு சரி! நேசம் இருந்தும் இவனின் செயல்களாலே பல பல இன்னல்கள் இவனுக்கு மட்டுமல்ல சுத்தி இருப்போருக்கும்... பாவம் விக்கி??? இவனுக்கு நண்பனா வாச்ச பாவத்துக்கு எண்ணலாம் பண்ண வேண்டி இருக்கு??? இவன் தப்பை நெற்றியில் அடிச்சு உணர்த்த நடக்கும் சம்பவம்??? என்னனு படிச்சு தெரிஞ்சுக்கோங்க..

லீலாவதி எனக்கு இவரை பிடிச்சது.. என்ன தான் அவர் கோபமாக பேசினாலும், எந்த சூழ்நிலையிலும் சரியாக தான் பேசினார்... அம்மாவாகவும் யோசித்தார், பெண்ணாகவும் யோசித்தார், அதனால் எனக்கு அவர் மேல கோபம் எல்லாம் வரலை???

அடுத்து சரத் இவனையும் எனக்கு ரொம்ப பிடிச்சது... இவனின் காதல்❤️❤️❤️ சூப்பர்... அவளின் இயல்புகளை கடைசி வரை அப்படியே கொண்டு போய் இருக்கான்... அதற்கு அவனின் அம்மாவும் ஒரு காரணம்.. அவனின் மும்முவை அவ்வளவு அக்கறையா பார்த்துகிரான்... இவனின் செயலின் பின்விளைவு மோசமாக இருந்த போதும்??(!?) அழகா அவளை மீட்டு எடுக்கிறான்.. இவன் மேல அவள் கொண்ட நம்பிக்கை, அதை கொடுத்த இவனின் காதல்???

வாலு இது உண்மையிலேயே வாலு தான்... Virtual வாலு... கொஞ்சம் கூட பயமில்லாமல் எல்லா வேலையும் பண்ணுரா.. அதைவிட செஞ்சிட்டு தான் யோசிக்கிறது???

அபி தேவையான இடத்தில் சரியா பேசுகிறா... மதி அப்பா தாமதம் ஆனாலும் அவரின் மறைக்கப்பட்ட பாசத்தையும், நம்பிக்கையும் தரார் பெண்களுக்கு...

பாவப்பட்ட ஜீவன் நம்ம ரகு?? ஆனால் அம்மாவுக்கு டாஸ்க் எல்லாம் ஓவர் டா டேய்... "ரகுவின் சமையல் அறையில் 100 நாட்கள்"??? டாஸ்க் வெற்றி பெற வாழ்த்துகள் ரகு...

நல்லா சுத்தல்ல விட்டுட்டீங்க ஆரம்பத்தில் இருந்து... யார்னு தெரியட்டும்...

வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே????
Really superb... Thank you so much chella kutty ????????
 

T21

Well-known member
Wonderland writer
ஆஹா கல்யாணம்....
கல்யாணம் யாருக்கு ஆஹாவா யாருக்கு ஐயோவானு வாங்க பார்க்கலாம்???.

ஷனு - முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது முற்றிலும் உண்மை தான் போலும் இவ விசயத்தில் .... பப்ல சரண்ன பார்த்து இம்ப்ரஸ் ஆகற ஷனு, அவன் அவ கிட்ட நடந்துகற விதம் பிடிக்காம விலக, அவ வீட்டில் அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையே அவன் தான் தெரியரப்ப அவளோட நிலை மதில் மேல் பூனை தான். அவளோட கற்பனைக்கும் நிஜத்துக்கும் உள்ள வேறுபாட்டை ஏற்றுக்க முடியாம தவிக்கற விதம்????. இதை அவன் கிட்ட சொல்லி இருந்தா இவளோ பிரச்சனைக்கு வழி வகுத்து இருக்காது.

சரண் - இவனா இப்ப வரை தப்பா நினைக்க தோணல எனக்கும் பவாமாக்கும் ???. லவ் பண்ற எல்லாரும் ஒரே மாதிரி பண்ணனும்னு அவசியம் இல்லை தானே, அதே மாதிரி தான் இவன் காதலும். என்ன அத எக்ஸ்பிரஸ் பண்ற விதம் தான் கொஞ்சம் சொதப்பிருச்சி???. ஆன அதுக்கும் அவ கண்ணு தான் காரணம், அவனா மட்டும் தப்பு சொல்ல முடியாது???. ஆன அதையும் கடைசியாக சரி பண்ணிட்டான் செல்லகுட்டி ????????. அவனோட காதல் கொஞ்சம் வரம்பு மீறியதாக இருந்தாலும் அதில் 100 சதவீதம் காதல் மட்டும் தான் இருக்கு.

சரத் - சரண் காதல் ஆர்ப்பாட்டமான அருவி மாதிரி நா இவன் காதல் அமைதியா ஓடற நதி மாதிரி. அவளோ மென்மை எல்லத்திலும் ???.

வானு - சரியான வாலு, இவ தேடி தேடி சரத் ஆ லவ் பன்றப்ப சொல்ற ரிசன் ????. அப்பறம் அவன் காதலை உரைத்து அதை அவள் உணரும் இடம்????.

லீலாவதி - சரண் & சரத் ஓட அம்மா. இவங்க கேரக்டர் ஆரம்பத்தில் கொஞ்சம் திக்குனு இருந்தாலும் இவகளோட புரிந்துணர்வு????.

சண்முகம் - பெண் பிள்ளைக்களை கண்டிப்பு காட்டி தான் வளர்க்கணும் இல்லைனா தப்பு வழியில் போடுவாங்கனு யோசிச்சி ரொம்ப கண்டிப்பு காட்டி அவர் பிள்ளைகளை அவர் கிட்ட எதுக்கும் எதிர்பார்க்க விடாம செய்துடார். ஆன அதையும் லாஸ்ட் ஆ புரிஞ்சி கிட்டார்.

அசோக் - அது என்னவோ தெரியல, எல்லா கதையிலும் ஹீரோ அப்பா எல்லாம் மிக்சர் மாமாவாவே இருக்காங்க???(அப்பானு சொன்ன சரண் எனக்கு அண்ணன் ஆயிருவான் இல்ல அதான் ???). இதிலும் அப்படி தான், சாரி சார் உங்களுக்கு இந்த ரைட்டர் இம்போட்டன்ஸ் குடுக்கவே இல்ல, சோகம் தான்???????.

இதுலையே தெரிஞ்சி இருக்கும் யாருக்கு ஆஹா கல்யாணம்னு ????.

கடைசியா இது தான் ஸ்டோரி கன்வே பண்றது NO MEANS NO தான் ???

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ ????
Wow sema, adipozhi review da pattu kutty. Thank you so much
 

Sriraj

New member
வணக்கம்.

Twist 21 போட்டி

கதை விமர்சனம்

கதை எண்: 17 - ஆஹா கல்யாணம்

நாயகன் - சரண்
நாயகி - ஷன்மதி

இவர்களைப் பற்றி கதையில் தெரிந்து கொள்ளுங்கள்.?

அழகான கலாட்டாக்கள் நிறைந்த காதல் கதை.?

ஆஹா கல்யாணம் -

இரு காதல்களின் குணாதிசியங்களை கூறும் அழகிய கதை...❤

ஊராருக்கு சிறந்த மனிதனாய் விளங்குபவன்…
அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்பவன் என நடப்பவன்…?

தன்னவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள வில்லையோ…
இது தான் அறிவின் உச்சமோ…?

காதலின் தெவிட்டா காதல் அழகு தான் என்றாலும்…
அதையே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் மாறி விடாதா…?

இதை புரிந்து கொள்ளாமல் மன்னவனின் செய்கைகள் சற்றே வருத்துகிறது…?


இரு மனமாய் துடிப்பவள் அவள்…
வீட்டிற்கு ஏற்ப இருக்கும் மங்கையின் வாழ்வை புரட்டி போடுகிறது அவளின் மெல்லிய உணர்வுகள்…?

தென்றலாய் வரும் என அவள் எதிர்ப்பார்க்க வந்ததோ புயல்…?

புயல் தென்றலை வீழ்த்தியதா
இல்லை தென்றல் புயலை வீழ்த்தியதா
என அறிய பல சுவாரஸ்ய காட்சிகள்… என ஒரு காதல் இவ்வாறு இருக்க…?

இன்னொன்றோ…

நேர்மாறாய் அமைந்தது…
புராதல்களின் சங்கமமாய்
காதல் உலகின் சுவாரஸ்யமாய்
வாழ்வின் இனிமையாய் என அழகாய் செல்லும் சுட்டித்தனமான அன்பு…??


இரு நேயங்களின் வேறுபாடுள்ள அழகிய காதல் கதை…?

இரு வேறுபட்ட மனங்களும் தங்கள் வாழ்வில் சிறப்பாய் வாழ்ந்தனரா என்பதே கதை…?

ஆஹா கல்யாணம் அருமையான விருந்தின் உபச்சாரம். அழகிய உபசாரத்திற்கு என் அன்பு வாழ்த்துக்கள்..??


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.??


அன்புடன்
ஸ்ரீராஜ்
 
Top