ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரௌத்திரம் கொள் ரதியே - கதை திரி

Status
Not open for further replies.

aadrika

Well-known member
Wonderland writer
ரௌத்திரம் கொள் ரதியே



அத்தியாயம் - 1




சென்னை மாநகரம் முழுக்க பரபரப்பாக இருக்க டிவி நியூஸ் சேனல் எல்லாம் டிஆர்பி ஏத்துவதற்காக நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் வீட்டின் முன் நின்று அவரிடம் பேச முயற்சித்துக் கொண்டு இருந்தனர்….

பின்ன இருக்காதா அமைச்சரின் மகன் காணாமல் போயிருக்க அவரை யாராவது கடத்தி இருப்பார்களா என்று அவர்களின் சேனலில் சூடு பிடிக்கும் அளவுக்கு பேசிக் கொண்டு இருந்தனர் நடுவே இன்னும் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டு இருந்தனர்…

இதை எதையும் கண்டுக் கொள்ளாமல் கமிஷனரிடம் பேசிக் கொண்டு இருந்தார் அமைச்சர்…

"என்னய்யா ஆச்சு என் பையன கண்டு பிடிச்சீங்களா இல்லையா "என்று கோவமாக கேட்க

அவருக்கு பதில் சொல்ல தயங்கிக் கொண்டே "தேடிக் கிட்டு இருக்கோம் சார் கண்டுப் புடிச்சுருவோம் "என்று சொல்ல

அதை கேட்டவர் "கிழிப்பிங்க இத தான் ரெண்டு நாளா சொல்லிக் கிட்டு இருக்க ஆனா இன்னும் என் பையன் வீடு வந்து சேரலையே இப்போவே மீடியாகாரங்க எல்லாம் வீட்டுக்கு வாசல் முன்னாடி நிக்கிறாங்க இப்படியே போன வீட்டு பெட்ரூம் வரைக்கும் வந்துருவாங்க "என்று சத்தம் போட

அவர் திட்டுவதை கேட்ட கமிஷனர்க்கு கோவம் வந்தாலும் மந்திரியிடம் என்ன செய்து விட முடியும் எனவே அவர் பேசுவதை எல்லாம் பல்லை கடித்து கேட்டுக் கொண்டு இருந்தார் வேறு வழி…

அப்போது அமைச்சரின் பிஏ அவரிடன் ஏதோ சொல்ல

அந்த இடைவேலையை பயன் படுத்திக் கொண்ட கமிஷனர் நகர்ந்து அருகில் இருந்த எஸ்பியிடம் "இவன் எல்லாம் என்னை திட்டும் நிலைமைல இருக்கேன் நாலங் கிளாஸ் கூட படிக்காதவன் ஐபிஎஸ் பாஸ் பண்ண என்னை நிக்க வைச்சு கேள்வி கேட்குறான் எல்லாம் என் நேரம் என்னமோ உத்தம பையன பெத்து வைச்ச மாதிரி இத்தன பேச்சு "என்று ஆதங்கம் தாங்காமல் திட்டிக் கொண்டு இருந்தவர்

இவர் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தா எஸ்பியை பார்த்து


"என்ன ஏதாவது தகவல் கிடைச்சு இருக்க?"என்று கேட்க

"சார் மினிஸ்டர் பையன் சென்னை ஹைவேய்ஸ் வழியா தான் போயிருக்காங்க அவரோட கார் கிராஸ் பண்ணது சிசிடிவி புட்டேஜ் ல காப்பி ஆகி இருக்கு ஆனா அதுக்கு அப்புறம் வர சிசிடிவி புட்டேஜ்ல அவரோட கார் வரல சோ அந்த ரெண்டு சிசிடிவிக்கும் நடுவுல தான் ஏதோ ஆகியிருக்கு "என்று இரண்டு நாட்களாக கண்டுப்பிடித்ததை கூற

அதை கேட்டு யோசித்தவர் "அவரோட கார்? "என்று கேட்க

மறுப்பாக தலையாட்டிய எஸ்பி "இல்ல சார் அவரோட கார் எங்கையும் இல்ல சென்னை ல இருக்க எல்லா போலீஸ் ஸ்டேஷன்லையும் அலெர்ட் பண்ணிட்டேன் மெக்கானிக் பார்க்கிங்னு எல்லா இடத்திலயும் அவரோட கார் நம்பர் குடுத்து அலெர்ட் பண்ணி இருக்கேன் "என்க

"எங்க தான் போயிருப்பாங்க இல்ல என்ன ஆகி இருக்கும் "என்று கேட்ட

எஸ்பியோ "தெரியல சார் என்ன மோடிவ்னு பணத்துக்காகனா இந்த நேரம் ஏதாவது டிமாண்ட் பண்ணி கால் வந்து இருக்கும் ஆனா அப்படி எதுவும் வரலனா மே பீ ஏதாவது பகையா இருக்கலாம் "என்று சொல்லிக் கொண்டு இருக்க

அதே நேரம் அங்கு அமைச்சரும் அதை தான் யோசித்துக் கொண்டு இருந்தார்

அருகில் இருந்த பிஏவை அழைத்தவர் "ரங்காவ கூப்பிட்டு நமக்கு யார் எல்லாம் எதிரினு பார்த்து தட்ட சொல்லு என் பையன கடத்துனவன் சாவு ரொம்ப கொடூரமா இருக்கனும் "என்று சொல்லி வீட்டுக்குள் செல்ல

பிஏ அவர் சொன்ன வேலையை செய்து விட்டு அவர் பின் சென்றான்…

வீட்டுக்குள் சென்ற அமைச்சரின் பார்வை அங்கு சோபாவில் அமர்ந்து அழுதுக் கொண்டு இருந்த மனைவியை பார்த்தது

அந்த நேரம் சிஎம் அழைக்க

அழைப்பை எடுத்தவர் "சொல்லுங்க தலைவரே "என்று பணிவாக கேட்க

"உன் பையன் என்ன ஆனான்னு தகவல் கிடைச்சிதா "என்று கேட்க

வேதனையுடன் "இல்ல தலைவரே "என்க

"கவலை படாத என்ன உதவி வேணும்னாலும் சொல்லு பார்த்துக்கலாம் "என்று மறுபுறம் இவருக்கு ஆறுதல் சொல்லி கட் செய்யப்பட்டது…

இத்தனைக்கும் காரணம் ஆனவனோ

ஒரு பாழ் அடைந்த பங்களாவில் கை காலை சேரில் கட்டிக் போட்டு இருக்க

இரண்டு நாட்களாக இப்படி தான் மயக்கத்தில் இருக்கிறான்..

இப்போது அவன் லேசாக மயக்கம் தெளிந்து கண்ணை திறந்து பார்க்க அவனுக்கு எல்லாம் மங்களாக தெரிந்து தலை வலித்தது…

ஒரு முறை கண்ணை இறுக்க மூடி தலையை ஆட்டியவன் பின் என்ன நடந்தது என்று நினைத்து பார்த்தான்….

அன்று வீட்டில் அம்மாவிடம் சண்டை போட்டு விட்டு எங்காவது வெளியூர் போகலாம் என்று எண்ணிக் கொண்டு

காரை எடுத்துக் கொண்டு ஹைவேய்ஸில் சென்றுக் கொண்டு இருக்கும் போது

மரங்கள் நிறைந்த ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில்

ஒரு பெண் இவன் வண்டியை கை காட்டி நிறுத்த

காரை நிறுத்தியவன் அந்த பெண்ணை மேல் இருந்து கிழ் வரை பார்த்து "செம பிகர் "என்று நினைக்க

இவன் பார்வையயை கவனிக்காத பெண் "சார் என்னோட கார் சடன்ஆ நின்றுச்சு தனியா இருக்கவும் பயமா இருக்கு சோ லிப்ட் தர முடியுமா?"என்று கேட்க

அதை கேட்டவனுக்கு "ஆடு தான வந்து பிரியாணி போட சொல்லுதே சும்மா விட்டுருவோமா ஊருக்கு போறதுக்கு முன்னாடி இவ கதையை முடிக்க வேண்டியது தான் "என்று உள்ளுக்குள் கேவலமாக நினைத்து

"Sure கண்டிப்பா வாங்க நா ட்ரோப் பண்றேன் இந்த மாதிரி இடத்துல தனியா நிக்கறது சேப் இல்ல "என்று சொல்ல

"ரொம்ப தேங்க்ஸ் சார் "என்று சொல்லி அந்த பெண் உள்ளே ஏறவும்

அவளை பார்த்து கண்ணில் மயக்கத்துடன் வண்டியை எடுத்தவன் "உங்க பேர் என்ன? "என்று பேச்சு குடுக்க

"வெண்பா சார் "என்க

அதை கேட்டவன் "சார் வேண்டாம் "என்று சொல்லிவிட்டு "என்ன பண்றிங்க?"என்று கேட்க

அந்த பெண்ணோ சுற்றி பார்வையயை விட்டவள் "டாக்டர் "என்றாள்…

அதை கேட்டவன் "டாக்டர் ஆ "என்று கேட்டு

சிறிது தூரம் சென்ற வரை தான் நியாபகம் இருக்கிறது அதன் பின் அவன் பின் தலையை யாரோ அடித்து அதனால் மயக்கம் அடைந்தது புரிந்து

அந்த இடத்தை கண்ணால் நோட்டம் இட

அவன் கண் விழித்ததில் இருந்து அவனின் ஒவ்வொரு செயல்களையும் நான்கு உருவம் பார்த்துக் கொண்டு தான் இருந்தது….

அப்போது தான் அவனை சுற்றி நான்கு உருவங்கள் முகமூடி அணிந்து இருப்பதை பார்த்தவன்

"யாரு டா நீங்க? நான் யாரு என்னோட பேக்கிரௌண்ட் என்னனு தெரியாம கை வைச்சுட்டீங்க இப்போ ஊரே என்னை தான் தேடும் "என்று சத்தம் போட்டு எச்சரிக்கை செய்ய

இவன் சொல்வதை கேட்டு பயம் கொள்ளாமல் நான்கு உருவமும் அலட்சியப்படுத்த

அதில் எரிச்சல் அடைந்தவன் "முகத்தை காட்டுங்க டா முகத்தை காட்ட கூட இவ்ளோ பயப்படறவங்க எதுக்கு கடத்தணும் "என்று நக்கலாக கேட்க

இவன் பேசுவதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் அமைதியாக இருக்கவும்

அதில் நிதானம் இழந்து "உண்மையான ஆம்பளையா இருந்தா முகத்தை காட்டுங்க டா ஏன் பொட்டை மாதிரி முகத்தை மூடி இருக்கிங்க என் அப்பா யாருனு தெரியுமா "என்று ஆத்திரமாக கத்த

ஒரு உருவம் அவனை நெருங்கி வந்து "உண்மையான ஆம்பளையா இருக்கனும்னா அதுக்கு முதல ஆம்பளையா இருக்கனும் உன் அப்பா யாருனு என்கிட்ட கேட்குற ஏன் உன் அம்மா சொல்லலையே "என்று நிதானமாக அதே சமயம் அவனுக்கு கோவம் வருவது போல் கேட்க

இவ்ளோ நேரம் ஆண் என்று நினைத்துக் கொண்டு இருந்தவன் தன்னை கடத்தியது பெண் என்று நினைத்து கூட பார்க்கவில்லை…

அதில் அதிர்ச்சி அடைந்தவன் "போயும் போயும் பொண்ணா என்னை கடத்துனது "என்று அவமானமாக கேட்க

அவன் சொன்னா விதத்தில் கோவம் கொண்டவன் அவனின் முடியை பிடித்து வலிக்கும் அளவுக்கு இழுக்க

அதில் ஏற்ப்பட்ட வலியில் அவன் கத்த

அவன் கத்துவதை பார்த்தவள் "அது என்ன டா போயும் போயும் பொண்ணுனு சொல்ற நீ சொன்ன பொண்ணுங்க தான் உன் பிரண்ட்ஸ் மூணு பேரையும் கொன்ன மாதிரி உன்னையும் கொள்ள போறோம் "என்று கர்ஜனை செய்ய

அதில் ஒருமுறை அவன் உடல் தூக்கிப் போட்டது ஒரு பெண்ணின் குரலில் இவ்ளோ ஆவேசம் இருக்குமா என்று அன்று தான் தெரிந்தது அவனுக்கு

அவள் சொன்னதை கேட்டவனுக்கு "அப்போ நா நினைச்ச மாதிரி என் பிரண்ட்ஸ் எல்லாம் தான காணாம போகல இவளுங்க தான் கொன்னு இருகாங்க "என்று நினைத்தவனுக்கு பயத்தில் முகம் எல்லாம் வேர்த்து போக

அவன் கண்ணில் பயத்தை பார்த்தவள் "பாரா இவ்ளோ நேரம் வீரமா பேசிக் கிட்டு இருந்தவன் இப்போ பயந்து சாகறான் "என்று நக்கலாக சொல்லியவள்

அவனின் முகத்தை பற்றி "பொண்ணுங்கனா உன்கூட படுக்கறதுக்கு மட்டும் தான "என்று அவன் கன்னத்தில் அறைந்தாள்…

அவளின் அறை வாங்கியவனுக்கு கண்ணில் பூச்சி பறந்தது

ஒரு பெண்ணுக்குள் இவ்ளோ வலிமையா என்பது போல

அவனின் பூச்சி பறக்கும் கண்களை பார்த்துக் கொண்டே

முகமூடியை கழட்டினாள் அதிதி…

அதிதி எங்கு நடந்தாலும் அதை தட்டிக்
கேட்பவள்...

தொங்கி போன அவன் முகத்தை பற்றியவள் "என்ன பயந்துடியா பயப்படாத உன் பிரண்ட்ஸ் இன்னும் சாகல உயிரோட தான் இருகாங்க "என்க


அதை கேட்டவன் முகத்தில் நிம்மதி தெரிய


அதை பார்த்துக் கொண்டே "பண்ண பாவத்துக்கு எல்லாம் எப்படி அவ்ளோ ஈசியா சகா விடுவேன் கொடுமையா நீயே என்னை கொன்றுனு சொல்ற அளவுக்கு கொடுமையா நீ சாகனும் "என்று கர்ஜிக்க


அதை கேட்டவன் முகம் ரத்த ஓட்டம் நின்றது போல வெளிரி போக


அதை பார்த்தாள் தன் தோழிகளிடம் "இவன் முகத்துல பயத்தை பார்த்தியா கவி இதுக்கு கூட நல்லா தான இருக்கு அமைச்சரோட பையன் பல பொண்ணுங்களோட வாழ்க்கையை நாசமாகியவன் முகத்துல பயம் பார்க்கவே சூப்பர்ஆ இருக்குல "என்க


அவள் பேசுவதை கேட்டவனுக்கு பயத்தில் தொண்டை அடைக்க "ப்ளீஸ் என்ன விட்ரு உனக்கு எவ்ளோ பணம் வேணும்னாலும் தரேன் "என்று அவன் உயிருக்கு பேரம் பேச


அவனை கேவலமாக பார்த்தவள் "பணத்தால என்ன வேணும்னாலும் பண்ண முடியுமா? அப்போ உன்னால சீரழிஞ்சு போனவங்க வாழ்க்கையை திருப்பி குடு "என்று கேட்க


அதற்கு அவன்
என்ன சொல்வதென்று தெரியாமல் இருக்க


அதை பார்த்தவள் "பண்ண முடியாதுல உன் பணத்தால பண்ண முடியாதுல உன் உயிருனா உனக்கு உசத்தி அதுவே அடித்தவங்க உயிரு உனக்கு விளையாட்டா "என்று கேட்டு


அங்கு இருந்தா ராட் கம்பியை எடுத்தவள்


தோழிகளை பார்த்து அவனுங்களையும் இழுத்துட்டு வாங்க என்க


அவளின் பேச்சை கேட்டு அவனின் மூன்று நண்பர்களையும் அவனின் அருகில் கட்டிக் போட


அவர்களை பார்த்தவன் "டேய் எழுந்திரிங்க டா கண்ணு முழிச்சு பாருங்க "என்று கத்த


போதையில் இருந்தவங்களுக்கு அவன் சொல்வது எதுவும் காதில் கேட்காமல் போனது


அவன் கத்துவதை பார்த்தவள் "எவ்ளோ சவுண்ட் போட்டாலும் முழிக்க மாட்டாங்க ஏன்னா அவ்ளோ பவர்புல் டிரக்ஸ் "என்றாள்…


அவனை நக்கலாக பார்த்துக் கொண்டே "ரெடி உன் பாவக் கணக்கை முடிக்கலாமா? "என்று கேட்டு


கம்பியை எடுத்துக் கொண்டு அவன் அருகில் சென்றாள் அதிதி…





வருவாள்…..
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 2


அதிதி இரும்புக் கம்பியை எடுத்து அவன் அருகில் செல்ல
அவள் வருவதை பார்த்து பயந்தவன் "வேணாம் என்ன ஒன்னும் பண்ணுறாத ப்ளீஸ் "என்று கெஞ்ச

அதை கேட்டவள் "இதே மாதிரி தான அன்னைக்கு அந்த குழந்தையும் உங்கிட்ட கெஞ்சி இருக்கும் "என்க

அவனின் முகம் ஒரு நிமிடம் யோசிக்க

அதை பார்த்த வெண்பா"ஒரு தப்பு பண்ணி இருந்தா நியாபகம் இருக்கும் நீதான் பல தப்பு பண்ணி இருக்கியே எப்படி நியாபகம் வரும் "என்று ஆத்திரமாக கேட்க

அதை கேட்ட அதிதி "இவனுக்காக நீ டென்ஷன் ஆகாத வெண்பா "என்றவள்…

அவனின் முடையை பிடித்து இழுத்து நியாபகம் இல்ல போன வாரம் ஒரு பொண்ண கொடுமை பண்ணி சாகடிச்சியே "என்க

அதை கேட்டவனின் முகம் மாற ஆரம்பித்தது…

போன வாரம் அவன் வீட்டில் வேலை செய்யும் பெண் அவளுடைய மகளை கூட்டி வந்து இருந்தாள்…

சின்ன பொண்ணு ஒன்பது வயசு தான் இருக்கும் இது வரைக்கும் குப்பத்திலயே வளர்த்தவள் இன்று இவ்ளோ பெரிய வீட்டை பார்த்து ஆச்சரியம் அடைந்து ஒவ்வொன்றையும் தொட்டு பார்க்க

அவளை தடுத்த அவளின் அம்மா "இது பெரிய இடம் கண்ணு இங்க எதையும் தொட்டுறாத "என்று எச்சரிக்கையுடன் தான் அழைத்து வந்தார்…

சமையல் செய்து கொண்டு இருந்தவர் அப்போ அப்போ பெண்ணையும் பார்த்துக் கொண்டார்…

வேலை செய்பவருக்கு அமைச்சரின் மகனை பற்றி தெரிந்து இருந்தாலும் சின்ன பெண்ணை ஒன்று செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையில் தான் வீட்டில் தனியாக இருப்பாளே என்று அழைத்து வந்து இருந்தார் இருந்தாலும் ஒரு பயம் இருக்க பெண்ணை அவருடன் வைத்துக் கொண்டார்….

அப்போது அவன் அங்கு வரவும் சின்ன பெண்ணை பார்த்தவன்
அவன் அம்மாவிடம் "யாரு மா இது?"என்று கேட்க

"நம்ம வீட்ல சமையல் செய்யற செல்லம்மா பொண்ணு டா "என்க

அதை கேட்டவன் அந்த பெண்ணை பார்த்து "உன் பேரு என்ன ?என்ன படிக்கற "என்று கேட்க

பெரியவீட்டு பையன் பேசியதால் சந்தோஷத்தில் "என் பேரு ரேவதி ணா அஞ்சாவது படிக்கிறேன் "என்று முகம் முழுக்க சிரிப்புடன் சொல்ல

அவள் கன்னத்தில் தட்டி செல்ல

அவன் போன பின் செல்லம்மா அவர் பொண்ணை அழைத்து "கண்ணு இனி அந்த அண்ணா பேசுனா நீ பேசாத என்கிட்ட வந்துரு "என்று சொல்ல

அதை கேட்டவள் முகத்தை சுருக்கி "ஏன்? மா அந்த அண்ணா நல்லா தான பேசறாங்க "என்க

சின்ன பெண்ணிடம் எப்படி சொல்வது என்று தயங்கியவர் "நா சொன்னா கேட்கணும் ஏன்? எதுக்கு? னு கேள்வி கேட்டுக்கிட்டு இருக்க கூடாது "என்று திட்டிவிட

எதற்காக திட்டுகிறார் என்று புரியாதவள் கோபத்துடன் சமையல் அறையில் அமர
அதை பார்த்த பின் தன் அவருக்கு நிம்மதியாக இருந்தார்…

ஆனால் அவருக்கு தெரியாமல் போனது ஒரு குழந்தையிடன் காரணம் சொல்லாமல் இதை செய்யாதே என்றால் அதை தான் செய்ய தோன்றும் எனவே பெற்றோர் குழந்தைகளை திட்டாமல் காரணம் அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொன்னால் புரிந்துக் கொள்வார்கள்…

அன்று முழுவதும் செல்லம்மா பெண்ணை பத்திரமாக பார்த்துக் கொண்டவர்

சாயிங்காலம் மகளை வீட்டுக்கு அழைத்து சென்ற பின் தான் நிம்மதியாக இருந்தது இனி பொண்ணை அத வீட்டு பக்கம் அழைத்து செல்வது இல்லை என்று முடிவு எடுத்துக் கொண்டார் …

அங்கே அமைச்சரின் மகன் அவன் பிரண்ட்ஸ் உடன் பேசிக் கொண்டு இருக்கும் போது "போ டா டெய்லி அந்த ஏரியாக்கு போயி பண்றது எல்லாம் போர் ஒரு திரில் இல்ல "என்று


அவனின் நண்பன் குடித்துக் கொண்டே சொல்ல


இன்னொரு நண்பனோ "அதுக்கு என்ன பண்ண சொல்ற? "என்று கேட்க

முதலில் பேசியவனே "ஏதாவது புதுசா கிடைச்சா நல்லா இருக்கும் "என்க

"புதுசா ஓகே பார்த்தரலாம் "என்று அமைச்சரின் மகன்
நண்பனிடம் சொல்ல

"குட்டியா பாருடா "என்கவும்

நண்பன் குட்டி என்றவுடன் அவனுக்கு நினைவு வந்தது வீட்டில் பார்த்த பெண் தான் உடனே "சரி டா தூக்கிரலாம் "என்று சொல்லி

குப்பத்தின் முன் வண்டியை நிறுத்த

செல்லம்மாவிடம் கோவித்துக் கொண்டு ரேவதி விளையாடிக் கொண்டு இருந்தவள் அமைச்சரின் மகன் காரில் இறங்கவும்

அவனை பார்த்தவள்
அவள் தோழிகளில் முன் பெருமையாக காட்டிக் கொள்ள

அவனை நோக்கி ஓடியவள் "அண்ணா நீங்க இங்க எதுக்கு வந்து இருக்கிங்க? "என்று கேட்க

அவனோ தன் நண்பர்களிடம் கண்ணை காட்டிவிட்டு "உனக்காக தான் "என்க

அதை கேட்டவள் "எதுக்கு? "என்று கேட்டவள் தன் நண்பர்களை ஒரு முறை திரும்பி பார்த்தவள் பின் அவனை பார்க்க

"உனக்கு சாக்லேட் வாங்கி தர தான் "என்று சொல்ல

"பெரிய சாக்லேட் ஆ "என்று கண்ணை விரித்து ஆசையுடன் கேட்க

அதை பார்த்து சிரித்தவன் "ஆமா ரொம்ப பெரிய சாக்லேட் "என்று ஆசை காட்டவும்

"குடுங்க "என்று கையை நீட்டினாள்…

அவளின் கையை பார்த்தவன் "கடைக்கு போய் தான் வாங்கணும் நீயும் வரியா உனக்கு பிடிச்சத வாங்கிக்கலாம் "என்று சொன்னவுடன்

பெரிய சாக்லேட் கிடைக்கும் வேண்டியதை வாங்கிக் கொள்ளலாம் என்ற ஆசையில்

அவள் அம்மா சொன்னது நியாபகம் இல்லாமல் "வாங்க போகலாம் "என்று காரில் ஏறிக் கொண்டவள்

காரில் இருந்தவர்களை பார்த்து "இந்த அண்ணாகளும் சாக்லேட் வாங்கி தருவாங்கல "என்று கேட்க

"ஆமா பாப்பா தருவோம் "என்று சொல்லி நண்பனுக்கு கையை காட்டவும் வண்டியை எடுத்தான்….


ஒரு இடத்திற்கு அழைத்துக் கொண்டு போனர்கள்
வண்டியை வீட்டின் முன் நிறுத்த அதை பார்த்தவள்


"கடைக்கு தான கூட்டிகிட்டு போறேன்னு சொன்னிங்க அப்புறம் ஏன் இங்க வந்துருக்கோம்? "என்று வீட்டை பார்த்துக் கொண்டே கேட்க


"இந்த வீட்ல நிறைய சாக்லேட்ஸ் இருக்கு உனக்கு பிடிச்சதை நீ எடுத்துக்கலாம் "என்று ஆசைக் காட்டி வீட்டுக்குள் அழைத்து சென்று கதவை சாற்றி விட்டனர்..


அவர்கள் நெருங்கி அவளை தொடவும் முதலில் ஒன்றும் புரியாதவள் பின் பயத்துடன் "எனக்கு சாக்லேட் வேணாம் அம்மா தேடுவாங்க வீட்டுக்கு போறேன்"என்று சொன்ன


குழந்தையை குழந்தையாக பார்க்காமல் அவர்களின் ஆசையை தீர்க்கும் பொருளாக பார்க்க

அந்த பிஞ்சு கத்தி கத்தியே தன் உயிரை விட்டது….

இறந்து போனவளை பார்த்தவர்கள் "அதுக்குள்ள செத்துட்டாள இன்னொரு ரவுண்டு போகலாம்னு இருந்தேன் "என்று ஈவு இரக்கம் இல்லாமல் சொன்னவர்கள்
பெண்ணின் உடலை கூவத்தில் வீசி விட்டு சென்றனர்….


குழந்தையை காணாமல் தேடுன கண்ணம்மா அக்கம் பக்கத்து குழந்தைகளிடம் விசாரிக்க

காரில் வந்து கூட்டி சென்றாதாக சொல்லவும்
அவருக்கு தெரிந்தது அமைச்சரின் மகன் தான்….

தலையில் அடித்துக் கொண்டு அழாதவள் என்ன செய்வது என்று தெரியாமல் பின் பக்கத்தில் சொன்னவர்கள் பேச்சை கேட்டு

போலீஸ் ஸ்டேஷன் சென்று சொல்ல

அவர்களோ குப்பத்து பொண்ணு தான என்று எங்கையாவது விளையாடிக் கிட்டு இருக்கும் இல்ல யாருக்குடயாவது போய் இருக்கும் என்று சொல்லி கண்டுக் கொள்ளாமல் இருக்க

அவருக்கு என்ன செய்வது பெண்ணை எங்கு சென்று தேடுவது என்று தெரியாமல் அமைச்சரின் வீட்டுக்கு சென்று சொல்ல

அவனின் அம்மாவோ "உன் பொண்ணை எதுக்கு இங்க தேடுற "என்று ஒரே வார்த்தையில் கேட்டு அனுப்பி விட

எங்கு போவது என்று தெரியாமல் இரவு முழுக்க மகளுக்காக காத்து இருந்தவருக்கு காலையில் கிடைத்தது கூவ ஆற்றில் மிதக்கும் பெண்ணின் உடலை பற்றியா செய்தி தான்….

அதை கேட்டவர் நெஞ்சில் அடித்துக் கொண்டே அங்கு போக

உடலை மீட்டு எடுத்தவர்கள் முகத்தை காட்ட
அதை பார்த்தவர் "அய்யோ என்னோட பொண்ணு "என்று சொல்லி கதற

அவரின் கதறலை பார்த்து அங்கு இருந்தவர்களுகே பாவமாக இருந்தது….

உடலை கவர்மென்ட் ஹாஸ்பிடல்க்கு எடுத்து செல்ல
அங்கு பரிசோதனை செய்ததில் கற்பழிக்க பட்டு இறந்து இருக்கிறாள் என்று கேட்டவுடன்

அதை கேட்டு தரையில் அமர்ந்து அழுதவள் "அய்யோ என் பொண்ணு எவ்ளோ கஷ்டப்பட்டாளோ "என்று கதற


ஒரு உயிரை பறித்து எந்த வித குற்றஉணர்ச்சியும் இல்லாமல் தூங்கிக் கொண்டு இருந்தார்கள் நால்வரும்….

விஷயம் தெரிந்த அமைச்சரின் மனைவி பணத்தை கொடுத்து வெளியில் விஷயம் தெரியாதவாரு பார்த்துக் கொண்டார்….


ஒரு சிறு பெண்ணின் உயிர்க்கு நியாயம் கிடைக்காமல் போனது…

இதுவே பெரிய இடத்து பெண்ணாக
இருந்து இருந்தால் டிவி நியூஸ் என்று வந்து இருக்கும்

குப்பத்து பெண் என்பதால் ஒரு புரட்சியும் நடக்கவில்லை

இவர்களும் அடுத்த நாள் வேறு பெண் சென்று விட்டனர்…
ஒரு தாயின் கதறல் கேட்கவே இல்லை…


அதை நினைத்து பார்த்துக் கொண்டு இருந்தவனை பார்த்து "இப்போ நியாபகம் வந்துருச்சா? "என்று கேட்டு அடிக்க

அவளின் தோழிகளும் மாற்ற நபர்களை கம்பியால் அடிக்கவும்

வலியில் துடித்தவர்களை பார்த்து "இப்படி தான் அந்த பிஞ்சும் துடித்து இருக்கும் "என்று கேட்டு அடித்தனர்…

அமைச்சரின் மகன் முகத்தில் மிளகாய் பொடியை தூவ
கரம் தாங்காமல் முகம் முழுக்க ஏறிய தொடங்க

அதை தாங்காமல் வலியில் அலறியவனை பார்த்து "இதே மாதிரி தான அத பொண்ணுக்கும் இருந்து இருக்கும் "என்று கேட்டு அடித்தவள்


"குழந்தையும் தெய்வமும் ஒன்னு னு சொல்ற நாட்ல இருந்துக்கிட்டு அந்த குழந்தையை குழந்தையா பார்க்காம உன் ஆசையை தீர்த்துக்க எப்படி மனசு வந்துச்சு " கேட்டுக் கொண்டே அடித்து அவன் முகத்தை சிதைத்தவள்


"நீ என்ன பண்ண வரனு கூட அந்த குழந்தைக்கு தெரியாது டா அதை போய் இப்படி நாசம் பண்ணி கொன்னுடிங்களே அப்படி என்ன டா குழந்தை கிட்ட உன் இச்சையை காட்ட தோணுது "என்று கேட்டு அடித்தவள்


பின் ஆசிட் எடுத்து "ஆண் அப்படிங்கற திமிருனால தான் இப்படி பொண்ணுங்க வாழ்க்கையை அழிச்சிங்க "என்று ஆவேசமாக கேட்டவள்
அவர்களின் பிறப்பு உருப்பில் ஆசிட் அடித்தவள்


அவர்கள் கத்தி கதறியதை பார்த்தவள் "இப்படி தான அன்னைக்கு அந்த அம்மாவும் கதறுனாங்க "என்று சொல்லி இன்னும் ஊற்றியவள்….


"நீ செத்தா உன் அம்மாக்கு கூட உன்னை அடையாளம் தெரியக் கூடாது டா "என்று சொல்லி


அவர்களின் முகத்தை அடையாளம் தெரியாத அளவிற்கு சேத படுத்தி
துடிக்க துடிக்க அவர்களை கொன்னவள்

"இனி பொண்ணுங்களை தொடவே பயப்படனும் " என்று சொன்னவள்


அவர்களின் இறந்த உடலை இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் அவர்களின் உடலை கூவ ஆற்றில் வீசி அமைச்சர் மகனின் காரை பக்கத்தில் நிறுத்தி சென்றனர் அப்போது தான் அவன் அமைச்சரின் மகன் என்று தெரியும் என்பதால்….


அடுத்த நாள் பிளாஷ் நியூஸ் முழுக்க அமைச்சரின் மகன் அடையாளம் தெரியாத அளவிற்கு கொடூரமாக கொல்லப்பட்டார் என்பது தான்….


அதிதி நியூஸ் பார்க்கும் போது அமைச்சரின் மனைவி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழும் காட்சி போக

அதை பார்த்தவள் "அந்த பொண்ணோட அம்மா கதறும் போது அவங்க வலி தெரியல இப்போ தெரியும் "என்று நினைத்துக் கொண்டு கிளம்பினாள்….


ஊர் முழுக்க யார் இதை செய்தது இதான் பின்னணி என்ன என்று அலசிக் கொண்டு இருக்க

கமிஷனரை அழைத்த அமைச்சர் "என் பையன யார் இந்த நிலைமைக்கு கொண்டு வந்தாங்கனு எனக்கு தெரிஞ்சே ஆகணும் நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது "என்று

அவரிடம் ஆர்டர் போட்டவர்


ஊரில் இருக்கும் ரவுடிகளை அழைத்து "என் பையன இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவங்க உயிரோடவே இருக்க கூடாது "என்று சொல்லி செல்ல


அவரின் அருகில் இருந்த பிஏ "என்னமோ உத்தம மகனை பெத்த மாதிரி பேசுறாரு அவனே ஒரு பொறுக்கி நல்லவேளை செத்து போயிட்டான் நிறைய பொண்ணுங்க வாழ்க்கை தப்பிச்சுது யார் இதை பண்ணி இருந்தாலும் நல்லா இருக்கனும் "என்று வேண்டிக் கொண்டவன்..


அமைச்சர் அழைக்கும் சத்தம் கேட்டு அவரின் பின்னால் சென்றான்…


வீட்டில் நியூஸ் பார்த்துக் கொண்டு இருந்த செல்லம்மா "என் பொண்ணுக்கு நியாயம் கிடைச்சிருச்சு என் பொண்ணை கொன்னவன் செத்து போயிட்டான் யார் இதை பண்ணி இருந்தாலும் நூறு வருஷம் நல்லா இருக்கனும் "என்று மனதார சொன்னவர் டிவியில் காட்டிக் கொண்டு இருந்த அமைச்சர் மகனின் உடலை பார்த்துக் கொண்டு இருந்தார்…


இது நடக்க காரணமாக இருந்தவர்களை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்….


அதிதி சென்னையில் ஒன் ஆப் தி சக்ஸஸ்புல் பிசினஸ் உமன் அவளுக்கு வெளிநாட்டில் கூட பிரென்ச் இருக்கிறது….


அவளுக்கு அம்மா இல்லை அப்பா மட்டும் தான் அவரும் பல வருடங்களாக கோமாவில் இருக்கிறார்...


எப்போதும் இறுக்கமாக முகம் இருக்கும்
அவளின் நண்பர்கள் இருக்கும் போது மட்டும் தான் அவளின் முகம் சாதாரணமாக இருக்கும்…

அவள் எப்போதும் அவளை அழகு படுத்திக் கொள்ள மாட்டாள் பெண்களுக்கு அழகை விட தைரியம் தான் அதிகம் வேண்டும் என்று நினைப்பவள்..

அவளின் தோழிகள் அவளுக்கு எதிலும் துணையாக இருப்பார்கள்



வெண்பா கவர்மென்ட் ஹாஸ்பிடலில் டாக்டர் ஆக இருக்கிறாள்
அவளின் அம்மா அப்பா வெளிநாட்டில் இருக்கிறார்கள் இவளையும் அங்கே அழைத்ததற்கு "வர முடியாது "என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு இருப்பவள் இந்தியாவியா மிகவும் நேசிப்பவள்...


அவளின் ஹாஸ்பிடல் வரும் கேஸ் எல்லாம் பார்த்து அதில் நியாயம் கிடைக்காதவர்களுக்கு நண்பர்கள் மூலம் நியாயம் வாங்கி தருவார்கள்…


இன்னொருவள் கவி பாரதி டீச்சர் ஆக இருக்கிறாள் அவளின் மாணவர்களுக்கு குட் டச் பேட் டச் சொல்லி கொடுத்து அவர்களை நல் வழியில் எடுத்து செல்கிறாள்

அவளுக்கு அம்மா அப்பா இல்லை அண்ணன் மட்டும் தான் ஆர்மியில் வேலை செய்கிறான்.. எப்போதாவது இவளை பார்க்க வருவான்…

மற்றொருவள் ரக்ஷிதா லாயர் ஆக இருக்கிறாள் ஊரில் என்ன நடந்தாலும் இவர்களுக்கு தெரியாமல் நடக்காது…

ரக்ஷிதாவுக்கு குடும்பம் இல்லை சின்ன வயதில் இருந்தே ஆசிரமத்தில் தான் வளர்ந்தாள்...


நால்வரும் சேர்ந்து ஊரில் நடக்கும் கொடுமைகளையும் ஊரையும் சுத்தம் செய்து வருகிறார்கள்..


இவர்கள் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் வந்து இல்லை…


காரணம் அனைவரும் ஒரு நல்லா பொசிஷனில் இருப்பதால்…


அதிலும் அதிதியை சென்னையில் பல பேருக்கு தெரியும்..

வருவாள்…..


கதையை படிச்சவங்க எப்படி இருக்குனு குறை நிறை உங்களோட கருத்துக்களை என்கூட பகிர்ந்துக்கோங்க silent readers நீங்களும் சொல்லுங்கஉங்க வார்த்தைகள் தான் இன்னும் என்னை எப்படி எல்லாம் எழுதலாம்னு யோசிக்க வைக்கும்..சோ ப்ளீஸ் உங்க feedback சொல்லிட்டு போங்க அது குறையா இருந்தாலும் நிறையா இருந்தாலும்...
 
Last edited:

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 3


"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!"





என்ற பாரதியாரின் புதுமை பெண் கவிதை அறையில் பாடிக் கொண்டு இருக்க

அதை கேட்டபடியே ஒர்க்அவுட் முடித்து வெளியே வந்த அதிதி

அங்கு இருந்த டவல் எடுத்து முகத்தையோ துடைத்த படியே கீழே இறங்கி சென்றவள்

சமைத்துக் கொண்டு இருந்த அம்மாவிடம் "உங்களுக்கு மட்டும் பண்ணிக்கோங்க எனக்கு மீட்டிங் இருக்கு சோ ஓட்ஸ் மட்டும் போதும் "என்று சொல்லிவிட்டு மாடி ஏற

அவளை பார்த்த சமையல் அம்மா கமலம் "இந்த பொண்ணு எப்போ தான் அதோட உடம்பை ஒழுங்கா கவனிச்சுக்குமோ தெரியல அய்யா படுத்த படுக்கையா ஆனதுக்கு அப்புறம் நிக்காம ஓடிக் கிட்டே இருக்கு "என்று ஆயாசமாக பேசியவர்

மற்ற வேலைகளை பார்க்க சென்றார்…

மேலே ரெடி ஆகி வந்தவள் அவளின் தந்தை அறைக்கு செல்ல

சுற்றி மருத்துவ கருவிகள் இருக்க கண்மூடி இருந்தார்

யாராவது அவரை பார்த்தால் தூங்கிக் கொண்டு இருப்பதாக தான் நினைத்துக் கொள்வார்கள் ஆனால் இது ஒரு ஆழ்ந்த தூக்கம் என்று தெரியாது…

அவரும் இன்று கண் முழிப்பார் நாளை கண் முழிப்பார் என்ற நம்பிக்கையில் எட்டு வருடங்கள் ஓடிவிட்டது ஆனால் அதிதி இன்னும் நம்பிக்கையை கை விடவில்லை "என்றாவது அவர் கண் முழிப்பார் "என்று தினமும் அவருடன் பேசிக் கொண்டு இருப்பாள்..

அதிதி அறைக்குள் வந்ததும் அவரை கவனித்துக் கொண்டு இருந்த நர்ஸ் வெளியே சென்று விட

அவரின் அருகில் அமர்த்தவள் கையை பிடித்துக் பிடித்துக் கொண்டு "அப்பா சீக்கரம் எழுந்து வாங்க பா உங்ககிட்ட நா நிறைய காட்டணும் நீங்க தொடங்கி வைச்ச தொழிலை நா இவ்ளோ பெருசா கொண்டு போனதை பார்த்து நீங்க ஆச்சரியபடறதை நா பார்க்கணும் "என்று அவரின் கையை கன்னத்தில் அழுத்திக் கொண்டு

நிறைய பேசிக் கொண்டு இருந்தாள் பின் நேரமாவதை உணர்ந்து அவரின் நெற்றியில் முத்தமிட்டு வெளியே வந்தவள்

அங்கு இருந்த நர்ஸ் பார்த்து "அப்பாவ கவனிச்சுக்கோங்க "என்று சொல்லிவிட்டு புறப்பட போனவளை

கமலம் தான் "பாப்பா நீங்க இன்னும் சாப்பிடலை "என்று நினைவு படுத்த

அவரை பார்த்து சிரித்துவிட்டு அவர் கொடுத்த ஓட்ஸ் சாப்பிட்டு கிளம்பினாள்…..

அவள் வீட்டுக்குள் இருக்கும் போது எப்போதும் இயல்பாக தான் இருப்பாள் ஆனால் வெளியே வந்து விட்டால் இறுக்கம் என்ற முகமூடியை அணிந்துக் கொள்வாள்….

காரில் பாடலை கேட்டு டிரைவ் செய்துக் கொண்டு இருந்தவளை அவளின் பிஏ ரேணுகா கால் செய்ய

காலை அட்டென் செய்தவள் "சொல்லுங்க ரேணுகா "என்று அழுத்தமாக கேட்க

அந்த பக்கம் இருந்து இவளின் அழுத்த குரல் கேட்டவுடன் பயந்துக் கொண்டே "எம் எஸ் வி கம்பெனி எம்டி உங்கள பார்க்கறதுகாக வந்து இருக்காங்க மேம் "என்று மெதுவாக அதே சமயம் புரியும்படி சொன்னாள்

அவள் சொன்னதை கேட்ட அதிதி "வந்து இவ்ளோ நேரம் ஆகுது?"என்று கேட்க

வாட்சை பார்த்த ரேணுகா "டென் மினிட்ஸ் இருக்கும் மேம் "என்றவுடன்

"ஒகே இன்னும் டுவெண்ட்டி மினிட்ஸ்ல வந்துருவேன் வெயிட் பண்ண சொல்லுங்க "என்று சொல்லி மெதுவாக ஓட்டி சென்றாள்…

ஆபீஸ் காம்பௌண்ட் உள்ளே அதிதி வரவும்

அவளின் காரை பார்த்து வாட்ச்மேன் சல்யூட் அடிக்க

அவரை பார்த்து தலையசைத்தவள் வண்டியை கார் பார்க்கிங்யில் விட்டுவெளியே வர

அவளை பார்த்து எல்லாரும் வணக்கம் வைக்க அதற்கு தலையசைப்பை மட்டும் கொடுத்து செல்ல

அவளை கடந்து சென்ற ஆண்கள் "ப்பா இவங்க மட்டும் ஏன் டா இவ்ளோ திமிரா இருகாங்க? கொஞ்சம் கூட யாரையும் மதிக்க மாட்டேங்கறாங்க "என்று சொல்ல

இன்னொருவனோ இளக்காரமாக பார்த்து "எல்லாம் அப்பன் சேர்த்து வைச்ச சொத்து அதுல அந்த ஆணவம் இருக்கும் தான "என்று சொல்ல

அவர்களை கடந்து சென்ற அதிதிக்கு அவர்கள் பேசுவது கேட்டாலும் கண்டுக் கொள்ளாமல் சென்றாள்…

ஆரம்பத்தில் எத்தனை பேரை பார்த்து இருப்பாள் இவள் முகத்துக்கு முன்னால சிரித்து விட்டு முதுகுக்கு பின்னால் இவளை பற்றி பேசியதை…

இந்த நாட்டில் பெண்களின் தன்நம்பிக்கையும் தைரியமும் திமிரு என்று தானே சொல்ல படுகிறது

அதனால் உங்களால் என்ன சொல்ல முடியுமோ சொல்லிக்கோங்க என்பது போல் சென்று விட்டாள்…

அவளின் கம்பெனி ஏவிஈ பல முகங்களை கொண்டது அது கால் பதிகாத இடம் இல்லை

ஷேர்மார்க்கெட், மேக்அப் products, ஜூஸ் பிராண்ட், சூப்பர் மார்க்கெட் என பல சொல்லிக் கொண்டே போகலாம்

ஆரம்பத்தில் தொழிலை அதிதி கையில் எடுக்கும் போது அவளுக்கு கை கொடுத்தவர்களை விட அவளை கீழே தள்ளிவிட முயன்றவர்கள் தான் அதிகம் அதனால் யாரையும் அவ்ளோ சுலபமாக நம்பிவிட மாட்டாள்…

உயர்ந்து நின்ற கட்டிடம் உள்ளே அதிதி செல்லவும்

அவளை பார்த்து அனைவரும் வணக்கம் வைக்க

முதலாளி என்ற தோரணையில் அதை ஏற்றுக் கொண்டவள் லிப்ட் மூலம் அவள் அறைக்கு செல்ல

அவளின் அறையில் முன் போட்டு இருந்த சோபாவில் அமர்ந்து

அங்கு ஆராந்துக் கொண்டு இருந்தவனை பார்த்தும் பார்க்காதது போல் சென்றாள்.

இவள் வருவதை பார்த்து எழுந்து நின்றவன் அவள் கண்டுக் கொள்ளாமல் உள்ளே சென்றதை பார்த்து "எல்லாம் திமிர் "என்று கோவமாக முனுமுனுத்துக் கொண்டான்..

உள்ளே சென்றவள் அவளின் அம்மா புகைப்படம் முன் நின்று வணங்கியவள் பின் அவளின் சேரில் அமரவும்

ரேணுகா கதவை தட்டவும் சரியாக இருந்தது….

அதிதி"கம் இன் "என அவளை உள்ளே அழைக்க

உள்ளே வந்த ரேணுகா "குட் மார்னிங் மேம் "என காலை வணக்கம் சொல்ல

அதை ஏற்றுக் கொண்டவள் "இன்னைக்கு ஸ்செடியூல் என்ன "என்று கேட்டு வேலையை பார்க்க தொடங்க

ரேணுகாவோ கையை பிசைந்துக் கொண்டு அதிதியிடம் எப்படி சொல்வது என்று தயங்கிக் கொண்டே நிற்க

சிறிது நேரம் பின் ரேணுகா அங்கையே நிற்பதை பார்த்து "ஏன் இங்கையே நிற்கறிங்க ஏதாவது சொல்லனுமா "என பைல் பார்த்துக் கொண்டே கேட்க

"மேம் எம் எஸ் வி கம்பெனி எம்டி வெயிட் பன்றாங்க "என்று தயங்கி சொல்ல

அவளை பார்த்தவள் "எனக்கு நியாமக மறதினு உங்க கிட்ட சொல்லி இருக்கேனா?"என கேட்கவும்

பயந்துக் கொண்டே "நோ மேம் "என்கவும்

"எனக்கு யார எப்போ பார்க்கணும்னு தெரியும் அவங்க வெயிட் பண்ணா உங்களுக்கு என்ன உங்க வேலைய போய் பாருங்க "என்று இறுக்கமாக சொல்ல

அதிதியை பற்றி தெரிந்து இப்படி சொன்னதிற்கு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள்

"சாரி மேம் "என்று மெதுவாக சொல்லிவிட்டு வெளியே செல்ல

ரேணுகா வருவதற்காக காத்துக் கொண்டு இருந்தவன் போல "என்ன உள்ள போகலாமா?"என்று கேட்க

"சாரி சார் மேம் பிஸியா இருகாங்க சோ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க "என சொல்லி விட்டு அவள் வேலையை பார்க்க செல்ல

என்னமோ இவள் தான் அதிதியை பார்க்க விடாதவள் போல ரேணுகாவை முறைத்துக் கொண்டு இருந்தான்…

கிட்டதட்ட இரண்டு மணிநேரம் கழித்து ரேணுகாவை உள்ளே அழைத்த அதிதி "அவர வர சொல்லுங்க " என்று சொல்லி விட்டு வேலையை தொடர

ரேணுகா சொன்னவுடன் கதவை திறந்துக் கொண்டு வந்தவனை பார்த்து எரிச்சலாக இருந்தது அவளுக்கு…

இருந்தாலும் முகத்தை சிரித்தது போல் வைத்துக் கொண்டு "வெல்கம் மிஸ்டர் மகேஷ் குமார் "என்று அழைத்தவள்

"ப்ளீஸ் சிட் "என்று மரியாதை நிமித்தமாக சொல்ல

அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்தவன் "எப்படி இருக்க அதிதி?"என்று கேட்க

அவன் பார்க்கும் பார்வையில் ஏற்பட்ட எரிச்சலை முகத்தில் காட்டாமல் "பைன் "என்று ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டவள்

"என்ன விஷயமா வந்து இருக்கிங்க "என்று பிசினஸ் பற்றி கேட்க

"இவ எப்போவும் இப்படி தான் எதுக்கும் அசரமாட்ட "என்று உள்ளுக்குள் ஏற்பட்ட புகைச்சலை காட்டாமல்

"அதுதான் நா உங்களுக்கு "என்று ஏதோ சொல்ல வர

அப்போது கதவை தட்டிய ரேணுகா "சாரி டு இன்டர்பேட் மேம் "என்று உள்ளே வந்தவள்

ஒரு பைல்லை அதிதியிடம் காட்ட

இவ்ளோ நேரம் அவன் கண்ணுக்கு தெரியாத ரேணுகாவின் அழகு இப்போது தெரிந்தது
 

aadrika

Well-known member
Wonderland writer
அதிதி பைல் பார்த்துக் கொண்டு இருக்கிறாள் என்று எண்ணி ரேணுகாவையே அவன் பார்த்துக் கொண்டு இருக்க

அவன் பார்வையை உணர்ந்த ரேணுகாவிற்கு பயமாக இருந்தது "பெரிய இடத்து பையன் "என்று அவனின் பக்கம் பார்வையை திருப்பாமல் அதிதியை பார்த்துக் கொண்டு இருக்க

மகேஷ்யின் பார்வை ரேணுகாவை பார்ப்பதை உணர்ந்து அதிதி பைலை மூடிவிட்டு "சொல்லுங்க மகேஷ் ஏதோ சொல்லிகிட்டு இருந்திங்க "என்று கேட்க

ரேணுகாவை பார்த்துக் கொண்டு இருந்தவன் அதிதி திடிர் என்று கேட்பாள் என்று எண்ணதவன்

அவள் கேட்டவுடன் ரேணுகா இருப்பதை பார்க்க

"அவங்க இருக்கறதுல நோ இஸ்ஸுஸ் சொல்லுங்க "என்று சொல்லி ரேணுகாவை அங்கேயே இருக்க சொல்ல

"அது தான் நாங்க ஒரு ஆஃபர் குடுத்து இருந்தோமே உங்க கம்பெனிக்கு "என்று ரேணுகா முன் கெத்தாக காட்ட

"என்ன சொன்னிங்க ஆஃபர்ஆ கம் அகைன் "என்று புரியாதது போல் கேட்க

அவள் எதற்காக கேட்கிறாள் என்று புரிந்தவன் ரேணுகா முன் எப்படி சொல்வது என்று பேசாமல் இருக்க

அவனை பார்த்து நக்கலாக சிரித்த அதிதி "நாங்க தான் உங்களுக்கு ஆஃபர் தரணும் நீங்க ரெயூஸ்ட் கேட்க வந்து இருக்கிங்க "என்று ரேணுகா முன் சொல்லவும்

அவனுக்கு முகம் மாறி போனது இருந்தாலும் அவனால் ஒன்று செய்ய முடியாதே

அவனை பார்த்த அதிதி "நா யோசிச்சு அப்புறம் உங்ககூட பட்னர்ஷிப் வைச்சிக்கலாமானு சொல்றேன் "எனவும்

வேலை நடந்தாக வேண்டும் என "இதுல யோசிக்க என்ன இருக்கு அதிதி உன் கம்பெனி ஒன் ஆப் தி பெஸ்ட் அது என் கம்பெனி கூட பட்னர்ஷிப் வைச்ச சக்ஸஸ் தான "என்று அவளை புகழ்வது போல் பேசவும்

அவனின் பேச்சை கண்டுக் கொள்ளாதவள் "அதை நான் தான் யோசிக்கணும் சோ ப்ளீஸ் "என்று போகுமாறு சொல்ல

அதற்கு மேல் அவளிடம் பேச முடியாதவன் அவளை முறைத்துவிட்டு செல்ல

அவன் போன பின் நிம்மதியாக உணர்ந்த ரேணுகாவை பார்த்தவள்

"உன்னை ஒருத்தன் தப்பா பார்க்கும் போது நீ அவனை பார்த்து முறைச்சா உன்னை திரும்ப பார்க்க மாட்டான் அதுவே நீ பயந்து போன அவன் உன்னை யூஸ் பண்ண பார்ப்பான் உன் பயம் தான் அவங்களுக்கு மூலதனம் சோ இனி யாரு பார்த்தாலும் பயபடாத "என்று சொல்லி விட்டு பைல் பார்க்க

தானக்காக தான் அவள் இப்படி செய்து இருக்கிறாள் என்று உணர்ந்த ரேணுகா அவளை நன்றியுடன் பார்த்துவிட்டு சென்றாள்…

மகேஷ்குமார் கோவமாக தன் வீட்டிற்கு செல்ல

அங்கு இவனுக்காக காத்துக் கொண்டு இருந்த அவனின் தந்தை இவனை பார்த்ததும் ஆர்வமாக வந்து "என்ன டா ஒகே ஆகிருச்சா? " என்று கேட்க

அவனோ கோவமாக "இல்ல பா அவ சரியான திமிரு பிடிச்சவளா இருக்கா "என்று சோபாவில் அமர

அவன் அருகில் அமர்த்தவர் "என்ன டா ஆச்சு நீ சுமுகமா தான பேசுனா அவகூட? "என்று கேள்வி கேட்க

அவனோ நடந்ததை சொல்லாமல் "எல்லாம் நல்லா தான் பேசுனேன் அவ என்னமோ யோசிக்கணும்னு சொல்லி வெளிய போக சொல்லிட்டா என்னமோ பெரிய இவ மாதிரி "என்று அவளை திட்ட

அவனின் கையை பிடித்து "அவ எப்படி இருந்தா என்ன டா அவ ஒரு தங்க முட்டை போடுற வாத்து அவ நம்ம கிட்ட வந்தா அவளோடது எல்லாமே நமக்கு தான் " என்று ஆசை காட்ட

அவளின் சொத்தை நினைத்து பார்த்தவன் "அதுக்காக மட்டும் தான் அவ என்ன அவமானப்படுத்தினாலும் சிரிச்சுகிட்டே மறுபடியும் அவகிட்ட போறேன் "என்றவன்

"என்கிட்ட மட்டும் அவ மாட்டட்டும் அவளோட திமிருக்கு எல்லாம் சேத்து வைச்சு குடுக்கறேன் "என்று பழிவெறி கண்ணில் தெரிய சொல்ல

அங்கே அவளை வீழ்த்த ஒரு சதி உருவாகிக் கொண்டு இருக்கிறது என்று தெரியாமல்

ஈவினிங் வரை அனைத்தையும் சரி பார்த்தவள் வீட்டுக்கு கிளம்பினாள்…

கார் டிரைவ் செய்துக் கொண்டு இருந்தவள் சாலையோரம் இரண்டு குழந்தைகள் அம்மா அப்பாவுடன் விளையாடுவதை பார்த்து அப்படியே சென்றவள் கிரிஸ் செய்தவனை பார்க்காமல் அவன் மீது இடித்துவிட

அப்போது உணர்வு வந்தவள் "அதி என்ன பண்ணி வைச்சு இருக்க "என்று தன்னை திட்டிவிட்டு காரை விட்டு இறங்க

அவள் இறங்குவதற்குள் கூட்டம் கூடி விட

அதை பார்த்தவளுக்கு "அய்யோ "என்று இருந்தது…

கீழே இறங்கியவளை அங்கு இருந்தவர்கள் எல்லாம் கேள்வி கேட்ட ஆரம்பிக்க

"என்னமா பார்த்து வரமாட்டியா "என்று ஒருவன் கேட்க

இன்னொருவனோ "பொண்ணுங்க வண்டிய குடுத்துட்டா போதும் என்னமோ பிளைட் ஓடுற நினைப்பு "என்க

அவனை பார்த்து முறைந்தவள் கீழே இருந்தவனை தூக்குவதற்குள் சில பேர் அவனை தூக்கி விட்டு இருக்க

"என் மேல தான் தப்பு சார் இண்டிகேட்டர் நா போடல " என்று கீழே விழுந்தவன் சொல்ல

அதை கேட்காதவன் "இந்த பொண்ணுங்க இப்படி தான் சார் வீட்ல இருக்க சொன்ன என்னமோ சாதிக்கற மாதிரி வெளியில வந்தராங்க "என்று பொண்ணுங்களை திட்டுவதிலே இருக்க

அவனை அதிதி திட்ட வருவதற்குள் "என்ன சார் பேசறீங்க ஏன் பொண்ணுங்க சாதிக்க மாட்டாங்களா இப்போ ஆம்பளைகள விட அவங்க தான் அதிகம் சாதிக்கறாங்க ஏன் நீங்க டிரைவ் பண்ணும் போது இப்படி எந்த அக்சிடென்ட் நடந்தது இல்லையா அதுக்கு அப்புறம் நீங்க வண்டி ஓட்டவே இல்லையா "என்று கீழே விழுந்து ஏற்பட்ட வலியை தாங்கிக் கொண்டு பேச

அவனை பார்த்த அதிதிக்கு ஆச்சரியமாக இருந்தது…

சில பேருக்கு அடிப்படாமல் இருந்தாலும் பெண்கள் ஓட்டுவதை தான் குறை சொல்வார்கள் ஆனால் இவனோ கீழே விழுந்து அடி பட்ட போதும் இவளை குறை சொல்ல வில்லை அடுத்தவரை குறை சொல்லவும் விட வில்லை…

அவன் சொன்னதை கேட்டு பெண்களை குறை கூறியவன் முறைத்து விட்டு செல்ல

கூட்டமும் கலைந்து சென்றது….

விழுந்தவனை அதிதி தாங்கிக் கொள்ள

அவளின் கையை தடுத்து "இல்ல வேணாம் நானே மேனேஜ் பண்ணிப்பேன் "என்க

"ப்ளீஸ் என்னால தான் உங்களுக்கு இப்படி ஆச்சு சோ வாங்க ஹாஸ்பிடல் போகலாம் "என்க

அதை கேட்டு மறுத்தவனை கட்டாயப்படுத்தி அவனை காரில் அமர வைத்து ஹாஸ்பிடல் அழைத்து சென்றாள்…

அவனை செக் செய்த டாக்டர் "கீழே விழுந்ததுல கால்ல கொஞ்சம் நல்லா அடி பட்டு இருக்கு நல்ல வேலை பிராக்சர் ஆகல பட் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் ஹாஸ்பிடல்ல ரெஸ்ட் எடுக்கனும் "என்று சொல்லி விட

அவனுக்கு மருந்து வாங்கி வந்தவள்

அவன் இருக்கும் அறைக்கு சென்று

பெட்டில் சாய்ந்து இருந்தவனை பார்த்து "இப்போ ஓகே வா "என்று கேட்க

அதுக்கு தலையசைத்தவன் "நல்லா இருக்கேன் போகலாமா "என்று கேட்க

அவனை தயங்கிக் கொண்டே பார்த்தவள் "இன்னைக்கு நீங்க இங்க ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி இருகாங்க "என்க

அதை கேட்டவன் யோசித்துவிட்டு "இங்க எவ்ளோ பில் போடுவாங்க "என்று கேட்க

முதலில் அவன் சொன்னதை புரிந்துக் கொள்ளாதவள் பின் "பில் நா பே பண்ணிருவேன் "என்க

அதை கேட்டு மறுத்தவன் "இல்ல நீங்க என்ன ஹாஸ்பிடல் கூட்டிகிட்டு வந்ததே போதும் "என்று சொல்லி

அவன் அருகில் இருந்தா போன் எடுத்து யாருக்கோ அழைத்தவன் "டேய் கே சி ஹாஸ்பிடல்க்கு வாடா வரும் போது பணம் எடுத்துட்டு வந்துரு "என்று அந்த பக்கம் சொல்ல வருவதை கூட கேட்காமல் வைத்து விட்டான்…

அவன் பேசியதை கேட்டவள் "என்னால தான அடி பட்டுச்சு சோ நானே பணம் கட்டிறேன் "என்க

அதை அவன் உறுதியாக மறுத்து விட

அதன் பின் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றவள்

பின் அவன் பெயர் கூட தெரியாது என்று நினைவுக்கு வர

"உங்க பேர் என்ன?"என்று கேட்க

போன் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் கேட்டவுடன் நிமிர்ந்துவன் "தேவ் "என்க

"தேவ் "என்று அவளுக்குள் சொல்லி பார்த்தவள்

அவன் பார்ப்பதை உணர்ந்து "என் பேரு அதிதி "என்க

அவளை பார்த்து சிரித்து விட்டு மறுபடியும் போன் பார்க்க தொடங்க

Enna செய்வது என்று தெரியாமல் அங்கு இருந்தா சேரில் அமர்த்தவள் சுற்றி பார்த்து விட்டு

பின் போன் பார்த்துக் கொண்டு இருந்தவனை பார்க்க தொடங்கினாள்…

அடர்த்தியான கேசம் காற்றில் அசைய

அடர்த்தியான நெற்றி கூர்மையாக அதே சமையும் மென்மையை சிந்தும் கண்கள் நிலமான மூக்கு சிவந்த உதடுகள் அதுவே சொன்னது அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை என்று…

வாழ்வில் முதல் முறையாக அதிதி ஒரு ஆண்மகனை இவ்ளோ தூரம் ரசித்துக் கொண்டு இருக்கிறாள் என்று தெரியாமல் பார்த்துக் கொண்டு இருக்க

அவள் பார்வை அவனிடமே இருப்பதை உணர்ந்து அவளை நிமிர்ந்து பார்க்க

அவனின் பார்வையை கூட கவனிக்காமல் அவனையே பார்க்க

சிறிது நேரம் அவளை பார்த்தவன் பின் புருவத்தை தூக்கி "என்ன "என்று கேட்க

அது அவனுக்கு அவ்ளோ வசீகரமாக இருந்தது

பின் அவன் அவளை தான் கேட்கிறான் என்று புரிந்துக் கொண்டவள்

"ஒன்னும் இல்லை "என்னும் விதமாக தலையாட்டி விட்டு சுற்றி பார்க்க

அவளை பார்த்து ஒரு சிரிப்பு சிந்தி விட்டு போன் பார்க்க

சுற்றி பார்வையை விட்டவள் மனதுக்குள் "அதி என்னாச்சு உனக்கு அவன் உன்ன பத்தி என்ன நினைப்பான் "என்று எண்ணியவள் பின் அவன் புறம் பார்வையை திருப்பாமல் இருந்தாள்…


சிறிது நேரத்தில் தேவின் நண்பன் அவனை தேடி வந்தவன்

அவன் காலில் கட்டு இருப்பதை பார்த்து அருகில் அதிதி இருப்பதை கவனிக்காமல் "டேய் என்ன ஆச்சு?"என்று சத்தமாக கேட்க

அதுவரை amaidhiyaaga இருந்த அறை திடிரென்று சத்தம் கேட்கவும் அதிதி திரும்பி பார்க்க

தேவ் சாவகாசமாக திரும்பி பார்த்து "பார்த்தா தெரியல "என்று கேட்க

"ம்ம் ரோடுல டான்ஸ் அடிக்கிட்டு போய் விழுந்துட்டேன் "என்று நக்கலாக சொல்ல

"அங்க போய் ஏன் டா டான்ஸ் ஆடுன

ரயில்வே ட்ராக்ல ஆடி இருக்கலாம்ல "என்று தேவின் நண்பன் என்று நிரூபிக்க

அவனை பார்த்து முறைந்த தேவ் " இப்போ ரோடுல நா ஆடிட்டு அப்புறம் உன்கூட தண்டவளத்துல ஆடலாம்னு நினைச்சேன் டா "என்று குண்டை தூக்கி போட

அதை கேட்டவன் அதிர்ந்து போய் "உனக்கு பிரண்ட்ஆ இருக்கறக்கு அதையும் பண்ண வைச்சுருவ "என்று பாவமாக சொல்ல

இருவர் பேசுவதை கேட்ட அதிதிக்கு சிரிப்பாக வந்தது…

அதிதியை பார்த்த தேவ் "இது என்னோட பிரண்ட் ராம் "என்று இன்ட்ரோ குடுக்க

யாருகிட்ட என்னை பத்தி சொல்லிக்கிட்டு இருக்க என்று கேட்டுக் கொண்டே திரும்பியவன்

அங்கு இருந்த அதிதியை பார்த்து கேள்வியாக தேவ்வை பார்க்க

"இவங்க அதிதி என்னை ஹாஸ்பிடல்க்கு கூட்டிகிட்டு வந்தாங்க "என்று சொன்னவன் அவளால் தான் அடிப்பட்டது என்று சொல்லாமல் விட

அவனின் அந்த கேரக்டர் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது

ராம் அதிதியை பார்த்து "ஹலோ "என்க

அவளும் பதிலுக்கு ஹலோ என்க

"ரொம்ப தேங்க்ஸ் அவனை ஹாஸ்பிடல் கூட்டிகிட்டு வந்ததுக்கு "என்க

"அதுனால என்னங்க அதுவும் இல்லாம நான் தான் கூட்டிகிட்டு வரணும் "என்க

அவள் சொல்வது புரியாமல் தேவ்வை பார்க்க

அவனோ ராம் பார்த்து அப்புறம் சொல்றேன் என்பது போல் சைகை செய்ய

அதை புரிந்துக் கொண்டவன் சரி என்பது போல் தலையசைதான்

தேவ் அதிதியை பார்த்து "தேங்க்ஸ் என்ன இவ்ளோ நேரம் பார்த்துகிட்டதுக்கு "என்று நீங்க போகலாம் என்பதை மறைமுகமாக சொல்ல

அதை புரிந்துக் கொண்டவள் "டேக் கேர் "என்று சொல்லிவிட்டு ராமை பார்த்து "கிளம்பறேன் " என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்….

அங்கு இருந்து கிளம்பியவளுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் அவனுடன் இருந்து இருக்கலாமே என்று தோன்றியது….

வாழ்வில் முதல் முறையாக அதிதியை பார்த்தவுடன் ஒருவன் கவர்ந்து இருங்கான்..

சில பெண்களுக்கு அதிரடி பிடிக்கும் சில பெண்களுக்கு மென்மை பிடிக்கும்

அதிதி இதில் இரண்டாவது வகை…

அவனின் மென்மை அவளை கவர்ந்து விட்டது…


வருவாள்….




சாரி கொஞ்ச நாள் என்னால அப்டேட் பண்ண முடியல இந்த வாரம் முழுக்க வேலை இருந்துகிட்டே இருக்கு சோ போஸ்ட் பண்ணியே ஆகணும்னு குட்டி ud குடுத்துட்டேன்….
 
Status
Not open for further replies.
Top