ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

'யாவும் நின் யாத்ரனாய்..' - கதைத் திரி

Status
Not open for further replies.

Sheha zaki

Member
Wonderland writer
'யாவும் நின் யாத்ரனாய்..' - கதைத்திரி
 

Attachments

  • Untitled Design_2-2.jpg
    Untitled Design_2-2.jpg
    216.2 KB · Views: 0
யாவும் நின் யாத்ரனாய்

EPISODE 01






ஹோமகுண்டத்தின் நெருப்பு கொழுந்துவிட்டு எரிய, அதற்கு போட்டியாக அந்த ஊர் தெய்வ சிலையின் முன்னே நின்றிருந்தவனின் மனமும் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தது.



விட்டால் கொன்றே விடுவேன் எனும் தோரணையில் முகம் சிவக்க கை முஷ்டியை இறுக்கிக்கொண்டு யாத்ரன் நின்றிருந்த விதத்தைப் பார்த்ததும் எதிரில் நின்றிருந்த ஜான்சியின் முதுகுத்தண்டு பயத்தில் சில்லிட்டது.



'கடவுளே...' என்று இருக்கும் அத்தனை கடவுள்களையும் தன் துணைக்கு அவள் நாட, அவன் விழிகளில் குறும்புத்தனத்தையும் அக்கறையையும் பார்த்து பழகியவளுக்கு இந்த வெறுப்பும் கோபமும் என்னவோ புதிதுதான்.



ஆனால், பாவம்.. சற்று சுயநலமாக யோசிக்க வேண்டிய நிலை அவளுக்கு.



புரோகிதர் மந்திரங்களை சொல்லிக்கொண்டே கருப்புமணிகள் கோர்க்கப்பட்ட அந்த மாங்கல்யத்தை அவனிடம் நீட்ட, சுற்றியிருந்த ஊர் மக்களின் முகத்தில் மருந்துக்கும் புன்னகையில்லை.



மாறாக, விழிகளில் கோபம் மிதக்க, பாறை போல் இறுகிப் போயிருந்தது அத்தனை பேரின் முகமும்.



எந்த மேளதாள சத்தங்களும் இல்லை. வெறுமென புரோகிதரின் மந்திரங்கள் மட்டுமே அந்த இடத்தை நிரப்பின.



கையிலிருந்த மாங்கல்யத்தை பார்த்துவிட்டு சுற்றி ஒரு பார்வைப் பார்த்தவன் வேறுவழியில்லாமல் அவள் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டிவிட்டான்.



அவர்கள் மீது பூக்களோ அர்ச்சதைகளோ தூவப்படவில்லை. ஆனால், பெண்ணவளின் மனம் விடுதலை அடைந்த சந்தோஷத்தில் மிதந்துக்கொண்டிருந்தது.



ஆனால், அந்த மகிழ்ச்சி சில கணங்கள்தான்.



சிறு சந்தோஷத்தோடு விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்தவளின் மொத்த புன்னகையும் யாத்ரனின் விழிகளில் தெரிந்த ஆக்ரோஷத்தைப் பார்த்ததும் அப்படியே வாடிப்போக, அந்த நொடி அவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.



'இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கி விட்டேனே...'



ஒன்றரை மாதத்திற்கு முன்,



கலாச்சாரத்துக்கு பேர் போன இடங்களில் ஒன்றான ராஜஸ்தானிலுள்ள ஒரு கிராமத்தில்...



"சுபாஷ் ஐயா வெளியில வாங்க.. இப்போவே நாம இதுக்கு ஒரு முடிவு எடுத்தாகணும், வெளியில வாங்க.."



வயிறு முட்ட மதிய உணவை உண்டுவிட்டு உறங்கப் போன சுபாஷின் காதில் கிராம மக்களின் கத்தல் கேட்க, 'மனுஷன் கொஞ்சநேரம் நிம்மதியா இருந்துர கூடாது' என்று முணங்கிக்கொண்டே வாசலை எட்டிப் பார்த்தார் அவர்.



வழக்கமாக நடப்பதுதான்.



இருந்தாலும் இன்று என்னவாக இருக்குமென்ற யோசனையோடு வாசலிலிருந்த அவரின் பார்வை பக்கத்திலிருந்த மனைவி அர்ச்சனாவின் மீது பதிய, பதிலுக்கு அவரின் பார்வையோ அங்கு பூட்டியிருந்த ஒரு அறைக்கதவின் மீது பாவமாக பதிந்தது.



சுபாஷோ எரிச்சலாக விழிகளை சுழற்றியவாறு வாசலில் நின்றிருந்த கிராமத்தாற்களின் முன்னே சென்று நிற்க, அந்த ஊர் பெரியவரான கணபதி அவரை அதிருப்தியோடு ஒரு பார்வைப் பார்த்தார்.



"இங்க பாரு சுபாஷ், உன் மேல எங்களுக்கு பெரிய மரியாதை இருக்கு.. ஆனா உன் பொண்ணு உன் மரியாதைய மட்டுமில்ல நம்ம ஊர் மரியாதையையும் சேர்த்து கெடுத்துருவா போல! மறுபடியும் அந்த பள்ளிகூடத்துக்கு பக்கம் அவள பார்த்தேன்னு வை... நானும் மத்த ஊர்காரங்களும் ரெண்டு பௌர்ணமி வரைக்கும்லாம் பொறுத்துட்டு இருக்க மாட்டோம். புரியும்னு நினைக்கிறேன்"



என்று அவர் மிரட்டலாக சொல்ல, அவர்களின் முன்னே கோபத்தை அடக்கியவாறு தலை குனிந்துக்கொண்டார் சுபாஷ்.



சுற்றியிருந்தவர்களோ ஏதோ வேடிக்கை பொருள் போல் தத்தமது வீட்டு வாசல்களிலிருந்து நடப்பதை கிசுகிசுத்தவாறு பார்த்துக்கொண்டிருக்க, அவருக்கு அவமானத்தில் முகமே கறுத்துவிட்டது.



"இந்த ஒரு தடவை மன்னிச்சிக்கோங்க, நான் சொல்லி புரிய வைக்கிறேன். அதுமட்டும் இல்லாம இன்னும் ரெண்டு பௌர்ணமி வரைக்கும்தானே..." என்று அவர் தயக்கமாக இழுக்க, "சொல்லி புரிய வை!" என்று கறாராக சொல்லிவிட்டு ஊர் மக்களோடு அங்கிருந்து நகர்ந்தார் கணபதி.



அவர் சென்ற அடுத்தநொடி வீட்டு வாசலில் பாதியாக உடைந்துக் கிடந்த கம்பை கையிலெடுத்தவர் விறுவிறுவென உள்ளே செல்ல, பூட்டிய அறைக்குள் பதற்றமாக நின்றிருந்தாள் ஜான்சி.



இது அத்தனையும் அவள் எதிர்பார்த்ததுதான். பயத்திலும் பதற்றத்திலும் அவள் நடுங்க, உடல் வியர்வையில் குளித்திருந்தது.



நெற்றி வியர்வையை அவள் புறங்கையால் துடைக்கவும், அறைக்கதவை தடாரென திறந்துக்கொண்டு சுபாஷ் உள்ளே வரவும் சரியாக இருக்க, அடுத்து நடந்ததை சொல்லவா வேண்டும்!



கொஞ்சமும் பாவம் பார்க்காமல் அடி வெளுத்தெடுத்தார் அவர்.



"மறுபடியும் இந்த மாதிரியான காரியத்த பண்ணி என் மானத்த வாங்கணும்னு நினைச்சேன்னா அவங்க சொன்ன மாதிரி ரெண்டு பௌர்ணமி வரைக்கும் வரைக்கும்லாம் உன்ன விட்டு வைக்க மாட்டேன், புரியுதாடீ!"



என்று மீண்டும் ஆத்திரம் தீருமளவிற்கு இரண்டடி அடித்துவிட்டு செல்ல, விழிகளில் கண்ணீரோடு அறைக்குள் நுழைந்தார் அர்ச்சனா.



ஜான்சியோ உடல் முழுக்க தழும்போடு சுவற்றோடு ஒன்றி கால்களை கட்டிக்கொண்டு வலியில் அழுதுக்கொண்டிருக்க, மகளின் பக்கத்தில் சென்றமர்ந்த அர்ச்சனாவிற்கு அவளை அணைத்து தன்னோடு அணைப்பதை தவிர வேறு என்ன செய்து அவளை தேற்றுவதென்று தெரியவில்லை.



"நா.. நான் என்னம்மா தப்பு பண்ணேன், பள்ளிக்கூடத்துக்கு போய் அவனுங்க படிக்கிறத ஒளிஞ்சு நின்னு பார்த்துட்டு இருந்தேன். அது தப்பா.. அதுக்கு போய் இப்படி அடிக்கிறாரு. இதுக்கு என்னை கொன்னுடலாமே ம்மா!"



என்று விம்மி விம்மி அழுதவாறு அவள் பேச, கண்ணீரைத் துடைத்த அர்ச்சனாவின் இதழ்கள் விரக்தியாகப் புன்னகைத்தன.



"பொண்ணுங்கள பள்ளி கூடத்துக்கு அனுப்ப கூடாதுன்றது இந்த ஊர் வழக்கம். உன் அப்பாவ மீறி என்னாலயும் பேச முடியாது. உனக்கே நல்ல தெரியும், தமிழ்நாட்டுல இருந்து வந்தவன்னு என் பேச்ச உன் அப்பா மட்டுமில்ல இந்த ஊர்காரங்க கூட கண்டுக்க மாட்டாங்க. அதுமட்டுமில்லாம..."



என்றவரின் வார்த்தைகள் அப்படியே நிற்க, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துக்கொண்டாள் ஜான்சி.



கண்ணீரை அழுந்தத் துடைத்துவிட்டு, "அதுல எனக்கு பெருமைதான்ம்மா" என்று இறுகிய குரலோடு சொன்ன மகளை அழுகையோடு அணைத்துக்கொண்டார் அர்ச்சனா.



அடுத்தநாள், வழக்கம் போல் அம்மாவோடு சேர்ந்து மொத்த வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டு அந்த ஒரு வீட்டின் முன்னே சென்று நின்றாள் ஜான்சி.



"ஏய் ருக்கு.. அடியே ருக்கு..." என்று இடுப்பில் கைக்குற்றி அவள் கத்த, மாவு பிசைந்துக்கொண்டிருந்த அவளின் உயிர்தோழி ருக்மணியோ அப்படியே செய்துக்கொண்டிருந்த வேலையை விட்டு கைகளைக் கூட கழுவாமல் அவளெதிரே பாய்ந்து வந்து நின்றாள்.



கன்னத்திலும் ஆடையிலும் மாவு ஒட்டியிருக்க, தோழியை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாகப் பார்த்தவள், "இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு" என்று பின்னால் நின்று முறைத்துக்கொண்டிருந்த ருக்மணியின் தாய் வனஜாவை எட்டி ஒரு பார்வை பார்த்துவிட்டு சொல்ல, அலட்சியமாக தோளைக் குலுக்கினாள் மற்றவள்.



"என்னடீ ஜான்சி ராணி, புது டாட்டூவா?" என்று ருக்மணி அவளின் கைகளிலிருந்த அடியின் தழும்பை பார்த்துக் கேட்க, "உனக்கு சிரிப்பா இருக்குல்ல!" எனக் கேட்டு தோழியை முறைத்துப் பார்த்தாள் அவள்.



"அதை விடு ஜானு! என்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. அன்னைக்கு கல்யாணம் பண்ணாங்கல்ல சீதா அக்கா, ஃபர்ஸ்ட் நைட்ல என்ன நடந்துச்சுன்னு எனக்கு சொல்றேன்னு சொன்னாங்க. நீயும் வர்றீயா..." என்று ருக்மணி விழிகள் மின்ன ஆர்வத்தோடு கேட்க, வாயைப் பிளந்தவாறு உடனே சுற்றிமுற்றிப் பார்த்தவள், "நெசமாதான் சொல்றியா ருக்கு, அய்யோ... அப்படி அந்த ராத்திரி என்னதான் நடக்கும்னு தெரிஞ்சுக்க எனக்கும் ஆர்வமாதான் இருக்கு. ஆனா..." என்று தயக்கத்தோடு இழுத்தாள்.



"ஆனா என்னடீ?" என்று மற்றவள் ஹஸ்கி குரலில் கேட்க, "இல்ல... அதான் நமக்கே தெரியுமே, அப்பறம் எதுக்கு?" என்று கேட்ட தோழியை முறைத்துப் பார்த்தாள் ருக்மணி.



"இருந்தாலும் அனுபவசாலிங்க கிட்ட கேட்டு தெரிஞ்சு வச்சுக்குறது நமக்கு நல்லதுதானே ஜானு, படிப்பறிவுதான் இல்ல, இதையாச்சும் கத்துக்குவோம். ஒன்னு தெரியாத தத்தின்னு நம்ம புருஷனுங்க சொல்லிர கூடாது பாரு. நாளைக்கு மதியம் சாப்பிட்டதும் சீதா அக்கா வீட்டுக்கு வந்துரு..." என்று ருக்மணி சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அவளின் தாய் விளக்குமாறோடு வருவதற்கு தயாராக உடனே உள்ளே ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டாள் அவள்.



ஆனால், இடுப்பில் கைக்குற்றி தரையை வெறித்தவாறு அப்படியே நின்றிருந்த ஜான்சியின் மனதிற்குள் தன்னை மீறிய ஒரு கேள்வி எழுந்தது.



"நிஜமாவே நமக்குன்னு எவனாச்சும் இருப்பானா என்ன, ஒருவேள... இந்த ஊர்காரனா இருப்பானோ! அய்ய..." என்று தீவிரமாக யோசித்தவள் பின் என்ன சிந்தித்தாளோ!



"க்கும்! நமக்கு நடந்துட்டாலும்..." என்று தனக்குத்தானே நொடிந்துவிட்டு அங்கிருந்து வீட்டை நோக்கிச் செல்லும் அதேநேரம் இரவின் இருளைக் கிழித்துக்கொண்டு மின்னிக்கொண்டிருந்தது டுபாய் மாநகரம்.



அங்கு டீஜே பாடலின் ஒலி காதைக் கிழிக்க, அதை ரசித்துக் கேட்டவாறு தன்னோடு உரசும் இரு பெண்களை மேலும் தன்னோடு நெருக்கிக்கொண்டு உடலை வளைத்து ஆடிக்கொண்டிருந்தான் யாத்ரன்.



"யூ ஆர் சோ ஹோட், லெட்ஸ்..." என்று அவனை அணைத்துக்கொண்டு நடனமாடிய ஒருத்தி அவன் கன்னத்தை வருடியவாறு ஹோட்டல் ரூமுக்கு அழைக்க, இரு கைகளை உயர்த்தியவாறு சிரித்துக்கொண்டே அவளை விட்டு விலகி நின்றவன், "நொட் இன்ட்ரஸ்டட்" என்றுவிட்டு நகர்ந்து மதுபானங்கள் வைக்கப்பட்டிருக்கும் பார் பகுதியை நோக்கிச் சென்றான்.



"டியூட்..." என்று கத்திக்கொண்டு அங்கு மதுவை அருந்தியவாறு இருந்த வரதனின் அருகே அமர்ந்தவன், அவன் கையிலிருந்த மது க்ளாஸை பிடுங்கி முழுதாக வாயில் சரிக்க, அவனோ தன் தோழனை முறைத்துப் பார்த்தான்.



"இவன..." என்று வரதனோ பற்களைக் கடித்துக்கொண்டு ஒற்றைப் புருவத்தை உயர்த்திப் பார்க்க, "யூ நோ வாட் டியூட்! அந்த பொண்ணு என்னை ரூமுக்கு கூப்பிடுறா, பட்... ஐ அம் நொட் இன் தட் மூட் என்ட் இப்போலாம் நான் குத்தகனா இருக்கேன்னா பாரேன்" என்றான் காலரை தூக்கி விட்டுக்கொண்டு.



"முருகா..." என்று மேலே பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்ட வரதனுக்கு 'நம்ம மொழிய இப்படி கொல்றானே.. பேசாம இவன கொன்னுடலாமா' என்றுதான் நினைக்கத் தோன்றியது.



"அது உத்தமன்டா பரதேசி! அந்த வர்டே வாயில வருதில்ல, இதுல சார் உத்தமனாம்" என்று அவன் நொடிந்துக்கொள்ள, "ஆத்தீ சாரி மச்சா! நான் தமிழ்ல கொஞ்சம் வீக்குன்னு உனக்கு தெரியாதா என்ன ஹிஹிஹி..." என்று அப்பட்டமாக அசடுவழிந்தான் யாத்ரன்.



டுபாய் தலைநகரத்திலேயே பிறந்து வளர்ந்தவன் நிஜமாகவே தமிழில் சற்று அரைகுறைதான். தந்தையை இழந்த இரண்டு வயது குழந்தையான யாத்ரனோடு டுபாய்க்கு குடிபெயர்ந்த அவனுடைய தாய் விதுஷா டுபாயிலிருந்த ஒருவரை மறுமணம் செய்திருக்க, இப்போது அரசாங்கத்தில் ஒரு உயர் பதவியில் இருக்கின்றனர் அவனுடைய பெற்றோர்கள் இருவரும்.



அதனாலேயே ஆங்கிலமும் அரபு மொழியும் மட்டுமே அவனுடைய வாழ்க்கையில் அதிகம் தாக்கம் செலுத்தியிருக்க, இப்போது சில வருடங்களாகத்தான் வேலைக்காக டுபாய்க்கு வந்திருக்கும் வரதனுடைய நட்பு கிடைத்ததிலிருந்து தமிழை நன்றாக பேச கற்றுக்கொண்டான் அவன்.



கிட்டத்தட்ட பப்பிலிருந்து வெளியே வர நடுராத்தியே ஆகிவிட்டது.



"போலீஸ்கிட்ட மாட்டிக்காம ரூமுக்கு போய் சேர்ந்தா போதும், காளியம்மா நீதான்ம்மா எங்கள காப்பாத்தணும்" என்று தலைக்கு மேல் கையை உயர்த்தி வரதன் வேண்டிக்கொள்ள, சிரிப்பை அடக்கியவாறு அவனைப் பார்த்த யாத்ரன், "போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டா என் டாடிதான் வரணும், உன் காளியம்மா கெடையாது" என்றான் கேலியாக.



"வாயில போட்டுக்கோ! அப்படியெல்லா சொல்லக் கூடாது, கடவுள் கண்ண குத்திரும்" என்ற மற்றவன், "டேய் டேய் அந்த பக்கமா போகாத. என் வாஸ்துபடி கொஞ்சநாளைக்கு இந்த பக்கமாதான் போகணுமாம். அம்மா சொன்னாங்க" என்று அவன் ஒரு திசையைக் காண்பிக்க, அவனை வெட்டவா குத்தவா என்ற ரேஞ்சில் ஒரு பார்வைப் பார்த்தான் யாத்ரன்.



"அடிங்க... ஒரேயடியா என்னை மேல அனுப்பாம உன் நாட்டுக்கு போய் சேர மாட்ட போல! உன் மூட... மூட.. வாட்எவர் அதுல தீய வைக்க..." என்று மூச்சு கூட விடாமல் அவன் கத்திக்கொண்டே போக, "மூடநம்பிக்கைன்னு சொல்லாத! என்ட், யூ நோ வாட்? நிறைய பேர் ப்ரேக்அப் ஆனா சரக்கடிப்பான் இல்லன்னா வாழ்க்கையில பிரச்சனைன்னா சரக்கடிப்பான். ஆனா நான்... உன் கூட ஃப்ரென்டானதுக்கு தினமும் குடிச்சிட்டு இருக்கேன்" என்று பதிலுக்குக் கத்தினான் வரதன்.



யாத்ரனோ இதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லையென்பது போல விசிலடித்தவாறு வர, இருவரின் நல்ல நேரமோ என்னவோ, போலீஸிடம் சிக்காமல் வரதன் தங்கியிருக்கும் அறைக்கு வந்து சேர்ந்தனர்.



அப்போதுதான் கட்டிலின் மேலே இருந்த சூட்கேஸை கவனித்த யாத்ரனின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டன.



"எங்க கெளம்புற?" என்று அவன் புரியாமல் கேட்டதும், கட்டிலில் தொப்பென்று அமர்ந்தவாறு, "ஊருக்கு போறேன்டா, அம்மாவ பார்த்து ரொம்ப வருஷமாச்சு. கம்பனிலதான் டிக்கெட் போட்டு கொடுத்தாங்க. இதை நானே எதிர்பார்க்கல. மொதல்லயே உன்கிட்ட சொல்லியிருக்கணும், சாரி மச்சி!" என்று தயக்கமாக இழுத்தான் மற்றவன்.



"ஓஹோ... எப்போ ஃப்ளைட்?" என்று யாத்ரன் கேட்க, "இன்னும் டூ டேய்ஸ்லடா" என்று தோழன் சொன்னதும் எதையோ யோசித்தவாறு அலைப்பேசியை நோண்டியவனை குறுகுறுவென ஒரு பார்வைப் பார்த்தான் வரதன்.



"என்னாச்சுடா?" என்று அவன் யாத்ரனை உற்றுப் பார்த்தவாறுக் கேட்க, "சடன் வர்க், ஐ ஹேவ் டூ கோ. என்ட் சீ யூ டியூட்! அட்வான்ஸ் ஹேப்பி ஜர்னி" என்றுவிட்டு யாத்ரனோ வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.



போகும் அவனை விழிகளை சுருக்கி கேள்வியாகப் பார்த்திருந்த வரதனுக்கு உள்ளுக்குள் குழப்பம் சூடிக்கொண்டது.



"என்ன எலி அம்மணமா ஓடுது, என்னவா இருக்கும்?" என்று தீவிர முகபாவனையோடு அவன் யோசித்துக்கொண்டிருக்க, வரதனின் வீட்டிலிருந்து வெளியே வந்தவன் சுற்றிமுற்றி கோபமாகப் பார்த்தான்.



சட்டென அவனுடைய பார்வை ஒரு இடத்தில் நிலைகுத்தி நிற்க, இத்தனைநேரம் அவனுக்காகவே காத்திருந்தவன் போல தன் வண்டியில் காத்திருந்த ஒருவன் யாத்ரனின் பார்வை பதிந்ததும் வேகமாக வண்டியை உயிர்ப்பித்து அங்கிருந்து நகர்ந்தான்.



போகும் அந்த காரை விழிகள் சிவக்க இவன் பார்த்துக்கொண்டு நிற்க, இங்கு தரையில் பாயை விரித்து சாய்ந்துக்கொண்டிருந்த ஜான்சிக்கு ஏனோ இன்று உறக்கம் வந்தபாடில்லை.



எழுந்து சென்று ஒரு க்ளாஸ் தண்ணீரை மடமடவென அருந்தியவள் தந்தைக்கு கேட்காதவாறு மெல்ல ஜன்னல் கதவைத் திறந்து வானத்திலுள்ள நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்தாள்.



அவளுடைய பார்வை கேலண்டரில் அவள் குறித்து வைத்திருக்கும் நாட்களின் மீது பதிய, விரல்களால் எதையோ எண்ணி ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள்.



ஏனோ என்றும் இல்லாமல் இன்று அவளுடைய மனம் தள்ளாட, அந்த வீட்டிற்குள் இருப்பதே அவளுக்கு மூச்சு முட்டுவது போலிருந்தது.



விழிகளிலிருந்து கசிந்த விழிநீர் கன்னத்தை தொடும் முன்னே வேகமாக அதை துடைத்துக்கொண்டவள் அந்த நட்சத்திரங்களை வெறித்துப் பார்க்க, அதே வலியை விழிகளில் பிரதிபலித்தபடி காரில் சாய்ந்தவாறு வானத்தை தான் வெறித்துப் பார்த்திருந்தான் யாத்ரன்.



**********

படிச்சுட்டு மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க..


என்ட் என்னோட மூன்று ஆன்டி ஹீரோ கதைகளான

தஷுரி

ரதியின் ரணதீரன்

கனவுகள் கனலாய் மாறுமா



இந்த கதைகள Papr space Website appல April மாதம் வரைக்கும் ஃப்ரீயா படிக்கலாம்.. சோ மறக்காம ரீட் பண்ணிக்கோங்க..

Here's the link 👇

https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4
 
அத்தியாயம் 02

யாவும் நின் யாத்ரனாய்

Episode 02










"என் கரம் பிடிக்க தாம் எத்தனை தவங்கள் செய்ய வேண்டுமோ?" என்ற அந்த இனிமையான குரல் காதில் ஒலிக்க, "உங்க கரத்த பிடிக்கிறதுக்காக எத்தனை ஜென்மங்களும் தவம் இருக்க காத்துக்கிட்டு இருக்கேன் இளவரசி" என்றவனின் வார்த்தைகளில் அத்தனை காதலும் குறும்புத்தனமும் ஒளிந்துக் கொண்டிருந்தது.



அந்த அரண்மனை பால்கனியில் தொங்கிக்கொண்டு பேசிய ஆடவனின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அது சாட்சாத் யாத்ரனேதான்.



ஆனால், அந்த இளவரசியின் முகத்தை மட்டும் அவனால் பார்க்க முடியவில்லை. யார் அவள்?



உள்ளுக்குள் எழுந்த கேள்வியோடு அவள் முகத்தை காண முயற்சித்தான் யாத்ரன்.



ஆனால் அவனின் துரதிஷ்டம்!



கனவில் அந்த ஆடவனின் கரம் பால்கனி சுவரிலிருந்து நழுவ அவன் அலறிக்கொண்டே கீழே விழப் போக, இங்கு நிகழ்காலத்தில் அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தான் அவன்.



நன்றாகவே பயந்துவிட்டான் போல!



அறை ஏசி குளிரையும் தாண்டி அவனுடைய உடல் வியர்வையில் குளித்திருக்க, யாத்ரனோ பெரிய மூச்சுகளாக விட்டு தன்னை ஆசுவாசப்படுத்த முயற்சித்தான்.



"ராத்திரி பாகுபலி, பொன்னியின் செல்வன்னு ராஜாக்கள் படம் ஏதாச்சும் பார்த்தேனா என்ன, வழக்கமா இல்லாம இது.. இது ரொம்ப வித்தியாசமா இருந்துச்சே. அந்த குரல்... அவ யாரு? இளவரசின்னா ப்ரின்சஸ்ல! அவளோட முகம் ஏன் எனக்கு தெரியல. ஓ காட்!"



சிறிதுநேரம் அப்படியே குழப்பத்தோடு அமர்ந்திருந்தவன், விழிகளை மட்டும் உயர்த்தி சுவற்றில் தொங்க விடப்பட்டிருந்த டிஜிட்டல் மணிக்கூட்டைப் பார்த்தான்.



அடுத்தகணம் அவனுடைய விழிகள் பிதுங்கிவிடுமளவிற்கு விரிந்தன.



"ஓ ஷீட்!" என்று தலையிலடித்துக்கொண்டு வேகவேகமாக குளியலறைக்குள் புகுந்து உடை மாற்றிவிட்டு வெளியே வந்தான் யாத்ரன்.



சரியாக ஆஃபீஸிற்கு செல்வதற்காக தயாராகி உணவு மேசையிலிருந்த அவனுடைய மாற்றாந் தந்தை ராஜ்தீப்பும் தாய் விதுஷாவும் மகனை அதிருப்தியோடு ஒரு பார்வைப் பார்க்க, அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.



அவனைப் பார்த்ததும் அவனுக்கான உணவை பரிமாற வேலைக்கார பெண் ஓடிவர, "இட்ஸ் ஓகே டார்ல்ஸ்" என்று புன்னகையோடு சொன்னவன் அவனே உணவை தட்டில் வைத்து சாப்பிடத் தொடங்க, "ஹ்ர்ம் ஹ்ர்ம்..." என்று தொண்டையை செருமினார் விதுஷா.



"இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்குறதா உத்தேசம்?" என்று அவர் கேட்க, அவன் தந்தையோ தனக்கும் இந்த உரையாடலுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல உணவுத் தட்டில் முகத்தைப் புதைத்திருந்தார்.



"என்னை வேவு பார்க்குறத நீங்க நிறுத்துற வரைக்கும்..." என்று காட்டமாக பதிலளித்துவிட்டு விழிகளை நிமிர்த்தி ஒரு பார்வைப் பார்க்க, அவனை முறைத்துப் பார்த்தார் அவர்.



"சோ வாட்? உன்ன கேர் பண்ண கூடாதுன்னு சொல்றியா யாத்ரா" என்ற விதுஷாவின் கோபமாக கேள்வியில், தட்டை உதறிவிட்டு எழுந்து நின்றவன், "சின்ன வயசுலயிருந்து இல்லாத கேரிங் இப்போ எதுக்கு, அதுவும் என்னை நாள் பூரா வேவு பார்க்குறதுக்கு பேரு கேரிங்கா? நான் என்ன சின்ன பையனா. இனாஃப் மாம்! ஐ கான்ட் டோலெரேட் திஸ். அப்போவே நீங்க நல்ல அம்மாவா இருக்கல, இப்போ மட்டும்.." என்றுவிட்டு விறுவிறுவென தன் அறையை நோக்கிச் செல்ல, பெரியவருக்கு ஆத்திரம் பெருகியது.



"யாத்ரா ஸ்டாப்! உன் இஷ்டத்துக்கு பேசுற, ஒரு அம்மாவா நான் எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டேன்? சொல்லுடா.. யாத்ரா நில்லு" என்று விதுஷா கத்திய கத்தல்கள் எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாகிப் போக, அவன் கண்டுகொள்ளாத ஆத்திரத்தில் மேசையில் அடித்தவாறு எழுந்து நின்றார் அவர்.



"விது காம் டவுன்! தப்பு நம்ம மேலயும் இருக்கு. வேலை வேலைன்னு அவன் கூட நீ இருந்ததே இல்ல. ஐ ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட்" என்று ராஜ்தீப் நிதானமாக சொல்ல, ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுக்கொண்டவர், "வீ ஆர் கெட்டிங் லேட்" என நேரத்தைப் பார்த்துவிட்டு வேகமாக வெளியேற, சலிப்பாக தலையாட்டியவாறு மனைவியின் பின்னே சென்றார் அவர்.



சில நிமிடங்கள் கழித்து அறைக் கதவைத் திறந்தவனுக்கு வீடு வெறிச்சோடி இருப்பதைப் பார்த்து அப்போதுதான் நிம்மதி பெருமூச்சே வெளியானது.



அடுத்தகணமே ஒரு குறுஞ்செய்தியை மட்டும் தாயின் எண்ணிற்கு அனுப்பிய யாத்ரன், "இதை அவங்க பார்க்குறதுக்குள்ள ஐ வில் பீ அவுட் ஆஃப் த கன்ட்ரி" என்று வாய்விட்டே முணுமுணுத்தவாறு வீட்டிலிருந்து வெளியேறியிருக்க, இங்கு தான் தங்கியிருக்கும் அறையில் வேகவேகமாக தன் பொருட்களை தயார்படுத்திக் கொண்டிருந்தான் வரதன்.



"அய்யோ போச்சு போச்சு! வன் ஹவர்குள்ள நான் ஏயார்பார்டுக்குள்ள வேற இருந்தாகணுமே" என்று அவன் பதற்றமாக கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை எடுத்து வைத்தபடி கேப்பிற்கு அழைத்துக்கொண்டிருக்க, "மச்சி... ஐ அம் பேக்" என்றபடி உள்ளே நுழைந்தான் யாத்ரன்.



வரதனோ அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல், "ஏன்டா டேய் சும்மா சும்மா பப்பிள் கம் மாதிரி என் கூட வந்து ஒட்டிட்டே இருப்ப, ஊருக்கு போறேனே முன்னாடியே வந்து எனக்கு ஹெல்ப் பண்ணணும்னு தோனுச்சா? நீ வேணா பாரு, ஊருலயே இருந்துடுறேன், அப்போதான் என் அருமை புரியும் உனக்கு" என்று அலைப்பேசியை பார்த்தவாறு சொல்ல, மற்றவனிடமிருந்து பதிலே இல்லை.



"டேய் கார்ல வந்தியா இல்லன்னா பைக்லயா? இந்த கேப் வேற வந்து தொலைய மாட்டேங்குது. ஃப்ளைட்க்கு வேற லேட் ஆகுது ச்சே!" என்று அவன் எரிச்சலோடு கேட்க, "ரெண்டுமே இல்லடா மச்சி, கேப்ல வந்தேன் ஹிஹிஹி..." என்று அசடுவழிந்தவாறு சொன்னான் யாத்ரன்.



அந்த பதிலே வரதனுக்கு எதையோ ஒன்றை உணர்த்த, சட்டென தோழனைப் பார்த்தவனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்துக்கொண்டன.



ஆனால் ஒருசில கணங்கள்தான்,



"இவன..." என்று பற்களைக் கடித்தவாறு அவன் மூக்கு விடைக்க முறைத்துத் தள்ள, தன் சிறிய சூட்கேஸோடு கருப்பு நிற ஜாக்கெட் கண்ணில் கூலிங் க்ளாஸ் என பயணத்திற்கு தயாராக நின்றிருந்தான் யாத்ரன்.



"நீ எங்கடா வர்ற?" என்று கோபமாக வரதன் கேட்க, "உன் ஊருக்குதான்" என்று சாதாரணமாக சொன்னவன், "இப்போ பேச நேரம் இல்ல, சீக்கிரம் வா ஆல்ரெடி வீ ஆர் லேட்" என்று இடது கையிலிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு பதற்றமாக அழைத்தான்.



மற்றவனுக்கு சனி உச்சத்தில் இருந்தது போலும்! எதையோ சொல்ல வந்தவன் பின் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுக்கொண்டான்.



'உன்ன ஃப்ளைட்ல ஏறினதும் கவனிச்சுக்குறேன்' என்று மெல்ல முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக வரதன் வெளியேற, "நானு.. நானு..." என்றுக்கொண்டே நண்பனின் பின்னாலேயே வால் போல் சென்றான் யாத்ரன்.



எப்படியோ இருவரும் விமானத்தில் ஏறிக்கொள்ள இந்தியாவுக்கு போய் சேரும் வரை நண்பனை முறைத்துக்கொண்டே வரதன் வந்தான் என்றால், தனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பது போல விமானத்திலிருந்த பெண்களிடம் கடலைப் போட்டவாறு வந்தான் மற்றவன்.



ஒருகட்டத்தில் பேசிப் பேசியே களைப்பில் யாத்ரன் உறங்கிவிட, மீண்டும் அந்த முகம் தெரியாத இளவரசியின் குரல் அவன் செவிகளுக்கு கேட்டது.



அந்த கனவையும் தாண்டி ஏதோ அவனின் பக்கத்தில் இருப்பது போல் அத்தனை நெருக்கதோடு அந்த குரல் கேட்க, "யாத்ரா வேக் அப்!" என்ற தோழனின் கத்தலில் பட்டென விழிகளைத் திறந்தான் அவன்.



இப்போதும் வேகமாக மூச்சு வாங்க, உடனே சுற்றிமுற்றி பதற்றமாகப் பார்த்தான்.



"என்னாச்சுடா டேய், நல்லாதானே இருந்த?" என்று வரதன் தோழனின் முகபாவனையில் சிறு பயத்தோடுக் கேட்க, "நத்.. நத்திங் வரதா, யாரோ பக்கத்துல இருந்த மாதிரி.." என்றான் அவன் திணறியபடி.



தோழனுக்கு அவன் சொல்ல வருவது புரியவில்லை.



அதை உணர்ந்தவன், "ட்ரீம்தான் போல ஊஃப்ப்..." என்று தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொள்ள, "ஏதோ சொல்ற! சீக்கிரம் உன் பேக் எடுத்துக்க, நாங்க வந்தாச்சு" என்று வரதன் சொன்னதும்தான் விமானம் தரையிறங்கியதே அவனுக்குத் தெரிந்தது.



நான்கு மணிநேர பயணம் அது.



"நொட் பேட்! அங்க இருக்குற டெம்பரேச்சர விட இது பெட்டர்தான்" என்றுக்கொண்டே யாத்ரன் இந்தியாவில் தன் முதல் காலடியை வைக்க, அதேநேரம் ருக்மணி பேசுவதைக் கூட உணராது எதையோ வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்த ஜான்சிக்கு என்னவென்று புரியாத ஒரு உணர்வு உள்ளுக்குள் ஊசலாடிக்கொண்டிருந்தது.



'என்ன இது, உள்ளுக்குள்ள ஒரு மாதிரியா இருக்கு. இப்படி நான் உணர்ந்ததே இல்லயே, ஒருமாதிரி புதுசா இருக்கு' என்று அவள் யோசித்துக்கொண்டிருக்க, தோழியை உலுக்கிய ருக்மணி, "என்னாச்சுடீ?" என்று கேட்டாள் புரியாமல்.



"இல்ல ருக்கு, ரெண்டு நாளா மனசே சரியில்ல. என்னன்னே புரிய மாட்டேங்குது. தூங்க முடியல, என்ன யோசிக்கிறேன்னு கூட தெரியல" என்று ஜான்சி உதட்டைப் பிதுக்கிக்கொண்டு சொல்ல, "ஓஹோ... எனக்கு புரிஞ்சு போச்சு. இது அதேதான். முதலிரவுல என்னதான் நடக்கும்னு நாம பேசிக்கிட்டோம்ல. அதோட விளைவுதான். கொஞ்சநாளா எனக்கு கூட தூக்கமே வர மாட்டேங்குது தெரியுமாடீ! நம்ம வயசு அப்படி..." என ஹஸ்கி குரலில் சொல்லிவிட்டு வெட்கப்பட்டாள் மற்றவள்.



ஆனால் ஜான்சிக்கு ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. இது ருக்மணி சொல்லும் உணர்வல்ல! பெயரறியாத இந்த உணர்வுக்கு பெயர் தேட முயற்சித்தாள் பெண்ணவள்.



சரியாக அவர்களுக்கு அருகே வந்தமர்ந்த கீதா, "யக்கோவ்! அந்த ஷானு பாவம்ல, இன்னும் ஒரு வாரத்துல அவளுக்கு பூஜை இருக்கு. நாம போய் அவ கூட இருக்கலாமேக்கா, எனக்கு மனசே கேக்க மாட்டேங்குது" என்று சிறு கவலை தோய்ந்த குரலில் சொல்ல, ஜான்சியின் முகமோ சட்டென இறுகியது.



ருக்மணியோ தோழியின் கரத்தைப் பற்றி அதில் அழுத்தம் கொடுக்க, திடீரென வாயில் வெத்தலையை சப்பிக்கொண்டு அங்கு வந்தார் சுபாஷ்.



"ஏய் எழுந்துருடீ! பொட்டபுள்ள வீட்டுல இருக்காம எப்போ பாரு இந்த மரத்தடியில வந்து ரெண்டு மூனு சில்வண்டுகளோட உக்கார்ந்துக்கிட்டு. போடீ போய் வீட்டு வேலைய பாரு!" என்று மகள் என்றும் பாராமல் வாய்க்கு வந்ததைப் பேசி அவள் முதுகில் ஓங்கி அடிக்க, உதட்டைப் பிதுக்கியவாறு ருக்மணியோடு வீட்டை நோக்கி ஓடினாள் ஜான்சி.



"உன் அப்பன் வெத்தலை பாக்கு வாயன உங்க அம்மா கல்யாணம் பண்ணதுக்கு அவங்க ஸ்டேட்லயே வேற ஒருத்தர கல்யாணம் பண்ணி நிம்மதியா இருந்திருக்கலாம். உன் அப்பனா போயிட்டாரு, இல்லன்னா வெத்தலையில விஷத்தை வச்சிருப்பேன்" என்ற தோழியின் கத்தலைக் கேட்டு புன்னகைத்தவள், "ஆமா.. இந்த உலகத்துக்கு ஒரு பாரம் குறைஞ்சிருக்கும்" என்றாள் விரக்தியாக.



ருக்மணியோ முறைத்துப் பார்க்க, "நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு, எனக்கு குழந்தை பெத்துக்குற பாக்கியம் இல்லன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. பொறக்கும் போதே வாங்கி வந்த சாபம் அது. இப்போதான் ஊருக்கு உபயோகப்படுற மாதிரி ஒன்னு பண்ண போறேன். அது நடந்தாச்சும் என் மூலமா ஏதாவது நல்லது நடக்கட்டும்" என்றவளின் வார்த்தைகளில் அத்தனை வலி அடங்கியிருந்தது.



அவள் பேசியதைக் கேட்ட ருக்மணியின் விழிகள் கலங்க தோழியை அழுகையோடு அணைத்துக்கொண்டாள்.



ஜான்சிக்கும் அவளிருந்த மனநிலைக்கு அப்போது அந்த இறுகிய அணைப்பு தேவைப்பட்டது போலும்!



விழிகளில் கசிந்த கண்ணீரோடு அவள் தோழியின் அணைப்பில் அமைதியாக நின்றிருக்க, இரண்டு ஆடவர்களையும் தனக்குள் சுமந்தபடி அந்த வெள்ளைநிற கார் ஊருக்குள் நுழைந்தது.





*********

கதை பிடிச்சிருக்கா ஃப்ரென்ட்ஸ்..

என்ட் என்னோட மூன்று ஆன்டி ஹீரோ கதைகளான

தஷுரி

ரதியின் ரணதீரன்

கனவுகள் கனலாய் மாறுமா


இந்த கதைகள Papr space Website appல April மாதம் வரைக்கும் ஃப்ரீயா படிக்கலாம்.. சோ மறக்காம ரீட் பண்ணிக்கோங்க..

Here's the link 👇

Https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4


என்னோட கதைகள ஆடியோ வடிவுல கேக்கணும்மா இதோ என்னோட யூடியூப் சேனல்

Kadhaikulla polaama channel link 👇
https://youtube.com/@kadhaikullapolaama99?si=ZIbEQ6qPd-b7cg-b








 
Status
Not open for further replies.
Top