கதை படிச்சுட்டேன் வாவ் சகி .ஆனால் கமெண்ட் போடதான் கொஞ்சம் லேட்டு சாரி?????
சூப்பர் சூப்பர் சகி உங்க கதை களத்திற்கு.?????
அப்புறம் உங்க எல்ல கதையிலயும் பெண்களுக்கு பெரிய முக்கியத்துவம் இருந்திருக்கு . ஆனால் இந்த கதையில ஹீரோஸுக்கு நிகரான பாத்திரம் ஒவ்வொரு ஹீரோயினுக்கும் அதிலயும் கயல் மற்றும் ஆராதனா செம மாஸ் காட்டிடாங்க ( பூங்கொடி பற்றி கேட்குறது புரியுது அவங்க எப்பவும் அல்டிமேட்டில்ல????)
கயற்கன்னி தன் குடும்பத்திற்காய் காதலையும் தன்னவன் பெயர் கலங்கப்படுமோவென்று தன்னவனையும் இழக்க நினைத்த காரிகையள். அளவில்லா பாசத்தை பொழிந்து புது அண்ணனை தத்தெடுத்த சீமாட்டி. தன்னவனின் உயிரை காத்து அவன் உயிரில் கலந்தவள்????
ஆராதனா என்னோட ஃபேவரைட் தன் குறைகளையே நிறைவாக்கி எதிரியை தில்லுடன் மோதி வெற்றி கண்டவள் விழுந்ததோ ராகுல் எனும் சுழலில். தாயின் கலங்கம் துடைக்க தகப்பனிற்கு தோள் கொடுக்க அண்ணனின் ஆபத்தில் அவனை காக்க வந்தாள் அதிரடியாய் அவள் வான் தேவதையாய்????
தீரன் தந்தையின் துரோகமும் தாயின் இழப்பும் அவனை அகம்பாவியாய் மாற்றினாலும் பாசத்துக்காக ஏங்கியவனுக்கு கிடைத்ததோ காதலோடு மனைவி ஆராவும் நட்பெனும் உறவோடு செல்லத்தங்கை கயலும்????
மாறன் இவன் பிறப்பில் நிறையவே திருப்பங்கள். வளர்த்த தந்தையோ கைவிட வாழ்க்கை தடம்புரண்டதோ பரிதாபம். முரடனவன் தன் வாழ்வை ஆழியெனும் காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்தவன், தவறான புரிதலால் ஏற்பட்ட கசப்புக்களை சீர் செய்து அனைத்து உறவுகளோடும் இணைந்தது சுபம்?????
அபி எல்லாருக்கும் செல்லைபிள்ளை. அனைவரதும் பாசத்துக்குறியவன் தன்னவளை அதிரடியாய் கைப்பற்றி சிறுபிரிவிலும் அரணாய் இருந்து காத்தவன். குடும்பத்தினரின் கஷ்டங்களில் உறுதுணையாயிருந்து தகப்பன் தாயின் சொல் ஒன்றே வேதமென வாழ்ந்த வேங்கையவன்?????.
தீரன் அபி மாறன் என்று எத்தனை ஹீரோஸ் இருந்தாலுமே என்றைக்குமே எங்க தல விகர்ணன் கெத்துதான் போங்க????
லாஸ்ட் பட் நொட் லீஸ்ட், ஒவ்வொரு பதிவிலும் ட்விஸ்டோட ஒரு கேள்விய வைச்சு எங்களை குழப்பிய பெருமை ஆத்தர் அவர்களையே சாரும்????
அருமையான கதையை தந்த சகிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்??????
அடுத்த கதையாம் தூரிகையின் நிகரிலனில் சந்திக்கின்றேன் சகி??
??
??
??
??