நானும் ஒரு மாமியார்.எனக்கு ரெண்டு மருமகள் இருக்காங்க.என் மகனுக்கு கல்யாணம் ஆனதும் அப்பாடா பொறுப்பு நீங்கிச்சுன்னு சந்தோஷப்பட்டேன்.அவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடுவது இல்லை.
இப்படி இருந்தால் மருமகள்கள் ஹாப்பியா இருப்பாங்க.இது தான் உண்மை.அதே சமயம் ஒரு சிலர் மாமியார் தோரணை காமிப்பாங்க .அது தவறு தான்.அதற்காக மாமியாரை slow poison அப்படின்னு சொல்லாதீங்க.ஒரு குழந்தையை சுமந்து ,பெற்று.வளர்த்து,அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு வழி காட்டி,பிள்ளைக்கு ஏற்ற பெண் பார்த்து திருமணம் செஞ்சு வைக்கிறோம்.கல்யாணம் செஞ்சு வைத்ததும் எங்க பிள்ளை இல்லன்னு ஆகிருமா.நான் வேறொரு தளத்தில் இந்த தலைப்பில் வந்த வாதததில் ,ஒரு மருமகள் பிள்ளையை வளர்ப்பது ஒரு தாயின் கடமை என்று சொன்னதை பார்த்தேன்.அம்மாக்கு கடமை என்று சொல்வது போல் பிள்ளைக்கும் தாயை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது.இதை யாரும் மறுக்க முடியாது.ஒரு அம்மா வெளிநாட்டில் இருக்கும் மகன் வீட்டுக்கு சென்றார்.மகன் கூட காரில் முன் சீட்டில் உட்கார்ந்து விட்டார்.மருமகள் பயங்கரமாக சண்டை போட்டாராம்..தினம் outing போவதில்லை.வாரத்தில் இரண்டு நாள் போகிறீர்கள்.அந்த அம்மா ஆறு மாதம் கழித்து இந்தியா திரும்ப போகிறார்.இருக்கும் கொஞ்ச நாள் விட்டு குடுங்கம்மா.பசங்க பாவம் இருதலைகொள்ளி எறும்பா தவிச்சி போவாங்க.பாவம் பிள்ளைகள்.பெற்றோர்களேவரதட்சணை வாங்காதீர்கள் .உங்கள் பிள்ளையை பண்டமாற்று வியாபாரமாக நினைத்து விற்காதீர்கள்.இதுவே நீங்கள் உங்களுக்கு வைத்து கொள்ளும் மிக.பெரும் ஆப்பு.
மருமகளை மகளாக நடத்தலாம்..அப்போ அந்த மகள் சொல்வதையும் தாங்கி கொள்ளுங்கள்.எப்பவும் மகன் குடும்பத்துடன் ஒரு சில அடிகள் தள்ளியே நில்லுங்கள்.மகனின் நிம்மதிக்கான இதை செய்வதu நல்லது