ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மணிகிளியே என் மனம் பறிக்க வந்தாயே - கதைத்திரி

Status
Not open for further replies.

Madhusha

Well-known member
Wonderland writer
1000016814.jpg



அத்தியாயம் 16

“அம்மா நான் என் ப்ரண்ட் கல்யாணத்துக்கு போயிட்டு வர்றேன்” என சப்துனிகா தன் பெட்டிக்குள் ஊருக்கு செல்வதற்கான துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள;..

“ஏன் டி.. இங்கே உன் கல்யாண வாழ்க்கையே அந்தரத்துல தொங்குது..” என்றதும் சட்டென சப்துனிகா அண்ணாந்து மேலே பாரக்க, சரணிகாவும் அவளைப் போல் அப்படியே மேலே பார்த்தார்..

“மேல என்னடி பார்க்கிற?..” என அப்பாவியாக கேட்ட அன்னையை பார்த்து உதட்டுக்குள் சிரித்தவள்,

“ஹான்.. நீங்க தானே சொன்னீங்க?.. அந்தரத்துல தொங்குதுன்னு.. அதான் எங்கே தொங்குதுன்னு பார்த்தேன்..” என்றவளின் தலையில் நச்சென்று கொட்டினா சரணிகா..

“அவுச்ச்.. அம்மாஆஆ..” என தலையை சப்துனிகா தேய்த்து விட,

“உன் அப்பாவுக்கு கொஞ்சமும் குறையாம அகங்காரம் பிடிச்ச கழுதை. மாப்பிள்ளையை காணுமாம் டி.. நானே பதறிட்டு இருக்கேன்” என சற்று பதற்றமாக சொல்ல,

“இந்த விஷயத்தை நீ அப்பாக்கிட்ட சொன்னீயா?..” என சற்றும் பதட்டம் இல்லாமல் கேட்டாள் சப்துனிகா

“சொன்னேன் டி, அவுக உனக்கும் மேல, கொஞ்சம் கூட பதட்டப்படாம இருக்காக..” என்றவளுக்கு, கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது..

தன் மகளின் வாழ்வு இனி என்னாகுமோ என்ற பயம் தான் அவருக்கு..

“சரி அழுகாச்சியை விட்டுட்டு, உன் ப்ரண்ட்க்கு போன் பண்ண வேண்டியது தானே..” என்றவளை பார்த்து உதடு சுழித்தாள் சரணிகா..

பின்னே அவரும் எத்தனை நாள் போனில் அழைப்பு விடுப்பது, போன் அணைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி தானே வந்துக் கொண்டேயிருந்தது..

“அவ போன் எடுத்தா, நான் ஏன்டி இப்படி கலங்கி நிற்கப் போறேன்..” என்ற அன்னையை இறுக்கக் கட்டிக் கொண்டாள்..

அவளின் அணைப்பில் ஒரு வித நிம்மதி சரணிகாவிற்கு..

“அம்மா, எதுக்கும் நீ கவலைப்படாதே, சப்துனிகா இருக்க பயமேன்?.” என தன் கைகளை ஆசீர்வாதம் செய்வதை போல் வைத்துக் கொண்டு சொல்ல,

“ம்க்கும். பயமே நீ தான்டி.. புருஷனைக் காணும்னு சொல்லுறேன். கொஞ்சமாவது அசருறீயா பாரு?.. அப்படியே கல்லுருண்டை மாதிரி உங்க அப்பாவை மாதிரியே சுத்துற?..” என திட்டிக் கொண்டே வெளியே செல்ல,

“உனக்கு என்னோடு சேர்த்து, அப்பாவையும் திட்டலைன்னா தூக்கம் வராதே..” என சப்துனிகா தன் போன், வாட்ச் எல்லாம் எடுத்து உள்ளே வைக்க..

“சின்ன மேடம் கார் ரெடியாகிடுச்சி..” என வீட்டில் வேலை செய்யும் ஓர் பெண் வந்து கூறிவிட்டுச் சென்றாள்..

“இதோ வந்திடுறேன்..” என சொல்லிக் கொண்டே வெளியே வர, குடும்பம் மொத்தமும் ஹாலில் தான் அமர்ந்திருந்தது..

“நீ பார்த்த வேலையா இது?.” என சரணிகாவை, சப்துனிகா ஓரக்கண்ணால் பார்க்க.. அவரோ எதுவுமே தெரியாது போன்று நின்றுக் கொண்டிருந்தாள்..

“அப்பா நான் என் ப்ரண்ட் கல்யாணத்துக்கு போயிட்டு வர்றேன்..” என்றவள், ட்ராலியை இழுத்துக் கொண்டு வெளியே செல்ல,

“கல்யாணம் எத்தனை நாள் மா?..” என தன் போனை நோண்டிக் கொண்டே கேட்டான் சபரீ.

அவனுக்கு மகள் செல்லும் இடம் நன்றாக தெரியும். ஆனாலும் தன் மனைவிக்கு மகள் எங்கே செல்கிறாள்? என தெரிய வேண்டும் என்றே கேள்வி கேட்டான்..

“ஒரு வாரம் பா..” என்ற மகளை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தவனின் பார்வை, அங்கிருந்த பெட்டியில் படிந்தது.. கிட்டத்தட்ட மூன்று பெரிய ட்ராலிகள் அல்லவா அங்கேயிருந்தது..

“ஒரு வாரத்துக்கு ஏன்டி இவ்வளவு பேக் பண்ணியிருக்கு?..” என சரணிகா, அப்பொழுது தான் ட்ராலியைப் பார்த்துக் கொண்டே கேட்டார்..

“இதையே நீ இப்போ தான் கவனிக்கிறீயா?.” என்ற பார்வையை, சபரீ சரணிகா மீது செலுத்த..

“அச்சோ, என்ன கோபம் லைட்டா நம்ம பக்கம் திரும்புது?..” என மனதோடு நினைத்தவள், அதன் பின் கணவனின் புறம் திரும்பினால் தானே..

‘அச்சோ கண்டுபிடிச்சிட்டாரே?..’ என்றவள், இதற்கு மேல் எங்கிருந்து மறைக்க..

“அம்மா.. நான் கல்யாணத்துக்குப் போகலை..” என்றவளை புருவம் சுருக்கிப் பார்த்தார் சரணிகா..

“ஏய்ய்ய்.. இப்போ தானே கல்யாணத்துக்குப் போறேன்னு சொன்ன?.. இப்போ போகலைன்னு சொல்லுற?.” என்ற அன்னையை திரும்பி பார்த்து முறைத்தவள்,

“ம்மா, நான் செளந்தர் ஊருக்குப் போறேன்..”

“செளந்தருக்கு சொந்த ஊர் இருக்கா என்ன?..” என்றதும் தான் தாமதம்,

‘எப்பேர்ப்பட்ட அறிவாளி நீ?’ என்பதை போல் சபரீ அவளை நிமிர்ந்துப் பார்க்க, அவனின் பார்வையில் கள்ளமுழி அவள் முழிக்க, பார்த்துக் கொண்டிருந்த சப்துனிகாவின் இதழ்களில் சிறு புன்னகை..

“ம்மா, நான் செளந்தர் இப்போ புதுசா ட்ரான்ஸ்பேர் ஆகியிருக்கிற, சூரத்க்குப் போறேன்..” என்றதும் ஒரு கணம் அங்கே கணத்த அமைதி நிலவியது..

“என்னடி சொல்லுற?.. பக்கத்துல இருக்கிற அருப்புக்கோட்டை போற மாதிரி சொல்லுற?.. சூரத் டி, அய்யோ அது மேப்ல எங்கேயிருக்குன்னு கூட தெரியாதே..” என்ற அன்னையை விழி விரித்து பார்த்தாள் சப்துனிகா..

“ஏது மேப்ல எங்கேயிருக்குன்னு தெரியாதா?.. மம்மி நீ ஏன் இவ்வளவு டம்மியா இருக்க?..” என கேட்டு முடிப்பதற்குள்,

“சப்துனிகா..” என்ற சபரீயின் கர்ஜனைக்குரல், சட்டென்று அவளை இடைமறித்தது..

‘அச்சோ, அப்பாவை கோபப்படுத்திட்டோமோ.. இந்த அம்மாவை ஏதாவது சொன்னா மட்டும் அப்பாவுக்கு எங்கிருந்தாலும் கோபம் வந்திடுமோ?’ என நினைத்தபடி, “அம்மா நான் சூரத்க்கு போறேன்..” என சற்று மெல்லிய குரலில் சொன்ன மகளை பதட்டமாக பார்த்தாள் சரணிகா..

“என்னடி நீ தனியா அவ்வளவு தூரம் போறேன்னு சொல்லுற?.. இரு நாங்களும் வர்றோம்.. அத்தை, பிரகதி, ஏங்க..” என எல்லாரையும் அழைத்த அன்னையின் கையை இறுக்கமாக பற்றினாள் சப்துனிகா..

தன் கைகளைப் பிடித்த மகளை சற்று பரிதவிப்பாக பார்த்தார் சரணிகா.. மகளை அவ்வளவு தூரம் அனுப்ப அவருக்கு மனமேயில்லை..

“அம்மா, நான் இதுக்காகத் தான் யார்க்கிட்டையும் சொல்லலை.. இப்போ நாம கும்பலா போய் நின்னோம்னா, செளந்தரால அதை ஏத்துக்கவே முடியாது.. அவர் கூட நான் வாழணும்னு நினைச்சீங்கன்னா, ப்ளீஸ் விட்டுருங்க..” என்றவளை, தனியாக அனுப்ப மனமில்லாமல்.. அவளின் தலையைக் கோதிவிட்டவாறே,

“சரி போயிட்டு வா.. அரேன்ஞ்ச்மெண்ட் பண்ணிட்டல்ல..” என சரணிகா கேட்டதும், சப்துனிகா ஒரு கணம் தன் தந்தையைப் பார்க்க..

அந்தப் பார்வையிலே புரிந்துக் கொண்டாள்.. பெண்ணை பற்றிய அத்தனை விஷயமும் அவனுக்குத் தெரியும் என்று..

“ம்க்கும், நம்மக்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா என்ன தான் என்னவாம்?..” என்றவள் சப்துனிகாவை அழைத்துக் கொண்டே சாமியறைக்குச் செல்ல, அவளின் பின்னால் சென்ற சப்துனிகாவும் கடவுளை வேண்டிக் கொண்டு தான் வந்தாள்..

இதுவரை குடும்பத்தின் நிழலிலும், பாதுகாப்பிலும் மட்டுமே வாழ்ந்தவள் அவள்.. இன்று தன் குடும்பத்தை விட்டு, அவன் ஒருவனை மட்டுமே நம்பி தொலைதூரம் செல்கிறாள் என்ற கவலை அவளுக்குமே இருந்தது..

“பார்த்துப் போயிட்டு வா டி..” என கண்களில் கண்ணீர் மல்க நின்ற அன்னையை ஒடிச் சென்று அணைத்துக் கொண்டாள்..

சரணிகாவிற்குமே கண்ணீர் வந்தாலும், அவளை கண்ணீருடன் வழியனுப்ப மனமில்லாமல், அமைதியாக தான் நின்றிருந்தாள்..

“போயிட்டு செளந்தரோட வர்றேன் ம்மா..” என்றவள் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டே புறப்பட்டாள் சூரத்திற்கு..

செல்லும் வழியெங்கும் அவன் காணாமல் போன சிந்தனை மட்டுமே..

அன்று முத்தம் கொடுத்து விட்டு அடுத்த நாள் ஹாஸ்பிடலுக்கு போக, அங்கு செளந்தர் டிஸ்சார்ஜ் ஆகியிருந்தான்.. வீட்டிற்குத் தான் சென்றிருப்பான் என நினைத்து வீட்டுக்குச் செல்ல, அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது..

எங்கே? என செக்யூரிட்டியிடம் விசாரிக்க, தெரியவில்லை என்ற பதில் தான் கிடைத்தது..

ப்ச்ச். அடுத்து என்ன என்கின்ற நிலை வர, அவள் தேடி வந்து நின்ற இடம் தன் தந்தையின் முன்பு..

தன் முன்னால் வந்து நின்ற சப்துனிகாவை, ஏற இறங்க பார்த்தான் சபரீ..

அவள் தான் வாயை திறக்காமல் கமுக்கமாக அமர்ந்திருக்கின்றானே,

“ம்ம்ம். உன் புருஷன் எங்கேயிருக்கான்னு தெரிஞ்சிக்கணும்.. ஆனா அதை வாயைத் திறந்து கேட்க முடியாது என்ன?” என கேட்டுக் கொண்டே அவளின் முன்பாக ஒரு கவரை நீட்டினான்.

அதைப் பிரித்து பார்த்தவளின் முகமெல்லாம் புன்னகையில் மலர்ந்தது..

“போய்ப் பாரு, அவன் உனக்குப் பயந்து ட்ரான்ஸ்பேர் வாங்கி சூரத்க்கு போயிட்டான்..” என மெல்லிய புன்னகையுடன் சொல்ல,

“சூரத்க்கு போயிட்டா விட்டுருவேனா அவனை.. தேடிப் போறேன்..” என்றவள், தன் தந்தையைப் பார்க்க.. அவளின் ஒற்றைப் பார்வைக்கு, அவள் சூரத் போவதற்கான அத்தனையையும் ரெடி பண்ணி வைத்திருந்தான் சபரீ…

ஒரு மாதம் உடல்நிலையைக் காரணம் காட்டி, தன் நண்பனின் வீட்டில் தங்கியவன், செய்த முதல் வேலை யசோதாவின் போன் நம்பரை ஸ்வீட்ச் ஆஃப் பண்ணியது தான்..

என்னடா? என கேட்டவர்களை அமைதியாக ஒரு பார்வை பார்த்தே அடக்கினான்.. அவன் தான் வாய்விட்டு பேச மாட்டானே..

“இவனைப் பத்தி தெரிஞ்சும் கேட்டோம் பாரு..” என புலம்பிக் கொண்டே யசோதா அவனுடன் சூரத்க்கு சென்றனர்..

அங்கு கலெக்டருக்கு புதிதாக குவாட்டர்ஸ் கொடுத்திருக்க, அவனுடன் கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும், அவர்களுக்கு தக்க சிறு சிறு வீடுகளை கவர்மெண்ட் கொடுத்திருந்தது..

சூரத் கலெக்டர் அலுவலகத்தில் தன் பணியில் அன்று சேர்வதற்காக, நிதானமாக புறப்பட்டுக் கொண்டிருந்தான் செளந்தர்..

ஒன்பது மணிக்கு செல்ல வேண்டிய வேலைக்கு, ஆறு மணியில் இருந்தே ரெடியாகி இருந்தான்.. அவனுக்கு நேரம் தவறாமை என்பது தொன்று தொட்டு வந்த பழக்கம்..

அறைக்குள் ரெடியாகி அமர்ந்திருந்தவனின் பார்வை, அங்கு எதிரில் இருந்த சிறு வீட்டின் மேல் அழுத்தமாக படிந்தது..

அவன் இங்கு வந்த நாளில் இருந்து பூட்டியிருந்த வீட்டை ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தனர்..

என்ன இத்தனை நாள் இல்லாம இப்போ ஒட்டடை அடிக்கிறாங்க? யாராவது வரப் போறாங்களா?.. இது கலெக்டர் அசிஸ்டெண்ட் தங்கும் வீடு என்று தானே சொன்னாங்க?.. அப்போ எனக்கு அசிஸ்டெண்ட் அப்பாயின்ட்மெண்ட் பண்ணிட்டாங்களா? என பல கேள்வி நார்மல் மனிதனுக்கு வரும்.

ஆனால் இவனுக்கு எதுவுமே தோன்றவில்லை.. ஒட்டடை சுத்தமாக அடிக்கிறார்களா என்பதை போல் வேடிக்கப் பார்த்தான்..

அவர்கள் அடித்து முடிக்கவும், காலையில் சாப்பிட வேண்டும் என்ற நினைவு வந்தது..

நேராக கீழிறங்கிச் செல்ல, எப்பொழுதும் போல குணசேகரனும், யசோதாவும் சாப்பிட்டு முடித்து வெளியே அமர்ந்திருந்தனர்..

இவனும் சாப்பிட்டு முடித்து வெளியே வந்தான்.. அவனுக்கு நேர் எதிரில் கலெக்டர் கார் நின்றிருந்தது..

அதில் ஏறியவன், கலெக்டர் ஆபீஸ் நோக்கிச் சென்றான்.. அனைவரும் அவனுக்கு சிரித்த முகமாக வணக்கம் வைத்தனர்.

அதை சிரிக்காமலே ஏற்றுக் கொண்டது இவனாகத் தான் இருக்கும்..

உள்ளே நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தான்.. அங்கிருந்த சில குறிப்பேடுகளை பார்த்துக் கொண்டிருக்க, காலை பத்து மணியளவில், “சார் உள்ளே வரலாமா?..” என அழகான தமிழில் ஒரு குரல் கேட்க, தூக்கிவாரிப் போட்டது செளந்தருக்கு..

அவனின் அதிர்ச்சி அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. தொண்டைக் குழி ஏறியிறங்க, பேசாமல் அமர்ந்திருந்தவனின் முன்பாக அந்த நபர் சென்று நின்றனர்..

தன்னெதிரில் நிற்பவளை முறைக்க ஆரம்பித்தான் செளந்தர்.. ஆனால் எதிரில் இருப்பவளோ முப்பத்தி ரெண்டு பல்லை ஈஈஈஈஈ என காட்டியபடி சிரிக்க, அவனோ இறுக்கமாக அமர்ந்திருந்தான்..

“சார்..” என மெல்லிய குரலில் அழைக்க, மறுபடியும் பல்லைக் கடித்தான் செளந்தர்..

“கோபமா சார்?.” என அழகான தமிழ்க்குரலில் மதுரைப் பைங்கிளி கிசுகிசுக்க,

“உனக்கு என்னதான் வேணும்?..” என சற்று கோபமாக கேட்டான் செளந்தர்..

“நீங்க தான் சார்..” என பட்டென்று சொல்லியது மதுரையில் பிறந்த வண்ணமயில்..

“வாட்..” என அதிர்ந்தவன், நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டவாறே,

“இங்கே பாரு தாரணி..” என்ற சொல்லில், எதிரில் இருந்த நபரின் முகம் பளிச்சென்று மின்னியது..

ஆம்.. எதிரில் இருப்பது சப்துனிகா அல்ல, தாரணியே தான்..

செளந்தரை விரட்டி, விரட்டி காதல் செய்பவள்..

கிட்டத்தட்ட 5 வருடக் காதல் அவளுடையது.. மிடில் க்ளாஸ் பொண்ணு தான்..

ஆனால் செளந்தரின் மேல் அதிக காதல் அவளுக்கு..

“என்னை ஞாபகம் எல்லாம் வச்சிருக்கீங்களா சார்?..” என்றவளை சற்று அயர்ந்து பார்த்தான்.

தலை லேசாக வலிக்க ஆரம்பித்தது செளந்தருக்கு..

“மே ஐ கமின் சார்..” என மேல்நாட்டு ஆங்கிலத்தில் ஒரு பெண் கேட்க, திரும்பிப் பார்த்த செளந்தரின் உதடுகள் ஏளனத்தில் வளைந்தது..

“நீயுமா” என்பதை போல்..

வாசலில் நின்றிருந்தவளின் கண்கள் இப்பொழுது செளந்தரையும், அவனின் எதிரில் இருக்கும் பெண்ணையும் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தது..

அவளைப் பார்த்ததும் செளந்தருக்கு எப்படியோ, ஆனால் தாரணிக்கு அளவில்லாத மகிழ்ச்சி..

“அக்கா, நீங்க மினிஸ்டர் சபரீஸ்வரன் பொண்ணு தானே..” என மறுபடியும் கொஞ்சும் குரலில் கேட்க,

“ம்ம். ஆமா..” என பல்லைக் கடித்து உறுமினாள் சப்துனிகா.. செளந்தரின் மேல் இருந்த கோபத்தை அவள் மேல் காட்டினாள்..

அவள் எங்கே தாரணியைப் பார்த்தாள்?.. எதிரில் அமைதியாக உட்கார்ந்திருந்தவனை அல்லவா கோபத்தில் எரிப்பது போன்று பார்த்துக் கொண்டிருந்தாள்..

ஆமாங்க, இப்போ உள்ளே வந்தது நம்ம ஆள் சப்துனிகாவே தான்..

“இருக்கிற தலைவலியில ரெட்டைத் தலைவலி வேற..” என தன் நெற்றியை நீவி விட்டான் செளந்தர்..
 

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 17

தன் முன்னால் நின்றிருந்த இரு பெண்களையும் எந்த வித உணர்வுகளும் இன்றி பார்த்தான் செளந்தர்..

“உட்காருங்க..” என்றதும் இருவரும் ஒன்று போல் சேரில் அமர்ந்தனர்.

தன் எதிரில் இருந்த தாரணியை தான் பார்த்தான்.

அவனின் பார்வையை உணர்ந்த தாரணி, தன் ஹேன்ட்பேக்கில் இருந்த கவரை எடுத்து அவன் புறம் நீட்டிட, அதே போன்ற கவரை செளந்தரின் முன்னால் நீட்டினாள் சப்துனிகா அவன் கேட்காமலே..

தன் முன்னால் கவரை நீட்டியபடி நின்றிருந்த இருவரையும் அழுத்தமாக பார்த்தவன், முதலில் வாங்கியது என்னவோ தாரணியின் கையில் இருந்த கவரைத் தான்..

அதைப் பார்த்த சப்துனிகாவின் விழிகள் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.. அதற்கு நேர்மாறாக தாரணியின் இதழ்கள் தாராளமாக புன்னகைத்தது..

சப்துனிகாவிடம் முதலில் வாங்காததற்கு காரணம், அவளுக்கு முன்பாகவே தாரணி உள்ளே நுழைந்து விட்டாள்..

தாரணி வைத்திருந்த கவரை படித்து பார்த்தவன், சப்துனிகாவின் கவரை வாங்க, ‘கொடுப்பேனா?’ என்பதை போல் அழுத்தமாக கவரின் ஒரு முனையை அவள் பற்றியிருக்க, அதுவரை தாழ்ந்திருந்த விழிகளை சட்டென்று உயர்த்திப் பார்த்தான் செளந்தர்..

அவனின் விழிகளில் ஒரு வித அனல் கூடியது.. அவளின் விழிகளில் ஒரு வித சுவாரஸ்யம் கூடியது..

அவளின் கண்களில் இருந்த திமிரை அறிந்தவனாய், வேகமாக கவரை பிடித்திழுத்தான். அதைப் பிரித்துப் பார்த்தவனின் கண்களோ கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது..

“வாட் இஸ் திஸ்?” என சீறிட,

“சார். பார்த்தா தெரியலை.. உங்களுக்கு அசிஸ்டெண்டா என்னை அப்பாயின்ட்மெண்ட் பண்ணியிருக்காங்க..” என்றதும் தாரணியின் விழிகளில் அப்பட்டமான அதிர்வு..

“என்ன எனக்குப் போட்டியாவா?..” என தாரணி சற்று பதட்டமான குரலில் கேட்க, தாரணியை திரும்பிப் பார்த்தாள் சப்துனிகா..

“நீயும் அசிஸ்டெண்ட் வேலைக்கா வந்திருக்கே?..” என்றதும் தலையை நாலாப்புறமும் ஆட்டினாள் தாரணி..

அவளுக்கு இந்த வேலை மிகவும் முக்கியமானது. கண்டிப்பாக தேவைப்படுவது கூட.. ஆனால் மந்திரியின் மகளின் மன்னால், தன் படிப்பு எடுபடுமா? என தவிப்பாக அவள் தன்னை முட்டைக்கண்ணை முழித்துப் பார்த்தாள்..

இது தன் தந்தையின் வேலை என்பது சப்துனிகாவிற்கும் நன்றாக புரிந்தது..

ஆனால் என்ன செய்வது? தனக்கு இந்த வேலை வாழ்க்கையின் அடுத்தக் கட்ட பயணம்?.. என அவளுக்குமே சின்ன தவிப்பு இருந்தது..

“மிஸ்.தாரணி.” என்ற குரலில், கலங்கிய விழிகளுடன் செளந்தரை மெல்ல ஏறிட்டுப் பார்த்தாள் தாரணி..

அவளுக்கு தன் வேலை தன்னை விட்டுப் போய்விடுமோ? என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தது..

“சார் எனக்கு வேலை இல்லையாா சார்?” என என்ன முயன்றும் அழுத விழிகளுடன், அவனை பாரத்துத்தான் கேட்டாள்..

“அவுங்க டெம்ப்ரரேரியா தான் வந்திருக்காங்க.. சோ நீங்க உங்க வேலையைப் பாருங்க, அவுங்க உனக்கு அசிஸ்டெண்டா வேலை பார்ப்பாங்க..” என்ற செளந்தரை ட்ராகன் போன்று, வாயால் நெருப்பைக் கக்கி சுட்டுப் பொசுக்கிவிடும் பார்வையை தான் பார்த்தாள் சப்துனிகா..

“பின்னே அவளை அசிஸ்டெண்ட்டுக்கு, அசிஸ்டெண்டாக்கினால், அவளும் என்ன செய்வாள்?..

வேலை ஏவியே பழக்கப்பட்டவளுக்கு, இன்னொருவர் ஏவும் வேலையை தான் செய்ய வேண்டுமா? என்ற எண்ணமே அவளுக்கு அப்படியொரு தலையிரக்கத்தைக் கொடுத்தது..

அந்தக் கடுப்பில் வேண்டா வெறுப்பாக எழுந்து நின்றவளின் முன்பாக ஒரு பைலை நீட்டினான்.

“இந்த பைல்ல எல்லாமே இருக்கு, ரெண்டு பேரும் ரெஃபெர் பண்ணிக்கோங்க, என்னோட செடியூல் எல்லாம்” என்றவன், சப்துனிகாவை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே, “மிஸ்.தாரணி நீங்க பார்த்துக்கோங்க..” என்றவனை சட்டெரிப்பது போல் பார்த்தாள்..

“அம்புட்டு திமிராடா உனக்கு?.. மதுரைக்காரிக்கிட்டேயே வச்சிக்கிறல்ல.. தனியா மாட்டு உனக்கு இருக்குடி மாப்பூ..” என உள்ளுக்குள் கருவிக் கொண்டே, கடுப்புடன், அவன் நீட்டிய பைலை வாங்கிக் கொண்டு செல்ல, அவளின் பின்னால் வேகமாக ஓடினாள் தாரணி..

“அக்கா.. அக்கா..” என்றவளின் அழைப்பில் நடையை சற்று தளர்த்தியவாறே திரும்பிட, சப்துனிகாவின் மேல் மோதி நின்றாள் தாரணி..

அவள் மோதிய வேகத்தில் திட்டித் தீர்க்கலாம் என நினைத்த சப்துனிகாவிற்கு ஏனோ, தாரணி முகத்தைப் பார்த்து திட்டவும் தோன்றவில்லை..

முதல் பார்வையிலேயே அறிந்துக் கொண்டாள் அவள் வெள்ளந்தி என்று…

“சாரிக்கா.. சாரிக்கா.. தெரியாம மோதிட்டேன்..”

“ம்ம்..” என்ற உறுமல் தான் பதிலாக வந்தது..

“அக்கா..” என மறுபடியும் தாரணி, சப்துனிகாவை அழைக்க..

“என்ன?” என்றால் சலிப்பாக,

“அக்கா நம்ம ரூம் எது?..”

“இரு கேட்டு வர்றேன்.. ஏதும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரூம் புக் பண்ணியிருக்காரான்னு” என செளந்தர் அறைக்கு செல்லப் போன சப்துனிகாவின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டாள் தாரணி.

“அக்கா. அக்கா.. ப்ளீஸ் க்கா..” என கைகளைப் பிடித்து கெஞ்சிட,

“என்னை உனக்கு தெரியுமா?” என கேட்டுக் கொண்டே, அவர்களின் அறைக்குள் நுழைந்தாள்.

அவர்கள் இருவருக்கும் ஒன்று போல் சேர், டேபிள் என அனைத்தும் இருந்தது.. அவர்கள் இருக்கும் அறைக்கு நேர் எதிர் அறை தான் செளந்தருடையது..

அங்கிருந்து அவன் அழைத்தால் கூட இவர்களுக்கு கேட்கும் தூரத்தில் தான் இருந்தது..

சப்துனிகா வேண்டா வெறுப்பாக பைலை பார்த்துக் கொண்டேயிருக்க, தாரணியோ, அவளுக்கு நேர் எதிரே இருந்த சேரில் இருந்து செளந்தரை சைட்டடித்துக் கொண்டிருந்தாள்..

அரை மணிநேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்த சப்துனிகாவிற்கு அமரவே பிடிக்கவில்லை.

“இவள் என்ன செய்கிறாள்?” என திரும்பிப் பார்க்க,

தாரணியோ செளந்தரை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவளின் பார்வையை பார்த்தவளுக்கு அப்படியொரு கோபத்தைக் கொடுத்தது..

“ஏய்ய்ய்..” என்ற கர்ஜனைக்குரலில், தாரணி திடுக்கிட்டு எழுந்து நின்றாள்..

அவளின் குரல் கேட்ட அடுத்த நொடியே, செளந்தர் தன் காதினுள், பஞ்சினை எடுத்து வைத்துக் கொண்டான்..

“என்னக்கா?..” என நடுங்கிய குரலில் சற்ற பயத்துடன் கேட்ட தாரணியை, காளியாத்தா போல நாக்கைத் தொங்கப் போட்டு முறைக்காத குறையாக முறைத்துக் கொண்டிருந்தாள் சப்துனிகா..

“அவரை ஏன்டி அப்படி பார்க்கிற?..” என்றவளின் குரலில் அவ்வளவு கோபம்..

“அக்கா ஏன் கத்துறீங்க?.. பயமா இருக்கு” என தாரணியின் குரலில் அவ்வளவு நடுக்கம்..

“பின்னே கத்தாம, உன்னை தூக்கி வச்சிக் கொஞ்சவா?. அவரை ஏன்டி அப்படிப் பார்த்த?” என கேட்டவளுக்கு மனசு ஆறுவேனா என்றது..

“அக்கா கத்தாம கேளுங்க.. நான் பதில் சொல்லுறேன்.” என நடுங்கிய குரலில் தாரணி சொல்லிட,

“ஓஹ்.. உனக்கு கத்தாம கேட்கணுமா?.. சரி சொல்லு.. எதுக்கு அவரை அப்படிப் பார்த்த?”

“நானும்.. அவரை..” என தாரணி ராகமாக இழுக்க

“நீ. அவரை..” என சப்துனிகா, அவள் ராகத்திற்கு ஸ்ருதி சேர்க்க..

“நானும்.. அவுகளை..” என மறுபடியும் இன்னிசையாய் ராகம் இசக்க,

“ஏய்ய்ய்.. ஒழுங்கா சொல்லப் போறீயா? இல்லையா?” என கேட்டவளுக்கு, பொறுமை கொஞ்சம், கொஞ்சமாக பறக்க ஆரம்பித்தது..

“லவ் பண்றோம் க்கா..” என்றதும் அப்படியே அதிர்ந்து விட்டாள் சப்துனிகா..

“லவ்வா?..” என்றவளுக்கு, ஏனோ கண்ணீர் இமையோரம் கசிந்து நின்றது..

“ஆமா க்கா..” என்ற தாரணியினை நம்பாத பார்வையை நோக்கி வீசினாள்..

“உண்மையா சொல்லுறீயா?..” என கேட்கும் போதே, மனம் வலிக்க ஆரம்பித்தது..

அதனால் தான் தன்னை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறானா? என நினைக்கும் போதே உள்ளுக்குள் அதீத வலி..

“ஆமா க்கா, நான் அவரை 5 வருஷமா காதலிக்கிறேன்..” என்றவளை பட்டென திரும்பி பார்த்தாள்..

“என்ன சொன்ன நீ?” என கேட்ட சப்துனிகாவினை உதட்டை பிதுக்கி பார்த்தவள்,

“ஆமா அக்கா, நான் 5 வருஷமா அவரைக் காதலிக்கிறேன்..” என்றவளை தீயாய் முறைத்தாள் சப்துனிகா.

“அப்புறம் எதுக்குடி லவ் பண்றோம்னு சொன்ன?..” என கேட்ட சப்துனிகாவிற்கு அப்போது தான் மூச்சே வந்தது..

“இல்லைக்கா, நாங்க லவ் பண்றதை ரெண்டு பேரும் வெளியே சொல்லலை.. ஆனா அவரும் என்னை லவ் பண்றாருன்னு தான் தோணுது..” என்றவளை என்ன செய்தால் தகும் என்று தான் நினைத்தாள் சப்துனிகா..

“இங்கே பாரு விளையாடாத தாரணி, அவன் உன்னை லவ் பண்றானா?..”

“அக்கா ப்ளீஸ், அவுகளை அவன், இவன்னு சொல்லாதிங்க க்கா?..”

“இங்கே பாரு, நான் யாருன்னு தெரியுமா?”

“மினிஸ்டர் பொண்ணு..”

“ப்ச்ச்ச.. நான் தான்.. செளந்தர்” என்பதற்குள்,

செளந்தர் எங்கேயோ வேகமாக செல்ல, அவனின் பின்னால் சப்துனிகா எழுந்து செல்ல, அவர்களின் பின்னால் தாரணியும் செல்ல ஆரம்பித்தாள்.

“என்னாச்சி செளந்தர்?..” என்றதும் செளந்தரின் ஒரு நிமிடம் நின்று, பின்னால் திரும்பினான்..

அவனின் பார்வையில் தான் உணர்ந்தான், அவள் பேர் சொல்லி அழைத்ததை.. சட்டென்று தன் நாக்கை கடித்து,

“சாரி சார்..” என மன்னிப்புக் கேட்க, தாரணியோ சப்துனிகாவை முறைத்துக் கொண்டு வந்தாள்..

“என்ன நினைச்சிட்டு இருக்காங்க இவுங்க, சாரை பேர் சொல்லி எல்லாம் அழைச்சிக்கிட்டு.. மினிஸ்டர் பொண்ணுன்னா பெரிய இவ ன்னு நினைப்பா?” என உள்ளுக்குள் கருவியபடி, முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு வந்தாள்..

செளந்தர் காரில் முன் பக்கம் ஏறியமர, பின்னால் தாரணியும் சப்துனிகாவும் ஏறியமர்ந்தனர்..

செளந்தரின் முகத்தில் சிறு பதட்டம் இருந்தது..

“எனி ப்ராப்ளம் சார்?..” என்ற சப்துனிகா கேட்டு முடிப்பதற்குள்,

“அக்கா, சாரை டிஸ்டர்ப் பண்ணாதிங்க?..” என்ற தாரணியை திரும்பி ஒற்றை பார்வை தான் பார்த்தாள் சப்துனிகா.. கப்சிப்பென வாயை மூடிக் கொண்டாள்..

அவளின் பார்வை வீச்சு அப்படி..

இருவரையும் திரும்பிப் பார்த்த செளந்தர், “உங்களை எனக்கு அசிஸ்டெண்டா தான் போட்டிருக்கு, என்னை உங்களுக்கு அசிஸ்டெண்டா போடலை..” என சற்று கடுமையான குரலில் சொன்னவனின் போன் அலறியடித்தது..

“நான் ஸ்பாட்டுக்கு வந்துட்டு இருக்கேன்.. நீங்க அந்த சரோண்டிங்க்ல இருக்கிற போலீஸை அனுப்புங்க..” என பதட்டமான குரலில் சொன்னவன்,

“அண்ணா கொஞ்சம் சிக்கீரம் போங்க..” என சாரதியை ஏவிட, வண்டியும் ஜெட் ஸ்பீடில் செல்ல ஆரம்பித்தது..

முழுதாக 45 நிமிடங்கள் கடந்த பின்பு, ஒரு கிராமத்திற்குள் வண்டி சென்றது.. அனைத்துமே ஓலைக்குடிசையினால் ஆன வீடுகள் மட்டுமே இருந்தது.

அங்கு கலவரம் நடந்ததற்கேற்ப, கட்டைகள் கம்புகள், கூர்மையான கத்தி போன்றவை கிடந்தன..

அதைப் பயத்துடன் பார்த்துக் கொண்டே நடந்தாள் தாரணி..

அவன் கார் நின்றதும் தான் தாமதம், ஆங்காங்கே பாதுகாப்பில் நின்றிருந்த போலீஸ் ஓடி வந்தனர்..

“என்னாச்சி கல்யாணத்தை நிறுத்தியாச்சா?..” என கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தவனின் நேர் எதிரில் ஒரு சிறு குழந்தை நின்றிருந்தாள்.

9 வயது மதிக்கத்தக்க பெண் அவள்.. அவளைப் பார்த்ததுமே அனைவருமே அவள் தான் கல்யாணப் பெண் என தெரிந்துக் கொள்ளலாம்.. அதற்கான அலங்காரத்தில் நின்றுக் கொண்டிருந்தாள்..

ஆம், அந்தப் பெண்ணுக்குத் தான் கல்யாணம்.. அதை நிறுத்துவதற்காக போலீஸ் வந்த இடத்தில், போலீஸை தாக்கியிருக்கின்றனர் அவர்கள் கிராமத்தில் உள்ளவர்கள்..

“கம்ப்ளையின்ட் பண்ணது யாரு?.” என்றதும், 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து நின்றார்..

“நான் தான் சார், இந்தப் பொண்ணு ஷிவாங்கி சார்.. என் ஸ்டூடண்ட் தான் சார்.. 4 படிக்கிறா.. திடீர்னு ஒரு வாரம் ஸ்கூல் வரலை.. ஏன்னு விசாரிச்சிப் பார்த்தா, இந்தப் பொண்ணுக்கு கல்யாணம்னு சொன்னாங்க.. நான் இந்தப் பொண்ணோட பேரண்ட்ஸ் கிட்ட பேசினேன்.. என் பேச்சை யாருமே கேட்கலை சார்..

போலீஸ் கம்ப்ளையிண்ட் கொடுக்கப் போறேன்னு தெரிஞ்சு, அதுக்குள்ள இந்தப் பொண்ணுக்கு கல்யாண ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.. வந்த போலீஸ்காரங்களையும் ரொம்ப போர்ஸா அடிச்சிட்டாங்க சார்..

அதான் கலெக்டர் ஆபீஸ்க்கு கால் பண்ண வேண்டியதா போயிடுச்சி..

“ம்ம்” என்றவாறே, அந்த சிறு பெண்ணின் முன்னால் மண்டியிட்டு நின்றான்..

“உன் பேர் என்னம்மா?” என்றவனை சற்று மிரட்சியுடன் பார்த்த குழந்தை, அவளின் ஆசிரியர் அருகே ஒட்டிக் கொண்டு நின்றது..

“ஷிவாங்கி, சார் உனக்கு ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணியிருக்காங்க.. தாங்க்ஸ் சார்..” என்றதும் குழந்தை சற்று பயத்துடனே,

“தாங்க்ஸ் சார்” என்றிட,

அவனுக்கு சிறு குழந்தையின் பயம் நன்றாக புரிந்தது.. தலையை வாஞ்சையுடன் வருடிவிட்டவன், ஷவாங்கியின் பெற்றோரை பார்த்து ஏதோ சொல்ல, அவர்களோ அடி பணிய மறுத்து விட்டனர். அவர்களுக்கு துணையாக அந்தக் கிராமமே உடன் நின்றது..

சில நிமிடங்கள் யோசித்தவன், அங்கிருந்த கிராம நிர்வாகியை அழைத்து, “இந்தக் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காம பண்ணுங்க, தினமும் குடிக்கிற தண்ணீர்ல இருந்து சாப்பிடுற பொருள் வரைக்கும் எதுவும் இந்தக் கிராமத்துக்குள்ள வராம பண்ணுங்க..” என்றவன், கையோடு அந்தக் குழந்தையை பிடித்துக் கொண்டு காரில் ஏற, பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அத்தனை பேரும் திகைத்து நின்றனர்..

“ஷிவாங்கி யாரிடமும் ஒட்டாமல் அவள் ஆசிரியரிடம் மட்டுமே இருந்தாள்.. கார் நேராக கலெக்டரின் குவாட்டர்ஸ்க்கு தான் சென்றது..


 

Madhusha

Well-known member
Wonderland writer
_04bb2ab6-2888-4a47-91a9-ede33436e709.jpg


அத்தியாயம் 18

செளந்தர் ஷிவாங்கியையும், அவளின் ஆசிரியரையும் தன் வீட்டிற்குள் அழைத்து வந்தான்..

“இங்கே எதுக்கு சார்?..” என்ற ஆசிரியரை திரும்பி பார்த்தவன், “பிரச்சினையில இருக்கிற உங்களை அப்படியே நட்டாத்துல விடவா முடியும்?.. அந்தப் பொண்ணுக்கு தகுந்த ஒரு இடத்தைப் பார்த்துட்டு படிக்கிறதுக்கு தேவையான எல்லா ஏற்பாடும் பண்ற வரைக்கும் இங்கே தங்கிக்கோங்க..”

“சாரி சார், எனக்கு பேமிலி இருக்கு?.. நான் ஷிவாங்கியை காப்பத்த தான் நினைச்சேன்.. அவ கூட தங்க முடியாதே..” என சற்று தயங்கியவாறே சொன்னார்..

அவரின் சூழ்நிலையும் செளந்தருக்குப் புரிந்தது..

“சரி நாங்க பார்த்துக்கிறோம்..” என்றவன், ஷிவாங்கியை பார்க்க, அதுவரை அழுத கண்களில் சற்று பயத்தோடு ஒரு வித மிரட்சியும் தெரிந்தது..

“நாங்க பார்த்துக்கிறோம் மா..” என யசோதா ஷிவாங்கியை தன் பக்கமாக இழுத்திட, ஷிவாங்கிக்கோ அழுகை தாங்கவில்லை.. ஆனாலும் ரகளையெல்லாம் பண்ணவில்லை..

அந்த ஆசிரியர் ஷவாங்கியிடம் தான் நாளை வருவதாக சொல்லிவிட்டுத் தான் சென்றார்.. மாலை ஆரம்பித்த அழுகை இரவு 11 மணியை தாண்டிய பின்பு நிற்பதாக தெரியவில்லை..

யசேதாவும் ஏதோதோ சமாதானப்படுத்தினர், ஆனால் எதுவும் செல்லுபடியாகவில்லை..

செளந்தரின் ரூமில் தான் ஷிவாங்கி இருந்தாள். அழுதுக் கொண்டிருந்தவளை பார்க்கவே பாவமாக இருந்தது..

“பாப்பா அழாதிங்க, இந்தாங்க சாக்லேட் சாப்பிடுங்க” என யசோதா ஷிவாங்கியிடம் கெஞ்ச, அதுவோ மேலும் அழ தான் ஆரம்பித்தது..

குழந்தையின் அழுகைச் சத்தமும், இவர்களின் கெஞ்சல் மொழிகளும் கேட்கத்தான் செய்தது..

தாரணி, சப்துனிகா இருவருக்கும் ஒரே வீட்டை அலெர்ட் பண்ணியிருந்தனர்..

ஓட்டு வீட்டில் இரண்டு அறைகள் கொண்ட ரூமில் ஒன்று தாரணிக்காகவும், ஒன்று சப்துனிகாவும் ஒதுக்கப்பட்டிருந்தது..

தாரணிக்கு அந்த வீட்டில் இருப்பதும் ஒன்றும் பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால் சப்துனிகாவிற்கு பெரிய பிரச்சினையே இந்த வீடு தான்..

அறையில் ஒரு பேன் கட்டில், ஒரு மர அலமாரி மட்டுமே இருந்தது. பிறந்ததில் இருந்தே ஏசியிலேயே பிறந்து, வளர்ந்தவள் அவள்.. அவளுக்கு இந்த வெயிலின் தாக்கம் அவளின் உடலில் ஒரு வித அலர்ஜியை தான் கொடுத்தது.

முழுதாக அரை மணி நேரம் கூட இருக்கமுடியாமல் அந்த வீட்டின் முன்னால் ஒரு சேரில் அமர்ந்திருந்தாள் சப்துனிகா.

அவளின் அருகில் ஒரு ஸ்டூலில் அமர்ந்திருந்தாள் தாரணி..

“அக்கா குழந்தை ரொம்ப அழுகுது போல..” என தாரணி சற்று பாவமாக கேட்க, சப்துனிகாவோ கையிலிருந்த போனில் யாரிடமோ சேட் செய்துக் கொண்டிருந்தாள்..

தான் பேசுவதைக் கேட்டாலும் பதில் சொல்லாத சப்துனிகாவின் மேல் கோபம் தான் வந்தது தாரணிக்கு..

“திமிர் பிடிச்சவ..” என வாய்க்குள் முணகியபடி, செளந்தரின் அறை ஜன்னலை தான் பார்த்தாள் தாரணி..

அந்நேரம் செளந்தரும் பால்கனியின் அருகில் வந்து நின்றான்..

நீண்ட நேரம் அமைதியாக தாரணி அமர்ந்திருப்பதை பார்த்த சப்துனிகா, ஓரவிழியால் அவளைப் பார்க்க, தாரணியோ எதிரில் இருந்த ஜன்னலை தான் வெறித்துப் பார்த்தாள்..

“யாரை இப்படி வெறிச்சிப் பார்க்கிற?..” என நினைத்தவள், மேலே தலை தூக்கிப் பார்க்க.. அங்கு நின்றிருந்த செளந்தரை பார்த்ததும் அப்படியொரு கோபம் வந்தது அவளுக்கு..

குழந்தையின் அழுகைச் சத்தமும் கேட்டது. சட்டென்று தன் மொபைலை வைத்தவள், விறுவிறுவென செளந்தரின் வீட்டை நோக்கிச் சென்றாள்..

திடுதிப்பென்று வேகமாக சென்ற சப்துனிகாவின் கையை தாரணிப் பற்றியதும் தான் தாமதம்,

“ஏய்ய்ய்..” என அடிப்பதற்கே கையை ஓங்கி விட்டாள்.

அவளின் கோபத்தை பார்த்தவள், இரண்டெட்டு பின் வைத்தாள்..

“இங்கே பாரு தாரணி.. என்னை விட்டு ஓரடி தள்ளியே இரு..” என அழுத்தமாக, எச்சரிக்கும் குரலில் சொன்னவள், வேகமாக முன்னேறி செல்ல, தாரணிக்கோ சப்துனிகாவின் மேல் அப்படியொரு வன்மம் எழுந்தது..

“மினிஸ்டர் பொண்ணுங்க திமிர்ல ஆடுறல்ல.. நீ போ கலெக்டர் உன்னை நல்லா திட்டுவாரு..” என கறுவிக் கொண்டே தன்னறைக்குச் சென்று விட்டாள்..

குழந்தை விடாமல் அழும் சத்தம் வீட்டிற்குள் நுழைந்த நேரம் நன்றாக கேட்டது..

“என்னதான் பண்ணுறாங்க.. குழந்தை அழுதுகிட்டே இருக்குது அதை சமாதானப்படுத்த கூட தெரியாது..” என தன் மாமியாரை திட்டிக் கொண்டே வேகமாக கதவை தட்டினாள்..

சௌந்தரின் வீட்டு கதவை தட்டி உடைப்பது போல் டப டப டப என்று தட்ட ஆரம்பித்தாள்.. அவள் தட்டிய சத்தத்தில் அத்தனை பேரும் சற்று அரண்டு தான் போயினர் சிவாங்கி உள்பட…

“யாரு.. யாரு?..” என சற்று நடுங்கிய குரலில் யசோதா கேட்க,

“ஹான்.. நீங்க பெத்த தவ புதல்வனோட பொண்டாட்டி.. கதவை திறங்க..”

யசோதா மெல்ல வந்து கதவை திறக்க, அங்கு அவரை தீயாய் முறைத்தாள் சப்துனிகா..

“நீயா.. நீ என்ன இந்த நேரத்துல?..” என கேட்ட மாமியாரை எரிப்பது போல் பார்த்தாள்..

“ஏன் உங்களுக்கு ஒரு குழந்தை எழுத சமாதானப்படுத்த தெரியாது.. இதுக்குன்னு தனியா ஒருத்தர் வருவாங்களா?.. எங்க குழந்தை?..” என சற்று அதட்டலான குரலில் கேட்டவாறே உள்ளே நுழைந்தாள்..

“செளந்தர் ரூம்ல இருக்கா..” என்றதும் வேகமாக கால்கள் மாடியை நோக்கிச் செல்ல, யசோதாவும் அவளுடன் செல்லப் போக, சட்டென்று அவன் கைகளை பிடி்து இழுத்தார் குணசேகரன்..

“அவ மட்டும் போகட்டும்..” என்றவர், யசோதாவை ஹாலிலேயே தங்க வைத்து விட, அவரும் மேலே செல்லாமல் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட்டார்..

சௌந்தரின் அறைக்கு செல்ல அங்கு கட்டிலில் அழுது கொண்டிருந்த சிவாங்கியை சமாதானப்படுத்த முடியாமல் திணறியபடி நின்றுக் கொண்டிருந்தான்..

“இப்படியே எவ்வளவு நேரம் பார்த்துட்டே இருக்கப் போறீங்க?..” என்ற குரலில் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தான் செளந்தர்..

“ஏன் இங்கே வந்தே, உன்னை யாரு உள்ளே விட்டது?..” என எந்த கேள்வியும் அவனிடம் இல்லை.. மெளனம் மட்டுமே பதிலாக இருந்தது.. ஆனால் அவனையும் அறியாமல் மனதோரம் சிறு நிம்மதி..

வந்துவிட்டால் என் வழி தீர்க்க என நினைத்த மனதும் நிம்மதி அடைந்ததை அவன் மட்டுமே அறிவான்..

“சௌந்தர் ஒரு குழந்தையை கூட உங்களுக்கு சமாதானப்படுத்த தெரியாதா?.. எப்படித்தான் நாளைக்கு நம்மளுக்குப் பிறக்கப் பிள்ளையை வளர்க்கப் போறீங்களோ?..” என சலிப்பாக சொல்லிக் கொண்டே ஷிவாங்கியின் அருகில் அமர்ந்தாள்..

ஷிவாங்கி அவளை பார்த்ததுமே தெரிந்துக் கொண்டாள்.. பசி அதிகம் இருப்பதை..

“செளந்தர் ஒரு டம்ளர்ல பால் எடுத்துட்டு வாங்க.. நின்னு பராக்கு பார்த்துக்கிட்டு..” என்றவள், ஷிவாங்கியும் தூக்க, வரமாட்டேன் என அடம் பிடித்தது..

“அட வாடி.. என்னை விட அதிகமா சேட்டை பண்ணிக்கிட்டு..” என்றவள், ஷிவாங்கியை தூக்கிக் கொண்டு ஹாலுக்குள் வர, யசோதா இவள் என்ன செய்கிறாள் என சற்று பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்..

“என்னம்மா பண்ற?..”

“ஹான்.. அழ விட்டு வேடிக்கைப் பார்க்கப் போறேன்..” என சுள்ளென்று எரிந்து, யசோதா இனி வாயை திறப்பார்.. கண்டிப்பாக மாட்டார்..

ஹாலில் இருந்த ஒற்றை சோபாவில் அமர வைத்தாள் ஷிவாங்கியை.. அவளை சிறிதும் கண்டுக் கொள்ளாமல் அங்குமிங்கும் தேட ஆரம்பித்தாள்..

அப்பொழுது தான் கிச்சனில் இருந்து பால் டம்ளருடன் செளந்தர் வெளியே வர, “தாங்க்ஸ் செளந்தர்.. ரொம்ப பசிச்சது..” என அப்படியே மடக் மடக்கென வாங்கிக் குடித்தவளை ஒட்டு மொத்த கூட்டமும் அதிர்ச்சியாக பார்த்தது..

“அப்போ பால் குழந்தைக்கு இல்லையா?..” என்ற செளந்தரை பார்த்து முறைத்தவள்,

“நான் பால் எனக்கு கேட்டேன்.. குழந்தைக்கு பசிச்சா, அவ வாய் திறந்துக் கேட்கப் போறா?.. நான் என்ன அவளுக்கு மவுத் பீஸா..” என்றவள், மறுபடியும் மேலும், கீழும் ஏதோ தேட ஆரம்பித்தாள்..

“என்ன தேடுற ம்மா?..” என அடக்க முடியாமல் யசோதா கேட்டு விட,

“டிவி ரிமோட் அத்தை.. இந்த வீட்டுல தான் மக்க, மனுசங்க யாரும் பேச மாட்டீங்களே, டிவியாவது பார்க்கலாம்னு பார்த்தேன்..” என்றவள், வேகமாக டிவி ரிமோட்டை தேடினாள்..

அவள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்த ஷிவாங்கிக்கு, அழுகை மறைந்து சப்துனிகாவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..

“இந்த டிவி ரிமோட் எல்லாம் எங்க தான் வைக்கிறாங்களோ?..” என சலிப்பாக சொல்லிக் கொண்டே அங்குமிங்கும் தேவடுதை போல் நடிக்க ஆரம்பித்தாள்

சௌந்தருக்கு அவள் செய்கை அப்படியொரு எரிச்சலை தான் கொடுத்தது..

டிவிக்கு முன்பாக தான் டிவி ரிமோட் இருந்தது.. அந்த வீட்டில் அதிகமாக டிவி யாரும் பார்க்க மாட்டார்கள் யசோதா பழைய படம் ஏதாவது ஒன்றை போட்டு பார்ப்பார்.. குணசேகரன் நியூஸ் பேப்பர்.. சௌந்தர் அதற்கு கூட டிவி அருகில் போக மாட்டான்..

“ஏய் அங்க தானே..” என சௌந்தர் சொல்வதற்குள்,

“டிவி ரிமோட் இங்கதான் இருக்கு” என்றது ஒரு மழலை குரல்..

அதுவரை அழுது கொண்டிருந்த சிவாங்கி தான் பேசினாள்..

அவள் வாய் திறந்து பேசவும் அழுகை சற்று மட்டும் இருந்தது..

“ஓஹ்.. இங்கே தான் இருக்கா? கண்ணு தெரியல போல..” என அசால்ட்டாக தோளை குலுக்கிக் கொண்டே டிவியின் முன்னாள் இருந்த சோபாவில் அமர்ந்தாள்..

அவள் டிவி முன்பாக அமரவும், செளந்தர் திரும்பி கடிகாரத்தைப் பார்த்தான்.. 11.30 மணி..

நள்ளிரவு வேலையில் டிவி போட்டு பார்ப்பது இவளாகத்தான் இருக்கும் என நினைத்தவன், “என்ன பண்ற இந்த டைம்ல?..” என சௌந்தர் சற்று அதட்டலான குரலில் கேட்டான்..

“டிவி பார்க்கப் போறேன்.. நீங்க யாரும் பேச மாட்டீங்க, எனக்கு போர் அடிக்குமே?..” என்றவள், மெனுவிற்கு சென்று கிட்ஸ் செக்சனை க்ளிக் பண்ணினாள்..

“சப்துனிகா என்ன பண்ணிட்டு இருக்கேன்னு புரியுதா?.. அன்டைம்ல யாரவது டிவி பார்ப்பாங்களா?.

“நான் பார்ப்பேன்..” என்றவள், செளந்தரை பார்க்க, அங்கிருந்த தூணில் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான்..

“எப்போ பார்த்தாலும், பொண்டாட்டியை விட்டுட்டு, தூணை கட்டிப்பிடிச்சிட்டு நிற்கிறது.. என்னமோ அந்த தூணு தான் பொண்டாட்டி மாதிரி” என முணுமுணுக்க, அது தப்பாமல் அங்கிருந்த எல்லார் காதிலும் விழுந்தது..

அவள் சொல்லிய வார்த்தையில் யசோதாவிற்கு சின்ன சிரிப்பு வந்துவிட, க்ளுக்கென்று ஒரு சிரிப்பு சிரித்தார்..

“நீங்க இன்னும் உங்க ரூம்க்கு போகலையா?” என ஒரு பார்வை பார்த்தாள் சப்துனிகா…

“ஏங்க, வாங்க நம்ம ரூம்க்கு போயிடலாம்..” என குணசேகரனையும் சேர்த்து அழைத்துக் கொண்டு யசோதா தன்னறைக்கு சென்று விட்டார்..

டிவியில் சின்சான் ஓடிக்கொண்டிருந்தது.. கிட்டத்தட்ட அரைமணி நேரம் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருந்தது..

செளந்தருக்கு சலிப்போடு கலந்த எரிச்சல் உருவானது..

“இவ என்ன சின்னப் புள்ளையா? பொம்மை படம் வச்சிப் பார்த்துட்டு இருக்கா?..” என மனதுக்குள் நினைத்துக் கொண்டே சப்துனிகாவிற்கு நேர் எதிரில் ஒரு சேர் ஒன்றில் அமர்ந்தவன், அவனையும் மீறியும் தலையை சாய்த்து உறங்க ஆரம்பித்தான்..

அவன் உறங்குவதை ஓரக்கண்ணால் பார்த்தாள் சப்துனிகா..

“நீங்க அந்த அண்ணாவை தானே பார்க்குறீங்க?.. என்கிட்ட ரிமோட் கொடுங்க..” என்றாள் ஷிவாங்கி..

செளந்தரின் மேல் கண்ணெடுக்காமலே, “முடியாது” என்றாள்..

“ப்ச்ச்.. எனக்கு ரிமோட் கொடுங்க.. நான் பொம்மை சேனல் பார்க்கணும்..”

“பொம்மை சேனல் தானே ஓடுது, பாரு..” என்றவள் கடைக்கண்ணால், அவனவளை ரசித்துக் கொண்டேயிருந்தாள்..

“எனக்கு சின்சான் பிடிக்காது.. டோரிமோன் தான் பிடிக்கும்” என முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு சொன்னாள் ஷிவாங்கி..

“எனக்கு டோரிமோன் பிடிக்காது, சின்சான் தான் பிடிக்கும்..” என ரிமோட்டை தன் கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டாள்..

“எனக்கு டோரிமோன் தான் வேணும்..”

“எனக்கு சின்சான் தான் வேணும்..”

“எனக்கு டோரிமோன் தான் வேணுணுணும்ம்ம்ம்ம்..” என கத்திய ஷிவாங்கியின் வாயை சட்டென்று இறுக்கமாக மூடினாள் சப்துனிகா..

 

Madhusha

Well-known member
Wonderland writer
_327a0fe4-107c-4977-95ed-e5d645912853.jpg


அத்தியாயம் 19

“கத்தாதே.. கத்தாதே.. ப்ளீஸ். இந்தா ரிமோட் எது வேணும்னாலும்.. வச்சிக்கோ..” என அவள் கைகளில் ரிமோட்டைக் கொடுத்து விட்டு திரும்ப, அங்கு இருவரையும் கைகளை கட்டியபடி நின்று பார்த்துக் கொண்டிருந்தான் செளந்தர்..

“இல்லை.. அவ தெரியாம சத்தம் போட்டுட்டா..” என சொல்லும் போதே, அவளின் விழிகளில் அவளையும் அறியாமல் ஒரு வித தவிப்பு தெரிந்தது..

இது அவனுக்கான தவிப்பு என்பதை அவனும் அறிந்துக் கொண்டான்..

தலையை மெல்ல சாய்த்து ஷிவாங்கியை பார்க்க, அவளோ டோரிமோனை மிகவும் சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளின் அழுகை எங்கே போனதென்றே தெரியவில்லை..

அவனைப் போலவே அவளும், தலையை சாய்த்துப் பார்க்க, இருவரின் தலைகளும் மிக அருகில் இருந்தது..

“ஷிவாங்கி அழலை..” என காதோடு உரசியவாறே சென்ற, மென் பட்டு இதழ்களின் ஸ்பரீசத்தில் சட்டென்று அவளை விட்டு இரண்டெட்டு பின் வைத்தான் செளந்தர்..

“அவளை ஏதாவது சாப்பிட வைக்க முடியுமா?..”

“ம்ம், கிச்சன்ல ஏதாவது எடுத்துட்டு வாங்க..” என்ற சப்துனிகாவை பார்த்து, திருதிருவென விழித்தான் செளந்தர்..

அவன் என்று கிச்சனுக்குள் சென்றிருக்கிறான், இன்று செல்ல..

“அது எனக்கு கிச்சன்ல என்ன இருக்கும்னு கூட தெரியாது..” என்றவனை பார்த்து வெளிப்படையாக தலையிலடித்துக் கொண்டாள்..

“ஒருத்தனுக்கு கிச்சன்ல சமைச்சதை எடுத்துட்டு வரவுமா தெரியாது?.. வாங்க..” என செளந்தரின் கையைப் பிடித்துக் கொண்டே கிச்சனுக்குள் நுழைந்தாள்..

ஒவ்வொரு ஹாட்பாக்ஸையும் திறந்துப் பார்க்க, சப்பாத்தியும் அதற்கு தொட்டுக் கொள்ள குருமாவும் இருந்தது..

அதில் மூன்று சப்பாத்திக்களை எடுத்து வைத்தாள்..

“குழந்தை இவ்வளவு சாப்பிடுமா?..” என சற்று பதட்டமாக கேட்ட செளந்தரை திரும்பி பார்த்தவள்,

“அதெல்லாம் பசியில வாடியிருக்கிற குழந்தைங்க சாப்பிடும்.. சும்மா சாப்பிடுறதுக்கெல்லாம் கண்ணு வச்சிக்கிட்டு..” என சிடுசிடுத்துக் கொண்டே சப்பாத்தி, குருமாவை தட்டில் வைத்து எடுத்து வந்தாள்..

ஷிவாங்கியோ டோரிமோனை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவளின் அருகில் சென்று அமர்ந்து, அவளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தாள்..

ஷிவாங்கியும் ஆ வென்று வாயை பிளந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, இருவரையும் தான் சற்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் செளந்தர்..

இவ்வளவு நேரம் அழுகையை நிறுத்துவேனா என அடம் பிடித்த ஷிவாங்கியை அரை மணி நேரத்திற்குள், ஆளையே அமைதியாக்கி விட்டாளே என நினைக்கும் வேளையில் தட்டை அவன் புறம் நீட்டினாள் சப்துனிகா..

எச்சில் தட்டை கண்டதும் முகம் சுழிக்க, “அய்யே.. ரொம்பத்தான்” என்றவள், வேண்டுமென்று அவன் தோளோடு உரசியபடி எழுந்துச் செல்ல, அவனோ அப்படியே தான் நின்றுக் கொண்டிருந்தாள்..

கிச்சன் வரை சென்றவள், மெல்ல அவனை திரும்பிப் பார்க்க.. அவனோ அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்..

அவன் கண்களில் இதுவரை காணாத உணர்வு அது.. இதழ்கள் மெளனமாக இருந்தாலும், அதில் ஒரு மென் சிரிப்பு ஒளிந்திருந்தது..

“இன்னொரு தடவை உரசுவோம், ஆள் என்ன பண்ணுதுன்னு பார்ப்போம்..” என்றவள், கை தட்டி கழுவி விட்டு மறுபடியும் செளந்தரை உரசிக் கொண்டு சென்று சோபாவில் அமர்ந்தாள்..

கடைக்கண்ணால் செளந்தரை பார்க்க, அவனோ எந்த வித உணர்வுகளையும் முகத்தில் கொண்டு வராமல் தான் இருந்தான்..

“ப்ச்ச்.. சரியான சிட்டி ரோபோ.. சிரிக்கவே சிரிக்காதா?..” என உள்ளுக்குள் புலம்பியபடி அமரந்திருந்தவளின் தோளில் வந்து சாய்ந்தாள் ஷிவாங்கி..

“என்னாச்சி டா” என்றவளின் மடியில் மெல்ல தலையை சாய்த்தாள்.. அவள் சரிவாக கிடந்த குழந்தையை நன்றாக கால் நீட்டி படுக்க வைத்தாள்

மூன்று பேர் அமரக்கூடிய சோபாவில், ஒரு புறம் சப்துனிகா அமர்ந்திருக்க, அவள் மடியில் ஷிவானி அரைத்தூக்கத்தில் கிடந்தாள்.. அவர்களுக்கு நேர் எதிரில் செளந்தர் அமர்ந்திருந்தான் இருவரையும் பார்த்தபடி..

மெளனங்கள் என்ன அவனுக்குப் புதிதா?.. அமைதியாகவே சில நிமிடம் கழிந்தது.

ஷிவாங்கி உறங்கியதும், அவளை தூக்கிக் கொண்டு செளந்தர் படுக்கையறைக்குச் செல்ல, அவனின் பின்னாடியே சென்றாள் சப்துனிகா..

ஷிவாங்கியை சற்று மிருதுவாக கிடத்தியவன், இரு பக்கமும் அணைத்தாற் போன்று தலையணையை வைக்க, அவன் செய்கையை தான் கவனித்துக் கொண்டேயிருந்தாள்..

மெல்லிய மனம் கொண்ட ஆண்மகன் அல்லவா.. அவனின் செய்கை ஒவ்வொன்றும் அவளுக்கு ஒரு விதமான புது உணர்வைக் கொடுத்தது..

அவளையும் அறியாமல் அவனை ரசிக்க ஆரம்பித்தாள்..

தன்னை மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அவள் புறம் திரும்பினான் செளந்தர்.

‘இன்னும் நீ போகலையா?’ என கண்களாலேயே கேட்ட செய்தியில், நீண்ட பெருமூச்சொன்றை தான் விட்டாள்..

“நான் போறேன்..” என்றவளுக்கு, அங்கிருந்து செல்ல துளிக்கூட மனமில்லை..

“ம்ம்..” என்ற ஒற்றை வார்த்தை தான் உதிர்த்தான்..

“நிஜமா, நான் போறேன்..”

“ம்ம்..” என்றவன், அங்கிருந்த ஏசியின் ஆன் பண்ணிட,

பிறந்ததில் இருந்தே சொகுசுப்பூனையாய் வளர்ந்தவளுக்கு, ஏசியின் குளுமை வேறு.. ‘இங்கேயே டேரா போட்டு விடு’ என சொல்லாமல் சொன்னது..

“நான் போகட்டுமா?..” என்றவளை அழுத்தமாக பார்த்தான்..

‘சப்துக்குட்டி ஓடிடு.. இப்பவே நம்மளை முறைக்குது..’ என்றவளின் மனசாட்சி குரல் கொடுக்க,

“போறேன்.. ரொம்ப முறைக்க வேண்டாம்..” என்றவள், வீட்டை விட்டு வேகமாக வெளியேறினாள்..

கட்டின பொண்டாட்டி போகட்டுமா, போகட்டுமான்னு கேட்குறாளே.. ‘போகாதடி.. இங்கேயே இருடின்னு’ சொல்ல மனசு வருதா, அந்த மடப்பயலுக்கு..

‘போய்த் தொலை’ங்கிற மாதிரி ஒரு பார்வை..

அச்சோ சப்துக்குட்டி, உன் நிலைமை இப்படி நடுஜாமத்துல புலம்புற மாதிரி ஆகிட்டே.. என வானத்தை புலம்பிக் கொண்டே நடந்தவள், கீழே இருந்த செங்கலை கவனிக்காமல், இடித்துக் கீழே விழப்போனவளை அழுத்தமாக தாங்கிப் பிடித்தது ஒரு கரம்..

‘எப்படியும் குப்புற விழுந்து மண்ணைக் கவ்வப் போகிறோம்’ என நினைத்த சப்துனிகாவிற்கு, இடுப்பில் விழுந்த கரமும், அதன் மென்மையுமே சொன்னது.. தன்னை அணைத்திருப்பது யார் என்று..

முகமெல்லாம் புன்னகையில் மலர, மெல்ல விழிகளை உயர்த்திப் பார்க்க. அவளின் எண்ணத்தின் நாயகன் தான் அவளை அணைத்துப் பிடித்திருந்தது..

‘உனக்கொன்றும் ஆகலையே’ என கண்ணால் கேட்ட செய்தியை முதன் முதலாக, அவன் விழிகளில் படித்தாள்..

“எனக்கொன்னும் இல்லை.” என்றவளின் காலை குனிந்துப் பார்த்தான்.. சற்று தடிமனான ஸ்லீப்பர் போட்டிருந்ததால், கால் விரலில் எந்த அடியும் படவில்லை..

அவன் காலை குனிந்துப் பார்த்தவளுக்கு, அவன் மனதில் தனக்காக என்று ஓரிடம் இருப்பதை அறிந்து சந்தோஷத்தில் வானத்தைப் பறக்க போனவளின், காலை பிடித்து இழுத்து தொப்பென்று கீழே போட்டது, செளந்தர் அடுத்துக் கேட்ட கேள்வி..

“ஹான்ன்.. என்ன கேட்டீங்க?..” என்றவளுக்கு சத்தியமாக முன்னதாக கேட்ட கேள்வி ஒன்றும் விளங்கவில்லை்..

“நீ எதுக்கு இங்கே வந்திருக்கேன்னு கேட்டேன்?..” என்றவனை, அதுவரை பார்த்த காதல் பார்வை போய், கோபப் பார்வையில் முறைத்தாள்..

“ஏன் வந்தேன்னா, எதுக்கோ வந்தேன்?.. உங்களுக்கு என்ன பிரச்சினை?..” என சிடுசிடுக்க,

“நீ எதுக்கு இங்கே வந்தாலும், அது நடக்காது.. நீ உன் ஊருக்குப் போ..” என்றவனை தீயாய் முறைத்தவள்,

“ஏன் சூரத்தை உங்களுக்கு கவர்மெண்ட் பட்டா போட்டுக் கொடுத்துட்டாங்களா என்ன?.. நான் இருக்கணுமா? வேண்டாமான்னு நீங்க சொல்ல வேண்டாம்..”

“நீ இங்கே எங்கே வேணும்னாலும் இரு.. ஆனா நாளையில இருந்து கலெக்டர் ஆபீஸ்க்கு வராதே..” என்றவனை, கைகளை கட்டியபடி மேலிருந்து கீழ்வரை ஆராய்ச்சியாக ஒரு பார்வை பார்த்தாள்..

“என்னஹ்?..”

“இல்லை போ.. போ ன்னு விரட்டுறீங்களே?.. நான் போக முடியாதுன்னா என்ன பண்ணுவீங்க?..”

“இங்கே பாரு சப்துனிகா, நீ இங்கே எதுக்கு வந்திருக்கேன்னு புரியாத அளவுக்கு நான் குழந்தை இல்லை.. ஆறு மாசம் கழிச்சுத்தான் டைவர்ஸ் அப்ளை பண்ண முடியும்.. நம்மளுக்கு கல்யாணம் ஆகி 1 மாசம் தான் ஆகுது.. சோ டைவர்ஸ் அப்ளை பண்ற வரைக்கும் நாம பிரிஞ்சு இருப்போம்..” என்றவன் வந்த வழியே நடக்க,

“ஓஹோ, அப்போ சாருக்கு நான் வேண்டாம் அப்படித்தானே?..” என அவனின் முதுகுக்கப் பின்னால் இருந்து கத்தினாள்..

சட்டென்று அங்கேயே நின்று, மெல்ல அவளை நோக்கித் திரும்பியவன், “ஆமா எனக்கு நீ வேண்டாம்..” என சொல்லி முடித்தவனை அழுத்தமாக பார்த்துக் கொண்டே அவனுக்கு மிக நெருக்கத்தில் வந்து நின்றாள்..

“நான் உங்களுக்கு வேண்டாம்..” என்றவள், அவனை உரசிவிடும் தூரத்தில் வந்து நின்றாள்..

“ஆ..ஆமா.. ந்நீ.. எனக்கு வேண்டாம்..” என்றவனின் நா சற்று குழற ஆரம்பித்தது..

“நான் உங்களுக்கு வேண்டாம்..” என்றவளின் விழிகளோ, அவனை அடியோடு சாய்க்க நேரம் பார்த்தது..

“வேண்டாம்..” என்றவனை முதுகோடு சேர்த்து அணைத்து கட்டிப்பிடித்தவளின் விழிகள், அவனை கண்களாலேயே சிறை தான் வைத்தது..

‘வ்விடு..’ என அவளை தள்ளிவிட அவனுக்கு ஒரு நொடி போதும்.. ஆனால் அதைச் செய்ய விடாமல், அவனின் உடலும், மனமும் அவனைக் கட்டிப் போட்டது..

“நான் வேண்டாம்ல,” என்றவளின் மோகப் பார்வை, அவனின் சிவந்த இதழ்களில் அழுத்தமாக பதிந்தது..

செளந்தருக்கு எந்த வித கெட்டப் பழக்கமும் இல்லை என்பதற்கு சான்றே அவனின் சிவந்த இதழ்கள் தான்..

“ஆஆ..மாஆஆ” என்றவனின் குரல் தொய்ந்து சற்று கரகரப்பானது..

“நான் வேண்டாம்னா, நான் கொடுத்த முத்தமும் வேண்டாம்ல.. திருப்பிக் கொடுங்க..” என்றவளின் விழிகளை பார்த்துக் கொண்டேயிருந்தவனின் விழிகள், அவளின் கண்களில் ஈர்ப்பு விசையில் ஒரு நிமிடம் தொலைந்து.. மெல்ல அவன் கைகள் அவளின் தாடையைப் பற்றியது..

மென்மையான கரம் அவனுடையது.. மிருதுவான அவன் கரங்களின் சூட்டை அவளின் கன்னங்கள் உணர்ந்தது..

அவளை முத்தமிட ஏதுவாக, தன்னை நோக்கி உயர்த்தியவனின் பார்வையோ, அவளின் செம்பவள இதழ்களை நோக்கிக் குனிந்தது..

அவன் முத்தமிடுவான் என எதிர்பார்க்காதவளுக்கு அவன் நெருக்கம், உடலில் சிறு நெருக்கத்தைக் கொடுத்தது..

அவனின் நெருக்கத்தில் பெண்ணவளின் விழிகள் தன்னால் மூடிக் கொண்டது..

அவளின் வெட்கத்தினை ரசித்தவாறே, துடித்துக் கொண்டிருந்த அவளின் இதழ்களோடு, தன் இதழ்களை உறவாட விட்டான்..

முத்தம்.. பித்தம் கொள்ள செய்யுமா?.. இருவரையும் அந்த நிலைக்குத் தான் தள்ளியது அவனின் முத்தம்.

மென்மையும் அல்லாது, வன்மையும் அல்லாது, ஆழமான முத்தமது..

ரசிக்க தெரிந்த ரசிகன் அவன்.. அவளின் இதழ்களை ரசித்து, மென்மையான கவிபாடிக் கொண்டிருந்தான்.

அவன் கைகளோ, அவளின் இடையோடு உறவாட, அவள் கைகளோ பற்றுக்கோலாக அவன் சிகையை அழுத்தமாக பற்றியது..

ஒருவரின் எச்சில், இன்னொருவருக்கு பரிமாற.. எச்சிலும் அமிர்தமானது அவன் கொடுத்து மென் முத்தத்தில்..

தூரத்தில் ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டதும், அதுவரை இருந்த மோக வலை அறுந்து, சட்டென்று இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து நின்றனர்..

சப்துனிகாவிற்கு தேகத்தில் ஒரு வித நடுக்கம்..

செளந்தருக்கு கேட்கவே வேண்டாம்.. அவனுக்குள் ஒரு வித குழப்பம்..

தானா இது? அவன் மனசாட்சியே அவனைக் கேள்வி கேட்டது..

“ம்க்கும்..” என தொண்டையைச் செறுமியபடி ஏதோ சொல்ல வந்த செளந்தரின் வாயை தன் கரம் கொண்டு மூடினாள்..

“ப்ளீஸ், எதுவும் சொல்லாதே..” என கண்களினால் இறைஞ்சினாள்.. அவளுக்கு இத்தகைய மோன நிலையை கலைக்க மனமில்லை.


அவளின் கெஞ்சல் மொழியில், மெளனமாக செளந்தர் வீட்டிற்கு செல்ல, சப்துனிகாவும் தன் குவாட்டர்ஸை நோக்கி நடந்தாள்..


இருவரையும் ஒரு ஜோடி கண்கள் வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததை அறியவில்லை..
 
Last edited:

Madhusha

Well-known member
Wonderland writer
_7528c665-afc1-44c8-9021-8409052c974f.jpg









அத்தியாயம் 20

தன் காரில் ஸ்டீரிங் வீலில் அழுத்தமாக குத்தினான் ஒருவன்.. அவன் தான் அந்த வன்மம் நிறைந்த கண்களுக்கு சொந்தக்காரன்..

“டேய்ய்ய்.. ராகுல் என்ன டா பண்ற?..” என்ற வருண், ராகுலின் கையைப் பிடிக்க சட்டென்று அதை உதறித் தள்ளினான்.. ஆத்திரம் தீர மறுக்க, மறுபடியும் ஸ்டைரிங் வீலில் ஓங்கி குத்தினான்..

“டேய்ய்ய. உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?..”

“ஆமாஆஆ.. எனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு.. சப்துனிகா மேல பைத்தியம்.. அவ என் பொண்டாட்டி டா, இன்னொருத்தனை கிஸ் பண்ணிட்டு நிக்கிறா..” என்ற ராகுலை அதிர்ச்சியாக பார்த்தான் வருண்..

“ராகுல்.. நீ தப்பு பண்ற?.. அவ உனக்கானவ இல்லை.. நீ காதலிக்க மட்டும்தான் செஞ்ச, இப்போ அவ கலெக்டரோட பொண்டாட்டி.. ஞாபகத்துல வச்சிக்கோ..” என்ற நண்பனின் கழுத்தை அப்படியே நெறித்துப் பிடித்திருந்தான்..

“யாரை யார் கூட சேர்த்து வச்சிப் பேசுற?.. அவ என் பொண்டாட்டி தான்.. சப்துக்குட்டி என்னோட செல்லம்.. அவளை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. இரண்டு மாசம் பாரீன் மீட்டிங்க்காக போயிருந்தேன்.. அதுக்குள்ள எவனுக்கோ கழுத்தை நீட்டியிருக்கா.. ” என்றவனின் கண்களில் தெரிந்த ரெளத்திரத்தில், பேரதிர்ச்சியில் உறைந்து நின்றான் வருண்..

“ராகுல். என்ன உளறிட்டு இருக்க?.” என்றவனுக்கு, எப்படியாவது இவனை இங்கிருந்து ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான்..

“யாரு நான் உளறுறேனா?.. நான் எவ்வளவு நாளா அவளைக் காதலிக்கிறேன்னு தெரியும்ல டா உனக்கு?.. அப்புறம் எப்படி டா அவ இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணுவா.. இல்லை கண்டிப்பா என் செல்லம், என்னை மறந்து இன்னொருத்தனை கல்யாணம் பண்ணியிருக்க மாட்டா.. அவ அப்பன் தான் அவளைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணி வச்சிருப்பான்.. பெரிய *டுங்கின்னு நினைப்பு அவனுக்கு” என்றவன் சபரீயை கெட்ட வார்த்தையால் அர்ச்சிக்க,,

“டேய்ய்ய்.. டேய்ய்ய.. வாயை மூடுறா டா..”

“நான் ஏன்டா வாயை மூடணும்.. சப்துனிகா எனக்கு வேணும்.” என்றவன் தன் வாயினுள், காரில் வைத்திருந்த சரக்கை எடுத்து ராவாக ஊற்றிட, சப்துனிகா வேண்டும் என்ற வெறியே அவனுக்குள் எழுந்தது..

கார் டேஷ்போர்டில் இருந்த போன் ஒன்று அலறியது.

“ஹலோ” என்றது என்னவோ வருண் தான்..

“எங்கே இருக்கீங்க வருண்?.. எதுக்கு இவ்வளவு நேரம்?.. அவனை எங்கே?.” என சற்று பதட்டமான குரல் கேட்டது.. ராகுலின் தாய் மோனிஷா தான்..

வருணின் கைகளில் இருந்த போனை வேகமாக பிடுங்கிய ராகுல், “மாம், உங்களுக்கு சப்துவுக்கு மேரேஜ் ஆனது தெரியும்ல.. அப்புறம் ஏன் எங்கிட்ட மறைச்சீங்க?..” என்றவனின் கண்களில் கண்ணீர்..

“ப்ளீஸ் புரிஞ்சிக்கோ ராகுல், அவளோட அப்பாக்கிட்ட பொண்ணுக் கேட்டதுக்கு, ‘என் பொண்ணுக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்லைன்னு தான்டா சொன்னாரு’..”

“பொய் சொல்லாதிங்க ம்மா, அப்புறம் எப்படி அவளுக்குக் கல்யாணம் நடந்தது?” என தாயிடமே எரிந்து விழுந்தான்..

“ப்ச்ச்.. அதான் எனக்கும் தெரியலை டா..” என்ற தாய் மட்டும் நேரில் இருந்தால், அப்படியே கழுத்தை நெறித்திருப்பான்..

“எப்படி டா போயும், போயும் என்னை வேண்டாம்னு சொல்லிட்டு, ஒரு பிச்சைக்காரனுக்குக் கட்டிக் கொடுத்தாங்க..” என்றவனை அதிர்ச்சியாக பார்த்தான் வருண்..

“டேய்ய்ய. அவர் கலெக்டர் டா..”

“அவன் கலெக்டர், அப்போ நான் யாரு பிச்சைக்காரனா?..”

“ராகுல் புரிஞ்சு பேசு..”

“நான் என்னவோ வக்கத்தவன் மாதிரி பேசுற.. நான் ராகுல்.. ராகுல் திவான்.. R.D.குரூப்ஸ் ஆஃப் கம்பெனியோட ஒரே வாரிசு.. தெரியும்ல” என கர்ஜித்தவனின் குரலில் அவ்வளவு ஆத்திரம் வெளிப்பட்டது..

“ராகுல் சொன்னா புரிஞ்சிக்கோ.. நீ யாருன்னே சப்துனிகாவுக்கு தெரியாது டா.. நீதான் அவ பின்னாடி போன?.. அவ உன் பின்னாடி வரலை..”

“இனி என் பின்னாடி வருவா, என் பின்னாடி மட்டும்தான் வருவா” என்றவன், தன் காரை எடுத்துக் கொண்டு விருட்டென்று கிளம்பி விட, நடுரோட்டில் நின்றுக் கொண்டிருந்தது என்னவோ வருண் தான்..

“ப்ச்ச். என்னென்ன பண்ணப் போறான்னு தெரியலையே?..” என புலம்பிக் கொண்டே, வேறொரு வாடகைக் காரை எடுத்துக் கொண்டு அவர்கள் தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தான்..

சப்துனிகாவிற்கோ கால்கள் தரையில் இல்லை.. துள்ளிக் குதித்து ஆட்டம் போட்டபடியே நடந்து வந்தாள்..

முத்தம் தந்த கிறக்கத்தில், தன்னுடைய குவாட்டர்ஸூக்கு துள்ளிக் குதித்தபடி நுழைந்தாள் சப்துனிகா.. உள்ளே நுழைந்தவள் பக்கவாட்டாக இருந்த தாரணியின் அறையைப் பாரக்க, அவளோ நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்..

“ஜஸ்ட் மிஸ், இன்னைக்கு நல்லா அடி வாங்கியிருப்பா.. ஏதோ நல்ல நேரம் போல தப்பிச்சிட்டா..” என்றபடி படுக்கையில் விழுந்தாள்..

சப்துனிகாவிற்கோ அவன் முத்தமிட்ட ஞாபகமே வியாபித்திருக்க, இதழ்களில் மென் சிரிப்புடன் தலையணையில் முகம் புதைத்து படுத்துக் கொண்டாள்..

நீண்ட நாட்களுக்குப் பின் நன்றாக உறங்கினாள்..

நாளை விடியல் அவளுக்கான சோதனை காலம் ஆரம்பமாகும் என்பதை அறியவில்லை..

அதே நேரம் தன்னறையில் உறக்கம் வராமல் பால்கனியில் நின்றுக் கொண்டிருந்தான் செளந்தர்.

அவளின் இதழ்களில் இன்னுமே சப்துனிகாவின் இதழ்கள் உறவாடிக் கொண்டிருப்பது போன்ற பிரம்மை.

இதழ்களை தன் விரல்களால் வருடி விட, இன்னும் இன்னும் அவள் ஸ்பரீசம் வேண்டும் என தேகம் தவிக்க, அதனை தன் மனம் கொண்டு அடக்க நினைத்தான்..

அவ்வளவு எளிதில் அடங்கிவிடுமா? அவன் தேகம்.. தவித்துக் கொண்டிருந்தது..

பாத்ரூமிற்குள் சென்றவன், முகத்தை நன்றாக நீரினால் கழுவினான். தன்னெதிரில் இருந்த கண்ணாடியை உற்றுப் பார்த்தவனின் விழிகளில் அவனையும் மீறி கண்ணீர் சுரந்தது..

கண்களில் அவ்வளவு வலி.. தன் மனைவியை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கா?.. தன்னையே சுற்றி வருபவளை வலிக்க, வலிக்க மறுக்கிறோமோ என்ற எண்ணம் அவனையே வதைக்க ஆரம்பித்தது..

என் உணர்வுகள் மரத்துப் போய் விட்டதா?.. அவ்வளவு கல்லா நான்?. அவள் வேண்டும் என தேகம் துடித்தாலும், மனமோ அவளின் அருகில் செல்லவே தயங்கி நிற்கிறதே, என நினைத்து ஆத்திரப்பட்டான்.. கண்களுக்குள் ஏதோதோ நினைவுகள் தோன்றிட, சட்டென்று அவனின் கடந்த காலம் கண் முன்னே விரிந்தது..

“ஆஆஆஆஆ.. ஏன் இப்படி பண்ண?.. ஏன்ன்ன்ன்.. என் உணர்வுகளை இப்படி சிதைச்சிட்டீயே?..” என நினைத்தவனின் கழுத்து நரம்புகள் புடைக்க, சட்டென்று எதிரில் இருந்த கண்ணாடியில், தன் உள்ளங்கையால் ஓங்கி அடித்திருந்தான்..

அவன் அடித்த வேகத்தில் கண்ணாடி சில்லு சில்லாய் உடைந்து, அவன் உள்ளங்கை ரத்தம் பீறிட்டு வர, அதை துடைக்க மனமில்லாமல் அப்படியே உறைந்து போன நிலையில் நின்றுக் கொண்டிருந்தான்..

தன் கைகளில் வழியும் ரத்தம் அவனது கவனத்தில் இல்லை.. தன் உள்ளங்கையில் ஏற்பட்டிருந்த காயத்தின் ரணம் அவனுக்கு மரத்துப் போயிருந்தது..

அடுத்த நாள் காலை ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான விடியலைக் கொடுத்தது..

சரியாக ஏழு மணிக்கு எழுந்த தாரணி, குளித்து முடித்து விட்டு வெளியே வர, அப்பொழுதும் சப்துனிகா எழுந்தாள் இல்லை..

அவள் அறையில் போன் அலறும் சத்தம் கேட்டுக் கொண்டு தான் இருந்தது..

“என்னதிது?.. போன் அடிச்சிட்டே இருக்க?.. என்ன பண்றாங்க?..” என நினைத்தபடி, கதவை மெல்ல விலக்கிப் பார்க்க.. சப்துனிகாவோ கும்பகர்ணனுக்கே டஃப் கொடுத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள்..

“அக்கா..அக்கா..” என்ற சத்தத்திலும் எழவேயில்லை..

நேற்று அவள் மேல் இருந்த கோபமெல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை..

அவள் என்ன பழி வாங்கவா இங்கே வந்திருக்கிறாள்.. தன் உழைப்பில் தான், தன் தாயையும், தன் தங்கையையும் காப்பாற்ற வேண்டும் என்று வந்திருக்கிறாள்..

அவளுக்கு செளந்தரின் மேல், எந்தளவிற்கு காதல் இருக்கிறதோ அதேயளவு கடமையும் இருக்கிறது..

அவளை எழுப்பலாம் என நினைத்த மனதினை தலையை தட்டி அடக்கியவள், “தாரணி நீ இன்னைக்கு சிக்கீரமா போய் சார்க்கிட்ட நல்ல பேர் வாங்கணும்.. இவுங்க லேட்டா வந்து, சார்க்கிட்ட திட்டு வாங்கட்டும்..” என நினைத்தவள் தன் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வர, அவள் வருவதை பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான்..

தாரணி வேகமாக ஆட்டோவில் புறப்படுவதை பார்த்த செளந்தர், தன் கைக்கடிக்காரத்தை திருப்ப, காலை 8.30 மணி என்று காட்டியது..

‘இன்னும் உறங்குகிறாளா?’ என மனம் தவிக்க, கால்கள் அவனையும் அறியாது, சப்துனிகாவின் வீட்டை நோக்கிச் சென்றது.. கதவின் மேல் கை வைக்க, அது தானாக திறந்துக் கொண்டது..

‘இவ்வளவு அலட்சியமாகவா இருப்பது?’ என நினைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்..

இரண்டு அறைகள் இருந்தது.. இதில் எது சப்துனிகாவுடையது? என கண்களால் தேடிட, இடது பக்க அறையில் இருந்து போன் அடிக்கும் சத்தம் கேட்டது..

“சரியான சோம்பேறி..” என்றவன், கதவை மெல்ல திறந்து உள்ளே நுழைந்தான்..

நுழைந்தவன் சட்டென்று வேகமாக திரும்பி நின்றுக் கொண்டான்.. இதயமோ படபடவென அடித்துக் கொண்டது..

ஒரு நொடி என்றாலும், பார்த்த காட்சி கண்ணை விட்டு அகல மறுத்தது.. உறங்கிக் கொண்டிருந்தவளின் நைட்டி தொடை வரை ஏறி, அவளின் பளிங்கு கால்களை பளிச்சென்று காட்டியது..

உரிமையானவள் தான், ஆனால் உரிமையாக பார்க்கத்தான் அவனுக்கு மனமில்லை.

“சப்துனிகா..” என மெல்ல அழைக்க,

சரணிகா எட்டு ஊருக்கு கத்தி அழைத்தாலே, தூங்கும் எருமை அவள்.. செளந்தரின் மெல்லிய சத்தத்திற்கா? எழுந்திரிப்பாள்.. இன்னும் நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கினாள்..

“சப்துனிகாஆஆ” என சற்று சத்தமாக அழைத்திட, அப்பொழுதும் எழுந்து கொள்ளாமல் தூங்கினாள்..

அவளின் போனின் சத்தமோ விடாது அடித்துக் கொண்டிருக்க, போனின் திரையை பார்த்தான்..

“மை பெஸ்டி” என ஷேவ் பண்ணி வைத்திருந்தாள்..

“பெஸ்டியா?.. பையனா?..” என கண்களை சுருக்கி போனைக் கையில் எடுத்தவன், ஆன் பண்ணி ஸ்பீக்கரில் போட்டான்..

“ஏன்டி எருமை?.. காலையில 6 மணியில இருந்து கால் பண்ணிட்டு இருக்கேன்.. வேலைக்கு போகணும், எழுப்பி விடுன்னு சொன்னா மட்டும் பத்தாது.. போன் அடிச்சா எடுக்கணும்.. எனக்குன்னு வந்து பொறந்திருக்கு பாரு..” என சரணிகாவின் காட்டுக் கத்தலில், சட்டென்று காதுகளை மூடிக் கொண்டான்..

“ஓஹ்.. இவுங்க தான் இவ பெஸ்ட்டியா?..” என மனதுக்குள் சிறு நிம்மதி தோன்றியது..

அவனையும் அறியாமல் காதலின் முதல் படியில் நின்றான் செளந்தர்..

ஷப்பாஆஆ.. எதுக்குத் தான் இப்படி கத்துறாங்களோ? என நினைத்தவன், சரணிகாவின் சத்தத்தில் கூட சப்துனிகா எழுந்துக் கொள்ளவில்லை..

சப்துனிகாவிடம் போனைக் கொடுக்கலாம் என நினைக்க, அதற்குள் போன் கட்டாகி விட்டது..

“இதுக்கு மேல எழுந்தா ஆபீஸ் வரட்டும். இல்லை ஒரு நாள் லீவு போடட்டும்..” என நினைத்துக் கொண்டே, கதவருகினில் செல்ல.. மீண்டும் போன் அடித்தது..

“ப்ச்ச..” என சலிப்பாக போனை அட்டென்ட் செய்து தன் கைக்கு எட்டிய தூரத்தில் வைத்து, ‘ஹலோ..’ என்றான்..

“டேய்ய்ய.. யார்டா அது?.. என் பேத்தி போன்ல.. ஏய்ய்ய். இந்தாருடி.. உன் பொண்ணு போனை எந்த களவாணிப் பயலோ, களவாண்டுட்டான்..” என்ற வேணியின் வார்த்தையில் அதிர்ந்து நின்றான் செளந்தர்..

“எது களவாண்டுட்டேனா?.. நானா?..” என அதிர்ந்து நிற்க..

“என்ன அத்தை சொல்லுறீங்க?.. இப்போ தானே நான் பேசுனேன்..” என வேணியின் கைகளில் இருந்த போனை வாங்கிய சரணிகா, “ஹலோ..” என்றிட, இதற்கு மேல் நான் பேசாமல் இருந்தால், குடும்பம் மொத்தமும் தன்னை திட்ட ஆரம்பித்து விடுவார்கள் என நினைத்தவன்,

“அத்தை நான் செளந்தர் பேசுறேன்.” என அதிர்ந்தது சரணிகா மட்டுமில்லாது. உறங்கிக் கொண்டிருந்த சப்துனிகாவும் தான்..

“அத்தையா?..” என அதிர்ந்து எழுந்து நிற்க.. செளந்தர் விழிகளைக் கூட திருப்ப முடியாது அப்படியே உறைந்து நின்றான்.. அவளின் லோ நெக் நைட் ட்ரஸ், அவளின் முன்னழகை, அவனுக்கு பட்டவர்த்தனமாக காட்டியது..

“தம்பி.. நீங்க?..” என சரணிகா, அங்கு கேட்பது இவள் காதிலும் தெளிவாக விழுந்தது..

“ஒரு பைஃல் ஒன்னு சப்துனிகா கிட்ட கொடுத்தேன்.. அதை வாங்கிட்டுப் போக வந்தேன்.. மேடம் நல்லா தூங்கிட்டு இருந்தாங்க..” என்றபடி, போனை அவளிடம் நீட்டிட, அவ்வளவு தான் சப்துனிகா போனை சட்டென்று கட் பண்ணி விட்டாள்..

“பேசணும்னா பேசு..” என்ற செளந்தரை பார்த்து ஈஈ என இழித்தவள்,

“ஆபீஸ்க்கு டைம் ஆகிடுச்சா?..” என்றவளின் விழிகளில், சட்டை கசங்காது வந்து நின்றவன் தான் கண்ணில் பட்டது..

“இன்னும் கால் மணி நேரம் தான் இருக்கு.. அதுக்குள்ள ரெடியாகிருவீயா?..” என்றபடி, அவன் தன் வாட்சை பார்க்க..

“ஓஹ்.. ரெடியாகிடுவேனே?..” என்றவள், கபோர்டில் சம்பந்தமில்லாமல் ஒரு டாப், அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் ஒரு லெக்கின்ஸ், அதற்கும் சற்றும் சம்பந்தமில்லாமல் ஒரு துப்பட்டா என எடுத்து வைத்துக் கொண்டு குளியலைறைக்குள் ஓடினாள்..

“என்ன இவ இவ்வளவு கன்ட்ராவியா செலெக்ட் பண்றா?..” என்றவன், பழக்கதோஷத்தில் அழகான சந்தன நிற டாப், ஷால் மற்றும் பேன்ட் இரண்டும் அரக்கு கலரில் எடுத்து வைத்திருந்தான்..

அவளின் நிறத்திற்கு இது எடுப்பாக இருக்கும் என நினைத்தவனின் விழிகளில் ஒரு பாக்ஸ் ஒன்று விழுந்தது..

சாதாரணமாக அதை திறந்துப் பார்க்க, அதில் ஏகப்பட்ட கம்மல்களின் கலெக்ஷன் இருந்தது.. இது தான் மாடல் என்றிடாமல் நிறைய மாடல்கள் வைத்திருந்தாள்..

உதட்டைச் சுழித்தவன், அரக்கு நிற ஜிமிக்கி ஒன்றை எடுத்து அந்த ட்ரஸ்ஸின் அருகில் வைத்தான்..

பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், வேகமாக செளந்தர் வெளியேறி விட்டான்..

பாத்ரூமில் இருந்து அவசரமாக வெளியே வந்த சப்துனிகாவின் கண்களில் பட்டது படுக்கையில் இருந்த ஆடையும், அதன் அருகில் இருந்த ஜிமிக்கியும் தான்.. அதைப் பார்த்தவளின் இதழ்களில் அட்டகாசமாக ஒரு சிரிப்பு வந்து போனது..
 
Last edited:
Status
Not open for further replies.
Top