ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மணிகிளியே என் மனம் பறிக்க வந்தாயே - கதைத்திரி

Status
Not open for further replies.

Madhusha

Well-known member
Wonderland writer
_f5693386-0a54-428d-ac89-789bd6d04f59.jpg



அத்தியாயம் 11

தோப்பினுள் நுழைந்த சப்துனிகாவால் தன் கோபத்தை சிறிதும் கட்டுப்படுத்த முடியவில்லை..

“அய்யோஓஒ.. சப்து.. சப்து.. உனக்கு இப்படியொரு நிலைமையா?” என கோபத்தில் கை முஷ்டி மடக்கி, கண்ணை மூடி பாக்ஸிக் பண்ணுவதை போல் தன் இரு கைகளை மடக்கி, எதிராளியை அடிப்பது போன்ற ஒரு பொஸிசனில் கைகளை வைத்தவள், செளந்தரை தன் கண் முன்னால் கொண்டு வந்தாள்..

அவன் தானே தன்னை பேச விடாமல் தடுத்து வைத்திருப்பது என்ற கோபம் அவளுக்கு ஒரு வித ஆத்திரத்தை கிளப்ப, “ஏய்ய்ய்ய..” என காற்றில் கைகளை வீசி, பஞ்ச் ஒன்று விடப் போனவளின் கைகளை சட்டென்று ஒரு கரம் பிடித்துக் கொண்டது..

“யார்ரா இது? நம்மளுக்கு கட்டையை போடுறது?” என கண்களை திறந்து பார்க்க, அவளின் நேர் எதிரில் நின்றிருந்தான் செளந்தர்..

அவனையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சப்துனிகா..

பச்சை நிற சேலை அணிந்து, அதற்கு பாந்தமாக நகை அணிந்திருந்தவளின் முகமோ செக்கச் செவலென அநியாயத்திற்கு சிவந்திருந்தது..

ஆனால் அது வெட்கத்தினால் அல்ல.. கோபத்தினால்.. ஆம் அளவற்ற கோபம் தான் செளந்தரின் மீது..

“எதுக்கு இந்த வந்தே?” என தன் கைகளை கீழிறிக்காது கெட்டவளின் கண்களில் ஒரு வித வெறியே இருந்தது..

இப்படியே அவனை அடித்து வீழ்த்திவிடும் வெறிதான் அவளுக்கு..

“இப்ப பேசலாமா?..” என செளந்தர் கையை கட்டியபடி அமைதியாக, அதே சமயம் அழுத்தமாக அவளின் கண்களை தான் பார்த்துக் கொண்டே கேட்டான்..

“உன் கிட்ட பேசலாம், அதுக்கு நோ ரூல்ஸ்..” என்றவளின் விழிகளில் அப்படியொரு ஆக்ரோஷம்..

“ஓஹ். அப்போ நான் மட்டும் ஸ்பெஷலா என்ன?” என்றவனின் விழிகளில், அவனையும் அறியாமல் மென் சிரிப்பு..

“நீ ஸ்பெஷல் எல்லாம் கிடையாது, டெவில்.. யூ ஆர் மை டெவில் மேன்..” என கத்தியவளின் சத்தம், அந்த மாந்தோப்பை விட்டு வெளியே செல்லவேயில்லை..

“ஓஹோ.. நான் டெவில்னா,, நீங்க என்ன ஏஞ்சலா மேடம்.. யூ ஆர் த..” என நாடியில் கை வைத்து ஏதோ யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அங்கு வந்தாள் சரணிகா..

சரணிகாவை பார்த்ததும், சட்டென்று தன் கைகளை கீழிறக்கி விட்டாள் சப்துனிகா.. இல்லையென்றால், அதற்கும் அவள் தானே பாட்டு கேட்க வேண்டியிருக்கும்..

“என்னாச்சி மாப்பிள்ளை?.. ஏதோ யோசிக்கிறீங்க?..” என்ற சரணிகாவை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தவன், ஓரக்கண்ணால் சப்துனிகாவை பார்த்துக் கொண்டே,

“ஏன் அத்தை, ஊருக்குள்ள யாருக்கும் அடங்காம.. நான் ஏதோ பெரிய இது மாதிரி சுத்துமே, அப்படிப்பட்ட பொண்ணுங்களை எல்லாம் என்ன பேர் சொல்லிக் கூப்பிடுவாங்க.” என கேட்டு முடிப்பதற்குள்,

“சில்லாட்டை மாப்பிள்ளை” என்ற சரணிகாவை அதிர்ந்து பார்த்தாள் சப்துனிகா..

‘ஏது சில்லாட்டையா?’ என மனதுக்குள் கேட்டவளுக்கோ, இந்த நிலையில் தன்னை பேச விடாமல் தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் செளந்தரை கழுத்தை நெறித்துக் கொன்று விடும் வேகம் தான் வந்தது..

சரணிகா சொன்னதும் தான் தாமதம், கலகலவென தன் இதழ் பிரித்து வாய் விட்டே சிரித்தான் செளந்தர்..

அவனின் சிரிப்பு சத்தம் கேட்டு, வேகமாக வந்தார் குணசேகரன்..

அவன் சிரிப்பதே அபூர்வம், இதில் வாய்விட்டு சிரிப்பவனை தான் கண்களில் கண்ணீர் மல்க நின்று பார்த்துக் கொண்டிருந்தார்..

“என்னாச்சி மாப்பிள்ளை?..” என்ற சரணிகாவிற்கு ஒன்றுமே புரியவில்லை..

எதற்காக இப்படியொரு சிரிப்பு?.. என்ற செளந்தரை ஆழ்ந்து பார்த்தவள், தன் எதிரில் கோபத்தில் முகம் சிவந்து பெருமூச்சு விட்டவளைக் கண்டு ஏதோ இருவருக்கும் சரியில்லை என்பதை மட்டும் உணர்ந்துக் கொண்டாள்..

“ஒன்னுமில்லை அத்தை.. ஒன்னுமில்லை ப்பா..” என்றவன் சடுதியில் தன் சிரித்த முகத்தை நார்மலாக வைத்துக் கொண்டான்..

“இந்த பயபுள்ள சிரிக்கும் போது அழகா இருந்த மாதிரி இருந்துச்சே..” என மனதுக்குள் தான் நினைத்தாள் சப்துனிகா..

“எல்லாரும் இங்கே இருக்கீங்களா?.. அங்கே பூஜைக்கு டைமாகிருச்சின்னு சொன்னாங்க..” என்றபடி யசோதா அங்கே வர, அவரின் பின்னால் ஒவ்வொருவராக செல்ல, கடைசியில் அங்கு நின்றுக் கொண்டிருந்தது என்னவோ சப்துனிகாவும், செளந்தரும் தான்..

“என்ன சார் ரொம்ப எகத்தாளமா சிரிக்குற மாதிரி இருக்கு?.. அவ்வளவு நக்கலு..” என கேட்டபடி அவனின் அருகில் வந்து நின்றாள் சப்துனிகா..

தன் நெஞ்சளவே உயரம் இருக்கும் பெண்ணை சற்று தலை தாழ்த்தி அவன் பார்க்க, அவனின் கண்களை பார்க்க வேண்டுமென்றே, தன் தலையை சற்று உயர்த்தி அவனை ஏறிட்டுப் பார்க்க..

இருவரையும் மற்ற எவரும் பார்த்தால், சத்தியமாக முத்தமிட போகின்றனர் என்று தான் நினைப்பார்கள். அப்படியொரு நிலையில் தான் இருவரும் நின்றுக் கொண்டிருந்தனர்..

ஆனால் இவருக்குள்ளும் இருப்பது சிறு அனல் போர் அல்லவா..

“இன்னைக்கு ஒரு நாள் நீ நல்லா சிரிச்சிக்கோ.. நாளைக்கு இதே நேரம் உன்னை கதற, கதற அழ வைக்கிறேன் டா..” என சபதமிட்டு திரும்பியவளின் ஜடையை பிடித்திழுத்தான் செளந்தர்..

“டேய்ய்ய்.. டோப்பா முடி டா..” என அவள் ஜடையை, அவனிடம் இருந்து பிரித்தெடுத்தாள்..

“அடிப்பாவி. அப்போ இதெல்லாம் ஒரிஜினல் இல்லையா?..” என்றவனை ‘லூசா நீ’ என்பதை போல் தான் பார்த்தாள் சப்துனிகா..

“என்ன நீ கல்யாணத்துக்கு முன்னாடி பார்த்ததில்லையா?.. அப்போ தோள் வரை தான் இருந்தது.. அப்புறம் எப்படி முதுகை தாண்டி வந்ததுன்னு யோசிக்க மாட்டீயா?” என்றவளின் கைகளை, டோப்பா முடியை சரிசெய்துக் கொண்டிருந்தது..

“நான் வளர்ந்திருக்கும்னு நினைச்சேன்..”

“ஆமா.. ஒரே நாள்ல ஓஹோ ன்னு முடி வளருது.. அவன் அவன், முடி வளர வைக்க என்ன பாடு படுறாங்கன்னு தெரியுமா?..” என்றவளை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தான் செளந்தர்..

“என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு உனக்கு? எனக்கு முடியில்லாதது உனக்கு சிரிப்பா இருக்கோ” என்றவளை சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டே,

“இல்லை முடிக்கு இவ்வளவு இம்பார்ட்டன் கொடுக்குறீயேன்னு நினைச்சேன்..” என்றவனை ஆழ்ந்து பார்த்தாள்..

அவளின் பார்வையில் என்ன எனும் விதமாய் ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்டான் செளந்தர்..

“இல்லை உன்னால மொட்டை அடிச்சிக்கிட்டு, கலெக்டர் ஆபீ’ஸ் போக முடியுமா?..” என்றவளை சற்று திடுக்கிட்டுப் பாரத்தான் செளந்தர்..

இதுவரை அவன் மொட்டை போட்டதேயில்லை.. அவனுக்கு பிறந்ததில் இருந்தே அடரந்த சிகை.. அது இல்லாமல் இருந்தால் எப்படியிருக்கும் என ஒரு நிமிடம் நினைத்தவனுக்கு, சட்டென்று இதயத்தில் ஒரு வித வலி.. அசெளகரியம் அனைத்தையும் உணர்ந்தான்..

அவனின் முக மாற்றத்தை வைத்தே, அவன் என்ன நினைத்திருப்பான் என அறிந்தவள், “இப்போ புரியுதா?.. பொண்ணுங்க ஏன் முடி கொட்டுனா அவுங்களால ஈசியா எடுத்துக்க முடியலைன்னு..” என்றவள், அவனை அற்பமாக ஒரு பார்வை பார்த்து விட்டு கோயிலை நோக்கி நடந்தாள்.. அவளின் பின்னால் அவனும் நடந்தான்..

இருவரும் ஒன்றாக கோவிலுக்கு நுழைய, அங்கு பூஜைகள் ஆரம்பமானது.. அத்தனை பேர் கூடியிருந்த கலகலப்பிற்கு பஞ்சம் இருக்குமா என்ன? அடிதடி சண்டை முதற்கொண்டு அத்தனையும் நடந்தேறிட, அமைதியாக அதை கடந்து வந்தான் செளந்தர்..

அவளோடு சேர்த்து அவள் சொந்தங்களையும் பழகிக் கொண்டானா என்னவோ?..

கறிவிருந்து முடித்து வீட்டிற்கும் வந்து விட்டனர் செளந்தர் குடும்பத்தினர்.. சப்துனிகா இப்பொழுது அழுதுக் கொண்டே தான் வந்தாள்.. என்னவோ தன் குடும்பத்தினரை பார்ப்பதும், அவர்களை விட்டு பிரிவதும் அவளுக்கு அப்படியொரு துக்கத்தை கொடுத்திருந்தது..

“ப்ச்ச். எப்போ பார்த்தாலும் கண்ணுல டேம்மை திறந்து விடுறது..” என மனதுக்குள் திட்டிக் கொண்டே வர, அதே சமயம் யோசனையின் உச்சத்தில் இருந்தான் சபரீஸ்வரன்..

சப்துனிகா வந்தது, பிரகதியை அடித்ததெல்லாம் தாண்டி, அனைவருக்கும் வெறும் தலையசைவை மட்டும் பதிலாக கொடுத்த சப்துனிகா அவனுக்கு புதிதாக தெரிந்தாள்..

வாய் ஓயாமல் பேசும் தன் மகள் ஏன் இன்று பேசவில்லை?.. அவளுக்கு என்னவானது?.. ஒரு வேளை செளந்தர் அவளை கொடுமைப்படுத்துகிறானா? என செளந்தரின் மேல் ஒரு சந்தேகப்புள்ளி வந்து விழுந்தது..

அவனின் சிந்தனை படர்ந்த முகம் சரணிகாவிற்கு புருவம் நெறிக்க வைத்தது..

“என்னாச்சிங்க, ஏதோ ரொம்ப தீவிரமா யோசிக்கிறீங்க?..”

“சப்துனிகா ஏன் இன்னைக்கு பேசலை..”

“ரொம்ப டயர்டா இருந்திருக்கும், அதுனால பேசியிருக்க மாட்டா..” என்றவளை திரும்பி பார்த்து முறைத்தான் சபரீ..

“வாய்ல ஏதாவது வந்துட போகுதுடி, அவ முகமே இன்னைக்கு சரியில்லை.. நான் சாதாரணமா வெளியூர் போனாலே, ‘அப்பாஆஆ’ ன்னு ஓடி வந்து கட்டிப்பா.. இன்னைக்கு என் பக்கமே திரும்பலை. நீ திட்டுற, அதுக்கு பதிலே சொல்லாம தோப்புக்குள்ள போறா.. எனக்கென்னவோ, சம்திங் ராங்க்னு தோணுது.” என்ற சபரீக்கு ஏதோ தவறாக நடக்கிறது என உள்ளுணர்வு சொல்லிக் கொணடேயிருந்தது..

“நீங்க ரொம்ப யோசிக்காதிங்க, செளந்தர் அப்படியொண்ணும் கெட்டப் பையன் எல்லாம் இல்லை..” என தன் தோழியின் பையனுக்காகவும், தன் மகளின் கணவனுக்காகவும் பரிந்து பேச,

“நான் அவனை கெட்டவன்னு சொன்னேனா, ஆனா அவன்கிட்ட ஏதோ ஒன்னு இருக்கு.. அதை யார்க்கிட்டேயும் சொல்லாம மறைக்கிறான்..” என்றவன், யாருக்கோ போனில் அழைத்தான்..

“யாருக்கு..” என்ற சரணிகாவை திரும்பி பார்த்து ஒரு முறை தான் முறைத்தான்.. கப்பென்று வாயை மூடிக் கொண்டாள்..

பின்னே அவனிடம் பேசி வாங்கிக் கட்டிக் கொள்ளவா முடியும்..

“தீபக்..” என்றவன், தன் நினைத்ததை ஒவ்வொன்றாக, பார்த்துக் கொண்டிருந்த சரணிகாவின் விழிகள் தான் அதிர்ந்து விரிந்தன..

“இவர் நல்லா இருக்கிற பொண்ணு வாழ்க்கையில கும்மியடிச்சிட்டு போயிடுவார் போலேயே..” என பீதியிலேயே அமர்ந்திருந்தாள் சரணிகா..

இரவு நேரம் நெருங்கும் வேளையில் சப்துனிகாவோ பயத்தின் உச்சத்தில் இருந்தாள்..

“அச்சோ, நம்ம நேத்து பண்ண வேலைக்கு, இன்னைக்கு பாஞ்சிடுவானோ” என மனதுக்குள் பீதியுடன் தன்னறைக்குள் உலாவிக் கொண்டிருந்தவள், கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் ஓடிச்சென்று படுக்கையில் படுத்துறங்கினாள்..

அவள் தூங்கினாற் போன்று நடித்தாலும், கருவிழிகள் அங்குமிங்கும் உருண்டே அவளை காமித்துக் கொடுத்து விட்டது..

“பிடிக்காத ஒரு பொண்ணு மேல வைக்கிற அளவுக்கு நான் தரம் இறங்கிப் போகலை..” என சப்துனிகாவின் காது பட சொல்லி விட்டு, அவளுக்கு அந்தப்புறம் சென்று படுத்துக் கொண்டான்.

அவன் படுத்து சில நிமிடங்கள் கடந்த பின்னே சப்துனிகா எழுந்து அமர்ந்தாள்..

தூங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தை தான் உற்றுப் பார்த்தாள். நிர்சலனமாக இருந்தது..

ஆனால் அவள் முகம் அதற்கு நேர்மாறாக கோபத்தில் சிவந்திருந்தது..

“மவனே, என்னைய்யே பேச விடாம பண்ணிட்டல்ல.. நாளைக்கு உன்னோட கவண்டவுன் ஸ்டார்ட்.. ஆரம்பமே அமர்க்களமா ஆரம்பிக்கிறேன்..” என்றவள் அறைக்கு வெளியே செல்ல, அங்கு ஜன்னலோரம் நின்றிருந்தான் பிரகதி..

“என்னடா நான் சொன்னதை கொண்டு வந்தீயா?..” என்றவாறே முதல் மாடியில் இருந்து எட்டிப் பார்க்க, அங்கு ஒரு கோணிப்பை தான் இருந்தது..

“அக்கா டபுள் டண். இந்தா நீ கேட்டது..” என கயிறின் ஒரு முனையை சப்துனிகாவிடம் கொடுத்து விட்டு, பைப்பை விட்டு இறங்கிக் கொண்டான்.

அவன் இறங்கியதும், கயிறின் மறுமுனையில் இருந்த கோணிப்பை சரசரவென மேலே ஏற்றினாள் சப்துனிகா..

கோணிப்பையில் இருந்த பொருளை அறையெங்கும் சிதற விட்டவள், ஒன்றும் அறியாத பெண்ணை போல் தன் இடத்தில் சென்று படுத்துக் கொண்டாள்..

காலை ஏழு மணியளவில் எழுந்து அமர்ந்தான் செளந்தர்.. சப்துனிகா இன்னும் உறங்கிக் கொண்டுதானிருந்தாள்.

காலைக்கடன்களை முடிக்க, தன் கட்டிலை விட்டு கீழே காலை வைத்ததும் தான் தாமதம், தன் காலில் பிசுபிசுவென ஒட்டுவதை போல் இருந்தது..

அறையெங்கும் ஒரு வித துர்நாற்றம் வீசியது.. தன் மூக்கைப் பொத்திக் கொண்டே, கீழே பார்க்க, அங்கு யாரோ அழுகிய பழத்தினை போட்டு வைத்திருந்தனர்..

அதில் இருந்து புழுக்கள் வேறு வர, பார்த்துக் கொண்டிருந்த செளந்தருக்கு குமட்டிக் கொண்டு வந்தது.. “உவ்வேக்க்க்..” என்றபடி பாத்ரூமின் கதவினை திறக்க, அவன் மேல் தாவிக் குதித்துக் கொண்டு வெளியே வந்தது ஒரு தேரை..

அதைப் பார்த்தும் அப்படியே அறையிலேயே வாந்தி எடுத்து விட்டான் செளந்தர்..

 

Madhusha

Well-known member
Wonderland writer
_25b58376-107d-4657-90e1-d19c3f70deaa.jpg


அத்தியாயம் 12

அவன் வாந்தி எடுக்கும் சத்தத்தில் தான் மெல்ல கண்களை விரித்தாள் சப்துனிகா.. வாந்தி எடுத்தபடி நின்றிருந்த செளந்தரை பார்த்து முகத்தை சுழித்தாள் சப்துனிகா..

“ச்சீ, வாந்தி எடுக்கிறதுன்னா பாத்ரூம் போக வேண்டியது தானே..” என்ற சப்துனிகாவை திரும்பிப் பார்த்த செளந்தரின் விழிகள் அதிர்ச்சியில் உறைந்தது..

சப்துனிகாவின் முகத்தில் ஒன்றுக்கு இரண்டு மாஸ்க் அல்லவா போட்டிருந்தாள்.. அவளை பார்த்தவனின் முகத்தில் அப்படியொரு வெறுப்பு..

அவன் இதுவரை எந்தப் பெண்ணையும் வெறுத்ததில்லை.. ஆனால் இன்று சப்துனிகாவை பார்க்க, பார்க்க வெறுப்பு அதிகம் தான் வந்தது.

“வாட் இஸ் திஸ் சப்துனிகா..” என வெறுப்புடன் கேட்டான் செளந்தர்..

“என்னதிது ன்னா?.. ஏன் கண்ணு தெரியலை..” என்றவளின் திமிரான பேச்சு, அவனுக்கு அப்படியொரு கோபத்தைக் கிளறியது..

“எனக்கு கண்ணு நல்லா தெரியும் சப்துனிகா.. ஆனா உனக்குத் தான் மேனர்ஸ்னா என்ன, ஒழுக்கம்னா என்ன?.. பிகேவியர்னா என்னன்னு எதுவும் தெரியலை..” என்றவனை வெகுண்டெழுந்து பார்த்தாள் பெண்ணவள்..

“ரொம்ப அதிகம் பேசாதிங்க செளந்தர்.. அப்படியென்ன என் ஒழுக்கத்தை நீங்க பார்த்துட்டீங்க?” என்றவளை எரிச்சலுடன் பார்த்தவன், தன்னையும் அறியாமல் அந்த இடத்தை சுத்தப்படுத்த ஆரம்பித்தான்..

அவன் அந்த அறை முழுவதும் சுத்தப்படுத்துவதை பார்த்துக் கொண்டுதானிருந்தாள்.. அவ்வளவு வீம்பு அவளிடம்..

அவனோ புது மாஸ்க் அணிந்து அந்த அறையெங்கும் சுத்தப்படுத்தியவன், குளியலைறைக்குச் சென்று நன்கு தேய்த்துக் குளித்து விட்டுத்தான் வெளியே வந்தான்..

அப்பொழுதும் சப்துனிகா அறையில் அமர்ந்திருந்து தன் போனை நோண்டிக் கொண்டிருந்தாள்..

அவ்வளவு ஆணவம், அகந்தை இரண்டுமே அவளிடம் அளவுக்கு அதிகமாக இருந்தது. தான் நினைத்தை எப்படியும் செய்து முடிப்பேன் என்கின்ற ஆணவம், உன்னால் என்னை என்ன செய்ய முடியும்?.. நான் மினிஸ்டரின் மகள் என்ற அகந்தையும் அவளிற்கு நல்வழி காட்டவில்லை என்பது தான் நிசப்தமான உண்மை..

குளித்து விட்டு வெளியே சென்றான் செளந்தர்.. அவனின் பின்னால் குளிக்கக்கூட இல்லாமல் அப்படியே வெளியே சென்றாள் சப்துனிகா..

அவள் அப்படியே வெளி வருவதை பார்த்த செளந்தர், அவளை திரும்பி பார்த்து முறைக்க, அவளோ அவனை ஒரு பொருட்டாக கூட எடுத்துக் கொள்ளவில்லை..

“போய் குளிச்சிட்டு வா சப்துனிகா..” என்றவனின் குரல், அவனையும் அறியாமல் கடுமை ஏறியது.

“நீ சொன்னா?.. நான் செய்யணுமா?.. நான் என்ன உன் கொத்தடிமையா?..” என வெறுப்புடன் கேட்டு விட்டு, முன்னே சென்றாள்..

குளிக்காமல் அப்படியே வந்திறங்கிய சப்துனிகாவை பார்த்து முகம் சுழித்தார் குணசேகரன்.. யசோதாவிற்கும் சற்று நெருடல் தான்.. ஆனாலும் சரணிகா தான் எதையும் மறைக்காமல் உண்மையை சொல்லி விட்டாளே, தன் பெண் இப்படித்தான் என்று..

யசோதாவும், குணசேகரனும் ஏற்கனவே சாப்பிட்டதால், ஹாலில் அமர்ந்திருந்தனர்..

“போய் சாப்பிட்டு வாம்மா..” என்ற தன் தாயை திடுக்கிட்டுப் பார்த்தான் செளந்தர்..

சுத்தம், நேர்த்தி, நன்னடை என சொல்லிக் கொடுத்த தன் தாயும், தந்தையும் இவளை பார்த்து அமைதியாக இருக்கின்றனர் என்பதே அவனுக்கு அப்படியொரு கோபத்தை தான் கொடுத்தது..

அவளோ யாரையும் கண்டுகொள்ளாமல் போய் சாப்பிட அமர்ந்தாள்.. செளந்தரோ சாப்பிடவே செல்லவில்லை. அங்கிருந்த மற்றொரு சோபாவில் அமர்ந்து விட்டான்..

அவளுடன் சேர்ந்து சாப்பிட வேண்டுமா? என்ற நினைவே அவனுக்கு கசந்தது..

“நீ சாப்பிடலை ப்பா?..” என்ற யசேதாவிடம்,

“அப்புறம் சாப்பிடுறேன் ம்மா” என்ற பதில் மட்டுமே கூறினான்.

சப்துனிகா சாப்பிட்டு முடித்து வெளியே வர, குணசேகரன் நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். யசேதாவும், செளந்தரும் தன் போனை தான் பார்த்துக் கொண்டிரந்தனர்.

‘சரி நாமளும் ஜாயிண்ட் பண்ணிப்போம்’ என நினைத்து, செளந்தரின் அருகில் சென்று அமர்ந்தவள் தன் போனை எடுத்துக் கொண்டு ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தாள் அதுவும் சத்தமாக..

அவளின் போனின் சத்தத்தில் பல்லைக் கடித்தான் செளந்தர்..

“கொஞ்சம் சத்தம் கம்மியா வச்சிப் பாரு..” என்ற செளந்தரை பார்த்துக் கொண்டே இருந்தவள், இன்னும் அதிகமாக சத்தம் வைத்தாள்.. அவர்கள் இருவருக்கிடையில் நடக்கும் பனிப்போர் தப்பாமல் குணசேகரன், யசோதாவின் கண்களில் பட்டது..

அவர்களுக்கு தான் சத்தம் போட்டு சண்டை போடுவதெல்லாம் ஆகாதே, குணசேகரன் எழுந்து வெளியே சென்று விட, தன்னறைக்கு சென்று விட்டார் யசோதா..

அங்கு இருந்தது என்னவோ செளந்தரும், சப்துனிகாவும் தான்..

அவளுக்கு எப்படியாவது தன்னை அடக்குபவனை வெறுப்பேற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மட்டும்தான்..

அவனுக்கோ சத்தம் என்பதே சுத்தமா ஆகாது.. அப்படிப்பட்டவனுக்கு இந்த சத்தம் காதுக்குள் ரீங்காரமாய் என்னவோ செய்தது..

“சப்துனிகா.. சவுண்டை குறை..” என்றவனின் குரலை, அவள் காது கொடுத்து கேட்டால் தானே,

“முடியாது..” என்றவள், மேலும் மேலும் சவுண்டை கூட்டிட, அவ்வளவு தான் செளந்தரின் பொறுமையும் பறந்தோடியது..

வேகமாக சப்துனிகாவின் கையில் இருந்த 1 ½ லட்ச ரூபாய் போனை தூக்கிப் போட்டு உடைத்து விட்டான்..

அவன் அப்படி செய்தது அவனுக்கே அதிர்ச்சிதான்…

“இங்கே பாரு, சத்தம் எனக்கு ஆகாது.. சொன்னா புரிஞ்சிக்கோ..” என்றவன் வேகமாக வீட்டை விட்டு வெளியேறிட, அங்கு தரையில் சிதறிக் கிடந்த போனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சப்துனிகா..

“சத்தம் எனக்கு ஆகாது.” என செளந்தர் சொல்லி விட்டுச் சென்ற வார்த்தைகள் தான் அவளுக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது..

“சத்தம் தானே ஆகாது. செளந்தர் என் போனை உடைச்சிட்டல்ல.. இதுக்கு பதில் நீ சொல்லியே ஆகணும்” என்றவளுக்கு, செளந்தரின் மேல் அப்படியொரு வன்மம் தான் தோன்றியது..

அவள் அறியவில்லை, தன் தலையில் தானே மண்ணள்ளி போடப் போகின்றாள் என்று..

ஏனோ வீட்டிற்குள் இருக்கவே தோன்றாமல் அமைதியான லைப்ரரியில் அமர்ந்திருந்தான் செளந்தர்..

அவனுக்கு தோழர்கள் என்று யாரும் கிடையாது.. யாரிடமும் சிரித்துக்கூட பேசமாட்டான்.. அவர்களாக வந்து, அவர்களாகவே பேசி விட்டு செல்வார்களே தவிர, இவன் எந்த பதிலும் கொடுக்கமாட்டான்..

படிப்பில் கெட்டியாக இருப்பவன், வாழ்க்கைப் பாடத்தில் முட்டையாக தான் இருந்தான்..

ஒரு வித தவ வாழ்க்கை தான் அவனுடையது. இப்பொழுது கூட சப்துனிகாவிடம் தன்னுடைய நிலைமையை சொன்னானே தவிர, அவளுடன் சண்டை பிடிக்கவோ எதிர்த்து எதிர்த்து பேசுவதோ அவனுக்கு முடியவில்லை.. முடியவில்லை என்பதை விட தெரியவில்லை என்றே சொல்லலாம்..

நீண்ட நேரம் லைப்ரரியில் இருந்தவன், மாலை வேளையில் தான் தன் வீட்டிற்கே சென்றான்..

அவனது தனிமைக்கான ஒரே துணை புத்தகம் மட்டுமே.. அந்த துணை தான் அவனின் உற்ற தோழன் என்றுக்கூட சொல்லலாம்..

அவன் வீட்டிற்குள் நுழைந்த நேரம் வீட்டில் குணசேகரனின் கார் இல்லாமல் இருந்தது..

“அப்பா வெளியே போயிருக்காங்களா?” என வாட்ச்மேனிடம் விசாரித்தான்..

“ஆமா சார், அய்யாவும், அம்மாவும் எங்கேயோ வெளியில போனாங்க..” என்றான் வாட்ச்மேன்..

“ம்ம்..” என்றபடி வீட்டிற்குள் நுழைந்தான்..

அவனோ இருந்த மன உளைச்சலில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல், வேகமாக தன்னறைக்குள் நுழைந்தான்..

சப்துனிகாவை தேடக்கூட அவன் மனம் விரும்பவில்லை.

பாத்ரூமிற்குள் தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தவன் தாழ்ப்போட, அதே சமயம் வெளியே ஒரு கரம் தாழப்பாள் போடவும் சரியாக இருந்தது..

சில நிமிடங்கள் கழித்து, வெளியே வரலாம் என செளந்தர் தாழ்ப்பாளை நீக்க, அதுவோ திறக்க முடியாமல் சதிசெய்தது..

தானாக பூட்டும் கதவு திறப்பு அல்ல. யாரோ வெளியில் இருந்து பூட்டியிருக்கின்றனர் என்பது தெளிவாக தெரிந்தது..

“சப்துனிகா, கதவை திற..” என சரியாக கண்டுபிடித்துக் கேட்டான் செளந்தர்..

ஆம். கதவை பூட்டியது வேறு யாருமல்ல சப்துனிகா தான்..

“சப்துனிகா, சப்துனிகா..” என்றவனின் கதறல் குரலை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள் சப்துனிகா.. அவள் கைகளில் ரிமோட் ஒன்று இருந்தது

“சப்துனிகா.. சப்துனிகா..” என சற்று சத்தமாக கத்தினான் செளந்தர்..

“என்ன செளந்தர் இவ்வளவு சத்தமா கத்துற?.. உனக்குத் தான் சத்தம் ஆகாதே..” என பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்துத் துப்பிட, அதிர்ந்து நின்றான் செளந்தர்..

அவள் இப்படி தன்னை பாத்ரூமில் வைத்து பூட்டுவாள் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லையே..

“சப்துனிகா கதவை திற, என்ன விளையாட்டு இது?” என சற்று கடுமையாக கேட்ட செளந்தரின் குரலில் உதட்டைச் சுழித்தாள் சப்துனிகா..

“நான் இன்னும் விளையாடவே இல்லையே செளந்தர்.. மை கேம் ஸ்டார்ட் நவ்..” என்றவள் தன் கையில் இருந்த ரிமோட்டை ஆன் பண்ணிட, ட்ரம் வாசிக்கும் சத்தம் எட்டுத்திக்கும் கேட்க ஆரம்பித்தது.. அந்த அறையே ஸ்பீக்கரின் சத்தத்தில் அலறியது..

அந்த சத்தத்தை காதில் கேட்டதுமே சட்டென்று தன் இரு காதுகளை மூடிக் கொண்டான் செளந்தர்..

கைகள் தானாக பஞ்சினை தேட முயன்றது.. பாத்ரூம் என்பதால் அங்கு எப்பொழுதும் பஞ்சு இருப்பதில்லை.

“சப்துனிகா ஆஃப் பண்ணு ஸ்பீக்கரை” என்றவனின் சத்தம் கேட்டு, பாட்டை மேலும் அதிகமாக வைத்தாள் சப்துனிகா..

பாட்டுச் சத்தம் அதிகரிக்க, அதிகரிக்க அவனுக்கு தலை வலி விண்விண்ணென்று வலித்தது.. ஏதோதோ நினைவுகள் அவனை அலைக்கழிக்க ஆரம்பித்தது..

ரத்தம், கார், டமால் என்ற சத்தம் அவன் காதுக்குள் மீண்டும் மீண்டும் கேட்க ஆரம்பிக்க

“சப்துனிகா.. பாட்டை ஆஃப் பண்ணு..” என்றவனுக்கு அவனையும் அறியாமல் வீசிங் வந்தது.. அவன் மிகவும் பதட்டமாக இருக்கும் சமயம் அவனையும் அறியாமல் அவனுக்கு வீசிங் வரும்.. மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கினான்..

“ஓஹோ பாட்டை தானே ஆஃப் பண்ணிட்டா போச்சி..” என்றவள், பாட்டின் சத்தத்தை மேலும் அதிகரிக்க, அந்த அறையெங்கும் மாட்டப்பட்டிருந்த ஸ்பீக்கர் எட்டுத்திக்கும் ஒலிக்க, “ஆஆஆஆ” என்ற செளந்தரின் மூர்ச்சையான குரல், அந்த ஸ்பீக்கரின் சத்தத்தில் ஒன்றுமில்லாமல் ஆகிப் போனது..

அப்படியே தடாலென்று விழுந்தவனின் தலை பாத்டப்பில் அடிபட்டு, அப்படியே மயங்கிச் சரிந்தான்..

சப்துனிகா பாட்டை போட்டு விட்டு, அவள் போனை நோண்டியபடி கட்டிலில் இருந்தவளுக்கு, ஒருவன் பாத்ரூமில் விழுந்துக் கிடப்பது தெரியாமலே போனது..

நீண்ட நேரம் பாத்ரூம் கதவு தட்டும் சத்தமோ, செளந்தரின் குரல் எதுவும் கேட்காமல் இருக்க, மனமும் அவளையும் அறியாமல் சற்று பதட்டமானது..

“செளந்தர்.. செளந்தர்.” என்றழைத்தபடி வந்து கதவை திறந்தாள் சப்துனிகா..

கதவை திறந்து பார்த்தவளின் விழிகள் பயத்தில் அப்படியே விரிந்தது..

அப்படியொரு கோலத்தில் கிடந்தான் செளந்தர்..

தலையில் அடிபட்டிருந்ததால் அவன் தலையில் இருந்த ரத்தம், டைல்ஸ் கல்லில் வடிந்து பக்கெட்டில் இருந்து வழிந்த தண்ணீரோடு கலந்து சென்றுக் கொண்டிருந்தது..

“செளந்தர்” என அலறியபடி வேகமாக செளந்தரின் அருகே சென்றாள்..

அப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்தனர் குணசேகரனும், யசோதாவும்..

அறையில் ஒலித்த பாட்டுச் சத்தம் வீடெங்கும் டம், டம் என இடிக்க ஆரம்பித்தது..

“யாரு இவ்வளவு சத்தமா பாட்டுக் கேட்கிறது?.. அந்தப் பொண்ணுக்கிட்ட இதை எல்லாம் சொல்ல மாட்டீயா நீ?” என யசோதாவை திட்டியவாறே, படியேறிச் சென்றார் குணசேகரன்..

அறையில் யாருமே இல்லாமல் பாட்டு மட்டும் கேட்டது.. அதை ஆஃப் பண்ண முயன்றிட, அதுவோ ஆஃப் பண்ண முடியாமல் சதிசெய்தது..

குணசேகரன் வேகமாக சென்று அந்த ஸ்பீக்கரை தரையில் போட்டு உடைத்தே விட்டார்..

அவருக்குத் தான் நன்றாக தெரியுமே, செளந்தருக்கு சத்தம் என்பது அலர்ஜி என்று..

“சப்துனிகா.. சப்துனிகா..” என அழைத்தவாறே பாத்ரூமை நோக்கிச் சென்றார் யசோதா..

உள்ளே சென்றவருக்கு உடல் தூக்கிவாரிப் போட்டது.. தன் மகனை இப்படியொரு ரத்த வெள்ளத்தில் பார்த்த யோதாவிற்கு ஒரு நிமிடம் மூச்சே வரவில்லை..

“அய்யோஓஓ.. என் புள்ள.” என அலறியடித்துக் கொண்டே, கண்ணீர் மல்க செளந்தரின் அருகில் அமர்ந்த யசோதாவை பார்க்க, பார்க்க, சப்துனிகாவிற்கு முதன் முதலாக தான் செய்த தவறு நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போன்று உரைத்தது..

எவ்வளவு பெரிய தவறு இழைத்து விட்டோம் என நினைக்கும் போதே அவளின் நெஞ்சில் சுரீரென்ற வலி..

யசோதாவின் அழுகுரலில் வேகமாக பாத்ரூமிற்கு ஓடி வந்தார் குணசேகரன்..

“அத்தை..” என்ற சப்துனிகாவை தாண்டிச் சென்ற குணசேகரன், வேகமாக சட்டையை கழற்றி, செளந்தரின் தலையில் பொத்தினாற் போன்று வைத்துக் கொண்டார்..

“யசோ, போய் செக்யூரிட்டியை கூப்பிடு..” என்ற குணசேகரனின் பதட்டமான குரல் யசோதாவின் காதில் விழவேயில்லை.. அவர் தான் செளந்தரை கட்டிக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தாரே, வேகமாக எழுந்து ஓடியது என்னவோ சப்துனிகா தான்..

அறையின் பால்கனியில் நின்றுக் கொண்டே, “செக்யூரிட்டிஈஈஈ” என கத்திட, குணசேகரன் தன் பல்லைக் கடித்தார்..

சப்துனிகா போட்ட சத்தத்தில் வேகமாக ஓடி வந்தார் செக்யூரிட்டி..

“மேலே வாங்க..” என்றவளின் சத்தத்தில், அங்கிருந்த அனைவரும் ஓடி வர, செளந்தரை தூக்கிச் சென்று காரில் வைத்தார்கள்..

“அத்தை, மாமா ஏறுங்க..” என்றதும் வேகமாக காரை எடுத்தது சப்துனிகா தான்..

எதிரில் நபர்களை இடித்து தள்ளும் வேகத்தில் தான் வண்டியை ஓட்டினாள்..

முதன் முறையாக மனதில் ஒரு வித பயம் கவ்விக் கொண்டது.. செளந்தருக்கு ஏதாவது ஆகிவிடுமா?” என்றவளின் கண்களில் ஈரத்தை முதன் முதலாக உணர்ந்தாள்..

ஆம். இது செளந்தருக்காக வந்த கண்ணீரல்லவா..

மதுரையில் மிகப்பெரிய மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலின் உள்ளே வண்டியை நிறுத்தினாள்..

அவள் கார் நின்ற அடுத்த கணமே, அங்கு பெரும் டாக்டர் கூட்டமே வந்து நின்றது..





 

Madhusha

Well-known member
Wonderland writer
_891d456d-7e23-4fea-9d08-6e3786d39568.jpg


Designer.png


அத்தியாயம் 13

சப்துனிகா வரும் பொழுதே ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து அலர்ட் பண்ணியதால், சீப் டாக்டர் முதற்கொண்டு அத்தனை பேரும் ஓடி வந்தனர்..

அடிப்பட்டிருப்பதும் சாதாரண ஒருவனுக்கு இல்லையே. அந்த மாவட்டத்தின் கலெக்டராகிச்சே..

ஸ்டெச்சரில் அவனை அழைத்துக் கொண்டு செல்ல, பின்னாடியே அழுதுக் கொண்டு ஓடினாள் சப்துனிகா..

தலையில் பலமாக அடிப்பட்டிருப்பதால் ஆப்ரேஷன் செய்ய வேண்டுமென்று டாக்டர் சொல்லிவிட, யசோதா டாக்டரின் காலிலேயே விழுந்து விட்டார்..

“எப்படியாவது என் பையனை மீட்டுக் கொடுத்துடுங்க..” என்றவரின் அழுகுரலில், குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க ஆரம்பித்தது..

அவள் மட்டும் சத்தம் போட்டு அவனை டார்ச்சர் செய்யாமல் இருந்திருந்தால் இப்படியொரு நிலை வந்திருக்கவே வந்திருக்காதே.. அவள் செய்த அற்பமான செயல், இப்படி ஒருவனின் உயிரோடு விளையாடும் என்று அவள் கனவில் கூட நினைத்ததில்லை..

சத்தம் அவனுக்கு ஆகாது என்று எத்தனை தடவை கூறியிருப்பான்.. அதை காதுகொடுத்து கேட்க மறுத்து விட்டேனே தலையில் அடித்துக் கொண்டு அழவே ஆரம்பித்தாள்..

“நான் தான், நான்தான் தப்பு பண்ணிட்டேன். அய்யோஓஓஓ..” என்றவளின் அழுகுரல் அந்த அறையெங்கும் ஒலித்தது..

அப்பொழுது தான் ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்தனர் சப்துனிகாவின் வீட்டினர்..

“சப்துனிகா..” என்ற வேணியை ஓடிச்சென்று அணைத்துக் கொண்டாள் சப்துனிகா..

அழுகையென்றால் அழுகை, அப்படியொரு அழுகை வந்தது.. தான் செய்த குற்றத்திற்காக அழுதாளா? இல்லை செளந்தருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என பயந்து அழுதாளா என்பது அவளுக்கே புரியவில்லை..

ஆனால் கண்ணீர் மட்டும் ஓயவேயில்லை..

“நான் தான் அப்பத்தா தப்பு பண்ணிட்டேன்.. அவர் இந்த நிலைமைக்கு வர நான்தான் காரணம்” என்ற சப்துனிகாவை புருவம் சுருக்கிப் பார்த்தான் சபரீஸ்வரன்..

“என்ன சொல்லுற?.. மாப்பிள்ளையோட நிலைமைக்கு நீ காரணமா?” என்ற தன் தந்தையை ஓடிச் சென்று அணைத்தவள்,

“நான்தான் ப்பா காரணம்” என்றவள் தான் செய்த தப்பை அப்படியே மறைக்காமல் சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த குணசேகரனுக்கும், யசோதாவிற்கும் தூக்கிவாரிப் போட்டது..

சப்துனிகா சேட்டைகள் பண்ணுவாள் என்று தான் தெரியும். ஆனால் இப்படி வஞ்சம் வைத்து பழிதீர்ப்பாள் என கனவில் கூட அவர்கள் நினைக்கவில்லை.

“என்ன சப்துனிகா சொல்லுற?” என்ற சரணிகாவின் அருகில் செல்வதற்குள், அவள் விட்ட அறையில் தரையில் அப்படியே மடிந்து விழுந்தாள் சப்துனிகா..

தன் அன்னை முதல் முறை அறைந்ததே தாங்கிக் கொள்ள முடியாமல் மீண்டும் அழுகை தான் வந்தது..

“என்ன பண்ணி வச்சிருக்க?.. ஒரு போனை உடைச்சான்ங்கிறதுக்காக செளந்தரோட உயிரோட விளையாடிட்டீயே.. நீயெல்லாம் பொண்ணாடி..” என முகம் சுழித்த அன்னையை பரிதவிப்பாக பார்த்தாள் சப்துனிகா..

“சாரி ம்மா, நான் தப்பு பண்ணிட்டேன் ம்மா..” என சரணிகாவின் காலைப் பிடிக்கச் செல்ல, சட்டென்று அவள் காலை உதறி விட்டாள் சரணிகா..

“ச்சீ. உன்னை என் பொண்ணுன்னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்குடி..” என்றவளின் வெறுப்பு உமிழ்ந்த வார்த்தைகள் அவளின் வளவள பேச்சுக்கு விழுந்த முதல் அடி..

“அம்மாஆஆஆ” என் கண்ணீருடன் ஏறிட்டுப் பார்க்க, சரணிகாவோ முகத்தை வெறுப்பாக திருப்பிக் கொண்டாள்.. மெல்ல எழுந்து நின்ற சப்துனிகா, சபரீஸ்வரன் அருகே செல்ல,

“உன்கிட்ட இருந்து நான் இப்படியொரு செயலை எதிர்பார்க்கலை.. என் பொண்ணுக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சுத் தான் நான் வளர்த்தேன், ஆனா இப்போ தான் தெரியுது.. என் வளர்ப்பே தப்புன்னு..” என்றவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் சப்துனிகா..

“அப்பா ப்ளீஸ் ப்பா, இப்படி பேசாதிங்க ப்பா. நான் தப்பான பொண்ணு இல்லைப்பா..” என கண்ணீருடன் நின்ற சப்துனிகாவை ஏறிட்டுப் பார்த்தவன்,

“நீ பண்ண தப்பால தான் ஒருத்தன் உயிரோடு போராடிட்டு இருக்கான்.. இப்போ நீயே சொல்லு, நீ தப்பான பொண்ணா? இல்லையா?..” என்ற தந்தையை பார்த்து கேவிக் கேவி அழுதாள்..

“ஏன்க்கா இப்படி பண்ணின?..” என்ற பிரகதியை கட்டியணைத்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்..

“நான் தான் தப்பு.. நான்தான் தப்பான பொண்ணு.. நான் தான் தப்பு, நான் தான் தப்பான பொண்ணு” என சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தாள் சப்துனிகா..

அவளுக்கு செளந்தரை ரத்த வெள்ளத்தில் பார்த்ததில் இருந்தே அப்படியொரு வலி.. இதயத்தை யாரோ இரண்டாக பிளப்பதை போன்று உணர்ந்தாள்..

“ஐயம் சாரி செளந்தர்..” என உதடு கடித்து அங்கிருந்த சேரில் அமர்ந்தவளுக்கு கண்ணீர் மட்டுமே துணையாக இருந்தனர்..

அவளின் உறவுகள் கூட அவளை எட்டித் தள்ளி நிறுத்தியே வைத்தது.. அதுவே அவளுக்கு அப்படியொரு வலியைக் கொடுத்தது..

செளந்தருக்கு ஆப்ரேஷன் முடித்ததும் நார்மல் வார்டிற்கு ஷிப்ட் ஆன பின்பு யசோதா, குணசேகரன் தான் முதலில் சென்றார்கள்..

தலையில் கட்டுப்போட்டிருந்தனர். உடலில் எந்த அடியும் படவில்லை ஆனால் உடலை சற்று அசைக்கக் கூட முடியவில்லை.

தன் தாயினை சற்று கனிவாக பார்த்தான்.. யசோதாவிற்கு கண்ணீர் நிற்கவேயில்லை..

“அழாதிங்க ம்மா, எனக்கொன்னும் இல்லை..” என்றவன், தன் தாயின் கண்ணீரை துடைத்து விட்டு திரும்பிட, கலங்கிய விழிகளுடன் நின்றிருந்தார் குணசேகரன்.

அவரின் விழிகளில் அவ்வளவு தவிப்பு, தன் மகனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம், பதட்டம்.. அத்தனையும் மீறி தன் மகன் வாய் திறந்து பேசுவதை தான் கண்ணீர்த்துளிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தான்..

“எனக்கொன்னுமில்லை ப்பா.. தலை தான் ரொம்ப பெயினா இருக்கு” என்றதும் தான் தாமதம்,

“டாக்டரை வர சொல்லவா ப்பா?” என சற்று பதட்டமாக கேட்ட யசோதாவின் கரத்தினை பிடித்து தன் நெஞ்சோடு வைத்துக் கொண்டவன், “எனக்கு எதுவும் ஆகாது ம்மா, நீங்க இருக்கிற வரைக்கும் என் உயிர் இருந்துக்கிட்டே இருக்கும்..” என்றவனின் விழிகளில் கண்ணீர் வந்துக் கொண்டேயிருந்தது..

“சப்துனிகா இப்படி செய்வான்னு நான் நினைக்கலை ப்பா?” என்றவரை கண்கள் இடுங்க பார்த்தான் செளந்தர்..

“உண்மையை சொல்லிட்டாளா?” என கேட்ட செளந்தருக்கே பேரதிர்ச்சி தான்..

சப்துனிகாவின் குணத்திற்கு கண்டிப்பாக எல்லாரிடமும் பொய் தான் சொல்லுவாள் என அவன் எதிர்பார்த்திருந்தான். இப்படி உண்மையை அனைவரிடமும் சொல்லுவாள் என அவன் எதிர்பார்க்கவில்லை..

“அவளைக் கொஞ்சம் கூப்பிடுறீங்களா?” என்றதும், குணசேகரனும், யசோதாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டர்.

இருவருக்கும் இதில் விருப்பமில்லை என்பதை அவர்கள் முகமே காட்டிக் கொடுத்தது..

ஆனாலும் தன் மகனுக்காக, தன் மகனின் வாழ்க்கைக்காக அறையை விட்டு வெளியே செல்ல முயன்றனர்..

கதவருகில் அவர்கள் நெருங்கும் நேரம், “அப்படியே அவளோட அப்பா, அம்மாவையும் வரச் சொல்லுங்க” என்றவனின் விழிகளில் ஒரு வித வெறுமை…

தாலி கட்டிய பந்தம், இதற்கு மேல் அதனை இழுத்துப் பிடிப்பதில் அவனுக்கு விருப்பமில்லை..

மூன்று நாட்கள் தான் ஆகிறது திருமணம் முடிந்து என அவன் சொல்லவே முடியாதபடி, வாழ்க்கையில் பல சூழ்நிலைகளை கடந்து வந்து விட்டான்..

சப்துனிகாவுடன் வாழ வேண்டும் என்ற நினைப்பே அவனுக்குள் வரவில்லை என்பது தான் உண்மை..

ஆம், அவளுடன் வாழ வேண்டும் என்று அவன் இதுவரை நினைக்கவே இல்லை..

யோசனையின் நாயகியே மெல்ல உள்ளே நுழைந்தாள்.. அவளுடன் சபரீஸ்வரனும், சரணிகாவும் உள்ளே நுழைந்தனர்..

சப்துனிகாவின் பார்வை ஒரு கணமே ஆகினும், செளந்தரின் உடலை தான் பாந்தமாக தழுவியது..

அவன் நன்றாக இருக்கிறான்.. அவனுக்கு எதுவும் ஆகவில்லை என்றதும் ஒரு ஆசுவாசப் பெருமூச்சு எழுந்தது..

“என்ன டா இவன் இன்னும் சாகலைன்னு நினைக்கிறீங்களா சப்துனிகா?” என்றவனின் மரியாதை கலந்த பன்மை, மற்றவர்களிடத்தில் புருவம் சுருக்க வைத்தது..

“ஐயம் சாரி செளந்தர்..” என்றவளை திரும்பி ஒரு அக்கினிப் பார்வை தான் பார்த்தான். கப்பென்று தன் வாயை மூடிக் கொண்டாள் சப்துனிகா..

அவனின் பார்வை வீச்சு அத்தகையது..

“சாரி சொல்லிட்டா, எல்லாமே முடிஞ்சதுல்ல, செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டீங்கன்னு நினைச்சேன், பட் பரவாயில்லை.. உங்களுக்குள்ளேயும் ஒரு நல்ல குணம் இருக்கு போல.. செஞ்ச தப்பை ஒத்துக்கிற தைரியம்..” என்றவனின் உதடுகள் இகழ்வான புன்னகை ஒன்றை உதிர்த்தது..

அத்தோடு நிறுத்தவில்லையே, தன் விஷம் தொய்ந்த வார்த்தைகளால் சப்துனிகாவின் நெஞ்சில் ஆழமாக கீற ஆரம்பித்தான்..

“ம்ஹூம், தைரியத்தைப் பத்தி உங்கக்கிட்ட கேட்கணுமா?.. பர்ஸ்ட் நைட் நடந்திடக் கூடாதுன்னு எனக்கு தூக்க மாத்திரை கொடுத்த ஆள் தானே நீங்க..” என்றதும்… சபரீஸ்வரன், சரணிகா இருவரும் திரும்பி ஒன்று போல் அவளை பார்க்க, அவளுக்கோ பூமியில் புதைந்துக் கொள்ளலாம் போன்று இருந்தது..

“ஆனா நீங்க தப்புக் கணக்கு போட்டீங்கன்னு நினைக்கிறேன். அன்னைக்கு நீங்க தூக்க மாத்திரை போடலைன்னாலும் அங்க ஒன்னுமே நடந்திருக்காது.. ஏன்னா.” என்றவன் ஒரு கணம் நிறுத்தி,

“என்னோட மனசுல இன்னமும் நீங்க மனைவிங்கிற அந்தஸ்துக்கு வரலை..” என்றவனின் சாட்டையடி வார்த்தையில் மனதளவில் மரித்துப் போனாள் பெண்ணவள்..

இதை விட வேற என்ன இகழ்வு வேண்டும் ஒரு பெண்ணுக்கு..

“சின்ன, சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம், ஆத்திரம் எல்லாம்.. உங்களை ஒரு நாள் முழுக்க பேசாதிங்கன்னு சொன்னது.. உங்களை நான் காயப்படுத்தவோ, இல்லை நீங்க கஷ்டப்படுறதை பார்த்து சந்தோஷப்படவோ இல்லை.. உங்களோட தப்பை நீங்க உணரணும்னு நினைச்சேன்.. அதுக்குத் தான் எனக்கு இப்படியொரு தண்டனையா?” என் தன்னை கண்களால் அளந்தவாறே அவளை பார்க்க,

என்ன பதில் சொல்வாள் பெண்ணவள், பதில் சொல்லும் நிலையிலையா அவள் இருக்கின்றாள்..

“ப்ளீஸ் செளந்தர்..” என கெஞ்சும் குரலில் கேட்டவளின் குரல், பாவம் யாருக்குமே கேட்கவில்லை..

ஆம்.. சப்துனிகாவிற்கும் சத்தம் குறைவாக பேச வரும் என்பதை அந்த நிமிடம் உணர்ந்தாள்..

“என்ன பேசுனீங்க சப்துனிகா?.. கேட்கலை..” என்றவனை கண்ணீருடன் ஏறிட்டுப் பார்த்தாள் சப்துனிகா..

“ப்ளீஸ் செளந்தர், ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க.. நாம தனியா பேசலாமே”

“தனியா பேச நம்மளுக்குள்ள என்ன இருக்கு?..” என பட்டென்று கேட்டவனின் வார்த்தையில் முகம் கறுத்துப் போனது சப்துனிகாவிற்கு..

கத்தியின்றி, ரத்தமின்றி ஒருவரைக் கொல்லும் ஆயுதம் சொல் என்பதை அக்கணம் சப்துனிகா உணர்ந்தாள்.

“நாம ஹஸ்பெண்ட் அன்ட் ஒய்ஃப் செளந்தர்” என்றவளை திரும்பி பார்த்தவனின் முகம் அப்படியொரு கோபத்தில் சிவந்திருந்தது..

“உனக்கு அந்த நினைப்பு இருந்திச்சா சப்துனிகா?.. இப்போ என்னவோ சாரி, புருஷன், பொண்டாட்டின்னு என்னென்னவோ சொல்லுற.. ஆர் யூ மேட்.. மாத்தி மாத்தி பேசுற?..” என சற்று சீற்றமாக கேட்டான் செளந்தர்..

செளந்தரின் கோபத்தில் இருந்த நியாயம் சபரீஸ்வரன், சரணிகா இருவரையும் வாயடைக்க வைத்திருந்தது..

அதுவரை வாயைத் திறக்காமல் நின்றிருந்த சபரீக்கு கோபம் துளிர் விட ஆரம்பித்தது..

“அவ தப்பு பண்ணிட்டா, இல்லைன்னு நாங்க சொல்ல மாட்டோம், ஆனா நீங்க புருஷன், பொண்டாட்டிங்கிறது உண்மை தானே..” என்ற சபரீயை வெறுமையாக பார்த்தான் செளந்தர்.

“இப்போ உங்களை நான் பேச வர சொன்னதுக்குக் காரணமும் இது தான் சார்..” என்றவனை அழைப்பில் புருவம் நெறித்தான்..

“சோ என் பொண்ணை வேண்டாம்னு சொல்லுற?” என பட்டென்று சொன்ன சபரீஸ்வரனை புருவம் உயர்த்திப் பார்த்தான் செளந்தர்..

“அமைச்சர்ல சார், அதான் பட்டுன்னு புரிஞ்சிக்கிட்டீங்க, எனக்கு உங்க பொண்ணு வேண்டாம்..” என்றவனை திடுக்கிட்டுப் பார்த்தாள் சப்துனிகா.

அவள் பிரிவு என்ற ஒன்றை பற்றி யோசித்ததேயில்லையே..

“செளந்தர்..” என்ற சப்துனிகாவின் கைகளை இறுக்கப் பற்றினான்..

“மாப்பிள்ளை..” என்றவன் ஒரு கணம் அந்த வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து செளந்தரை பார்த்துக் கொண்டே, “கலெக்டர் சார் நம்ம உறவை முறிச்சிக்கலாம்னு சொல்லுறாங்க சப்துனிகா.. உனக்குப் புரியலை” என்ற தந்தையை கண்ணீருடன் பார்த்தாள் சப்துனிகா..

பேச்சு தான் உயிர் மூச்சு என வாழ்ந்து வந்தவள், அந்தக் கணம் பேச்சையே மறந்து நின்றாள்..

என்ன பேசுவது என யோசிக்கக்கூட அவளால் முடியவில்லை..

பிரிவா? தான் விரும்பியது பிரிவா? என்றவளின் நெஞ்சாக்கூடு ஏனோ காலியாக இருப்பதை போல் உணர்ந்தாள்.

அதீத வலி ஒருவரின் உயிர்ப்பு செல்களை நிறுத்திவிடும் என்பதை போல் தான் சப்துனிகாவின் சப்த நாடியும் ஒடுங்கிப் போய் நின்றாள்.

“என் பொண்ணை நான் அழைச்சிட்டுப் போறேன்..” என்ற சபரீயின் குரலில் தான், அவளுக்கு உயிரே வந்தது..

“உங்க பொண்ணை, உங்க பொண்ணாவே திருப்பி தந்துட்டேன்..” என்ற செளந்தரை தான் வெறித்துப் பார்த்தான் சபரீ..

“அப்பாஆஆ..” என்றழைத்த மகளின் கைககளை பற்றியவன்,

“உனக்கு நான் இருக்கேன் டா..” என்றவனை தொடர்ந்து பின்னால் சென்றவளின் விழிகளோ அவளையும் அறியாமல் செளந்தரை தான் பார்த்தது..

அவளின் பார்வையில் ஒரு கணம் தடுமாறித்தான் போனான் செளந்தர். இதுவரை அவளின் பாசப்பார்வையை கண்டிராதவன், கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான்.

அவளுடன் வாழ்ந்த காலங்களே போதும் என்று நினைத்து விட்டான் போல.
 

Madhusha

Well-known member
Wonderland writer
_c2456afa-8f77-4771-a975-87c6a38015fa.jpg_cfc28528-9994-4360-b9c0-8cf36ce7768b.jpg




அத்தியாயம் 14

தன் தாயின் தோளில் சாய்ந்தவாறே அமர்ந்திருந்த சப்துனிகாவின் கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டேயிருந்தது..

“அழாதே குட்டி, நான் பார்த்துக்கிறேன்..” என்ற அப்பாவின் ஆறுதல் வார்த்தைகளோ,

“என்னால தான்டி எல்லாமே, நான் தான் கூறு கெட்டுப் போய் உங்களுக்கு கல்யாணம் பண்ணணும்னு பிடிவாதம் பிடிச்சேன்.. இல்லைன்னா என் புள்ள வீட்டுல சந்தோஷமாவது இருந்திருக்கும்..” என கண்ணீருடன் சொன்ன வார்த்தைகளோ,

“அக்கா, நீ எதுக்கு இப்படி அழுதுக்கிட்டு கிடக்க?.. நான் இருக்கேன் உனக்கு.. மாமா கூட நான் உன்னை சேர்த்து வைக்கறேன்..” என பிரகதியின் பாசமான வார்த்தைகளோ, சப்துனிகாவின் கண்ணில் வழியும் கண்ணீரை அணைப் போட்டு தடுக்க முடியவில்லை..

“தன்னால் தான் எல்லாம், தான் இவ்வளவு கேவலமான பிறவியா?.. ஒருவர் கஷ்டத்தில் நான் சிரித்திருக்கிறேனா?..” என நினைக்கும் போதே அவளுக்கு மனம் தாளவில்லை..

கண்களோ கண்ணீரை உகுத்துக் கொண்டேயிருக்க,

“போதும்டா தங்கப்புள்ள..” என்ற வேணியின் மடியிலேயே சாய்ந்து விட்டாள் சப்துனிகா..

அப்படியொரு அழுகை அவள் அழுததே அன்று தான் அனைவரும் பார்த்தனர்..

கோபத்தில் எப்பொழுதும் சத்தம் போட்டு தன் உணர்வுகளை அடக்கும் பெண்ணவள், இப்பொழுது சத்தம் என்கின்ற வார்த்தையைக் கூட அறவே வெறுத்தாள்..

“நீ உன் ரூமுக்கு போ ம்மா..” என்றதும் தன்னறைக்குச் சென்றாள் சப்துனிகா..

அவளின் படுக்கையறை அவ்வளவு சுத்தமாக இருந்தது.. நேராக சென்று கட்டிலில் அமர்ந்தவள், நிமிர்ந்து பார்க்க.. அங்கு அவளின் கல்யாண போட்டோ தான் மாட்டப்பட்டிருந்தது..

அதைப் பார்க்க, பார்க்க மனம் தாங்காமல் இன்னும் அழுகை வந்துக் கொண்டேயிருந்தது..

மெதுவாக எழுந்தவள், தன்னெதிரில் இருந்த போட்டோவின் மெல்ல கழற்றி எடுத்தாள்..

தன் கைகளை இருந்த செளந்தரின் முகத்தினை வருடிக் கொடுக்க, மாந்தோப்பில் சிரித்த அவனின் முகம் தான் அவளுக்குள் வந்துப் போனது..

இந்த சிரிப்பை தானே தொலைக்க வைத்து விட்டோமே, என நினைக்கும் போது விம்மி வெடித்து அழுதாள்..

“செளந்தர், ஐயம் சாரி..” என நிஜத்திடம் கேட்க முடியாத மன்னிப்பை, நிழலிடம் வேண்டி நின்றாள்..

“நான் தான் எல்லா தப்பும் பண்ணிட்டேன்.. நான் தான் தப்பு..” என கண்ணீருடன் படுக்கையில் சென்று அமர்ந்தவளின் கைகளோ அவளையும் அறியாமல் அவனின் நிழற்படத்தை வருடிக் கொடுத்தது..

அவர்களின் கல்யாண போட்டோவில் கண்ணீர்த்துளிகள் விழுந்துக் கொண்டேயிருந்தது..

“சப்துனிகா, சப்துனிகா..” என்ற சரணிகாவின் குரல் கேட்டதும், சட்டென்று தன் மடியில் இருந்த போட்டோவினை தூக்கி கட்டிலில் தலையணைக்கு அடியில் ஒளித்து வைத்தாள்..

“சாப்பிடு ம்மா..” என்ற அன்னையின் கையில் இருந்த தட்டினை வெறித்துப் பார்த்தாள்..

வேகமாக தன் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தவள், செளந்தருக்கு தான் அழைத்தாள்..

முதல் அழைப்பு எடுக்கப்படாமல், இரண்டாவது அழைப்பு உடனே எடுக்கப்பட்டது..

“செளந்தர், செளந்தர்.. நான் பேசுறதா கேட்குதா?..” என ஏக்கம் நிறைந்த குரலில் கேட்டாள் சப்துனிகா..

“ம்ம்..” என்ற உறுமல் மட்டுமே பதிலாக கேட்டது அவளுக்கு..

“சாப்பிட்டீங்களா?.. மாத்திரை போட்டீங்களா?..” என்றவளை தான் அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்..

யசோதா உள்பட, அந்தப் போனை அட்டென்ட் பண்ணி ஸ்பீக்கரில் போட்டதே அவர் தான்..

அவளின் அக்கறை நிறைந்த குரல், ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது..

“லிசன் சப்துனிகா, இனிமேல் எனக்கு கால் பண்ணாதிங்க..” என்றவன், போனை அணைத்து வைக்கும்படி தன் தாய்க்கு கண்ணால் சைகை செய்ய, அவரும் போனை அணைத்து விட்டார்..

சப்துனிகா தொடரந்து போன் போட்டுக் கொண்டேயிருந்தாள்.. அவளுக்கு செளந்தரிடம் எப்படியாவது தன் உறவை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே..

ஸ்வீட்ச் ஆஃப், ஸ்வீட்ச் ஆஃப் என தொடர்ந்து வந்துக் கொண்டேயிருக்க, தன் கையில் இருந்த போனை சுவற்றில் ஓங்கி அடித்தாள்..

புது போன் வாங்கி முழுதாக ஒரு நாள் கூட ஆகியிருக்காது.. அது வீணாகத் தான் போனது..

அவன் போனை எடுத்ததையும், செளந்தருக்கு அழைத்ததையும் பார்த்துக் கொண்டேயிருந்தாள் சரணிகா..

அவளின் கோபம், ஒரு நொடியேனும் சபரீஸ்வரனின் கோபத்தைக் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது..

அவனும் இப்படித்தானே, கோபம் என்று வந்து விட்டால், கண் மண் தெரியாமல் நடந்துக் கொள்வான்.. அதைப் பழக்கம் தன் பெண்ணுக்கு வந்திருப்பதை இப்பொழுதுதான் உணர்ந்தாள்..

“சப்துனிகா என்ன பழக்கம் இது?.. நேத்து மதியம் தானே புது போன் வாங்குன?.. இப்போ உடைச்சி வச்சிருக்க..” என கண்டிப்புடன் கேட்ட அன்னையின் மடியில் படுத்தவள்,

“எனக்கு செளந்தர் பக்கத்துலேயே இருக்கணும்னு தோணுதும்மா..” என்றவளின் குரல், அழுதழுது கரகரத்து ஒலித்தது..

“நாளைக்கு பார்க்கப் போகலாம் டா, இன்னைக்கு கொஞ்சமா சாப்பிட்டுட்டு தூங்கு..” என்றவள், அழுதுக் கொண்டிருந்த சப்துனிகாவிற்கு சாப்பாட்டை ஊட்டி விட்டாள்..

முதலில் வாங்கவே மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டிருந்தவள், சரணிகாவின் மிரட்டலில் தான் சாப்பாட்டை மெல்ல முழுங்கினாள்..

சாப்பாட்டை ஊட்டி முடித்தவள், தன் மடியிலேயே சப்துனிகாவை உறங்க வைக்க, மெல்ல விழிகளை மூடினாள் சப்துனிகா..

மனதளவில் மிகவும் துவண்டு விட்டாள் என்பது நன்றாக புரிந்தது..

அவளுக்கு சாப்பாட்டை ஊட்டிவிட்டு சில்லு சில்லாய் உடைந்துக் கிடந்த செல்போனை சத்தம் படுத்தியவர், சிம்மை கழற்றி டேபிளின் மேல் வைக்கும் நேரம் தான், தலையணைக்கடியில் இருக்கும் கல்யாண போட்டோ கண்ணில் பட்டது.

சப்துனிகாவின் தூக்கம் கலையாதவாறு அதை எடுத்துப் பார்த்த சரணிகாவின் விழிகளில் அப்படியொரு கலக்கம்.

தன்னால் தான் தன் பெண்ணுக்கு இப்படியொரு நிலைமையா?.. அன்றே கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாளே, நான் தானே மிரட்டி சம்மதிக்க வைத்தேன்..

அன்று மட்டும் அப்படி செய்யாமல் இருந்திருந்தால், தன் பெண் இந்நிமிடம் சிரித்தபடி இருந்திருப்பாளே, என்ற குற்றவுணர்ச்சி சரணிகாவை கொல்லாமல் கொல்ல ஆரம்பித்தது..

“நான் தப்பு பண்ணிட்டேனா செளந்தர்..” என கலக்கத்துடன் கேட்டார் யசோதா தன் மகனிடம்..

அவரை சட்டென திரும்பி பார்த்தான் செளந்தர்.. அவர் கண்கள் கலங்கி கண்ணீர் வந்தது..

“என்னாச்சி ம்மா?.. எனக்குத் தான் ஒன்னுமில்லையே..” என்றவனை கண்ணீருடன் ஏறிட்டுப் பார்த்தவர்,

“அம்மாவை மன்னிச்சிடு ப்பா, உன் சிரிப்பை பார்க்கணும்னு ஆசைப்பட்டுத் தான் சப்துனிகாவை கல்யாணம் பண்ணி வச்சேன்.. ஆனா அவ இப்படி பண்ணுவான்னு நான் கனவுல கூட நினைக்கலை..” என சற்று வருத்தமாக சொன்ன யசோதாவின் வேதனை அவனுக்கு புரியாமல் இல்லை..

ஆனால் அவனால் சப்துனிகாவை தன் துணையாக ஏற்க முடியவில்லையே.. முதல் நாள் தன்னை மயங்க வைத்ததைக் கூட அவன் எப்பொழுதோ மறந்து விட்டான்..

அதைத் தாண்டிய நடந்த எதையும் தான் மறக்க முடியாமல் திணறினான்.. கடைசியாக தான் பாத்ரூமில் தவிக்கும் பொழுது, அவள் சத்தத்தை அதிகமாக வைத்ததை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..

இப்படி குணமுள்ள ஒருத்தியுடன் தான் வாழ்வதா? என்ற நினைப்பே.. அவளை விட்டு அவனை விலக்கி வைத்து விட்டது..

யசோதா தன்னை நினைத்து அழுவதையும் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..

“அம்மாஆஆ.. பசிக்குது..” என அவரை வேறு திசையில் திருப்புவதற்காக செளந்தர் மெல்லிய குரலில் கூறினான்..

“தலையில ஆப்ரேஷன் பண்ணியிருக்கே.. நான் டாக்டர்க்கிட்ட சாப்பிட என்ன கொடுக்கலாம்னு கேட்டுட்டு வர்றேன்..” என்றவர் வேகமாக அறையை விட்டுச் செல்ல கண்களை மூடியபடி படுத்திருந்தான் செளந்தர்..

அவனுக்குப் பசி என்ற உணர்வே அப்போதைக்கு இல்லை.. ஆனாலும் தன் தாய் தன்னை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..

சப்துனிகாவிற்கும் செளந்தர்க்கும் இருக்கும் இடைவெளியின் காரணமே இது தான்..

செளந்தர் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வான். அவர்களுக்காக தன்னுடைய சொந்த விருப்பு, வெறுப்புக்களை மாற்றிக் கொள்வான்..

ஆனால் சப்துனிகா மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளவும் மாட்டாள்.. அதை மதிக்கவும் மாட்டாள்.. தன்னுடைய விருப்பம், தன்னுடைய வாழ்க்கை, அதை தன் இஷ்டப்படி தான் நடத்திக் கொள்வேன் என்ற கொள்கை தான் அவளுடையது..

சரணிகா பால்கனியில் நின்றிருந்த சபரீஸ்வரனின் அருகில் செல்லவே தயங்கி நின்றாள்..

தன் மகள் வாழ்க்கையை ஏன் கெடுத்தாய்? என தன்னை பார்த்து ஒரு வார்த்தை கேட்டுவிடுவானோ? என்ற பயம் அவளுக்குள் அதிகமாக வர ஆரம்பித்திருந்தது..

“ஏங்க..” என்றழைப்பில் சட்டென்று திரும்பி நின்றான் சபரீ..

ஒரு வார்த்தைக் கூட எதிரில் இருப்பவளை பார்த்து பேசவில்லை.. அவனின் மெளனமே இவளைக் கொல்ல ஆரம்பித்தது..

“சாரிங்க.. நான்..” என்றவளை ஒற்றைக் கையை உயர்த்தி தடுத்து நிறுத்தியவன், “இதுவரைக்கும் நீ என்ன வேணும்னாலும் பண்ணியிருக்கலாம். இனி மேல் சப்துனிகா வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன்..” என்றவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் சரணிகா..

எங்கே செளந்தரையும், சப்துனிகாவையும் பிரித்து வைத்து விடுவானோ, என்ற பயம் அவளுக்கு வந்தது..

அவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று தானே இந்த நிமிடம் வரை நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

அவளின் பயம் கலந்த முகத்தைப் பார்த்த சபரீ, “இங்கே பாரு சரணிகா, என் பொண்ணுக்கு அந்தப் பையனை பிடிக்கலைன்னா, இனி நியில்லை, செளந்தரை திரும்பி வந்தாலும், என் பொண்ணை அவன்கூட நான் அனுப்பி வைக்க மாட்டேன்..” என்றவனின் எஃகு போன்று இரும்புக்குரலில் இவளுக்கு நெஞ்சே அடைத்துக் கொண்டது..

‘அனுப்பி வைக்கமாட்டானா?.. அப்படியென்றால் தன் பெண்ணின் வாழ்க்கை..’ என மனதுக்குள் தவித்தபடி,

“இன்னைக்கு தான் ஹாஸ்பிட்டல்ல அவ அழுததை பார்த்தீங்களே?..” என்றவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான் சபரீ.. அவனின் பார்வையில் திருதிருவென முழித்தாள் சரணிகா..

அவளின் கள்ள விழி பார்வையில் கள்வனின் மனமும் ஒரு நிமிடம் கொள்ளைக் கொண்டு போனது..

“குற்றவுணர்ச்சியில அழுவுறதுக்கும், அவன் மேல இருக்கிற காதல்ல அழுகிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு சரணிகா.. அவ இப்போ அழுதது. குற்றவுணர்ச்சில, காதல்ல இல்லை..” என்றவனை குழப்பத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள் சரணிகா..

“அப்போ ரெண்டு பேருக்கும் இடையில காதலே வராதா?..”

“வரலாம்.. வராமலும் போகலாம்.. இனி அவுங்க வாழ்க்கையை நீயோ, உன் ப்ரெண்டோ முடிவு பண்ண முடியாது.. அவுங்க வாழ்க்கை அவுங்க கையில..” என்றவன் கட்டிலில் படுத்து உறங்க ஆரம்பித்து விட, உறங்காமல் முழித்து இருந்தது என்னவோ சரணிகா தான்..

“இவுக பேசுறதை பார்த்தா? பக்கு, பக்குன்னு அடிச்சிக்குதே..” என்றவள் தன் மகளை நினைத்துக் கவலையிலேயே உழன்றுக் கொண்டிருந்தாள்..

காலை 7 மணியளவில் சப்துனிகாவிற்கு காஃபி எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் சரணிகா..

அவள் உள்ளே நுழைந்த நேரம் அறை அவ்வளவு சுத்தமாக இருந்தது..

படுத்திருந்த பெட்ஷீட் மடிக்கப்பட்டிருந்தது..

“எங்கே போனா இவ?..” என பாத்ரூம் கதவை தட்ட, அது சட்டென்று திறந்துக் கொண்டது..

“சப்துனிகா.. சப்துனிகா..” என அழைத்துக் கொண்டே பால்கனியில் இருந்த வீட்டின் தோட்டத்தை எட்டிப் பார்க்க, அங்கு எல்லாம் சப்துனிகா இருக்கும் அறவே தெரியவில்லை..

ஒரு வித பதட்டமும், பயமும் மனதை கவ்விக் கொள்ள, வேகமாக வீடெங்கும் தேட ஆரம்பித்தாள்.. “சப்துனிகா.. சப்துனிகா..” என்றவளின் சத்தத்தில் வீட்டில் இருந்த அனைவரும் முழித்து விட்டனர்.

“என்னாச்சி?..” என்ற சபரீஸ்வரனின் அதட்டலான குரலில், அழுகையுடனே, “சப்துனிகாவை காணும்ங்க..” என்றவளை கண்கள் இடுங்க பார்த்தான்..

“வீடு புல்லா ஒழுங்கா தேடு..”

“நான் நல்லா தேடிட்டேன்ங்க..” என்றவளை தாண்டி வீட்டில் இருந்த அனைவரும் தேட ஆரம்பித்தனர்..

அத்தனை பேரும் ஒன்று போல் வந்து சொல்லியது என்னவோ சப்துனிகா வீட்டில் இல்லை என்று தான்..

வீடே தன்னை ஜல்லடை போட்டு தேடுவதைப் பற்றி அறியாமல், ஹாஸ்பிட்டலில் படுத்திருந்த செளந்தரை தான் கண்ணிமைக்கால் பார்த்துக் கொண்டிருந்தாள் சப்துனிகா..
 

Madhusha

Well-known member
Wonderland writer
_b6830e3b-79f8-4756-aa3d-a12de41c6246.jpg

அத்தியாயம் 15

விடியற்காலை 5 மணிக்கே அவள் ஹாஸ்பிட்டலுக்கு வந்து விட்டாள்.. அவளால் தன் வீட்டில் சிறிது நேரம் கூட இருக்க முடியவில்லை.

காலை விடியாத பொழுதில் ஹாஸ்பிட்டல் வந்து நிற்பவளை பார்த்து செக்யூரிட்டி அனைவரும் வழி தான் விட்டனர்.

பின்னே வந்திருப்பது மினிஸ்டரின் காரில் அல்லவா. அதற்கான அங்கீகாரம் அவளுக்கு கிடைத்தது..

இவள் செளந்தர் இருக்கும் தளத்திற்கு செல்ல, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி புருவத்தை சுருக்கினாலும், வழியை விட்டுத் தான் நின்றார்..

உள்ளே நுழைந்தவளுக்கு அந்த அறையெங்கும் கும்மிருட்டு பரவியிருப்பது நன்றாக தெரிந்தது..

மெல்லிய விடிவிளக்கின் உதவியால் கண்களை சற்று கூர்மையாக்கியபடி உள்ளே நுழைந்தவள் முதலில் ஆன் பண்ணியது லைட்டை தான்..

ட்ரிப்ஸின் உதவியால் தூங்குபவனை தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

விழிகளில் ஒரு வித கனிவு.. இவன் தன்னவன் என்ற எண்ணம் அவளையும் அறியாமல் அவளுக்குள் வந்தது தான் விந்தையிலும், விந்தை..

தலையை சற்று இதமாக வருடி விட்டாள்.. அவளின் வாசத்தை அவனும் உணர்ந்தான் போன்று முக்கை சுருக்கினான்..

“யாரு?..” என்ற யசோதாவின் குரலில் சட்டென்று திரும்பினாள் சப்துனிகா..

அவள் லைட்டை ஆன் பண்ணியதும் எழுந்த யசோதாவிற்கு, சப்துனிகாவின் பின்பக்க தோற்றம் தான் கண்ணில் பட்டது.

அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு குற்றவுணர்ச்சி தாங்க முடியவில்லை.

அவளின் மேல் அவர் வைத்த நம்பிக்கையை சுக்குநூறாக அல்லவா உடைத்து விட்டாள்.. அந்த குற்றவுணர்ச்சி அவளுக்கு அளவுக்கு அதிகமாகவே இருந்தது..

“சாரி அத்தை” என தலை கவிழந்து சொன்ன சப்துனிகாவை பார்த்த யசோதாவிற்கு, அவளை திட்டவும் மனதில்லை..

அவளை தன் மகனுடன் மறுபடியும் சேர சொல்லவும் விருப்பமில்லை.. மறக்குமா அவருக்கு?.. அவரின் மகன் இருந்த கோலம்.. அதற்கு காரணம் அவள் தான் என்பதை நேற்றிரவே செளந்தர் குணசேகரன், யசோதா இருவரிடமும் சொல்லி விட்டான்..

அதனால் வந்த அமைதி தான் அவருக்கு..

“அம்மாஆஆ” என்ற குரலில் இருவரும் ஒன்று போல் படுக்கையை பார்க்க, அங்கு செளந்தர் தான் சற்று எழுவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தான்..

தலையில் மட்டுமல்லாது, விழுந்த வேகத்தில் உடலிலும் சிறு சிறு உள் காயங்கள் ஏற்பட்டிருந்தது போல.. உடல் முழுவதும் அடித்துப் போட்டாற் போன்று வலித்தது..

“செளந்தர்.” என யசோதா அவனுக்கு உதவி செய்வதற்கு முன்பாக, வேகமாக சப்துனிகா சென்றாள்..

அவன் கைகளைப் பிடித்து தோளோடு அணைக்கச் செல்ல, சட்டென்று அவளின் கைகளை விட்டு விலகி அமர்ந்தான் செளந்தர்..

அவனின் விலகல் அவளுக்கு அப்படியொரு வலியைக் கொடுத்தது.

“செளந்தர்” என்றவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை..

மெதுவாக எழுந்து அமர்ந்தவன், அவனாகவே மெல்ல எழுந்து பாத்ரூமிற்குள் நுழைந்துக் கொண்டான்..

“நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்க மாட்டீயே?..” என்றவரை நோக்கி திரும்பினாள் சப்துனிகா..

“ம்ம்.” என்றபடி கைகளை கட்டிக் கொண்டு நின்றாள். அவரின் பேச்சிலேயே புரிந்துக் கொண்டாள் விதண்டாவாதமாக ஏதோ சொல்லப் போகிறார் என்று..

அதனால் வந்த அலட்சியம் அவளுக்கு..

“அவனைக் கொஞ்ச நாளைக்கு தொல்லை பண்ணாம இருந்தா, நாங்க பெரியவங்களே பேசி ஏதாவது நல்ல முடிவா எடுக்கிறோம்..” என்ற யசோதாவை தீப்பார்வை பார்த்தாள் சப்துனிகா..

அவளின் பார்வையில் எச்சில் விழுங்கினார் யசோதா..

“இங்கே பாருங்க, நீங்களும் சரி, எங்க அம்மாவும் சரி எங்க வாழ்க்கையில கூடி கும்மியடிச்சி எல்லாம் போதும்.. இனிமேல் எங்க வாழ்க்கையை நாங்களே பார்த்துக்கிறோம்..” என்றவள், ‘சரியா’ என்பதை போல் தலையசைக்க, யசோதாவும் சேர்ந்து மண்டையாட்டினார்..

கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், அப்படியே அப்பாவி போல் முகத்தை வைத்தவளை தான் அதிர்ச்சியாக பார்த்தார் யசோதா..

தன்னிடம் பேசும் போது அவள் காட்டிய பாவனை என்ன? இப்பொழுது அவள் காட்டும் பவ்வியம் என்ன? என நினைத்தவருக்கு, ஒரு விதம் பயமும் மனதோடு வந்துப் போனது..

“நீ இங்கே என்ன பண்ற?..” என்ற செளந்தரை பார்த்து சிரித்தவாறே, “உங்களை தான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்..” என்றவளை பார்ததுக் கொண்டே, அந்த அறையில் இருந்த கடிகாரத்தைப் பார்க்க, அதில் மணி 5.30 என்று காட்டியது..

“இப்போ மணி என்ன ஆனா எனக்கென்ன?.. என் புருஷன் உங்களைப் பார்க்க எனக்கு நேரங்காலம் எல்லாம் ஒன்னும் வேண்டாம்” என்றவளை ஒற்றைப் புருவம் உயர்த்திப் பார்த்தான்..

‘கலெக்டரு என்ன யோசிக்குது தெரியலையே?’ என மனதோடு நினைத்தவள், “நான் நேத்தே எல்லாத்தையும் உங்க அப்பா, அம்மாவை வச்சிப் பேசிட்டேன்.. இனிமேல் நம்மளுக்குள்ள எதுவும் சரிப்பட்டு வராது.. நாம டிவோர்ஸ் பண்ணிக்கலாம்.. ரெண்டு பேரும் மியூச்சுவலா டிவோர்ஸ் பண்ணிக்கிட்டா ரெண்டு பேருக்குமே நல்லது..” என்றவனை அழுத்தமாக கைகளை கட்டியபடி நின்றுப் பார்த்தாள் சப்துனிகா..

அவள் கண்களில் இருந்த திமிர் சற்றும் குறையவில்லை.

அவளுக்கு நன்றாக தெரியும் அவன் இப்படித்தான் ஏதாவது சொல்லுவான் என்று..

ஊஃப் என இதழ் குவித்து ஊதியவள், யசோதாவின் அருகில் சென்றாள்..

அவளுக்கு திகிலடித்தாற் போன்று இருந்தது.. அவள் எந்த நேரம் என்ன செய்வாள் என்பதை தான் யாராலும் கணிக்க முடியாது..

‘எதையாவது எடுத்து என் மண்டையில போட்டுடுவாளா?’ என சற்று பயப்பார்வை சப்துனிகாவை பார்க்க,

யசோதாவின் அருகில் மெல்ல குனிந்தவள், “இப்படியே மகனும், மருமகளும் சண்டை போடுறதையே பார்த்துட்டு இருந்தா.. பேரக்குழந்தைகளை எப்போ பார்க்கிறது” என்றவளை கண்களை விரித்துப் பார்த்தார் யசோதா..

‘பேரக்குழந்தையா?.. அந்தச் சொல்லே அவருக்கு தித்தித்தது.. அவரின் ஒரு நொடி சந்தோஷம் அவரின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது..

அதைப் பார்த்த சப்துனிகாவிற்கே பாவமாகிப் போய் விட்டது..

“அத்தை, நீங்க கேன்டீன்ல போய் டீ, காபி குடிச்சிட்டு. எனக்கு டீயும், மசால் வடையும், உங்க பையனுக்கு பாலும், பண்ணும் வாங்கிட்டு வாங்க.. அதுவரைக்கும் உங்க புள்ளையோட உயிருக்கு நான் பாதுகாப்பு.. போங்க.” என்றவள் செளந்தரிடம் திரும்ப,

அப்பொழுதும் யசோதா போகாமல் அங்கேயே நின்றிருந்தார்..

அவரின் அசைவற்ற நிலையை உணர்ந்தவள், “அட.. அட.. அடடா, இங்கேயே நின்னுட்டா இருந்தா என்ன அர்த்தம்?.. போங்க..” என யசோதாவின் தோள் பற்றி வெளியே அழைத்துச் சென்று விட்டவள், கதவை அடைத்துக் கொண்டு கையைக் கட்டியபடி செளந்தரை தான் பார்த்தாள்..

அவனோ அவளை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.. அதற்கெல்லாம் அஞ்சுபவளா அவள்?..

அவனையே பார்த்துக் கொண்டே அன்னநடையிட்டு நடந்தே வந்தாள். அவளின் ஆளை விழுங்கும் பார்வையில் அவன் தான் முகத்தை திருப்பியபடி அமர்ந்திருந்தான்..

அவளின் விழிகளில் அவனைத் தவிர வேறெதுவுமில்லை..

“சோ என்னைப் பிரியணும்னு ரொம்ப உறுதியா இருக்கீங்க போல..” என்றவளின் பார்வையோ அவனைக் கொத்திக் கூறுப் போட காத்திருந்தது கத்தியால் அல்ல.. காதலால்..

“ஆமா என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை..” என்றவனின் முன்பாக வந்து நின்றாள்.. அவன் அமர்ந்திருந்தான், அவளுக்கு நேர் எதிரே அவள் நின்றிருந்தாள்..

முகத்தை திருப்பியபடி அமர்ந்திருந்தவனின் கழுத்தை, அவனுக்கே வலிக்காத அளவிற்கு பற்றி, தன்னைப் பார்க்க வைத்தாள்.. அவன் முதலில் பார்த்தது என்னவோ கழுத்திற்கு கீழான பகுதியை தான்..

அவன் பார்வை சென்ற இடத்தை அவளும் அறிவாள்.. அவள் இதழில் சிறு சிரிப்பு..

“சோ கலெக்டர் சாருக்கு நான் வேண்டாம்” என்றவளின் கைகளோ மெல்ல அவனின் நாடியைப் பற்றி வருடியது..

“ஆமா வேண்டாம்..” என்றவனின் குரலில் சற்று தடுமாற்றம். ஒரு பெண்ணின் அருகாமையை முதல் முறை உணர்கிறான்.. கல்யாணம் முடிந்து ஒரே அறையில், ஒரே படுக்கையில் இருக்கும் பொழுது உணராத நெருக்கத்தினை இப்பொழுது தான் உணர்ந்தான்..

“ஸ்டே அவே சப்துனிகா..” என்றவனின் இதழ்களை அழுத்தமாக கவ்விக் கொண்டாள்..

முதல் முத்தம் இருவருக்குமே..

இருவரையுமே தடுமாற வைத்தது. அவன் கண்களை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் சப்துனிகா..

திடீரென்று நடந்த இதழ் யுத்தத்தில் அவன் கண்கள் மூட மறுத்தது.. தன்னை முத்தமிடும் பெண்மையின் அழகிய நயனங்களை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தான்..

இரு இதழ்களும் பிரிய மறுக்க, தன் இதழ்களை மெல்ல அவன் இதழ்களில் இருந்து பிரித்தெடுக்க, சட்டென்று அவளின் கீழ் அதரங்களை அழுத்தமாக கவ்விக் கொண்டான் செளந்தர்..

அவன் தன்னை முத்தமிடவும், அதுவரை மூடியிருந்த விழிகளில் மெல்ல மொட்டவிழ்ந்த பூவாய் மலர, அதுவரை மூடாத செளந்தரின் இமைகள் முத்தம் தந்த கிறக்கத்தில் தானாக மூடிக் கொண்டது..

முத்தத்தில் வன்மையை அறிந்தனர் இருவரும்.. அவளின் கைகள் தானாக அவன் தோளை அழுத்தமாகப் பற்றிக் கொண்டது..

அவளை வேண்டாம் என்று சொன்ன இதழ்களுக்கு, அவள் இதழ்களாலேயே தண்டிக்க ஆரம்பித்தாள்..

அவளை வேண்டாம் என்று சொன்னவனோ அவள் இதழ்களிடம் இருந்து பிரிய முடியாமல் தவித்தான்..

அதுவரை உணராத பெண்மையின் வாசம், அவனை சுண்டியிழுக்க, அவன் கைகளை தானாக உயர்ந்து அவளின் இடையைப் பற்றிக் கொண்டது..

அவர்களின் முத்த யுத்தத்தை தடை செய்வது போன்று “டக்.. டக்..” என கதவு தட்டும் சத்தம் கேட்டது..

சட்டென்று ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து நின்றனர்..

செளந்தர் தன் தலையில் தானே அடித்துக் கொள்ள, அடிப்பட்ட இடத்தில் சுளீரென்ற வலியைக் கொடுத்தது..

அங்கு நுழைந்தது என்னவோ யசோதா தான்..

அவள் கேட்டவாறு அனைத்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார்..

“நீங்க டீ குடிக்கலையா?” என சப்துனிகா கேட்க,

“நான் போய் ஒரு மணி நேரம் ஆகுது..” என்றவரை பார்த்து தன் முட்டைக் கண்களை விரித்தாள் சப்துனிகா..

அவளின் மனமோ, “அவ்வளவு டீப்பாவா கிஸ் பண்ணோம்” என நினைத்துக் கொண்டே, வாசல் வரை சென்றவள், திரும்பி செளந்தரை பார்க்க.. அவனும் அக்கணம் அவளை தான் திரும்பி பார்த்தாள்..

அவள் இதழ்களும் சற்று தடித்திருந்தது.. அவனின் இதழ்களும் சற்று தடித்திருந்தது…

“வரட்டுமா” என வாயால் அசைத்து, அவனுக்கு ஒரு ப்ளையிங் கிஸ் கொடுத்து விட்டு சென்றவளை பார்த்து செளந்தரின் முகத்தில் எந்த வித உணர்வுகளும் இல்லை..

ஆனால் மருத்துவமனை விட்டு வெளியே வந்த சப்துனிகாவின் இதழ்களில் சிறு வெட்கம் கலந்த புன்னகை..

காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைய, அங்கு வீடே கலவர பூமியாக இருந்தது..

“என்ன பண்றாய்ங்க?..” என அங்கிருந்தவர்களை நோட்டமிட்டுக் கொண்டே உள்ளே நுழைய,

“எங்கக்காவை தான்டா காணும்?.. தேடுங்க.. மதுரையில எங்கேயிருந்தாலும் தேடுங்க..” என்ற பிரகதியின் பதட்டமான குரலைக் கேட்டு அதிர்ந்து நின்றாள் சப்துனிகா..

“ஏது என்னைக் காணுமா?.. நான் தான் முழுசா நிக்கிறேனா டா உன் கண்ணு முன்னால..” என்றவள் அப்பொழுது தான் அறிந்தாள் அவன் கண் கண்ணாடி போடவில்லை என்பதை..

“அட லூசு தம்பி..” என்றவள், அவனைக் கடந்து செல்ல, சபரீ தான் அவளை முதலில் பார்த்தது..

“சரணிகா, சப்துக்குட்டி…” என்றதும், அதுவரை அழுதுக் கொண்டிருந்த சரணிகா மெல்ல திரும்பியவளின் கண்களில் சிக்கியது என்னவோ, தடித்து வீங்கியிருந்த இதழ்கள் தான்..

அவளையே உற்றுப் பார்த்த அன்னையை பார்த்து திருதிருவென முழித்தாள் சப்துனிகா..

“எங்கேடி போன காலையில?..” என்ற சரணிகாவின் பார்வை, இன்னும் அவள் உதட்டை விட்டு அகல மறுத்தது..

‘என்னத்துக்கு இந்தம்மா இப்படி குறுகுறுன்னு பார்க்குது?.. கிஸ் அடிச்சதை கண்டுபிடிச்சிருச்சா என்ன?.. நம்ம அம்மாவுக்கு அவ்வளவு அறிவு இல்லையே?.. ஒரு வேளை அப்பாக்கூட சேர்ந்து ஜேம்ஸ் பாண்டா மாறிடுச்சோ?..’ என உள்ளுக்குள் அத்தனை கள்ளத்தனத்தையும் வைத்துக் கொண்டே, வெளியே ஒன்றும் தெரியாத அப்பாவியைப் போல் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டாள்..

“நான் செளந்தரை பார்க்கப் போனேன் ம்மா” என்றவளை, சரணிகா மேலும் உற்றுப் பார்க்க,

‘அய்யய்யோஓஓ.. என்னைப் பெத்த ஆத்தா எதையாவது கண்டுபிடிக்கிறதுக்குள்ள நாம ரூம்க்கு ஓடிருவோம்..’ என நினைத்தபடி, தன்னறைக்குள் ஓடியவள், தன்னருகில் நின்றிருந்த பிரகதியை ஒரு இடி இடித்து விட்டுச் சென்று விட, அவன் மோதி நின்றது என்னவோ சபரீ மேல் தான்..

தன் தந்தையின் மேல் இடித்தது தெரிந்ததும், “சாரிப்பா” என கைகளை கட்டியபடி சொன்னவனை பெரூமூச்சு விட்டுப் பார்த்தான் சபரீ..

அடுத்த ஒரே மாசத்தில் செளந்தர் காணாமல் போயிருந்தான்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top