பிழை திருத்தம்
10
கண்கள் கலங்கி நின்ற லக்ஷனா வை பார்த்து அமிர்தமும், யோகதிற்க்கும் கண்ணீர் வழிந்தது.
லக்ஷனாக்கு ஐந்து வயது , தீபாவளி பண்டிகையை தன் பிறந்த வீட்டில் கொண்டாட,லட்சுமியும்,தனராஜ்ம் பெரியவீட்டிற்க்கு வந்தனர்.
வீட்டில் விஷசமாக இருந்தாலும் பண்டிகை நாட்களாக இருந்தாலும், லட்சுமி தன் கணவன் குழநாதையுடன் தன் பிறந்த வீட்டில் வந்துதான் கொண்டாடுவார்கள்.
தன்ராஜ்ம் சொந்த தாய்மாமன் வீடு தானே என்று உரிமையுடன் வந்துவிடுவார்.
தீபாவளி பண்டிகையை மொத்த குடும்பமும் ,குழந்தைகளுடன் சந்தோஷமாக கொண்டினர், அந்த குடுமமே சந்தோஷ கடலில் மூழ்கி இருந்தது, அது நடக்கும் வரை....
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் தன்ராஜ்க்கு அவசர வேலை ஒன்று வந்து அவர் தனது ஊருக்கு கிளம்ப ரெடியாகினர்.
குடும்பம் எவ்வளவு சொல்லியும் அவர் கிளம்ப வேண்டியதாய் இருந்தது.
"லட்சுமி மருமகன் போகட்டும் , நீயாவது இண்டு நாள் இருந்துட்டு போமா" என லட்சுமி அன்னை கூறவும்.
"இல்லமா அவர் இல்லாமல் நான் மட்டும் எப்படிமா இருக்கிறது, நானும் போயிட்டு வர்றேன்" என்றாள் லட்சுமி.
இதை பார்த்த தன்ராஜ் "லட்சுமி நீ வேணும்னா இரண்டு நாள் இருந்துட்டு வா, நான் பார்த்துகிறேன்"என்க
"வேண்டாங்க நான் வர்றேன்" என்றவளிடம் மேற்கொண்டு எதும் பேசமால் கிளம்ப தயாராகினர்.
"லக்ஷனா, ஏய் லக்ஷனாஇங்க வா வீட்டிற்க்கு போவோம்" என பூபதி ,சபா கூட விளையாடிட்டு இருந்த குழந்தையை கூப்பிட,அவளோ
"ம்ம் நான் வரமாட்டேன் இங்க தான் இருப்பேன்" என்று குழந்தை பூ, சபா வை பிடித்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டது.
அதை பார்த்த பசுபதி "அம்மாடி, லட்சுமி நீயும் மாப்பிள்ளையும் போங்கமா என் மருமக ஒரு இரண்டு நாள் இங்க இருக்கட்டும் அப்புறம் நான் கொண்டு வந்து விடுறேன்" என கூறவும் லட்சுமியும் ,தன்ராஜ்யும் கிளம்பி விட்டனர்.
வாசலில் அனைவரும் நின்று வழியனுப்ப , லக்ஷனா வோ பூபதி கையில் இருந்தாள்.
அனைவரும் டாட்டா சொல்லி விட்டு வண்டி கிளம்பியது ,லட்சுமியோ வீட்டை தாண்டும் வரை லக்ஷனாவையே திரும்பி பார்த்து கொண்டிருந்தார்.
பாவம் ,இரண்டு நாள் இருக்கட்டும் என்ற பசுபதிக்கு அவள் காலம் முழுவதும் இங்கே தான் இருக்க போகிறாள் என்றும், குழந்தையை பார்த்து கொண்டே சென்ற லட்சுமிக்கு இது தான் அவள் கடைசியாக பார்ப்பது என்றும் தெரியாமல் போய்விட்டது .
அவர்கள் இருவரும் கிளம்பி சென்ற ஒரு மணிநேரம் கழித்து வீட்டிற்க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
"ஐய்யோ லட்சுமி போய்டியா " என்ற பெரியவர்களின் அலறல் சத்தம் மட்டுமே அந்த வீடு எங்கும் ஒலித்தது.
ஆம் இருவரும் சென்ற வண்டி விபத்துக்குள்ளாகி ,இருவரும் அந்த இடத்திலே உயிர் துறந்த செய்திதான் வந்திருந்தது .
எவ்வளவு அழ முடியுமோ குடும்பம் அழுது விட்டது.,எவ்வளவு கவலை பட வேண்டுமோ பட்டுவிட்டார்கள்.
இதற்கிடையில் பெரியவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கை முடிந்து தெய்வமாகிவிட்டனர்.
பத்து வருடம் கடந்து விட்டது, இந்த பத்து வருடத்தில் இந்த பெரிய வீட்டில் நடக்கின்ற முதல் நல்ல விஷேசம் இது.
அனைத்தும் இன்று நினைவாகி கண்களை ஈரமாக்கியது.
"அம்மாடிகளா சபைக்கு சடங்கு பொண்ண கூட்டிவாங்க" என முக்கு வீட்டு கிழவி கூறவும் இரு அத்தை மார்களும் லக்ஷனாவை சபைக்கு கூட்டி வந்தார்கள்.
மாம்பழநிற மஞ்சள் புடவையில் மெரூன் கலர் பார்டர் வைத்து நகைகள் பூட்டி அலகாரம் செய்து மதுரை மீனாட்சி போல் காட்சி அளித்தாள் லக்ஷனா.
அவள் வந்து அமரவும் ,மூத்த மனுஷியான் அந்த முக்கு வீட்டு கிழவி சந்தனம் எடுத்து, லக்ஷனாவின் இரு கன்னங்களிலும் தடவி விட்டு, "அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்க தாயி எவனுக்கு கொடுத்து வச்சுருக்கோ , இந்த அழக எவன் கொத்திட்டு போகப்போறானோ" என அவள் முகத்தை தடவி விரலில் நெட்டி முறித்தார் .
தலைகுனிந்து இருந்த லக்ஷனாவிற்கு ஏனோ இனம் புரியாத வெட்கம் நிறைந்த இதழ் புன்னகை வந்து சென்றது.
"அம்மாடி எல்லாருக்கும் வணக்கம் சொல்லுமா" என அமிர்தம் கூறவும் , நிமிர்ந்து வணக்கம் சொன்னவள் கண்களில் அவளது மாமன் மகன்கள் தான் விழுந்தனர்.
மாம்பழ மஞ்சள் சட்டையும் ,அதே கலர் கரை போட்ட வேட்டியும் ,முறுக்கிவிட்ட மீசையுமாக பக்கா கிராமத்தனாக பூபதியும்,
மெரூன் கலர் சட்டையில் , சந்தனநிற பேண்டில் , அலையாயும் கேசமும், டிரிம் பண்ண தாடி மீசையுடன் மார்டனாக சபாவும்,நின்று கொண்டிருந்தனர்.
இருவரையும் பார்த்தவுடன் சட்டென்று தாமரை மலர் தலை கவிழ்ந்தது போல் தலை கவிழ்ந்தாள் லக்ஷனா வெட்கத்தில்.
அந்த பருவம் அதற்கான வேலையை காட்ட துவங்கி விட்டது.
அடுத்தடுத்து , சம்பிரதாயங்கள் நடக்க ஆரம்பித்தது.
பசுபதியும், ரகுபதியும் மாலை போட்டபின், "ஏப்பா ,வேற மாமன் முறையில் யாரும் இருக்கிகளாபா முறை செய்ய,புள்ளைக்கு ஆழம் சுத்தப்போறோம், அப்புறம் வந்து நாங்க முறை செய்யலைன்னு வம்பு பண்ண கூடாது" என ஒரு பெருசுகூற ..
"அதெப்படி ஆழம் சுத்துவீக , நாங்க இருக்கோம்ல மறந்துபுட்டிகளா இல்லை அப்படியே ஒதுக்கி விடலாம்னு நினைச்சீகளா" என்ற குரலில் அனைவரும் வாசல் திரும்ப,
அங்கு ஓரு ஊரே சீர்வரிசை தட்டை தூக்கி கொண்டு நின்றது.
அங்கு ஆரஞ்சு நிற சட்டையில் கையில் கழுத்தில் என பொம்பளைகளுக்கு போட்டியா நகை போட்டு கொண்டு நின்று கொண்டிருந்தான் மருதுபாண்டி .
மருதுபாண்டி தன்ராஜின் சித்தி மகள் பிள்ளை ,அதாவது தன்ராஜ்க்கு தங்கச்சி மகன், லக்ஷனாவிற்க்கு அத்தை மகன் உறவு.
(இதென்னடா புது டிவிஸ்ட், ஏற்கனவே போட்டியில இரண்டு பேரு இருக்காங்கடா , நீயாரு டா கோமாளி வாலண்டியரா ரவுடினு வண்டில ஏறுத
)
அடுத்த எபில தெரியும், மருது பாண்டி பத்தி




நட்புடன்
நாகா 

கண்கள் கலங்கி நின்ற லக்ஷனா வை பார்த்து அமிர்தமும், யோகதிற்க்கும் கண்ணீர் வழிந்தது.
லக்ஷனாக்கு ஐந்து வயது , தீபாவளி பண்டிகையை தன் பிறந்த வீட்டில் கொண்டாட,லட்சுமியும்,தனராஜ்ம் பெரியவீட்டிற்க்கு வந்தனர்.
வீட்டில் விஷசமாக இருந்தாலும் பண்டிகை நாட்களாக இருந்தாலும், லட்சுமி தன் கணவன் குழநாதையுடன் தன் பிறந்த வீட்டில் வந்துதான் கொண்டாடுவார்கள்.
தன்ராஜ்ம் சொந்த தாய்மாமன் வீடு தானே என்று உரிமையுடன் வந்துவிடுவார்.
தீபாவளி பண்டிகையை மொத்த குடும்பமும் ,குழந்தைகளுடன் சந்தோஷமாக கொண்டினர், அந்த குடுமமே சந்தோஷ கடலில் மூழ்கி இருந்தது, அது நடக்கும் வரை....
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் தன்ராஜ்க்கு அவசர வேலை ஒன்று வந்து அவர் தனது ஊருக்கு கிளம்ப ரெடியாகினர்.
குடும்பம் எவ்வளவு சொல்லியும் அவர் கிளம்ப வேண்டியதாய் இருந்தது.
"லட்சுமி மருமகன் போகட்டும் , நீயாவது இண்டு நாள் இருந்துட்டு போமா" என லட்சுமி அன்னை கூறவும்.
"இல்லமா அவர் இல்லாமல் நான் மட்டும் எப்படிமா இருக்கிறது, நானும் போயிட்டு வர்றேன்" என்றாள் லட்சுமி.
இதை பார்த்த தன்ராஜ் "லட்சுமி நீ வேணும்னா இரண்டு நாள் இருந்துட்டு வா, நான் பார்த்துகிறேன்"என்க
"வேண்டாங்க நான் வர்றேன்" என்றவளிடம் மேற்கொண்டு எதும் பேசமால் கிளம்ப தயாராகினர்.
"லக்ஷனா, ஏய் லக்ஷனாஇங்க வா வீட்டிற்க்கு போவோம்" என பூபதி ,சபா கூட விளையாடிட்டு இருந்த குழந்தையை கூப்பிட,அவளோ
"ம்ம் நான் வரமாட்டேன் இங்க தான் இருப்பேன்" என்று குழந்தை பூ, சபா வை பிடித்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டது.
அதை பார்த்த பசுபதி "அம்மாடி, லட்சுமி நீயும் மாப்பிள்ளையும் போங்கமா என் மருமக ஒரு இரண்டு நாள் இங்க இருக்கட்டும் அப்புறம் நான் கொண்டு வந்து விடுறேன்" என கூறவும் லட்சுமியும் ,தன்ராஜ்யும் கிளம்பி விட்டனர்.
வாசலில் அனைவரும் நின்று வழியனுப்ப , லக்ஷனா வோ பூபதி கையில் இருந்தாள்.
அனைவரும் டாட்டா சொல்லி விட்டு வண்டி கிளம்பியது ,லட்சுமியோ வீட்டை தாண்டும் வரை லக்ஷனாவையே திரும்பி பார்த்து கொண்டிருந்தார்.
பாவம் ,இரண்டு நாள் இருக்கட்டும் என்ற பசுபதிக்கு அவள் காலம் முழுவதும் இங்கே தான் இருக்க போகிறாள் என்றும், குழந்தையை பார்த்து கொண்டே சென்ற லட்சுமிக்கு இது தான் அவள் கடைசியாக பார்ப்பது என்றும் தெரியாமல் போய்விட்டது .
அவர்கள் இருவரும் கிளம்பி சென்ற ஒரு மணிநேரம் கழித்து வீட்டிற்க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
"ஐய்யோ லட்சுமி போய்டியா " என்ற பெரியவர்களின் அலறல் சத்தம் மட்டுமே அந்த வீடு எங்கும் ஒலித்தது.
ஆம் இருவரும் சென்ற வண்டி விபத்துக்குள்ளாகி ,இருவரும் அந்த இடத்திலே உயிர் துறந்த செய்திதான் வந்திருந்தது .
எவ்வளவு அழ முடியுமோ குடும்பம் அழுது விட்டது.,எவ்வளவு கவலை பட வேண்டுமோ பட்டுவிட்டார்கள்.
இதற்கிடையில் பெரியவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கை முடிந்து தெய்வமாகிவிட்டனர்.
பத்து வருடம் கடந்து விட்டது, இந்த பத்து வருடத்தில் இந்த பெரிய வீட்டில் நடக்கின்ற முதல் நல்ல விஷேசம் இது.
அனைத்தும் இன்று நினைவாகி கண்களை ஈரமாக்கியது.
"அம்மாடிகளா சபைக்கு சடங்கு பொண்ண கூட்டிவாங்க" என முக்கு வீட்டு கிழவி கூறவும் இரு அத்தை மார்களும் லக்ஷனாவை சபைக்கு கூட்டி வந்தார்கள்.
மாம்பழநிற மஞ்சள் புடவையில் மெரூன் கலர் பார்டர் வைத்து நகைகள் பூட்டி அலகாரம் செய்து மதுரை மீனாட்சி போல் காட்சி அளித்தாள் லக்ஷனா.
அவள் வந்து அமரவும் ,மூத்த மனுஷியான் அந்த முக்கு வீட்டு கிழவி சந்தனம் எடுத்து, லக்ஷனாவின் இரு கன்னங்களிலும் தடவி விட்டு, "அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்க தாயி எவனுக்கு கொடுத்து வச்சுருக்கோ , இந்த அழக எவன் கொத்திட்டு போகப்போறானோ" என அவள் முகத்தை தடவி விரலில் நெட்டி முறித்தார் .
தலைகுனிந்து இருந்த லக்ஷனாவிற்கு ஏனோ இனம் புரியாத வெட்கம் நிறைந்த இதழ் புன்னகை வந்து சென்றது.
"அம்மாடி எல்லாருக்கும் வணக்கம் சொல்லுமா" என அமிர்தம் கூறவும் , நிமிர்ந்து வணக்கம் சொன்னவள் கண்களில் அவளது மாமன் மகன்கள் தான் விழுந்தனர்.
மாம்பழ மஞ்சள் சட்டையும் ,அதே கலர் கரை போட்ட வேட்டியும் ,முறுக்கிவிட்ட மீசையுமாக பக்கா கிராமத்தனாக பூபதியும்,
மெரூன் கலர் சட்டையில் , சந்தனநிற பேண்டில் , அலையாயும் கேசமும், டிரிம் பண்ண தாடி மீசையுடன் மார்டனாக சபாவும்,நின்று கொண்டிருந்தனர்.
இருவரையும் பார்த்தவுடன் சட்டென்று தாமரை மலர் தலை கவிழ்ந்தது போல் தலை கவிழ்ந்தாள் லக்ஷனா வெட்கத்தில்.
அந்த பருவம் அதற்கான வேலையை காட்ட துவங்கி விட்டது.
அடுத்தடுத்து , சம்பிரதாயங்கள் நடக்க ஆரம்பித்தது.
பசுபதியும், ரகுபதியும் மாலை போட்டபின், "ஏப்பா ,வேற மாமன் முறையில் யாரும் இருக்கிகளாபா முறை செய்ய,புள்ளைக்கு ஆழம் சுத்தப்போறோம், அப்புறம் வந்து நாங்க முறை செய்யலைன்னு வம்பு பண்ண கூடாது" என ஒரு பெருசுகூற ..
"அதெப்படி ஆழம் சுத்துவீக , நாங்க இருக்கோம்ல மறந்துபுட்டிகளா இல்லை அப்படியே ஒதுக்கி விடலாம்னு நினைச்சீகளா" என்ற குரலில் அனைவரும் வாசல் திரும்ப,
அங்கு ஓரு ஊரே சீர்வரிசை தட்டை தூக்கி கொண்டு நின்றது.
அங்கு ஆரஞ்சு நிற சட்டையில் கையில் கழுத்தில் என பொம்பளைகளுக்கு போட்டியா நகை போட்டு கொண்டு நின்று கொண்டிருந்தான் மருதுபாண்டி .
மருதுபாண்டி தன்ராஜின் சித்தி மகள் பிள்ளை ,அதாவது தன்ராஜ்க்கு தங்கச்சி மகன், லக்ஷனாவிற்க்கு அத்தை மகன் உறவு.
(இதென்னடா புது டிவிஸ்ட், ஏற்கனவே போட்டியில இரண்டு பேரு இருக்காங்கடா , நீயாரு டா கோமாளி வாலண்டியரா ரவுடினு வண்டில ஏறுத


அடுத்த எபில தெரியும், மருது பாண்டி பத்தி





நட்புடன்

