ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிழை திருத்தம்

Status
Not open for further replies.

Naga Novels

Active member
Wonderland writer
பிழை திருத்தம் 💕5

பூபதி என்ன தான் ஊருக்குள்ள மாவீரன், சண்டியர்னு , பஞ்சாயத்து பண்ணிட்டு கெத்தா சிங்கம் மாதிரி நடமாடினாலும் ,வீட்டுக்குள்ள அவன் வெறும் பூனை தான்.

ஆம்பள பசங்களை அடிச்சு வளர்க்கலைனா உருப்படாம போயிரும்ங்கிறது பசுபதியோட எண்ணம்.

அடி உதவுறது மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க கொள்கை நம்ம ரகுபதியோடது.

நம்ம பூபதி சாட்சாத் ரகுபதி வளர்ப்பு, அடி தடி பண்ணாத்தான் நீதி கிடைக்கும் நியாயம் நிலைக்கும்னு தனக்குன்னு ஒரு கொள்கை வைச்சுட்டு கூட இரண்டு தடிமாடுகளையும் வைச்சுட்டு சுத்தி அழையுறது தான் இவனுடைய பொழப்பு ,

அந்த தடி மாடுகள் வேற யாரும் இல்லை, ஒண்ணு தன்னோட தாய் மாமன் பச்சைகிளி ,இன்னொன்னு நண்பன் சுரேஷ்.

33 வயசாச்சு கழுதைக்கு இன்னும் ஒரு முடிவும் தெரியலங்கிற மாதிரி கல்யாணம் முடியாம சுத்திட்டு அலையுது கேட்டா லவ் பெய்லியராமாம், என்னத்த சொல்ல கழுதைக்கு லவ்வூ ஒரு கேடு.அப்படின்னு,

அக்காக்கள் இரண்டு பேரும் பச்சைகிளிக்கு பொண்ணு பார்க்கிறதையே விட்டுடாங்க.

சுரேஷ் வீட்டிற்க்கு ஓரே பையன் , அப்பா மிலிட்டரி, அம்மா செல்லம் அந்த பக்கி வாழ்கை வாழ்வதற்கே என்ற கொள்கையோட ஜாலியா இந்த சிங்கிள் ஊர் சுத்திட்டு இருக்கு, அப்பா வந்தா தெரியும் அந்த சிங்கிள் சிக்கனல் கிடைக்காம வீட்டுக்குள்ள எந்த மூலையில கிடக்கின்னு.

இந்த இரண்டு பேரும் சாதாரணப்பட்டவங்க கிடையாது பூபதிக்கு வலக்கை இடக்கை மாதிரி.

வீட்டுல நடக்கிறது எல்லாம் ஒரு பிட் தப்பாம பூபதி காதுக்கு வந்துடும் ,இதெல்லாம் யாரால நம்ம பச்சைகிளி புண்ணியத்தால.

ஊர் நடப்பு எல்லாம் சுட சுட பூபதிக்கு வந்திடும் இது நம்ம சுரேஷ் எப்.எம் சேவையால.

இதுல எதாட்டு மிஸ் ஆகும் போது தான் ஐய்யாக்கு வீட்ல ராஜ உபசரிப்பு நடக்கும் .

பூபதி ஊள்ளூர் காலேஜ்ல தான் படித்தான், காலேஜ் போன முதல் வருடம், சார் கிளாஸ் கட் அடிச்சுட்டு , வெளியூர் தியேட்டர்க்கு படம் பார்க்க போய்யாச்சு , படம் எல்லாம் பாத்துட்டு, தியேட்டர் விட்டு வெளியேவரும் போது அவனுக்கு கெட்ட நேரம் சிக்னல்ல வந்து நின்னிச்சு ,வேற யாரும் இல்லை நம்ம பசுபதி தான் வெளியூர் ஒரு வேலையா வந்த மனுசன், தியேட்டர் வாசல்ல சண்டை போட்டு இருந்த தன் மகனத்தான், அங்கயும் ஒரு பஞ்சாயத்து வைச்சுட்டு விதி.

வீட்டுக்கு வரவும் .....

"நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதிபாரு வீடு போய் சேர மாட்ட"

விஜய் மாதிரி சட்டைய தூக்கி விட்டு கொண்டே ,தன் கையில் உள்ள புத்தகத்தை காற்றில் பறக்கவிட்டு திரும்ப பிடித்து கொண்டே வீட்டிற்குள் வந்த மகனை

"பூபதி " என்ற கர்ஜனை குரல் நிறுத்தியது.

அப்போ தான் பயபுள்ள நிமிர்ந்து பார்த்தது, ஹால்ல இரண்டு வள்ளிஸூம் , பசுபதி மற்றும் நம் பச்சைகிளியும் பூபதியை அதிர்ந்து பார்த்து கொண்டிருந்ததை கவனித்தான்.

"இப்போ என்னாத்துக்கு இவிக எல்லாரும் இப்படி பேய் பிடிச்சவன பார்க்கிற மாதிரி பாக்குதுக" , என்று நினைத்து கொண்டே தன் தகப்பன் பின்னாடி நின்ற பச்சைகிளியை பார்க்க ,

அவனோ "மவன நீ செத்தடா " என்பது போல் தன் நாக்கை தொங்க போட்டு இறந்ததை போல் செய்கை காட்டினான்.

"ஏய் கூப்பிடுறன்ல இங்க வா" என்ற மீண்டும் தன் தந்தையின் கர்ஜனை குரலில் அவர் முன்னாடி வந்து நின்னவன்.

"என்னப்பா " என்றான் பவ்யமாக .

"எங்கன போயிட்டு வர்றீக...." என அவனை தீர்க்கமாக பார்த்து கொண்டே கேட்க .


"கா... கா....காலேஜ்க்கு பா " என சுத்தி முத்தி ரகுபதியை கண்களால் தேடிக்கொண்டே பதில் கூறினான், ஏனெனில் அவனை காப்பாற்ற கூடிய ஒரே தெய்வம் அவர் தான்.


"எங்கே போய்ட்டு வந்தீக மறுபடியும் சொல்லு?" என்று கேட்டுக்கொண்டே தன் சட்டையை தூக்கி இடுப்பில் உள்ள பெல்ட்டை அவிழ்த்தவாறே கேட்டார்.


அதை கண்டவுடன் பூபதிக்கு நாம இன்னிக்கு சட்னி தான் என முடிவெடுத்து விட்டான்.


"எங்கே? " என்ற மீண்டுமொரு கர்ஜனை குரலில் ,


"கா" என வாயை திறந்தது மட்டும் தான் தெரியும் பூபதிக்கு ,பெல்ட்டை வைத்து விலாசு விலாசுன்னு விலாசிட்டாரு மனுசன் , அமிர்தம் குறுக்கே வந்து,


"ஏங்க என்னாச்சு எம்புள்ளைய ஏன் இப்படி மாட்ட டிக்கிற மாதிரி அடிக்கீக, விட்டா என் புள்ளைய கொன்னு போட்றிவீக போல " என அழவும் ,


"நகரு டி, அவன் காலேஜ் மட்டம் போட்டுட்டு ,சினிமா போய்ட்டு வந்திருக்கான் திருட்டு தனமா படவா , எவ்வளவு தைரியமா என் முன்னாடியே காலேஜ் போயிட்டு வந்தேன்னு பொய் சொல்லுவான்" ,என மீண்டும் தன் பெல்ட்டை கொண்டு கை ஓங்க,


"அண்ணா " என்ற மற்றும் ஒரு கர்ஜனை குரலில் அனைவரும் திரும்பி பார்க்க அங்க ரகுபதி நின்று கொண்டிருந்தார்.


பசுபதியின் கேள்வியும் தன் மகன் அமைதியா நிற்கிறதையும் பார்த்துட்டு ,ஏதோ தப்பா நடந்திருக்கு, பசுபதி மச்சானை சமாளிக்க தன் புருசனால மட்டும் தான் முடியும்னு,
யோக வள்ளி ரகுபதிக்கு விசயத்தை தெரிவிக்கவும் அடிச்சு புடிச்சு ஓடிவந்து விட்டார் அண்ணன் கோபம் தெரியுமே அவர்க்கு.


வேகமாக உள்ளே வந்தவர் நேராக பூபதியிடம் வந்து அவன் உடம்பை பார்த்தார் இரண்டு கைகளிலும் சிவப்பு நிறத்தில் பெல்ட் தடம்.


கண்களில் நீர் தேங்க தன் அண்ணிடம் திரும்பியவர், ஏன் இப்படி மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கிற அவன் உன் புள்ள தான, இப்ப என்ன படத்துக்கு தானே போய்ட்டு வந்தான் அதுக்கா புள்ளய இப்படி அடிக்குற" என ஆக்ரோஷமாக கத்தவும்.


"உன்ன, நம்ம அய்யன் அடிச்சு வளர்க்காம விட்ட அதே தப்ப நான் பண்ண மாட்டேன், இந்த வீட்டிற்க்கு ஒரு சண்டியர் போதும்" என பேசிவிட்டு விருட்டென வெளியே சென்று விட்டார் பசுபதி.


அன்றைக்கு வாங்குன பெல் அடி,அந்த பயம் இன்னும் பூபதிய விட்டு போகலையே , அதுக்காக தப்பு பண்ணாம நல்ல புள்ளையா இருக்கான்னு நினைச்சிங்கன்னா அது உங்க தப்பு, பயபுள்ள தப்பை தப்பில்லாம தெளிவா பண்ணுது ...


பச்சைகிளி ,சுரேஷ் உபயத்தோட..


புல்லட்டை எடுத்து கொண்டு லக்ஷனாவை தேடி கொண்டிருந்தான் பூபதி .


அவனுக்கு நேரோ லக்ஷனாவோட தோழி மஞ்சு நடந்து வந்து கொண்டிருந்தாள் .


அவளை பார்த்த பூபதி " அடியே மஞ்சு எங்க உன் ஜோடி லச்சு" என கேட்டவுடன் வெடுக்கென கழுத்தை நெடித்தவள் ,


"அவள பத்தி பேசாதீக , அந்த வானரங்க கூட சேர்ந்துட்டு காட்டு கோயிலுக்கு கல்லி பழம் பறிக்க போயிருக்கா , என்ன விட்டுட்டு போயிட்டா " என நெடிந்து கொள்ள.


"காட்டு கோயிலுக்கா" என யோசித்தவன் ,சட்டென்று முகம் மாற்றி , "சரி மச்சான எப்போ கல்யாணம் பண்ண போற " என கேட்டவுடன்.


அட போங்க நீங்க எனக்கு வயசு 8 ,நான் வளர்ந்து வரவும் உங்களுக்கு வயசாகி கிழனாகிடுவீக , போங்க அம்மா தேடும் நான் வீட்டுக்கு போறேன் என்று மஞ்சு ஓடிவும் ,

தன் புல்லட்டை காட்டு கோயில் பக்கம் விட்டான்......

அவன் போய் தேடட்டும்....
 

Naga Novels

Active member
Wonderland writer
பிழை திருத்தம் 💕6
தன் வண்டியை கிளப்பி கொண்டு காட்டு கோயில் பக்கம் லக்ஷனாவை தேடி சென்றான், பூபதி.

"இந்த எருமை ஏன் இங்க மேய வந்திருக்கு , எல்லாம் வீட்டாலுக கொடுக்குற செல்லம்" ,என திட்டி கொண்டே தனது புல்லட்டை செலுத்தினான்,பூபதி.

கோவில் அருகே வந்துவிட்டான், இதற்கு மேல் வெறும் ஓத்தையடி பாதை மட்டும் தான் , அதன் வழியாக நடந்து சென்றால் கோவில் வந்துவிடும் .

ஆனால் போகும் வழியெல்லாம் கருவேலம் மரங்களும் , கல்லிச்செடிகளும் ஒரு சில பாம்பு புத்துகளும் இருக்கும், அதை பார்த்து கொண்டே ,"எம்புட்டு தையிரியம் இருந்தா சின்ன புள்ளைக கூட இவ்வளவு தூரம் வந்திருப்பா, கையில சிக்கட்டும் இன்னிக்கு நாலு சாத்து சாத்துனா தான் சரிபட்டு வருவா ,அந்தாளுட்ட கம்பளைன்ட் பண்ணாலும் பரவாயில்லை " என தன் வேட்டியை மடித்து கட்டி கொண்டு அவளை தேடி சென்றான்.

"யக்கா, அந்தா இருக்கு பாரு அத பறி அதான் பழமா இருக்கு" என்று ஒரு நண்டு சொல்ல,

"யக்கோவ் , இந்த பக்கம் வா இங்க இரண்டு பழம் சேர்ந்தாப்ல இருக்கு" என்று ஒரு சுண்டு கூற,

"அடேய் இருங்கடா ,எனக்கென்ன பத்து கையா இருக்கு ,ஒவ்வொன்னா பறிச்சு தாரேண்டா" என்ற சத்தத்தில் தன் அடிகளை நிறுத்தியவன் திரும்பி பார்க்க,

தோள்வரை நீண்ட கூந்தலும் , வெண்ணிலா முகமும் ,கோழிகுண்டு கண்ணு, நீள் முக்கு, கோவைபழ அதரம், நெற்றியில் மச்சம் போல சிறிய கருத்த பொட்டு அதற்கு மேல் சிறிய சந்தன கீற்று ,பச்சை வண்ண சட்டையும், ரோஜா வண்ண பாவாடையும், அதை ஏற்றி சொருவிக் கொண்டு கள்ளி பழம் பறித்து கொண்டிருந்த தன் அத்தை மகள் ரத்தினத்தை புதிதாக பார்ப்பது போல் பார்த்தான் பூபதி.

சிறுவயதில் இருந்து பார்த்து கொண்டுதான் இருக்கிறான், ஆனால் இன்று ஏதோ ஒரு மாற்றம் அவனுக்கு தெரிந்தது அவளிடம்,

சிறிது நேரம் தன்னையே உணராமல் பார்த்து கொண்டிருந்தவன் கவனத்தை கலைத்தது,அங்கு நடந்த சம்பாஷனைகள்.

"போதுமாடா போவோமா"

"யக்கா ,இன்னும் நிறைய பறிச்சு போடு அடிக்கடி இங்க வரமுடியாது எங்க அம்மா வையும்" என ஒரு நண்டு சொல்ல,

"ஏண்டா?" என மேலும் பழத்தை பறித்து கொண்டே லக்ஷனா கேட்க,

"அதுவா, அது இங்க ஏதோ ஏதோ " என அந்த சிண்டு கூறி முடிப்பதற்குள்,

சட,சடவென செடிகள் ஆடியது, அந்த சத்ததில் அவர்களின் பேச்சு நின்றது, மூன்று பேரும் அருகே நெருங்கி நின்றனர்.

திரு திரு வென முழித்தனர் .

பட் பட் பட் என ஏதோ பனை மரத்தில் இருந்து விழும் சத்தம் கேட்டு, லக்ஷனா அந்த நண்டு சிண்டு வின் கைகளை இறுக்கி பிடித்து கொண்டாள்.

கோவில் மணிகள் அடிக்க, ஏதோ வித்தியாசமான சத்தங்கள் எழும்ப ஆரம்பித்தது...

லக்ஷனாக்கு வேர்த்து ஊற்ற ஆரம்பித்தது, உடல்கள் நடுங்க , கண்கள் கலங்க ,அடிவயிறு கலங்கி நடுங்க ஆரம்பித்தது.

ஒருவார்த்தை பேசவில்லை, மூச்சை கூட மிகவும் அமைதியாக விட்டனர்.

சல,சலப்பு ,பட் பட் சத்தம், ஆந்தை சத்தம் என அசாதாரண ஒலிகள் கேட்கவும்

"ஐய்யயோ , பேய் ,பேய் வந்துட்டு போல , எங்க அம்மா இதேன் இங்க வரவேண்டாம்னு சொல்லுச்சி போல , யக்கா ஓடிவா ,ஓடிவா என அந்த நண்டு , சிண்டு இருவரும் விழுந்தடித்து ஓடிபோக, லக்ஷனாவும் ஓட முயன்றவள் ,அந்தோ பரிதாபம் பாவாடை கள்ளி செடியில் சிக்கி கொண்டது.

அந்த இரண்டும் சிட்டாக பறந்து விட்டது ,

தன் பாவடையை இழுத்து பார்த்தாள் அது வரவில்லை, அங்கு கேட்ட அமானுஷ சத்தங்களும் ஓயவில்லை,

லக்ஷனாவிற்க்கு ,நெஞ்சு பட படவென துடித்தது , கண்ணீர் கண்ணை தாண்டி வந்து கொண்டிருந்தது , வாய் கருப்பா, கருப்பா என முனு முனுத்து கொண்டிருந்தது.

ஒரு ஐ விரல் அப்படியே அவள் தோளை தொட,

" ஆ....ஆ....ஆ. என கத்தியவள், அவ்வளவு தான் செத்தோம் என தன் கண்களை இருகைகளால் பொத்தி கொண்டு கீழே அமர்ந்து அழுது கதறி கொண்டிருந்தாள்.

"ஹா ஹா ஹா ஹா" என்ற சிரிப்பு சத்ததில் தன் தலையை உயர்த்தி பார்த்தவள் முன் தன் வேட்டியை மடித்து கட்டியவாறு கை தட்டி சிரித்து கொண்டிருந்தான் பூபதி.

"டேய் டேய் பூ.... வூ நீதானா ?" என அழுது கொண்டே கேட்ட லக்ஷனாவிடம்.

"அடியே முட்ட கண்ணி இம்பூட்டு பயம் இருக்குதுல, பொறவு எதுக்குடி இங்கன வந்த " என பூபதி கேட்க.

"அது அது அவுங்க தான் கள்ளி பழ ஆசை காட்டி தொணைக்கு கூட்டியாந்தானுங்க" என அழுது விம்மி கொண்டே கூறினாள் .

"யாரு , இந்தா வுட்டு புட்டு ஓடுறாங்களே அவனுங்களா? அதுகங்களாம் ஒரு ஆளுன்னு அரை டவூசர், கால் டவூசர் கூட எல்லாம் இம்பூட்டு தூரம் காட்டுக்குள்ள வருவா , உன் மாமன் மகன் நான் கூப்ட்டா என்னைகாவது வந்துருக்கியாடி முட்ட கண்ணி" என அவள் தலையில் கொட்ட,

"தலையில கொட்டாதடா பூ..வூ , நான் வளர மாட்டேன்னு அத்தமா சொல்லும்" என தலைய தடவி கொண்டே கூற.

"ஆளு மட்டும் வளந்தா போதுமா மண்டையில சரக்கு வேண்டாம், முட்டகண்ணி, வெள்ளச்சி " என திட்ட ,

"திட்டாதடா, பூ....வூ கள்ளி பழம் சாப்பிட ஆசை அதான் யோசிக்காம வந்துட்டேன்" என அப்பாவியாக கூறிய தன் அத்த மகளை பார்க்கும் போது ஒரு பக்கம் சிரிப்பு வந்தாளும் ,மறுபக்கம் அதை மறைத்து கொண்டு,

"ஏன்கிட்ட சொல்லி இருக்கலாம்ல முட்ட கண்ணி நான் வந்துருப்பன்ல" என பூபதி கூற ...

"அது அது பூ ....வூ"என இழுக்க, அதை புரிந்தவன், சற்று முக இறுக்கத்துடன்..

"ஓ.....அந்த பய என்கூட வெளியே வரக்கூடாதுன்னு சொல்லிருக்கானோ?" என போட்டு வாங்க,

"இல்லை பூ.. வூ சபா அத்தான் வேணும்னே சொல்லிருக்காது ஏதோ ஒரு நியாபகத்துல சொல்லிருக்கும் " என சம்பந்தம் இல்லாம உளரவும் .

"ஓ.... அப்போ அவன் தான் உன்கிட்ட சொல்லிருக்கான்?" என உறுதிபடுத்தி விட்டு , கோபத்துடன் , "ஏண்டி , நாளும் கிழமையும் உன் கூடவே உனக்கு தொணையா காவலா நான் இருக்கேன் நீ என்னடான்னா அவன் சொன்னானு என் கூட வரமாட்டிக்க , நல்லா இருக்குடி , உனக்கு எதுனாலும் பாத்து பாத்து நான் செய்றேன் , ஆனா நீ என்னடான்னா , லீவுக்கு மட்டும் ஆட்டிட்டு வர்ற அவன் பேச்சை கேட்டுட்டு இம்புட்டு நாள் என் கூட வராம இருந்திருக்க " என கோபத்துடன் செடியை காலை வைத்து உதைக்க..

"இல்லடா பூ....வூ " என அவனை சமாதான படுத்த முயன்றவள் தான் உளறி கொட்டியதை நினைத்து தன்னையே அடித்து கொண்டாள்.

"என்ன இல்லடா, நொல்லடா , போயிரு அங்கிட்டு செம்ம காண்டுல இருக்கேன் "என பூபதி அவளிடம் கத்த.

"நான் சொன்னா , கேட்க மாட்டியா, எனக்கு அவ்வளவு தான் மரியாதையா பாசமான்னு , சபா அத்தான் கேட்கும் போது நான் என்னடா சொல்லுவேன், அதுவே பாவம் சொந்த பந்தத விட்டுபுட்டு வெளியூர்ல தனியா கஷ்டப்படுது அதான்" என பேசிக்கொண்டே பூபதி சட்டையை பிடித்து இழுக்க,

"தொடாதடி, ஒண்ணும் சொல்ல வேண்டாம், அவன் மட்டும் அத்தானாம், நான் வாடா போடாவாம் இதுலே தெரியல " ,என அவள் கையை தட்டி விட்டு தன் மனதிற்குள் புலம்பி கொண்டு வேகமாக தன் வண்டியை நோக்கி சென்றான்.

அவன் வேகத்திற்கு இவளும் அவனை நோக்கி திரும்ப, அவள் பாவாடை ஒரு ஓரத்தில் கிளிந்து விட்டது , அதையும் பொருட்படுத்தாமல் ,அவன் பின்னே ,

"பூ ..... வூ .... ,பூ.... வூ ,நில்லுடா அடேய் , நானும் வர்றேன்டா , ஐய்யோ இவனுக இரண்டு பேர்கிட்டையும் நான் மாட்டிகிட்டு நான் படாத பாடு படுறேன் " என தன்னேயே நொந்தவள் அவன் பின்னாடி நாய் மாதிரி ஓடினாள்,

அதற்குள் வண்டி ஸ்டார்ட் ஆகிட்டு...

"ஆ....., பூ..... வூ " என்ற அலறல் சத்ததில் , திரும்பியவன் கண்ணில்......

என்ன நடந்ததுன்னு அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் ...

டாட்டா பய் பய் 😀😀😀😀😀
 

Naga Novels

Active member
Wonderland writer
பிழை திருத்தம் 💕7

கோபத்துடன் சென்றவனுக்கு புரியவில்லை, அத்தான் என்ற வார்த்தையைவிட, வாடா போடா என்ற வார்த்தையில் தான் உரிமையும் பாசமும் அதீதமாய் இருக்கிறதென்று.
ஆம் பூபதி கல்லூரி படிப்பை ஊள்ளூரில் முடித்தான் சாதாரண கலை கல்லூரியில், ஆனால் சபாவோ தன்னுடைய பொறியாளர் படிப்பை பக்கத்து ஊரில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்தான்.
பக்கத்து ஊர் என்பதால் வாரத்தின் இறுதிநாள் வீடு வந்துவிடுவான்.
ஏனெனில் வாரம் முமுமையும் பூபதி லக்ஷனா அருகில் இருப்பதை காண சகிக்காமல் தான் .
அப்போதிலிருந்தே சபாவிடம் கொஞ்சம் இடைவெளி விட்டே பழகி வந்தாள் லக்ஷனா.
எப்போதும் தன் கூடவே காலையும் மாலையும் பார்த்து , விளையாடி சண்டையிட்டு வந்த பூபதி அவளுக்கு நண்பன் மாதிரி மாறிப்போனான்.
லக்ஷனா ஆரம்பத்தில் இருவரையும் சபா, பூ என பேர் சொல்லி தான் அழைப்பாள் .
சபா சென்னையில் வேலைக்கு , குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று திரும்பிய அந்த முதல் மாதத்தில் வீடு திரும்பிய சபாவிடம் ,லக்ஷனா சபா மெட்ராஸ் எப்படி இருந்தது , எங்க போன என்னலாம் பார்த்த என கேள்வி மேல் கேள்வி அடுக்கி சபா சபா என்று கொண்டிருந்தவளிடம், திரும்பியவன்,
தன் வாய் மேல் கை வைத்து ,"ஷூஊஊ, பேசாத , வாயமூடு" என கூறியவனிடம் ,
" ஏன் சபா" என பாவம் போல் கேட்ட அந்த சிறு பெண்ணிடம் , என்ன கூறுவான்.
தன் அண்ணன் பூபதியும் அவளும் நண்பர்கள் போல் பழகுவதால் பொறாமை என்றா?
"ஏன் சபா என்னாச்சு?" என பாவமாக முகத்தை வைத்து கேட்டாள் லக்ஷனா அவள் இப்போது பத்தாம் வகுப்பு துவக்கத்தில் இருந்தாள்.
"இங்க பாரு லக்கி, நான் யாரு உனக்கு? என்று அவள் முன் நின்று கேட்டான் சபா,
"நீ சபா " என வெகுளியாக கூறினாள் லக்ஷனா.
"ஸ்ஸப்பா... "என தன் தலையில் அடித்து கொண்ட சபா.
"லக்கி , அது என் பேரு ,சரி விடு என் அப்பா அம்மா உனக்கு யாரு ?
"உங்க அப்பா, அம்மா எனக்கு மாமா ,அத்தைமா" என கூறிய லக்ஷனாவிடம்.
"ஆ.. ஓகே அப்போ மாமா பையன நம்ம ஊர்ல எப்படி கூப்பிடுவாக" என சபா கேட்டவுடன் .
"தெரியலையே இரு அத்தம்மா கிட்ட கேட்டுட்டு வர்றேன் "என்று கூறியவளை
"ஆத்தாடி சோத்துக்கே சூனியம் வச்சிருவா போல" எனகிளம்ப போனவளை இழுத்து உட்கார வைத்து , தன் கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டு ,
"எப்படி கூப்பிடுவாங்கன்னா அத்தான் அப்படின்னு கூப்பிடுவாங்க நீ இனிமே என்னை அத்தான் தான் கூப்பிடனும் " என்று கூறியவனை மேலும் கீழும் பார்த்து விட்டு,
"சரி சபா " என்றவளை " ஏய்" என்று முறைத்தவன்.
"சரி அத்தான் " என்று கூறுவதை கேட்டு சந்தோஷமாக சென்றான் சபா.
ஏனெனில் அவள் கூட இருக்க முடியவில்லை என்றாலும் இந்த அத்தான் என்ற வார்த்தை தங்களை நெருக்கமாக வைத்திருக்கும் என நம்பினான் .
"ஆஆஆஆ. .... பூ ..ஊஊ பாம்பு கொத்திட்டு" என கத்தியவளை திரும்பி பார்த்த பூபதி,
அவள் தன் ஒற்றை காலை பிடித்து கொண்டு நிற்கவும் அருகில் பாம்பு புற்று ஒன்று இருப்பதையும் கண்டவன் , பதறி அடித்து தனது புல்லட்டை கீழே போட்டுவிட்டு ஓடிவந்து அவள் காலை பிடித்து "என்ன லச்சு என்ன ஆச்சு , பாம்பு கடிச்சிட்டா என துடி துடித்தவனை கண்டு சிரித்தவள்.
"ஏமாந்தியா , நீ மட்டும் தான் என்ன பயமுறுத்துவியா நானும் தான் வவ்வவவவவ" என கூறி சிரித்தவளை , ஆத்திரம் பொங்க பார்த்தவன்.
சப்பென்று கன்னத்தில் ஒரு அறை விட்டான் , எதுல விளையாடனும்னு தெரியாது லூசு லூசு எரும , எனக்கு உயிரே போயிட்டு" என காட்டு கட்டு கத்தினான்.
லக்ஷனாவிடம் இருந்து எந்த சத்தமும் இல்லை, அவள் கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது, "நீ பண்ணா அது சரி நான் பண்ணா அடிப்பியா இனிமே என்கிட்ட பேசவே பேசாத" என வேகமாக நடக்க ஆரம்பித்தாள் .
லச்சு சாரி சாரி லச்சு என பின் சென்றவன் ஒரு வழியாக அவளை வண்டியில் ஏற்றி கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
வரும் வழியில் ஒரு வார்த்தை பேசவில்லை அவள்.
வாசலில் வந்து இறங்கிய லக்ஷனாவை இரண்டு அத்தைகளும் வறுத்து எடுத்து விட்டனர் ,
"ஏண்டி எத்தன தடவை சொல்லுறேன் எங்கயாட்டு போன என்கிட்ட சொல்லிட்டு போ ,இல்லை எங்க இரண்டு பேத்துல யாரையாவது கூட்டிட்டு போன்னு ,நீ கேட்க மாட்டியா உனக்கு எதாட்டு ஒண்ணுனா நாங்க என்னடி பண்ணுவோம்" என கோபித்துக் கொண்டாள் அமிர்தம்.
"சரி நீ மேல போய் கை கால் கழுவி டிரஸ் மாத்திக்கோ உன் மாமாக்கள் வந்திடுவாங்க " என கூறி அவளை அவள் அறைக்கு அனுப்பி வைத்தாள் யோகம்.
அவர்கள் பேசியது எதுவும் அவள் காதில் விழ வில்லை, பூபதி அடித்தது மட்டுமே அவள் நினைவில் இருந்தது. அமைதியாக தன் அறைக்கு சென்றாள் செல்லும் போது தன்னில் ஏதோ ஓரு வித்யாசத்தை உணர்ந்தாள்.
அவளை அவசரப்பட்டு அடித்ததும் , அவள் அமைதியாக தன் அறைக்கு சென்றதும் பூபதிக்கு ஏனோ கவலையாக , மனம் பாரமாகவே இருந்தது , அவளை சமாதான படுத்துவதற்காக கையில் டெய்ரி மில்க் சாக்லெட் எடுத்து கொண்டு அவள் அறைக்கு சென்றான் பூபதி.
"லச்சு லச்சு ஸாரி டி கதவை திறயேன் நான் உனக்கு ஒண்ணு கொண்டு வந்திருக்கேன்" என கதவை தட்டினான் பூபதி .
அவளிடம் இருந்து எந்த வித சத்தமும் இல்லை, மீண்டும் மீண்டும் தட்டி விட்டு ,
"லச்சு நான் கதவை திறந்திட்டு வர்றேன்" என கூறிக்கொண்டே கதவை திறந்தான் பூபதி .
அங்கு லக்ஷனா தன் வயிற்றை பிடித்து கொண்டு கட்டிலில் மடங்கி அழுது கொண்டிருந்தாள்.
அதை கண்டவன் தன்னால் தான் அவள் இன்னும் அழுது கொண்டிருக்கிறாள் என நினைத்து, " லச்சு என்னாச்சு அழாதடி ஸாரிடி என அவள் அருகில் வர " ,
"வராதே போ போ இங்கிருந்து" என அவனை பார்க்காமல் கை நீட்டி தடுத்தாள் லக்ஷனா,
"ஏன் என்னாச்சு நான் தானே ,சொல்லுடி என்னாச்சு ,அதான் மன்னிப்பு கேட்டல்ல" என கூறியவனிடம்,
அது இல்ல இது வேற அத்தமாவ கூப்பிடு நீ, என் பக்கத்தில வரத என வயிற்றை பிடித்து கொண்டு கத்தினாள் லக்ஷனா .
அப்பொழுது தான் அவள் கையை கவனித்தான் அது அவள் வயிற்றில் இருந்தது , சட்டென்று தன் கையில் உள்ள சாக்லெட்யை கட்டிலில் போட்டவன் வேகமாக கீழே ஓடி வந்தான்.
" அம்மா , சித்திம்மா எங்க இருக்கீங்க " என கத்திக்கொண்டே ஓடி வந்த மகனை புரியாமல் பார்த்தனர் இரு வள்ளிகளும்.
"ஏன்டா என்னாச்சு ,உங்க அப்பா வர்ற நேரம் எதுக்கு இப்படி கத்திகிட்டு இருக்க " என கேட்டாள் அமிர்தம்.
"அது,அது வந்து உன் மருகளை வந்து பாரு " என பதட்டமாக கூறிய பூபதியை இருவரும் அச்சத்துடனே பார்த்தனர்.
"ஏன்டா என்ன ஆச்சு அவளுக்கு , உங்க இரண்டு பேருக்கும் சண்டையா புள்ளைய அடிச்சிட்டியா "என கேட்டாள் யோகம்.
"அய்யோ தாய்களா இரண்டு பேரும் அவள போய் முதல்ல பாருங்க கட்டில்ல உருண்டு அழுதுட்டு இருக்கா "என கூறவும், இரண்டு பேரும் விழுந்தடித்து மேலே சென்று பார்த்தனர் ,அவர்களுடன் பூபதியும் சென்றான்.
இருவரும் அவளிடம் செல்லவும் ஓரளவு விவரம் புரிந்து விட்டது, "டேய் பூபதி நீ வெளியே போ " என அமிர்தம் கூற ,
"அட என்னாச்சு என்ன ஏன் வெளியே போக சொல்லுற " என புரியாமல் கேட்டான் , பூபதி .
"டேய் நல்லவன வெளியே வாடா அவ முகத்த நீ இப்போ பாக்க கூடாது " என அவனை இழுத்து கொண்டு வெளியே வந்தாள் யோகம்.
"ஏன் சித்திமா"
என புரியாமல் கேட்டவனிடம்,
"அடேய் ஆளு வளந்த அளவு உனக்கு புத்தி வளரலையே , அவ பெரியமனுசி ஆகிட்டாடா , தலைக்கு தண்ணீ ஊத்துற வரை முறை பசங்க பார்க்க கூடாது " என கூறிவிட்டு ஆக வேண்டிய காரியத்தை பார்க்க சென்று விட்டாள் யோகம்.
பூபதிக்கு ஏனோ அவனை அறியாமல் ஒரு வெட்க சிரிப்பு கன நேரத்தில் வந்து சென்றது,
அடுத்து என்ன பங்சன் தான் 😄😄
 

Naga Novels

Active member
Wonderland writer
பிழை திருத்தம் 💕 8

வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர், வெகு நாட்களுக்கு பிறகு ஒரு சுப நிகழ்ச்சி நடைபெறகிறது அந்த வீட்டில்.


நடக்க கூடாதவைகள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. கண்ணீரும் கஷ்டமும் முடிந்து, சில வருடங்களாக தான் அனைவரும் தங்கள் வாழ்க்கை ஓட்டத்தில் ஓட ஆரம்பித்து இருக்கிறார்கள்.


மாமன் மார்களும், அத்தை மார்களும் எதிர் பார்த்தபடியே ,ஒரு நல்ல செய்தியை சொல்லி விட்டாள் லக்ஷனா தான் பூப்பெய்தியதின் மூலம்.


வேலைகள் படு ஜோராக ஆரம்பித்து விட்டனர்.


வீட்டில் வரவேற்பறையில் ஒரு மூலையில் ஓலை குடிசை தாய் மாமன்மார்கள் முதல் ஓலை எடுத்து கொடுக்க, பூபதி கட்டி முடித்தான்.


அதன் அருகிலேயே ஒரு அறையும் உண்டு.அதனை பயன்படுத்தி கொள்ள வகையில் அந்த குடிசை அமைக்கபட்டிருந்தது.


இரண்டு நாட்களாக , எப்படியாவது லச்சு வை பார்த்து விடவேண்டும் என்று தவியாய் தவிக்கிறான் பூபதி .


சோலியும் குடுமியும் சும்மா ஆடுமா என்ன ,அதற்கு ஒரு காரணமும் உண்டு, அது முக்கு வீட்டு பெரிய கிழவி தான்.


வயது வந்த பெண் இருக்கும் குடிசைக்கு காவலாக ஒரு வயதானவர்களை வைப்பார்கள் , அவர்கள் அறிவுரைபடி அந்த பெண்ணுக்கு சாப்பாடு மற்றும் தேவையான ஐதீகங்களை செய்வதற்காக ,அதற்காக கூட்டி வரப்பட்டவர் தான் மூக்கு வீட்டு பெரிய கிழவி.


"ஏய்யா பூபதி " என அமிர்தம் அழைக்க ,


"என்னமா"


"நம்ம மூக்கு வீட்டு பெரிய கிழவியை கூட்டியா "


"அந்த கிழவி எதுக்கு மா ,அது வாயத்திறந்தா மூடவே மூடாது " எனக் கூறவும் .


"சொன்னா சொன்ன வேலைய மட்டும் செய் ,இந்த வியாக்கானம் எல்லாம் பேசிட்டுதிரிஞ்ச உங்க அப்பாருட்ட சொல்லிடுவேன் ஆமா" என அமிர்தம் கூறிவிட்டு அடுக்களை நோக்கி சென்றுவிட்டாள்.


"நீங்க எல்லாரும் அந்த ஆள எங்கிட்ட ஒரு பூச்சாண்டி மாதிரியே யூஸ் பண்றீங்க, ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் அவரு என்ன தாங்க போறாரு அப்போ இருக்குது உங்களுக்கு" என சூல் உறைத்தவன் , சோபாவில் அம்போ என தூங்கி கொண்டிருக்கும் தன் மாமன் பச்சைகிளியை எழுப்ப ,


"யோவ் , மாமா , பகல்லயே என்னயா தூக்கம் ,எழுந்திருயா ஒரு வேலை இருக்கு வெளியே போய்டு வருவோம்" என தன் மாமன் பச்சைகிளியை உசுப்ப ,


"டேய் மருமகனே நீ எதுக்கு கூப்பிடுறன்னு எனக்கு தெரியும் , அந்த பல்லுபோன பியூட்டிய நீயே பிக் அப் பண்ணிட்டு வா ,என்ன டிஸ்டர்ப் பண்ணாத போ, போங்கிறேன்" என கண்களை மூடிக்கொண்டு கூறிய தன் மாமனின் வேட்டியை பிடித்து இழுத்தவன்.


"யோவ் இப்போ நீ வரல இங்கையே உன் வேட்டிய உருவி , அந்தா போறாளே உன் சைட் பரிமளம் அவளுக்கு ஷோ காமிச்சிருவேன் ஆமா "என வேஷ்டியை பிடித்து இழுக்க ,


"அட என் அக்கா பேத்த தொல்லையே விடுடா வர்றேன்டா உள்ளே போடவேண்டியது கூட போடலடா " என வேஷ்டாயை பிடித்தபடி எழுந்தான்.


"அட கரும்மாந்திரம் புடிச்ச மாமா நீயெல்லாம் ஒரு பெரிய மனுசனாயா தூ வந்து தொலை" என அவனை இழுத்து கொண்டு , மூக்கு வீட்டு பெரிய கிழவியையும் திமிர திமிர தூக்கி பைக்கில் வைத்து வீடு வந்து கொண்டிருந்தனர்.


"அட எடுபட்டவைங்களா என்ன எங்கடா கடத்திட்டு போறீங்க , நாசமா போறவைங்களா" என கிழவி திட்டவும்.


"ஆமா நீ பெரிய நயன் தாரா உன்ன கடத்திட்டு போய் விலபேச போறோம், அட வாய மூட்டிட்டு வா கிழவி , என் மக லக்ஷனா பெரிய மனுசி ஆகிட்டா, அதான் அக்கா குடிசை துணைக்கு உன்ன கூப்பிடா , நல்லா பக்குவம் சொல்லு புள்ள உடம்பு தெம்பா இருக்கனும்" என பச்சைகிளி கூறி முடித்தான்.


"அதெல்லாம் பாத்துகிடலாம் , மாமன் பசங்க இரண்டு பேரும் அதே வீட்டுலதானே இருங்கீங்க" என கிழவி கேட்டதற்க்கு .


"கிழவி , பூபதி தான் இருக்கான் சபா வெளியூர்ல இருக்கான், ஏன் கேட்குற " என கேட்டான் பச்சைகிளி.


அது இல்லை கூறுகெட்டவனே ,வயசக்கு வந்த புள்ள தண்ணீர் ஊத்தி சாங்கியம் கழிக்கிறதுக்கு மூன்னாடி எந்த முறைபய்யன பாக்காளோ ,விதி அவங்களை ஜோடி சேத்து வச்சிடும்னு சொல்லுவாக ,அதான் கேட்டேன் " என கிழவி கூறிமுடிக்கவும்.


பூபதிக்கு அப்படி ஒரு சிரிப்பு முகத்தில், வண்டி கட்ணாடியில் தன் முகத்தை பார்த்து கொண்டிருந்தவனை ,


"மாப்பிள்ளை நீ என்ன நினைக்கன்னு எனக்கு தெரியுது, அதுக்காக கண்ணாடி பார்த்து கிட்டே வண்டி ஓட்டி எங்களை எங்கயாட்டு சாத்திடாத , நான் வாழ வேண்டிய வயசு பய்யன் ஆமா" என்ற பச்சைகிளி கத்தி கொண்டு வர அதெல்லாம் எங்க பூபதி காதில் வாங்கினான், அவன் பிளான் போட ஆர்பிச்சுட்டான் , எப்படியாவது லச்சு முன்னாடி நின்னுடனும்னு.


" என்ன தெரிகிறது மகனே" என்று லச்சு அறை வாசலில் நின்று எட்டிபார்த்த பூபதி தோளை யோகவள்ளி தட்ட ,


" எப்படி பார்த்தாலும் ஒண்ணும் தெரியலையே " என சலித்து கொண்டே திரும்பிய பூபதி யோகத்தை பார்த்தவுடன் "ஈஈஈஈ" பல்லை காட்டிட,


"நீ எவ்வளவு முக்குனாலும் முடியாது ராசா" என நக்கல் சிரிப்பு சிரிக்க,


"ஏன் சித்திமா "என பாவமாக கேட்டான் பூபதி .


"ஏன்னா அவ ரூம்ல இல்லை பா , குடிசைல இருக்கா" என சிரிக்க


"இது எப்போ ",


"நேத்தே நீ தூங்கின அப்புறம் , போ போபோய் பொலப்ப பாரு " என சிரித்து கொண்டே அவ்விடம் நகர்ந்து விட்டாள் யோகம்.


அதன் பின் வந்த மூன்று நாட்களும் , எவ்வளவு குட்டி கரணம் அடித்தும் லச்சுவை பார்க்க முடியவில்லை.


இதான் கடைசி வாய்ப்பு அவளுக்கு தண்ணீர் ஊத்துரதுக்குள்ள அவள் எப்படியாவது தன்னை பார்திடனும்னு ,தன் சகாகளோட சேராந்து பிளான் போட்டு விட்டான்.


ஊரே மெய்க்கும் அளவு விழா ஏற்பாடு ஆகிவிட்டது , கெடா விருந்தோட எல்லாம் ஜோரா நடந்து கொண்டிருந்தது , சீர்வரிசை நகை ,புடவை என தன் மருமகளளுக்கு இரு மாமன்களும் ஊர் மெச்சுற அளவுக்கு வாங்கி சபை நிறப்பிட்டாங்க, பசுபதியும், ரகுபதியும்.


அத்தைகள் கை பிடிக்க கருப்பு ஷால், தலையில் போட்டு முகம் மூடி தண்ணீர் ஊற்றும் இடத்திற்கு, லச்சுவை அழைத்து சென்றார்கள்,


நடந்து வந்து கொண்டிருப்பவளின் முகத்தை நோக்கி காற்றுவீச அவளது ஷால் விலகி தன் கண்கள் சுருக்கி பின் திறந்து பார்க்க ,


அவள் முன் தோளில் பையுடன் நின்றிருந்தான் சபா,


சபாவிற்க்கு பின்னால் கண்கள் சிவக்க நின்றிருந்தான் பூபதி ....


வட போச்சே.....😕😕


அது என்ன நடந்ததுனா.......😀😀😀


அடுத்த அத்தியாயத்தில் சொல்லுறேன் மக்களே நீங்க யோசித்தாள் கமெண்ட்ஸ்ல சொல்லுங்க😄😄😄
 
Last edited:

Naga Novels

Active member
Wonderland writer
பிழை திருத்தம் 💕 9

நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் உலகில் விதிக்கு என்ன வேலை .
நமக்கு ஆயிரம் கனவுகள் இருக்கும் ஆசைகள் இருக்கும்,ஆனால் நிஜம் என்னவென்றால் எது நடக்கனும்னு இருக்கோ அது தான் நடக்கும்.
இங்கும் அப்படி தான் பூபதி எது நடக்க கூடாது என்று நினைதானோ அது நன்றாக நடந்து விட்டது.

லக்ஷனா முகத்தில் உள்ள துணி விலக , கண்கள் சுருக்கி பின் தலையை திருப்பி விழிகள் திறக்க, அந்த விழிகளுக்குள் பதிந்த உருவம் சபரிநாதன்.
சட்டென்று யாரும் காணாது தலை தாழ்தியவளோ ,சிறு முறுவலுடன் வெட்கம் கொண்டாள் அவளே அறியாத ஹார்மோன் சேட்டையில்.

லக்ஷனாவை கூட்டி சென்றவுடன் , தோளில் பையுடன், தலையை கோதிக்கொண்டே திரும்பினான் சபா.
அங்கு பூபதி கண்கள் சிவக்க ,தன் மொத்த கோட்டையும் ஒரு நொடியில் இடிந்து மண்ணோடு மண்ணாகிய கோபத்தில் நின்று கொண்டிருந்தான் "இவன் எப்படி வந்தான்" என்ற எண்ணத்தோடு.

"என்ன பூஊஊஊஊஊஊ, இப்படி ஷாக் ஆகி நிற்க, ஷாக்க கொற ,ஷாக்க கொற, இவன் எப்படி வந்தான்னு தானே நினைக்கிற ,வந்தேனா உன் ஆசையில மண்ண போட்டேனா அதான் இந்த சபா "
என்று சபா பேசிகொண்டிருக்கும் போதே பூபதி கைகள் முறுக்கி தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டிருந்தான்.

"என்ன ப்ரோ, எப்படினு தானே பார்க்க சொல்லவா டொட்டடோய்ன் ,ஒரு சின்ன பிளாஸ்பேக் போய்டு வருவோம்" என அவன் முன் கை விரலை வைத்து சுருள் சுத்தினான்.

அன்று ....

லக்ஷனா அறையில் இருந்து அவள் பெரியமனுஷி ஆகி விட்டாள் என்ற செய்தியில் மகிழ்ச்சியுடனே வெளிவந்தவன், முக்கு வீட்டு கிழவி சொன்ன செய்தியில் தான் கொஞ்சம் உஷார் ஆனான்.

சட்டென்று அவன் மனதில் நரி யோசனை உதித்தது. தன் அன்னைகள் இருவர் இருக்கும் இடம் சென்றான் அங்கு அவர்கள் பரப்பராக சடங்கு வேலையை ஆரம்பித்து இருந்தார்கள்.

"ம்க்கும்" என்று குரலை செருமினான், இவன் தான் செருமினானே தவிர அவர்கள் இவனை என்ன என்று சட்டை செய்யவில்லை, மீண்டும் குரலைசெருமிக்கொண்டே,

" தாய்மார்களே "
என்ன என்பது போல் அவர்கள் இவனை பார்க்க .

"அது உங்க சின்ன மகனுக்கு சொல்லியாச்சா"
என்றவுடன் ,யோகவள்ளி " டேய் நான் போட்டேன்டா அந்த பயபுள்ளைக்கு போனே போக மாட்டிக்கு" என்று கூறவும் கன நேரத்தில் சிந்தித்தவன்,

"அது அவன் ஏதோ மீட்டிங்காக வேற ஊரு போறதா சொன்னான் " என் கூறவும் ,அமிர்தமும் யோகாவும் ஒரு சேர "யார்ட்ட உங்கிட்டயா" என கேட்கவும் சுதாரித்த பூபதி ,
அது சரி என்கிட்ட நல்லா பேசினானே , உங்க தம்பி தங்க கம்பி பச்சைகிளிட்ட தான் சொன்னான் போல அதுனால நீங்க எதும் அவனை டிஸ்டர்ப் பண்ணாதீங்க ,அப்புறம் உங்க மகன பொட்டி கட்டி அனுப்பி வைச்சிட போறாங்க ",
என பயம் முறுத்தியவன் அவர்கள் அறியாவண்ணம், சமையல் மேடையில் வைத்திருந்த இருவரின் தொலைபேசியில் சபாவிற்க்கு அவர்களும் , சபாவிடம் இருந்து இவர்களுக்கும் அழைப்பு வராதபடி செய்து விட்டான்.
"சரி சரி ஆக வேண்டி வேலைய பாருங்க " என கூறிவிட்டு நைசாக அவ்விடத்தை விட்டு நலுவி விட்டான்.
இதே விஷயத்தை பச்சை கிளியிடமும் கூறி வைத்தான், அவனுக்கு அழைக்க கூடாது என்று கூறிவைத்தான் வேறுவிதமாக...
எதிர்பாராத விதமாக சபாவும் நிஜமாகவே ஒரு மீட்டில் மாட்டிக்கொள்ள அவனும் வீட்டு ஆட்களை தொடர்பு கொள்ள வில்லை.
இரு தகப்பன் மார்களுக்கும் இந்த தகவல்கள் தாய்மார்கள் மூலம் கடத்தப்பட்டது.
ஆனால் ,நிகழ்ச்சி நடைபெறவிருந்த இன்று காலை ,தற்செயலாக தன் மாமனுக்கு போன் போட ,
" என்னடா மருமகனே , எப்படி இருக்க, மீட்டிங் எல்லாம் எப்படி போகுது" என் கேட்கவும், அவன் சிறிது அதிர்ந்து பின்,
" அது எப்படி உனக்கு தெரியும் மாம்ஸ்"என கேட்க.
"வேற யாரு நம்ம பூபதிதான் சொன்னான்"
" பூபதியா , அவன் எதுக்கு திடீர்னு இப்படி சொல்லனும்" என யோசித்தவன்,
"என்னனு சொன்னான் எதுக்காக சொன்னான் ?" என பச்சைகிளி வாயில இருந்து வார்தையை புடுங்க வலைய போட்டான் சபா.
"அதாம்ல ஒரு விஷேசம் சொல்ல "
"என்ன விஷேசம் "
"அட இவன் என்னடா உன் அத்த புள்ள பெரியமனுசி ஆகிட்டா ,உங்க வீடே தலைகீழா ரெடி ஆகிட்டு இருக்கு அதுக்கு தான் , என்று பச்சை கிளி கூறிமுடிக்கவும்.
"போன் கட் ஆகி விட்டது "
பச்சைகிளியும் வேலைபளுவில் தான் உளறியதையே மறந்து விட்டான்.
அதன் பின் தன் தந்தையர்களிடம் பேசி விஷயம் அறிந்து, உடனே பிளைட் பிடித்து வந்து விட்டான்.
அப்படி அடிச்சு பிடித்து வீட்டிற்குள் ஓடி வந்ததுதான் பூபதியை இடித்து தள்ளிவிட்டது.
இதை கேட்டவுடன் பூபதி அப்படியே பச்சைகிளியை பார்க்கவும் .
"ஐய்யயோ பார்க்குறானே "
என திருட்டு முழி முழித்தான் பச்சை கிளி.
"இருடி ,மாமே உன் இறக்கைய பீச்சு போட்டு சூப் வைச்சிடுறேன் "என்றதோடு சபா பக்கம் திரும்பியவன்.
"ஓ அதான் என்ன தள்ளிவிட்டுட்டு உன் முகத்தை முதல் முதலா காமிச்சியோ " என பூபதி பல்லைகடித்து கொண்டே கூறவும்.
"என்ன முகத்தை காமிச்சிட்டாக" என சபா நக்கலாக அதே சமயம் விஷமமாக கூறவும்.
"டேய் நடக்காத டா " சடங்கான புள்ளைக தண்ணீர் ஊத்துறதுக்கு முன்னாடி எந்த முறை பயன் முகத்துல முழிக்காகளோ அவங்களையே கட்டிக்கிற மாதிரி விதி அமையுமா , இந்த தகவலையும் உன் மாமன் சொல்லிருப்பானே" என கூறவும்.
"வாவ்வ்வ் "என தன் இரு கைகளையும் தன் கன்னதில் வைத்த சபா "டேய் பூஊஊஎ இதுல இவ்வளவு சமாச்சாரம் இருக்கா, எனக்கு இப்போ நீ சொல்லி தான் தெரியும் , டேய் பூஊஊஊ சரியான ஆளுதான் நீ அப்போ அந்த லட்டு இந்த கண்ணணுக்கு தான் " என கண்சிமிட்டியவன் ,
"தாங்க்ஸ் ப்ரோ " என பூபதி கன்னத்தில் தட்டி கொடுத்து விட்டு , விசில் அடித்து கொண்டே தயாராக சென்று விட்டான்.
இங்கு மொத்தமும் சர்வநாசமான கோபத்தில் , பூபதி பச்சை கிளியை தேட , அது எப்போதோ பறந்து விட்டது.
இங்கு அறையில் சடங்கு முடிந்து , லக்ஷனாவை அழகு தேவதையாக தயார் செய்தார்கள் இரு அத்தைமார்களும்.
"லக்ஷனா மா எவ்வளவு அழகா இருக்க என் கண்ணே பட்டுடும் போல" என யோகம் நெட்டி முறிக்க.
ஏதே தோ நினைவுகள் வந்து அமிர்தம் கண்களை ஈரம் ஆக்கியது, தன் கண்ணை துடைத்தவள், லக்ஷனாவிடம் , "வாம்மா அம்மா அப்பாட்ட ஆசிர் வாதம் வாங்குவோம் " என அமிர்தம், லெட்சுமியின் அறைக்கு கூட்டி செல்ல..
அங்கு லெட்சுமியும் ,அவரது கணவரும் இணைந்து புன்னகைத்து நின்ற ஆளுயர புகைப்படம் கண்டு கண்ணீர் வடித்தனர் மூவரும்..
ச்சே இப்படியா நடக்கனும் , 😕😕😕😕😕
நடக்க கூடாது எல்லாம் நடந்து ஈரக்கொலையே அந்து விட்டது,
அந்தத அடுத்த எபில சொல்லுறேன் மீ பீலீங் ஆகிட்டேன்.....
நட்புடன்
💙 நாகா 💙
 
Status
Not open for further replies.
Top