Mahalakshmy
New member
Arjun is out of case. But kajan...
Good move.
Good move.
Nicely analyzedஉருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 68)
அட படுபாவி...! நண்பன், நண்பன்னு சொல்லி கூட இருந்தே குழியைப் பறிச்சிட்டிங்களே டா...! அங்க என்னடான்னா ஒருத்தன் விஸ்வாசமே என் சுவாசம்ன்னு சொல்லி, சொல்லியே காதலை சொன்ன பொண்ணையும் தள்ளி நிப்பாட்டினதோட, தன் காதலையும் சொல்லாம மறைச்சிட்டான். இங்க ஒருத்தன் என்னடான்னா... நண்பனா பழகியும் கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாம சுசாசத்தையே நிறுத்துற அளவுக்கு நல்லா வைச்சு பண்ணிட்டான் நண்பனுக்கு.
ம்... எல்லாம் கலிகாலம் பண்ற ஊழி தாண்டவம் போலயிருக்கு.
அது சரி, எல்லாம் செட் பண்ணி தோளுல நகத்தால காயத்தை உண்டாக்கி அர்ஜூனை பக்காவா ப்ளேன் பண்ணி மாட்டி விட்டாங்க சரி, அதே மாதிரி காண்டமும் யூஸ் பண்ணினாங்க சரி. ஆனா, அவ உடம்புல இருந்த ஒரு காயத்துல கூடவா கல்ப்ரீட்டோட ஒரு அடையாளம், அதாவது உடல் ரோமம், தலை முடி இப்படி ஏதாவது கிடைச்சிருக்கும் தானே...? தவிர, அந்த ரெண்டு தடியன்களோட உடம்பையும் வந்தனா காயப்படுத்தி
இருப்பாத்தானே... அப்ப அவ நகக்கண்ணுல அவங்களோட சதை துணுக்கு, ரத்தம் இப்படி ஏதாவது அந்த காருல கூட இருக்கும் தானே...? ஏன் அதெல்லாம் கிடைக்கலை...?
ஏன்னா, சம்பவம் அர்ஜூனோட காருக்குள்ள நடந்ததால, காரை வாஷ் அவுட் பண்ணலை தானே..? என் சந்தேகத்தை க்ளியர் பண்ணுங்களேன்.
போகட்டும், கஜனும் விஜய்யும் அந்த ரெண்டு காம வெறிப் பிடிச்ச மிருகங்களை கண்டு பிடிச்சு, வாக்குமூலத்தையும்
வாங்கி அவங்களை போட்டுத் தள்ளியும் ஆச்சு. ஆனா, இந்த கஜன் தான் அவங்களை கண்டந்துண்டமா கொல்லணும்ன்னு முடிவெடுத்துட்டு கடைசியில தன்னோட ப்ரெஸ்லெட்டை மிஸ் பண்ணி கோட்டை விட்டுட்டு வந்துட்டாப்போல. இதுக்குத்தான் பதறுகின்ற காரியம் சிதறிவிடும்ங்கிறது.
நம்ம வடிவேல் சொன்ன மாதிரி பக்காவா ப்ளான் பண்ணி மர்டர் பண்ணனும்ங்கறது.
அது சரி, இப்ப ப்ரெஸ்லெட் நம்ம ஜீவிதன் கிட்ட கிடைச்சுடுச்சே....
இப்ப அவன் என்ன பண்ணப்போறான்...? கடமையே கண்ணாயிரமா கஜனை அரெஸ்ட் பண்ணுவானா...?
இல்லை குற்றவாளிகளைத் தானே கொன்னான், அதுவும் தான் செய்ய வேண்டியதை அவன் செஞ்சான்னு... கஜனை விட்டுடுவானா தெரியலையே ?
CRVS (or) CRVS 2797