ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிகரில்லா நேசமிதுவோ! - கதை திரி

Status
Not open for further replies.

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
காதல் கொண்டு இரு மனம் இணையவில்லை.
மாங்கல்யம் சூடி மணமுடிக்கவில்லை.
அவன் உயிரை அவள் சுமக்க,
விருப்பமில்லா ஒரு பந்தம்.
இணையவும் இல்லை
விலகவும் வழி இல்லை.
 

Attachments

  • eiIHTPV32630.jpg
    eiIHTPV32630.jpg
    703.3 KB · Views: 1

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
நிகரில்லா நேசமிதுவோ!!!


நேசம் : 1


அவசரமெல்லாம் காலை எட்டு மணிக்கு பள்ளியை வந்தடைவதற்கு மட்டும் தான். மாலை சௌகரியமாக பள்ளிக்கு அருகில் இருக்கும் பூங்காவில் சிறிது நேரம் விளையாடிவிட்டே வீட்டிற்கு செல்ல மனம் வரும் எட்டி வயது சிறுமி நிலாவுக்கு. அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறையாக அமைந்து விட, பறந்து பறந்து ஹோம்வொர்க் எழுதும் பதட்டம் கூட இல்லாது நிம்மதியாக ஊஞ்சலில் அமர்ந்து தந்தையுடன் கதையளந்துக் கொண்டிருந்தாள்.


அவள் தந்தை கிருஷ்ணாவும் மெதுவாக மகளை ஆட்டி விட்டபடி அவள் சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டிருந்தான்.


"அப்பா… என் ப்ரெண்ட் காவியா பர்த்டேக்கு அவ அப்பா அவ உயரத்துக்கு பெரிய டெடிபியர் வாங்கி கொடுத்து இருக்காங்க… என் பர்த்டேக்கு எனக்கும் அது மாதிரி ஒன்னு வாங்கி தரீங்களா?" என்று பின்னால் நிற்கும் தந்தை முகத்தை திரும்பிப் பார்த்துக் கொண்டே பிள்ளை கேட்க,


"அதுக்கு எதுக்கு டா பர்த்டே வர காத்திருக்கனும்? அப்பா இன்னைக்கே வாங்கி தரேன்" என்றான் கிருஷ்ணா. தன் மகள் எதற்கும் ஏங்கி நிற்க கூடாது என்ற தவிப்பு அவனிடம்.


"அய்யோ வேணாம். அப்புறம் மீரா திட்டுவா?" மெல்லிய பயத்துடன் மறுத்தாள் சிறியவள்.


"ஏன்? என்கிட்ட இருந்து எதுவும் வாங்க கூடாது சொல்லி இருக்காளா?" என்று கண்களை சுருக்கி கேட்டவனிடன்,


"ம்ஹும்… அப்படியெல்லாம் எதுவும் இல்ல. தேவையில்லாம உங்களுக்கு செலவு வைக்க கூடாது சொல்லி இருக்கா" என்றாள்.


'என் பொண்ணுக்கு நான் பண்றது தேவை இல்லாததா? பிள்ளை மனசில என்னலாம் பதிய வைக்கிறா?' என்று மீரா மீது கோபம் தான் வந்தது அவனுக்கு.


"அதான் நீங்க பர்த்டேக்கு கிஃப்ட் பண்ணா எதுவும் சொல்ல மாட்டா" என்று குட்டி பக்கா பிளானோடு கேட்க,


"ஹ்ம்ம்" என்று பிள்ளைக்காக மட்டுமே இதழ் வளைய, பார்வை மொத்தமும் அனலாக சற்று தொலைவில் கல்பெஞ்சில் அமர்ந்து, டைரியில் குறிப்பெடுத்து கொண்டிருந்த அரக்கி மீது தான் பதிந்திருந்தது.


நிலாவிற்கு இவன் உயிர் கொடுத்த தந்தை என்றால் அவள் தான் கருவறை தாங்கி பிரசவித்த தாய், மீரா.


அவன் உயிரை சுமந்து, அவனுக்கு உயிர் கொடுத்தவர்களை அவனிடம் இருந்து பிரித்த அவன் அரக்கி, சிடு மூஞ்சி, லேடி ஹிட்லர் எல்லாம் அவள் தான் அவனுக்கு.


அவன் இருண்ட பக்கங்களுக்கு வழிகாட்டி, அவன் இலட்சியத்திற்கு வழி கொடுத்து, வாழ்க்கையை சிதைத்த சூர்ப்பனகை. அரக்க கூட்டத்தின் தலைவி. விட்டால் உலகில் உள்ள அத்தனை பட்ட பெயர்களையும் அவளுக்கு வைப்பான். அந்த அளவுக்கு கோபம் அவள் மீது.


ஆனால் எதுவும் செய்ய முடியாது தவித்துக் கொண்டிருக்கிறான்.


பார்வை அவள் மீது அரை கணம் தான் பதிந்தது. கிடைக்கும் சொற்ப நேரத்தில் அந்த விடியா மூஞ்சி மீராவை பார்த்து கொண்டிருக்க அவன் விரும்பவில்லை. மகளுடன் மட்டுமே நினைவுகளை சேகரிக்க விரும்பியவன், "நிலா குட்டி, அஞ்சு எப்படி இருக்கா?" என்று தன் அன்னையை பற்றி விசாரித்தபடி அவர்கள் உரையாடல் அங்கே தொடர,


இங்கே குறிப்பெடுத்துக் கொண்டிருந்த மீரா அருகே வந்து அமர்ந்தாள், நிலா வகுப்பில் பயிலும் நந்துவின் அம்மா சுபா. அந்த சிறுவனும் அங்கே தான் சறுக்கு மரம் விளையாடி கொண்டிருந்தான்.


"நிலா அம்மா" என்று அழைக்கவும், மீராவும் அவளை நிமிர்ந்து பார்த்தாள்.


வலுக்கட்டாயமாக இதழை இழுத்து சிரித்து வைத்தவள், "நான் நந்துவோட அம்மா" என்று விளையாடிக் கொண்டிருந்த தன் மகனை கை காட்டா, மீரா விழிகளும் சிறுவன் மீது பதிந்து மீண்டது.


"நந்து எப்பவும் நிலா பத்தி தான் வீட்ல பேசிட்டே இருப்பான். ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ்" என்றவள், தான் வந்த வேலையை மெதுவாக ஆரம்பித்தாள்.


"நீங்களும், நிலா அப்பாவும் ஒன்னா இல்லனு கேள்வி பட்டேன். இந்த காலத்துல எல்லாரும் அவசர அவசரமா கல்யாணம் பண்ணிட்டு, அதை விட அவசர அவசரமா டிவோர்ஸும் பண்ணிகிறீங்க" என்று குரலில் மட்டும் வருத்தம் வழிந்தோட, அவரை தான் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.


"பிள்ளைக்காகவாது சேர்ந்து வாழலாமே!" என்று அறிவுரை வழங்க அவர் தயாராகி, "டிவோரஸ் வாங்கிட்டீங்களா?" என்று கேட்க,


மீரா தலையோ மறுப்பாக இட வலமாக அசைந்தது.

"அப்போ இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கு. நல்லா யோசிச்சு நல்ல முடிவா எடுங்க" என்று பெரிய மகான் போல் ஒரு குடும்பத்தை சேர்த்து வைத்து விட்ட மிதப்பில் சுபா நெஞ்சை நிமிர்த்தி நேராக அமர,


"கல்யாணம் பண்ணா தானே டிவோர்ஸ் வாங்கணும்" என்ற மீரா பதிலில் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு அமர்ந்து இருந்தவள் இதயமோ ஒரு நிமிடம் அதிர்ந்து இயங்க, அப்படியே விழியை திருப்பி மீராவை பார்த்தாள்.


எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாது நேர்கொண்ட பார்வையாக சுபாவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.


"அப்போ நிலா?"


"என் குழந்தை."


"அவர்?" என்று கிருஷ்ணா புறம் விரல்கள் மட்டும் அசைய,


"நிலாவோட அப்பா" என்ற பதிலில் சகலமும் ஆடி போனது சுபாவுக்கு.


அவளே மகன் தன்னிடம் சொன்ன அரைகுறை செய்திகளை கோர்த்து, ஏதோ டிவோர்ஸ் கேஸ் போல, சிறிது நேரம் சுவாரஸ்யமாக அவள் வாழ்க்கையை அலசலாம் என்று எண்ணி பேச்சு கொடுத்திருக்க, மீராவோ இன்னும் சுவாரஸ்யமாக்கி அவள் தலையை பிய்த்துக் கொள்ள வைத்தாள் அல்லவா!


ஒரு நிமிடம் தலையை தாங்கியிருந்த சுபாவோ, "எனக்கு புரிஞ்சுருச்சு. ரெண்டு பேரும் காதலிச்சு இருக்கீங்க, முன்ன பின்ன அப்படி இப்படி இருந்ததுல நிலா உருவாகிட்டா அப்படி தானே" என்று கேட்க,


"காதலா?" என்று மீரா முகத்தை சுருக்கிய தினுசிலே புரிந்தது, காதல் என்ற வார்த்தை அவர்கள் வாழ்வுக்கு வேப்பங்காய் என்று.


“அப்போ அதுவும் இல்லையா?” என்று சுபா குழம்பிய முகத்துடன் கேட்க,


"குழந்தை பெத்துக்க, காதலிக்கனும், கல்யாணம் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லையே" என்று திருப்பி கேட்டாள் மீரா.


"அப்போ நிலா எப்படி?" என்று அதிர்ந்து கேட்ட சுபாவிடம்,


"ஏன்? ஒரு குழந்தை பெத்த உங்களுக்கு தெரியாது, குழந்தை எப்படி வரும்னு" என்ற பதிலில் அதிர்ந்து வாயில் கை வைத்தவள், மீராவை விட்டு ஒரு அடி தள்ளி அமர, இதழ்களை கடக்காத ஏளன புன்னகை மீரா இதழ்களில்.


சலிப்பாக சுபாவை பார்த்தவள், "நிலா கெட்டிங் லேட்… கம்" என்று மகளை அழைக்க,


அவளோ அப்போது தான் தந்தையின் பயிற்சியில் கம்பிகள் மீது ஏற முயன்று கொண்டிருந்தாள்.


"அம்மா… இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாம் பிளீஸ்" என்று பிள்ளை கெஞ்ச, பதிலேதும் இல்லை. கையை கட்டிக் கொண்டு ஒரே ஒரு பார்வை தான் தந்தை தோளில் தாவி அவளே இறங்கி ஓடி வந்தாள்.


'ராட்சஸி பிள்ளையை கூட பார்வையாலே மிரட்டி வைக்கிறா.' என்று அவளின் ஒவ்வொரு செயலுக்கும் அவள் மீது வீண் கோபம் கொண்டான் அவன்.


"பை ப்பா" என்று கிருஷ்ணாவுக்கு கை காட்டி விட்டு நிலா அன்னை கையை பிடித்துக் கொள்ள,


அவனோ "நிலா" என்று மகளை அருகே அழைத்தவன், காரில் இருந்து சாக்லேட் பாக்ஸ் ஒன்றை எடுத்து கொடுக்க, கொள்ளை இன்பம் பிள்ளை முகத்தில்.


"மொத்தமும் எனக்கா?" என்று ஆசையாக கேட்டவள் “ஆம்” என்று அவன் தலை அசையவும், "லவ் யூ சோ மச் ப்பா" என்று அவன் கன்னத்தில் இச்சு வைத்த பிள்ளை கன்னத்தில் அவனும் இதழ் பதிக்க, வெறுமையான முகத்துடன் தான் மீரா அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.


"கார்ல ஏறு, உன்ன வீட்ல விடுறேன்" என்று அழைத்தவனிடம், "வேணாம் மீராவ ஏன் தனியா விட்டுட்டு வந்தனு கேட்டு நெல்லையாண்டார் திட்டுவார்." என்று மறுத்தவள் மீண்டும் தந்தை கன்னத்தை எச்சிலாக்கி விட்டே அன்னையிடம் ஓடி வந்தாள்.


"இவளுக்கும் வேலை இல்லை, அவருக்கும் புத்தி இல்ல… இவ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இருக்கார்" என்று தன்னுடன் இல்லாது தன் எதிரிக்கு துணை நிற்கும் தந்தை மீது கோபம் தான் வந்தது கிருஷ்ணாவுக்கு.


"ம்மா… அப்பா கூட கார்ல போலாமா?" தந்தையிடம் மறுத்தாலும், ஆசையாக அன்னையிடம் அனுமதி கேட்டு சிறியவள் நிற்க,


"நீ கார்ல வா" என்ற மீராவோ ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்திருந்தாள்.


"வேணாம்" என்ற பிள்ளையும் முகத்தை சுருக்கி கொண்டே ஸ்கூட்டியில் முன்னால் வந்து ஏறி கொள்ள, மகள் தலை மறையும் வரை நின்று பார்த்தவனும், காரில் ஏறி ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்த போனை ஆன் பண்ண, ஐம்பது அழைப்புகள் நிவாசினி என்ற பெயரில் வந்து விழுந்து இருந்தது.


பேரன்ஸ் டீச்சர் மீட்டிங்காக வந்திருந்தவன், இத்தனை நேரம் பிள்ளையுடன் இன்பமாக கழித்திருக்க, இப்போது தந்தை முகம் களைந்து, வியாபார வர்த்தகனாக இறுக்கமான முகத்துடன் தன் காரியத்தரசி நிவாசினிக்கு திருப்பி அழைத்தான். அதன் பிறகு இயல்பான சிரிப்பை அவன் இதழ்கள் மறந்து தான் போனது.


“அம்மா… என் பிரெண்ட்ஸ் காவியா, நந்து, சிவேஷ் அப்பா, அம்மாலாம் ஒரே வீட்ல தான் இருக்காங்க. கிருஷ்ணா மட்டும் ஏன் நம்ம கூட இல்ல. நாமளும் ஒன்னா ஒரே வீட்ல இருந்தா ஜாலியா இருக்கும்ல” என்று பிள்ளை ஏக்கமாக கேட்க, நிலாவிடம் தான் அதற்கு எந்த பதிலும் இல்லை.


“இன்னைக்கு ஸ்கூல்ல என்ன சொல்லி கொடுத்தாங்க?” என்று மகள் கேள்விக்கு தடை போட்டு வேறு கவனத்தை கொண்டு வர முயன்றாள்.


இருவேறு துருவங்கள் தான் இருவரும்…

இணை சேரும் நாளை எதிர் நோக்கி அவர்கள் குடும்பம் காத்திருக்க…

இணையா காதலர்கள் பெயரை கொண்ட இருவரின் கரங்களும் இணையுமோ!













 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
நேசம் : 2

"அம்மா…" என்று அழைத்துக் கொண்டே மீரா கதவை திறந்து உள்ளே வர, "அஞ்சு" என்று அவளுக்கு முன்பாக ஓடி வந்த நிலாவை முறைத்தவள், "நிலா பெரியவங்களை பெயர் சொல்லி கூப்பிட கூடாது சொல்லி இருக்கேன்ல, பாட்டி சொல்லு" என்று திருந்த, அரை கணம் நின்று அன்னையை வெறித்த குட்டியோ, "அஞ்சு பாட்டி" என்று கத்திக் கொண்டே தன் தந்தை வழி பாட்டியான அஞ்சம்மாளை தேடி ஓடினாள்.

"அவனை பார்த்துட்டு வந்தாலே மரியாதை எல்லாம் பறந்து போகுது. என்ன தான் நான் மரியாதை சொல்லி கொடுத்து, டிசிபிலினா வளர்த்தாலும், அப்பனுக்கு இருந்தா தானே பிள்ளைக்கு ஒட்டும்" என்று துள்ளி குதித்து ஓடும் மகளை திட்டுகிறாளா? கொஞ்சுகிறாளா? என்றே தெரியாது நிர்மலமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவள், வாங்கி வந்த மளிகை சாமான்களை கிச்சனில் வைக்க சென்று விட்டாள்.

நிலாவோ, தகப்பன் வாங்கி கொடுத்த சாக்லேட் பாக்ஸை தன் அஞ்சு பாட்டியிடம் காட்டி, "யார் வாங்கி கொடுத்தா சொல்லுங்க?" என்று கண்கள் மின்ன கேட்க,

அவரும் காலையிலேயே மீரா பேரன்ஸ் மீட்டிங் என்று சொல்லி சென்றதை நினைவு கூர்ந்து, தன் மகனை தான் பேத்தி பார்த்து வருகிறாள் என்பது புரிந்து போக, ஆசையாக பேத்தியை அள்ளி மடியில் வைத்தவர்,

"கிருஷ்ணாவ பார்த்தியா? எப்படி இருக்கான்?" என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.

பெத்த பிள்ளை ஆயிரம் தவறு செய்து இருந்தாலும், தாய் பாசம் இல்லாது போகுமா? அவன் செய்த ஒரே ஒரு தவறு அனைவரையும் விட்டு ஒதுக்கி வைத்து காலம் சதி செய்ய, அதில் சிக்கி தவிப்பது என்னவோ! அவனை பெற்றெடுத்தவளும், அவன் பெற்றெடுத்தவளும் தான்.

"நல்லா இருக்கார். உங்களையும் கேட்டதா சொல்ல சொன்னார்." என்று அன்னை மகனுக்கு நடுவே குட்டி மெசஞ்சர் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரே ஊரில் இருந்தும், மகனை பார்க்க முடியா துர்பாக்கிய நிலை அந்த தாய்க்கு. இத்தனைக்கும் அவரை யாரும் கட்டி போட்டு தடுக்கவும் இல்லை. அவர் நினைத்தால் எந்த வழியிலாவது மகனை பார்த்து இருக்கலாம். அவன் போன் நம்பர் கூட அவரிடம் இருக்கிறது. ஆனால் ஒருமுறை கூட அவன் எண்ணிற்கு அழைத்து பேச தோன்றவில்லை.

நெஞ்சை அடைக்கும் மகன் பிரிவை அவன் மகளை கொஞ்சி தீர்த்து கொள்கிறார். தாயாக மகனின் தவறை மன்னிக்க முடிந்த அவரால், ஒரு பெண்ணாக முடியாது போனது தான் உயிருக்கு உயிரான மகனை பிரிந்து இருக்க காரணம்.

அவன் செய்த பாவத்திற்கு விமோச்சனம் தேடாது, அவனை நெருங்க கூடாது என்று எவ்வளவு தான் உறுதியாக இருந்தாலும், பிள்ளை பாசம், மகனை எண்ணியதும் அந்த அன்னை விழிகள் துளிர்க்க,

நிலாவோ, "அஞ்சு பாட்டி அப்பாவும் ஏன் நம்ம கூட இல்ல? எல்லாரும் ஒரே வீட்ல இருந்தா நல்லா இருக்கும்ல" என்று கேட்டு அவரை சங்கடப் படுத்தினாள்.

என்ன பதில் சொல்வார் அவரும்? "அப்பாவுக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு சீக்கிரமே உன் கூடவே வந்து இருப்பார்" என்று சமாதானம் செய்ய, நிலாவோ, "மீராம்மா இங்க இருந்து தானே வேலைக்கு போறா… அதே போல அப்பாவும் போகலாம் தானே" ஆள் மட்டுமல்ல அறிவும் வளர்ந்து கொண்டே போக, அவள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளாவில்லை.

"இந்த கேள்வியெல்லாம் உன் அம்மாகிட்ட கேட்க வேண்டியது தானே" என்று அவர் மீராவை கோர்த்து விட்டு நழுவ பார்க்க, நிலாவோ "அம்மாகிட்ட கேட்டா பதில் சொல்ல மாட்றா." என்றவளை, 'அப்போ நான் மட்டும் இழிச்சவாயா?' என்பது போல் ஒரு பார்வை பார்த்தவர்,

"என் பையன் வாங்கி கொடுத்த சாக்லேட் எனக்கும் பங்கு உண்டு" என்று பேச்சை திசை திருப்பி பேத்தியுடன் சண்டை போட, "இல்ல அப்பா மொத்தமும் எனக்கு மட்டும் தான் தந்து இருக்காங்க" என்று சொல்லி குட்டி கொடுக்க மறுக்க, பாவமாக முகத்தை வைத்தே சிறுமியை ஏமாற்றி தன் பங்கை வாங்கி கொண்டார் கள்வனின் அன்னை.

அவர்கள் சம்பாசைகளை பார்த்துக் கொண்டிருந்த அவர் கணவர் நெல்லையாண்டானோ, ‘இதெல்லாம் ஒரு பொழப்பு’ என்பது போல் தலையில் அடித்து கொள்ள, அவருக்கு ஒரு இதழ் சுழிப்பை பதிலாக கொடுத்த அஞ்சம்மாளும் பேத்திக்கு மேல் கழுவி, உடை மாற்ற அழைத்து சென்று விட்டார்.

மூன்று படுக்கையறைகள் கொண்ட பிளாட் அது. மீரா, நிலா, கிருஷ்ணாவின் பெற்றோர்கள் மட்டுமின்றி நிலாவின் பெற்றோர்கள் என எல்லாரும் அங்கே தான் தாமசம்.

அளவான வருமானம் நிறைவான வாழ்க்கையா என்று கேட்டால், மனது நிறையாது வாழ்க்கை எப்படி நிறையும். பிள்ளைகள் தனித்திருக்க எந்த தாய் தந்தை நிம்மதி நிலைத்திருக்கும்.

நெல்லையாண்டார் மற்றும் மீராவின் தந்தை அந்துவன் இருவரும் மின்சாரவாரியாத்தில் பணி புரிந்தார்கள். தொழில் சம்மந்தமாக இணைந்த நட்பு, பல தடைகள், மனஸ்தாபங்கள் தாண்டி இன்றும் இணைந்து இருக்கிறார்கள்.

இரவு உணவு மீரா கைவண்ணத்தில் தயாராகியிருக்க, அனைவரும் ஒன்றாக அமர்ந்து, பேத்தி கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் விளக்கம் சொல்லியே சாப்பிட்டு முடித்தார்கள். அவர்களுக்கு சுகர் மாத்திரை, பிரஸர் மாத்திரை என்று எல்லாம் எடுத்து கொடுத்து விட்டே தன் அறைக்கு வந்தாள் மீரா.

நிலாவுக்கு எங்கே பிடிக்கிறதோ அங்கே தான் தூக்கம். சில நாள் அஞ்சு பாட்டியை அணைத்தபடி, சில நாள் சசிகலா பாட்டியை கட்டிக் கொண்டு, அந்து தாத்தா மீது காலை போட்டு தூக்கம் தொடரும்.

மீரா என்றால் சிறிது பயம் தான். தூங்கும் போது கூட ஒழுக்கம் சொல்லி கொடுப்பாள். ஆடை விலக, காலை பப்பரப்பே என்று விரித்து கிடந்தால் அடி விழும். அதற்கு பயந்தே அவளுடன் தூங்க வர மாட்டாள்.

மீரா… திருமணம், பிறந்த நாள் விழாக்கள், இன்னும் பிற சுப நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தி வரும் ஈவன்ட்ஸ் ஆர்கனிஷிங் கம்பெனி ஒன்றை சுயமாக நடத்தி வருகிறாள்.

மாப்பிள்ளை, பெண் மட்டும் ரெடியாகா இருந்தால் போதும், ஊரே வாயை பிளக்கும் அளவிற்கு திருமணத்தை மிகச் சிறப்பாக நடத்தி முடித்து விடுவாள்.

வேலைகள் எல்லாம் பட்ஜெட் போட்டு பல திட்டங்களுடன் திறம்பட செய்து கொடுக்கும் திறமைசாலி தான். எதையும் தாங்கும் தைரியமான பெண். அதனாலோ என்னவோ அவளை அதிகம் வதைக்கிறார்கள் பகவான் கிருஷ்ணரும், அவள் கிருஷ்ணனும்.

மாலை மகளை பார்த்து விட்டு வேலை என்று ஓடியவன், வீடு திரும்பவே இரவு பனிரெண்டு மணி ஆகி இருந்தது. தனி வீடு, எல்லா வசதியுடன் கூடிய பெரிய வீடு தான். பாதி நாள் ஏன் வீட்டுக்கு வருகிறோம் என்ற சலிப்பை கொடுக்கும் அமைதியான வீடு.

‘ஒன்றுக்கும் உதவாதவன்’ என்று மட்டம் தட்டிய தந்தை முன் சாதித்து காட்ட வேண்டும் என்ற வீராப்புடன் இரவு பகல் பாராது உழைத்தவன், ஈட்டிய பொருள்கள் ஏராளம். ஆனால் தொலைத்தது அதை விட ஏராளம்.

தூக்கம் மட்டுமல்ல, நிம்மதியை கூட மொத்தமாக தொலைத்து போனான். காலில் சக்கரம் கட்டி கொண்டு சொந்த காலில் நிற்க வெறியுடன் ஓடிய போது எதுவும் உணரவில்லை. எல்லாம் ஈட்டி தலை நிமிரும் போது தான் உணர்ந்தான். தலை சாய்க்க அன்னை மடியில்லை, தன் புகழை மெச்சி கொள்ள தந்தை உடன் இல்லை என்பதை.

அவ்வளவு பெரிய வீடு மட்டுமல்ல, அவன் வாழ்வும் வெறுமையாக தான் இருக்கிறது.

வெறுமையான வீட்டில் களவு போக எதுவுமில்லையே. அவன் மனம் திறக்காது இதயம் கொள்ளை போகாது. இதயம் கொள்ளை போகாது, இன்பம் உள்ளே நுழையதே!

எத்தனை வலுவான பூட்டு போட்டு பூட்டி இருந்தாலும், அதை திறக்கும் கள்ள சாவி காதலுக்கு உண்டு தானே. பார்க்கலாம் இவன் திடமும், அவள் உறுதியும் எத்தனை காலம் என்று.

விடியாத இரவும் இல்லை,
விளங்காத புதிரும் இல்லை.
விண்ணை தொடும் பறவை என்றாலும்,
மண்ணில் தானே தரையிறங்கியாக வேண்டும்.
*****

குடும்ப பாரம் சுமக்கும் பெண்டினம், பிள்ளை பேறு, ஓய்வில்லா வாழ்க்கையில், தன் உடலை பேணா மறந்திருக்க, சந்தனத்தில் குழைத்த மஞ்சள் நிற மேனியால் உயரத்திற்கு ஏத்த எடை என்றாலும், வயிற்றை கிளித்து பிள்ளை வெளி வந்ததில், இப்போதும் ஐந்து மாதம் என்பது போல் கரையாத குட்டி தொப்பையை மறைத்துபடி நேர்த்தியாக சாரி உடுத்தி, கூந்தலை அள்ளி அழகாக கொண்டை போட்டு, காலை கதிரவன் செந்நிற ஒளியை பரப்பி வானில் பவனி வரும் போதே மீராவும் தன் வேலைக்கு கிளம்பி இருந்தாள்.

நிலாவுக்கு இன்று விடுமுறையாதலால், தாத்தா பாட்டியை ஒரு வழி பண்ண தயாராகி விட்டாள். பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால், கடப்பாரை கம்பியை வைத்து தள்ளி தான் எழுப்ப வேண்டும். விடுமுறை நாட்கள் மட்டும் விடியற்காலையிலேயே எழுந்து தொல்லை கொடுக்க ஓடி வந்து விடுவார்கள்.

இரவு, நேரம் கடந்து தூக்கத்தை நாடியவனுக்கு நித்ரா தேவி கருணையே காட்டவில்லை போலும், அவனும் விடியற்காலையே எழுந்து டிரட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தான்.

இலக்கை நோக்கி ஓடுபவனுக்கு எல்லை உண்டு. அவன் ஓய்வெடுக்கும் நேரமும் ஒரு நாள் வரும். ஆனால் இல்லறம் தாங்கும் பெண்ணுக்கு ஏது எல்லை? எப்போது ஓய்வு?

மீரா காலையில் அவள் அலுவலகத்துக்கு வரும் போதே அன்று மாலை நடக்கவிருக்கும் ஒரு விழாவுக்கான ஏற்பாடுகள் தான் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.

அவர்களுக்கு கிடைத்திருக்கும் மிகபெரிய ஆர்டர் தான் இந்த விருது வழங்கும் விழா. இதுவரை குடும்ப நிகழ்வுகளை மட்டுமே நடத்தி வந்தர்வர்களுக்கு இது முற்றிலும் புதிதாக தான் இருந்தது. சற்று சவாலான வேலையாக கூட இருந்தது. அலங்காரங்கள் முதல் சாப்பாடு வரை எல்லாம் மெச்சும் படி இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக தான் இருந்தாள்.

அவளே விழா நடைபெற இருக்கும் அரங்கிற்கு நேரில் சென்று அனைத்தையும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள்.

மாலை சினி ஆக்டர்ஸ், பிஸினஸ்மேன்ஸ், யூடியூப்பர்ஸ், சிங்கர், டான்சர் என்று பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருபவர்களுக்கான விருது வழங்கும் விழா கோலாகலமாக ஆரம்பம் ஆக, பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் வருகை புறிந்திருந்தனர்.

விழாவும் ஆடல், பாடல் என்று இனிதே ஆரம்பமானது.

நாற்காலிகளுக்கு கூட வெண்ணிற உடை அணிந்து, சிவப்பு நிற ரிப்பன் கட்டி, வட்ட மேஜையை சுற்றி நான்கு நாற்காலிகள் வீதம் அழகாக இருக்கைகள் தயார் செய்து வைத்திருந்தார்கள்.

சர்வீஸ் ஆட்கள், நிகழ்ச்சி நடுவே விருந்தினர்கள் தேவைகளை கேட்டு நிறைவேற்றி கொண்டிருக்க, அங்கு ஓரமாக நின்று அவர்களை தான் கண்காணித்து கொண்டிருந்தாள் மீரா.

அவள் கவனம் மொத்தமும் தன் வேலையில் இருக்க, ஒற்றை பெயர் அவள் சிந்தையை சிதறடித்தது.

அவளை சிதைப்பது யாராக இருக்க கூடும், சாட்சாத் அவள் கிருஷ்ணா பகவானே தான்.

சிறந்த இளம் தொழிலதிபருக்கான விருது என்ற அறிவிக்கையை தொடர்ந்து மேடையில் கிருஷ்ணாவின் புகைப்படம் பெரிய திரையில் ஒளிர,

மீரா விழிகள் கூட அதில் தான் உறைந்து இருந்தது.

எந்த உணர்வையும் அவள் முகம் பிரதி பலிக்க வில்லை. அவன் விருது வாங்குவதை எண்ணி மகிழவும் இல்லை, வெதும்பவும் இல்லை.

வெறுமையான மனநிலையில் தான் திரையை பார்த்து கொண்டிருந்தாள்.

இங்கே பலத்த கரகோஷங்கள் நடுவே இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணாவும் மிடுக்குடன் எழுந்து வந்தான்.

மேடையை நோக்கி வேக நடையுடன் வந்தவன் கால்கள் சற்று தளர்ந்தது மேடைக்கு சற்று தள்ளி நின்று கொண்டிருந்த மீராவை பார்த்து.

‘இவள் எங்கே இங்கே?’ கடந்து செல்லும் அரை கணத்தில் புருவம் சுருக்கி, இமைக்கும் நொடிக்குள் அவளை பார்த்தானே தவிர, அவனும் அவளை ஒரு பொருட்டாக கருதவில்லை.

ஆனால் தன் வெற்றியை அவள் கண் முன் கொண்டாடுவதில் பரம சுகம்.

பல நாள் பட்டினி கிடந்தவனுக்கு, பிரியாணி கிடைத்த உணர்வு. யார் முன்பு தலை குனிந்தானோ, யாருக்காக தந்தையால் நிராகரிக்கப்பட்டானோ அவள் முன்பு வெற்றி வாகை சூடுகிறான்.

இதழ்களில் ஏளன புன்னகை உறைய, விழிகளிலோ கர்வம் மிளிர, அவளை பார்த்த படியே நிமிர்வுடன் மேடை ஏறியவன், மரியாதையுடன் விருதை வாங்கி கொண்டான்.

சதுரங்க ஆட்டத்தின் ராஜா ராணி தான் இருவரும்.

அவளை அவன் எதிரியாக எண்ணிக் கொண்டிருக்க,

அவனுக்கே தெரியாது,

அவன் ராஜ்ஜியம் அமைப்பதே அவள் பாதுகாப்பில் தான் என்ற ரகசியம்.





 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
நேசம் 3

மேடை ஏறி விருது வாங்கிய கிருஷ்ணாவிடம் ஓரிரு வார்த்தைகள் பேசும் படி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கேட்டுக் கொள்ள, இடதுக் கையில் விருதை பிடித்து கொண்டு வலது கையில் மைக்கை தான் வாங்கி இருப்பான்,

பார்வையாளர்கள் பக்கத்தில் இருந்து கூச்சல் சத்தங்களும், கரகோசங்களும் விண்ணை பிளந்தது.

அவனாக எந்த ஒரு பத்திரிகைக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டிகள் எதுவும் கொடுத்ததில்லை. ஆனாலும் அவனின் வளர்ச்சி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதனால் திரண்ட ரசிகர்கள் பட்டாளம் தான் இது. அவனுக்காகவே பல ரசிகர்கள் விழாவிற்கு வந்திருந்தார்கள்.

கூச்சல் சத்தங்கள் சிறுது மட்டுப்பட காத்திருந்தவன், “எல்லாருக்கும் வணக்கம்” என்று தன் ஆளுமையான குரலில் ஆரம்பிக்க அரங்கு மொத்தமும் அமைதியானது அவன் குரலை கேட்கவே. முதல் முறை கேட்கிறார்களே.

“தோல்விகளும், அவமானங்களும் மட்டுமே வாழ்க்கை இல்ல. அதுல இருந்து வாழ்க்கையை கத்துக்க பழகுங்க. வாழ்க்கை யாருக்கும் சிவப்பு கம்பளம் விரிச்சு வரவேற்காது, பல இன்னல்கள் தாண்டி தானே வாழ்றோம். போட்டிகள் நிறைந்த உலகம். உங்களுக்கான பாதையை உறுதியா தேர்ந்தெடுத்து, அதுல முன்னேறி செல்லுங்க. கை கொடுக்க எவனும் வர மாட்டான். காலை வாரிவிட கூட்டாமே நிற்கும். சோர்ந்து போனா மண்ணுக்குள்ளே புதைஞ்சி போவோம். போராடுற குணம் நம்ம பிறப்பிலே இருக்கு. ஒரு லட்சம் பேர் கூட போட்டி போட்டு தான் அன்னையோட கருவறையிலேயே சேர்றோம். மைக்ரோ மீட்டர் அளவு இருக்கும் போதே போராடி நமக்கான இடத்தை பிடிக்க முடிஞ்ச நமக்கு, இப்போ முழுசா இருக்கும் போது போராட முடியாதா என்ன? திங் பாசிட்டிவ், வொர்க் ஹார்ட், கீப் ஹாம், தி விக்டரி இஸ் டேஃபேனாக்ட்லி யூர்ஸ்” என்று அத்தனை தெளிவாகவும், நிதானமாகவும் பேசிய கிருஷ்ணாவை சற்று அசந்து தான் பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.

அவள் பார்த்த கிருஷ்ணா இவன் இல்லையே. நடை, உடை, பேச்சு, தோரணை மட்டுமல்ல விளையாட்டு தனமாக சுற்றி திரிந்த இளைஞன் முற்றிலும் மாறி, தெளிவான சிந்தனை கொண்ட தொழிலதிபராக நிற்கிறான்.

அன்னை விரல் பிடித்து நடை பயின்ற குழந்தை சுயமாக நடக்கும் போது அன்னை அடையும் மகிழ்வு அவளுக்கும்.

உன் வெற்றியில் நானும் மகிழ்கிறேன் என்றால் நிச்சயம் நம்ப மாட்டான். நகைப்பான். அவனை பொறுத்தவரை தன் வாழ்வை சிதைத்த சதிகாரி அவள். கிடைக்கும் பொழுதெல்லாம் அவளை வதைக்க தயங்க மாட்டான்.

சிறு வயது துவக்கம் அவளால் எத்தனை வசவுகள் கடந்து இன்று உயர்ந்து நிற்கிறான். யாரை வேண்டுமானாலும் அருகே சேர்ப்பான். அவளை மட்டும் என்றும் நெருங்க அனுமதிக்க மாட்டான்.

மீரா தன் உணர்வுகளை மறைத்து, நிர்மலமான முகத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருக்க, அவன் விழிகளில் அலட்சிய புன்னகை. அவளை பார்த்தபடியே தரையிறங்கி வந்தவனை அணைத்து விடுவித்தாள் ஸ்ரதா.

அரை கண அதிர்வு மீரா விழிகளில். ‘யார் இவள்?’ அறிந்து கொள்ள ஒரு மனம் உந்த, ‘யாரா இருந்தா எனக்கென்ன? ஐ டோன்ட் கேர் அபௌட் தெம்’ என்று அலட்சியமாக முகத்தை திருப்பிக் கொண்டாலும், அவளை மீறி விழிகள் அவன் திசை அவ்வப்போது மேய்ந்து வர, அவன் விழிகளும் அவள் பார்க்கா நேரம் அவளை தழுவி தான் மீண்டது.

ஸ்ரதா… அவன் பிஸினஸ் பார்ட்னர் மகள்.

‘நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?

ஏதாவது லவ் பெலியரா?

ஒருவேளை… அப்படி இருக்குமோ? உங்களுக்கு பொண்ணுங்களை விட பசங்களை தான் புடிக்குமோ?’” என்ற வீண் கேள்விகளுக்கெல்லாம் முற்றுபுள்ளி வைத்தவள்.

கிருஷ்ணாவின் தனி பட்ட வாழ்க்கை பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரியாது. திருமணம் ஆகாதவன் என்று மட்டும் தெரியும்.

(திருமணம் ஆகாமல் குழந்தை இருக்க கூடாது என்று சட்டம் இல்லையே! திருமணம் ஆகல சரி. குழந்தை இருக்கானு எவனாவது கேட்டானா? பிளடி பர்கர்ஸ்… 🤭🤭🤭)

அடிக்கடி பள்ளிக்கு அவன் காண செல்லும் குழந்தை பற்றி தனி விசாரணை கமிஷன் வேறு கிசு கிசுப்பாக போய் கொண்டிருக்கிறது.

(மீராகிட்டா கேட்டா அவளே புட்டு புட்டு வைக்க போறா!)

அது எதையும் கருத்தில் கொள்ளாதவன், ஸ்ரதாவுடன் அடுத்த திருமணத்திற்கு தயாராகி கொண்டிருக்கிறான் என்பதே கசப்பான உண்மை.

ஒரு நாள் தவறிற்காக மொத்த வாழ்வையும் அவன் இழக்க விரும்பவில்லை. நிலா அவன் குழந்தை. அவளுக்கான உரிமையையும், கடமையையும் என்றும் நிராகரிக்க மாட்டான். குழந்தைக்காக அன்னையை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை.

என் வாழ்க்கை, என் விருப்பம் என்று பிடிவாதமாக இருக்கும் அவனால் அனுதினமும் அவதி படுவது அவன் ரத்த உறவுகள் மட்டுமின்றி, செய்யாத தவறிற்காக பலியாகி கொண்டிருப்பது மீராவும் தான்.

அவனை போல் அவளும் என் வாழ்க்கை தான் முக்கியம் என்று போய் விட்டால்? பிள்ளை நிலை. அவள் வேறு வாழ்க்கை பற்றி யோசித்தால் யாரும் அவளை தடுக்க போவது இல்லை தான். ஆனாலும் பெண் மனம் சுயநலமாக சிந்திக்க முடியாது சுயத்தை இழந்து நிற்கிறது.

மேடையில் கலை நிகழ்ச்சிகள் பல விதமாக நடந்து கொண்டிருந்தாலும், இருவர் கவனமும் துளியும் அதில் இல்லை. இயல்பாக இருப்பது போல் வெளியே காட்டிக் கொண்டாலும், அவள் விழிகள் அவன் செயல்களை ஆராய, அவன் விழிகளோ அவளை தான் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

இமை பொழுது அவளை கண்டால் கூட நேர விரயம் என்று எண்ணுபவன் இமைக்கும் ஒவ்வொரு பொழுதும் அவளை பார்வையால் ஆராயும் காரணம் அறியாது போனான்.

அவள் போகும் திசை எங்கும் இவன் விழிகள் போக, ஏதாவது ஆடவனோடு நின்று பேசினால், முகம் சிவந்தது கிருஷ்ணாவுக்கு.

ஸ்ரதா அவனை நெருங்கி அமர்ந்து அவன் விரல்களை கோர்த்துக் கொள்ள, அதன் பிறகே அருகே இருக்கும் பெண்ணை உணர்ந்தான்.

இவள் தான் என் வாழ்க்கை. அவன் எதிர் பார்க்கும் அத்தனை அம்சங்களும் தாராளமாக இருக்கும் பேரழகி.

சிடுமூஞ்சி மீரா,
சிரித்த முகம் ஸ்ரதா.
கடுகாக பொறியும் மீரா
காதலை பொழியும் ஸ்ரதா..
அவன் ஆசைகளுக்கு எல்லாம் தடை உண்டு அவளிடம்
அவன் ஆசைகளுக்கு எல்லாம் ஆராதனை உண்டு இவளிடம்.

எல்லா வகையிலும் மீராவை விட ஸ்ரதா சிறந்தவள் தான். இவள் போதும் என்று பிடிவாதமாக மீரா நினைவுகளை ஒதுக்கி வைத்தவன் விரல்களும் ஸ்ரதா விரல்களை அழுத்தி பிடித்துக் கொண்டான்

அவன் விழிகள் மீராவை நிராகரித்திருந்தது. ஆனால் அவள் விழிகள் மொத்தமும் அவன் கரம் கோர்த்த காரிகையை தான் எரித்துக் கொண்டிருந்தது.

அதுவும் சில நிமிடமே. எட்டா கனி அவனை எட்டி பிடிக்க சித்தம் இல்லை. மொத்தமாக விட்ட பிறகு எதற்கு வீண் கவலை கொள்ள வேண்டும். அவன் வாழ்வை விட்டு போனது போலவே, அரங்கையும் விட்டும் வெளியேறி விட்டாள்.

அதற்கு பிறகு ஒரு மாதம் இருவரும் பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பம் அமையவே இல்லை. அவ்வப்போது மகளுடன் சில வார்த்தைகள் அன்னை அலைபேசி வழியே மட்டுமே பேசுவான். நிலாவை தவிர வேறு யாரும் அவனோடு பேசுவதும் கிடையாது

ஸ்ரதாவை அவன் திருமணம் செய்ய போகும் செய்தி கூட பத்திரிக்கை வழி அவர்களுக்கு தெரிந்திருந்தது.

மீராவின் பெற்றோர் கவலையாக மகளை பார்த்து செல்ல, நெல்லையாண்டாருக்கோ ஏக கோபம்.

அவனால் ஒருத்தி வாழ்க்கை இழந்து தவிக்கிறாள். அவளை சிறிதும் கருத்தில் கொள்ளாது, தன் விருப்பு வெறுப்பு தான் பெரிது என்று கடந்து செல்லும் மகன் மீது கொலைவெறியே வந்தது.

“சம்பாதிச்சு பேர் புகழ் அடைஞ்சாலும் இன்னும் மீரா கால் தூசுக்கு ஈடாக மாட்டான் உன் புள்ளை” என்று தன் கோபம் முழுவதையும் அவர் வெளிப்படுத்தும் ஒரே ஆள் அஞ்சம்மாள் தான்.

அவருக்கும் மகன் செயலில் சிறிதும் பிடித்தம் இல்லை தான். இருந்தாலும் மகனை யாராவது ஏதாவது சொன்னால் மனம் வெதும்புகிறதே! கண்ணீர் மட்டும் தான் வடிக்க முடிந்தது அந்த அன்னையால்.

கண்டிக்க வேண்டிய வயதில் சுதந்திரமாக விட்டு விட்டார். கண்டித்தவரையும் அடக்கி வைத்தார். இப்போது அனுதினமும் மகனை எண்ணி கவலை கொள்கிறார்.

முழுதாக ஒரு மாதம் கடந்த நிலையில் மீண்டும் இருவரும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. சூழ்நிலையை உருவாக்கினான் ஒருவன்.

ஈஸ்வர்… கிருஷ்ணா மற்றும் மீராவின் கல்லூரி கால நண்பன்.

கிருஷ்ணாவின் உயிர் நண்பனும் கூட. உயிர் நண்பன் என்பதை விட கிருஷ்ணா இப்போது வரை தொடர்பில் இருக்கும் ஒருவன். அவனை தவிர யாரிடமும் பெரிதாக பேச்சு வார்த்தை கிடையாது.

ஈஸ்வருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்க, அதற்கான பேச்லர்ஸ் பார்ட்டிக்காக தான் கிருஷ்ணாவை காலில் விழாத குறையாக அழைத்து வந்தான்.

இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அவன் பெரிதாக செல்வதே இல்லை. ஊரே வாயை பிளந்து பிரமிக்கும் ஒருவன், அந்த ஊராரின் வார்த்தைகளுக்கு பயந்து தான் எந்த நிகழ்வுக்கும் போவதில்லை.

ஈஸ்வர் கெஞ்சி கேட்கவே மறுக்க தோணாது வந்தவனை தலையில் தூக்கி வைத்து தான் கொண்டாடினார்கள் அவன் நண்பர்கள்.

“எங்க நண்பன் உயர்வான இடத்தில இருக்கிறத பார்க்கும் போது எங்களுக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?”

“ஹீரோ டா நீ” புகழ்ந்து தள்ளி விட்டார்கள்.

புகழ்ச்சி கூட போதை தானே. அவனும் மயங்கி தான் போனான் அந்த போதையில்.

ஈஸ்வர் திட்டமிட்டே மீராவிடம் தன் திருமண காண்ட்ராக்ட் மொத்தமும் கொடுத்திருக்க, இந்த பார்ட்டியை கூட அவள் தான் ஏற்பாடு செய்திருந்தாள்.

அங்கே குளிர் பானங்கள், மதுபானங்கள் வைத்திருந்த இடத்தில் நின்றிருந்தவளை கண்டுக் கொண்ட கல்லூரி நண்பன் ஒருவன்,

“அது மீரா தானே. இங்க என்ன பண்றா?” என்று கேட்க,

“மேரேஜ் காண்ட்ராக்ட் எடுத்து பண்றா” என்று மற்றொருவன் சொன்னான்.

கிருஷ்ணாவின் விழிகளும் ஒருமுறை அவளை உரசி மீண்டது.

“ஆமா டா நானும் பார்த்தேன். தெரிஞ்ச பொண்ணுனு போய் பேசினேன். மூஞ்சில அடிக்கிற மாதிரி பேசுறா. காலேஜ் டைம்ல எத்தனை பேர் டிரை பண்ணியிருப்போம். அப்போல்லாம் கொஞ்சமும் மதிக்காம திமிரா சுத்தின பொண்ணு. எவன்கிட்டயோ நல்ல ஏமாந்து குழந்தையோட நிற்குது. இத தான் சொல்றது. நல்லதுக்கே காலம் இல்லனு. காலடில வந்து விழுந்த நல்ல பசங்களை எல்லாம் எட்டி உதைச்சா. இப்போ எவனோ உரசுற வரை உரசிட்டு கிள்ளி கீரை போல தூக்கி வீசிட்டு போய்ட்டான். ஆனாலும் அந்த திமிர் குறையல”

ஆல்கஹாலை வாயில் சரித்து கொண்டே மீராவின் பாதி சரித்திரம் அறிந்து முழு கதையை அவனே உருவாக்கிட,

நண்பர்கள் மத்தியில் சுவார்ஸ்யம் கூடியது.

“கிருஷ்ணா… உன் ப்ரெண்ட் தானே. யார் அந்த எக்ஸ்னு தெரியுமா உனக்கு?” என்று பிள்ளை கொடுத்தவனிடமே பில் இன் த பிளாங்க்ஸ் கேட்க,

தெரியாது என்று தலையை மட்டும் அசைத்தானே தவிர ஒரு வார்த்தை வாயை திறக்கவில்லை.

இத்தனை நேரம் அவளை அவன் பார்க்கவே இல்லை. இப்போது பார்க்கும் ஒவ்வொரு நொடியும் அவளை குத்த வேண்டும் என்பதே அவன் குறிக்கோளாக மாறியது.

அவளை முன்னுதாரணம் காட்டி என்னவெல்லாம் பேசி இருப்பார் நெல்லையாண்டார். புண் பட்ட மனதை அவளை ரணமாக்கி தான் ஆற்றிக் கொள்ள முயன்றான்.

அவள் புத்திசாலி தான். இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக அவனை அல்லவா அடி முட்டாளாக பாவித்தார்கள்.

மீரா போல் படிக்கவில்லை.
மீரா போல் மதிப்பெண் இல்லை.
மீரா போல் ஒழுக்கம் இல்லை.

"மீராவுக்கு கேம்பஸ்ல வேலை கிடைச்சு இருக்கு. உனக்கு ஏன் இல்ல… இப்படியே இருந்தா பிச்சை எடுக்க தான் லாயக்கு நீ…" நெஞ்சு வெதும்பும், தந்தை அவளுடன் ஒப்பிட்டு அவனை திட்டும் ஒவ்வொரு நொடியும். அவளுடன் அவனை ஒப்பிட்டே அவன் மனதில் அவள் மீது வெறுப்பை உருவாக்கி விட்டார்.

இப்போது அவன் உச்சஸ்தானியில் இருக்க, அவளோ அகல பாதாளத்தில் அல்லவா கிடந்தாள்.

இதற்கு காரணம் அவன் தான் என்று சொன்னால், சொன்னவர் வாயிலே நாலு மிதி மிதிப்பான். அகம்பாவம் பிடித்தவன்.

என்னை பார், என் வெற்றி களிப்பை பார் என்று அவள் முன் ஆட்டம் போட, மகிழ்ச்சியா, எரிச்சலா? ஒரே நேரத்தில் இரண்டும் சாத்தியமா?

சாத்தியம் ஆகிறதே அவனை பார்க்கும் ஒவ்வொரு நிமிடத்திலும். அவன் வெற்றி மகிழ்ச்சியே. அதற்கு அவன் செய்யும் அலப்பறைகள் தான் தாங்க முடியவில்லை.

ஆள் செட் செய்து அராஜகம் செய்தான். அவன் குடித்து விட்டு ஆட்டம் போட்டால் நாளை தலைப்பு செய்தியில் அவனை அல்லவா தாளித்து எடுப்பார்கள். மரியாதை முக்கியம் அமைச்சரே. எப்பாடு பட்டு இந்த இடத்தை அடைந்து இருக்கிறான். அவ்வளவு எளிதில் இழக்க அவன் ஒன்றும் முட்டாள் இல்லையே.

ஆகையால் வேண்டுமென்றே நண்பர்களை தூண்டி விட்டு, பாரில் நின்ற பையனுடன் சண்டை போட்டு, "என்ன சர்வீஸ் நடத்துறீங்க? கூப்பிடு உன் மேனேஜரை" என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து, மீரவையும் வர வைத்து விட்டான்.

யாரை பார்த்தும் பயம் இல்லை மீராவுக்கு. தங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை என்று நன்கு அறிவாள். இருந்தாலும் இருக்கும் இடம் தணிந்து போக வைத்தது.

"என்ன ஆள் வேலைக்கு வச்சு இருக்கீங்க? ட்ரிங்க்ஸ் ஒழுங்கா சர்வ் பண்ண தெரியலை. மேல கொண்டு வந்து ஊத்தி வச்சிருக்கான்" என்று பாவம் அந்த சிறு பையனை பிடித்து ஏற, தவறே செய்யாமல் மன்னிப்பு கேட்டாள் மீரா.

சாதாரணமாக நின்றிருந்தாலும, உள்ளுக்குள் அத்தனை கோபம் மூண்டது. வேலை நேரத்தில் வந்து சேட்டை செய்யும் அவனை பார்த்து.

அன்று விருது வழங்கும் விழாவில் வைத்து தானே பெரிய ஆளாக மாறிவிட்டான் என்று அவனை பார்த்து வியந்தாள். அதற்குள் சிறு பிள்ளை தனமாக நடந்து கொள்கிறானே என்று சலிப்பு தோன்றியது.

இனி இதுபோல தவறு நடக்காது என்று உத்திரவாதம் கொடுத்தவள் வேறு வழியின்றி அங்கேயே நின்றாள்.

கிருஷ்ணாவின் பள்ளி, கல்லூரி கால நண்பர்களுக்கு மீராவை நன்கு தெரியும். இருவருக்கும் இடையே நடக்கும் பனி போர் அரிதிலும் அரிதாக ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

தெரிந்தவர்கள் அமைதி காக்க, குறை குடமோ ஓசி குடியில் கூத்தாடியது.

பாச பிணைப்பில் கிருஷ்ணாவின் நண்பன் சுதன் அவனுக்கும் ட்ரிங்க்ஸ் எடுத்துக் கொடுக்க, வேண்டாம் என்று மறுத்தவனை, வித்தியாசமாக தான் பார்த்தான் சுதன்.

"இல்ல நான் குடிக்கிறது இல்ல" என்று சொல்ல, கல்லூரி காலத்தில் சுதனுக்கு குடிக்க கத்து கொடுத்ததே கிருஷ்ணா தான். அவனா இவன்? எங்கே என் குரு என்று அரை போதையில் பிதற்றியவன் விழிகள் மீண்டும் மீரா மீது பதிய,

“விதிய பார்த்தியா மச்சான். படிக்கிற காலத்துல பாட்டம்ல இருந்த நீ இப்போ டாப்ல இருக்க, டாப்ல இருந்த அவ இங்க பார்ல நிக்கிறா.” என்று இருவரையும் கலாய்த்து சிரிக்க, தன்னை கலாய்க்கும் நண்பனை முறைத்து வைத்தான் கிருஷ்ணா.

வெறும் மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லையே,

வாங்கும் அடிகள் தான் தீர்மானிக்கிறது.

ஒவ்வொரு அடியையும் வெற்றியின் படிக்கட்டாக மாற்றுவதும்,

துவண்டு முடங்குவதும் அவரவர் கையில் தான் இருக்கிறது.







 
Status
Not open for further replies.
Top