அறிமுகம்
வானம் கருத்து இருந்தது, இடியும், மின்னலும் நீயா ,நானா என போட்டி போட்டுக் கொண்டிருந்தது. உங்களுக்கு நான் என்ன சலைத்தவனா என்று காற்றின் நடனமும் அங்கு அரங்கேறியது.
இவை அனைத்தையும் சமாதானப்படுத்த மழையானது பொழிந்து மண்ணை குளிர்வித்துக் கொண்டிருந்த தருணம்.
மழையின் சத்தத்துடனே"ஆ !அம்மா!ஆ!
வலிக்குதே!ஆ! "என்ற கர்பிணி பெண்ணின் அலறல் சத்தம் விண்ணை கிழித்தது.
"இருமா , கொஞ்சம் பொறுமா, இதோ ஹாஸ்பிட்டல், வந்துட்டோம், இதோ இப்போ கொழந்த பொறந்திடும் என் ராசாத்தி " என மயிலம்மா அமைதி படுத்திக் கொண்டிருந்தாள்.
"அம்மா !முடியல மா! " என கர்பிணி மறுபடியும் வலியில் துடித்தாள்.
"ஆங், பேஷன்ட் பேரு என்னமா" நர்ஸ் மேரி அவசரப்படுத்த,
" அது ..... அது வந்து டாக்டர் ரேவதி அம்மாவோட......" என மயிலம்மா வார்த்தைகளை தேடினார்.
" ஓ ! மேடம் ரேவதியோட பேஷன்ட் ஆ.... சரி சரி" என அந்த நர்ஸ் அந்த பெண்ணை பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றாள் .
மருத்துவர் ரேவதிக்கும் தகவல் தந்து ,அவரும் வந்துவிட்டார்.
மீண்டும், மீண்டும் அந்த பெண் பிரசவ வழியில் துடிக்க, மருத்துவரும் மருத்துவம் பார்க்க.
வீல் ....... என்ற அலறல் உடன் குழந்தை பிறந்தது. மருத்துவர் மகிழ்ச்சி யுடன் அதை மயிலம்மாவிடம் தெரிவிக்க.
மயிலம்மாவோ "டாக்டர் அம்மா என் பொண்ணு எப்படி இருக்கு" என்ற மயிலம்மா வார்த்தையில் ஒரு வித பதட்டம் தெரிந்தது .
"ஆங், அவங்க நல்லா இருக்காங்க...என்ன மயிலம்மா ,பொண்ணு மேல ரொம்ப பாசம் போல என பேசிக்கொண்டிருக்கும்போதே நர்ஸ் வெளியே வர "நீங்க போய் அவங்கள பார்க்கலாம் " என மருத்துவர் அவ்விடம் இருந்து சென்றுவிட்டார்.
நாட்கள் மூன்றாக ஓடியது , அந்த பெண் பிறந்த அந்த பிஞ்சுவின் நெற்றியில் முத்தம் வைத்து விட்டு "அம்மாவிற்கு வேற வழி தெரியலடா ,அம்மா வை மன்னிச்சிருடா என கண்களில் கண்ணீர் படற ,யாருக்கும் தெரியாமல் குழந்தையை விட்டு விட்டு மருத்துவமனையில் இருந்து கிளம்பினாள்.
"மலேசியா செல்லும் விமானம்,ஒரு சிறிய
வானிலை பிரச்சனையின் காரணமாக அரைமணி நேரம் தாமதமாக கிளம்பும்" என்ற ஏர்போர்ட்டின் அறிவிப்பில் யாரும் தன்னை கண்டுபிடித்து விடுவார்களோ என அச்சத்தில் அமர்ந்து இருந்தாள், அந்த பெண்.
நிலைமை சரியாகி, விமானத்திற்கு அனைவரும் கிளம்பினர்.
விமானத்தின் ஜன்னல் வழியாக அந்த டெல்லியை பார்க்கிறாள்.
விமானம் சிறு அறிவிப்புகளுடன் கிளம்பியது.
"இனி யாராலும், என்னை கண்டுபிடிக்க முடியாது" என தனக்குள்ளே சொல்லி கொண்டாள்.
"உங்க பெயர் என்ன?" என்று விமானப்பணிப்பெண் அழைக்கவும் , தன்னிலை வந்தவள்.
"மிதிலா"
என் பெயர் "மிதிலா". என்றதுடன் விமானம் வானில் பறந்து, அவ்விடம் விட்டு மறைந்தது.
யார் இந்த மிதிலா?
உலகம் அறியா அந்த சிறு ஜீவனை விட்டு எதற்கு பிரிந்தாள்?
யார் அவளை தேடுகிறார்கள்"
அதனை இந்த தூது செல்லாயோ தூவானம்
உங்கள்களுக்கு தூது சொல்லும்.