ஆரம்பத்திலிருந்து இறுதிவரை
"கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ..! "
கதையில் எங்கேயும் எந்த தொய்வும் இல்லாமல் அழகாக விறுவிறுப்பாக சுவாரஸ்யமாக இக் கதையை கொடுத்ததுக்கு கதையாசிரியருக்கு நன்றிகள்.
கதையின் முக்கிய மாந்தர்களாக
தீரன் , பரமன், அல்லி , கெளதம் , தேதஸ்வினி, ராதிகா ,விருஷாலி (விருதன்)
மரகதம் ,
மற்றும் இவர்களுடன்
கதையின் சில இடங்களிலே வந்தாலும்
மோகினி , கார்த்திக் , தேவகி
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ.. உண்மையிலேயே.. வாசகர்களை மனதைக் கொள்ளை கொண்டு விட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை..
ஆழி விழிகளை.. கொண்டே.. வாசர்களை கவரந்த கதையின் நாயகன் தீரன் அவனும் அவன் நண்பன் பரமன் இருவருமே எம் மனதை கொள்ளை கொண்டு விட்டனர் .
தீரனின் காதல் மனைவி கதையின் நாயகி தேஜஸ்வினி அப்பாவியாக நடந்தது எதுவும் தெரியாது அறியாமையில் இருந்தாலும் கணவனை கண்டுபிடிக்க தெரியவில்லை. ??ஆனாலும் தீரனையே கெளதமென அவள் நினைத்து இருந்தாலும்
அவள் அவ்வளவு நாளும் அவள் உண்மையான கணவனை கண்டுபிடிக்க தெரியாது அவனை தப்பானவனென நினைத்து கத்தியால் குத்துகின்றாள் இது அவளின் காதலையே கேள்விக் குறியாகின்றது.???
கெளதமின் நெருக்கத்தை தேஸஸ்வினி அசெளகரிகமாக விருப்பமில்லாததாக உணர்ந்திருக்கிறாள் என்றாலும் அவளின் அறியாமை மிக மிக தப்பு. எந்த பெண்ணிற்கும் இருக்க கூடாவே கூடாத அறியாமை..ஒரு வேளை கெளதம் அவளிடம் எல்லை மீறி இருந்தால் அவள் வாழ்வே முழுமையாக அழிந்திருக்கும். அவளாலேயே அவளை மன்னிக்க முடிந்திருக்காது..
கெளதம் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை.. வடிகட்டிய முட்டாள். என்ன படித்து தொழில் பாத்தும் ஒரு நல்ல கணவனாக இருக்கல. அம்மா அப்பா இருவர்களும் மன்னிக்க முடியாத பாவிகளென தெரிந்தும் ராதிகாவிற்கு வக்காளத்து வாங்கி அப்பாவி பெண்ணை வேலைக்காரி மாதிரி நினைக்கின்றான் சுயநாலவாதியின் பிறப்பிடம் ????.
சகோதர பாசம் தீரன் மேல கொஞ்சம் கூட இல்லை. வாழ்வை காப்பாற்றி தந்து உதவி செய்த நன்றி கடனுக்காக கூட தீரனுக்காக கூட எதுவும் நல்லது நினைக்கல.. அஸ்வினியை வேலைக்காரி மாதிரி வேலை ஏவினது போததென்று அவளையே எங்க என் குழந்தை னு கேள்வி கேட்கிறான் மெண்டல். பிறகு என்ன இழவுக்கு அவளிடம் உன் குழந்தையை கொடுத்தான் ? ??
இறுதியில் தீரன் மூலம் அவன் வாழ்வை காப்பாற்றி கொண்டு, சுயநலவாதியாக ராதிகாவிற்கேற்ற மகனென்று நிரூபித்துவிட்டான் .அல்லி மேல் இவன் வைத்த காதல் ஒரு சல்லிக்கும் பிரோசனமில்லை. அல்லியும் அஸ்வினியின் சார்பாக எதுவும் பேசல..நன்றி கெட்ட ஜென்மம்.
அல்லி போன்ற பெண்கள் கண்மூடித்தனமான காதல் என்ற பேரில் , கெளதம் போன்ற பாழுங்கிணற்றில் விழுவதால் கெளதம் போன்றவர்கள் தீரன் சொன்னது போல் சுயமாக சிந்திக்க தெரியாமல் உண்மையான ஆண்மை கட்டியவளுக்கு பிள்ளைகளை கொடுப்பது என்று அதே வேலையை மட்டும் செய்கின்றனர்
ராதிகா இவளெல்லாம் பெண்ணே இல்லை பேயை கூட ஒப்பிடுவது கூட ரொம்ப தப்பு.. பேயை விடவும் மோசமானவள் ராதிகா போன்ற கேடு கெட்ட ஜென்மம் எல்லாம் பெண்ணினத்துக்கு போன்றவர்கள் சாபக்கேடு.
அவளின் கணவன் தேவராஜ் , மகன் என்ற பேரில் கெளதமெல்லாம் ஆண் இனத்தின் சாபக்கேடு. இவர்களின் மரணம் இதனை விட மோசமாக இருந்திருக்க வேண்டும்.
இறுதிவரை விருஷாலி ஒரு ஆணாக இருக்குமென்று நான் எதிர்பார்க்கல.. கதையின் மிக பெரிய டுவிஸ்ட் அதுவும் ஒன்று..?? Hats off ???
விருதன் மேல் அவனின் வாழ்வில் நடந்ததுக்கு பரிதாபம் ஏற்பட்டாலும் அவன் ஒன்றும் அறியாத அப்பாவி குழந்தை அபிநவ்வை கொல்ல முயன்றது மன்னிக்க முடியாது.
மரகதம் அல்லி நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுடன் கூட இருப்பவர்களின் புத்தி ஒட்டிக் கொண்டது போல் இறுதியில் சுயநலமாக நடந்து கொண்டது.. மிகப் பெரிய தப்பு.??
பரமாத்மா இவனை எனக்கு தீரனை விடவும் ரொம்ப பிடித்திருக்கின்றது. ???இவனே உண்மையான உறவு , நண்பனுக்கு சிறந்த உதாரணம் இவன் அளவில் பாதி அன்பு பாசம் அக்கறை கூட வேறு யாரும் தீரன் மேல் வைத்திருக்க முடியாது. குகனுடன் தீரன் இருக்கும் சமயத்தில் பரமனின் பொஸிஸ்வினஸ் கொள்ளை அழகு???
கார்த்திக் மனைவி தேவகி மேல் கொண்டுள்ள எல்லை இல்லாத காதல் ரொம்பவும் அருமை . மோகினி தெரியாமல் தப்பு செய்தாலும்.. அவள் அதனை உணர்ந்து வருத்தப்பட்டது..நன்று..
இருந்தாலும் எதனையும் அறிந்து ஆராயாமல் முடிவெடுக்க கூடாதற்கு இவள் நல்ல உதாரணம்.
கார்த்திக் , தேவகி, மோகினி மூவரும் கதையில் சிறிது இடங்களில் வந்தாலும்.. மனதை கவர்ந்தனர்.
உண்மையான ஆண்மகனுக்கு..தீரன் கார்த்திக், பரமன் மூவரும் சிறந்த உதாரணம்..
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ.! அருமையான விறுவிறுப்பான கதையினை மிகவும் சுவாரஸ்யமாக கொடுத்த கதையாசியரின் பரிசாக.. இக்கதை டுவிஸ்ட் 21 போட்டியில் வெற்றி பெற கதை வாசகியாக எனது மனதார வாழ்த்துக்கள்