அருமை சகி????
கதை உடனே படிச்சிட்டேன் ஆனால் கமெண்ட் எழுத கொஞ்சம் லேட் சாரி????
ரொம்பவே அழுத்தமான உணர்ச்சி மிக்க காதல் கதை. நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட கதையும் தான்.
குமரன் மை செல்லஹீரோ??? தாயின் பல விதமான புறக்கணிப்புகள் இருந்தபோதும் தன் குடும்பத்தின் மேல் மாறாத நேசம் கொண்டவன். தன் காதலை தமையனுக்காய் விட்டுக்கொடுத்தவன். தன்னவளின் நலனுக்காய் விட்டுச்சென்றவன், எந்த நிலையிலும் தன் காதல் நெஞ்சை இன்னொருத்திக்கு விட்டுக்கொடுக்காதவன். காலம் தாமதித்தாலும் தன்னவளை கரம்பிடித்தான் பல தடைகள் தாண்டி????
சாத்வி குறுப்புக்கார பெண்ணவளோ தன் காதலை அடைய சென்றதோ நகர வாசம். காதல் கொண்ட மங்கையவள் தேடிய தன் சரிபாதியை அடைந்தாள் பல தடைகள் கடந்து????
அஷ்வின் தன் சகோதரனுக்காய் தன் தாயையே எதிர்த்தது ஆச்சரியம். எந்த இடத்திலும் குமரனை விட்டுக்கொடுக்காத தன்மை அருமை. தான் கொண்ட காதல் தோல்வியில் முடிந்தாலும் தன்மேல் கொண்ட காதலில் ஜெயித்தான்????
வள்ளி என்னுடைய ஃபேவரட் ????
சாத்வியோடான குறுப்பும், அஷ்வினுடனான கதலும் வாக்குவாதமும், நட்பில் துணை நின்று அவள் காதலுக்கு உறுதுணையாய் இருந்ததும் அருமை????
மீனாட்சி கணவனின் துரோகத்தினால் குமரனை வெறுத்தாலும் அவன் நன்மைகளை சரிவர செய்தது பாராட்டுக்குரியது???
தங்களின் இந்த கதையின் ஆரம்ப பதிவை கண்டு மிக ஆவலோடு படித்தேன். ஒவ்வொரு பதிவிலும் அடுத்த பதிவிற்கான ஆவலை தூண்டிய தங்கள் கை வண்ணத்திற்கு வாழ்த்துக்கள் சகி??????
அடுத்த கதைகளம் எப்போது??? அதை எதிர்பார்த்து எப்போதும்போல் ஆவலுடன் நான்????