ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதலாடி காத்திருந்தேன் நான் கதை திரி

Status
Not open for further replies.

Naga Novels

Active member
Wonderland writer
அத்யாயம் 💖 10
ஏய் எவ்வளவு நேரம் யோசிப்படி சொல்லு உன் அண்ணன் பத்தி. என மிருதுளா கேட்க.
"அவரு பேரு யுவராஜ் "
"அது எனக்கே தெரியும் மேலே சொல்லு" என நக்கலாக மிரு கூற .
"அட ராமா, அடியே மொக்க பண்ணாம இருந்தாதான் நான் சொல்லுவேன், இல்லாட்டி ஆள விடு எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு சுப்புக்கா வேற இன்னும் வரல" என ஸ்வேதா கடுப்புடன் கூற ...
"சரி , அது யாரு சுப்புக்கா" என புருவம் சிமிட்டி மிருதுளா கேட்க.
"உன்ன இப்ப கொள்ளப்போறேன்டி" என தனது கைகளை மிருதுளாவின் பக்கம் கழுத்தை நெறிப்பது போல கொண்டு போனாள் ஸ்வேதா , "இரு வர்றேன்" பின் ஏதோ நினைத்தவளாய் சட்டென எழுந்து தங்களது அறைக்குள் நுழைந்தவள்.கையில் துப்பட்டாவுடன் வெளியே வந்தாள், வந்தவள் துப்பட்டாவை வைத்து மிருதுளாவின் வாயை பேசமுடியாதபடி கட்டி போட்டாள்.
"இப்ப எப்படி குறுக்க குறுக்க பேசுவன்னு பார்ப்போம், ஆன்லைன்ல பழகுரப்போ பேசவே தெரியாத மாதிரி பேசுன,இப்போ மூட மாட்டிக்க வாய" என அவளை அதட்டி
அமைதியாக உட்கார வைத்தாள், ஸ்வேதா.
சரி என்பது போல் தலைய, தலைய மட்டும் , ஆட்டினாள் மிருதுளா.
" என்ன சொல்லிட்டு இருந்தேன் யுவா அண்ணா எனக்கு 2 இயர்ஸ் முன்னே வொர்க் பண்றாங்க, எங்க டீம் லீடர், நல்லா பழகுவாங்க, செம்ம ஜாலி பர்ஷன் , ஆபீஸே அவரை சைட் அடிச்சது , நீ எப்படி அவரை பார்த்தவுடன் சைட் அடிச்சியோ அந்த மாதிரி" என ஸ்வேதா சிரித்துக்கொண்டே கூறவும் கண்களை விரித்து இல்லை என தலையை இடவலமாக அசைத்தாள் .
" மிருதுளா , லவ் பண்றவங்களை சேர்த்து வைக்கிறதுல கில்லாடி , ஷாஜகான் பட விஜய் மாதிரின்னு வைச்சுக்கவேன், சொல்லப்போனா ஆபிஸே அவரை லவ் டாக்டர், லவ் டிடெக்டிவ் அப்படி தான் கூப்பிடும்" என சொன்னாள் ஸ்வேதா
"எதேய், அந்த மூஞ்ச பார்த்தா லவ் அ சேர்த்து வைக்கிரவன் மாதிரி இல்லையே, மெளம் பேசியதே சூர்யா மாதிரி யார் லவ் பண்ணாலும் புடிக்காம பிரிச்சுவுடற மாதிரி இருக்கு, இவ என்னடானா இப்படி கம்பி சுத்துறா" என மனதிற்குள் நினைத்து கொண்டாள் மிருதுளா.
"அது , மட்டும் இல்லை செம்ம சுமாட் வெர்க் தெரியுமா எல்லாத்துக்கும் ஒரு டெக்னிக், ஒரு ஐடியா, ஒரு சோலுயுசன்னு , அண்ணாட்ட இல்லாததே கிடையாது "
"ஹீம், ஆல் ன் ஆல் அலகுராஜான்னு சொல்லு" என மனதில் நினைத்து கொண்டு தலையை மட்டும் ஆட்டினாள்.
" நல்லா இருந்தாரு, போன வருஷம் ஒரு போன் வந்துச்சு, அதோடு அவசரமா கிளம்பி போனார், அப்புறம் என்னாச்சுன்னு தெரியல ஒரு மாதம் ஆபீஸ் வரல , ஒரு தகவலும் தெரியல " என சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதி ஆனவள் பின்பு பேசுவதை தொடர்ந்தாள் .
" ஒரு மாதம் கழித்து திரும்பி வரும்போது பழைய யுவாவே இல்லை , அவரது பேச்சு கலகலப்பு போய் , ரொம்ப தனியாகிட்டாரு. யார்கூடயும் வேலையை தாண்டி அநாவசியமா பேசமாட்டிக்கார், அடிக்கடி, தன் பர்ஸ் , லேப்டாப், போன்னு எதையோ பார்த்து அழுதுட்டு இருப்பார், ஒரு வேலை லவ் பெயிலியர் ஆக இருக்கும்னு ஆபீஸே அவர டிஸ்டர்ப் பண்ணாம விட்டுட்டு, இப்பவும் அப்படியே தான் இருக்கார் , சிரிப்பை பார்க்கவே முடியல" என வருத்ததோடு ஸ்வேதா பேசி முடிக்க. தன் வாய்கட்டை அவிழ்த்தவள்...
"மிஸ்டர் யுவா வோட , எஸ் டி டி கொஞ்சம் சுமார் தான், அதுல நீ சொன்னில காதல் டாக்டர், காதல் டிடக்டிவ் அது தான் இந்த ஸ்டோரில் கவனிக்கப்பட வேண்டிய ஏரியா.
சரி ஆபிஸே சைட் அடிச்ச ஒரு ஆளு உனக்கு மட்டும் எப்படி அண்ணன் ஆனது அத சொல்லு முதல்ல" என மிருதுளா கூறவும் தன் தலையில் அடித்துக்கொண்ட ஸ்வேதா "புத்தி போது பாரு உனக்கு, அது என்னமோ தெரியல எனக்கு வேலை கிடைத்து அண்ணன் டிம்ல போனதுல இருந்து ஏதோ ஒரு பாதுகாப்பு , ரொம்ப கேரிங், நான் ஹாஸ்டல்ல தங்கி தான் வேலை பார்த்தேன், ஒரு சின்ன ஹாஸ்டல் தான் அதுல தங்கி இருக்கிறவங்களும் கம்மி தான் எனக்கு ஆரம்பத்துல ஆபிஸ் பிரொசிச்சர் எதுவும் தெரியாது ,அதனால என்கிட்ட இருந்த பணத்துல வாடகை கம்மியா இருந்த ஒரு ஹாஸ்டல தங்கினேன் ,ஒரு நாள் என் போனுக்கு ஒரு விடியோ வந்தது, என்னனு பார்த்தா "...... என தலைகுனிந்து கண்ணில் நீர் கோர்த்தது ஸ்வேதாவிற்க்கு.
"என்ன ஸ்வேதா என்னாச்சு " என மிருதுளா அவள் தோளை தொட்டு உலுக்க.
" அது ,அது நான் ஹாஸ்டல்ல குளிக்கிர விடியோ" என்று கூறிய அடுத்த நிமிடம், மிருதுளா அதிர்ச்சிஅடைந்தாள் " எனக்கு அது எப்படி எடுத்தாங்கன்னு தெரியல , வாடர்ன்ட்ட கேட்கலாம்னு பார்த்தா, மெசேஜ் வருது யார்ட்டயாவது கேட்டா வீடியோ நெட்ல லீக் ஆகிடும்னு ,எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல, நானும் டெலிட் பண்ணிடுங்கன்னு கெஞ்சினேன், அதுக்கு அவங்க இன்னிக்கு நைட் உன் ரூம்க்கு ஒருத்தன் வருவான் அவன அட்ஜஸ்ட் பண்ணா இந்த வீடியோ லீக் ஆகாது , இல்லாட்டி உன் விடியோதான் நாளைக்கு வைரல்,உன் பிரெண்ட்ஸ், உன் சொந்தம் எல்லாம் உன்ன கேவலாம பேசுவாங்க , உன் பெத்தவங்க தூக்குல தொங்குவாங்க அத பார்க்க ஆசையா இருக்கா"
"இல்லை இல்லை , அப்படி பண்ணிறாதீங்க" என கதறி அழுதேன்.
"அப்போ, வெளியே யார்ட்டயும் மூச்சு விடக்கூடாது, நைட் நீ நடக்கிறத பொறுத்து தான் எல்லாம் " என அந்த போன் கட்டாகிட்டு .
"எனக்கு, என்ன பண்ணணு தெரியல,ஆபிஸ்லயே என் உயிர் போக கூடாதான்னு நினைச்சேன், ஆபீஸ் முடிந்தது எல்லாரும் கிளம்பிட்டாங்க, அண்ணா எப்போதும் லேட் தான், நான் என் கேபின்ல இருக்கிறத பார்த்துட்டு என்கிட்ட வந்து விசாரிச்சாங்க"
" ஸ்வேதா என்னாச்சு ஏன் இன்னும் கிளம்பல, நான் வேணா டிராப் பண்ணட்டுமா " என யுவா அக்கறையாக கேட்க.
" இல்லை அண்ணா, அது வந்து அது... " என பதட்டம், தயக்கம் கலந்து பேச.
"ஏன், என்னாச்சு ஏதும் ஹெல்த் பிராபலம்,வா வேணும்னா ஹாஸ்பிட்டல் போய் பார்த்துடுவோம்" டன யுவா ஸ்வேதா கை பிடித்து இழுக்க , அவள் கை குளிர்ந்து நடுகாகத்தில் இருப்பதை கண்டான்
" ஏய், ஏன்டா ஸ்வேதா, என்னாச்சு?" என அவள் முகம் பார்த்து அழுத்தமாக கேட்க ,அண்ணா என கதறிக்கொண்டே அனைத்தையும் கூறி முடித்தாள்.
அவள் கூறி முடித்த அடுத்த நிமிடம், அவன் தன் லப்டாப்பை ஆன் செய்து அவளுடைய
போனுடன் கனெக்ட் பண்ணி ஒரு மணி நேரம் வேலை செய்தவன், பின் அவள் போனில் உள்ள சிம்மை எடுத்து வைத்து கொண்டான், அவளை தன்னோடு அழைத்து சென்று அவனுக்கு தெரிந்த ஆசிரமத்தில் தங்க வைத்தான் .
மறுநாள் காலையில், செய்தி தாள், தொலைகாட்சி செய்தி என அனைத்திலும் அந்த ஹாஸ்டல் சம்பந்தப்பட்ட செய்தி இடமாகியது, அதை பார்த்த ஸ்வேதா
அதிர்ச்சி அடைந்தாள் ஆம் அது ஒரு மறைமுக விபச்சார விடுதி, வெளியூரில் இருந்து இங்கு வேலைக்கு வரும் பெண்களுக்கு குறைந்த வாடகையில் அறைகளை வாடகைக்கு விட்டு பின் அவர்களது அந்தரங்க வீடியோக்களை ,வைத்து மிரட்டி அவர்களை பாலியல் தொழிலுக்குள் உட்படுத்துவது மற்றும் ஆபாச படங்களை தயாரிப்பது என பல கீழ்த்தரமான வேலைகளை செய்துள்ளது அதனை சென்னை மாநகர காவல் ஆய்வாளர் திரு.அமரன் ஐபிஎஸ் கண்டுபிடித்தார் என நியூஸ் வெளியானது, அதை பார்த்த உடனே யுவா விற்கு போன் செய்த ஸ்வேதா
"அண்ணா, டிவி நியுஸ்ல" என தயக்கமாக கூற.
"அத விடுமா, நீ சீக்கிரம் ஆபிஸ் கிளம்பு, இன்னிக்கு முக்கியமான டீம் மீட் இருக்கு, நான் வந்து உன்ன பிக்கப் பண்ணிக்கிடுறேன்".
"அண்ணா, ஆபிஸ்ல"
"யாருக்கும், எதுவும் தெரியாது, என் தங்கச்சி கிட்ட யாரையும் நெருங்க விடமாட்டான் இந்த யுவா" சரியாமா என யுவா கேட்கவும் "அண்ணா " என கண்களில் கண்ணீர் வைத்துக் கொண்டாள் ஸ்வேதா .
"அதுகப்புறம் தான் ஆபீஸ் மூலமா அண்ணாக்கு பக்கத்து பிளாட்லயே எனக்கு தங்குதற்கு அண்ணா ஏற்பாடு பண்ணாங்க, அதுனால தான் இரண்டு பேரும் அடுத்தடுத்த வீடு, இதனாலதான் உலகழகி மேடம் அண்ணன் உன்ன பாலோ பண்ணிட்டு வந்திருக்குன்னு நேத்து அவ்ளோ சீன் போட்டிங்க" என கூறிவிட்டு சிரித்த ஸ்வேதாவை
"போதும், நிறுத்துறியா உன் அண்ண புராணத்தை நேத்து டிரெயின்ல கூட சாப்டல
வயிறு பசிக்கு எதாட்டு ரெடி பண்ணு மா தாயே வந்தன்னைக்கே பட்டினி போட்டு கொல்லாத" என கையெடுத்து கூம்பிட்டாள் மிருதுளா.
இங்கு ஊரில்........
தங்களது அறையில் உறங்கி கொண்டிருந்த சுந்தரத்தை எழுப்பவா, வேண்டாமா என்ற யோசனையில் திரு திரு வென முழித்து கொண்டிருந்தாள் சுமதி , பாதி தூக்கத்தில் எழுப்பினால் எட்டி உதைத்து விடுவான் , வேற வழியில்லை எழுப்பி தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தன் கணவனை எழுப்பினாள் சுமதி...
"ஏங்க, ஏங்க" என அவர் தோளை லேசாக அசைக்கவும் , "என்னடி , என தூங்கிக்கொண்டே உறுமளாக சுந்தரம் கேட்க
" அது வந்து ,உங்கள பார்க்க எஸ்ஐ காளிமுத்து வந்துருக்காரு" என கூறவும்
"ம்ம்ம் வர்றேனு சொல்லு " என்று சொன்னவர் அரை மணி நேரம் கழித்து தான் வெளியே வந்தார். வரவும் காளிமுத்து உடனே எழுந்து நின்றார் மரியாதை நிமித்தமாக இல்லை பணநிமித்தமாக.
"என்னயா, காளிமுத்து வீடு வரைக்கும் வந்துருக்க, வர வேண்டியது எல்லாம் கரெக்டா வருது ல ஏலே " என்று கூறிக்கொண்டே சோபாவில் அமர்ந்தவர் அவரையும் அமரச்சொல்ல.
"அது வந்து ஐயா, கமிஷனர் சார் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லிட்டு வரச்சொன்னார்.
"என்னவாம்ல"
"அது, அவருக்கு திடுதிப்புன்னு டிரான்ஸ்வர் வந்துட்டாம் அவரோட சேர்த்து ஒரு 6 எஸ்ஐ யையும் பணிஇடமாத்தம் பண்ணிருக்காங்க , அவரு வடநாட்டு பக்கம் போறாராம், இங்க வேற கமிஷனர் வரப்போறாரு, அவரு கொஞ்சம் கெடுபிடி, அதனால ஒரு இரண்டு மூன்று மாசத்துக்கு உங்க, தொழிலையும், கட்சி ஆபிஸை மட்டும் பார்த்து நடத்த சொன்னார், வேற மேற்படி விஷயம் எதாட்டு பண்ணா சிக்கலாகிடும் அதான் உங்கள நேர்ல பார்த்து சொல்லிட்டு வரச்சொன்னாரு".
"எவன்ல, அது என்ன எதிர்கிற கொம்பன் ,இந்த ஜில்லால நான் வைக்கிறது தாம்ல சட்டம் , சிறு நரி ஊலையிடுறதுக்கெல்லாம் இந்த சிங்கம் அசாரதுல நீ போ எனக்கு தெரியும், எவன் வந்து என்னத்த கிழிக்கிறான்னு நானும் பாக்கேன்ல" என கூறியவர் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்க ,காளிமுத்துவோ வாசல் வரை சென்றவர் மீண்டும் திரும்பி
" ஐயா, அந்த பய மறுபடியும் வந்தான் " அத அசால்டா விட்டுறாதிக, நான் வர்றேன் என கிளம்பிவிட்டார்.
" மறுபடியும் அந்த பயபுள்ள வந்தா உடன்காட்டுல எரிச்சு, தாமிரபரணில கரைச்சுட வேண்டியது தான்" என நினைத்துக்கொண்டார் சுந்தரம்.
காத்திருப்பு தொடரும்
 
Status
Not open for further replies.
Top