அத்யாயம் 5
மிருதுளா சென்னை மாநகராட்சிக்கு கிளம்பி விட்டாள், இரயிலில் பயணம் , மிருதுளா தனியாக செல்வதனால் குணா அவளுக்கு ஏசி கம்பார்ட்மென்ட்லயே டிக்கெட் புக் பண்ணி இருந்தான்,கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும் என்று.
ஆனால் மிருவிற்க்கோ இரயில் பயணத்தில் ஜன்னலோர சீட்டில், இளையராஜாவின் பாடல்களை கேட்டுக்கொண்ட செல்வது மிக பிடிக்கும் , ஒருமுறை கல்லூரி சுற்றுளா செல்லும் போதுதான் அந்த அனுபவத்தை உணர்ந்தாள். இருப்பினும் தன் பெற்றோர்களின் நிம்மதிக்காக இதை ஏற்றுக்கொண்டாள்.
அவள் இருக்கும் இடத்தில் இன்னும் வேறு எவரும் வரவில்லை, போக போக ஆட்கள் ஏறுவார்கள் என நினைத்து கொண்டு,தன் ஹெட்செட் எடுத்து காதில் மாட்டினாள்.
இம்முறையும் அதே இளையராஜா இசையே அவள் பயணம் முழுவதும் துணை வரப்போகிறது என நினைத்து கொண்டு
அப்படியே காலை எதிர்த்த சீட்டில் நீட்டி தன் வலது கையை தலையில் வைத்து கண்ணாடி ஜன்னலில் சாய்ந்து பாடலை ஆன் செய்தாள்
பயணம் தொடங்கியது இளையராஜா
பாடலுடன்,
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே... ஹோ...
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்...
என பாடலின் இசையின் தாலாட்டில் மெல்ல கண்ணயர்ந்தாள் .
பாடல் அடுத்து ,அடுத்து என ஒரு 10 பாடல் மாறியிருக்கும்.
தன் தோளை தொட்டு யாரோ எழுப்பவும் தான் , சட்டென்று பதறி எழுந்தவள்,
"என்ன , என்ன" என ஒன்றும் புரியாது, யார் எதிரில் நிற்கிறார்கள் என்று பதட்டத்துடன் கேட்டவளிடம்.
"ஒண்ணும் இல்லமா உங்க டிக்கெட் அ தாங்க செக் பண்ணணும் என " அங்கு வந்த பெண் டிடிஆர் கேட்கவும் தான் அவள் நிதானத்திற்க்கு வந்தாள்.
தன் கைப்பையில், கையை விட்டு துளாவி டிக்கெட்டையும் ஆதார்கார்டையும் எடுத்து டிடிஆர் கையில் கொடுத்தாள், அவரும் அவளது சீட்டை சரிபார்த்து குறித்து கொண்டு, அவளது டிக்கெட்டும், ஆதார் கார்டையும் அவளிடமே கொடுத்தார், மீண்டும் அதை வாங்கி கைபையில் திணித்து கொண்டிருந்தவள் காதில்
" சார் நீங்க கொடுங்க உங்க டிக்கெட்யை என கேட்கவும் தான் படாரென்று திரும்பி தன் எதிர் இருக்கையை பார்த்தாள், அங்கு ஒரு வாலிபன் அமர்ந்து இருந்தான்.
அவனை பார்த்து விட்டு சுற்றும், முற்றும் பார்த்தாள் அவர்கள் இருவரை தவிர இன்னும் யாரும் வரவில்லை, டிடி ஆர்ரிடம் கேட்டாள்
"மேடம் ,எத்தனை ஸ்டேஷன் தாண்டி இருப்போம் சாரி நான் கொஞ்சம் தூங்கிட்டேன்" என கேட்கவும்
"ஐந்து ஸ்டேஷன் தாண்டி இருப்போம்
மா " என கூறிவிட்டு அவர் தனது வேலையை பார்க்க சென்று விட்டாள்.
இவளும் அப்படியே தன் சீட்டில் அமர்ந்தாள் , அமர்ந்தவள் இப்போது தான் எதிர் சீட்டில் உள்ளவனை பார்த்தாள், இவள் கால் வைத்திருந்த இடத்தில் அவன் அமர்ந்திருந்தான், அலைபாயும் கேசம், பால் போல் முகம் , ஷேவ் செய்தும் செய்யாததுபோல் தாடியும் மீசையும் , அழகான புன்னகை சிந்தும் உதடு , கருப்பு டீசர்ட் , கிரே திரீ போர்த் பேண்ட் என அவனை அங்குலம் அங்குலமாக அளவெடுத்து கொண்டிருந்த நேரம் " நீங்க என்னை மேலிருந்து கீழ வரை அடையாளம் பார்த்துட்டீங்கனா , நான் கொஞ்சம் பேசலாமா" என கேட்டான் அந்த புதியவன்.
அவன் பேசியதில் நிகழ்வுக்கு வந்தவள் அவ்வளவு வெளிபடையாவா பார்த்துட்டோம் என தன் மனசுக்குள் தன்னை திட்டியவள், மீண்டும் அவனிடம் " பின்ன இங்க நம்ம இரண்டு பேரும் தான் இருக்கோம் அதான் ஒரு சேப்டிக்கு உங்களை அடையாளம் பார்த்துகிட்டேன், இப்போ அதுக்கென்ன" என வெடுக்கென கேட்கவும் அவன் அமைதியாக,
"அதுக்கு ஒண்ணும் இல்லை மேடம், நீங்க முழிச்சிட்டீங்கன்னா நான் என் போர்வைய எடுத்து கிடலாமா" என கேட்டவனை புரியாமல் பார்த்தாள் மிருதுளா.
"என்னது உங்க போர்வையா என்டயா" என்று குழப்பமாக அவனை பார்க்க.
"ஆமா மேடம் உங்களுக்கு சைடுல பாருங்க இருக்கும் என தன் ஆள்காட்டி விரலை நீட்டியவன் திசையில் பார்த்தாள்" மிரு
அவளுக்கு அருகில் அவள் மேல் இருந்து எடுத்து போட்டதுபோல் கலைந்து கிடந்தது ஒரு போர்வை அப்போது தான் அவள் நினைவுக்கு வந்தது, டிடிஆர் எழுப்பும் போது தன் மேல் மூடி இருந்த போர்வையை இழுத்து அருகில் வைத்தது.
"ஆமா போர்வை, இதெப்படி என் மேலே"
"நான் தான் மூடி விட்டேன்"
"என்னது நீஙகளா?" என அதிர்ச்சியாக கேட்க
"வேற இங்கு யார் இருக்கா, நான் இங்கே வந்தபோ நீங்க குளிர்ல நடுங்கிட்டு இருந்தீங்க பார்க்க பாவமா இருந்திச்சு ,அதான் ஒரு மனிதாபிமானத்தில போர்வை மூடி விட்டேன்" என அந்த புதியவன் கூறவும்
" என்ன பிளர்ட் பண்ண டிரை பண்றீங்களா"
"பார் வாட், பிளர்ட்டிங் ஆ" என அந்த புதியவன் புரியாமல் முழிக்க
"ஆமா பின்ன இல்லையா ,இதே எடத்துல ஒரு பாட்டி இருந்தா மூடி விடுவீங்களா, பியூட்டி இருக்க போய் தான மூடி விட்டிங்க , ஒரு பொண்ணுட்ட அத்து மீறி நடந்து கிட்டது மட்டும் இல்லாமல் அதுக்கு மனிதாபிமானம்ன்னு பேரு வேற ,எப்போ ஒரு பொண்ணு சிக்கும்னு தானே அலைவீங்க இந்த ஆம்பள பசங்கள பத்தி தெரியாது " என அவள் ஆண்களே இப்படித்தான் என ஏளனமாக பேசியவுடன் கோபம் கொண்டவனாக,
"எக்ஸ்கியூஸ் மீ ,என்ன சொன்னீங்க ,அத்துமீறுனனா ,ஆண்களே இப்படி தானா, ஏன் சொல்ல மாட்டிங்க, நான் என் பொருளை யாருக்குமே கொடுக்க மாட்டேன் போயும் போயும் உனக்கு கொடுத்தேன் பாரு என்ன சொல்லனும் ,குளிர்லேயே சாவட்டும்னு விட்டுருக்கனும்" என தன் வலது கையால் தலையில் அடித்து கொண்டவன் சட்டென்று
" என் போர்வைய கொடுங்க" என தன் போர்வையை அவளிடம் இருந்து பிடுங்கி விட்டு தன் இடத்தில் அமர்ந்தான்.
அவளும் தன் இடத்தில் அமர்ந்து , மீண்டும் தன் மொபைலில் பாட்டு கேட்க போனை தேடியபோது அதை காணவில்லை சட்டென்று திரும்பி இவன் எடுத்துருப்பானோ என அவனை பார்த்து "என் போன கொடு" என பட்டென கேட்டுவிட்டாள்.
"சரியா போச்சு , இப்போ இந்த திருட்டு பழி வேறயா, அம்மா தாயே இதோ ஏன் போன பார்த்தியா ரொம்ப காஸ்ட்லி, உன் டப்பா போனெல்லாம் எனக்கு தேவையே படாது , அது உன் ஹென்ட் பேக்குல தான் இருக்கு" என புதியவன் கூறவும் மிருதுளா தன் புருவம் சுருக்கி தன் கைப்பையில் தேட அவளது போன் கிடைத்தது.
இது எப்படி பேக்குள்ள என யோசித்து கொண்டிருக்கும் போதே...
"மேடம் அருமையா பாட்டு கேட்டுட்டே, போன் கீழே விழுந்தது கூட தெரியாம தூங்கிட்டீங்க, நான் தான் போன உங்க ஹேன்ட் பக்ல வைச்சேன் இதுவும் ஒரு சோசியல் சர்வீஸ் மாதிரி தான் பண்ணேன் தாயே , பணத்தை செக் பண்ணிக்கோ பின்ன என்ன தான் சொல்லுவ என சத்தமாக கூறிவிட்டு
" இவங்க டிராவல்ல பொறுப்பில்லாம தூங்குவாங்களாம் நாம ஐய்யோ பாவம்னு ஹெல்ப் பண்ணா நம்மளயே சந்தேகப்படுவாங்களாம் " என அவன் மெல்ல கூறிவிட்டு மீண்டும் தன் போனை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
இவளும் தன் மனதிற்குள் நாமளும் கொஞ்சம் அஜாக்கரதையா இப்படி தூங்குறது, எதாட்டு எடுத்துட்டு போயிருந்தா என்ன பண்றது என நினைத்துக்கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தாள், அவ்ளோ நல்லவனா இவன் என அவனை புருவம் சுருக்கி பார்த்தவள்,இல்ல இல்ல சும்மா கரெக்ட் பண்ண கதை விடுறான் என நினைத்து கொண்டு அமைதியாக இருந்து விட்டாள்.
அவனும் தன் கையில் ஒரு ஆங்கில நாவலை வைத்து படிக்க ஆரம்பித்தவன் தான் ,அதன் பின் இவள் புறம் திரும்பவே இல்லை.
சிறிது நேரம் கழித்து இயற்கை அழைப்பு வரவே கழிவறை நோக்கி சென்றாள்,
அப்போது கழிவறையில் இருந்து ஒரு பாட்டி வெளியே வந்தார் அவர் இவளை பார்த்ததும்,"ஏன்னமா எந்திச்சுட்டியா", என கேட்க இவளுக்கு ஏன் இவர் கேட்கிறார் இவர் யார் ? என்ற குழப்ப முகத்தை காட்ட,
"அது சரி நான் யாருன்னு பார்க்கியா, நான் உனக்கு அடுத்த பகுதில இருக்கேன் , நான் தானமா உனக்கு போர்வை மூடிவிட்டு ,உன் போன உன் பேக்ல வைச்சேன்" என அவர் கூறவும் மிருதுளா இழுவையாக " என்ன நீங்க தான் மூடி விட்டீங்களா அப்போ அவன்"
"யாரு அந்த தம்பியா, அது தான் என்ன கூட்டி வந்து உன் துப்பட்டாவை சரி பண்ணி,போர்வை மூடிவிட சொன்னிச்சு"
"என்னது துப்பட்டாவா, அத எதுக்கு" என யோசனையோடு கேட்டவளிடம்.
" அட டிரெயின்ல தூங்குற பொண்ணு ஒரு போர்வைய போத்திட்டு தூங்களாம்ல ,டிரெஸ் விலகுனா தெரியாம இருந்திருக்கும், ஆமா இந்த காலத்து புள்ளைங்க எங்க ஒழுங்கா டிரெஸ் தச்சு போடுறீங்க, மறைக்க வேண்டியது பாதி வெளியே தெரியற மாதிரி இறக்கமா போடுறீங்க இதுல துப்பட்டா எதுக்கு போடுறோம்னு தெரியாமலயே அதையும் போடுறீங்க ,அந்த புள்ளங்கபோயி என்ன கூட்டிட்டு வந்தது வேற ஒருத்தன்னா " என புலம்புவது போல் அவளுக்கு உண்மையை புரிய வைத்துவிட்டு சென்றார்.
"இவ்வளவு நடந்து இருக்கா ,இதுக்காக தான் மூடி விட்டானா, நாம கேட்டதுக்கு குளிர் என்றான்" என தன் கழிவறை தேவையை முடித்து கொண்டு, இனி தூங்க கூடாது என்று முகத்தை கழுவி விட்டு அவளிடம் சென்றாள்.
அவள் இடம் சென்றவள் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து விட்டு " க்கூம்...." என தன் தொண்டையை செருமினாள், அவனிடம் எந்த அசைவும் இல்லை, அவன் நாவலை கீழே இறக்கவும் இல்லை,
" என்ன இவன் பார்க்க மாட்டிக்கான், ஆமா நீ கொடுத்த மரியாதைக்கு அப்படியே உன்ன தாங்குவான் பாரு" என அவள் மனது அவளை கழுவி ஊத்தியது.
"ஹலோ, மிஸ்டர்" என கூப்பிட்டு கொண்டே அவன் நாவலில் தனது ஆள்காட்டி விரலை வைத்து டொக் ,டொக் என தட்டவும் , அவன் தன் நாவலை கீழே இறக்கி அங்கிட்டும், இங்கிட்டும் பார்த்தானே தவிர மிருவை
பார்க்க வில்லை.
"ஹலோ இங்க பாருங்க நான் தான் கூப்பிட்டேன்" என மிரு கூறவும்
தன் ஒற்றை புருவம் தூக்கி "நீங்களா , என்னயவா?" என ஆச்சரியமாக கேட்பது போல் கேட்டான்.....
காத்திருப்பு தொடரும்
மிருதுளா சென்னை மாநகராட்சிக்கு கிளம்பி விட்டாள், இரயிலில் பயணம் , மிருதுளா தனியாக செல்வதனால் குணா அவளுக்கு ஏசி கம்பார்ட்மென்ட்லயே டிக்கெட் புக் பண்ணி இருந்தான்,கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும் என்று.
ஆனால் மிருவிற்க்கோ இரயில் பயணத்தில் ஜன்னலோர சீட்டில், இளையராஜாவின் பாடல்களை கேட்டுக்கொண்ட செல்வது மிக பிடிக்கும் , ஒருமுறை கல்லூரி சுற்றுளா செல்லும் போதுதான் அந்த அனுபவத்தை உணர்ந்தாள். இருப்பினும் தன் பெற்றோர்களின் நிம்மதிக்காக இதை ஏற்றுக்கொண்டாள்.
அவள் இருக்கும் இடத்தில் இன்னும் வேறு எவரும் வரவில்லை, போக போக ஆட்கள் ஏறுவார்கள் என நினைத்து கொண்டு,தன் ஹெட்செட் எடுத்து காதில் மாட்டினாள்.
இம்முறையும் அதே இளையராஜா இசையே அவள் பயணம் முழுவதும் துணை வரப்போகிறது என நினைத்து கொண்டு
அப்படியே காலை எதிர்த்த சீட்டில் நீட்டி தன் வலது கையை தலையில் வைத்து கண்ணாடி ஜன்னலில் சாய்ந்து பாடலை ஆன் செய்தாள்
பயணம் தொடங்கியது இளையராஜா
பாடலுடன்,
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே... ஹோ...
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்...
என பாடலின் இசையின் தாலாட்டில் மெல்ல கண்ணயர்ந்தாள் .
பாடல் அடுத்து ,அடுத்து என ஒரு 10 பாடல் மாறியிருக்கும்.
தன் தோளை தொட்டு யாரோ எழுப்பவும் தான் , சட்டென்று பதறி எழுந்தவள்,
"என்ன , என்ன" என ஒன்றும் புரியாது, யார் எதிரில் நிற்கிறார்கள் என்று பதட்டத்துடன் கேட்டவளிடம்.
"ஒண்ணும் இல்லமா உங்க டிக்கெட் அ தாங்க செக் பண்ணணும் என " அங்கு வந்த பெண் டிடிஆர் கேட்கவும் தான் அவள் நிதானத்திற்க்கு வந்தாள்.
தன் கைப்பையில், கையை விட்டு துளாவி டிக்கெட்டையும் ஆதார்கார்டையும் எடுத்து டிடிஆர் கையில் கொடுத்தாள், அவரும் அவளது சீட்டை சரிபார்த்து குறித்து கொண்டு, அவளது டிக்கெட்டும், ஆதார் கார்டையும் அவளிடமே கொடுத்தார், மீண்டும் அதை வாங்கி கைபையில் திணித்து கொண்டிருந்தவள் காதில்
" சார் நீங்க கொடுங்க உங்க டிக்கெட்யை என கேட்கவும் தான் படாரென்று திரும்பி தன் எதிர் இருக்கையை பார்த்தாள், அங்கு ஒரு வாலிபன் அமர்ந்து இருந்தான்.
அவனை பார்த்து விட்டு சுற்றும், முற்றும் பார்த்தாள் அவர்கள் இருவரை தவிர இன்னும் யாரும் வரவில்லை, டிடி ஆர்ரிடம் கேட்டாள்
"மேடம் ,எத்தனை ஸ்டேஷன் தாண்டி இருப்போம் சாரி நான் கொஞ்சம் தூங்கிட்டேன்" என கேட்கவும்
"ஐந்து ஸ்டேஷன் தாண்டி இருப்போம்
மா " என கூறிவிட்டு அவர் தனது வேலையை பார்க்க சென்று விட்டாள்.
இவளும் அப்படியே தன் சீட்டில் அமர்ந்தாள் , அமர்ந்தவள் இப்போது தான் எதிர் சீட்டில் உள்ளவனை பார்த்தாள், இவள் கால் வைத்திருந்த இடத்தில் அவன் அமர்ந்திருந்தான், அலைபாயும் கேசம், பால் போல் முகம் , ஷேவ் செய்தும் செய்யாததுபோல் தாடியும் மீசையும் , அழகான புன்னகை சிந்தும் உதடு , கருப்பு டீசர்ட் , கிரே திரீ போர்த் பேண்ட் என அவனை அங்குலம் அங்குலமாக அளவெடுத்து கொண்டிருந்த நேரம் " நீங்க என்னை மேலிருந்து கீழ வரை அடையாளம் பார்த்துட்டீங்கனா , நான் கொஞ்சம் பேசலாமா" என கேட்டான் அந்த புதியவன்.
அவன் பேசியதில் நிகழ்வுக்கு வந்தவள் அவ்வளவு வெளிபடையாவா பார்த்துட்டோம் என தன் மனசுக்குள் தன்னை திட்டியவள், மீண்டும் அவனிடம் " பின்ன இங்க நம்ம இரண்டு பேரும் தான் இருக்கோம் அதான் ஒரு சேப்டிக்கு உங்களை அடையாளம் பார்த்துகிட்டேன், இப்போ அதுக்கென்ன" என வெடுக்கென கேட்கவும் அவன் அமைதியாக,
"அதுக்கு ஒண்ணும் இல்லை மேடம், நீங்க முழிச்சிட்டீங்கன்னா நான் என் போர்வைய எடுத்து கிடலாமா" என கேட்டவனை புரியாமல் பார்த்தாள் மிருதுளா.
"என்னது உங்க போர்வையா என்டயா" என்று குழப்பமாக அவனை பார்க்க.
"ஆமா மேடம் உங்களுக்கு சைடுல பாருங்க இருக்கும் என தன் ஆள்காட்டி விரலை நீட்டியவன் திசையில் பார்த்தாள்" மிரு
அவளுக்கு அருகில் அவள் மேல் இருந்து எடுத்து போட்டதுபோல் கலைந்து கிடந்தது ஒரு போர்வை அப்போது தான் அவள் நினைவுக்கு வந்தது, டிடிஆர் எழுப்பும் போது தன் மேல் மூடி இருந்த போர்வையை இழுத்து அருகில் வைத்தது.
"ஆமா போர்வை, இதெப்படி என் மேலே"
"நான் தான் மூடி விட்டேன்"
"என்னது நீஙகளா?" என அதிர்ச்சியாக கேட்க
"வேற இங்கு யார் இருக்கா, நான் இங்கே வந்தபோ நீங்க குளிர்ல நடுங்கிட்டு இருந்தீங்க பார்க்க பாவமா இருந்திச்சு ,அதான் ஒரு மனிதாபிமானத்தில போர்வை மூடி விட்டேன்" என அந்த புதியவன் கூறவும்
" என்ன பிளர்ட் பண்ண டிரை பண்றீங்களா"
"பார் வாட், பிளர்ட்டிங் ஆ" என அந்த புதியவன் புரியாமல் முழிக்க
"ஆமா பின்ன இல்லையா ,இதே எடத்துல ஒரு பாட்டி இருந்தா மூடி விடுவீங்களா, பியூட்டி இருக்க போய் தான மூடி விட்டிங்க , ஒரு பொண்ணுட்ட அத்து மீறி நடந்து கிட்டது மட்டும் இல்லாமல் அதுக்கு மனிதாபிமானம்ன்னு பேரு வேற ,எப்போ ஒரு பொண்ணு சிக்கும்னு தானே அலைவீங்க இந்த ஆம்பள பசங்கள பத்தி தெரியாது " என அவள் ஆண்களே இப்படித்தான் என ஏளனமாக பேசியவுடன் கோபம் கொண்டவனாக,
"எக்ஸ்கியூஸ் மீ ,என்ன சொன்னீங்க ,அத்துமீறுனனா ,ஆண்களே இப்படி தானா, ஏன் சொல்ல மாட்டிங்க, நான் என் பொருளை யாருக்குமே கொடுக்க மாட்டேன் போயும் போயும் உனக்கு கொடுத்தேன் பாரு என்ன சொல்லனும் ,குளிர்லேயே சாவட்டும்னு விட்டுருக்கனும்" என தன் வலது கையால் தலையில் அடித்து கொண்டவன் சட்டென்று
" என் போர்வைய கொடுங்க" என தன் போர்வையை அவளிடம் இருந்து பிடுங்கி விட்டு தன் இடத்தில் அமர்ந்தான்.
அவளும் தன் இடத்தில் அமர்ந்து , மீண்டும் தன் மொபைலில் பாட்டு கேட்க போனை தேடியபோது அதை காணவில்லை சட்டென்று திரும்பி இவன் எடுத்துருப்பானோ என அவனை பார்த்து "என் போன கொடு" என பட்டென கேட்டுவிட்டாள்.
"சரியா போச்சு , இப்போ இந்த திருட்டு பழி வேறயா, அம்மா தாயே இதோ ஏன் போன பார்த்தியா ரொம்ப காஸ்ட்லி, உன் டப்பா போனெல்லாம் எனக்கு தேவையே படாது , அது உன் ஹென்ட் பேக்குல தான் இருக்கு" என புதியவன் கூறவும் மிருதுளா தன் புருவம் சுருக்கி தன் கைப்பையில் தேட அவளது போன் கிடைத்தது.
இது எப்படி பேக்குள்ள என யோசித்து கொண்டிருக்கும் போதே...
"மேடம் அருமையா பாட்டு கேட்டுட்டே, போன் கீழே விழுந்தது கூட தெரியாம தூங்கிட்டீங்க, நான் தான் போன உங்க ஹேன்ட் பக்ல வைச்சேன் இதுவும் ஒரு சோசியல் சர்வீஸ் மாதிரி தான் பண்ணேன் தாயே , பணத்தை செக் பண்ணிக்கோ பின்ன என்ன தான் சொல்லுவ என சத்தமாக கூறிவிட்டு
" இவங்க டிராவல்ல பொறுப்பில்லாம தூங்குவாங்களாம் நாம ஐய்யோ பாவம்னு ஹெல்ப் பண்ணா நம்மளயே சந்தேகப்படுவாங்களாம் " என அவன் மெல்ல கூறிவிட்டு மீண்டும் தன் போனை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
இவளும் தன் மனதிற்குள் நாமளும் கொஞ்சம் அஜாக்கரதையா இப்படி தூங்குறது, எதாட்டு எடுத்துட்டு போயிருந்தா என்ன பண்றது என நினைத்துக்கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தாள், அவ்ளோ நல்லவனா இவன் என அவனை புருவம் சுருக்கி பார்த்தவள்,இல்ல இல்ல சும்மா கரெக்ட் பண்ண கதை விடுறான் என நினைத்து கொண்டு அமைதியாக இருந்து விட்டாள்.
அவனும் தன் கையில் ஒரு ஆங்கில நாவலை வைத்து படிக்க ஆரம்பித்தவன் தான் ,அதன் பின் இவள் புறம் திரும்பவே இல்லை.
சிறிது நேரம் கழித்து இயற்கை அழைப்பு வரவே கழிவறை நோக்கி சென்றாள்,
அப்போது கழிவறையில் இருந்து ஒரு பாட்டி வெளியே வந்தார் அவர் இவளை பார்த்ததும்,"ஏன்னமா எந்திச்சுட்டியா", என கேட்க இவளுக்கு ஏன் இவர் கேட்கிறார் இவர் யார் ? என்ற குழப்ப முகத்தை காட்ட,
"அது சரி நான் யாருன்னு பார்க்கியா, நான் உனக்கு அடுத்த பகுதில இருக்கேன் , நான் தானமா உனக்கு போர்வை மூடிவிட்டு ,உன் போன உன் பேக்ல வைச்சேன்" என அவர் கூறவும் மிருதுளா இழுவையாக " என்ன நீங்க தான் மூடி விட்டீங்களா அப்போ அவன்"
"யாரு அந்த தம்பியா, அது தான் என்ன கூட்டி வந்து உன் துப்பட்டாவை சரி பண்ணி,போர்வை மூடிவிட சொன்னிச்சு"
"என்னது துப்பட்டாவா, அத எதுக்கு" என யோசனையோடு கேட்டவளிடம்.
" அட டிரெயின்ல தூங்குற பொண்ணு ஒரு போர்வைய போத்திட்டு தூங்களாம்ல ,டிரெஸ் விலகுனா தெரியாம இருந்திருக்கும், ஆமா இந்த காலத்து புள்ளைங்க எங்க ஒழுங்கா டிரெஸ் தச்சு போடுறீங்க, மறைக்க வேண்டியது பாதி வெளியே தெரியற மாதிரி இறக்கமா போடுறீங்க இதுல துப்பட்டா எதுக்கு போடுறோம்னு தெரியாமலயே அதையும் போடுறீங்க ,அந்த புள்ளங்கபோயி என்ன கூட்டிட்டு வந்தது வேற ஒருத்தன்னா " என புலம்புவது போல் அவளுக்கு உண்மையை புரிய வைத்துவிட்டு சென்றார்.
"இவ்வளவு நடந்து இருக்கா ,இதுக்காக தான் மூடி விட்டானா, நாம கேட்டதுக்கு குளிர் என்றான்" என தன் கழிவறை தேவையை முடித்து கொண்டு, இனி தூங்க கூடாது என்று முகத்தை கழுவி விட்டு அவளிடம் சென்றாள்.
அவள் இடம் சென்றவள் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து விட்டு " க்கூம்...." என தன் தொண்டையை செருமினாள், அவனிடம் எந்த அசைவும் இல்லை, அவன் நாவலை கீழே இறக்கவும் இல்லை,
" என்ன இவன் பார்க்க மாட்டிக்கான், ஆமா நீ கொடுத்த மரியாதைக்கு அப்படியே உன்ன தாங்குவான் பாரு" என அவள் மனது அவளை கழுவி ஊத்தியது.
"ஹலோ, மிஸ்டர்" என கூப்பிட்டு கொண்டே அவன் நாவலில் தனது ஆள்காட்டி விரலை வைத்து டொக் ,டொக் என தட்டவும் , அவன் தன் நாவலை கீழே இறக்கி அங்கிட்டும், இங்கிட்டும் பார்த்தானே தவிர மிருவை
பார்க்க வில்லை.
"ஹலோ இங்க பாருங்க நான் தான் கூப்பிட்டேன்" என மிரு கூறவும்
தன் ஒற்றை புருவம் தூக்கி "நீங்களா , என்னயவா?" என ஆச்சரியமாக கேட்பது போல் கேட்டான்.....
காத்திருப்பு தொடரும்