அத்தியாயம் 6
இதே சமயம் ராவந்த்தும் வீட்டுக்கு வந்து விட்டான்.அறைக்குள் எட்டி பார்க்க, அங்கே மாதுரி உடைகளை மடித்துக் கொண்டு இருந்தாள்.
உடையை மடித்துக் கொண்டு இருந்தவள் அருகே ஒரு மடலை வைத்து விட்டு நகர்ந்தான் ராவந்த்.
"என்னது?" என்று கேட்டாள்.
"ஆஹ் திறந்து பாரு" என்றான்.
அவளும் யோசனையுடன் திறந்து பார்த்தாள்.
"மை டியர் ஸ்வீட் ஹார்ட்" என்று இருந்தது...
அவனை ஒரு மார்க்கமாக பார்க்க, "எனக்கு வந்த கார்ட்" என்றான்.
"ஓஹோ" என்றவள், வாசித்தாள்.
ஆங்கிலத்தில் ஒரு கவிதை... ஆழமாகவும் அந்தரங்கமாகவும் இருந்தது.
"ச்சீ இது என்ன இப்படி இருக்கு?" என்று கேட்டபடி கீழே பெயரை பார்த்தாள்.
"ரிதன்யா" என்று இருந்தது...
"என்ன சொல்லட்டும்?" என்று கேட்டான்.
"ஆஹ் என்ன கேட்டா நான் என்ன சொல்றது?? இது லவ் பண்ண கூப்பிட்ட போல தெரியலையே. ரூம் போட கூப்பிட்ட போலவே தெரியுதே" என்றாள்.
"நான் என்ன சொல்லட்டும்?" என்று மீண்டும் கேட்டான்.
அவனை ஏறிட்டு பார்த்தவள், "இத எதுக்கு என் கிட்ட கேக்கிறீங்க?? உங்களுக்கு என்ன தோணுதோ சொல்லுங்க" என்றாள்.
"கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லட்டுமா?" என்று கேட்டான்.
"ஆனா பொண்டாட்டி நான் தான் னு சொல்ல கூடாது" என்றாள்.
"என்னடி அநியாயமா இருக்கு?" என்று கேட்டான்.
"எனக்கு நியாயம் தான்" என்றபடி உடைகளை மடிக்க, "உனக்கு பொசெசிவ் கொஞ்சமும் வரலையா?" என்று கேட்டான்.
"இல்லையே" என்றாள் இதழ்களை பிதுக்கி.
"ஆனா எனக்கு வருதே. நீ யார் கூட பேசுனாலும் வருது... இன்னைக்கு செக்கியூரிட்டி கார்ட் கூட பேசுன தானே, அப்போவும் வந்துச்சு" என்றான்.
அவனை முறைத்தவள், "அவருக்கு என் அப்பா வயசு இப்படி சந்தேகப்படுறீங்களே" என்றாள்.
"சந்தேகம் இல்லடி. பொசெசிவ்னெஸ்" என்றான்.
"ரெண்டும் ஒன்னு தான்" என்றாள் கடுப்பாக.
"ரெண்டும் ஒன்னு இல்ல. நீ உன் தங்கச்சி கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணுனாலும் அதே பீல் வருது, அதுக்கு பேர் சந்தேகமா என்ன?" என்றான்.
"என்ன கொடுமையா இருக்கு?? இப்போ என்ன செய்யணும்?" என்று கேட்டாள்.
"இதே போல உனக்கும்.வரணும்." என்றான்.
"எனக்கு தான் வரலையே." என்றாள்.
"அதான் ஏன்?" என்றான்.
"ஏன்னா நீங்க லூசு, நான் லூசு இல்ல" என்றாள்.
"அடிச்சேன்னா பாரு. யாருடி லூசு?" என்று அவன் சீற, "பின்ன என் தங்கச்சி கூட பேசுனாலும் வயிறு எரியுதுன்னா நான் என்ன பண்ணட்டும்?" என்று கேட்டாள்.
"ஓகே, நீ அவ்ளோ தூரம் பொசெசிவ் ஆகணும்னு இல்ல. இந்த லவ் லெட்டருக்காக கொஞ்சம் கோபப்படலாமே. என்னை கிஸ் பண்ணுறேன்னு சொல்லி இருக்கா... லவ் மேக் பண்ண கூப்பிட்டிருக்கா... இந்நேரத்துக்கு நீ அவ முடியை பிடிச்சு ஆட்ட வேணாமா?" என்று கேட்டான்.
"கல்யாணம் ஆனது தெரியாம தானே கூப்பிட்டு இருக்கா.. அப்புறம் எதுக்கு நான் அவ முடியை பிடிச்சு ஆட்டனும்?" என்று கேட்டாள்.
"லாஜிக் தான். ஆனாலும் சும்மாவாச்சும் கோபப்படுடி." என்றான்.
"என்னை கொடுமை டா சாமி... கோபம் வந்தா தானே கோபப்பட முடியும்?" என்று அவள் சொல்ல, "உன்னை கட்டிகிட்டத்துக்கு என்ன சொல்லணும்" என்று நெஞ்சில் இரு கைகளாலும் அடித்துக் கொண்டே நடந்து சென்றான்.
குளித்து விட்டு ஷார்ஸுடன் வந்தவனோ அவளை முறைத்துக் கொண்டே தான் கடந்து சென்றான்.
'இப்போ எதுக்கு முறைச்சிட்டு போறார்?' என்று நினைத்தபடி அவளும் சாப்பிட சென்றாள்.
அந்த நாள் அப்படியே கடந்து விட, அடுத்த நாள் விடிந்தது...
வேலைக்கு செல்ல ஆயத்தமான மாதுரி வெளியே வர, அங்கே வந்த திலகவதியோ, "இப்போ தான் கோவிலுக்கு போயிட்டு வந்தேன், இத உன் புருஷன் நெத்தில வச்சி விடு, அவன் சாமியே கும்பிட மாட்டான்" என்று சொல்லி மாதுரியிடம் பிரசாதத்தை நீட்டி இருந்தார். அவளோ, "நானா வைக்கணும்?" என்று கேட்க, "நீ தானே பொண்டாட்டி" என்றார் திலகவதி.
'அடிக்கடி நினைவு படுத்துங்க , மறந்து போகுது' என்று முணுமுணுத்தபடி அறைக்குள் நுழைய அங்கே கண்ணாடி முன்னே நின்று ஷேர்ட்டை போட்டுக் கொண்டு இருந்தான் ராவந்த்.
"பிரசாதம்" என்று நீட்டினாள்.
"எனக்கு இதெல்லாம் வேணாம்" என்றான்.
"வேணாம்னு சொல்ல கூடாது" என்று சொல்ல, "அப்போ நீயே வச்சு விடு" என்றான்.
அவளும் அருகே வந்து கையை நீட்ட அவன் தலையை வேணுமென்றே பின்னே இழுக்க அவளுக்கு தான் எட்டவில்லை.
அவனோ இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டே, "குள்ள கத்திரிக்கா." என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான். அவனை முறைத்தவள், "புடலங்கா" என்று திட்டியபடி அருகே இருந்த ஸ்டூலை போட்டு ஏறி நின்றவளோ அவன் ஷேர்ட்டை பற்றி இழுக்க, "கசங்குதுடி" என்றபடி அவனே அருகே வந்தான்.
அவள் நெற்றியில் திருநீறை பூசி விட்டு அவன் கண்களை கையால் மறைத்து ஊதி விட, அவனோ கண்களை மூடி திறந்து உஷ்ண பெருமூச்சை விட்டவன், இதழ் குவித்து அவள் முகத்தில் ஊதினான்.
அவன் ஊதியதில் அவள் கையில் இருந்த துகள்கள் கண்ணுக்குள் பறந்தன.
"இப்போ எதுக்கு ஊதுறீங்க?" என்றபடி அவள் ஸ்டூலில் இருந்து இறங்கியவள் கண்ணை கசக்க, "நீயும் ஊதுன தானே" என்றான்.
"நான் காரணமா தான் ஊதினேன்... இப்போ என் கண்ணுக்குள்ள போயிடுச்சு" என்று அவள் சொன்னபடி நகர போக , அவள் கையை பற்றி இழுத்து நெருங்கி போனவன் தனது விரல்களால் அவளது கண்களை விரித்து இதழ் குவித்து ஊதினான்.
அவளும் அப்படியே நின்று இருக்க மெதுவாக விலகியவன், "ஓகே யா?" என்று கிசு கிசுப்பாக கேட்டான். அவளும், "ஓகே" என்றபடி திரும்பி நடந்தவளின் இதயம் இப்போது தாறுமாறாக துடித்தது... மேனியில் என்னென்னவோ உணர்வுகள்.
அதனை காட்டாமல் இருக்க அவள் தான் பெரும்பாடு பட்டு போனாள்.
யோசனையுடன் தான் அலுவலகம் வந்து சேர்ந்தாள்.
இன்னுமே ஒரு சிலிர்ப்பு அவளிடம்...
'அவன் கூடவா ஃபீலிங் வரணும்?' என்று கேட்டவளது மனசாட்சியோ, 'அவன் தானே டி உன் புருஷன்' என்று நினைவு படுத்தியது.
சற்று நேரத்தில் ராவந்த்தும் வந்தவன், விழிகளை சுழற்றி வேலை செய்து கொண்டு இருந்தவளை பார்த்து விட்டு தான் தனது இருக்கையில் அமர்ந்தான்...
சற்று நேரம் சென்று இருக்கும், பெல்லை அழுத்தினான்.
மாதுரியும், 'இவன் எதுக்கு கூப்பிடுறான்னு தெர்லயே' என்று முணுமுணுத்துக் கொண்டே அறைக்குள் சென்று எட்டி பார்க்க, அவனோ, "ஒரு காஃபி" என்றான்.
அவளும், "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே சற்று நேரத்தில் காஃபியை கொண்டு வந்து அவன் மேசையில் வைத்தாள்.
அவனோ ஏதோ ஒரு யோசனையில் அமர்ந்து இருந்தான்.
அவன் அறைக்குள் காஃபியை வைத்த மாதுரியோ, 'இவன் என்ன கப்பல் கவிழ்ந்த போல இருக்கான் ?' என்று யோசித்தபடி வெளியேற அவளை ஒரு கணம் பார்த்து விட்டு காஃபியை குடித்தவன், "என்னடி சூடு இல்ல?" என்றான்.
"அதெல்லாம் அர்ஜஸ்ட் பண்ணி குடிங்க" என்றாள்.
"இங்க நான் ஒன்னும் உன்னோட புருஷன் இல்ல இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிறதுக்கு... எடுத்துட்டு போய் வேற கொண்டு வா" என்றான்.
"ரொம்ப தான்" என்றபடி அவளும் சென்று விட, அவனோ கையை கழுவும் பொருட்டு கிச்சனை நெருங்கிய சமயம் அங்கே சிரிப்பு சத்தம் கேட்டது. அங்கே மாதுரியும் இன்னொரு சிற்றூழியனான சுரேஷும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.
ராவந்த்துக்கு கடுப்பாகி விட்டது.
அவர்களை பார்க்காமல் கையை கழுவி விட்டு நகர்ந்தவனுக்கு வீட்டுக்கு சென்று இதனை பற்றி பேசும் பொறுமை இல்லை.
"மாதுரி ஃபோட்டோகாப்பி" என்று சொல்லி அவளை அழைத்து ஒரு பத்திரத்தை நீட்டியவன் அவள் பின்னாலேயே அந்த அறைக்குள் சென்றான்.
அங்கே தான் சி சி டி வி இல்லை. அவளுடன் பேசவும் முடியும்.
அறைக்குள் நுழைந்தவள் பின்னால் வந்தவனை திரும்பி அதிர்ந்து பார்க்க , அவளை இழுத்து சுவரில் சாய வைத்து அவளது இரு பக்கமும் கைகளால் அணை போட்டவன், "அவன் கூட என்னடி சிரிச்சு சிரிச்சு பேச்சு?" என்று கேட்டான்.
அவளோ, "அது என் வாய். நான் பேசுவேன் , நீங்களும் தான் பொண்ணுங்க கூட பேசுறீங்க நான் கேக்கிறேனா?" என்று கேட்க, அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "நீ பேச கூடாது" என்றான்.
"ஏன் பேச கூடாது?" என்று கேட்டவளிடம், "எனக்கு பிடிக்கல" என்றான்.
"உங்க இஷ்டப்படி எல்லாம் நடக்க முடியாது" என்றாள்.
"எனக்கும் ஓரளவு தான் பொறுமை இருக்கு... கோபம் வந்தா என்ன பண்ணுவேன் தெரியுமா?" என்று கேட்க, "என்ன பண்ணுவீங்க? அடிப்பீங்களா? முடிஞ்சா கையை வைங்க பாப்போம்?" என்று நெஞ்சை நிமிர்த்தி கொண்டே மல்லுக்கு நின்றாள்.
அவளை கீழே குனிந்து பார்த்தவன், "ஆளும் சைசும் பேசுற பேச்சும்" என்றான்.
"இங்க பாருங்க, என் உயரத்தை பத்தி பேச உங்களுக்கு உரிமை இல்ல." என்று ஒற்றை விரல் நீட்டி சொல்ல, "இங்க பாரு , நீ இன்னொருத்தன் கூட சிரிச்சு பேசுறது காண்டாகுது... சோ ஒழுங்கா நடந்துக்கோ" என்றான்.
"அது என் பிரச்சன இல்ல" என்றாள்.
"சரி என் பிரச்சனை. ஆனா பேச கூடாது" என்றான்.
"நான் பேசுவேன். உங்களால என்ன தான் பண்ண முடியும்?" என்று கேட்க, "கடிச்சு வச்சிடுவேன்" என்றான்.
எங்க கடிப்பீங்க?" என்று கேட்டாள்.
அவள் இதழ்களை பார்த்து விட்டு விழிகளை பார்த்தவன், "ஆபீஸ் என்கிறதால" என்று சொல்லிக் கொண்டே அவளது கன்னத்தை ஒற்றை கையால் பற்றி அந்த குண்டு கன்னத்தில் தனது பற்தடங்களை பதித்து இருக்க, "ஐயோ அம்மா" என்று அவள் அலறல் வெளியே வராமல் அடுத்த கையால் வாயை முடியும் இருந்தான்.
அவளோ கன்னத்தை பொத்தியபடி.அவனை முறைத்து பார்க்க, "மூனடி இருந்துட்டு பேசுற பேச்சை பாரு" என்றான் கிண்டலாக.
"நான் அஞ்சடி" என்றாள் கோபமாக.
சட்டென நெருங்கி நின்றவன், "இங்க பாரு முதல் தடவை என்கிறதால தான் கன்னத்துல கடிச்சேன், அடுத்த முறை லிப்ஸ் தான்" என்று ஒற்றை கண்ணை சிமிட்டி விட்டு அடைக்கப்பட்ட சிரிப்புடன் நகர அவள் தான் அதிர்ச்சியுடன் இரு கைகளையும் வாயில் வைத்து கொண்டாள்.
கொஞ்ச தூரம் சென்று விட்டு சட்டென திரும்பி வந்தவன், அவள் முகத்தை திருப்ப, "ஐயோ" என்று அவள் பதற, "கடிக்கல டி" என்றான்.
"இப்போ என்ன?" என்று அவள் குரல் நலிந்து ஒலிக்க அவளது கன்னத்தை ஆராய்ந்து கொண்டே, "சிவந்திடுச்சு" என்றான்.
"கடிச்சா சிவக்க தான் செய்யும்" என்றாள்.
"ரொம்ப தான் பேசுற , ஒரு நாளைக்கு பேசவே விடாம பண்ணுவேன் பாரு" என்றபடி அவள் கன்னத்தை பார்த்துக் கொண்டே அந்த கன்னத்தில் அழுந்த இதழ் பதிக்க அவள் விழிகள் இன்னுமே அதிர்ந்து விரிந்து கொண்டன.
மெதுவாக விலகிக் கொண்டவனோ, விறைத்து போய் நின்றவளை மையலுடன் பார்த்துக் கொண்டே வெளியேறி விட்டான்...
அப்படியே சுவரில் சாய்ந்து நின்றவளுக்கு சட்டென நிதானத்துக்கு வரவே முடியவில்லை...
"மாதுரி" என்று உயர் அதிகாரி ஒருவர் அழைக்கும் குரலில் தான் அவள் நிதானத்துக்கு வந்தவள், "வரேன் சார்" என்றபடி அந்த அறையை விட்டு வெளியேறி சென்றாள்.