அத்தியாயம் 4
மீட்டிங்கை முடித்து விட்டு வெளியே வந்த மிதுன் காரில் ஏறி சென்று விட, பின்னால் வந்த ஆதித்தை "ஸ்ஸ்" என்று அழைத்தாள் நதீகா.. அவனோ அவளை நோக்கி சென்று மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி மேலிருந்து கீழ் பார்த்தவன் "கங்கிராட்ஸ்" என்று சொன்னான். அவளும் மெல்லிய சிரிப்புடன் "கொஞ்சம் தனியா பேசலாமா?" என்று கேட்க அவனோ புருவ முடிச்சுடன் "கோ எஹெட் " என்று சொன்னான். அவள் நடந்து சென்றது என்னவோ அவள் விழுந்த நீச்சல் தடாகத்துக்கு அருகே தான். அவளை பின் தொடர்ந்தவன் முதலில் பார்த்தது அவள் கால்களை தான். அவளோ தட்டையான செருப்பு அணிந்து இருக்க மெல்லிய புன்னகையுடன் பின் தொடர்ந்தவன் அங்கே பாக்கெட்டில் கையை போட்டபடி நீரை பார்த்துக் கொண்டு நின்றான். அவள் அருகே வந்து நின்ற நதீகா, "நான் நினைக்கவே இல்ல" என்று சொல்ல அவனோ "என்ன நினைக்கல?" என்று கேட்டான்.
அவளும் "இப்படி பிளேசன்ட் சர்ப்ரைஸ் ஆஹ் கல்யாணம் பிக்ஸ் ஆகும்னு நினைக்கவே இல்ல. நானே இத பத்தி உங்க கிட்ட பேச நினச்சேன்" என்று சொன்னாள். அவன் மனதுக்குள் "மிதுனை லவ் பண்றத பத்தி என் கிட்ட பேசி என்ன பயனோ?" என்று நினைத்தாலும் என்ன பதில் சொல்வதென்று தடுமாறியவன் "ஐ சி" என்றான்.
அவளும் " எனக்கு கல்யாணம் பத்தி நிறைய எக்ஸ்பெக்டேஷன் இருக்கு..மாப்பிள்ளை எப்படி ட்ரெஸ் பண்ணனும்னு நிறைய கனவு இருக்கு.." என்று சொல்ல அவனும் "இத நம்ம கிட்ட ஏன் பேசுறா?" என்று நினைத்தவன் "மிதுன் வந்திடுவான். அவன் கிட்ட சொல்லிடு" என்று சொல்ல அவளோ "நான் எதுக்கு அவன் கிட்ட சொல்லணும்" என்று கேட்ட அடுத்த கணமே அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்தான்.
அவளோ அவனை யோசனையாக பார்த்த கணம் போன் அலற, அதை எடுத்து நம்பரை பார்த்தவன் "வெய்ட் எ செகண்ட், அப்புறம் பேசலாம்" என்றபடி சென்று இருந்தான்.
இதே சமயம், அவர்களின் கல்யாண ஏற்பாடு விரைவு விரைவாக இருக்க அடுத்த வாரமே பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது... பெண் பார்க்கும் படலத்துக்கு முதல் நாள் அலுவலகத்துக்கு வந்த ஆதித்தை அவனது தனி அறைக்குள் தேடி வந்து இருந்தாள் நதீகா. அவனோ "ஷப்பா, இன்னைக்கு என்ன கனவெல்லாம் சொல்ல போறாளோ?" என்று நினைக்க அவன் முன்னே ஒரு பையை வைத்தவள் "உங்களுக்கு தான் " என்று சொல்ல அதை எடுத்து பிரித்துப் பார்த்தவனோ அதிர்ந்து நின்றான்.
அதில் மெரூன் நிற ஷேர்ட் இருக்க, அவளை யோசனையாக நிமிர்ந்து பார்க்க அவளோ "நான் மெரூன் புடவை எடுத்து வச்சு இருக்கேன். நீங்களும் பொண்ணு பார்க்க வரும் போது மெரூன் ஷேர்ட் போட்டு வாங்க" என்று சொல்ல அவனோ வெளிப்படையாகவே "மாப்பிளை பொண்ணு ஒரே கலர்ல போட்டா நியாயம் இருக்கு,... ஆனா மாப்பிளையோட அண்ணாவும் பொண்ணும் ஒரே போல ட்ரெஸ் பண்ணுனா கண்றாவியா இருக்குமே" என்று சொல்ல அவள் தலையிலோ குண்டு விழுந்த உணர்வு. அவனை அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்க்க அப்போது தான் உள்ளே வந்த மிதுன் ஆதித்தின் கையில் இருந்த ஷேர்ட்டை பார்த்து "இது என்ன புதுசா இருக்கே,,எனக்கா? " என்று நதீகாவை ஏக்கமாக பார்த்தபடி கேட்டான். .
நதீகாவோ உணர்வுகளை கட்டுப்படுத்த படாத பாடு பட்டவள் விறு விறுவென வெளியேற அவள் முதுகை யோசனையுடன் பார்த்தவன் மிதுனிடம் "உனக்கு தான் வாங்கி இருக்கான்னு நினைக்கேன் ,,வெட்கப்பட்டு போறா போல" என்று சொல்ல அவனும் வெட்கபட்டுக் கொண்டே அந்த ஷேர்ட்டை வாங்கிச் சென்றான். ஆதித்தோ மனதுக்குள் "ஏதோ புது மாப்பிள்ளை போல பில்ட் அப் பண்ணுறான் ..இவ எத்தனையாவது பொண்ணோ?" என்று நினைக்க தனது அறைக்குள் வந்த நதீகாவுக்கு நிலை கொள்ள முடியவில்லை.. ஆதித் விளையாடுகிறானோ என்று கூட யோசித்தவள் பாண்டியனுக்கு அழைத்து மேலோட்டமாக கல்யாணத்தை பற்றி பேசுனாள். அவர் பேச்சின் மூலம் அவள் மணக்க இருப்பது மிதுன் என்று அறிந்ததுமே போனை கட் பண்ணியவள் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
கண் மூடி சிறிது நேரம் யோசித்தவள் அடுத்த கணமே, நேரே போனது என்னவோ ஆதித்தின் அறைக்குள் தான். ஆதித்தோ அவளை யோசனையாக பார்க்க அவன் முன்னே வந்தவள் "கொஞ்சம் பேசணும்" என்று சொன்னாள் , அவனும் "என்ன விஷயம்?" என்று கேட்க அவன் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தவள் "எனக்கு சுத்தி வளச்சு பேச தெரில., நீங்க மாப்பிள்ளைன்னு நினச்சு தான் ஓகே பண்ணுனேன்" என்று சொல்ல அவனோ விழிகள் விரிய அவளை அதிர்ந்து பார்த்தவன் அடுத்த கணமே இருக்கையை தள்ளி விட்டு தனது முழு ஆறடி உயரத்துக்கும் எழுந்து நின்று "என்ன உளர்ற ?" என்று கேட்டான். அவளும் எழுந்து அவன் அருகே நின்றவள் "நிஜமா தான் சொல்றேன்., ஐ லவ் யூ ஆதித்..ஏன் எப்படின்னு கேட்க வேணாம். எனக்கும் தெரில. அன்னைக்கு என்ன காப்பத்துல இருந்து உங்க நினைப்பு தான்" என்று சொன்னவள் கொஞ்சம் சங்கடத்துடன் தலையை மற்ற பக்க திருப்பிக் கொண்டாள் . அவனுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. " நான் உன்ன புத்திசாலின்னு நினச்சேன் நதி, உன்ன ஜஸ்ட் காப்பாத்துனதுக்காக எல்லாம் லவ் வருமா? இட்ஸ் வியர்ட்" என்று சொல்ல அவளோ " நீங்க தான் என்ன கிஸ் பண்ணினது பெர்ஸ்ட்" என்று சொல்ல அவனும் "வாட்?" என்று கொஞ்சம் சத்தமாக கேட்டான். அடுத்த கணமே மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்தியவன் "அதுக்கு பேர் முதலுதவி" என்று சொல்ல, அவளோ "வாட் எவர்?" என்று தோளை உலுக்கியவள் "எனக்கு அதெல்லாம் தெரியாது, ஐ லவ் யூ, நாளைக்கு அந்த ஷேர்ட்டை போட்டு நீங்க வரணும், என்னை பொண்ணு பார்க்கணும்..உங்க அம்மாவை சமாளிக்க வேண்டியது உங்க பொறுப்பு" என்று சொல்ல அவனோ அவளை வெறித்து பார்த்தவன் "வாட் தே " என்று ஆரம்பித்து சற்று நிறுத்தியவன் தலையை கோதிக் கொண்டான். பெருமூச்செடுத்தவன் மனமோ "இவளை பெரிய டெர்ரர் ஆஹ் கற்பனை பண்ணி வச்சிருந்தேன்.. இவ இவ்ளோ சைலடிஷ் ஆஹ் இருக்காளே" என்று நினைத்தவன் அங்கிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
அவனும் அவள் பேச்சை கவனிக்காமல் அடுத்த நாள் பெண் பார்க்க ஆயத்தமாகி போக, மிதுனோ அவள் கொடுத்த ஷேர்ட்டை அணிந்து இருந்த அதே கணம் ஆதித் நீல நிற முட்டி வரை மடிக்கப்பட்ட ஷேர்ட் அணிந்து கம்பீரமாக உள்ளே நுழைந்தான். அவனை தனது அறையில் இருந்து பார்த்தவளுக்கு ஆத்திரம் எல்லை இல்லாமல் வர, கஷ்டப்பட்டு உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாள் அவள். ஆதித்தோ பேசிக் கொண்டு இருந்த நடுவில் "பேலஸ் போல வீடு இருக்கு.. சுத்தி பார்த்துட்டு வரவா?" என்று பாண்டியனிடம் கேட்க அவரும் பெருமையாக தலை ஆட்டினார்..
அவனும் எழுந்து நடந்து கீழ் பாகத்தை பார்த்து விட்டு மேலே ஏறிய கணம், அவள் மேல் அறையில் இருந்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்த நதீகா, கூட இருந்த பெண்களை கீழே போக சொல்லி விட்டு அவள் மட்டுமே தனித்து இருந்தாள்.. ஆதித்தும் இதை எல்லாம் அறியாமல் மேல பார்த்துக் கொண்டே வர, நதீகாவோ அறையை திறந்து கொண்டு வெளியே வந்து நின்றவள் மெரூன் நிற சேலையில் தேவதையாக தான் இருந்தாள். வழமையாக அவளை மேற்கத்தேய உடையில் பார்த்து சலித்த ஆதித்தே அவளை ஒரு கணம் ரசனையாக பார்த்து விட்டு பார்வையை மாற்றிக் கொண்டவன் போக ஆயத்தமாக அவளோ அவனை மறித்தபடி வந்து நின்றவள் "நான் தந்த ஷேர்ட் எங்க?" என்று கேட்டாள். அவனோ "நீ சொல்றது எல்லாம் செட் ஆகாது" என்றபடி அவளை தாண்டி செல்ல முற்பட ஆதித்தின் ஷேர்ட் காலரை ஒற்றை கையால் பற்றி அறைக்குள் இழுத்தவள் கதவை தாளிட அவனோ " ஏய் என்ன பண்ற " என்று சீறினான்.. அவளும் அவனை போக விடாமல் கதவில் சாய்ந்து நின்றவள் " உன் கூட பேசணும் ஆதித் " என்க அவனோ " லூசா நீ யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க..முதலில வெளிய விடு என்னை " என்று சீறினான் .. அதற்கேல்லாம் அடங்குபவளா அவள் ?? " யார் என்ன நினைத்தாலும் கவலை இல்ல... எனக்கு நீ வேணும் " என்க அவனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் " மேடம் உங்களுக்கு என் தம்பி கூட கல்யாணம்னு மறந்திடுச்சா .? " என்று நாக்கலாக கேட்டான். அவளோ " என் கிட்ட ஒரு வார்த்தை கேட்காம கல்யாணம் பிக்ஸ் பண்ணுவாங்க...நான் பண்ணிக்கணுமா? எல்லாத்துக்கும் நீ தாண்டா காரணம்.. " என்று சொல்ல அவனோ " நான் காரணமா?? என்ன விளையாடுறியா?எல்லார் முன்னாடியும் தானே சம்மதம் கேட்டாங்க " என்று கேட்டான். அவளோ " அதெல்லாம் தெரியாது . எனக்கு நீ வேணும் அவ்ளோ தான்.. நீன்னு நினச்சு தான் ஓகே பண்ணினேன் " என்று சொல்ல தலையை கோதிக்கொண்டே " ஹையோ.. ஏதோ கடையில ஐஸ்க்ரீம் கேட்கிற போல கேட்கிறியே ..நீ என் தம்பி பொண்டாட்டி " என்று சொல்ல வந்தவன் முடிக்கவில்லை அவன் ஷேர்ட்டை பிடித்து தன்னை நோக்கி இழுத்து ஒற்றை விரலை எச்சரிப்பது போல நீட்டியவள் " இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனா கொன்னுடுவேன் " என்றாள். அவனோ மூச்சு காற்று படும் தூரத்தில் நின்றதால் " இங்க பாரு நதீகா. ரொம்ப கிளோஸப் ல நிக்கிற .. உன்னோட முகத்தை பார்க்க பயந்து வருது... கொஞ்சம் தள்ளி நில்லு. எல்லாத்துக்கும் மேல கல்யாணம் ஆகப்போற பொண்ணு இப்படி நடத்துகிறது தப்பு " என்று சொன்னபடி இருவருக்கும் இடையான நூலளவு இடைவெளியை காட்டி சொன்னான்.
அவளோ " இதென்ன தப்பு இதுக்கு மேலயும் பண்ணுவேன் பார்க்கிறியா? " என்று கேட்டபடி அவனை தன்னை நோக்கி இழுக்க அவனோ அவள் மேனியில் மொத்தமாக கண நேரம் உரசியவன் அடுத்த கணமே இரு கைகளையும் அவள் பக்க வாட்டு கதவில் ஊன்றி சற்றே இடைவெளி விட்டு நின்றவன் தனது கைகளுக்கு நடுவே ஷேர்ட் காலரை பிடித்தபடி நின்றவளை அழுத்தமாக பார்த்து " ஷேர்ட் ல இருந்து கையை எடு நதீகா " என்றான். அவளோ இல்லை என்று தலையாட்டியவள் " முடியாது ஆதித்.. ஐ லவ் யூ.. நீ தான் எனக்கு புருஷன் அண்டர்ஸ்டாண்ட் " என்று கேட்க அவனோ " தாலி நான் தானே கட்டணும்..அதெப்படி நீ டிசைட் பண்ணுவ?? இப்போவும் சொல்றேன் இதெல்லாம் விட்டிட்டு மிதுன கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ பாரு..நான் எல்லாம் உனக்கு செட் ஆகவே மாட்டேண்டி .. புரிஞ்சுக்கோ .. " என்று சற்று நிதானமகவே பேசினான். அவள் ஆக்ரோஷத்தை அடக்க அவனுக்கும் வேறு வழி தெரியவில்லை... வேறு விடயம் ஆனால் ரெண்டு அறை விட்டு இருப்பான். காதல் விடயம் என்பதால் அதனை பூ போல கையாள வேண்டிய கட்டாயம் அவனுக்கு.. அத்துடன் தன்னை உருகி உருகி காதலிப்பவளை காயப்படுத்தவும் அவன் மனம் விரும்பவில்லை.
அவளுக்கோ அவன் உதாசீனம் ரணமாக வலிக்க " எனக்கு என்னடா குறை? " என்று அவன் ஷேர்ட் காலரை உலுக்கியபடி கேட்டவள் கண்ணில் இருந்து இரு சொட்டு கண்ணீர் உருண்டு விழுந்தது.. அவனோ " பச் இப்போ எதுக்கு அழுகை? " என்று கேட்ட போதே அவள் கண்ணீர் ஆச்சரியமாக தான் அவனுக்கு இருந்தது..எதற்கும் களங்காதவள் அவனுக்காக அழுகிறாள் அல்லவா?
பெருமூச்சுடன் " இங்க பாரு..உனக்கு ஒரு குறையும்.இல்ல.. நான் நிற்கிறது கத்தி மேல... கொஞ்சம் அசைஞ்சா கூட என்னையே அந்த கத்தி பதம் பார்த்திடும்.. உனக்கு அதெல்லாம் புரியாது .. சொன்னா கேளு...உனக்காக நான் மிதுன் விஷயத்துல பல மாற்றம் கூட பண்ண யோசிச்சேன்... உன்னோட வாழ்க்கை அண்ட் மிதுனோட வாழ்க்கைல நான் குறுக்க வரவே மாட்டேன்.. " என்று சொல்ல அவனை புரியாமல் பார்த்தவள் " அதெல்லாம் தெரியாது எனக்கு நீ வேணும் " என்றாள் .. அவன் பொறுமையோ காற்றில் பறக்க " லூசாடி நீ?? திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு இருக்க.. எனக்கு தான் லவ் வரலன்னு சொல்றேன்ல .. " என்று சீற " பொய் சொல்ற ஆதித்.. உன் கண்ணில காதல் தெரியுது " என்றாள் .. அவனோ " மண்ணாங்கட்டி .. தள்ளுடி .. " என்று சொல்ல இல்லை என்றவள் அவன் முகத்தை பார்த்தவாறே பெருவிரலில் எம்ப அவனோ அவளை விசித்திரமாக பார்த்தபடி " என்ன பண்ண போற? " என்று மென் குரலில் கேட்டான். அவளோ பதில் சொல்லாமல் மேலும் நெருங்க அவன் தலையை பின்னால் கொண்டு சென்ற கணமே அவன் எதிர்பார்க்காமல் அவனது சிகைக்குள் ஒற்றை கையை கோர்த்து தன்னை நோக்கி இழுக்க அவன் முரட்டு இதழ்கள் அவளது மென் இதழ்களில் அழுந்த பதிந்தன.. அவன் விழிகளோ அதிர்ச்சியில் விரிய அவன் இதழ் ஸ்பரிசம் தீண்டியதில் பாவையவளின் கண்களோ தாமாக மூடிக் கொண்டன. அவனோ அதிர்ச்சியுடன் தனது இதழை அவள் இதழில் இருந்து பிரித்து எடுத்தவன் "என்ன பண்ற?" என்று ஆக்ரோஷமாக சீறினான். அவளோ அவன் கோபத்தை கொஞ்சமும் மதிக்காது " செம ஹாண்ட் சம் ஆஹ் இருக்க" என்று சொல்ல "நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசுற?" என்று கண்கள் சிவக்க சீறியவன் "போடி" என்று விலக முற்பட, அவளை அவனை இழுத்து அணைத்துக் கொள்ள அவனும் "விடுடி, " என்று சீறியபடி அவளை விலக்க முற்பட்டுக் கொண்டு இருந்தான்.
மீட்டிங்கை முடித்து விட்டு வெளியே வந்த மிதுன் காரில் ஏறி சென்று விட, பின்னால் வந்த ஆதித்தை "ஸ்ஸ்" என்று அழைத்தாள் நதீகா.. அவனோ அவளை நோக்கி சென்று மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி மேலிருந்து கீழ் பார்த்தவன் "கங்கிராட்ஸ்" என்று சொன்னான். அவளும் மெல்லிய சிரிப்புடன் "கொஞ்சம் தனியா பேசலாமா?" என்று கேட்க அவனோ புருவ முடிச்சுடன் "கோ எஹெட் " என்று சொன்னான். அவள் நடந்து சென்றது என்னவோ அவள் விழுந்த நீச்சல் தடாகத்துக்கு அருகே தான். அவளை பின் தொடர்ந்தவன் முதலில் பார்த்தது அவள் கால்களை தான். அவளோ தட்டையான செருப்பு அணிந்து இருக்க மெல்லிய புன்னகையுடன் பின் தொடர்ந்தவன் அங்கே பாக்கெட்டில் கையை போட்டபடி நீரை பார்த்துக் கொண்டு நின்றான். அவள் அருகே வந்து நின்ற நதீகா, "நான் நினைக்கவே இல்ல" என்று சொல்ல அவனோ "என்ன நினைக்கல?" என்று கேட்டான்.
அவளும் "இப்படி பிளேசன்ட் சர்ப்ரைஸ் ஆஹ் கல்யாணம் பிக்ஸ் ஆகும்னு நினைக்கவே இல்ல. நானே இத பத்தி உங்க கிட்ட பேச நினச்சேன்" என்று சொன்னாள். அவன் மனதுக்குள் "மிதுனை லவ் பண்றத பத்தி என் கிட்ட பேசி என்ன பயனோ?" என்று நினைத்தாலும் என்ன பதில் சொல்வதென்று தடுமாறியவன் "ஐ சி" என்றான்.
அவளும் " எனக்கு கல்யாணம் பத்தி நிறைய எக்ஸ்பெக்டேஷன் இருக்கு..மாப்பிள்ளை எப்படி ட்ரெஸ் பண்ணனும்னு நிறைய கனவு இருக்கு.." என்று சொல்ல அவனும் "இத நம்ம கிட்ட ஏன் பேசுறா?" என்று நினைத்தவன் "மிதுன் வந்திடுவான். அவன் கிட்ட சொல்லிடு" என்று சொல்ல அவளோ "நான் எதுக்கு அவன் கிட்ட சொல்லணும்" என்று கேட்ட அடுத்த கணமே அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்தான்.
அவளோ அவனை யோசனையாக பார்த்த கணம் போன் அலற, அதை எடுத்து நம்பரை பார்த்தவன் "வெய்ட் எ செகண்ட், அப்புறம் பேசலாம்" என்றபடி சென்று இருந்தான்.
இதே சமயம், அவர்களின் கல்யாண ஏற்பாடு விரைவு விரைவாக இருக்க அடுத்த வாரமே பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது... பெண் பார்க்கும் படலத்துக்கு முதல் நாள் அலுவலகத்துக்கு வந்த ஆதித்தை அவனது தனி அறைக்குள் தேடி வந்து இருந்தாள் நதீகா. அவனோ "ஷப்பா, இன்னைக்கு என்ன கனவெல்லாம் சொல்ல போறாளோ?" என்று நினைக்க அவன் முன்னே ஒரு பையை வைத்தவள் "உங்களுக்கு தான் " என்று சொல்ல அதை எடுத்து பிரித்துப் பார்த்தவனோ அதிர்ந்து நின்றான்.
அதில் மெரூன் நிற ஷேர்ட் இருக்க, அவளை யோசனையாக நிமிர்ந்து பார்க்க அவளோ "நான் மெரூன் புடவை எடுத்து வச்சு இருக்கேன். நீங்களும் பொண்ணு பார்க்க வரும் போது மெரூன் ஷேர்ட் போட்டு வாங்க" என்று சொல்ல அவனோ வெளிப்படையாகவே "மாப்பிளை பொண்ணு ஒரே கலர்ல போட்டா நியாயம் இருக்கு,... ஆனா மாப்பிளையோட அண்ணாவும் பொண்ணும் ஒரே போல ட்ரெஸ் பண்ணுனா கண்றாவியா இருக்குமே" என்று சொல்ல அவள் தலையிலோ குண்டு விழுந்த உணர்வு. அவனை அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்க்க அப்போது தான் உள்ளே வந்த மிதுன் ஆதித்தின் கையில் இருந்த ஷேர்ட்டை பார்த்து "இது என்ன புதுசா இருக்கே,,எனக்கா? " என்று நதீகாவை ஏக்கமாக பார்த்தபடி கேட்டான். .
நதீகாவோ உணர்வுகளை கட்டுப்படுத்த படாத பாடு பட்டவள் விறு விறுவென வெளியேற அவள் முதுகை யோசனையுடன் பார்த்தவன் மிதுனிடம் "உனக்கு தான் வாங்கி இருக்கான்னு நினைக்கேன் ,,வெட்கப்பட்டு போறா போல" என்று சொல்ல அவனும் வெட்கபட்டுக் கொண்டே அந்த ஷேர்ட்டை வாங்கிச் சென்றான். ஆதித்தோ மனதுக்குள் "ஏதோ புது மாப்பிள்ளை போல பில்ட் அப் பண்ணுறான் ..இவ எத்தனையாவது பொண்ணோ?" என்று நினைக்க தனது அறைக்குள் வந்த நதீகாவுக்கு நிலை கொள்ள முடியவில்லை.. ஆதித் விளையாடுகிறானோ என்று கூட யோசித்தவள் பாண்டியனுக்கு அழைத்து மேலோட்டமாக கல்யாணத்தை பற்றி பேசுனாள். அவர் பேச்சின் மூலம் அவள் மணக்க இருப்பது மிதுன் என்று அறிந்ததுமே போனை கட் பண்ணியவள் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
கண் மூடி சிறிது நேரம் யோசித்தவள் அடுத்த கணமே, நேரே போனது என்னவோ ஆதித்தின் அறைக்குள் தான். ஆதித்தோ அவளை யோசனையாக பார்க்க அவன் முன்னே வந்தவள் "கொஞ்சம் பேசணும்" என்று சொன்னாள் , அவனும் "என்ன விஷயம்?" என்று கேட்க அவன் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தவள் "எனக்கு சுத்தி வளச்சு பேச தெரில., நீங்க மாப்பிள்ளைன்னு நினச்சு தான் ஓகே பண்ணுனேன்" என்று சொல்ல அவனோ விழிகள் விரிய அவளை அதிர்ந்து பார்த்தவன் அடுத்த கணமே இருக்கையை தள்ளி விட்டு தனது முழு ஆறடி உயரத்துக்கும் எழுந்து நின்று "என்ன உளர்ற ?" என்று கேட்டான். அவளும் எழுந்து அவன் அருகே நின்றவள் "நிஜமா தான் சொல்றேன்., ஐ லவ் யூ ஆதித்..ஏன் எப்படின்னு கேட்க வேணாம். எனக்கும் தெரில. அன்னைக்கு என்ன காப்பத்துல இருந்து உங்க நினைப்பு தான்" என்று சொன்னவள் கொஞ்சம் சங்கடத்துடன் தலையை மற்ற பக்க திருப்பிக் கொண்டாள் . அவனுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. " நான் உன்ன புத்திசாலின்னு நினச்சேன் நதி, உன்ன ஜஸ்ட் காப்பாத்துனதுக்காக எல்லாம் லவ் வருமா? இட்ஸ் வியர்ட்" என்று சொல்ல அவளோ " நீங்க தான் என்ன கிஸ் பண்ணினது பெர்ஸ்ட்" என்று சொல்ல அவனும் "வாட்?" என்று கொஞ்சம் சத்தமாக கேட்டான். அடுத்த கணமே மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்தியவன் "அதுக்கு பேர் முதலுதவி" என்று சொல்ல, அவளோ "வாட் எவர்?" என்று தோளை உலுக்கியவள் "எனக்கு அதெல்லாம் தெரியாது, ஐ லவ் யூ, நாளைக்கு அந்த ஷேர்ட்டை போட்டு நீங்க வரணும், என்னை பொண்ணு பார்க்கணும்..உங்க அம்மாவை சமாளிக்க வேண்டியது உங்க பொறுப்பு" என்று சொல்ல அவனோ அவளை வெறித்து பார்த்தவன் "வாட் தே " என்று ஆரம்பித்து சற்று நிறுத்தியவன் தலையை கோதிக் கொண்டான். பெருமூச்செடுத்தவன் மனமோ "இவளை பெரிய டெர்ரர் ஆஹ் கற்பனை பண்ணி வச்சிருந்தேன்.. இவ இவ்ளோ சைலடிஷ் ஆஹ் இருக்காளே" என்று நினைத்தவன் அங்கிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
அவனும் அவள் பேச்சை கவனிக்காமல் அடுத்த நாள் பெண் பார்க்க ஆயத்தமாகி போக, மிதுனோ அவள் கொடுத்த ஷேர்ட்டை அணிந்து இருந்த அதே கணம் ஆதித் நீல நிற முட்டி வரை மடிக்கப்பட்ட ஷேர்ட் அணிந்து கம்பீரமாக உள்ளே நுழைந்தான். அவனை தனது அறையில் இருந்து பார்த்தவளுக்கு ஆத்திரம் எல்லை இல்லாமல் வர, கஷ்டப்பட்டு உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாள் அவள். ஆதித்தோ பேசிக் கொண்டு இருந்த நடுவில் "பேலஸ் போல வீடு இருக்கு.. சுத்தி பார்த்துட்டு வரவா?" என்று பாண்டியனிடம் கேட்க அவரும் பெருமையாக தலை ஆட்டினார்..
அவனும் எழுந்து நடந்து கீழ் பாகத்தை பார்த்து விட்டு மேலே ஏறிய கணம், அவள் மேல் அறையில் இருந்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்த நதீகா, கூட இருந்த பெண்களை கீழே போக சொல்லி விட்டு அவள் மட்டுமே தனித்து இருந்தாள்.. ஆதித்தும் இதை எல்லாம் அறியாமல் மேல பார்த்துக் கொண்டே வர, நதீகாவோ அறையை திறந்து கொண்டு வெளியே வந்து நின்றவள் மெரூன் நிற சேலையில் தேவதையாக தான் இருந்தாள். வழமையாக அவளை மேற்கத்தேய உடையில் பார்த்து சலித்த ஆதித்தே அவளை ஒரு கணம் ரசனையாக பார்த்து விட்டு பார்வையை மாற்றிக் கொண்டவன் போக ஆயத்தமாக அவளோ அவனை மறித்தபடி வந்து நின்றவள் "நான் தந்த ஷேர்ட் எங்க?" என்று கேட்டாள். அவனோ "நீ சொல்றது எல்லாம் செட் ஆகாது" என்றபடி அவளை தாண்டி செல்ல முற்பட ஆதித்தின் ஷேர்ட் காலரை ஒற்றை கையால் பற்றி அறைக்குள் இழுத்தவள் கதவை தாளிட அவனோ " ஏய் என்ன பண்ற " என்று சீறினான்.. அவளும் அவனை போக விடாமல் கதவில் சாய்ந்து நின்றவள் " உன் கூட பேசணும் ஆதித் " என்க அவனோ " லூசா நீ யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க..முதலில வெளிய விடு என்னை " என்று சீறினான் .. அதற்கேல்லாம் அடங்குபவளா அவள் ?? " யார் என்ன நினைத்தாலும் கவலை இல்ல... எனக்கு நீ வேணும் " என்க அவனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் " மேடம் உங்களுக்கு என் தம்பி கூட கல்யாணம்னு மறந்திடுச்சா .? " என்று நாக்கலாக கேட்டான். அவளோ " என் கிட்ட ஒரு வார்த்தை கேட்காம கல்யாணம் பிக்ஸ் பண்ணுவாங்க...நான் பண்ணிக்கணுமா? எல்லாத்துக்கும் நீ தாண்டா காரணம்.. " என்று சொல்ல அவனோ " நான் காரணமா?? என்ன விளையாடுறியா?எல்லார் முன்னாடியும் தானே சம்மதம் கேட்டாங்க " என்று கேட்டான். அவளோ " அதெல்லாம் தெரியாது . எனக்கு நீ வேணும் அவ்ளோ தான்.. நீன்னு நினச்சு தான் ஓகே பண்ணினேன் " என்று சொல்ல தலையை கோதிக்கொண்டே " ஹையோ.. ஏதோ கடையில ஐஸ்க்ரீம் கேட்கிற போல கேட்கிறியே ..நீ என் தம்பி பொண்டாட்டி " என்று சொல்ல வந்தவன் முடிக்கவில்லை அவன் ஷேர்ட்டை பிடித்து தன்னை நோக்கி இழுத்து ஒற்றை விரலை எச்சரிப்பது போல நீட்டியவள் " இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனா கொன்னுடுவேன் " என்றாள். அவனோ மூச்சு காற்று படும் தூரத்தில் நின்றதால் " இங்க பாரு நதீகா. ரொம்ப கிளோஸப் ல நிக்கிற .. உன்னோட முகத்தை பார்க்க பயந்து வருது... கொஞ்சம் தள்ளி நில்லு. எல்லாத்துக்கும் மேல கல்யாணம் ஆகப்போற பொண்ணு இப்படி நடத்துகிறது தப்பு " என்று சொன்னபடி இருவருக்கும் இடையான நூலளவு இடைவெளியை காட்டி சொன்னான்.
அவளோ " இதென்ன தப்பு இதுக்கு மேலயும் பண்ணுவேன் பார்க்கிறியா? " என்று கேட்டபடி அவனை தன்னை நோக்கி இழுக்க அவனோ அவள் மேனியில் மொத்தமாக கண நேரம் உரசியவன் அடுத்த கணமே இரு கைகளையும் அவள் பக்க வாட்டு கதவில் ஊன்றி சற்றே இடைவெளி விட்டு நின்றவன் தனது கைகளுக்கு நடுவே ஷேர்ட் காலரை பிடித்தபடி நின்றவளை அழுத்தமாக பார்த்து " ஷேர்ட் ல இருந்து கையை எடு நதீகா " என்றான். அவளோ இல்லை என்று தலையாட்டியவள் " முடியாது ஆதித்.. ஐ லவ் யூ.. நீ தான் எனக்கு புருஷன் அண்டர்ஸ்டாண்ட் " என்று கேட்க அவனோ " தாலி நான் தானே கட்டணும்..அதெப்படி நீ டிசைட் பண்ணுவ?? இப்போவும் சொல்றேன் இதெல்லாம் விட்டிட்டு மிதுன கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ பாரு..நான் எல்லாம் உனக்கு செட் ஆகவே மாட்டேண்டி .. புரிஞ்சுக்கோ .. " என்று சற்று நிதானமகவே பேசினான். அவள் ஆக்ரோஷத்தை அடக்க அவனுக்கும் வேறு வழி தெரியவில்லை... வேறு விடயம் ஆனால் ரெண்டு அறை விட்டு இருப்பான். காதல் விடயம் என்பதால் அதனை பூ போல கையாள வேண்டிய கட்டாயம் அவனுக்கு.. அத்துடன் தன்னை உருகி உருகி காதலிப்பவளை காயப்படுத்தவும் அவன் மனம் விரும்பவில்லை.
அவளுக்கோ அவன் உதாசீனம் ரணமாக வலிக்க " எனக்கு என்னடா குறை? " என்று அவன் ஷேர்ட் காலரை உலுக்கியபடி கேட்டவள் கண்ணில் இருந்து இரு சொட்டு கண்ணீர் உருண்டு விழுந்தது.. அவனோ " பச் இப்போ எதுக்கு அழுகை? " என்று கேட்ட போதே அவள் கண்ணீர் ஆச்சரியமாக தான் அவனுக்கு இருந்தது..எதற்கும் களங்காதவள் அவனுக்காக அழுகிறாள் அல்லவா?
பெருமூச்சுடன் " இங்க பாரு..உனக்கு ஒரு குறையும்.இல்ல.. நான் நிற்கிறது கத்தி மேல... கொஞ்சம் அசைஞ்சா கூட என்னையே அந்த கத்தி பதம் பார்த்திடும்.. உனக்கு அதெல்லாம் புரியாது .. சொன்னா கேளு...உனக்காக நான் மிதுன் விஷயத்துல பல மாற்றம் கூட பண்ண யோசிச்சேன்... உன்னோட வாழ்க்கை அண்ட் மிதுனோட வாழ்க்கைல நான் குறுக்க வரவே மாட்டேன்.. " என்று சொல்ல அவனை புரியாமல் பார்த்தவள் " அதெல்லாம் தெரியாது எனக்கு நீ வேணும் " என்றாள் .. அவன் பொறுமையோ காற்றில் பறக்க " லூசாடி நீ?? திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு இருக்க.. எனக்கு தான் லவ் வரலன்னு சொல்றேன்ல .. " என்று சீற " பொய் சொல்ற ஆதித்.. உன் கண்ணில காதல் தெரியுது " என்றாள் .. அவனோ " மண்ணாங்கட்டி .. தள்ளுடி .. " என்று சொல்ல இல்லை என்றவள் அவன் முகத்தை பார்த்தவாறே பெருவிரலில் எம்ப அவனோ அவளை விசித்திரமாக பார்த்தபடி " என்ன பண்ண போற? " என்று மென் குரலில் கேட்டான். அவளோ பதில் சொல்லாமல் மேலும் நெருங்க அவன் தலையை பின்னால் கொண்டு சென்ற கணமே அவன் எதிர்பார்க்காமல் அவனது சிகைக்குள் ஒற்றை கையை கோர்த்து தன்னை நோக்கி இழுக்க அவன் முரட்டு இதழ்கள் அவளது மென் இதழ்களில் அழுந்த பதிந்தன.. அவன் விழிகளோ அதிர்ச்சியில் விரிய அவன் இதழ் ஸ்பரிசம் தீண்டியதில் பாவையவளின் கண்களோ தாமாக மூடிக் கொண்டன. அவனோ அதிர்ச்சியுடன் தனது இதழை அவள் இதழில் இருந்து பிரித்து எடுத்தவன் "என்ன பண்ற?" என்று ஆக்ரோஷமாக சீறினான். அவளோ அவன் கோபத்தை கொஞ்சமும் மதிக்காது " செம ஹாண்ட் சம் ஆஹ் இருக்க" என்று சொல்ல "நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசுற?" என்று கண்கள் சிவக்க சீறியவன் "போடி" என்று விலக முற்பட, அவளை அவனை இழுத்து அணைத்துக் கொள்ள அவனும் "விடுடி, " என்று சீறியபடி அவளை விலக்க முற்பட்டுக் கொண்டு இருந்தான்.