ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 17

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 17

கார்கோடன் தான் எல்லாரையும் அழைத்துக் கொண்டே வந்தான்.

திவ்யனோ, "எல்லாரையும் விட்டுட்டு என் கூட ரிதன்யாவை அனுப்பிடு" என்று சொல்ல, அவனும், "ம்ம், தேங்க்ஸ் டா, நீ இல்லன்னா இதெல்லாம் சான்ஸே இல்ல" என்று சொல்ல, திவ்யனின் விழிகள் அங்கே வெளிய பார்த்துக் கொண்டே, யோசனையுடன் அமர்ந்து இருந்த முல்லையில் படிந்து மீள, "தட்ஸ் ஃபைன் டா" என்று சொல்லிக் கொண்டான்.

ஒரு வழியாக ஊருக்கு வந்து சேர்ந்து விட்டார்கள்...

முல்லையை முதலில் வீட்டில் விட்ட பின்னர், ராவந்த் மற்றும் மாதுரியையும் வீட்டில் விட்ட பின்னர், ரிதன்யாவை தேடி சென்றார்கள்...

அஸ்வந்த்தும் ரிதன்யாவை அழைத்துக் கொண்டே குடோன் வாசலில் நின்று இருக்க, கார்கோடனின் வண்டியும் அங்கே வந்தது...

கார்கோடன் இறங்கியதுமே, "அண்ணா" என்றபடி அவள் அவனை நோக்கி செல்ல, "ஏதோ கொடுமை படுத்தின போல ஆக்ட் கொடுக்கிற, ஜாலியா எல்லார் கூடவும் பேசிட்டு தானே இருந்த" என்று அஸ்வந்த் கேட்க, அவளோ, "ஆனாலும் அடைச்சு வச்ச தானே" என்றபடி கார்க்கோடனை அணைத்துக் கொள்ள, அவன் விழிகள் அஸ்வந்த்தில் படிய, "ஃப்ரீயா விடு கார், நம்ம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு ல" என்று சொன்னான் திவ்யன் கண் சிமிட்டி...

அதனை தொடர்ந்து ரிதன்யாவிடம், "இங்க பாரு, உன்னை காப்பாத்துனது தான், உன் அண்ணாவை கட்டி பிடிக்கிற?" என்று ரிதன்யாவிடம் கேட்க, அவளோ அவனை அதிர்ந்து பார்க்க, கார்கோடனும் அவனை அதிர்ந்து பார்த்தான்.

"கார்கோடன், உன் தங்கச்சியை எனக்கு பிடிக்கும், கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்" என்று போட்டுடைக்க, கார்கோடனோ, "அமர் சாருக்கு தெரிஞ்சா பிரச்சனை" என்றான்.

திவ்யனோ, "எதுவும் வராம நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்ல, ரிதன்யாவோ, "இல்ல எனக்கு முடியாது" என்று ஆரம்பிக்க, அவள் கையை எட்டி பற்றியவன், "தனியா வாடி பேசலாம்" என்று சொல்லிக் கொண்டே இழுத்து சென்றான்.

கார்கோடனுக்கு தடுக்கவும் முடியவில்லை...

அனுப்பவும் இஷ்டம் இல்லை...

சற்று தள்ளி அழைத்து வந்தவன், "உனக்காக என்ன எல்லாம் பண்ணி இருக்கேன் தெரியுமா?" என்று கேட்டவன் எல்லாமே சொல்ல, அவள் வாயில் அதிர்ந்து கையை வைத்தாள்.

"இது என்ன வில்லன் வேலை?" என்று கேட்க, "அவ்ளோ பிடிக்கும் டி உன்ன, உனக்காக உள்ளே பாவம் எல்லாம் பண்ணி இருக்கேன், அமர் இல்லன்னு சொல்ல வாய்ப்பே இல்லை... ப்ளீஸ்" என்று கெஞ்சினான்.

"ரொம்ப படுத்துறீங்க திவ்யன் நீங்க" என்றான்.

"ஹேய் என் கிட்ட இல்லாதது அந்த ராவந்த் கிட்ட என்ன இருக்கு?" என்று கேட்டான்.

அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள், "இதெல்லாம் எப்படி தெரியும்?" என்று கேட்டாள்.

"எப்படியோ தெரியும் டி, என்னை கட்டிக்கோ, உன்னை நல்லாவே பார்த்துப்பேன், நீ விரும்புறவனை விட, உன்னை விரும்புறவன கல்யாணம் பண்ணு" என்று சொல்ல, அவளோ சலிப்பாக, "அமர் சார் ஓகே சொன்னா பார்த்துக்கலாம்" என்று மட்டும் சொல்லிக் கொண்டாள்.

அவளை அழைத்துக் கொண்டே அவர்கள் மாளிகைக்கும் கிளம்பி விட்டார்கள்...

இதே சமயம், "அத்தை உங்க கையால சாப்பிட்டு எவ்ளோ நாள் தெரியுமா? நாக்கே செத்து போச்சு" என்றபடி மாதுரி சாப்பிட, "அடிப்பாவி, அங்கே ஒரு நேரத்துக்கு ஐம்பது டிஷ் போடுவாங்களே, சாப்பாடே போடாதே போல பேசுற" என்று ராவந்த் சிரித்தபடி கேட்க, "அத்தை சமைக்கிற போல வருமா?" என்று கேட்டாள் அவள்...

"நான் தானே உனக்கு அம்மா" என்று பார்வதி இடையில் கேட்க, "அதனால் தானே திரும்பி வந்தேன்" என்றாள் அவள்...

வடிவேலின் முகத்தில் இப்போது ஒரு திருப்தியான புன்னகை...

அஸ்வந்த்தோ, "இந்த கலவரத்துல நம்மள மறந்துட்டாங்க" என்று ஜீவிதாவிடம் சொல்ல, "மறக்கல டா, ஹெல்ப் பண்ணுனதால விட்டு வச்சு இருக்கேன்" என்றான் ராவந்த்.

ஜீவிதா இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டே, "தேங்க்ஸ் மாமா" என்று சொல்ல, ரவாந்த்தும் மென் சிரிப்புடன் சாப்பிட்டான்.

அன்று இரவு மாதுரி ராவந்த்தின் மார்பில் தான் படுத்து இருந்தாள்.

"இப்ப தான் டி மூச்சே வந்த போல இருக்கு" என்று அவன் சொல்ல, அவளும், "இவ்ளோ சீக்கிரம் விடுவாருன்னு நான் நம்பவே இல்ல" என்றாள்.

"எனக்கும் அதான் ஷாக், ஆனா அதுக்குள்ள ஏதோ ஒன்னு இருக்கும்னு தோணுது" என்று சொல்லிக் கொண்டான்.

இதே சமயம், அமரேந்திரன் முன்னே நின்று இருந்தான் திவ்யன்.

ரிதன்யா சம்பந்தமான விஷயத்தையும் சொல்லி விட்டான்.

அவனை பார்த்துக் கொண்டே எழுந்த திவ்யனோ, "சோ அதுக்காக தான் எனக்கு மாத்திரை கொடுத்தியா?" என்று கேட்க, திவ்யனுக்கு குப்பென்று வியர்த்தது.

"ஐயோ மச்சான், அது" என்று ஆரம்பிக்க, "கண்டு பிடிக்க முடியாதுன்னு நினைச்சியா? நான் பண்ணுன ஒரே தப்பு, உன் மேல அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வச்சது" என்று சொல்லிக் கொண்டே அருகே நடந்து வந்தான்.

"மச்சான் தப்பு தான், ரியலி சாரி" என்றான் சற்று பதட்டமாக...

"சாரியா? அவ்ளோ ஈஸியா சொல்லிட்டே, நீ கெடுத்தது ரெண்டு பேரோட வாழ்க்கையை..." என்று சொன்னவன் நெற்றியை நீவிக் கொண்டே, "உன் இடத்துல வேற யாரும் இருந்தா, இந்நேரத்துக்கு கொன்னிருப்பேன், கூடப் பழகுன பாவத்துக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன், இந்த இடத்துல உன்னையும் உன் பொண்டாட்டியையும் நான் பார்க்க கூடாது புரியுதா?" என்று கேட்க, "ம்ம்" என்றான்.

அமரேந்திரனுக்கு ஆத்திரம் தான்...

திவ்யனை அடித்து என்ன தான் செய்து விட முடியும்? நடந்ததை மாற்ற முடியுமா என்ன?

கல்யாணத்தை செய்து கொடுத்து விட்டு, மொத்தமாக விலகிக் கொள்ளும் மனம் தான்.

முதல் இருந்த அந்த தெனாவட்டு கோபம் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை...

சின்ன வயதில் இருந்த கட்டிக் காத்த அந்த இறுமாப்பு மொத்தமாக உடைந்து விட்டத்தில், மனதளவில் ஒரு வெறுமை அவனுக்கு...

திவ்யன் மற்றும் ரிதன்யா திருமண விஷயத்தைக் கேட்டு மணிமேகலை முரண்பட்டார்.

"உங்க பையன் ஆசைப்படுறான், நான் என்ன பண்ணட்டும்?" என்று அமரேந்திரன் கேட்டான்...

மிக எளிமையாக தான் ரிதன்யா மற்றும் திவ்யனின் திருமணம் நடந்தது...

அவனும் ரிதன்யாவுடன் அங்கிருந்து கிளம்பி இருக்க, "இங்கேயே இருக்கலாமே" என்ற கேள்வி வந்தது...

"இல்ல தனியா இருக்க ஆசைப்படுறோம்" என்றான் திவ்யன்...

இப்படியே ஒரு மாதம் கடந்து இருக்கும், வேலை விட்டு வந்த மாதுரியிடம், "ஹேய், உனக்கு படிக்க அப்ளிகேஷன் போட்டிருக்கேன், இனி வேலைக்கு போக தேவையில்லை, படி" என்றான் ராவந்த்.

அவள் நெகிழ்ந்து, அவனை இறுக அணைத்துக் கொண்டவளோ, "உங்களுக்கும் ப்ரோமோஷன் தான்" என்றாள்.

"என்னடி சொல்ற?" என்று கேட்டுக் கொண்டே, அவளை தன்னுயரத்துக்கு தூக்க, அவன் விழிகளை பார்த்தவள், "அப்பாவாக போறீங்க" என்று கண் சிமிட்டி சொன்னாள்.

"அதானே, போட்ட எஃபேர்ட் வேஸ்ட் ஆகுமா என்ன?" என்று கேட்டபடி அவள் இதழ்களை கவ்வி இருந்தான்.

இப்படியே மூன்று மாதங்கள் கடந்து இருக்கும், மாதுரியும் ஜீவிதாவும் கர்ப்பமாக இருந்தார்கள் என்றால், ஹாஸ்பிடலில் டாக்டர் சொல்வதை அதிர்ந்து கேட்டுக் கொண்டே அமர்ந்து இருந்தாள் முல்லை...

ஆம் கர்ப்பமாக இருக்கின்றாள்...

ராவந்த் அவள் தாய் வைக்கப்பட்டு இருந்த காப்பகத்தில் வேலை எடுத்துக் கொடுத்து இருக்க, அங்கே தான் வேலை செய்து கொண்டு இருந்தாள்.

அதனால் மாதவிடாய் தள்ளி போனதெல்லாம் அவள் கணக்கில் எடுக்கவே இல்லை...

நிறைய மாதங்கள் ஆகி விட தான், வைத்தியரிடம் வந்தாள்.

அவள் கர்ப்பம் என்று அவர் உறுதி செய்து விட்டார்...

நெஞ்சே அடைத்து விட்டது...

என்ன செய்வாள் அவள்? குழந்தையை கலைக்கும் மனநிலையும் இல்லை, அதற்கான பணமும் அவளிடம் இல்லை...

இளகிய மனம் அவளுக்கு...

அவளுக்கென்று திருமணம் வாழ்க்கை எல்லாம் கானல் நீர் தான்.

இந்த குழந்தையை பெற்று வளர்த்தால் என்ன? என்று தான் தோன்றியது...

"சரி டாக்டர்" என்று சொல்லிக் கொண்டே, காப்பகத்தை நோக்கி நடந்தாள்.

மனம் எல்லாம் அப்படி ஒரு அழுத்தம்...

"அப்பா யார்?" என்று கேட்டால் என்ன சொல்வது என்று தடுமாற்றம்...

காப்பகத்தில் வந்தவள், படுக்கையில் படுத்து இருந்த தாய்க்கு முத்தமிட்டு விட்டு, ராவந்த்துக்கு ஒரு கடிதம் எழுதினாள்.

"சார், அம்மாவை கொஞ்சம் பார்த்துக்கோங்க, ஒரு வருஷம் கழிச்சு வர்றேன்" என்று எழுதி வைத்து விட்டு, கிளம்பி விட்டாள்.

அடிக்கடி ராவந்த் வந்து பார்த்து விட்டு செல்வான்.

அதனால் அவனிடம் இந்த கடிதத்தை கொடுக்க சொல்லி விட்டு சென்று இருக்க, அவனுக்கு பேரதிர்ச்சி...

வீட்டுக்கு வந்து மாதுரியிடம் சொன்னான்.

"என்ன பிரச்சனைன்னு சொல்லி இருக்கலாமே, நம்மளால முடியும்னா தீர்த்து இருப்போம்ல" என்று மாதுரிக்கும் ஆதங்கம்...

இப்படியே நாட்களும் நகர, மாதுரி மற்றும் ஜீவிதாவுக்கு ஒன்றாக சீமந்தமும் நடந்து குழந்தையும் பிறந்து விட்டது...

ஜீவிதாவுக்கு ஆண் குழந்தை, வைஷ்ணவ்.

மாதுரிக்கு பெண் குழந்தை, வைஷ்ணவி...

என்ன தான் அமரேந்திரன் அமைதியாக இருந்தாலும், அவன் முல்லையை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

அவள் காப்பகத்தை விட்டு சென்றதும் தெரியும்...

வீடு ஒன்றில் கர்ப்பமாக இருந்து வேலை செய்ததும் தெரியும்...

இப்போது குழந்தை பிறந்ததும் தெரியும்...

அலைபேசியில் வந்த செய்தி கேட்டு இன்னுமே தடுமாற்றத்தில் தான் இருந்தான் அமரேந்திரன்.

அழுத்தத்துடன் நெற்றியை வருடிக் கொண்டான்.

குழந்தை பிறந்து விட்டதாமே அவளுக்கு... அதுவும் முதுகில் அவர்களது வம்சத்து கிரீட மச்சத்துடன் பிறந்து இருக்கின்றதாம்.

தன்னை சுற்றி இருப்பவர்கள் கூட வேறு இணையர்களிடம் சென்று விட கூடாது என்று இருப்பவன் அவன்.

இப்போது அவனே என்ன செய்து வைத்து இருக்கின்றான்.

இதனை மெல்லவும் முடியாது. வெளியே சொல்லவும் முடியாது.

இந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று அவளிடம் சொல்லி இருந்தான். அவள் மூச்சு கூட விடவில்லை. ஆனால் குழந்தையின் மச்சத்தை மறைக்க முடியுமா என்ன?

அவ்விடம் வந்த தங்க விழியோ அமரேந்திரனிடம், "பொன்னிலாவுக்கு பையன் பிறந்து இருக்கான், இங்க கொஞ்ச நாள் வந்து தங்க சொல்லலாமா?" என்று கேட்க, அவனும், "சொல்லுங்க, வந்தா பார்த்துக்கலாம்" என்று சொல்லிக் கொண்டான்.

"ஆஹ் அப்புறம் அமர் உன்னோட கல்யாணத்த எப்போ வைக்கலாம்னு சம்பந்தி கேக்கிறாங்க" என்றார்.

அவன் முடிவு தான் அங்கே முடிவு...

"ஒரு ஆறு மாசம் கழிச்சு" என்று சொன்னவன் இப்போது நினைத்தாலும் திருமணத்தை நிறுத்தி விடலாம்.

ஆம் அவனுக்கு அவர்கள் பக்கத்தில் இருந்தே பெண் ஒருத்தியை பேசி இருக்கின்றார்கள்...

திருமணத்துக்கு சம்மதமும் சொல்லி விட்டான்...

அவன் மனம் முல்லையின் கருவில் இருக்கும் குழந்தையை பற்றி யோசித்துக் கொண்டே இருந்தது...

அதில் இருந்து வெளியே வர திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்து தான் திருமணத்துக்கு சம்மதித்தான்.

பெண்ணுடைய பேர், "நீலிமா".

கடமைக்கு பெண் பார்த்து, பேசி விட்டு வந்தவனிடம் தான் குழந்தை பிறந்த விஷயம் வந்து சேர்ந்து இருந்தது...

அதனை பற்றி தான் தடுமாற்றத்தில் இருக்கின்றான்.

அவன் தான் கீழிறங்கி வந்தே பழக்கம் இல்லாதவன் ஆயிற்றே. அதுவும் ஒரு நேர உணவுக்கு வழி இல்லாதவள் அவன் மனைவியா??

கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஒரு நாள் தவறுக்காக வாழ்க்கை முழுவதும் அவளை சுமக்க அவன் தயார் இல்லை.

இத்தனை நாள் அவன் பேசிய பேச்சுக்களுக்கு இதனை வெளியே சொன்னாலே கைகொட்டி சிரிப்பார்களே.

ஆனாலும் அவன் குழந்தை என்று நினைக்கும் போது உள்ளுக்குள் தோன்றிய அழுத்தத்தை தவிர்க்கவே முடியவில்லை...

அவன் நிலை இப்படி என்றால் முல்லையோ குழந்தையை வெறித்து பார்த்தபடி ஹாஸ்பிடலில் அமர்ந்து இருந்தாள்.

முதுகில் அவனுக்கு இருந்த அதே மச்சம்.

மூச்செடுக்க முடியவில்லை...

அவனை பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும்.

அவளை பற்றி விஷயம் வெளியே கசிந்து விடவே கூடாது என்று இருப்பவன்.

இந்த மச்சத்தை பார்த்து குழந்தையை ஏதும் பண்ணி விடுவானோ என்று எல்லாம் எண்ணங்கள் தாறு மாறாக ஓடியது...

அவள் அறிந்த வகையில் அவன் ஈவு இரக்கம் இல்லாத திமிர் பிடித்த ராட்சஷன் தானே.

ஆனாலும் குழந்தைக்கு பங்கம் விளைவிக்கும் அளவுக்கு அவன் கெட்டவன் இல்லை என்று அவளுக்கு தெரியாது.

அவனுக்குள்ளும் ஈரம் இருக்கிறது , நெகிழ்வு இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் தங்க கவசம் போட்டு மூடி வைத்து இருக்கின்றான்.

அவன் கவசத்தை உருக்க அனல் தான் வேண்டும் என்று இல்லை. இந்த முல்லைக் கொடி கூட இடுக்கில் படர்ந்து அவன் கவசம் தாண்டி ஊடுருவ முடியும் என்று பெண்ணவள் அக்கணம் அறியவில்லை.

அவ்விடம் வந்த தாதியோ, "நீங்க கிளம்பலாம்" என்று சொல்ல, அவளும் குழந்தையை தூக்கிக் கொண்டே எழுந்து கொண்டாள்.

எங்கே செல்வது என்றும் தெரியவில்லை...

வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு வீட்டு வேலை செய்து விட்டாள்.

கையில் குழந்தையை வைத்துக் கொண்டு எங்க செல்வது?

யோசனையுடன் அவள் நடந்த சமயம், அங்கே பொருட்களை வாங்கிக் கொண்டே ராவந்த் மற்றும் அஸ்வந்த் வந்தார்கள்.

அஸ்வந்த்தோ, "டேய் அது முல்லை தானே" என்று சற்று தள்ளி குழந்தையுடன் நடந்து சென்றவளை, "ஆமாடா அவ தான், குழந்தை பிறந்து இருக்கா? எப்படி?" என்று கேட்க, "நீ தானே அவளுக்கு புருஷனா நடிச்ச?" என்றான் அஸ்வந்த்.

"அடி செருப்பால, அவ எனக்கு தங்கச்சி மாதிரி, குடும்பத்துக்குள்ள குழப்பம் பண்ணாம போடா, என்னன்னு கேட்டுட்டு வர்றேன்" என்றவன், முல்லை முன்னே அவளை மறித்தபடி நின்று கொண்டே, "குழந்தை பிறந்திடுச்சா?" என்று கேட்டான்.

அவனை ஏறிட்டு பார்த்தவளுக்கு கண்கள் கீழே விழுந்து விடும் அளவுக்கு விரிந்து கொண்டன.
 
Top