ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 14- பூ மஞ்சம் தருவாயோ

Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP14
RJ Virsaly அவர்களின் எழுத்தில்
"பூ மஞ்சம் தருவாயோ.."
ஒரு கூட்டு குடும்ப கதை.
வீட்டின் கடைக்குட்டி ஆன அர்ஜுன் இந்த கதையின் நாயகன். நன்றாக படித்து ப்ரொபசர் ஆக இருக்கும் இவனுக்கு கொஞ்சம் திமிரு அதிகம் தான். படித்தவர்கள் மட்டுமே புத்திசாலிகளாக இருப்பார்கள் அவர்களுக்கு மட்டுமே சமயோசிதமாக சிந்திக்க தெரியும் என்ற நினைப்பு இவனுக்கு. அதனாலேயே வீட்டில் யார் பேச்சையும் கேட்காமல் தனக்கு என்ன தோன்றுதோ அதை மட்டுமே செய்து வருபவன். கொஞ்சம் இல்லை நிறையவே திமிர் இவனுக்கு 😡 தனக்கு மனைவியாக வருபவள் இந்த இந்த குவாலிபிகேஷன் உள்ளவளாக இருக்க வேண்டும் என நினைப்பவனுக்கு அதற்கேற்றார் போல் மணமகள் அமைய திருமணத்தன்று அந்த மணமகள் காதலனுடன் வெறியறிவிட திடீர் மனைவியாகிறாள் யாழினி. கிராமத்து பெண்ணாக இருக்கும் அவளை பிடிக்கவில்லை இவனுக்கு
இவன் திருமணம் நின்றதால் தங்களுக்கும் திருமணம் வேண்டாம் என மறுக்கும் அண்ணன்களை சமாளிப்பதற்காகவே தன் அப்பத்தாவின் வற்புறுத்தலால் யாழினியை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான். அவளுடன் வாழ்வதில்லை என்ற முடிவுடன். இவன் முடிவு என்ன ஆனது படிக்காதவள் என நினைக்கும் மனைவியின் கல்வி நிலை என்ன பிரிந்து விட வேண்டும் என நினைக்கும் பெண் அவளை பிரிய முடியாமல் தவிக்கும் நிலை இவனுக்கு ஏற்படுமா என்பது கதையில்.
யாழினி.. அன்னையின் சொல்லுக்கு இணங்க அர்ஜுனை மணமுடித்துக் கொள்கிறாள். முதல் நாளே தன்னோடு வாழ விருப்பமில்லை என்ற கணவனின் பேச்சு அவளுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் நாட்கள் செல்ல செல்ல அவனை விரும்ப ஆரம்பித்து விடுகிறாள். தன் மனதில் உள்ளவற்றை அவனிடம் சொல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க அனைத்தும் சரியாகும் நிலையில் பெரும் புயல் அடிக்கிறது இவர்களின் வாழ்வில். அனைத்தையும் சரி செய்து இவர்கள் வாழ்வை வளமாக்கி கொண்டார்களா என்பது கதையில்.
மூன்று அண்ணன்களுடன் அர்ஜுன் கொண்டிருக்கும் பாசமும் அவர்கள் மூவரின் அன்பும் அருமை 🥰
அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருப்பது பெரிதல்ல அவர்களை மணமுடித்துக் கொண்ட பெண்களும் ஒற்றுமையாக இருப்பது சிறப்பு 🥰 ஒருவருக்கொருவர் கிண்டல் கேலி செய்து கொண்டு உடன்பிறவா சகோதரிகளாக அவர்கள் வாழ்வது அவ்வளவு அருமை 🥰
கல்யாணி ரேவதி சுகந்தி யாழினி இவர்களின் பாண்டிங் மிக அழகு 🥰❤️
ஆதவன் ராகவன் கர்ணன் அர்ஜுன் இவர்களின் பாசமும் அழகு 🥰
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
Thank you so much 💕
 
பூ மஞ்சம் தருவாயோ
In a deeply bonded joint family, four brothers Aadhavan, Raghavan, Karnan, and அர்ஜுன் and their sister Kasthuri live with immense love for one another. A grand triple wedding is arranged for Raghavan, Karnan, and Arjun. However, on the wedding day, Arjun’s bride, Dharani, elopes with her lover.
To save the family's honor, யாழினி (the sister of another bride, Suganthi) marries Arjun. Arjun, who considers himself a "super-intellectual," looks down on Yazhini. He assumes she is uneducated and unrefined, and as a result, he emotionally distances himself and refuses to live with her
The story explores whether Arjun and Yazhini overcome obstacles and misunderstandings to be together. It’s a heartfelt tale of family bonds, love, and second chances, with emotions and relationships at its core
❤️✨
Thank you so much 💕
 
பூ மஞ்சம் தருவாயா

கூட்டு குடும்பம் கதை..

நான்கு. ஜோடிகளின் காதலும் வாழ்வியலும்..

ஒரே மேடைல கல்யாணம் பண்ணலாம்னு இருந்தப்ப அர்ஜூனுக்கு பார்த்த பொண்ணு ஓடி போக.. வேறு ஒருவள் அர்ஜூனுக்கு மனைவியாகிறாள்.

ஆதவன் கல்யாணி - குடும்பத்துக்கு மூத்தவங்களா ஒருத்தரை ஒருத்தர் அனுசரிச்சு போறதும்...இவங்க. காதலும் அருமை.

ராகவன் - ரேவதி. - இவங்க காதல் முரட்டு காதல்ங்க.. ராகவன் மனைவி கிட்ட அடி வாங்கி வாங்கி தன்னை திருத்திக்கிட்டான் போல😂😂🤣😂🤣

கர்ணன் - சுகந்தி மென்மையான காதல்... எதார்த்தத்தை ஏத்துக்கறவன்..

அர்ஜூன் - யாழினி - இவங்கள என்ன சொல்ல.? கிராமத்துல இருந்தா படிக்காதவங்க பண்பாடு தெரியாதவங்கனு எவன்டா இவன் கிட்ட சொன்னது.? சுத்த பைத்தியக்கார பையலா இருக்கான் அவன்.. நம்ம யாழு ஐஏஎஸ் படிக்கிற பொண்ணு டா..அவளை போய்.. அய்யோ அய்யோ..

கடைசில காதல் வர்றப்ப ஐஏஎஸ்ல பாஸ் பண்ணி நம்ம யாழு டிரெய்னிங் கிளம்பிறா.. உனக்கு தேவை தான் டா இது..


அடிக்கடி இடைல வந்த தாரணி.. கஸ்தூரி கேரக்டர் எல்லாம் அவுட் ஆஃப் கொஸ்டீன் னு நான் விட்டுட்டேன்..

மொத்தத்துல நல்ல கூட்டு குடும்ப கதை..

போட்டியில் வெற்றி பெற
வாழ்த்துக்கள் சிஸ்டர்..
அருமையான விமர்சனம் 💕
ரொம்ப ரொம்ப நன்றிகள் 💕
 
விர்சாலியின் பூ மஞ்சள் தருவாயோ


நாயகன் - அர்ஜீன்

நாயகி- யாழினி


தனக்கு பிறகு தன் மகனுக்கோ மகளுக்கோ கடைசி வரை மனதாலும் உடலாலும் உறுதுணையாக உற்றதுணையாக இருக்க ,செய்து வைப்பது தான் திருமணம்.

ஆனால் திருமணங்கள் அவ்வாறா நடக்கிறது, கேள்விகுறிதான்…

சிலது மட்டுமே விதிவிலக்கு…


அப்படி ஒரு திருமணம் தான் நம் நாயகிக்கு, நயகனுக்காவது இன்று நமக்கு திருமணம் என்று தெரியும், ஆனால் நாயகி, வேடிக்கை பார்க்க வந்த இடத்தில் விழா நாயகியானாள்.


விருப்பாமில்லா இல்லா திருமணத்தில்,பெரியவர்களின்‌

வற்புறுத்தலுக்காகவும்,அண்ணன்களின் திருமணம் நிற்க கூடாது என திருமணத்திற்கு சம்மதிக்கிறான்.


போனால் போகிறது என வாழ்க்கையளிக்க, இவன் வர,

ம்கூம் இவனது விருப்பமின்மையை அறியாதவளானாலும்,அவள் விருப்பின்மை காரணமாக சொல்லாமல் கொள்ளாமல் ஆள் எஸ்கேப்…

இதனை அறிந்து இவனை விட்டால் இவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க இயலாது என அங்கே விழாவிற்கு வந்தவளை மேடையற்றுகின்றனர்.


தந்தையில்லா தாயின் கஷ்டங்களுக்கு நடுவில் வளர்க்கப்பட்டதால் ,அவரது சொல்லுக்கு கட்டுபட்டு திருமணத்திற்கு சம்மதிக்கிறாள்.



அந்தோ ,ஏற்கனவே கிழக்கே என்றால் மேற்கே என்று நிற்கும்‌அவன்,திடிர் மணமகளான மனைவியை, எப்படி நடத்துவான்…


அவன் தான் அவனை தவிற வேறு யாருக்கும் அறிவில்லை என நினைக்கும் அறிவாளியாயிற்றே…

தள்ளி நிறபதோடு அல்லாமல் தூரமாய்‌ விலகி செல்கிறான்…


விளைவு அவளை பற்றி அ…னா கூட அறிந்திருக்கவில்லை என்பதைவிட முற்படவில்லை.


திடிர் திருமணம்,அவளை கொஞ்சம் அச்சுறுத்த,அவனது செயல்கள் ஆரம்பத்தில் ஆசுவாசம் கொடுக்க,போக போக அதுவே ஏக்கத்தையும் ,கவலையும் கொடுக்கிறது.

ஆயிரம் உறவுகள் அரவணக்கலாம்,பெற்றோர்களோ அவளு(னு)க்கான முதல் முழு உறவாய் கைகாட்டுவது அவர்களுக்கானவர்களை தானே..


ஆனால் நடைமுறையில் இருக்கிறாதா????




அதே வீட்டில் மற்றைய தம்பதியர் மகிழ்வாய் வலம், மனகலக்கத்தோடு உலா வந்தாலும்,மனதின் ஏக்கத்தை மறைத்து நடமாட ,முடியுமா என்ன???


அறிவுரைகள் ஆயிரம் கூறலாம்,ஆனால் அவரவர் தோன்றி வாழ்ந்தால் வாழ்க்கையில் வசந்தம்,நடிக்க முற்பட்டு வெடித்து சிதறியது மட்டுமே மிச்சம்.

ஒருஜோடி புரிதலான காதல்

ஒரு ஜோடி இரகளையான காதல்

ஒரு ஜோடி சாத்வீக காதல்


இந்த அர்ஜீன எதில சேக்கறதுனு நீங்களே முடிவு பண்ணிக்கங்க..

அர்ஜீனின் மனம் மாறியதன் காரணம் என்ன???

மாறிய பின்பும் மாற்றத்தை மறைத்த காரணம் தான் என்ன???

அறிவாளி அர்ஜீன் அச்சோ பாவம் என பார்க்க,அவன் பாவமாக போன கதையை அறிய

வாசித்திடுங்கள்


பூ மஞ்சள் தருவாயோ…

இரசனையான கொட்டு,அழகான குடும்ப பிணைப்பு

வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💖 💖 💖 💖
 
Top