விதியை மாற்றிடும் திருத்தங்கள் விமர்சனம்
இது ஒரு ஃபேண்டஸி கதை
நாயகன் சங்கர் காட்டு இலாகா அதிகாரி..மூன்று மாதங்களுக்கு முன் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் மண்சரிவு ஏற்பட்டு பொதிகை மலையில் உள்ள முகை என்ற கிராமமே நிலச்சரிவால் பாதிப்படைந்தது..அதை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறான் சங்கர்..அங்கு யூட்யூப்க்காக வீடியோ எடுக்க வரும் நாயகி சிவானி ஆபத்தில் சிக்கிக்கொள்ள அவளை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறான் சங்கர்.. ஆனால் சிவானி வந்த நோக்கமோ வேறு..தன் தாயை காப்பாற்ற சித்தரை தேடிச் செல்லும் சிவானிக்கு முக்காலத்தில் நடக்கும் மூன்று தவறுகளையும் சரிசெய்தால் அவள் தாய் காப்பாற்றப்படுவார் என்பதால் மலைக்கு செல்கிறாள் சிவானி..மலைக்கு செல்லும் சிவானியை சந்தேகித்து அவளோடு மலையில் இருக்கும் குகைக்கு செல்லும் சங்கரும் விதி வசத்தால் இவளுடன் சேர்ந்து முக்காலமும் பயணிக்கிறான்..முக்காலத்தில் நடந்த தவறுகளை இவர்கள் எப்படி சரி செய்தார்கள்? விடை கதையை வாசித்து தெரிஞ்சுக்கலாம் .!!
முக்காலம் அறிவீர் !
முக்காலம் பயணிப்பீர்
ஆனால் முந்தைய காலம் செல்வீரோ !
என்பதற்கு இணங்க
முதலில் பாண்டிய மன்னன் காலத்திற்கு செல்கின்றனர்...
அங்கு அவர்களின் செந்தமிழ் பேச்சு , அவர்கள் நாட்டின்மீது படையெடுக்க உதவி செய்ய மாலிக்காபூர் தளபதியை முத்து பாண்டியன் சந்திக்க நினைக்கிறான் ..அந்த தவறை செய்ய விடாம சங்கர் திருத்தி அமைத்தது நல்லா இருந்தது படிக்க ..சிவானியை காப்பாற்ற அவன் செஞ்ச ஹீரோயிசம்லாம் அடிதூள்..லாஸ்ட்டா அவளை செயற்கை நீருற்று பைப் வழியாக கூட்டி வந்து வெளிவர்ரதுலாம் பேண்டஸி மாதிரி இருந்தது..

இரண்டாவதாக பிரிட்டிஷ் ஆட்சிகாலத்திற்கு போறாங்க ..அங்க ரௌலட் சட்டத்தின்போது ஆயிரக்கணக்கான மக்களை கொண்ணதை மாத்துறாங்க..அதுக்கு பதிலா பிரிட்டிஷ் மாளிகையை கொளுத்த அவன் செஞ்ச வேலை.அதுக்கு அவனுக்கு உதவி பண்ணவங்க, பிரிட்டிஷார்கிட்ட இருந்தும் நெருப்பு புகையிலிருந்தும் ஷிவானியை அவன் ரொம்ப அருமையா காப்பாத்திடுறான்



ரௌலட் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டதும்' வந்தே மாதரம்' என்ற முழக்கம் நாமே அதை செஞ்ச பீல் கொடுத்தது ப்பா



மூன்றாவதாக அந்த மண்சரிவின்போது தன்னால் காப்பாற்ற முடியவில்லைனு ரொம்ப வருத்தமா ஆதங்கமா இருக்கிற சங்கர் அந்த காலகட்டத்துக்குபோறாங்க ...அந்த மண்சரிவுக்கு காரணம் என்ன ? அதை செய்ய விடாமல் இவன் தடுத்த விதம் , முகை கிராமத்து மக்களை புரியவைத்து அவங்கள காலிபண்ணச் சொல்லி வேற பகுதிக்கு அழைத்து வந்துடுறான் .. ஆனால் மல்லியின் பேச்சைக் கேட்டு அவங்க மண்சரிவு ஏற்பட முன்ன போயிடுறாங்க..ஆனால் அங்கே அவன் தடுக்க முன்பு மக்கள் போயிடுவாங்க..அங்க உள்ள பையனை காப்பாற்ற போயி சங்கர் மாட்டிக்கிட்டான் , அவன் எப்படி அதை சரிசெஞ்சான்னு ஆசிரியர் அருமையா சொல்லி இருக்காங்க...
இடையிடையே சிவானிக்கு சங்கர் மேல் தோன்றும் காதலும் அதற்கு விடையளிக்காத சங்கர் இறுதியில் அவளை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்வதும் அருமை
மல்லி சங்கர் மேல் உள்ள கோபத்தால அவ சொன்ன பொய்யால சங்கர் உயிருக்கே ஆபத்தா போச்சு


இறந்த காலத்தில் பயணம் செய்த இவர்கள் தங்கள் சந்ததிகளுக்காக எதிர்காலத்தில் நடக்க இருப்பதை திருந்தி மாற்றியமைக்க போகிறார்கள் இதை ஆசிரியர் இது முடிவல்ல ஆரம்பமே என்று பயணத்தை முடிச்சிட்டாங்க...
நல்லா ஒரு ஃபேண்டஸி படம் பார்த்த மாதிரி இருத்ததுப்பா
ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!