ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 29- கங்குல்

#கங்குல்…..
#கௌரிஸ்ரிவ்யூ…..

மிஸ்டரி+சஸ்பென்ஸ்+ டுவிஸ்ட் & டர்ன்ஸ் ஓட கதை நல்லா இருந்தது ♥️♥️♥️♥️♥️

ஊரில், இருக்கும் கோவில்லா….அமாவாசை அன்னைக்கு யாரும் போக கூடாதுனும்…அப்படி போன அவங்க இறந்து போவாங்க அப்படிக்கறதும் அந்த ஊரில் இருக்கும் வழக்கம்…..

அதையும் மீறி போனவங்க யாரும் உயிரோட இல்ல…..

அந்த பெரிய குடும்பத்தில்…..மூணு பசங்க….ஒரு பொண்ணு…..

சக்தி, வைபவ் & விக்ரம்….அப்பறம் அனு…..

பெரிய குடும்பக்கரதில் அவங்களுக்கு தான் முதல் மரியாதை…..

அப்பறம் அவங்க குடும்பம் தான் வாள் ஒன்றை பொக்கிஷமா பாதுகாத்து வராங்க…..

பொக்கிஷம் அப்படினாலே…அதை அபகரிக்க கயவர்கள் இருப்பாங்க இல்ல….

இங்கேயும் இருக்காங்க…..ஆன அங்க தான் டுவிஸ்ட்….

அந்த ஊரிலே பிறந்து வளர்ந்தும் கூட வயதுக்கே உண்டான துடிப்பு கொண்ட சக்தி அப்படி என்ன அமாவாசை அன்னைக்கு நடக்கும்னு கோவிலுக்கு போக…..

அடுத்த இரண்டு நாட்களில் இறந்தும் போறான்….

தம்பி இறந்த துக்கம் தீர்வதற்குள்….சக்தியை பின் பற்றி வைபவுக்கு இறக்க…..

குடும்பம் மொத்தமும் சேர்ந்து போகுது…..

அப்ப தான் விக்ரம் மனைவி கௌசிக்கு கோவிலா இருக்கும் அகோரி அவங்களை ஊரை விட்டு போக சொன்னது ஞாபகம் வந்து விக்ரம் கிட்ட சொல்ல…..

அகோரி சொல்றது நடப்பதில்….அவரிடம் தான் தீர்வுனு அவரை விக்ரம் சந்திக்க…..

அகோரி சொன்ன விஷயங்கள் அவனை மேலும் குழப்ப தான் செய்து…..

அவரே ஒரு மர்ம மனிதனா தான் இருக்கார்…..

சக்தி & வைபவ் இறந்தது எப்படி????

அந்த பொக்கிஷத்தை அபகரிக்க முயன்றவர் யார்?????

அகோரியின் ரகசியம் என்ன??????

அந்த கோவிலில் நடக்கும் மர்மம் என்ன????

இது எல்லாம் கதையில்…..

குமரி கண்டம் வரை கொண்டு வந்துட்டு…..

அதுக்கு அப்பறம் என்னாச்சினு சொல்லி இருக்கலாம் ரைட்டர்….

ஏதோ அவசரமா முடிச்ச பீல்…..

கதை அடுத்து என்ன….ஏன் இப்படி…இப்படியுமா அப்படினு நகர்ந்த விதம்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

போட்டியில் வெற்
றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐
 
கங்குல்
பெரிய குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் சக்தி ,வைபவ், விக்ரம், அனு .. விக்ரம் மனைவி கௌசல்யா அவங்க ஊர்ல அமாவாசை அன்று முக்கியமான கோவில் பூட்டிடறாங்க அதுக்கான காரம் யாருக்கும் தெரியவில்லை கேட்டால் தீட்டு அப்படின்னு சொல்றாங்க...அதேபோல் அவங்க குடும்பத்தில் பழங்காலத்து வாள் ஒன்றை பாதுகாத்து விசேஷ நாட்களில் மட்டும் பூஜைக்கு கொண்டு வர்றாங்க பிள்ளைகளுக்கு அந்த வாள் மேல் எதிர்பாராத ஒரு ஈர்ப்பு..
இளம் கன்று பயமறியாது என்பதுக்கு இணங்க சக்தி அமாவாசை அன்று கோயிலுக்கு போறான் அங்கே அவன் காலில் ஒரு மார்க் இருக்கு வீட்டுக்கு வந்து இரண்டு நாளில் இறந்துடறான்..வைபவ் வரும் தம்பிக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள போய் அவனும் இறந்தடறான்.. இடையில் அகோரி ஒருவர் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆபத்து அது உங்களை விடாது என கூறுகிறார் அது அது என் எது என்று சொல்லாமலே ரைட்டர் மிரட்டி உள்ளார்...
வெளிநாட்டில் இருந்து அனு வர்றா அவளோட சின்ன வயசு ப்ரண்ட் இளமாறன் உதவியோட அண்ணண் விக்ரமும் அனுவும் சேர்ந்து கோவில் இரகசியங்களை கண்டுபிடிப்பதே கதைக்கரு....வாசுகி பாம்பு நோட் வரலாறு பற்றியும் அந்த பாம்புவோட கோயில் பொக்கிஷம் தாக்கப்படுவதை மும் த்ரில்லிங்கா சொல்லிருக்காங்க... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 ❤️ 🧡 🧡 🧡
 
கங்குல் விமர்சனம்

கதையோட தலைப்பே நல்ல வித்தியாசமா இருந்தது.. அது போலத்தான் கதையும் நல்ல மிஸ்டரி சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை..!!


ஊரின் பெரிய குடும்பம் சங்கரன். அவரின் குடும்பத்து பிள்ளைகள் விக்ரம், வைபவ், சக்தி மற்றும் அனு‌.விக்ரமின் மனைவி கௌசல்யா.அனு வெளிநாட்டில் படிக்கிற பொண்ணு..அவங்க ஊர்ல உள்ள கோவில்ல அமாவாசை அன்னிக்கு அந்த கோவிலை பூட்டிடுவாங்க யாரும் உள்ள போகக்கூடாது..அப்படி மீறி போனா அவங்க இறந்துதான் போவாங்க ..ஏன்னா அமாவாசை அன்று தான் அந்த கோயிலோட தீட்டு கழியும்ன்றது அந்த ஊரோட வழக்கம்.. இதுக்கு காரணம் என்ன அப்படின்றது அங்க யாருக்கும் தெரியாது..இவங்க குடும்பத்துகிட்ட வம்சவம்சமா வர்ர ஒரு பெரிய வாள் ஒன்னு இருக்கு ..அந்த வாளை பாதுகாத்து விசேச நாள்ல மட்டும் பூஜை பண்ணுறாங்க..அந்த வாள்மேல அந்த வீட்டு பசங்களுக்கு ஒரு க்ரேஸ்.. இதற்கிடையில் அகோரி வேறு அந்த குடும்பத்து ஆட்களுக்கு ஆபத்துன்னு எச்சரிக்கை பண்ணுறார் கௌசி கிட்ட..


பேய் பிசாசுனு அதை பற்றி ஆராய்ச்சி பண்ணுற சக்திக்கு அமாவாசை அன்னிக்கு அந்த கோவில்ல என்ன நடக்குது என்பதை கண்டுபிடிக்க ஆர்வத்தால அந்த கோவிலுக்குள்ள போறான் .ஆனால் கோவில்ல இருந்து வந்து அவன் இரண்டு நாள்ல இறந்து போயிடுறான்..இவனின் இழப்புல இருந்து மீள முன்னமே இவன் அண்ணண் வைபவ்வும் அதேமாதிரி இறந்து போயிடுறான்.. இவர்களுடைய இறப்பு எல்லாமே அகோரி முன்னமே எச்சரிக்கை பண்ணுற மாதிரி தெரியுது..இதனால் விக்ரம் இது எல்லாமே அகோரி சொன்ன போல இருக்குன்னு அவரை தேடிப்போய் இதற்கு தீர்வு அவருகிட்டயே கேட்க அவர் சொல்றது இவனுக்கு புரியாமல் குழப்பமாவே இருக்குது இதே சமயம் வெளிநாட்டில் இருந்து வர்ற அனு தன் அண்ணண்களோட மரணத்தில் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிக்க நினைக்கறா..அதுக்கு‌உதவியாய் இருக்கான் அவளின் நண்பன் மாறன் ..மாறனுடனும் விக்ரமுடனும் சேர்ந்து அந்த கோவில் ரகசியத்தை கண்டுபிடிக்க நினைக்கிறா ..இது ஒருபுறம் இருக்க அந்த பொக்கிஷத்தை திருட நினைக்குது ஒரு கூட்டம்..கடைசில அனு யார் அப்படின்னு விளக்குனதும் சூப்பர்
சக்தி வைபவ் மரணத்திற்கு காரணம் என்ன ? பொக்கிஷத்தை திருட நினைப்பவர் யார் ? கோவிலின் ரகசியம் என்ன ? விடை கதையை வாசித்து தெரிஞ்சுக்கலாம்...


ஆரம்பத்துல இருந்தே நல்ல விருவிருப்பா போயிட்டு இருக்கு..கதையோட‌நகர்வு ரொம்ப சூப்பரா இருந்தது...அகோரி சொல்றது இடையில் நடக்குற விசயங்கள் எல்லாமே செம்ம த்ரில்லிங்கா இருக்கு..ஆனா லாஸ்ட் ல வச்ச ட்விஸ்ட் எதிர்பார்க்காததுதான் ... அதற்கு இப்படி ஒரு ப்ளாஷ்பேக் எதிர்பார்க்கல..முடிவுல நான் எதிர்பார்த்தேன் இவதான் எல்லாத்துக்கும் காரணமா இருக்கும்னு..‌.என்ன முடிவுதான் இன்னும் கொஞ்சம் நல்லா இருந்துஇருக்கலாம்னு தோணிச்சு.‌சட்டுன்னு முடிச்ச போல பீல் ...

கதையில் வரும் வரலாறு எல்லாமே அருமை...!!

இடையிடையே சில சீன்ஸ்ல அது யாருன்னு புரிஞ்சுக்க கொஞ்சம் கன்ப்யூஸ் ஆ இருந்தது..அது போல அகோரிகிட்ட இடையில் வந்து பேசுற நாகம் மனித உருவம் எடுத்ததா வந்துச்சு அதை கொஞ்சம் விளக்கமாக சொல்லி இருக்கலாம் .கோவில்ல இறந்து போக காரணம் என்னன்றத இன்னும் கொஞ்ச தெளிவா விளக்கி சொல்லி இருக்கலாம்.. அனுவுக்காக மாறன் அந்த கேச அப்படியே முடிச்சிட்ட மாதிரி தெரிஞ்சது...வாசுகி பாம்பு பத்தி சொன்னிங்க இடையில பெரிய இராஜநாகம் வந்தது அது யாரை பயமுறுத்தியது இப்படி சின்ன சின்ன கன்ப்யூஸ் தான் மத்தபடி ஸ்டோரி நல்ல த்ரில்லிங்கா இருந்தது..


ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
 
கங்குல்

விக்ரம், வைபவ், சக்தி, அனு இவங்க 4 பேரும் அண்ணன் தங்கச்சிங்க...
இவங்க கிட்ட ஒரு பரம்பரை வாள் இருக்கு. வருஷத்துல ஒரு முறை மட்டும் கோவில் திருவிழாக்கு வெளிய எடுத்து உள்ள வைச்சுடுவாங்க. அவங்க ஊரு கோவில் மாசத்துல ஒரு மட்டும் தீட்டு நாள்னு கோவிலை மூடி வைக்கிறாங்க.

அப்போ யாரும் அங்க போக கூடாது மீறி போனா யாரும் திரும்பி வர மாட்டாங்கனு ஊரு நம்புது. சக்தி அப்படி எல்லாரும் சொல்றதை மீறி அப்படி என்ன தான் நடக்குதுனு பார்க்கலாம்னு கோவில்க்கு நைட் போறான்.

ஆனால் காலையில் அடிபட்டு அவனை தூக்கிட்டு வராங்க. 2 நாள் வீட்ல இருக்கான் திடீர்னு இறந்து போயிடுறான். அவன் இறந்து 2வது நாள் வைபவ்வும் இறந்து போயிடுறான்.

இவங்க குடும்பத்துக்கு ஏதோ நடக்க போகுதுனு அகோரி ஒருத்தர் அடிக்கடி அவங்கள எச்சரிக்கை பண்ணிட்டே இருக்காரு. விக்ரம் அவனோட பிரண்ட் மாறன் இது எல்லாம் எப்படி நடக்குதுனு அங்க என்ன மர்மம் இருக்குதுனு சக்தி வைபவ் சாவுக்கு யாரு காரணம்னு சொல்லும் கதை.

விக்ரம், மாறன் 2 பேரும் இது எல்லாம் யாரு பண்றாங்கனு அருமையா கண்டு பிடிக்கிறாங்க. விக்ரம்க்கு எதுவும் ஆகிடுமோனு திகிலோடவே படிச்சேன்.

ஆனால் கடைசியில் அந்த சிகப்பு சட்டை காரன் இந்த ஆளுனு யோசிக்கவே இல்ல.

அகோரி ஏன் பாம்பு சடலத்தை பத்திர படுத்துறாரு. சக்தி, வைபவ்வை ஏன் கொலை பண்ணாங்கனு தெளிவா சொல்லி இருக்கலாம்.

கதை ஸ்டார்ட்டிங்ல இருந்து ரொம்பவே சுவாரஸ்யமா விறு விறுப்பா கொண்டு போனீங்க ஆனால் கடைசியில் முடிவு ஏதோ முழுமை அடையாத பீல். நிறைய கேள்விக்கு விடை இல்லாம முடிச்ச மாதிரி ஒரு பீல்.

ஸ்டோரி படிக்க நல்லா திகிலோட இருந்துச்சு.

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top