ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 1- வாக்கப்பட்டு வந்த வாசமலரே

pommu

Administrator
Staff member
வாக்கப்பட்டு வந்த வாசமலரே கதைக்கான உங்கள் விமர்சனங்களை இங்கே பதிவு செய்யுங்கள்...
 

shafnasri

Active member
#வாக்கப்பட்டுவந்த_வாசமலரே_விமர்சனம்

இயல்பான மற்றும் அழகான காதல் கதை❤

பெண்ப்பார்க்கும் படலத்தில் ஆரம்பிக்கும் கதை திருமண வாழ்க்கையின் இன்பத்துன்பங்களின் பயணித்து முடிவு பெறுகிறது ❤

திருமணத்திற்கு முன்பு பெண்ணும் மாப்பிள்ளையும் விடியவிடிய பேசுவதும் குறுஞ்செய்தி அனுப்புவதும் ரொம்பவும் இயல்பா இருந்தது ❤

அட நம்மலும் இது எல்லாம் கடந்துதானே வந்துருக்கோம் சிந்திக்க வைக்கும் காட்சிகள் நிறைய இருந்தது ❣️

நுணுக்கமான உணர்வுகளை சாதாரணமாக சொல்லிட்டு போய்டுறீங்க😍😍
என்னதான் சாதாரணமாக நட்பா பேசுனாலும் கடைசியில் மாமியார் நான்னு நளினி உறுதிப் படுத்திடுறாங்க 😓

கந்தன் ❤ தெய்வானை பெயர் பொருத்தம் மாதிரி இவங்க காதலும் அருமை 😍😍

திருமண வாழ்க்கைனா வெறும் காதலும் ரொமான்ஸ் மட்டும் தானா என்ன? அப்பறம் எதுக்கு இரண்டு நாத்தனாரும் மாமியாரும்னு பிரச்சினையை இறக்கி இரண்டு பேரையும் பிரிச்சு விட்டு, இடையில பிரியாணிய வேற கண்ணுல மட்டும் காட்டி சாப்பிடவிடாம பண்ணி😜, கந்தனை மாமியார் மருமகளுக்கு நடுவுல படுத்தி எடுத்துனு 😍 அப்பப்பா சுவாரஸ்யத்திற்க்கு மட்டும் பஞ்சமே இல்லாமல் போகுது கதை ❤

கந்தன் ❤ தெய்வானை வாசகர்கள் நெஞ்சத்தில் வாசமலராய் வாசம் செய்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 

pommu

Administrator
Staff member
Review of Dharsha Nisha

வாக்கப்பட்டு வந்த வாசமலர்
💓
:: கந்தன் தெய்வானை கதையின் மையபொருளாக அமைகின்றனர்.இருவருக்கிடையில் இருக்கும் புரிந்துணர்வு தான் கதையின் கரு.இதில் முதல் சந்திப்பு, பார்வை பரிமாற்றம், மனைவியாக வருபவருக்கு கொடுக்கும் நம்பிக்கை,அதை வெளிப்படுத்தும் விதம், காமத்தையும் விட மனைவி தன்னை ஏற்றுக்கொள்வதற்காக தனது ஆசைகளை கட்டுப்படுத்தும் விதம், வீட்டில் உள்ளவர்களை சமாளிக்கும் சாமர்த்தியம் போன்ற பல காரணங்களை கந்தன் எனும் கதாபாத்திரத்தில் ரைட்டர் சித்தரிக்கின்றார்.அதே போல் மனைவியானவள் தன் போகும் புகுந்த வீட்டில் எப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர் கொள்கிறாள்.அதை எவ்வாறு handle பண்ணவேண்டிய கடமை பெண்ணிற்கு இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் சில சில சலணங்கள் வாயிலாக ரைட்டர் தெளிவு படுத்தி கூற முனைகிறார்.கந்தன் வீட்டு முக்கிய கதாப்பாத்திரமான நளினி தாயின் மன போராட்டம், கந்தன் மூலமாக கிடைத்த தெளிவு மெய் சிலிர்க்க வைக்கிறது.மொத்த்தில் சாதாரண குடும்பத்தில் புதிதாக திருமணமான தம்பதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இக் கதை மூலமாக ரைட்டர் அம்மு இளையாள் கூற வந்து வெற்றியும் பெற்றுள்ளார்.தொடர்ந்து இது போன்ற குடும்பத்தில் நடக்கும் பதிவுகளை கதைகள் மூலமாக தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்ி.
 

irfana parvin

New member
Arumaiya a family base love story....athum deiva ku love breakup ku appro arrange marriage la kanthan kooda after marriage love romba arumaiya koduthurukeenga... normal ah nathunas epdi irupanga atha deiva face pandra vitham...kathan deiva va care pani love pandra ellam super...unmaiya title pola Iruku story...unmaiya story padikumbodhu story la travel pandra pola oru sila writers story dha irukum...ella story um apdi feel aagadhu ....aana indha vaakapattu vandha vasa malar story la deiva hurt aagura scene kathan scene.... kanthan sister' scene ellam padikumbodhu apdiye story la irundha mari irundhuchu....romba arumaiya irundhuchu sis.... again new story oda seekro vaanga....unga writing style super😍😍
 
Top