ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 26

pommu

Administrator
Staff member

வேல்விழி 26

நடந்து வரும் போதே மேசையில் இருக்கும் கத்தியை எடுத்துக் கொண்டே வர, ஸ்ரீயோ, "சும்மாவே கத்தியை கழுத்துல வைப்பாளே, இப்போ குடிச்சு வேற இருக்கா" என்று நினைத்துக் கொள்ள அனைவரும் அதை தான் யோசித்தார்கள் ராம்மை தவிர. அவனுக்கு தான் அவள் கத்தியை வைத்து ஏற்கனவே ஸ்ருதியை மிரட்டிய விஷயம் தெரியாது அல்லவா?

கண்கள் சொருக ஸ்ருதி முன்னால் வந்து ஆடி ஆடி நின்ற நந்திதாவோ, "நீ தான் சாமரம் வீசுற பொண்ணா?? எங்க வீசு பார்ப்போம்" என்று சொல்லிக் கொண்டே கையில் இருந்த கத்தியை சுழற்ற, அவளோ பயந்து கொண்டே ஸ்ரீயை கடைக்கண்ணால் பார்த்தவள், "டேய் காப்பாத்துடா" என்று இதழ் அசைத்து சொன்னாள்.

அவனோ, "குடிச்சு இருக்காடி.. சொல்றத பண்ணிடு" என்று சொல்ல, அவளும் வேறு வழி இல்லாமல் அருகே இருந்த டிஸ்ஸுவை தூக்கி விசிற அது கிழிந்து தொங்கியது... அவளோ, "அட சாமரம் கிழிஞ்சு போச்சு, காத்தே வரல" என்று சொல்ல, அருகே நின்ற ராமோ, "நந்திதா அந்த கத்தியை கீழ வை" என்றான்.

அவளோ திரும்பி, "யாரு?" என்று சொல்லிக் கொண்டே திரும்பியவள், "அட நீங்களா??" என்று நக்கல் குரலில் கேட்க, அவனோ ஒன்றும் பேசாமல் அவளையே பார்க்க, "லவ் பண்ணினவள கல்யாணம் பண்ணிக்க துப்பிலைன்னா, எதுக்கு லவ் பண்ணுற??" என்று கேட்க, அவனோ, "அதுக்கு உன் அப்பா தான் காரணம்" என்றான்.

"இந்த பிறவியை விடு... போன பிறவில என்ன பண்ணின?" என்று கேட்க, அவனிடம் பதில் இல்லாமல் போக, "போய் சேலைய கட்டிக்கோ" என்றாள் மதுவின் பிடியில். உடனே யுவராஜ், "நந்திதா" என்று கர்ஜிக்கும் குரலில் சீற, அவனை நோக்கி திரும்பியவள், "அட அரசரே நீங்களா?? உங்கள் நண்பரை பேசினால் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதோ" என்றாள் அதே நக்கலுடன்.

அவனோ அவள் அருகே வேகமாக வந்து கையை பிடித்தவன், "என்னை கருமத்தைடி குடிச்சு தொலைச்ச??, கீழ வா" என்று அவள் கையை பிடிக்க, "கையை விடு, உன் கிட்ட நாக்கை பிடுங்குற போல கேக்கணும்" என்றாள் ஆக்ரோஷமாக. அவனோ சுற்றும் முற்றும் பார்த்தவன், "ஹேய் உள்ளே போய் பேசிக்கலாம் வா" என்று மீண்டும் கையை பிடிக்க,

கையை உதறியவள், "இங்கயே கேக்கணும்" என்றாள். அவனோ நெற்றியை நீவிக் கொண்டே, "சரி கேளு" என்க, அவளோ, "உனக்கு தான் ஒன்னுக்கும் முடியாதுன்னு தெரியும்ல… அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட??" என்று கேட்க, அவனுக்கு சுர்ரென்று எகிறியது. அவனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, "அது தான் இப்போ முடியும்ல... அப்புறம் என்னடி?" என்றான் எரிச்சலாக.

அவளோ, "அது இப்போ தானே? முதல் தெரிஞ்சே என் வாழ்க்கையை வீணாக்கி இருக்க நீ" என்று சொல்ல, அவனுக்கோ பொறுமை எங்கோ பறந்து போக, "அப்படின்னா அடுத்த நாளே டைவர்ஸ் எடுக்க வேண்டியது தானே மேடம், எதுக்கு என் கூட வாழ்ந்த?" என்றான் சற்று கடுப்பாக. அவளோ, "ஹ்ம்ம் பாவமேன்னு தான்" என்று அவன் கோபத்தை கிளற, "எனக்கு ஏன்டி நீ பாவம் பார்க்கணும்??" என்றான் இறுகிய குரலில்.

அவளோ அவனை முறைத்து பார்க்க, "இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல, டைவர்ஸ் பண்ணிட்டு கிளம்பு" என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன். அவளோ சத்தமாக சிரித்தவள், "உனக்கு மித்ராவை கட்டிக்கணும்னா ஓபன் ஆஹ் சொல்லு... இப்படி சுத்தி வளைச்சு" என்று முடிக்க முதல் மீதி வார்த்தைகளை அவன் விழுங்கி இருக்க, அவளோ அதிர்ந்து விழிக்க, அவனோ அவளை விட்டு விலகியபடி தனது இதழ்களை நாவினால் வருடியவன், "வொட்க்காவா?? அது தான் இந்த ஆட்டம் ஆடுற" என்றான்.

அவன் திடீர் முத்தத்தில் நந்திதா அதிர்ந்ததை விட அதிகமாக அதிர்ந்தது என்னவோ சுற்றி நின்றவர்கள் தான். ஸ்ரீயோ, "அவ தானே குடிச்சு இருக்கா, இவன் என்னடா அவன் குடிச்ச போலவே பிகேவ் பண்ணுறான்" என்று பிரகாஷிடம் கேட்க, அவனோ, "ஆன் ஸ்க்ரீன்ல தான் யுவா சார் கிஸ் பண்ணி பார்த்ததே இல்ல. இங்கேயாவது பார்ப்போம்" என்று சொல்ல, "அட ச்ச" என்று சொன்ன ஸ்ரீ ராம்மைப் பார்க்க, அவனோ, தலையை குனிந்தபடி நின்று இருந்தான்.

இதே சமயம் நந்திதாவோ, "ஹவ் டெயார் யூ" என்று கையை அவனுக்கு அடிக்க நீட்ட, அவள் கையை பிடித்த யுவராஜ்ஜோ, "வாடி கீழ போகலாம்" என்று சொல்லிக் கொண்டே சட்டென்று தூக்கி அவளை தோளில் போட, அவளோ, "விடுடா, விடுடா" என்று கத்த ஆரம்பித்து விட்டாள். யுவராஜ்ஜோ, "நாளைக்கு பேசிக்கலாம்டா, இங்கயே ஸ்டெ பண்ணிடுங்க, டேய் ஸ்ரீ பார்த்துக்கோடா" என்று சொல்லிக் கொண்டே அவளை கதற கதற தூக்கிக் கொண்டே கீழே இறங்க,

"நாளைக்கா?" என்று கேட்ட ஸ்ரீயோ, "சரி வாங்க, நாம சாப்பிடலாம்" என்று யுவராஜ் சார்பாக அவர்களை கவனிக்க ஆரம்பிக்க, கீழே இறங்கி வந்தவனின் தோள் பட்டையை ஊன்றி கடித்து இருந்தாள் நந்திதா. அவனோ, "வலிக்குதுடி" என்று சொல்லிக் கொண்டே அவளை இறக்கி விட, அவளோ, "எதுக்குடா இப்படி பண்ணுன?" என்று கேட்டுக் கொண்டே அங்கே இருந்த அலங்கரிக்கப்பட்ட மேடையில் தட்டு தடுமாறி ஏற, அவனோ, "இப்போ எதுக்கு இங்க வர்றா?" என்று யோசித்துக் கொண்டே அவளை மெதுவாக பின் தொடர்ந்தான்.

அங்கே அலங்காரம் செய்பவர்களும் தமது வேலையை பார்த்துக் கொண்டே இருக்க, "யார்டா நீங்க?" என்று கேட்டுக் கொண்டே இரு கைகளையும் ஆக்ரோஷமாக நீட்டி அங்கே அலங்கரிக்கப்பட்டு இருந்த மேசையில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து பொருட்களையும் தள்ளி விட, எல்லாமே கீழே விழுந்து நொறுங்கியது. இதனை யுவராஜ்ஜூம் சரி அங்கே இருந்தவர்களும் சரி எதிர் பார்க்கவே இல்லை.

யுவராஜ்ஜோ பாய்ந்து மேடையில் ஏற முதலே அங்கே இருந்த அனைத்து அலங்காரங்களையும் மதுவின் பிடியில் கிழித்து எறிந்தவள், "எதுக்குடா என்ன கொடுமை படுத்துற?" என்று சம்பந்தம் இல்லமே புலம்ப, யுவராஜ்ஜோ, "க்கும் யார் யாரை கொடுமை படுத்துறாங்கன்னு கூட தெரிய மாட்டேங்குது" என்று நினைத்துக் கொண்டே அவளை பின்னால் இருந்து பிடித்தவன், "ரூமுக்குள்ள வா நந்திதா" என்றான். அவளோ, "என்னை விடுடா, என்னை விடு" என்று திமிறியபடி காலினால் எட்டி அங்கே இருந்த சிலைகளை தள்ளி விட, யுவராஜ்ஜோ, "இதுக்கு மேல சரி வராது" என்று நினைத்துக் கொண்டே மீண்டும் அவளை வலுக்கட்டாயமாக தூக்கி தோளில் போட்டவன் மின்னல் வேகத்தில் கீழே பாய்ந்து இறங்கி கொண்டான்.

அங்கே நின்றவர்களோ அதிர்ந்து போய் அவர்களை பார்க்க, ஒரு கணம் அவர்களை நோக்கி திரும்பிய யுவராஜ்ஜோ, "இந்த விஷயம் வெளிய போச்சுன்னா" என்று இழுக்க, "சொல்ல மாட்டோம் சார்" என்று அனைவரும் சேர்ந்து சொல்ல, ஒரு தலையசைப்புடன் அவளை அறைக்குள் தூக்கி சென்றான். ஆனாலும் அவள் கத்துவதை நிறுத்தவே இல்லை. அறைக்குள் சென்றதுமே அவளை கீழே இறக்கி விட்டு கதவை தாளிட, அவளோ, "கதவை திற" என்று ஆக்ரோஷமாக கதவில் அடித்தபடி கத்தினாள். அவனோ, பெருமூச்சுடன் அவளை தூக்கி கட்டிலில் போட்டு மேலே படர்ந்தவன், "ஷ்" என்று அவள் விழிகளை பார்த்துக் கொண்டே சொல்ல,

"எந்திரிடா தடிமாடு" என்று அவனுக்கு திட்ட ஆரம்பித்தே விட்டாள். அவனோ, "என்னது? தடி மாடா?" என்று கேட்க, அவளோ, "ஆமா தடி மாடு தான்… இந்த கனம் கனக்குற, எந்திரிடா" என்று சொல்ல, அவனுக்கு சட்டென்று கோபம் எகிற, "மாட்டேன், என்னடி பண்ணுவ?" என்று கேட்டான். அவளோ, "இப்போ பாரு" என்று சொன்னவளோ சத்தமாக, "ஐயோ ரேப் ரேப்" என்று கத்த அவன் அதிர்ந்து தான் போனான்.

வெளியே அவ்வளவு பேர் இருக்கும் போது அவள் இப்படி கத்தினால் அவனுக்கு எப்படி இருக்கும்? அடுத்த கணமே, அவள் இதழ்களை இதழ் கொண்டு அடைத்து விடுவித்தவன், "நிஜமாவே பண்ண போறேன் பாரு" என்று சொல்லிக் கொண்டே அவள் புடவையில் கையை வைக்க, அவளோ, "விடுடா" என்று முதலில் திமிறினாலும் ஒரு கட்டத்தில் அவன் ஸ்பரிசத்தில் தன்னையும் மீறி அடங்கி தான் போனாள். என்ன தான் கோபம் இருந்தாலும் காதலும் அங்கே குறையாமல் இருக்கின்றது அல்லவா?

அவன் கரமோ, அவள் மேனியை மீட்ட ஆரம்பிக்க, இதழ்களோ அவள் இதழ்களில் வேலையை செவ்வனே செய்ய ஆரம்பித்து இருந்தது. நீண்ட நாள் கழித்து ஒரு இணைந்தவர்களின் உணர்வுகள் வேறு எல்லை இல்லாமல் தாண்டவம் தான் ஆடியது. அதன் விளைவு சற்று முன் இருந்த கூச்சலும் குழப்பமும் இப்போது முத்தமும் முனகலுமாக மாறி இருக்க, அவர்கள் மோகம் முற்றுப் பெறவே நேரம் விடியலை நெருங்கி இருந்தது.

அவள் மது அருந்தி போதையில் இருக்க, அவனோ அவளை தீண்டியே போதையாகி போனான். அடுத்த நாள் காலையில் அவன் வேற்று மார்பில் அவள் துயின்று இருக்க, முதலில் எழுந்தவனோ அவளை தள்ளி படுக்க வைத்துக் கொண்டே அவள் இதழில் அழுந்த முத்தம் பதித்து விலகியவன், "எந்திரிச்சு என்ன பண்ண போறாளோ?" என்று நினைத்துக் கொண்டே அவளை போர்வையால் போர்த்தி விட்ட சமயம், வெளியே ஸ்ரீயின் குரல் கேட்டது.

உடனே அவசரமாக ஆயத்தமாகிக் கொண்டே கதவை திறந்து வெளியே வர, ஸ்ரீயோ தூள் தூளாக நொறுக்கப்பட்ட அலங்காரங்கள் அருகே நின்றவன், "இத சீக்கிரம் அள்ளி போடுங்கடா, முதலிருந்து டெகரேட் பண்ணனும்" என்று சொல்லிக் கொண்டே நிற்க அவன் அருகே வந்து நின்றான் யுவராஜ்.

அவனைக் கண்டதுமே, "வாடா யுவா" என்று ஸ்ரீ சொல்ல, அவனோ அலங்கோலமாக கிடந்த மேடையை பார்த்துக் கொண்டே வந்தவன், "இன்னைக்கு எப்படியும் டெக்கரேஷன் முடிச்சிடலாம்ல" என்று கேட்க, ஸ்ரீயோ, "ம்ம் முடிக்கலாம்" என்று சொன்னான். ஸ்ருதியோ, "என்ன யுவா இது?" என்று கேட்க,

அவனோ, "ரொம்ப டிப்ரெஷன்ல இருந்து இருப்பா போல... அது தான் குடிச்சதுமே இவ்ளோ அரோகன்ட் ஆயிட்டா" என்று சொல்லிக் கொண்டே அங்கே நின்ற ராம்மைப் பார்த்தவன், "எல்லாமே கம்பேர்ட்டபிள் தானே" என்று கேட்க, அவனோ, "நல்ல தூக்கம்" என்றான். அவர்களோ அந்த இடத்தை சுத்தம் செய்வதை பார்த்துக் கொண்டே நின்று இருக்க, அந்த சத்தத்தில் மெதுவாக கண்களை விழித்தாள் நந்திதா.

எழுந்து அமர்ந்தவளோ, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தன்னை போர்த்தி இருந்த போர்வையை விலக்கி பார்த்தவள், அதிர்ச்சியில் விழிகளை விரித்துக் கொண்டே, "என்னோட ட்ரெஸ்" என்று சுற்றும் முற்றும் தேடிப் பிடித்து எடுத்தவளுக்கோ, இதழ்கள் இன்னும் முத்தத்தின் விளைவால் எரிந்து கொண்டே இருந்தது. கண்களை மூடி தலையை உலுக்கியவளோ அப்படியே அங்கே இருந்த கட்டிலில் அமர்ந்து கொண்டே தலையை பிடிக்க, முதல் நாள் நடந்தது கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்தது.

அதிர்ச்சியில் கண்களை திறந்தவள், "ஐயையோ இப்படி எல்லாமா பேசி இருக்கேன், போதாததுக்கு டெக்கரேஷன் எல்லாம் தட்டி விட்டு இருக்கேன், இது தான் சான்ஸுன்னு யுவராஜ் யூஸ் வேற பண்ணிக்கிட்டான், பொறுக்கி" என்று முணுமுணுத்தவளிடம், "நீயும் தானே அவனுக்கு ஈகுவல் ஆஹ் கம்பெனி கொடுத்த?" என்று அவள் மனசாட்சியே காரி துப்ப துடைத்துக் கொண்டாள். அவளும் என்ன தான் பண்ண முடியும்?

"ஒண்ணுமே நினைவுல இல்லாத போல பில்ட் அப் பண்ணனும்" என்று நினைத்துக் கொண்டே குளிக்க குளியலறைக்குள் நுழைந்தவள் ஆயத்தமாகி விட்டு தான் பார்த்தாள் நெற்றியில் வைக்க பொட்டு இருக்கவே இல்லை.

"இருந்த ஒரு பொட்டும் எங்க போச்சுன்னு தெரியல" என்று நினைத்துக் கொண்டே, மெதுவாக கதவை திறந்து வெளியே வந்தாள். அறைக்குள் இருந்து நெற்றியை நீவிக் கொண்டே வெளியே வந்த நந்திதாவை அங்கே நின்றவர்கள் ஒரு கணம் பார்த்து விட்டு வேலையை தொடர்ந்தார்கள். ஏற்கனவே செய்யப்பட்ட அலங்காரம் எல்லாம் சிதறிக் கிடக்க, வேலையாட்கள் அதனை துப்பரவு செய்து கொண்டு இருக்க,

மார்புக்கு குறுக்க கையைக் கட்டிக்க கொண்டே ஒரு கையால் நாடியை நீவியபடி அவற்றை பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் யுவராஜ். அவன் அருகே நின்று இருந்த ஸ்ரீயோ, "டபிள் செலவு மச்சி உனக்கு" என்க, நந்திதாவோ அவற்றை பார்த்தபடி அவர்களை நோக்கி வந்தவள், "தெரியாத போலவே மெயின்டெய்ன் பண்ணுவோம்" என்று நினைத்துக் கொண்டே, "ஆமா என்னாச்சு?? யார் இத இப்படி பண்ணினாங்க??" என்று கேட்க,

யுவராஜ்ஜும் ஸ்ரீயும் ஒருவரை ஒருவர் மார்க்கமாக பார்த்துக் கொண்டார்கள். அவளோ அங்கே இருந்த சிலையில் கையை வைத்தவள், "இது மட்டும் தான் மீதி இருக்கா ??" என்று கேட்க, ஓடி வந்து அவளிடம் இருந்த சிலையை வாங்கி கொண்ட மதனாவோ, "இதுவாவது இருக்கட்டும் நந்திதா" என்றாள்.

நந்திதாவோ, "நான் என்ன பண்ணிட போறேன்… எனக்கே ரொம்ப தலைவலியா இருக்கு" என்று சொல்லிக் கொண்டே யுவராஜ்ஜை நோக்கி வந்தவளோ அவனை புருவம் சுருக்கி பார்த்தாள். அவள் விழிகளோ அவன் கழுத்தில் இருந்த அவளது பொட்டில் பதிய, "இவன் குளிக்கவே இல்லை போல" என்று நினைத்துக் கொண்டாள்.

அவனோ, "இவ எதுக்கு இப்படி பார்க்கிறான்னு தெரியலயே" என்று நினைத்துக் கொண்டே, "என்ன?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்டான். அவளோ அவனை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, "நேற்று என்ன நடந்திச்சு??" என்று கேட்க, அவனோ திரு திருவென முழித்து விட்டு, "ஒன்னும் நடக்கலையே" என்றான்.

அவளோ, "அப்புறம் எப்படி??" என்று கோபமாக ஆரம்பித்தவள் அருகே நின்ற ஸ்ரீயை பார்த்து விட்டு மீதி வார்த்தைகளை விழுங்கி கொண்டாள். அவனுமே, "என்னாச்சு??" என்று ஒன்றுமே புரியாத போல கேட்க, "நடிகனாச்சே நம்மள விட நல்லா தான் நடிக்கிறான்" என்று நினைத்தவளோ, "என்ன ஆச்சா??" என்று கடுப்பாக கேட்டபடி அவன் கன்னத்தில் கையை வைத்து பக்கவாட்டாக திருப்ப, அவனோ, "என்னடி??" என்றான்.

அவளோ அவன் கழுத்தில் ஒட்டி இருந்த அவள் பொட்டை எடுத்து கோபமாக அவன் முகத்தின் முன்னே காட்டியவள் அதனை நெற்றியில் வைத்து விட்டு விறுவிறுவென செல்ல, அவள் முதுகை பெருமூச்சுடன் பார்த்து விட்டு ஸ்ரீயை பார்க்க, அவனோ யுவராஜ்ஜையே ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே நின்று இருந்தான்.

யுவராஜ்ஜோ குரலை செருமிக் கொண்டே, "என்னடா??" என்று கேட்க, ஸ்ரீயோ, "நீ சரி இல்ல மச்சி, போதைல இருக்கிற பொண்ணுன்னு கூட பார்க்காம" என்று சொல்ல, அவனோ நாடியை நீவியவாறே, "போதைல இருந்தாலும் பொண்டாட்டி தானே" என்றான்.
 

வேல்விழி 26

நடந்து வரும் போதே மேசையில் இருக்கும் கத்தியை எடுத்துக் கொண்டே வர, ஸ்ரீயோ, "சும்மாவே கத்தியை கழுத்துல வைப்பாளே, இப்போ குடிச்சு வேற இருக்கா" என்று நினைத்துக் கொள்ள அனைவரும் அதை தான் யோசித்தார்கள் ராம்மை தவிர. அவனுக்கு தான் அவள் கத்தியை வைத்து ஏற்கனவே ஸ்ருதியை மிரட்டிய விஷயம் தெரியாது அல்லவா?

கண்கள் சொருக ஸ்ருதி முன்னால் வந்து ஆடி ஆடி நின்ற நந்திதாவோ, "நீ தான் சாமரம் வீசுற பொண்ணா?? எங்க வீசு பார்ப்போம்" என்று சொல்லிக் கொண்டே கையில் இருந்த கத்தியை சுழற்ற, அவளோ பயந்து கொண்டே ஸ்ரீயை கடைக்கண்ணால் பார்த்தவள், "டேய் காப்பாத்துடா" என்று இதழ் அசைத்து சொன்னாள்.

அவனோ, "குடிச்சு இருக்காடி.. சொல்றத பண்ணிடு" என்று சொல்ல, அவளும் வேறு வழி இல்லாமல் அருகே இருந்த டிஸ்ஸுவை தூக்கி விசிற அது கிழிந்து தொங்கியது... அவளோ, "அட சாமரம் கிழிஞ்சு போச்சு, காத்தே வரல" என்று சொல்ல, அருகே நின்ற ராமோ, "நந்திதா அந்த கத்தியை கீழ வை" என்றான்.

அவளோ திரும்பி, "யாரு?" என்று சொல்லிக் கொண்டே திரும்பியவள், "அட நீங்களா??" என்று நக்கல் குரலில் கேட்க, அவனோ ஒன்றும் பேசாமல் அவளையே பார்க்க, "லவ் பண்ணினவள கல்யாணம் பண்ணிக்க துப்பிலைன்னா, எதுக்கு லவ் பண்ணுற??" என்று கேட்க, அவனோ, "அதுக்கு உன் அப்பா தான் காரணம்" என்றான்.

"இந்த பிறவியை விடு... போன பிறவில என்ன பண்ணின?" என்று கேட்க, அவனிடம் பதில் இல்லாமல் போக, "போய் சேலைய கட்டிக்கோ" என்றாள் மதுவின் பிடியில். உடனே யுவராஜ், "நந்திதா" என்று கர்ஜிக்கும் குரலில் சீற, அவனை நோக்கி திரும்பியவள், "அட அரசரே நீங்களா?? உங்கள் நண்பரை பேசினால் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதோ" என்றாள் அதே நக்கலுடன்.

அவனோ அவள் அருகே வேகமாக வந்து கையை பிடித்தவன், "என்னை கருமத்தைடி குடிச்சு தொலைச்ச??, கீழ வா" என்று அவள் கையை பிடிக்க, "கையை விடு, உன் கிட்ட நாக்கை பிடுங்குற போல கேக்கணும்" என்றாள் ஆக்ரோஷமாக. அவனோ சுற்றும் முற்றும் பார்த்தவன், "ஹேய் உள்ளே போய் பேசிக்கலாம் வா" என்று மீண்டும் கையை பிடிக்க,

கையை உதறியவள், "இங்கயே கேக்கணும்" என்றாள். அவனோ நெற்றியை நீவிக் கொண்டே, "சரி கேளு" என்க, அவளோ, "உனக்கு தான் ஒன்னுக்கும் முடியாதுன்னு தெரியும்ல… அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட??" என்று கேட்க, அவனுக்கு சுர்ரென்று எகிறியது. அவனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, "அது தான் இப்போ முடியும்ல... அப்புறம் என்னடி?" என்றான் எரிச்சலாக.

அவளோ, "அது இப்போ தானே? முதல் தெரிஞ்சே என் வாழ்க்கையை வீணாக்கி இருக்க நீ" என்று சொல்ல, அவனுக்கோ பொறுமை எங்கோ பறந்து போக, "அப்படின்னா அடுத்த நாளே டைவர்ஸ் எடுக்க வேண்டியது தானே மேடம், எதுக்கு என் கூட வாழ்ந்த?" என்றான் சற்று கடுப்பாக. அவளோ, "ஹ்ம்ம் பாவமேன்னு தான்" என்று அவன் கோபத்தை கிளற, "எனக்கு ஏன்டி நீ பாவம் பார்க்கணும்??" என்றான் இறுகிய குரலில்.

அவளோ அவனை முறைத்து பார்க்க, "இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல, டைவர்ஸ் பண்ணிட்டு கிளம்பு" என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன். அவளோ சத்தமாக சிரித்தவள், "உனக்கு மித்ராவை கட்டிக்கணும்னா ஓபன் ஆஹ் சொல்லு... இப்படி சுத்தி வளைச்சு" என்று முடிக்க முதல் மீதி வார்த்தைகளை அவன் விழுங்கி இருக்க, அவளோ அதிர்ந்து விழிக்க, அவனோ அவளை விட்டு விலகியபடி தனது இதழ்களை நாவினால் வருடியவன், "வொட்க்காவா?? அது தான் இந்த ஆட்டம் ஆடுற" என்றான்.

அவன் திடீர் முத்தத்தில் நந்திதா அதிர்ந்ததை விட அதிகமாக அதிர்ந்தது என்னவோ சுற்றி நின்றவர்கள் தான். ஸ்ரீயோ, "அவ தானே குடிச்சு இருக்கா, இவன் என்னடா அவன் குடிச்ச போலவே பிகேவ் பண்ணுறான்" என்று பிரகாஷிடம் கேட்க, அவனோ, "ஆன் ஸ்க்ரீன்ல தான் யுவா சார் கிஸ் பண்ணி பார்த்ததே இல்ல. இங்கேயாவது பார்ப்போம்" என்று சொல்ல, "அட ச்ச" என்று சொன்ன ஸ்ரீ ராம்மைப் பார்க்க, அவனோ, தலையை குனிந்தபடி நின்று இருந்தான்.

இதே சமயம் நந்திதாவோ, "ஹவ் டெயார் யூ" என்று கையை அவனுக்கு அடிக்க நீட்ட, அவள் கையை பிடித்த யுவராஜ்ஜோ, "வாடி கீழ போகலாம்" என்று சொல்லிக் கொண்டே சட்டென்று தூக்கி அவளை தோளில் போட, அவளோ, "விடுடா, விடுடா" என்று கத்த ஆரம்பித்து விட்டாள். யுவராஜ்ஜோ, "நாளைக்கு பேசிக்கலாம்டா, இங்கயே ஸ்டெ பண்ணிடுங்க, டேய் ஸ்ரீ பார்த்துக்கோடா" என்று சொல்லிக் கொண்டே அவளை கதற கதற தூக்கிக் கொண்டே கீழே இறங்க,

"நாளைக்கா?" என்று கேட்ட ஸ்ரீயோ, "சரி வாங்க, நாம சாப்பிடலாம்" என்று யுவராஜ் சார்பாக அவர்களை கவனிக்க ஆரம்பிக்க, கீழே இறங்கி வந்தவனின் தோள் பட்டையை ஊன்றி கடித்து இருந்தாள் நந்திதா. அவனோ, "வலிக்குதுடி" என்று சொல்லிக் கொண்டே அவளை இறக்கி விட, அவளோ, "எதுக்குடா இப்படி பண்ணுன?" என்று கேட்டுக் கொண்டே அங்கே இருந்த அலங்கரிக்கப்பட்ட மேடையில் தட்டு தடுமாறி ஏற, அவனோ, "இப்போ எதுக்கு இங்க வர்றா?" என்று யோசித்துக் கொண்டே அவளை மெதுவாக பின் தொடர்ந்தான்.

அங்கே அலங்காரம் செய்பவர்களும் தமது வேலையை பார்த்துக் கொண்டே இருக்க, "யார்டா நீங்க?" என்று கேட்டுக் கொண்டே இரு கைகளையும் ஆக்ரோஷமாக நீட்டி அங்கே அலங்கரிக்கப்பட்டு இருந்த மேசையில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து பொருட்களையும் தள்ளி விட, எல்லாமே கீழே விழுந்து நொறுங்கியது. இதனை யுவராஜ்ஜூம் சரி அங்கே இருந்தவர்களும் சரி எதிர் பார்க்கவே இல்லை.

யுவராஜ்ஜோ பாய்ந்து மேடையில் ஏற முதலே அங்கே இருந்த அனைத்து அலங்காரங்களையும் மதுவின் பிடியில் கிழித்து எறிந்தவள், "எதுக்குடா என்ன கொடுமை படுத்துற?" என்று சம்பந்தம் இல்லமே புலம்ப, யுவராஜ்ஜோ, "க்கும் யார் யாரை கொடுமை படுத்துறாங்கன்னு கூட தெரிய மாட்டேங்குது" என்று நினைத்துக் கொண்டே அவளை பின்னால் இருந்து பிடித்தவன், "ரூமுக்குள்ள வா நந்திதா" என்றான். அவளோ, "என்னை விடுடா, என்னை விடு" என்று திமிறியபடி காலினால் எட்டி அங்கே இருந்த சிலைகளை தள்ளி விட, யுவராஜ்ஜோ, "இதுக்கு மேல சரி வராது" என்று நினைத்துக் கொண்டே மீண்டும் அவளை வலுக்கட்டாயமாக தூக்கி தோளில் போட்டவன் மின்னல் வேகத்தில் கீழே பாய்ந்து இறங்கி கொண்டான்.

அங்கே நின்றவர்களோ அதிர்ந்து போய் அவர்களை பார்க்க, ஒரு கணம் அவர்களை நோக்கி திரும்பிய யுவராஜ்ஜோ, "இந்த விஷயம் வெளிய போச்சுன்னா" என்று இழுக்க, "சொல்ல மாட்டோம் சார்" என்று அனைவரும் சேர்ந்து சொல்ல, ஒரு தலையசைப்புடன் அவளை அறைக்குள் தூக்கி சென்றான். ஆனாலும் அவள் கத்துவதை நிறுத்தவே இல்லை. அறைக்குள் சென்றதுமே அவளை கீழே இறக்கி விட்டு கதவை தாளிட, அவளோ, "கதவை திற" என்று ஆக்ரோஷமாக கதவில் அடித்தபடி கத்தினாள். அவனோ, பெருமூச்சுடன் அவளை தூக்கி கட்டிலில் போட்டு மேலே படர்ந்தவன், "ஷ்" என்று அவள் விழிகளை பார்த்துக் கொண்டே சொல்ல,

"எந்திரிடா தடிமாடு" என்று அவனுக்கு திட்ட ஆரம்பித்தே விட்டாள். அவனோ, "என்னது? தடி மாடா?" என்று கேட்க, அவளோ, "ஆமா தடி மாடு தான்… இந்த கனம் கனக்குற, எந்திரிடா" என்று சொல்ல, அவனுக்கு சட்டென்று கோபம் எகிற, "மாட்டேன், என்னடி பண்ணுவ?" என்று கேட்டான். அவளோ, "இப்போ பாரு" என்று சொன்னவளோ சத்தமாக, "ஐயோ ரேப் ரேப்" என்று கத்த அவன் அதிர்ந்து தான் போனான்.

வெளியே அவ்வளவு பேர் இருக்கும் போது அவள் இப்படி கத்தினால் அவனுக்கு எப்படி இருக்கும்? அடுத்த கணமே, அவள் இதழ்களை இதழ் கொண்டு அடைத்து விடுவித்தவன், "நிஜமாவே பண்ண போறேன் பாரு" என்று சொல்லிக் கொண்டே அவள் புடவையில் கையை வைக்க, அவளோ, "விடுடா" என்று முதலில் திமிறினாலும் ஒரு கட்டத்தில் அவன் ஸ்பரிசத்தில் தன்னையும் மீறி அடங்கி தான் போனாள். என்ன தான் கோபம் இருந்தாலும் காதலும் அங்கே குறையாமல் இருக்கின்றது அல்லவா?

அவன் கரமோ, அவள் மேனியை மீட்ட ஆரம்பிக்க, இதழ்களோ அவள் இதழ்களில் வேலையை செவ்வனே செய்ய ஆரம்பித்து இருந்தது. நீண்ட நாள் கழித்து ஒரு இணைந்தவர்களின் உணர்வுகள் வேறு எல்லை இல்லாமல் தாண்டவம் தான் ஆடியது. அதன் விளைவு சற்று முன் இருந்த கூச்சலும் குழப்பமும் இப்போது முத்தமும் முனகலுமாக மாறி இருக்க, அவர்கள் மோகம் முற்றுப் பெறவே நேரம் விடியலை நெருங்கி இருந்தது.

அவள் மது அருந்தி போதையில் இருக்க, அவனோ அவளை தீண்டியே போதையாகி போனான். அடுத்த நாள் காலையில் அவன் வேற்று மார்பில் அவள் துயின்று இருக்க, முதலில் எழுந்தவனோ அவளை தள்ளி படுக்க வைத்துக் கொண்டே அவள் இதழில் அழுந்த முத்தம் பதித்து விலகியவன், "எந்திரிச்சு என்ன பண்ண போறாளோ?" என்று நினைத்துக் கொண்டே அவளை போர்வையால் போர்த்தி விட்ட சமயம், வெளியே ஸ்ரீயின் குரல் கேட்டது.

உடனே அவசரமாக ஆயத்தமாகிக் கொண்டே கதவை திறந்து வெளியே வர, ஸ்ரீயோ தூள் தூளாக நொறுக்கப்பட்ட அலங்காரங்கள் அருகே நின்றவன், "இத சீக்கிரம் அள்ளி போடுங்கடா, முதலிருந்து டெகரேட் பண்ணனும்" என்று சொல்லிக் கொண்டே நிற்க அவன் அருகே வந்து நின்றான் யுவராஜ்.

அவனைக் கண்டதுமே, "வாடா யுவா" என்று ஸ்ரீ சொல்ல, அவனோ அலங்கோலமாக கிடந்த மேடையை பார்த்துக் கொண்டே வந்தவன், "இன்னைக்கு எப்படியும் டெக்கரேஷன் முடிச்சிடலாம்ல" என்று கேட்க, ஸ்ரீயோ, "ம்ம் முடிக்கலாம்" என்று சொன்னான். ஸ்ருதியோ, "என்ன யுவா இது?" என்று கேட்க,

அவனோ, "ரொம்ப டிப்ரெஷன்ல இருந்து இருப்பா போல... அது தான் குடிச்சதுமே இவ்ளோ அரோகன்ட் ஆயிட்டா" என்று சொல்லிக் கொண்டே அங்கே நின்ற ராம்மைப் பார்த்தவன், "எல்லாமே கம்பேர்ட்டபிள் தானே" என்று கேட்க, அவனோ, "நல்ல தூக்கம்" என்றான். அவர்களோ அந்த இடத்தை சுத்தம் செய்வதை பார்த்துக் கொண்டே நின்று இருக்க, அந்த சத்தத்தில் மெதுவாக கண்களை விழித்தாள் நந்திதா.

எழுந்து அமர்ந்தவளோ, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தன்னை போர்த்தி இருந்த போர்வையை விலக்கி பார்த்தவள், அதிர்ச்சியில் விழிகளை விரித்துக் கொண்டே, "என்னோட ட்ரெஸ்" என்று சுற்றும் முற்றும் தேடிப் பிடித்து எடுத்தவளுக்கோ, இதழ்கள் இன்னும் முத்தத்தின் விளைவால் எரிந்து கொண்டே இருந்தது. கண்களை மூடி தலையை உலுக்கியவளோ அப்படியே அங்கே இருந்த கட்டிலில் அமர்ந்து கொண்டே தலையை பிடிக்க, முதல் நாள் நடந்தது கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்தது.

அதிர்ச்சியில் கண்களை திறந்தவள், "ஐயையோ இப்படி எல்லாமா பேசி இருக்கேன், போதாததுக்கு டெக்கரேஷன் எல்லாம் தட்டி விட்டு இருக்கேன், இது தான் சான்ஸுன்னு யுவராஜ் யூஸ் வேற பண்ணிக்கிட்டான், பொறுக்கி" என்று முணுமுணுத்தவளிடம், "நீயும் தானே அவனுக்கு ஈகுவல் ஆஹ் கம்பெனி கொடுத்த?" என்று அவள் மனசாட்சியே காரி துப்ப துடைத்துக் கொண்டாள். அவளும் என்ன தான் பண்ண முடியும்?

"ஒண்ணுமே நினைவுல இல்லாத போல பில்ட் அப் பண்ணனும்" என்று நினைத்துக் கொண்டே குளிக்க குளியலறைக்குள் நுழைந்தவள் ஆயத்தமாகி விட்டு தான் பார்த்தாள் நெற்றியில் வைக்க பொட்டு இருக்கவே இல்லை.

"இருந்த ஒரு பொட்டும் எங்க போச்சுன்னு தெரியல" என்று நினைத்துக் கொண்டே, மெதுவாக கதவை திறந்து வெளியே வந்தாள். அறைக்குள் இருந்து நெற்றியை நீவிக் கொண்டே வெளியே வந்த நந்திதாவை அங்கே நின்றவர்கள் ஒரு கணம் பார்த்து விட்டு வேலையை தொடர்ந்தார்கள். ஏற்கனவே செய்யப்பட்ட அலங்காரம் எல்லாம் சிதறிக் கிடக்க, வேலையாட்கள் அதனை துப்பரவு செய்து கொண்டு இருக்க,

மார்புக்கு குறுக்க கையைக் கட்டிக்க கொண்டே ஒரு கையால் நாடியை நீவியபடி அவற்றை பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் யுவராஜ். அவன் அருகே நின்று இருந்த ஸ்ரீயோ, "டபிள் செலவு மச்சி உனக்கு" என்க, நந்திதாவோ அவற்றை பார்த்தபடி அவர்களை நோக்கி வந்தவள், "தெரியாத போலவே மெயின்டெய்ன் பண்ணுவோம்" என்று நினைத்துக் கொண்டே, "ஆமா என்னாச்சு?? யார் இத இப்படி பண்ணினாங்க??" என்று கேட்க,

யுவராஜ்ஜும் ஸ்ரீயும் ஒருவரை ஒருவர் மார்க்கமாக பார்த்துக் கொண்டார்கள். அவளோ அங்கே இருந்த சிலையில் கையை வைத்தவள், "இது மட்டும் தான் மீதி இருக்கா ??" என்று கேட்க, ஓடி வந்து அவளிடம் இருந்த சிலையை வாங்கி கொண்ட மதனாவோ, "இதுவாவது இருக்கட்டும் நந்திதா" என்றாள்.

நந்திதாவோ, "நான் என்ன பண்ணிட போறேன்… எனக்கே ரொம்ப தலைவலியா இருக்கு" என்று சொல்லிக் கொண்டே யுவராஜ்ஜை நோக்கி வந்தவளோ அவனை புருவம் சுருக்கி பார்த்தாள். அவள் விழிகளோ அவன் கழுத்தில் இருந்த அவளது பொட்டில் பதிய, "இவன் குளிக்கவே இல்லை போல" என்று நினைத்துக் கொண்டாள்.

அவனோ, "இவ எதுக்கு இப்படி பார்க்கிறான்னு தெரியலயே" என்று நினைத்துக் கொண்டே, "என்ன?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்டான். அவளோ அவனை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, "நேற்று என்ன நடந்திச்சு??" என்று கேட்க, அவனோ திரு திருவென முழித்து விட்டு, "ஒன்னும் நடக்கலையே" என்றான்.

அவளோ, "அப்புறம் எப்படி??" என்று கோபமாக ஆரம்பித்தவள் அருகே நின்ற ஸ்ரீயை பார்த்து விட்டு மீதி வார்த்தைகளை விழுங்கி கொண்டாள். அவனுமே, "என்னாச்சு??" என்று ஒன்றுமே புரியாத போல கேட்க, "நடிகனாச்சே நம்மள விட நல்லா தான் நடிக்கிறான்" என்று நினைத்தவளோ, "என்ன ஆச்சா??" என்று கடுப்பாக கேட்டபடி அவன் கன்னத்தில் கையை வைத்து பக்கவாட்டாக திருப்ப, அவனோ, "என்னடி??" என்றான்.

அவளோ அவன் கழுத்தில் ஒட்டி இருந்த அவள் பொட்டை எடுத்து கோபமாக அவன் முகத்தின் முன்னே காட்டியவள் அதனை நெற்றியில் வைத்து விட்டு விறுவிறுவென செல்ல, அவள் முதுகை பெருமூச்சுடன் பார்த்து விட்டு ஸ்ரீயை பார்க்க, அவனோ யுவராஜ்ஜையே ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே நின்று இருந்தான்.


யுவராஜ்ஜோ குரலை செருமிக் கொண்டே, "என்னடா??" என்று கேட்க, ஸ்ரீயோ, "நீ சரி இல்ல மச்சி, போதைல இருக்கிற பொண்ணுன்னு கூட பார்க்காம" என்று சொல்ல, அவனோ நாடியை நீவியவாறே, "போதைல இருந்தாலும் பொண்டாட்டி தானே" என்றான்.
Super sis
 
Top