வந்தியதேவனும் குந்தவையும்
அத்தியாயம் 6
இரவுதான் ராம் வீட்டிற்கு வந்தான், ஹாலில் எல்லோரும் இருந்தனர். அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து எல்லாரிடமும் சகஜமாக பேசினாலும் அவன் கண் அங்கு இல்லாத ஒரு ஆளை தேடியது. அது எல்லோருக்கும் தெரிய இப்போது அவன் முன் கிண்டல் செய்து சிரிப்பதை யாரும் முன்னெடுக்கவில்லை.
ராஜி, "ராம் சாப்ட்டியா" என்றபடி சமையலறையில் இருந்து கேட்க, அவன் திரும்பி, "ஆமாம்மா, வெளிய சாப்பிட்டேன், எனக்கு எதும் செஞ்சி வச்சிருந்தீங்களா என்ன" என்று எல்லோரும் அவனையே பார்ப்பது புரிந்து கொஞ்சம் சங்கடமான குரலில் கேட்டான்.
ராஜி உடனே, "துர்காமா நீங்க எல்லாரும் போய் தூங்குங்கமா காலைல எழுந்து இருப்பீங்க, பிரியா நீயும் தான் ரகு கூட்டிட்டு போ, ராம் ஒரு நிமிஷம் இங்கவா இந்த பாலை உன் ரூம்க்கு கொண்டு போ அங்க தான போற?" என்று சொல்ல அனைவரையும் சிரித்துவிட்டனர்.
அவன் அதிர்ச்சியும் அவமானத்திலும், "அம்மா…" என்று கத்தியே விட்டான். ரகு, "என்னைக்கு லேட்டா வரணும்னு தெரியாதாடா… ஆல்ரெடி தேவி உன் ரூம்ல வெயிட்டிங் அப்போ நீ தான பால் எடுத்துட்டு போனும்" என்று சிரிக்க, ராம் அவனை முறைத்தான். அதை பார்த்த அனைவரும் அங்கிருந்து வேகமாக தங்கள் அறைக்கு சென்றனர்.
ராஜி அருகில் முறைத்தபடியே ராம் சென்றான், "அம்மா இது உங்களுக்கே ஓவரா இல்ல"
"அப்படிதான்டா பண்ணுவேன், சாந்திரம் அவ்வளவு வேகமா சொல்ல சொல்ல கேக்காம போற… தேவி என்ன நினைப்பா… அவங்க இருக்காங்க அப்படிங்குறதுக்காகவாவது பாத்து நடந்துக்க மாட்டியா"
"ப்ச்… நான் இப்படித்தான் அவங்களும் தெரிஞ்சுக்கட்டும் என்னால எப்பவும் பாத்து பாத்து நடிச்சுட்டே இருக்க முடியாது"
"நடிப்பா… என்னடா பேசுற, நீ கல்யாணம் வச்சதுல இருந்து சரியே இல்லடா"
"அம்மா அது எல்லாம் விடுங்க இப்போ அப்பா எங்க அவர தான் வந்ததுல இருந்து தேடிக்கிட்டு இருக்கேன்"
"அவர் ஃபோன் பேச மாடிக்கு போனார்"
"சரி நான் போறேன், பால் எனக்கு வேணாம் அவளுக்கு கொண்டு போறேன் தாங்க" என்று அவன் கேட்க அவர் முகத்தில் சந்தோசம் படர்ந்தது.
அவனுடையது மாடி அறை படி ஏறும் போதே மூர்த்தி எதிரில் வந்தார். அவன் தேடியது அவர் எங்கு இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளத்தான், பார்த்துவிட்டான் எதுவும் பேசாமல் படி ஏறினான்.
மூர்த்தி, "ராம் உன்ன பாக்கத்தான் இவ்வளவு நேரம் இங்க சோஃபால வெயிட் பண்ணிட்டு இருந்தேன், ஏண்டா இவ்வளவு நேரம் வர்றதுக்கு" என்றவரின் குரல் கடுமை காட்டியது.
"ஜஸ்ட் ஸ்டக் வித் வொர்க் வேற என்ன சொல்ல" என்றான் சாதாரணமாக.
"சொல்லலாம் தப்பில்ல ஆனா தேவிகிட்ட எதையும் சொல்லிராத" அவர் சொல்ல அவன் கேள்வியாக பார்த்தான்.
"உனக்கு அவளை பிடிச்சிருக்குன்னு தெரியுது அதுக்காக அவகிட்ட உண்மையா இருக்கணும்ன்னு நினைச்சி அவள ராஜமாணிக்கம் சொல்லித்தான் கல்யாணம் பண்ணன்னு சொல்லிராத, இட்ஸ் ரியலி டேங்ஜரஸ் ஃபார் யுர் பியுச்சர், அவ அப்பாவியாவும் தெரியல ஈஸி கோயிங் ஆவும் தெரியல, சோ உனக்கு புரியும்னு நினைக்கிறேன், பெட்டர் அவளுக்கு எதும் தெரியாம இருக்கிறதுதான் நல்லது" அவர் மெதுவாக அவனுக்கு புரிய வைக்க முயன்றார்.
அவன் அவரை ஆழமாக பார்த்துவிட்டு, "இதையே எவ்வளவு காலம் மெயின்டேன் பண்றது" என்றான் குரலை செருமிக்கொண்டு.
அவர் பெரிதாக சிரிக்கத் தொடங்கிவிட்டார், "ராம் இது எல்லாம் ஒரு குழந்தை வந்தா சரியாயிடும் நீ அதை பத்தி வோரி பண்ணிக்காத" என்று முடிக்குமுன் அவன் அவ்விடம் விட்டு சென்றிருந்தான்.
அவன் முகம் முழுக்க எரிச்சலும் கோபமும் போட்டி போட்டு தன் இருப்பை காட்டிக் கொண்டிருந்தது. அவன் அறைக்கதவில் கை வைக்கும் போது தேவியின் ஞாபகம் வர, பெருமூச்சு விட்டான். கஷ்டப்பட்டு முகத்தில் சிரிப்பை கொண்டு வந்து, அறைக்குள் நுழைந்தான்.
அங்கு சோஃபாவில் தேவி கால்மேல் கால் போட்டப்படி ஃபோன் பார்த்துக் கொண்டிருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவள், ராம்மை கண்டு மெதுவாக புன்னகைத்தாள். அவன் அவளிடம் பால் தம்ளரை நீட்டினான், "உனக்கு பசிக்குமேனு அம்மா குடுத்து விட்டாங்க, ஆமா ரொம்ப நேரமா இங்க வெயிட் பண்றியா"
"ஆமா 2 ஹார்ஸ் முன்னாடியே வந்துட்டேன், பால்கனில இருந்து ரெஸ்ட்ரூம் வரைக்கும் சுத்தி பாத்துட்டேன், எல்லா போட்டோஸ்லயும் உங்களை அளந்து பாத்துட்டேன், எதுதெது எங்க இருக்கும்னு மனப்பாடம் பண்ணிட்டேன், பால்கனி ஊஞ்சல்ல கூட ஆடிட்டேன், அப்பவும் போர், இங்க உக்கார்ந்து ஃபோன் நோண்ட ஆரம்பிச்சேன்…" என்று பேசியபடி அவன் அருகே வந்து பாலை வாங்கியவள், "உங்களுக்கு?" என்றாள் கேள்வியாக.
"வேண்டாம்… ரூம் கம்பட்டபிள்லா இருக்கா, இல்லன்னா சொல்லு ரூம்ம இடிச்சி மாத்தி கட்டிரலாம்" என்று கிண்டல் பேசினான்.
"நான் சொல்ல மாட்டேன்னு தைரியமா, இருந்தாலும் பரவால்ல நல்ல தான் இருக்கு" என்று பாலை குடித்தபடி பேச, அவன் இயல்பாக வாட்ச், பெல்ட், ஷர்ட் பட்டன் என்று ஒவ்வொன்றாக கழற்றிக் கொண்டிருந்தான். அவளுக்கு இதை எப்படி எடுப்பது என்று தெரியவில்லை, முயன்றவரை தன்னை இயல்பாக வைத்துக் கொள்ள முனைந்தாள். ஆனால் அவள் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்த ராம், ஷர்ட்டின் இரு பட்டன்களை திறந்துவிட்டபின் அப்படியே நிறுத்தி, "எதுக்கு என்ன ஒரு மாதிரி பாக்குற என்கிட்ட எதும் கேக்கனுமா" என்றான்.
'ஐயையோ இப்ப என்ன நான் சொல்றது… ஒன்னுமில்லைனு சொன்னா அப்பறம் எதுக்கு அப்படி பாத்தன்னு கேப்பான், ஆமா கேட்கணும்னா என்ன கேள்வின்னு கேப்பானே இப்ப என்ன கேள்வி கேக்குறது' என்று அவள் யோசிக்க, அவன், "இவ்வளவு நேரம் நல்லா தான பேசிட்டு இருந்த, இப்ப எதுக்கு இப்படி முழிக்குற… இப்படித்தான் காலைலயும் பண்ண நான் மெட்டி போடுறதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டேன்" என்று நொந்தான்.
அவள் இப்போது சிரித்தாள், "அதானே எவ்வளவு நேரம் தான் ஒரு மனுஷன் கிரின்ஜ் பண்றது, ஆனாலும் உங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கனும் கொஞ்சம் கூட கண்டேபிடிக்க முடியாதபடி நடிக்குறீங்க" என்று கண்களை சுருக்கி அவனை கோபமாக பார்ப்பது போல் போலியாக பாவனை செய்தாள்.
அவனிடம் இப்போது நிம்மதி பெருமூச்சு, "தெங்க் காட் உனக்காவது தெரியுதே அது ஆக்டிங்னு இனி நான் ரொம்ப சிரமப்பட வேண்டாம்… ஆனா உன் மாமா பொன்ன மறக்கவே மாட்டான் மூக்க உடைப்போம்னு சொல்லி எனக்கு ஒரு செகண்ட் மரண பயத்த காட்டிட்டா… என் மரியாதைய காப்பாத்திக்க எவ்வளவு மெனக்கெட வேண்டி இருக்கு. சரி இப்ப நீ கிரிஞ் பண்ண போறியா வித் கொஸ்டீன் லைக், 'என்ன பிடிச்சுதான் கல்யாணம் பண்ணீங்களா' அப்படின்னு கேக்க போறியா" என்று அவன் சிரித்தான்.
தேவி புரியாமல் அவனை பார்க்க, அவனே பேசினான், "இந்த சிட்டுயேஷன் அதான் கேப்பாங்க கேக்க தோணும்… டூ பி ஃபிராங்க், இந்த கேள்விக்கு நான் இல்லன்னு சொன்னா கவலை பட போறியா ஆர் ஆமா நான் பிடிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்னாலும் நீ நம்பத்தான் போறியா… சீ இது பக்கா ஃபேமிலி அரெஞ் பண்ண மேரேஜ் வீ ஆர் கோயிங் வித் தி ஃப்லோ, அவ்வளவு தான் நான் ஃபீல் பண்றேன், வாட் இஸ் யுவர் ஒப்பினியன் இன் இட்"
தேவியின் இதழில் மென்புன்னகை தவழ்ந்தது, "என்ன ஓரளவு புரிஞ்சி வச்சிருக்கீங்க சிறப்பு, எனக்கு எப்பவும் கோயிங் வித் தி ஃபிளட் தான் டில் திஸ் மோமெண்ட் இன்கிளுடிங் யுவர் ஒப்பீனியன்… லெட் இட் கோ, இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" இப்போது பற்கள் தெரிய சிரித்தாள். அவனுள் ஒரு பெரிய நிம்மதி பரவியது அவனும் புன்னகைத்தான், அவள் ஈஸி கோயிங் ஆக அவனுக்கும் தெரியவில்லை ஆனால் அவள் அதிகம் சென்சிடிவ் இல்லை பிரக்டிகல் பெண் என்று அவனுக்கு புரிய அதுவே இப்போதைக்கு போதும் என்று இருந்தது. அவளுக்கு புரிந்தது, அவன் ஏதோ ஒரு கட்டாயத்தில் திருமணம் செய்திருக்கின்றான் என்று ஆனாலும் அதை துறுவ அவள் விரும்பவில்லை இவ்வளவு வெளிப்படையாக பேசியவன் அதையும் சீக்கிரம் சொல்வான்
என்கிற நம்பிக்கை அவளுள் வர, முழு மனதோடு சிரித்தாள்.