யாவும் நின் யாத்ரனாய்..
Episode 05

யாத்ரன் உட்பட மொத்த ஊர் மக்களும் கோயிலுக்குள் கூடியிருக்க, ராணி ஜோதியை வணங்கி அன்றைய பூஜைக்கான சடங்குகளும் ஆரம்பிக்கப்பட்டன.
ஏனோ வரதனோடு நின்றிருந்த யாத்ரனனோ இனம் புரியாத ஒரு உணர்வை உணர்ந்தான். ஏதோ ஒன்று அவனோடு நெருக்கமாக இருப்பது போலும் அவனோடு பழக்கப்பட்டது போலும் அவனுக்குத் தோன்ற, சுற்றியிருக்கும் அனைத்தும் மங்கலாகத் தெரிவது போலிருந்தது.
தலையை தாங்கிக்கொண்டவன், "எனக்.. எனக்கு என்னாச்சு? ஏன் இப்படிலாம் நடக்குது?" என்று இதயம் படபடக்க தனக்குத்தானே கேட்டு சற்று தடுமாற, பக்கத்திலிருந்த வரதனோ அவனைப் பிடித்துக்கொண்டான்.
"டேய் யாத்ரா, என்னாச்சு? வீட்டுக்கு போலாமா?" என்று அவன் பதற்றமாகக் கேட்க, "நத்திங் நத்திங்.. ஐ அம் ஓகே, இதெல்லா பழக்கம் இல்லல்ல, அதான்..." என்று சொன்னவாறு விழிகளை அழுந்த மூடித் திறந்தான்.
சரியாக, ராஜஸ்தானின் கலாச்சார ஆடையில் அலங்காரத்தோடு அத்தனை பேருக்கு நடுவே வந்த பெண்கள் தம் பாரம்பரிய நடனத்தை ஆரம்பிக்க, அந்த கூட்டத்திற்கு நடுவே இருந்தாள் ஜான்சி.
ஹோமகுண்டத்தை சுற்றி உடலை வளைத்து நளினத்தோடு அவள் ஆட, யாத்ரனின் பார்வையும் அவள் மீதுதான் இருந்தது.
"வாவ், ஷீ இஸ் கோர்ஜியஸ்" என்று மெல்லிய குரலில் சொல்லி யாத்ரன் அவளை ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்க, பக்கத்திலிருந்த வரதனின் காதிலும் அந்த வார்த்தைகள் கேட்டது.
'யாரை சொல்றான்...?' என்று யோசித்துக்கொண்டே தோழனின் பார்வை செல்லும் திசையைப் பார்த்தவனுக்கு அடுத்தகணம் தூக்கி வாரிப்போட்டது.
'ஆத்தீ! ஊரை விட்டு உயிரோட டுபாய்க்கு போவோமான்னே சந்தேகமா இருக்கே' என்று வரதன் பீதியோடு நெஞ்சைப் பிடித்துக்கொள்ள, யாத்ரனோ தன்னை மறந்து ஜான்சியின் கைகள் அசைவதையும் அவளுடைய இடை வளைவதையுமே பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆனால், நடனத்தில் மூழ்கியிருந்த ஜான்சிக்கு அவனுடைய பார்வை எல்லாம் கொஞ்சமும் தெரியவில்லை. அவள் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தவாறு நடனத்தில் இருக்க, இசை முடிந்ததும் தலை வணங்கியவள் சுற்றியிருந்த மக்களோடு சென்று நின்றுக்கொண்டாள்.
"ரொம்ப நல்ல ஆடின ஜானு" என்று அவளின் பக்கத்திலிருந்த பெரியவர் ஒருவர் சொல்ல, புன்னகையோடு தலையசைத்தவளுக்கு மனம் ஒரு திசைக்கு உந்தவும், உடனே திரும்பிப் பார்த்தாள்.
அங்கு தன்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த யாத்ரனைப் பார்த்ததும் அவனுடைய பார்வையில் அவளுக்கு வெட்கம் பீறிட, முகம் குப்பென்று சிவந்தது.
'இவர் என்ன நம்மள இப்படி பார்த்துக்கிட்டு இருக்காரு, யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க?' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவள் அவன் பார்வையைத் தவிர்த்து சடங்குகளை கவனிக்க, ஆனால் மனம்தான் அவளின் பேச்சை கேட்பதாய் இல்லை.
தன்னையும் மீறி அவள் ஓரக்கண்ணால் அவனைப் பார்க்க, அதைக் கண்டுகொண்டவனின் இதழ்கள் குறும்பாக விரிய, 'நான் உன்கிட்ட பேசணும்' என்றான் சைகையில் வேகமாக.
அதைப் புரிந்துக்கொண்டவளுக்கு விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிய, பதற்றத்தோடு திரும்பிக்கொண்ட ஜான்சி தெரியாமல் கூட அவனின் புறம் திரும்பவே இல்லை.
யாத்ரனும் அவளிடம் பேச பல முறை முயற்சிக்க, பெண்ணவளோ கண்ணாம்பூச்சி ஆட்டம்தான் ஆடிக்கொண்டிருந்தாள்.
எப்படியோ அன்றைய பூஜை முடிய அடுத்தநாளும் வந்தது.
"அடியே ருக்கு, உங்க வீட்டுக்கு வந்திருக்காரே அந்த ஆளு, அவரோட பார்வையே சரியில்லடீ" என்று ஜான்சி உம்மென்ற முகத்தோடு சொல்ல, "உன்ன பார்த்தாரா..." என்று தன் தோழியை ஏற இறங்க ஒரு பார்வைப் பார்த்தவள், "நீயா சும்மா கற்பனை பண்ணிக்காத! அதுக்கப்பறம் மோதல் காதலான கதையாகிடும். உனக்கொன்னு தெரியுமா, அவர் நம்மள மாதிரி இல்ல ஜானு, நம்ம ஆளுங்க இல்ல. உனக்கு புரியுதா?" என்று ஹஸ்கி குரலில் சொன்னாள்.
ஜான்சிக்கு அவள் சொல்ல வருவது கொஞ்சமும் புரியவில்லை.
"ஆங்... அப்படின்னா.." என்று அவள் கேட்க வருவதற்குள், "அடியே ருக்மணி உங்கம்மா உன்ன விளக்குமாத்தோட தேடிட்டு இருக்காங்க. அடுப்புல கொழம்ப வச்சிட்டு அப்படியே வந்துட்டியா என்ன?" என தூரத்திலிருந்து கத்தினாள் அவளின் பக்கத்து வீட்டிலுள்ள ஜெயா.
"அடங்கொப்புரானே! அதை மறந்தே போயிட்டேனே... ஜானு உன்ன அப்பறம் பார்க்குறேன்" என்றுவிட்டு அவள் ஓடியிருக்க, "உன் பேரு ஜானுவா?" என்ற கணீர் குரல் பின்னாலிருந்து கேட்டது.
ஜான்சி வேகமாக திரும்பிப் பார்த்தவள், தன்னெதிரே நின்றிருந்த யாத்ரனைப் பார்த்ததும் அங்கிருந்து ஓடப் போக, வேக எட்டுக்களை வைத்து அவளை நெருங்கியவன் அவள் கரத்தைப் பற்றியிழுத்தான்.
இதுவரை ஆண் ஸ்பரிசத்தை உணர்ந்திராத ஜான்சிக்கு அவன் தொட்டதும் உடல் கூசிப்போக, வெடக்கென்று அவள் கரத்தை இழுத்துக்கொண்டதும், அன்று வரதன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தவனாக "ஓ ஷீட்! சாரி..." என்று நெற்றியில் அடித்துக்கொண்டவனுக்கும் இப்போது பதற்றம் தொற்றிக்கொண்டது.
"உங்களுக்கு இப்போ என்ன வேணும், அன்னைக்கு ஃபோட்டோ எடுத்தீங்க, இப்போ கைய பிடிச்சு இழுக்குறீங்க. யாராச்சும்..." என்று அவள் பேசி முடிப்பதற்குள் யாத்ரனோ, "ஹேய் ஹேய் ப்ளீஸ், எனக்கு கல்யாணத்துல எல்லா இன்ட்ரஸ்ட் இல்ல, இத யார்கிட்டயும் சொல்லிராத, அப்பறம் என்னை உனக்கு கட்டி வச்சிருவாங்க, அப்பறம் என் பெச்சிலர் லைஃப் ஓ காட்!" என்று படபடவென பேசிக்கொண்டே போனான்.
அவனின் வார்த்தைகளைக் கேட்டு ஒருசில கணங்கள் வாயைப் பிளந்துக்கொண்டு நின்றிருந்தவள் பின் நடப்புக்கு வந்து வாய்விட்டு சிரிக்க, அவளை புரியாமல் பார்த்தான் ஆடவன்.
"பழைய கிராமத்து படம்லாம் அதிகமா பார்ப்பீங்களோ?" என்று ஜான்சி சிரித்தவாறுக் கேட்க, "அப்போ... அந்த மாதிரிலாம் பண்ண மாட்டாங்களா, தேங்க் காட்" என்று அவன் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், "அப்படிதான் பண்ணுவாங்க, அதை விட மோசமா கூட" என்றாள் சுற்றிமுற்றி பார்த்த வண்ணம்.
யாத்ரனுக்கு பக்கென்று இருந்தது.
அடுத்தநொடி காதில் விழுந்த பேச்சு சத்தத்தில் பதறியவளாக கொஞ்சமும் யோசிக்காமல் அவனின் கரத்தைப் பற்றி அங்கிருந்த சுவற்றுக்கு பின்னே இழுத்துச் சென்றாள் ஜான்சி.
அந்த சுவற்றுக்கு பின்னால் மறைந்து நின்றவாறு அவள் மெல்ல எட்டிப் பார்க்க, அவள் யூகித்தது சரியே..
அவளுடைய தந்தை சுபாஷ்தான் அவருடைய நண்பர்களோடு அந்த வழியாக செல்ல, அவர் அந்த இடத்தை விட்டு நகரும் வரை பார்த்துக்கொண்டிருந்தவள் அவர் கண்ணிலிருந்து மறைந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டவளாக விழிகளை மூடி சுவற்றில் சாய்ந்துக்கொண்டாள்.
ஆனால் ஏதோ வித்தியாசமாகத் தோன்ற பட்டென்று விழிகளைத் திறந்தவள் நூலிடைவெளியில் தன்னை நெருங்கியிருந்த யாத்ரனைப் பார்த்ததும் அதிர்ந்து விழிக்க, அவனோ அவளை குறும்பாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
"உன் அப்பாக்கு இவ்வளவு பயமா?" என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவன் கேட்டதும், "அப்பான்னா யாருக்குதான் பயம் இருக்காது, நான் உங்க கூட நின்னுட்டு இருக்குறத மட்டும் அவர் பார்த்திருந்தாருன்னா அம்புட்டுதான், என்னை இங்கேயே புதைச்சிருவாரு. தினமும் அடி வாங்குற காரணம் போதாதுன்னு இது வேறயா.." என்றாள் ஜான்சி சலிப்போடு.
"அப்பான்னா அடிப்பாரா, என்ன சொல்ற? என் டாடி என்னை அடிச்சதே இல்ல. ஹீ இஸ் வெர்ரி ஃப்ரென்ட்லி, என்ட் குட் டூ மீ" என்று யாத்ரன் தன் தந்தையைப் பற்றி பெருமையாகச் சொல்ல, அவனை விழி விரித்து பார்த்த வண்ணமாய் நின்றிருந்தவளுக்கு அவன் சொன்னதை விட அவனின் ஆங்கிலத்தில் தான் மயக்கமே வந்துவிட்டது.
"ரொம்ப நல்லாவே இங்லீசு பேசுறீங்க" என்று குறையாத ஆச்சரியத்தோடு அவள் சொல்ல, அப்போதுதான் ஏதோ ஞாபகம் வந்தவனாக, "ஹேய் ஜானு, நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும். நேத்து... நேத்து நைட் நீ டான்ஸ் பண்ணல்ல! கைய அங்க இங்கன்னு அசைச்சு பம்பரம் மாதிரி சுத்திக்கிட்டு அது ரொம்ப அழகா இருந்துச்சு. ஐ ஹேவ் நெவர் சீன் எனிதிங் லைக் திஸ் பிஃபோர். அது எப்படி பண்ண, எனக்கும் கத்து தரீயா?" என்று ஆர்வத்தோடு கேட்டான் யாத்ரன்.
அவன் கேட்டதை கிரகிக்கவே அவளுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
"ஆம்பிளைங்க இந்த நாட்டியத்த ஆட போறீங்களா, அது.. அதெப்படி முடியும்?" என்று ஜான்சி அதிர்ந்த குரலில் கேட்க, ஆடவனோ அலட்சியமாகத் தோளைக் குலுக்கினான்.
"ஏன் முடியாதா? ஐ அம் அ குவிக் லேனர், உனக்கு கஷ்டமா இருக்காது. எனக்கு எங்க எப்போ கத்து தருவேன்னு மட்டும் சொல்லு.." என்று அவன் தீவிர முகபாவனையோடு கேட்ட விதத்தில், ஜான்சிக்கு இது கனவோ என்று கூடத் தோன்றியது.
"அது.. அது வந்து.." என்று எதேர்ச்சையாகத் திரும்பியவளின் விழிகளில் பராமரிக்கப்படாது விட்டிருந்த ஒரு கோயில் தென்பட, "இது மட்டும் கனவு இல்லன்னா நாளைக்கு அந்த இடத்துல சந்திப்போம்" என்று சொல்லிவிட்டு வேகமாக நகரப் போக, அவள் கரத்தைப் பற்றியிழுத்தவன் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, "கனவு இல்லன்னு இப்போ புரியுதா?" என்று கேட்டு புன்னகையோடு அங்கிருந்து சென்றான்.
ஆனால் பெண்ணவளுக்குதான் பதற்றத்தில் உடல் நடுங்க, அடி வயிற்றிலிருந்து ஏதோ ஒன்று உடல் முழுவதும் பரவுவது போலிருந்தது.
எச்சிலை விழுங்கிக்கொண்ட ஜான்சி தன்னை நிதானப்படுத்தவே படாத பாடுபட, அடுத்தநாளும் வந்தது.
காலை எழுந்ததிலிருந்து யோசனையோடே தன் வேலைகளை முடித்தவள், நேரத்தைப் பார்த்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி அந்த கோயிலை நோக்கித்தான் சென்றாள்.
'என்ன இது ஜான்சி, எல்லாமே உன் கை மீறி நடக்குற மாதிரி இருக்கு. இப்போ எதுக்கு நீ அவனுக்கு கத்து தரேன்னு சொன்ன, அதுவும் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த கோயிலுக்கு அவன வர சொல்லியிருக்க. அவன் கூட இருக்குறத யாராச்சும் பார்த்தாங்கன்னா என்னாகும்? உனக்கென்ன தலையில டப்பா கிப்பா ஏதாச்சும் விழுந்துருச்சா ச்சே!'
என தனக்குள்ளே ஏதேதோ யோசித்துக்கொண்டு அந்த கோயிலுக்குச் சென்றவள் பதற்றத்தோடு கைகளைப் பிசைந்தவாறு சுற்றி முற்றிப் பார்த்தாள்.
ஆனால், அந்த இடத்தில் யாருமே இருப்பதாகத் தெரியவில்லை.
அந்த இடத்தில் தனியே நிற்பதற்கும் அவளுக்கு சற்று பயமாக இருந்தது.
"ஊஃப்ப்... நல்லதா போச்சு" என்று வாய்விட்டு சொல்லிக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடப் போனாள்; அப்போது சரியாக பின்னாலிருந்து கேட்டது அவனின் ஆண்மை நிறைந்த குரல்.
"கத்து தர்ற வேண்டிய குருவே இவ்வளவு லேட்டா வர்றது சரியா என்ன?" என்ற அவனின் கேள்வியில் விருட்டென திரும்பியவளின் முன்னே ஒற்றைக் காலை மடக்கி தூணில் சாய்ந்தபடி நின்றிருந்தான் யாத்ரன்.
" ஹிஹிஹி... நீங்க இங்கதான் இருக்கீங்களா, அது வந்து... இந்த நாட்டியத்த எல்லா பசங்க கத்துக்க மாட்டாங்க, வீட்டுக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க. பொண்ணுங்கதான் இதையெல்லா கத்துக்கணும். அத சொல்லிட்டு போகத்தான் வந்தேன்" என்று விட்டு ஜான்சி தப்பிக்கப் பார்க்க, "ஹேய் வெயிட்!" என்று அழைத்து நிறுத்தியவன் அவளெதிரே வேகமாக வந்தான்.
"இட்ஸ் ஓகே, நெஜமாவே இதை சொல்லிட்டு போகத்தான் இவ்வளவு தூரம் வந்தியா! இதை நீ நேத்தே சொல்லியிருக்கலாமே!" என்று கேட்ட யாத்ரன் அப்போதுதான் அந்த கோயிலில் இருந்த சில சிற்பங்களை கவனித்தான்.
"ரொம்ப அழகா செதுக்குயிருக்காங்க, தத்.. தத்... ஆங் தத்ரூபமா இருக்கு" என்று சொல்லிக்கொண்டே தூணில் செதுக்கியிருந்த அந்த சிற்பங்களை அவன் வருட, அவனுடலில் ஏதோ மின்சாரம் பாய்ந்த உணர்வு.
விழிகளை அழுந்த மூடிக்கொண்டவனின் மனக்கண் முன் ஏதேதோ விம்பங்கள் மின்னல் வேகத்தில் ஓடி மறைய, பட்டென்று விழிகளைத் திறந்த யாத்ரனின் முகம் சிவந்துப் போயிருந்தது.
அவனுடைய இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்திருக்க, உடல் முழுவதும் பயத்தால் வியர்வையில் நனைந்திருந்தது.
அவனையே பார்த்துக்கொண்டிருந்த ஜான்சிக்கு ஏதோ ஒன்று சரியில்லை என மட்டும் தோன்ற, புருவ முடிச்சுகளோடு அவனை நெருங்கினாள்.
"என்னாச்சு, நீங்க நல்லாதானே இருக்கீங்க" என்று அவள் புரியாமல் கேட்க, அவள் முகத்தைப் பார்த்தவன், "எனக்கு ஒன்னுமே புரியல, எதுவுமே புரியல..." என்று தழுதழுத்த குரலில் சொல்லிக்கொண்டே அவளை இழுத்து பயத்தில் அணைத்துக்கொண்டான்.
ஆடவனின் அணைப்பு என்னவோ தாயிடம் ஆறுதல் தேடும் குழந்தைப் போலிருக்க, பெண்ணவள்தான் ஆடவனின் ஸ்பரிசத்திலும் நெருக்கத்திலும் இதுவரை அறிந்திராத பல உணர்ச்சிகளை உணர ஆரம்பித்தாள்.
***********
படிச்சுட்டு மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க..
என்ட் என்னோட மூன்று ஆன்டி ஹீரோ கதைகளான
தஷுரி
ரதியின் ரணதீரன்
கனவுகள் கனலாய் மாறுமா
இந்த கதைகள Papr space Website appல April மாதம் வரைக்கும் ஃப்ரீயா படிக்கலாம்.. சோ மறக்காம ரீட் பண்ணிக்கோங்க..
Here's the link
https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4
என்னோட கதைகள ஆடியோ நாவலா கேக்கணும்னா...
Channel name - kadhaikulla polaama
இப்போ விழி தீயிலொரு தவம் நாவல் ஆடியோ வடிவுல இருக்கு..
Channel link
https://youtube.com/@kadhaikullapolaama7612?si=BwNNnPMl514OHY2Y
Episode 05

யாத்ரன் உட்பட மொத்த ஊர் மக்களும் கோயிலுக்குள் கூடியிருக்க, ராணி ஜோதியை வணங்கி அன்றைய பூஜைக்கான சடங்குகளும் ஆரம்பிக்கப்பட்டன.
ஏனோ வரதனோடு நின்றிருந்த யாத்ரனனோ இனம் புரியாத ஒரு உணர்வை உணர்ந்தான். ஏதோ ஒன்று அவனோடு நெருக்கமாக இருப்பது போலும் அவனோடு பழக்கப்பட்டது போலும் அவனுக்குத் தோன்ற, சுற்றியிருக்கும் அனைத்தும் மங்கலாகத் தெரிவது போலிருந்தது.
தலையை தாங்கிக்கொண்டவன், "எனக்.. எனக்கு என்னாச்சு? ஏன் இப்படிலாம் நடக்குது?" என்று இதயம் படபடக்க தனக்குத்தானே கேட்டு சற்று தடுமாற, பக்கத்திலிருந்த வரதனோ அவனைப் பிடித்துக்கொண்டான்.
"டேய் யாத்ரா, என்னாச்சு? வீட்டுக்கு போலாமா?" என்று அவன் பதற்றமாகக் கேட்க, "நத்திங் நத்திங்.. ஐ அம் ஓகே, இதெல்லா பழக்கம் இல்லல்ல, அதான்..." என்று சொன்னவாறு விழிகளை அழுந்த மூடித் திறந்தான்.
சரியாக, ராஜஸ்தானின் கலாச்சார ஆடையில் அலங்காரத்தோடு அத்தனை பேருக்கு நடுவே வந்த பெண்கள் தம் பாரம்பரிய நடனத்தை ஆரம்பிக்க, அந்த கூட்டத்திற்கு நடுவே இருந்தாள் ஜான்சி.
ஹோமகுண்டத்தை சுற்றி உடலை வளைத்து நளினத்தோடு அவள் ஆட, யாத்ரனின் பார்வையும் அவள் மீதுதான் இருந்தது.
"வாவ், ஷீ இஸ் கோர்ஜியஸ்" என்று மெல்லிய குரலில் சொல்லி யாத்ரன் அவளை ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்க, பக்கத்திலிருந்த வரதனின் காதிலும் அந்த வார்த்தைகள் கேட்டது.
'யாரை சொல்றான்...?' என்று யோசித்துக்கொண்டே தோழனின் பார்வை செல்லும் திசையைப் பார்த்தவனுக்கு அடுத்தகணம் தூக்கி வாரிப்போட்டது.
'ஆத்தீ! ஊரை விட்டு உயிரோட டுபாய்க்கு போவோமான்னே சந்தேகமா இருக்கே' என்று வரதன் பீதியோடு நெஞ்சைப் பிடித்துக்கொள்ள, யாத்ரனோ தன்னை மறந்து ஜான்சியின் கைகள் அசைவதையும் அவளுடைய இடை வளைவதையுமே பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆனால், நடனத்தில் மூழ்கியிருந்த ஜான்சிக்கு அவனுடைய பார்வை எல்லாம் கொஞ்சமும் தெரியவில்லை. அவள் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தவாறு நடனத்தில் இருக்க, இசை முடிந்ததும் தலை வணங்கியவள் சுற்றியிருந்த மக்களோடு சென்று நின்றுக்கொண்டாள்.
"ரொம்ப நல்ல ஆடின ஜானு" என்று அவளின் பக்கத்திலிருந்த பெரியவர் ஒருவர் சொல்ல, புன்னகையோடு தலையசைத்தவளுக்கு மனம் ஒரு திசைக்கு உந்தவும், உடனே திரும்பிப் பார்த்தாள்.
அங்கு தன்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த யாத்ரனைப் பார்த்ததும் அவனுடைய பார்வையில் அவளுக்கு வெட்கம் பீறிட, முகம் குப்பென்று சிவந்தது.
'இவர் என்ன நம்மள இப்படி பார்த்துக்கிட்டு இருக்காரு, யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க?' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவள் அவன் பார்வையைத் தவிர்த்து சடங்குகளை கவனிக்க, ஆனால் மனம்தான் அவளின் பேச்சை கேட்பதாய் இல்லை.
தன்னையும் மீறி அவள் ஓரக்கண்ணால் அவனைப் பார்க்க, அதைக் கண்டுகொண்டவனின் இதழ்கள் குறும்பாக விரிய, 'நான் உன்கிட்ட பேசணும்' என்றான் சைகையில் வேகமாக.
அதைப் புரிந்துக்கொண்டவளுக்கு விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிய, பதற்றத்தோடு திரும்பிக்கொண்ட ஜான்சி தெரியாமல் கூட அவனின் புறம் திரும்பவே இல்லை.
யாத்ரனும் அவளிடம் பேச பல முறை முயற்சிக்க, பெண்ணவளோ கண்ணாம்பூச்சி ஆட்டம்தான் ஆடிக்கொண்டிருந்தாள்.
எப்படியோ அன்றைய பூஜை முடிய அடுத்தநாளும் வந்தது.
"அடியே ருக்கு, உங்க வீட்டுக்கு வந்திருக்காரே அந்த ஆளு, அவரோட பார்வையே சரியில்லடீ" என்று ஜான்சி உம்மென்ற முகத்தோடு சொல்ல, "உன்ன பார்த்தாரா..." என்று தன் தோழியை ஏற இறங்க ஒரு பார்வைப் பார்த்தவள், "நீயா சும்மா கற்பனை பண்ணிக்காத! அதுக்கப்பறம் மோதல் காதலான கதையாகிடும். உனக்கொன்னு தெரியுமா, அவர் நம்மள மாதிரி இல்ல ஜானு, நம்ம ஆளுங்க இல்ல. உனக்கு புரியுதா?" என்று ஹஸ்கி குரலில் சொன்னாள்.
ஜான்சிக்கு அவள் சொல்ல வருவது கொஞ்சமும் புரியவில்லை.
"ஆங்... அப்படின்னா.." என்று அவள் கேட்க வருவதற்குள், "அடியே ருக்மணி உங்கம்மா உன்ன விளக்குமாத்தோட தேடிட்டு இருக்காங்க. அடுப்புல கொழம்ப வச்சிட்டு அப்படியே வந்துட்டியா என்ன?" என தூரத்திலிருந்து கத்தினாள் அவளின் பக்கத்து வீட்டிலுள்ள ஜெயா.
"அடங்கொப்புரானே! அதை மறந்தே போயிட்டேனே... ஜானு உன்ன அப்பறம் பார்க்குறேன்" என்றுவிட்டு அவள் ஓடியிருக்க, "உன் பேரு ஜானுவா?" என்ற கணீர் குரல் பின்னாலிருந்து கேட்டது.
ஜான்சி வேகமாக திரும்பிப் பார்த்தவள், தன்னெதிரே நின்றிருந்த யாத்ரனைப் பார்த்ததும் அங்கிருந்து ஓடப் போக, வேக எட்டுக்களை வைத்து அவளை நெருங்கியவன் அவள் கரத்தைப் பற்றியிழுத்தான்.
இதுவரை ஆண் ஸ்பரிசத்தை உணர்ந்திராத ஜான்சிக்கு அவன் தொட்டதும் உடல் கூசிப்போக, வெடக்கென்று அவள் கரத்தை இழுத்துக்கொண்டதும், அன்று வரதன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தவனாக "ஓ ஷீட்! சாரி..." என்று நெற்றியில் அடித்துக்கொண்டவனுக்கும் இப்போது பதற்றம் தொற்றிக்கொண்டது.
"உங்களுக்கு இப்போ என்ன வேணும், அன்னைக்கு ஃபோட்டோ எடுத்தீங்க, இப்போ கைய பிடிச்சு இழுக்குறீங்க. யாராச்சும்..." என்று அவள் பேசி முடிப்பதற்குள் யாத்ரனோ, "ஹேய் ஹேய் ப்ளீஸ், எனக்கு கல்யாணத்துல எல்லா இன்ட்ரஸ்ட் இல்ல, இத யார்கிட்டயும் சொல்லிராத, அப்பறம் என்னை உனக்கு கட்டி வச்சிருவாங்க, அப்பறம் என் பெச்சிலர் லைஃப் ஓ காட்!" என்று படபடவென பேசிக்கொண்டே போனான்.
அவனின் வார்த்தைகளைக் கேட்டு ஒருசில கணங்கள் வாயைப் பிளந்துக்கொண்டு நின்றிருந்தவள் பின் நடப்புக்கு வந்து வாய்விட்டு சிரிக்க, அவளை புரியாமல் பார்த்தான் ஆடவன்.
"பழைய கிராமத்து படம்லாம் அதிகமா பார்ப்பீங்களோ?" என்று ஜான்சி சிரித்தவாறுக் கேட்க, "அப்போ... அந்த மாதிரிலாம் பண்ண மாட்டாங்களா, தேங்க் காட்" என்று அவன் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், "அப்படிதான் பண்ணுவாங்க, அதை விட மோசமா கூட" என்றாள் சுற்றிமுற்றி பார்த்த வண்ணம்.
யாத்ரனுக்கு பக்கென்று இருந்தது.
அடுத்தநொடி காதில் விழுந்த பேச்சு சத்தத்தில் பதறியவளாக கொஞ்சமும் யோசிக்காமல் அவனின் கரத்தைப் பற்றி அங்கிருந்த சுவற்றுக்கு பின்னே இழுத்துச் சென்றாள் ஜான்சி.
அந்த சுவற்றுக்கு பின்னால் மறைந்து நின்றவாறு அவள் மெல்ல எட்டிப் பார்க்க, அவள் யூகித்தது சரியே..
அவளுடைய தந்தை சுபாஷ்தான் அவருடைய நண்பர்களோடு அந்த வழியாக செல்ல, அவர் அந்த இடத்தை விட்டு நகரும் வரை பார்த்துக்கொண்டிருந்தவள் அவர் கண்ணிலிருந்து மறைந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டவளாக விழிகளை மூடி சுவற்றில் சாய்ந்துக்கொண்டாள்.
ஆனால் ஏதோ வித்தியாசமாகத் தோன்ற பட்டென்று விழிகளைத் திறந்தவள் நூலிடைவெளியில் தன்னை நெருங்கியிருந்த யாத்ரனைப் பார்த்ததும் அதிர்ந்து விழிக்க, அவனோ அவளை குறும்பாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
"உன் அப்பாக்கு இவ்வளவு பயமா?" என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவன் கேட்டதும், "அப்பான்னா யாருக்குதான் பயம் இருக்காது, நான் உங்க கூட நின்னுட்டு இருக்குறத மட்டும் அவர் பார்த்திருந்தாருன்னா அம்புட்டுதான், என்னை இங்கேயே புதைச்சிருவாரு. தினமும் அடி வாங்குற காரணம் போதாதுன்னு இது வேறயா.." என்றாள் ஜான்சி சலிப்போடு.
"அப்பான்னா அடிப்பாரா, என்ன சொல்ற? என் டாடி என்னை அடிச்சதே இல்ல. ஹீ இஸ் வெர்ரி ஃப்ரென்ட்லி, என்ட் குட் டூ மீ" என்று யாத்ரன் தன் தந்தையைப் பற்றி பெருமையாகச் சொல்ல, அவனை விழி விரித்து பார்த்த வண்ணமாய் நின்றிருந்தவளுக்கு அவன் சொன்னதை விட அவனின் ஆங்கிலத்தில் தான் மயக்கமே வந்துவிட்டது.
"ரொம்ப நல்லாவே இங்லீசு பேசுறீங்க" என்று குறையாத ஆச்சரியத்தோடு அவள் சொல்ல, அப்போதுதான் ஏதோ ஞாபகம் வந்தவனாக, "ஹேய் ஜானு, நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும். நேத்து... நேத்து நைட் நீ டான்ஸ் பண்ணல்ல! கைய அங்க இங்கன்னு அசைச்சு பம்பரம் மாதிரி சுத்திக்கிட்டு அது ரொம்ப அழகா இருந்துச்சு. ஐ ஹேவ் நெவர் சீன் எனிதிங் லைக் திஸ் பிஃபோர். அது எப்படி பண்ண, எனக்கும் கத்து தரீயா?" என்று ஆர்வத்தோடு கேட்டான் யாத்ரன்.
அவன் கேட்டதை கிரகிக்கவே அவளுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
"ஆம்பிளைங்க இந்த நாட்டியத்த ஆட போறீங்களா, அது.. அதெப்படி முடியும்?" என்று ஜான்சி அதிர்ந்த குரலில் கேட்க, ஆடவனோ அலட்சியமாகத் தோளைக் குலுக்கினான்.
"ஏன் முடியாதா? ஐ அம் அ குவிக் லேனர், உனக்கு கஷ்டமா இருக்காது. எனக்கு எங்க எப்போ கத்து தருவேன்னு மட்டும் சொல்லு.." என்று அவன் தீவிர முகபாவனையோடு கேட்ட விதத்தில், ஜான்சிக்கு இது கனவோ என்று கூடத் தோன்றியது.
"அது.. அது வந்து.." என்று எதேர்ச்சையாகத் திரும்பியவளின் விழிகளில் பராமரிக்கப்படாது விட்டிருந்த ஒரு கோயில் தென்பட, "இது மட்டும் கனவு இல்லன்னா நாளைக்கு அந்த இடத்துல சந்திப்போம்" என்று சொல்லிவிட்டு வேகமாக நகரப் போக, அவள் கரத்தைப் பற்றியிழுத்தவன் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, "கனவு இல்லன்னு இப்போ புரியுதா?" என்று கேட்டு புன்னகையோடு அங்கிருந்து சென்றான்.
ஆனால் பெண்ணவளுக்குதான் பதற்றத்தில் உடல் நடுங்க, அடி வயிற்றிலிருந்து ஏதோ ஒன்று உடல் முழுவதும் பரவுவது போலிருந்தது.
எச்சிலை விழுங்கிக்கொண்ட ஜான்சி தன்னை நிதானப்படுத்தவே படாத பாடுபட, அடுத்தநாளும் வந்தது.
காலை எழுந்ததிலிருந்து யோசனையோடே தன் வேலைகளை முடித்தவள், நேரத்தைப் பார்த்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி அந்த கோயிலை நோக்கித்தான் சென்றாள்.
'என்ன இது ஜான்சி, எல்லாமே உன் கை மீறி நடக்குற மாதிரி இருக்கு. இப்போ எதுக்கு நீ அவனுக்கு கத்து தரேன்னு சொன்ன, அதுவும் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த கோயிலுக்கு அவன வர சொல்லியிருக்க. அவன் கூட இருக்குறத யாராச்சும் பார்த்தாங்கன்னா என்னாகும்? உனக்கென்ன தலையில டப்பா கிப்பா ஏதாச்சும் விழுந்துருச்சா ச்சே!'
என தனக்குள்ளே ஏதேதோ யோசித்துக்கொண்டு அந்த கோயிலுக்குச் சென்றவள் பதற்றத்தோடு கைகளைப் பிசைந்தவாறு சுற்றி முற்றிப் பார்த்தாள்.
ஆனால், அந்த இடத்தில் யாருமே இருப்பதாகத் தெரியவில்லை.
அந்த இடத்தில் தனியே நிற்பதற்கும் அவளுக்கு சற்று பயமாக இருந்தது.
"ஊஃப்ப்... நல்லதா போச்சு" என்று வாய்விட்டு சொல்லிக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடப் போனாள்; அப்போது சரியாக பின்னாலிருந்து கேட்டது அவனின் ஆண்மை நிறைந்த குரல்.
"கத்து தர்ற வேண்டிய குருவே இவ்வளவு லேட்டா வர்றது சரியா என்ன?" என்ற அவனின் கேள்வியில் விருட்டென திரும்பியவளின் முன்னே ஒற்றைக் காலை மடக்கி தூணில் சாய்ந்தபடி நின்றிருந்தான் யாத்ரன்.
" ஹிஹிஹி... நீங்க இங்கதான் இருக்கீங்களா, அது வந்து... இந்த நாட்டியத்த எல்லா பசங்க கத்துக்க மாட்டாங்க, வீட்டுக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க. பொண்ணுங்கதான் இதையெல்லா கத்துக்கணும். அத சொல்லிட்டு போகத்தான் வந்தேன்" என்று விட்டு ஜான்சி தப்பிக்கப் பார்க்க, "ஹேய் வெயிட்!" என்று அழைத்து நிறுத்தியவன் அவளெதிரே வேகமாக வந்தான்.
"இட்ஸ் ஓகே, நெஜமாவே இதை சொல்லிட்டு போகத்தான் இவ்வளவு தூரம் வந்தியா! இதை நீ நேத்தே சொல்லியிருக்கலாமே!" என்று கேட்ட யாத்ரன் அப்போதுதான் அந்த கோயிலில் இருந்த சில சிற்பங்களை கவனித்தான்.
"ரொம்ப அழகா செதுக்குயிருக்காங்க, தத்.. தத்... ஆங் தத்ரூபமா இருக்கு" என்று சொல்லிக்கொண்டே தூணில் செதுக்கியிருந்த அந்த சிற்பங்களை அவன் வருட, அவனுடலில் ஏதோ மின்சாரம் பாய்ந்த உணர்வு.
விழிகளை அழுந்த மூடிக்கொண்டவனின் மனக்கண் முன் ஏதேதோ விம்பங்கள் மின்னல் வேகத்தில் ஓடி மறைய, பட்டென்று விழிகளைத் திறந்த யாத்ரனின் முகம் சிவந்துப் போயிருந்தது.
அவனுடைய இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்திருக்க, உடல் முழுவதும் பயத்தால் வியர்வையில் நனைந்திருந்தது.
அவனையே பார்த்துக்கொண்டிருந்த ஜான்சிக்கு ஏதோ ஒன்று சரியில்லை என மட்டும் தோன்ற, புருவ முடிச்சுகளோடு அவனை நெருங்கினாள்.
"என்னாச்சு, நீங்க நல்லாதானே இருக்கீங்க" என்று அவள் புரியாமல் கேட்க, அவள் முகத்தைப் பார்த்தவன், "எனக்கு ஒன்னுமே புரியல, எதுவுமே புரியல..." என்று தழுதழுத்த குரலில் சொல்லிக்கொண்டே அவளை இழுத்து பயத்தில் அணைத்துக்கொண்டான்.
ஆடவனின் அணைப்பு என்னவோ தாயிடம் ஆறுதல் தேடும் குழந்தைப் போலிருக்க, பெண்ணவள்தான் ஆடவனின் ஸ்பரிசத்திலும் நெருக்கத்திலும் இதுவரை அறிந்திராத பல உணர்ச்சிகளை உணர ஆரம்பித்தாள்.
***********
படிச்சுட்டு மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க..
என்ட் என்னோட மூன்று ஆன்டி ஹீரோ கதைகளான
தஷுரி
ரதியின் ரணதீரன்
கனவுகள் கனலாய் மாறுமா
இந்த கதைகள Papr space Website appல April மாதம் வரைக்கும் ஃப்ரீயா படிக்கலாம்.. சோ மறக்காம ரீட் பண்ணிக்கோங்க..
Here's the link
https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4
என்னோட கதைகள ஆடியோ நாவலா கேக்கணும்னா...
Channel name - kadhaikulla polaama
இப்போ விழி தீயிலொரு தவம் நாவல் ஆடியோ வடிவுல இருக்கு..
Channel link
https://youtube.com/@kadhaikullapolaama7612?si=BwNNnPMl514OHY2Y