மௌனம் 5
அவன் கூறிய வார்த்தைகளில் இருந்து இப்போதும் அவளால் வெளிவர முடியவில்லை. 'ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட்டும் நீயும் ஏன் பிறரை போலவே என் ஒழுக்கத்தை விமர்சிக்கிறாய்?' என்ற கேள்வியை தேக்கியிருந்தது அவளது விழிகள்.
அவளது வழிகளை கண்டவனுக்கு அவளது வேதனை புரிந்திருக்க வேண்டும்! ஆனால் புரியவில்லை? தன் போக்கில் வாகனத்தை செலுத்தினான்.
பதில் இல்லாத இடத்தில் கேள்விக்கு வேலை இல்லை, புரிதல் இல்லாத இடத்தில் கண்ணீருக்கு பயன் இல்லை.
விழி வழி நிறைந்த கண்ணீரை மறைத்துக் கொண்டவள், அவனிடம் எதுவும் பேசவில்லை... உணர்வற்று சிலை போல இருக்கையில் சாய்ந்து அமர்ந்து வெளியே பார்வையை பதித்தாள்.
"என்ன எதுவும் பேச மாட்டிங்குற?" அவளது மௌனம் அவனது மனதை நெருடியது.
"என்ன பேசணும்னு எதிர்பார்க்குறீங்க?" கடக்கும் சாலையை வெறித்து பார்த்தபடி குரல் கொடுத்தாள்.
கண்ணாடி வழியே அவளது முகத்தை பார்த்தவன் "என்கிட்ட பேச எதுவும் இல்லையா?" என்று கேட்டான்.
விரக்தியாக சிரித்துக் கொண்டவள் "எதுவும் இல்லன்னா தான் நினைக்கிறேன்" என்று பொங்கி வந்த கண்ணீரை உதடு கடித்து உள்ளிழுத்துக் கொண்டாள்.
அதன் பிறகு அவன் பேசவில்லை... பயணத்தில் மௌனமே பிரத்தனமாகி போனது.
இருள் சூழ்ந்த நிலையில் இருபக்கமும் ஜன நடமாட்டம் அதிகமா இருந்தது... வெகு தூரம் வாகனம் சென்றது, 'எங்கு செல்கிறோம்? ஏன் இவ்வளவு தூரம் செல்கிறோம்?' என எதையும் அவனிடம் அவள் கேட்கவில்லை.
ஒரு இடத்தில் சட்டென்று வாகனம் நிறுத்தப்படவும் தான் நிதானத்துக்கு வந்தாள் மகிழ்.
சுற்றும் முற்றும் பார்த்தாள். ஏதோ பெரிய ஹோட்டல் போல இருந்தது. உடனே அவனை அதிர்ந்து பார்த்தாள். எந்த வித சலனமும் இன்றி காரில் இருந்து கீழே இறங்கியவன், அவளுக்கு கதவை திறந்து விட்டான்.
"இறங்கு" என்றவனை புரியாமல் பார்த்தவள் "எதுக்கு?" என்று கேட்டாள்.
"வா" என்றவன் முன்னே செல்ல... காரில் இருந்து இறங்கிவர முயற்சித்தவள் புடவை தடுக்கி கீழே விழ பார்க்க... நிலன் அவளது கரத்தை பிடித்துக் கொண்டான்.
"பார்த்து" என்று கண்டிப்புடன் சொன்னவன் அவளது கரத்தை இறுக்கி பிடிக்கவும் "விடுங்க" என்றவள் தீ சுட்டார் போல அவனது கரத்தில் இருந்து தனது கரத்தை வெடுக்கென பிடுங்கிக் கொண்டாள்.
அவளது விருப்பமின்மையை உணர்ந்தவன் "சாரி" என்று கூறிவிட்டு முன்னே சென்றான். பின்னால் அவளது வருகை இல்லை என்றவுடன் திரும்பிப் பார்த்தவன் "மகிழ் உன்னை தான் வர சொன்னேன்... வா" என்றான்.
"இல்லை எனக்கு வேலை இருக்கு... நான் போகணும்"
"எங்க போக போற? அப்படி என்ன வேலை?" என்றவன் அவளை நோக்கி வந்தான்.
"நான் போகணும் புரிஞ்சுக்கோங்க" என்றவள் நடக்க தொடங்கவும்... சட்டென அவளது கரத்தை பற்றியவன் அவளை உள்ளே அழைத்து சென்றான்.
"என்ன பண்ணுறீங்க கையை விடுங்க" என்றவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தன் கரத்தை அவனிடம் இருந்து விலக்க பார்க்க "கொஞ்சம் அமைதியா வா, யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க... இங்கயே நில்லு வரேன்" என்றவன் அவளை ஒரு இடத்தில் நிற்க வைத்தான். பின்னர் ரிஷப்சனில் சென்று பேசியவன் திரும்பி வரவும் அந்நேரம் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த மகிழ் அவன் அருகில் வரவும் வேறு பக்கம் பார்வையை திருப்பினாள்.
"போகலாமா?"
"எங்க? நான் உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சு இருக்கேன்" என்றவள் தன் போக்கில் எதையோ பேச... அவளை கூர்ந்து பார்த்தவன் "என்னை பத்தி என்ன நினைச்ச?" என்று கேட்டான்.
"புரியல"
"உன்னை எதுக்காக இங்க அழைச்சுட்டு வந்தேன்னு நினைக்கிறன்னு கேட்டேன்?"
"அது"
"போதும், என்னை தப்பா தான் நினைச்சி இருக்கன்னு உன் யோசனையிலே தெரியுது"
"நீங்க தானே அப்படி சொன்னீங்க?"
"ஓ அப்போ நீ அதுக்காக தான் அங்க போனியா?" என்று காரணமாக கேட்டான். அவளிடம் பதில் இல்லை... சிரம் தாழ்த்திக் கொண்டாள்.
"கண்டிப்பா இதுக்கு பதில் சொல்ல மாட்ட... பரவாயில்லை" என்றவன் அவளை உள்ளே அழைத்து சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டான். இருவர் மட்டும் தனியே அமர்ந்து உணவருந்துவது போல அமைக்கப் பட்டிருந்தது அந்த இடம்.
சிறிது நேரத்தில் அவன் ஆடர் செய்த உணவுகளை எடுத்து வந்து கொடுத்து சென்றனர். "சாப்பிடு" என்றவன், உணவை எடுத்து அவளுக்கும் பரிமாறினான்.
"இல்லை எனக்கு வேண்டாம், எனக்கு பசிக்கல" என்று அவள் மறுக்க...
"ஆனால் எனக்கு பசிக்குது... சாப்பிடு"
"அப்போ நீங்க சாப்பிடுங்க.. எனக்கு வேண்டாம்" என்று மீண்டும் அவள் அதையே சொல்ல... பெரு மூச்சு விட்டவன், "இன்னிக்கு என்னோட பர்த் டே சோ இதை என்னோட ட்ரீட்டா எடுத்துக்கோ" என்று அவன் கூறியதும் உடனே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"ஓ வாழ்த்துக்கள்" என்றவள் அவளது உணவில் கை வைத்தாள்.
பயங்கர பசி போல, சிறிது நேரத்திலே தட்டில் உள்ள உணவு காலியானது... அவள் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தவன் சிறு முறுவலுடன் தனக்கான உணவை உண்ண தொடங்கினான்.
"உனக்கு என்ன பிரச்சனை? எதுக்காக அங்க போன? போலீஸ் கிட்ட" என்று அவன் அதை பற்றி கேட்கவும், பதில் சொல்ல மறுத்தவள், அப்படியே பேச்சை மாற்றினாள்.
"அர்ஜுன் கிட்ட பேசுனீங்களா?" என்று உணவு உண்டபடியே அவள் கேட்க, நிலனின் கரம் அப்படியே நின்றது. அவன் கேட்டுக்கொண்டிருந்த கேள்வியை மறந்து விட்டான்.
அவளது கேள்விக்கு "இல்லை" என்று தலையை மட்டும் மெதுவாக ஆட்டினான் நிலன்..
"ஏன்? அவருக்கும் இன்னிக்கு தானே பிறந்தநாள்... நீங்க அவருக்கு விஷ் பண்ணலையா?" என்று கேட்டாள்.
"உனக்கு எப்படி தெரியும்?"
"அது... இல்லை... நீங்க ஒரு முறை சொல்லியிருக்கீங்க உங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாளில் தன் பர்த் டே வரும்ன்னு அதான் கேட்டேன்" என்றவள் அவனது முகத்தை பார்க்காமல் உணவினை உண்டாள்.
"ம்ம்ம்... அவன் விஷ் பண்ணான்... ஆனால் என்னால விஷ் பண்ண முடியல... ஒரு சின்ன ஆதங்கம்..."
"எப்போவும் நீங்க சேர்ந்தே இருப்பீங்கன்னு நெனச்சேன். ஆனால் ஒரு சின்ன பிரச்சனை எல்லாத்தையும் மாத்திடுச்சு அவ்ளோ தான் உங்க நட்பா" அவள் சாதாரணமாக கேட்டது போல இருந்தாலும் ஒவ்வொரு வார்த்தையும் ஊசியாக நிலனின் இதயத்தை குத்தி கிழித்தது.
"என்ன சார் பதிலே காணோம்"
"ஒரு நிமிஷம்" என்றவனால் அதற்கு மேலும் உணவினை உண்ண முடியவில்லை. வெளியே வாஷ் ரூமுக்கு வந்தவன் தன் அலைபேசியை உயிர்பித்தான்... அது அர்ஜுனின் எண்ணற்ற மிஸ்டுகால்களை திரையில் காட்டியது.
பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதை போல ஒரு குறுசெய்தியை அனுப்புவதற்கு டைப் செய்தான். ஆனால் அதனை அனுப்ப முடியவில்லை. அவன் செய்த துரோகம் மீண்டும் கண் முன்னே வந்து போனது.
அவனை வெறுக்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தான் நிலன்.
அந்நேரம் அர்ஜுனிடமிருந்து நிலனுக்கு அழைப்பு வர... கரம் சற்று உதறியது. ஆனாலும் அழைப்பை ஏற்கவில்லை. மனம் அதற்கு இடமளிக்கவில்லை. மீண்டும் அலைபேசியை அணைத்து வைத்தவன் மகிழிடம் வந்தான்.
"சாப்பிட்டியா வா போகலாம்" என்றவன் பில் அமோண்டை அனுப்பி விட்டு அங்கிருந்து வெளியே வந்தான்.
"அர்ஜுன் கிட்ட பேசுனீங்களா?" என்று காரில் வந்தபடி மகிழ் கேட்க...
"இல்லை" என்றான்.
"உங்க இத்தனை வருஷ நட்பை ஒரு பொண்ணுக்காக விட்டுக் கொடுத்துட்டீங்களே? காதல்னு வரும் போது நட்பு பாசமெல்லாம் காணாமல் போயிடுதுல்ல"
ஏனோ அவளது வார்த்தைகள் நிலனை துளைத்து எடுத்தது... இதயத்தின் ஓரத்தில் சுள்ளென ஒரு வலி...
"இதை பத்தி இதுக்கு மேல பேசாத"
"ஏன்? ஒரு சின்ன பிரச்னைக்காக" என்று மகிழ் பேச வர.. "இனாப்" என்று ஸ்டியரிங்கில் ஓங்கி குத்தினான்.
"இது சின்ன பிரச்சினை இல்லை... நீ சொல்லுற மாதிரி இது ஒன்னும் பொண்ணுக்காக வந்த கோவமும் இல்லை. என் வருத்தம் ஏல்லாம் என்னோட அர்ஜுன் ஏன் இப்படி பண்ணாங்குற ஆதங்கம் மட்டும் தான். அவன் ஏன் என்கிட்ட பொய் சொல்லணும்? எதுக்காக இப்படி எல்லாம் பண்ணனும்? என் வலி யாருக்கும் புரியாது" என்று ஆக்ரோஷமாக பேசிய நிலனின் விழி விளிம்பில் கண்ணீர் துளிர்த்தது.
அவனது இந்த கோப நிலையில் இருந்து வெளி வர அரை மணி நேரம் ஆனது. அந்த அரைமணி நேரமும் மகிழ் எதையும் பேசவில்லை.
தன்னிலை விளங்காத கோவத்தில் இருப்பவனிடம், நாம் ஆறுதலாக பேசினாலும் கூட அது அவனது கோவத்தை மேலும் அதிகரிக்கும்.
"எங்க போறீங்க?" மௌனம் கலைத்து கேட்டாள்.
"எங்க போகணும்"
"இங்கயே நிறுத்துங்க"
"இங்கயா? நேரம் ஆகிடுச்சு... நீ எங்கே தங்கியிருக்கன்னு சொல்லு கொண்டு போயி விடுறேன்"
"இல்லை வேண்டாம் பக்கத்துல தான் இருக்கு... நானே போயிக்கிறேன்" என்று அவள் அழுத்தமாக கூறவும் வண்டியை நிறுத்தினான்.
"சரி நான் கிளம்புறேன்" என்றவள் செல்ல போக... "ஒரு நிமிஷம்" என்று தடுத்தான்.
"என்ன?"
"உனக்கு பணம் ஏதாவது வேணும்னா என்கிட்ட கேளு... தயவு செய்து மறுபடியும் அந்த தொழில் வேண்டாம்" என்று சொன்னவன் பணத்தை எடுத்து அவளிடம் நீட்ட... அவனையும் அந்த பணத்தையும் மாறி மாறி பார்த்தவள் "உங்க உதவிக்கு ரொம்ப நன்றி... ஆனால் எனக்கு இது வேணாம், இப்போ இதை நான் வாங்கிட்டா நீங்க சொன்னது உண்மை ஆகிடும்" என்றாள்.
"நான் உன்னை தப்பா நினைச்சு இதை கொடுக்கல... ஒரு உதவியாக தான்"
"இப்போ எனக்கு யாரு உதவியும் வேண்டாம்... தேவைப்பட்டா நானே கேக்கிறேன்" என்றவளின் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது, அதனை அவன் அறியாத வண்ணம் மறைத்துக் கொண்டவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
"மகிழ்" நிலன் குரல்... கண்களை துடைத்து விட்டு திரும்பி பார்த்தாள்.
"என் மேல கோவமா?"
"இல்லை" என்று சிரித்தபடியே தலையாட்டியவளின் கண்களில் நிரம்பி இருந்த கண்ணீர் அவனது பார்வைக்கு புலப்படவில்லை. அதனால் மென்மையாக புன்னகைத்துக் கொண்டான்.
எதிரில் வந்த ஒரு ஆட்டோவில் ஏறி மகிழ் சென்ற பின்பு, அங்கிருந்து கிளம்பினான் நிலன்.
*****
வாசுகி யாரோ ஒருவருடன் அமர்ந்து காபி ஷாப்பில் பேசிக் கொண்டிருந்ததை அழகாக புகைப்படம் எடுத்து அர்ஜுனின் எண்ணிற்கு அனுப்பினான் அவனது அசிஸ்டண்ட். வாசுகியின் எதிரில் அமர்ந்திருந்தவனது முகம் சரிவர அடையாளம் தெரியவில்லை.
கண்ணாடி அணிந்திருந்ததாலும் தாடி வைத்திருந்ததாலும் முகம் தெளிவாக அடையாளம் காணும் படி இல்லாமல் போனது.
"இவன் யாருடா எருமை மாதிரி இருக்கான்? இவன் கிட்ட இவளுக்கு என்ன பேச்சு" என்று யோசித்தவன், அந்த போட்டோவை நன்றாக ஜூம் செய்து பார்த்தான்... 'இதற்கு முன்பாக எங்கேயோ பார்த்த முகம் போல இருந்தது'... வெகு நேரம் யோசித்தவனுக்கு சட்டென ஒருவனின் முகம் நினைவு வந்தது "இவனா?" என்றவனின் கண்கள் நிறம் மாற, வாசுகியின் வருகைக்காக காத்திருந்தான்.
இரவு ஒன்பது மணி ஆன போதும் அவள் வீட்டுக்கு வரவில்லை.
*****
அப்போது தான் அழுத குழந்தையை தட்டி கொடுத்து, தன் நெஞ்சோடு அணைத்து தூங்க வைத்தாள் மகிழ் வதனி. கண்கள் மெல்ல மெல்ல தூக்கத்தை தழுவிய சமயம் 'டம்... டம்' என்ற ஓசையில் பட்டென்று கண்களை திறந்தாள்.
கதவுகள் உடைபடுவது போல சத்தம் கேட்டது.
"ஏய் கதவை திறடி" என்று வெளியே ஒருவனது குரல்! அந்த குரல் யாருடையது என்று அறிந்து கொண்டவள் சலிப்புடன் சத்தம் கொடுக்காமல் மீண்டும் கண்களை மூடித் தூங்க முயற்சித்தாள்.
"அடியே *** கதவை திறடி"
என்று தொடர்ச்சியாக அவன் கதவை தட்டி கத்தினான். அவள் திறக்கவில்லை என்றவுடன் மது போதையில் தடுமாறியவன் போனை எடுத்து அவளது எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.
அந்த சத்தத்தில் குழந்தை வேறு புரண்டு படுக்க.. குழந்தையின் முதுகை மெதுவாக தட்டி கொடுத்து அருகில் படுக்க வைத்தவள்.
அலைபேசியை அணைத்து வைத்து விட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.
அவள் போனை எடுக்கவில்லை என்றவுடன் கதவை ஓங்கி மிதித்தவன், "**** கதவை திறக்க மாட்டியா? இருடி வரேன்" என்று கருவிக் கொண்டவனின் சத்தம் சில நொடி இல்லாமல் இருக்க... 'போய் விட்டான் போல' என்று சற்று ஆசுவாசமானவள், தன் அருகில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்து விட்டு நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
திடீரென "கண்ணம்மா" என்ற குரல் சன்னல் அருகே கேட்க, சட்டென கண்களை திறந்தவளின் கண்கள் கண்ட காட்சியில் துடித்து போனாள் மகிழ்.
தனி ஒரு அறையில் உணர்வற்று கட்டிலில் கிடந்த ஒருவளின் தலையனை மீது அவன் கொளுத்தி போட்ட நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.
அவன் கூறிய வார்த்தைகளில் இருந்து இப்போதும் அவளால் வெளிவர முடியவில்லை. 'ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட்டும் நீயும் ஏன் பிறரை போலவே என் ஒழுக்கத்தை விமர்சிக்கிறாய்?' என்ற கேள்வியை தேக்கியிருந்தது அவளது விழிகள்.
அவளது வழிகளை கண்டவனுக்கு அவளது வேதனை புரிந்திருக்க வேண்டும்! ஆனால் புரியவில்லை? தன் போக்கில் வாகனத்தை செலுத்தினான்.
பதில் இல்லாத இடத்தில் கேள்விக்கு வேலை இல்லை, புரிதல் இல்லாத இடத்தில் கண்ணீருக்கு பயன் இல்லை.
விழி வழி நிறைந்த கண்ணீரை மறைத்துக் கொண்டவள், அவனிடம் எதுவும் பேசவில்லை... உணர்வற்று சிலை போல இருக்கையில் சாய்ந்து அமர்ந்து வெளியே பார்வையை பதித்தாள்.
"என்ன எதுவும் பேச மாட்டிங்குற?" அவளது மௌனம் அவனது மனதை நெருடியது.
"என்ன பேசணும்னு எதிர்பார்க்குறீங்க?" கடக்கும் சாலையை வெறித்து பார்த்தபடி குரல் கொடுத்தாள்.
கண்ணாடி வழியே அவளது முகத்தை பார்த்தவன் "என்கிட்ட பேச எதுவும் இல்லையா?" என்று கேட்டான்.
விரக்தியாக சிரித்துக் கொண்டவள் "எதுவும் இல்லன்னா தான் நினைக்கிறேன்" என்று பொங்கி வந்த கண்ணீரை உதடு கடித்து உள்ளிழுத்துக் கொண்டாள்.
அதன் பிறகு அவன் பேசவில்லை... பயணத்தில் மௌனமே பிரத்தனமாகி போனது.
இருள் சூழ்ந்த நிலையில் இருபக்கமும் ஜன நடமாட்டம் அதிகமா இருந்தது... வெகு தூரம் வாகனம் சென்றது, 'எங்கு செல்கிறோம்? ஏன் இவ்வளவு தூரம் செல்கிறோம்?' என எதையும் அவனிடம் அவள் கேட்கவில்லை.
ஒரு இடத்தில் சட்டென்று வாகனம் நிறுத்தப்படவும் தான் நிதானத்துக்கு வந்தாள் மகிழ்.
சுற்றும் முற்றும் பார்த்தாள். ஏதோ பெரிய ஹோட்டல் போல இருந்தது. உடனே அவனை அதிர்ந்து பார்த்தாள். எந்த வித சலனமும் இன்றி காரில் இருந்து கீழே இறங்கியவன், அவளுக்கு கதவை திறந்து விட்டான்.
"இறங்கு" என்றவனை புரியாமல் பார்த்தவள் "எதுக்கு?" என்று கேட்டாள்.
"வா" என்றவன் முன்னே செல்ல... காரில் இருந்து இறங்கிவர முயற்சித்தவள் புடவை தடுக்கி கீழே விழ பார்க்க... நிலன் அவளது கரத்தை பிடித்துக் கொண்டான்.
"பார்த்து" என்று கண்டிப்புடன் சொன்னவன் அவளது கரத்தை இறுக்கி பிடிக்கவும் "விடுங்க" என்றவள் தீ சுட்டார் போல அவனது கரத்தில் இருந்து தனது கரத்தை வெடுக்கென பிடுங்கிக் கொண்டாள்.
அவளது விருப்பமின்மையை உணர்ந்தவன் "சாரி" என்று கூறிவிட்டு முன்னே சென்றான். பின்னால் அவளது வருகை இல்லை என்றவுடன் திரும்பிப் பார்த்தவன் "மகிழ் உன்னை தான் வர சொன்னேன்... வா" என்றான்.
"இல்லை எனக்கு வேலை இருக்கு... நான் போகணும்"
"எங்க போக போற? அப்படி என்ன வேலை?" என்றவன் அவளை நோக்கி வந்தான்.
"நான் போகணும் புரிஞ்சுக்கோங்க" என்றவள் நடக்க தொடங்கவும்... சட்டென அவளது கரத்தை பற்றியவன் அவளை உள்ளே அழைத்து சென்றான்.
"என்ன பண்ணுறீங்க கையை விடுங்க" என்றவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தன் கரத்தை அவனிடம் இருந்து விலக்க பார்க்க "கொஞ்சம் அமைதியா வா, யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க... இங்கயே நில்லு வரேன்" என்றவன் அவளை ஒரு இடத்தில் நிற்க வைத்தான். பின்னர் ரிஷப்சனில் சென்று பேசியவன் திரும்பி வரவும் அந்நேரம் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த மகிழ் அவன் அருகில் வரவும் வேறு பக்கம் பார்வையை திருப்பினாள்.
"போகலாமா?"
"எங்க? நான் உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சு இருக்கேன்" என்றவள் தன் போக்கில் எதையோ பேச... அவளை கூர்ந்து பார்த்தவன் "என்னை பத்தி என்ன நினைச்ச?" என்று கேட்டான்.
"புரியல"
"உன்னை எதுக்காக இங்க அழைச்சுட்டு வந்தேன்னு நினைக்கிறன்னு கேட்டேன்?"
"அது"
"போதும், என்னை தப்பா தான் நினைச்சி இருக்கன்னு உன் யோசனையிலே தெரியுது"
"நீங்க தானே அப்படி சொன்னீங்க?"
"ஓ அப்போ நீ அதுக்காக தான் அங்க போனியா?" என்று காரணமாக கேட்டான். அவளிடம் பதில் இல்லை... சிரம் தாழ்த்திக் கொண்டாள்.
"கண்டிப்பா இதுக்கு பதில் சொல்ல மாட்ட... பரவாயில்லை" என்றவன் அவளை உள்ளே அழைத்து சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டான். இருவர் மட்டும் தனியே அமர்ந்து உணவருந்துவது போல அமைக்கப் பட்டிருந்தது அந்த இடம்.
சிறிது நேரத்தில் அவன் ஆடர் செய்த உணவுகளை எடுத்து வந்து கொடுத்து சென்றனர். "சாப்பிடு" என்றவன், உணவை எடுத்து அவளுக்கும் பரிமாறினான்.
"இல்லை எனக்கு வேண்டாம், எனக்கு பசிக்கல" என்று அவள் மறுக்க...
"ஆனால் எனக்கு பசிக்குது... சாப்பிடு"
"அப்போ நீங்க சாப்பிடுங்க.. எனக்கு வேண்டாம்" என்று மீண்டும் அவள் அதையே சொல்ல... பெரு மூச்சு விட்டவன், "இன்னிக்கு என்னோட பர்த் டே சோ இதை என்னோட ட்ரீட்டா எடுத்துக்கோ" என்று அவன் கூறியதும் உடனே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"ஓ வாழ்த்துக்கள்" என்றவள் அவளது உணவில் கை வைத்தாள்.
பயங்கர பசி போல, சிறிது நேரத்திலே தட்டில் உள்ள உணவு காலியானது... அவள் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தவன் சிறு முறுவலுடன் தனக்கான உணவை உண்ண தொடங்கினான்.
"உனக்கு என்ன பிரச்சனை? எதுக்காக அங்க போன? போலீஸ் கிட்ட" என்று அவன் அதை பற்றி கேட்கவும், பதில் சொல்ல மறுத்தவள், அப்படியே பேச்சை மாற்றினாள்.
"அர்ஜுன் கிட்ட பேசுனீங்களா?" என்று உணவு உண்டபடியே அவள் கேட்க, நிலனின் கரம் அப்படியே நின்றது. அவன் கேட்டுக்கொண்டிருந்த கேள்வியை மறந்து விட்டான்.
அவளது கேள்விக்கு "இல்லை" என்று தலையை மட்டும் மெதுவாக ஆட்டினான் நிலன்..
"ஏன்? அவருக்கும் இன்னிக்கு தானே பிறந்தநாள்... நீங்க அவருக்கு விஷ் பண்ணலையா?" என்று கேட்டாள்.
"உனக்கு எப்படி தெரியும்?"
"அது... இல்லை... நீங்க ஒரு முறை சொல்லியிருக்கீங்க உங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாளில் தன் பர்த் டே வரும்ன்னு அதான் கேட்டேன்" என்றவள் அவனது முகத்தை பார்க்காமல் உணவினை உண்டாள்.
"ம்ம்ம்... அவன் விஷ் பண்ணான்... ஆனால் என்னால விஷ் பண்ண முடியல... ஒரு சின்ன ஆதங்கம்..."
"எப்போவும் நீங்க சேர்ந்தே இருப்பீங்கன்னு நெனச்சேன். ஆனால் ஒரு சின்ன பிரச்சனை எல்லாத்தையும் மாத்திடுச்சு அவ்ளோ தான் உங்க நட்பா" அவள் சாதாரணமாக கேட்டது போல இருந்தாலும் ஒவ்வொரு வார்த்தையும் ஊசியாக நிலனின் இதயத்தை குத்தி கிழித்தது.
"என்ன சார் பதிலே காணோம்"
"ஒரு நிமிஷம்" என்றவனால் அதற்கு மேலும் உணவினை உண்ண முடியவில்லை. வெளியே வாஷ் ரூமுக்கு வந்தவன் தன் அலைபேசியை உயிர்பித்தான்... அது அர்ஜுனின் எண்ணற்ற மிஸ்டுகால்களை திரையில் காட்டியது.
பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதை போல ஒரு குறுசெய்தியை அனுப்புவதற்கு டைப் செய்தான். ஆனால் அதனை அனுப்ப முடியவில்லை. அவன் செய்த துரோகம் மீண்டும் கண் முன்னே வந்து போனது.
அவனை வெறுக்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தான் நிலன்.
அந்நேரம் அர்ஜுனிடமிருந்து நிலனுக்கு அழைப்பு வர... கரம் சற்று உதறியது. ஆனாலும் அழைப்பை ஏற்கவில்லை. மனம் அதற்கு இடமளிக்கவில்லை. மீண்டும் அலைபேசியை அணைத்து வைத்தவன் மகிழிடம் வந்தான்.
"சாப்பிட்டியா வா போகலாம்" என்றவன் பில் அமோண்டை அனுப்பி விட்டு அங்கிருந்து வெளியே வந்தான்.
"அர்ஜுன் கிட்ட பேசுனீங்களா?" என்று காரில் வந்தபடி மகிழ் கேட்க...
"இல்லை" என்றான்.
"உங்க இத்தனை வருஷ நட்பை ஒரு பொண்ணுக்காக விட்டுக் கொடுத்துட்டீங்களே? காதல்னு வரும் போது நட்பு பாசமெல்லாம் காணாமல் போயிடுதுல்ல"
ஏனோ அவளது வார்த்தைகள் நிலனை துளைத்து எடுத்தது... இதயத்தின் ஓரத்தில் சுள்ளென ஒரு வலி...
"இதை பத்தி இதுக்கு மேல பேசாத"
"ஏன்? ஒரு சின்ன பிரச்னைக்காக" என்று மகிழ் பேச வர.. "இனாப்" என்று ஸ்டியரிங்கில் ஓங்கி குத்தினான்.
"இது சின்ன பிரச்சினை இல்லை... நீ சொல்லுற மாதிரி இது ஒன்னும் பொண்ணுக்காக வந்த கோவமும் இல்லை. என் வருத்தம் ஏல்லாம் என்னோட அர்ஜுன் ஏன் இப்படி பண்ணாங்குற ஆதங்கம் மட்டும் தான். அவன் ஏன் என்கிட்ட பொய் சொல்லணும்? எதுக்காக இப்படி எல்லாம் பண்ணனும்? என் வலி யாருக்கும் புரியாது" என்று ஆக்ரோஷமாக பேசிய நிலனின் விழி விளிம்பில் கண்ணீர் துளிர்த்தது.
அவனது இந்த கோப நிலையில் இருந்து வெளி வர அரை மணி நேரம் ஆனது. அந்த அரைமணி நேரமும் மகிழ் எதையும் பேசவில்லை.
தன்னிலை விளங்காத கோவத்தில் இருப்பவனிடம், நாம் ஆறுதலாக பேசினாலும் கூட அது அவனது கோவத்தை மேலும் அதிகரிக்கும்.
"எங்க போறீங்க?" மௌனம் கலைத்து கேட்டாள்.
"எங்க போகணும்"
"இங்கயே நிறுத்துங்க"
"இங்கயா? நேரம் ஆகிடுச்சு... நீ எங்கே தங்கியிருக்கன்னு சொல்லு கொண்டு போயி விடுறேன்"
"இல்லை வேண்டாம் பக்கத்துல தான் இருக்கு... நானே போயிக்கிறேன்" என்று அவள் அழுத்தமாக கூறவும் வண்டியை நிறுத்தினான்.
"சரி நான் கிளம்புறேன்" என்றவள் செல்ல போக... "ஒரு நிமிஷம்" என்று தடுத்தான்.
"என்ன?"
"உனக்கு பணம் ஏதாவது வேணும்னா என்கிட்ட கேளு... தயவு செய்து மறுபடியும் அந்த தொழில் வேண்டாம்" என்று சொன்னவன் பணத்தை எடுத்து அவளிடம் நீட்ட... அவனையும் அந்த பணத்தையும் மாறி மாறி பார்த்தவள் "உங்க உதவிக்கு ரொம்ப நன்றி... ஆனால் எனக்கு இது வேணாம், இப்போ இதை நான் வாங்கிட்டா நீங்க சொன்னது உண்மை ஆகிடும்" என்றாள்.
"நான் உன்னை தப்பா நினைச்சு இதை கொடுக்கல... ஒரு உதவியாக தான்"
"இப்போ எனக்கு யாரு உதவியும் வேண்டாம்... தேவைப்பட்டா நானே கேக்கிறேன்" என்றவளின் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது, அதனை அவன் அறியாத வண்ணம் மறைத்துக் கொண்டவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
"மகிழ்" நிலன் குரல்... கண்களை துடைத்து விட்டு திரும்பி பார்த்தாள்.
"என் மேல கோவமா?"
"இல்லை" என்று சிரித்தபடியே தலையாட்டியவளின் கண்களில் நிரம்பி இருந்த கண்ணீர் அவனது பார்வைக்கு புலப்படவில்லை. அதனால் மென்மையாக புன்னகைத்துக் கொண்டான்.
எதிரில் வந்த ஒரு ஆட்டோவில் ஏறி மகிழ் சென்ற பின்பு, அங்கிருந்து கிளம்பினான் நிலன்.
*****
வாசுகி யாரோ ஒருவருடன் அமர்ந்து காபி ஷாப்பில் பேசிக் கொண்டிருந்ததை அழகாக புகைப்படம் எடுத்து அர்ஜுனின் எண்ணிற்கு அனுப்பினான் அவனது அசிஸ்டண்ட். வாசுகியின் எதிரில் அமர்ந்திருந்தவனது முகம் சரிவர அடையாளம் தெரியவில்லை.
கண்ணாடி அணிந்திருந்ததாலும் தாடி வைத்திருந்ததாலும் முகம் தெளிவாக அடையாளம் காணும் படி இல்லாமல் போனது.
"இவன் யாருடா எருமை மாதிரி இருக்கான்? இவன் கிட்ட இவளுக்கு என்ன பேச்சு" என்று யோசித்தவன், அந்த போட்டோவை நன்றாக ஜூம் செய்து பார்த்தான்... 'இதற்கு முன்பாக எங்கேயோ பார்த்த முகம் போல இருந்தது'... வெகு நேரம் யோசித்தவனுக்கு சட்டென ஒருவனின் முகம் நினைவு வந்தது "இவனா?" என்றவனின் கண்கள் நிறம் மாற, வாசுகியின் வருகைக்காக காத்திருந்தான்.
இரவு ஒன்பது மணி ஆன போதும் அவள் வீட்டுக்கு வரவில்லை.
*****
அப்போது தான் அழுத குழந்தையை தட்டி கொடுத்து, தன் நெஞ்சோடு அணைத்து தூங்க வைத்தாள் மகிழ் வதனி. கண்கள் மெல்ல மெல்ல தூக்கத்தை தழுவிய சமயம் 'டம்... டம்' என்ற ஓசையில் பட்டென்று கண்களை திறந்தாள்.
கதவுகள் உடைபடுவது போல சத்தம் கேட்டது.
"ஏய் கதவை திறடி" என்று வெளியே ஒருவனது குரல்! அந்த குரல் யாருடையது என்று அறிந்து கொண்டவள் சலிப்புடன் சத்தம் கொடுக்காமல் மீண்டும் கண்களை மூடித் தூங்க முயற்சித்தாள்.
"அடியே *** கதவை திறடி"
என்று தொடர்ச்சியாக அவன் கதவை தட்டி கத்தினான். அவள் திறக்கவில்லை என்றவுடன் மது போதையில் தடுமாறியவன் போனை எடுத்து அவளது எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.
அந்த சத்தத்தில் குழந்தை வேறு புரண்டு படுக்க.. குழந்தையின் முதுகை மெதுவாக தட்டி கொடுத்து அருகில் படுக்க வைத்தவள்.
அலைபேசியை அணைத்து வைத்து விட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.
அவள் போனை எடுக்கவில்லை என்றவுடன் கதவை ஓங்கி மிதித்தவன், "**** கதவை திறக்க மாட்டியா? இருடி வரேன்" என்று கருவிக் கொண்டவனின் சத்தம் சில நொடி இல்லாமல் இருக்க... 'போய் விட்டான் போல' என்று சற்று ஆசுவாசமானவள், தன் அருகில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்து விட்டு நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
திடீரென "கண்ணம்மா" என்ற குரல் சன்னல் அருகே கேட்க, சட்டென கண்களை திறந்தவளின் கண்கள் கண்ட காட்சியில் துடித்து போனாள் மகிழ்.
தனி ஒரு அறையில் உணர்வற்று கட்டிலில் கிடந்த ஒருவளின் தலையனை மீது அவன் கொளுத்தி போட்ட நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.