ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மௌனம் வேண்டாம் கண்மணியே_ கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer
மௌனம் 1

முழு அலங்காரத்துடனும் எழில் கொஞ்சும் வனப்புடனும் மணமேடையில் அமர்ந்திருந்த வாசுகியின் முகத்தில் மருந்துக்கு கூட சந்தோசம் இல்லை.

கல்லை விழுங்கியது போல அமர்ந்திருந்தாள். அதற்கு அப்படியே நேர் எதிர் சந்தோசத்துடன் இன்முகமாக அவள் அருகில் அமர்ந்து இருந்தான் அர்ஜுன்.

'எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை' என்று பெற்றோர் தொடக்கம் மாப்பிள்ளை வரை அனைவரிடமும் கூறி விட்டாள். இருந்தும் அவளது பேச்சுக்கு செவி சாய்க்க அங்கு ஒருவரும் இல்லை.

எளியவரின் பேச்சை சபை ஏற்காது என்பது போல அவளது வார்த்தைக்கும், மனதுக்கும் மதிப்பளிக்க அங்கு ஒருவரும் இல்லை.

பெண்ணாக பிறந்தால் பிரலயங்களை தாண்டி தான் வாழ்க்கை என்பது எந்த அளவுக்கு உண்மை என்றதை இப்போது தான் உணர்ந்து கொண்டாள் வாசுகி.

முகூர்த்தநேரம் நெருங்கியது... மனதில் ஒரு படபடப்பு? அந்த பதட்டம் மாறாமல் தன் அருகில் அமர்ந்திருந்த அர்ஜுனை பார்த்தவள் 'இது வேண்டாம் இந்த கல்யாணம் வேண்டாம்... நிறுத்திடுங்க' என்று கண்களால் கெஞ்சினாள். அவளது விழிமொழி அவனுக்கும் புரிந்தது! ஆனால் அதற்கெல்லாம் மதிப்பளித்து அவளை விட்டு விலகி செல்லும் குணம் கொண்டவன் இல்லையே இந்த அர்ஜுன்.

அவளை பார்த்து ஏளனமாக இதழ் வளைத்து சிரித்தவன் "முடியாது" என்று அழுத்தமாக உரைக்க, அவளது முகம் வெளிறி போனது.

அந்நேரம் ஐயர் "கெட்டி மேளம்" என்று கூற, எதையோ சாதித்த நிம்மதியில் முகம் கொள்ளா புன்னகையுடன் வாசுகியின் கழுத்தில் தாலியை கட்டி, அவளை தன்னவள் ஆக்கிக் கொண்ட அர்ஜுன் "வேலை முடிந்தது" என்பது போல கண்களை மூடி திறந்தான்.

மங்களநாண் கழுத்தில் ஏறிய மறுநொடி, அவளது கண்கள் கண்ணீரை உதிர்த்தது... 'இது இயல்பான ஒன்று' என்று அங்குள்ளவர்கள் எண்ணியிருக்கலாம்? ஆனால் அது அப்படி அல்ல என்பதை அவளும் அவனும் மட்டுமே அறிவர்?

அவனா? யார் அவன்? அர்ஜுனா இல்லை இவன் நிலன் விக்ராந்த்.

சபை நடுவே இமை மூடி கண்ணீரை உள்ளிழுக்க போராடியவள், தனக்கு நேர் எதிரில் எந்த வித உணர்வுமின்றி நின்று கொண்டு அட்சதை தூவிய நெடியவனை ரௌத்திரம் பொங்க பார்த்தாள்.

அக்கணம் அவள் விழி விளிம்பில் நழுவி ஓடிய கண்ணீர், அவனை குற்றம் சாட்டியது. அந்த கண்ணீருக்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்திருந்தால், ஒன்று அவனை எரித்திருப்பாள், இல்லை அதில் தானே எரிந்திருப்பாள்.

அட்சதை தூவிய அடுத்த நொடி சுவடு இல்லாமல் அங்கிருந்து சென்றிருந்தான் நிலன். பெண்ணவள் வடித்த கண்ணீருக்கு காரணம் சொல்லி சமாளிக்கலாம்... ஆண் அவன் வடிக்கும் கண்ணீருக்கு எவரிடம் காரணம் சொல்லி என்ன மாற போகிறது? என்று எண்ணினானோ என்னவோ உள்ளம் குமுறிய போதும், கண்கள் கண்ணீரை வார்க்காமல் உணர்விழந்து இருந்தது.

நடந்து வந்தவனை நோக்கி வந்த பலரும் மைக்கை தூக்கிக் கொண்டு அவனிடம் பேட்டி எடுக்க முயற்சிக்க... யாரையும் பொருட்படுத்தாமல் நடக்க ஆரம்பித்தான் நிலன். எங்கு நின்று ஒரு வார்த்தை பேசினாலும் அடக்கி வைத்த உணர்வுகள் வெளிப்பட்டு கண்ணீர் வழிந்து விடுமோ என்று கட்டுப்படுத்திக் கொண்டு வாகனம் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்து காரில் ஏறிக்கொண்டான்.

மூச்சு விட முடியவில்லை? இதயம் படபடக்க ஆரம்பித்தது! இப்படியே விட்டால் இருதயம் தன் இயக்கத்தை நிறுத்திவிடுமோ என்று அச்சம் கொண்டவன், நடு வழியில் காரை நிறுத்தி விட்டு இறங்கி ஆழ்ந்து பெரும் மூச்சுக்களை எடுத்தான்.

இன்னும் மன அவஸ்த்தை தீரவில்லை... உடனே அலைபேசியை எடுத்தான்... "மகிழ் வதனி" என்ற எண்ணிற்கு அழைத்தான்.

அங்கு யானையிடம் மாட்டியா சிறு எலி போல, ஒரு முரடனின் பிடியில் சிக்கி தவித்த அந்த கிளி, அழைப்பு சத்தம் கேட்டு அவனை தன்னில் இருந்து பிரித்து தள்ள முயற்சித்து அழைப்பை ஏற்க பார்த்தது... அவனோ அவளை விடும் எண்ணம் இல்லாமல் இருக்க... தொடர் அழைப்புகள்... நம்பரை பார்த்து விட்டாள்?! அழைத்தது நிலன் என்று தெரிந்ததும், தன் மீதிருந்தவனை மூர்க்கத்தனமாக பிடித்து கீழே தள்ளினாள்... குடிபோதையில் அவனோ கீழே விழுந்து விட, அடுத்த நொடி கோவத்தில் அவளை அடிக்க பாய்ந்தான்... புடவையை சரி செய்து கொண்டவள், "ஏய்" என்று அடி தொண்டையில் இருந்து ஒரு குரல் கொடுக்க... போதையின் பிடியில் இருந்தவன் அடங்கி போனான்! உடனே அவனது குரல் குழைவாக ஒலிக்க... "பணம் தானே வேணும், இரு வரேன்" என்று கூறிவிட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள் மகிழ் வதனி.

"ம்ம்ம் சொல்லுங்க எதுக்கு இந்த நேரத்தில் போன் பண்ணியிருக்கீங்க?" என்று அவள் கேட்க...

"உன்னை பார்க்கணும்... உடனே என் வீட்டுக்கு வா" என்றான் நிலன்.

"இப்போ என்னால வர முடியாது" என்று அறையின் ஒரு மூலையில் படுத்து உறங்கி கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையை பார்த்தபடி சொன்னாள்.

"சரி" என்றவன் அவளது பதிலுக்கு காத்திருக்காமல் அழைப்பை துண்டிக்க... இவளுக்கு மனதில் சிறு நெருடல்? உடனே ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு அவன் இல்லம் நோக்கி கிளம்ப தயாரானாள்.

அந்நேரம் கட்டிலில் கிடந்தவனோ அவளது கரம் பற்றி தகராரில் ஈடுபட்டான்... "ஏய் கையை விடு" என்று ஒரு சிறு கத்தியை கொண்டு அவனை சமாளித்தவள், தன் பையில் இருந்த பணத்தை எடுத்து அவன் முகத்தில் விட்டெரிந்து விட்டு, உறங்கிக் கொண்டருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு நிலன் இல்லம் நோக்கி பயணித்தாள்.

*****

துரோகத்தையும் ஏமாற்றத்தையும் தாங்க முடியாமல் தடுமாறி போன நிதன், போதை தலைக்கேறி தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.

அக்கணம் அவனது வீட்டுக்குள் நுழைந்த மகிழ் வதனி, தன் கையில் இருந்த குழந்தையை சோபாவில் படுக்க வைத்து விட்டு "என்ன விஷயம்?" என்று கேட்டபடி அவன் அருகில் வந்து நின்ற கணம், அவளை அணைத்துக் கொண்டான் நிலன்.

இவ்வளவு நேரம் அவன் கண்களில் தேக்கியிருந்த கண்ணீர் இப்போது அவளது தோள்களை நனைத்தது. உணர்ச்சியின் பிடியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல் அவன் அணைப்பு இறுகிகொண்டே போக, உடனே அவனை பிடித்து தள்ளி விட்டு.
"என்ன ஆச்சு உனக்கு?" என்று கேட்டாள்.

"ஐயம் சாரி" என்றபடி நிதானத்துக்கு வந்தவன், தன் செயலை எண்ணி உண்மையாக வருத்தப்பட்டான்.

"சரி விடுங்க" கட்டி அணைத்ததும் கற்பு பறிபோய் விட்டது என்று கூச்சலிடும் நிலையிலோ, இல்லை சலன பட்டு காதல் வயப்படும் நிலையிலோ இப்போது அவள் இல்லை.

"என்னயிருந்தாலும் நான் அப்படி பண்ணியிருக்க கூடாது, ஏதோ மனசு சரியில்லாமல் அப்படி பண்ணிட்டேன் சாரி" என்றவன் தன் கரத்தை சுவரில் ஓங்கி அடித்தான். அதன் விளைவாக கை முட்டியில் காயம் ஏற்பட, வலியில் கரத்தை உதறிக் கொண்டான்.

"ஐயோ ஏன் இப்படி பண்ணுறீங்க? நான் தான் அதெல்லாம் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டனே" என்று பதறியவள் அவனது கரத்தை தொட போகவும், "இல்லை வேண்டாம்" என்று அவளிடம் இருந்து விலகிக் கொண்டான்.

"ரொம்ப பண்ணாதீங்க... காயம் பெருசா இருக்கும் போல கையை கொடுங்க" என்றவள் அவனது கரத்தை பிடித்து பரிசோதிக்க, அவளை இயலாமையுடன் பார்த்தவன்,

"மன்னிச்சிடு நானும் மத்தவங்களை போலவே உன்னை" என்று சொல்ல வந்தவன் மீதி வார்த்தையை அப்படியே விழுங்கிக் கொள்ள, அவனது கண்களை பார்க்க முடியாமல் இமை தாழ்த்திக் கொண்டவளின் இதழ்கள் விரக்தியாக வளைந்து கொண்டது.

வண்ணத்து பூச்சியாக வாழ நினைத்தவளுக்கு விதி பரிசளித்தது என்னவோ விட்டில் பூச்சியின் வாழ்க்கையை தான்.

இனி நடந்ததை நினைத்து அழுது புலம்பி மட்டும் என்ன மாற போகிறது? எல்லாம் அழிந்து விட்டது. எல்லாவற்றையும் இழந்து விட்டாள். உயிர் மட்டுமே இன்னும் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கிறது... அதுவும் எதுவுமறியாத அந்த சிறு பிள்ளைக்காக...

தொலைத்த இடத்தில் தேடி கிடைக்க நிம்மதியும் சந்தோஷமும் ஒன்றும் பொருள் இல்லையே... அனைத்தையும் இழந்த பின்பும் ஓட வேண்டியது விதியின் கட்டளை என்ன செய்ய முடியும்?

"அவன் ஏன் இப்படி பண்ணான்? என்னால நடந்த எதையும் நம்பவே முடியல... மனசு ரொம்ப பாரமா இருக்கு" என்று முதல் முறை தன் மனதில் உள்ளதை அவளிடம் புலம்பி தீர்த்தவன், சோர்ந்து போய் இருக்கையில் தலை சாய்த்தான்.

அவனது உடல் காயத்திற்கு அவளால் மருந்திட முடிந்தது, ஆனால் உள்ளத்தில் ஏற்பட்ட காயத்துக்கு ஆறுதல் சொல்ல கூட அவளுக்கு வழியில்லை.

"ஏன் எதுவும் பேச மாட்டிங்குற? அவன் எனக்கு பண்ணது துரோகம் தானே? நீயே சொல்லு"

அவளிடம் பதில் இல்லை...

"உன்கிட்ட தான் கேட்குறேன்"

"உங்க ப்ரெண்ட பத்தி உங்களுக்கு தெரியாதா?" என்று ஒரு வார்த்தையில் அவனுக்கான பதிலை கூறியவள், "அப்போ நான் கிளம்புறேன், எதையும் யோசிச்சு மனசை குழப்பிக்காதீங்க, உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்கலனாலும் வாசுகி இப்போ அர்ஜுனோட மனைவி அதை மறந்துடாதீங்க, அது தான் உங்க எல்லார் வாழ்க்கைக்கும் நல்லது" என்றவள் குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றாள். செல்லும் அவளை மௌனமாக பார்த்தவனின் மனதில் ஆயிரம் கேள்விகள், அதற்கான விடையை சொல்ல வேண்டியவனோ தனது முதலிரவுக்கு தயாராகிக் கொண்டிருந்தான்.

*****

முதலிரவு அறைக்குள் நுழைந்த வாசுகியை கட்டிலில் அமர்ந்தவாறே நிமிர்ந்து பார்த்த அர்ஜுன் "வா வாசுகி" என்று சொல்ல... அவள் முகமோ பிடித்தமின்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

"என்னை உனக்கு பிடிக்காதுன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்! சோ ஒவ்வொரு முறையும் இப்படி முகத்தை சுளிச்சு உன் விருப்பத்தை காட்டணும்ன்னு அவசியம் இல்லை" என்றவன் எழுந்து வந்து அவளது கரத்தை பிடிக்க... அவனை அணல் பார்வை பார்த்தாள் வஞ்சியவள்.

"ப்ச் இந்த பார்வை இன்னுமே கிக்கா இருக்கு" என்றவன் அவளது கரத்தை பிடித்து ஒரு சுற்று சுற்றிவிட, அவள் கையில் இருந்த பால் சொம்பு கிழே விழுந்தது. அந்த சத்தத்தில் அவளது உடலில் மெல்லிய நடுக்கம் ஏற்பட, உடனே அவளை பின்னிருந்து கட்டிக் கொண்டான்.

"இப்படி பால் சொம்பையே சரியா பிடிக்க தெரியாத நீ நாளைக்கு கத்தியை எடுத்து எப்படி கொலை பண்ணுவ?" என்று கேட்டவன் அவளது தோள் வளைவில் முகம் புதைக்க, தடுமாறி போனவள் அவன் முகத்தை திருப்பி பார்க்க, புருவம் உயர்த்தியவன் "ரொம்ப யோசிக்காத என்னோட அடுத்த படத்தில உன்னை நடிக்க வைக்கலாம்னு இருக்கேன் அதுல நீ ஒரு கொலைகாரி அதான் அப்படி சொன்னேன்" என்றபடி இதழ் கொண்டு மென்மையாக அவள் கழுத்தில் கடிக்க... அருவருத்து போனவள் அவனிடத்தில் இருந்து விலக பார்த்தாள்.

சலித்துக் கொண்டவன் "நீ என்ன டிராமா பண்ணாலும் போராட்டம் பண்ணாலும் இன்னிக்கு நமக்குள்ள நடக்க வேண்டியது நடந்தே தீரும்... இல்லை என்னால முடியாது அப்படி இப்படின்னு ஏதாவது சோக கீதம் பாடினன்னுவை நேரா உன் அம்மா கிட்ட போயி 'என்னை பிள்ளை வளர்த்து வச்சியிருக்கீங்க? புருசனுக்கு ஒத்துழைக்க மாட்டிக்குறான்னு பஞ்சாயத்து வைப்பேன்... அது உனக்கு ஓகேன்னா தரலாமா... தள்ளி நில்லு" என்றவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்தவள் எதுவும் பேசவில்லை மனதை கல்லாக்கிக் கொண்டு உயிரற்ற ஜடமாக கட்டிலில் வந்து படுத்துக் கொண்டாள்.

"ம்ம்ம் குட்" என்று அவளை மெச்சுதல் பார்வை பார்த்தவன், அவளிடம் சங்கமிக்க முன்னேற, பெண்ணவளின் கண்களில் உவர் நீர் சுரந்தது. அது எல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது போல அவளில் தன் தேடலை தொடங்கியவன் "விக்ராந்த்" என்று அவள் கூறிய ஒரு வார்த்தையில் கண்களை மூடி திறந்து அவள் மீதிருந்து எழுந்து கொண்டான் அர்ஜுன்.


கணவன் தொட்டு தழுவும் வேளையில் வேறு ஒரு ஆடவனின் பெயரை உதிர்த்த கன்னியின் மனநிலையை என்னவென்று கூறுவது?
 
Last edited:

Mythili MP

Well-known member
Wonderland writer
மௌனம் 2

கணவன் தொட்டு தழுவும் வேளையில் அந்த ஏகாந்த நிலையை கலைக்கவே வேறு ஒரு ஆடவனின் பெயரை அந்நிலையில் உரைத்தாள் வாசுகி. நிச்சயம் அதனை கேட்டு இவன் அதிர்ச்சி அடைவான்? பின்னர் தன்னை தொட தயங்குவான் என்று எண்ணினாள். அவள் எதிர்பார்த்தது போலவே அவனும் அவளை விட்டு விலகி எழுந்து கொண்டான், அந்நொடி அவள் மனதில் மெல்லிய சந்தோஷம் குடி கொண்டது.

அவள் உள்ளத்தில் குடிகொண்ட நிம்மதியை அவளது வதனம் அப்பட்டமாக வெளிப்படுத்தியது. 'நல்ல வேளை விலகி விட்டான், இது போதும்! இனி என்னை காத்துக் கொள்வேன்... உயிரே போனாலும் இனி இவனை தன் தேகம் தீண்ட அனுமதிக்க மாட்டேன்' என்ற எண்ணத்தில் மென்மையாக அவளது இதழ் அரும்ப தொடங்கவும், அவள் அதிரும் வண்ணம் சத்தமாக சிரித்த அர்ஜுன், நொடி பொழுதில் சட்டென அவள் மீது படர்ந்திருந்தான்.

அவனது திடீர் செயலில் அச்சம் கொண்டவளுக்கு கடுமையாக மூச்சு வாங்கியது. என்ன நடக்கிறது என்று அவள் யோசிக்கும் முன்னே அவளது இதழ்களை சிறை செய்து விட்டு வன்மையாக அவளை நாடினான். 'அடுத்து என்ன செய்வது? எப்படி இவனிடம் இருந்து விடுபடுவது என்று புரியாமல் அலைமோதிய விழிகளுடன் பரிதவித்து முழித்தவள் மீண்டும் "விக்ரா" என்று கூற வர, அவளது வார்த்தைகள் முடிந்த இடம் அவனது இதழாக இருந்தது.

பேசவும், யோசிக்கவும் நேரம் கொடுக்காமல் அவளை பரிதவிக்க விட்டு மொத்தமாக அவளை ஆட்கொண்டு விலகி படுத்தான் அர்ஜுன்.

இவன் இடத்தில் வேறு ஒரு ஆண் இருந்திருந்தால் ஒன்று கோவத்தில் வாசுகியை ஏதாவது செய்திருப்பான். இல்லை தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று இடித்து போய் அமர்ந்திருப்பான். இவன் மற்றவர்களை போல அல்ல என்பதற்கு அவனது இந்த செயலே ஆதாரம்.

அவனது இந்த செயலில் இருந்து மீளவே அவளுக்கு நேரம் பிடித்தது. அவளது அனுமதி இல்லாமலே இருவருக்குள்ளும் தாம்பத்தியம் நிகழ்ந்து முடிந்தது.

'எல்லாம் முடிந்து விட்டது' என்ற விரக்தி நிலையில், எதுவும் புரியாமல் பதுங்கி போய் அவன் அணைப்பில் இருந்தவளின் இதழ்களை பெருவிரல் கொண்டு அழுத்தமாக வருடினான். அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை. மரக்கட்டை போல அவன் மடியில் கிடந்தாள்.

"அப்போ என்ன பேர் சொன்ன?" என்று கேட்டவன் கலைந்திருந்த அவளது கூந்தலை காதோரம் ஒதுக்கி விட்டான்.
'எப்போது கேட்க வேண்டிய கேள்வியை இப்போது கேட்கிறான்?' என்பது போல அவளது பார்வை அவன் மீது பதிந்திருக்க, அதற்கும் அவனே பதில் கூறினான்.

"என்னடா அப்போ எதுவும் கேட்காமல் எல்லாம் முடிஞ்சத்துக்கு அப்புறம் இப்போ கேட்கிறான்னேன்னு பார்க்குரியா? அது ஒன்னுமில்லை அப்போ நான் அதை பத்தி கேட்டிருந்தா, என் காதுக்கு விளங்காத காதல் கடப்பாரைன்னு நாலு வரிக்கு நீ லெட்சர் கொடுத்து இருப்ப! அப்புறம் என் மூட் ஸ்பாயில் ஆகிடும் அதனால தான் அமைதியா இருந்துட்டேன்" இப்படி ஒரு விளக்கத்தை இந்த உலகில் எவனும் கூறியிருக்க மாட்டான்.

"எப்படி உங்களால் இப்படி எல்லாம் பேச முடியுது?"

"எல்லாரையும் போல வாயால தான் பேசுறேன். நீங்க எல்லாம் எப்படி?" என்றவனின் முகம் பார்க்க விருப்பம் இல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

வலிக்க அவளது நாடியை பற்றி தன் முகம் பார்க்க வைத்தவன் "இன்னொரு முறை இப்படி முகத்தை திருப்பின... கழுத்தை திருகி போட்டிருவேன்" என்று அரக்க தனமான முக பாவத்துடன் சிரித்துக் கொண்டே கூறினான். அவனது பார்வையில் அவளது உடல் சிலிர்த்து அடங்கியது. பயத்தில் கண்கள் கண்ணீரை சுரந்தது.

"ஏய் இப்போ எதுக்கு அழற? நான் உன்னை இப்போ என்ன பண்ணேன்? நம்மளோட பர்ஸ்ட் நயிட்ல நான் உன்னை தொட்டத்துக்கு நீ வேற ஒருத்தர் பேரை சொல்லி முணங்கும் போதும் நான் எவ்ளோ பெருந்தன்மையா எடுத்துக்கிட்டு அதை பத்தி உன்கிட்ட எதையும் கேட்காமல் இருக்கேன். ஆனால் நீ என்னன்னா என்னை கொஞ்சம் கூட புரிஞ்சுக்காமல் இப்படி அழுது வடியுற? இதெல்லாம் நியாயமா அன்பே..." என்றவன் அவளது முத்தை வருடியவாறே பேசிக் கொண்டிருக்க, அவனது தொடுகையில் முகம் சுருக்கியவள் மீண்டும் மீண்டும் ஊமையாக அழுது கரைந்தாள்.

"அழாதன்னு சொன்னேன்" என்றவன் அவளது கழுத்தை இறுக்கி பிடிக்க... மூச்சு விட முடியாமல் தடுமாறியவள் "ஹாக்..." என்று திணறினாள்.

"எங்க சிரி... ஹா ஹா" என்று சத்தம் போட்டு சிரித்தவன், பொல்லாத கோவத்தில் அவளை உதறி தள்ளி விட்டு எழுந்து கொண்டான்.

அவனது ஒவ்வொரு செயலும் இவளுக்கு பயத்தை கொடுத்தது... மனதில் ரணத்தை ஏற்படுத்தி விட்டு இப்போ வந்து எதுவும் அறியா சிறுபிள்ளை போல சிரி என்று சொன்னால் எப்படி முடியும்?

அவள் என்ன பொம்மையா? கீ கொடுத்தது அவன் விருப்பத்திற்கு ஆடி பாடி சந்தோஷப்படுத்துவதற்கு...

கழுத்தை பிடித்துக் கொண்டு இருமியவள் "ஏன் என்னை இப்படி சித்ரவதை பண்ணுறீங்க?" என்று கேட்டவள், விரக்த்தியின் உச்சத்தில் எரிச்சலாக அவனை பார்த்தாள்.

"ஓ வாசுகி நான் உன்னை எங்கடா கஷ்டப் படுத்துறேன் நீ தான் என்னை கஷ்டபடுத்துற, பாரு" என்றவன் தன் நெஞ்சை குறிப்பிட்டு காட்டி, "நீ அப்போ சொன்ன அந்த பேரு என் மனசை ரணமாகிடுச்சு... அப்படி ஒரு வலி, அதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது. இப்போ எனக்கு எப்படி இருக்கு தெரியுமா உன் அன்புக்கு சொந்தமாயிருக்க அவனை கொன்னு புதைக்கனும் போல இருக்கு" என்று ஆத்திரமாக கூறியவன், அவளது முக மாற்றத்தை கண்டதும் "ஹா ஹா சும்மா சொன்னேன்" என்று முகத்தை மாற்றி மென்மையாக சிரித்துக் கொண்டான்.

பேசியபடியே மீண்டும் அவள் அருகில் வந்தான்... போர்வையால் தன் உடலை மறைத்துக் கொண்டவள் பயந்து போய் அவன் முகம் பார்க்க... "என்ன இது எல்லாம்? உன் மேல எவ்ளோ அன்பு இருந்தா இப்படி மறுபடி உன்னை தேடி வந்திருப்பேன்... என்னை பார்த்து இப்படி மூடி மறைச்சா என்ன அர்த்தம்?"என்று கேட்டவனை கலங்கிய விழிகளுடன் பார்த்தவள் "ப்ளீஸ் எனக்கு இதெல்லாம் பிடிக்கலை, புரிஞ்சுக்கோங்க" என்று கெஞ்சினாள்.

அவனோ ஏதோ புது கதை போல என்றவாறு "ஓ ஏன் பிடிக்கல? ஆனால் எனக்கு என்னமோ நமக்குள்ள நடந்த விஷயத்துக்காக நீ பெருசா வருத்தப்பட்ட மாதிரி தெரியலையே?" என்று கேட்டபடி அவள் அருகில் படுத்துக் கொண்டான்.

அவனது செயல்கள் ஒவ்வொன்றும் இவளுக்கு மேலும் மேலும் எரிச்சலை கொடுக்க... பொங்கி எழுந்து விட்டாள்.

"இப்போவும் நீ"

"ஹான்" அவனது ஒரு வார்த்தையில் அவளது குரல் மரியாதையாக வெளிவந்தது.

"இப்போவும் நீங்க என்னை தொட்டா எனக்கு அவர் ஞாபகம் தான் வரும் அது உங்களுக்கு பரவாயில்லையா? அப்போ நீங்க என்னை தொட்ட போதும் எனக்கு அவர் என்னை தொட்ட மாதிரி தான் இருந்தது... அவரை மனசுல நெனச்சு தான் உங்க கூட"

"ப*த்தேன்னு சொல்ல போறியா?" அவன் கேட்ட தோரணையில் இவளுக்கு தொண்டை அடைத்தது.

பயத்தில் மிடறு விழுங்கி அவனை பார்த்தவள், அவனிடம் இருந்து விலக பார்க்க, விலக விடாமல் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் "பயப்படாத மேல சொல்லு நான் தொடும் போது எப்படி இருந்தது" என்று அந்தரங்கமாக சில விஷயத்தை அவளிடம் சொல்ல... பெண்ணவளின் உடல் கூசி போனது.

இப்படி ஒரு ஒழுக்கமில்லாத பேச்சை அவனிடமிருந்து அவள் சிறிதும் எதிர்பார்க்க வில்லை...

"போதும் நிறுத்துங்க அசிங்கமா பேசாதீங்க?" என்று சொன்னாள்.

"நீ சொன்னதை தான் நான் தெளிவா சொன்னேன்... நீ எப்படி பீல் பண்ணன்னு எனக்கு தெரிய வேண்டாமா? சொல்லு நான் அப்படி தொட்ட போது"

"ஒன்னுமில்லை இந்த பேச்சை விடுங்க... எனக்கு தூக்கம் வருது" என்றவள் இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கினாள். உடனே அவளை விட்டு எழுந்து கொண்ட அர்ஜுன் நேராக குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவனது உடல் தீயாக தகித்தது... கோவம்! யார் மீது எதற்காக என்று புரியாத அளவுக்கு ஆத்திரம் வந்தது, சினத்தை கட்டுப்படுத்த வழி தெரியாமல் "ஆ" என்று நீருக்கடியில் நின்று கத்தினான். அவனது சத்தம் வாசுகியின் செவியை அடைந்ததும். உடனே கண் விழித்தவள் குளியலறை பக்கம் திரும்பி பார்க்க... அந்நேரம் டவலை உடுத்திக் கொண்டு வெளியே வந்தான் அர்ஜுன்.

சிவந்த விழிகளுடன் கட்டிலில் இருந்தவளை பார்த்து "என்னடி சைட் அடிக்கிறியா?" என்று கேட்டு கண் சிமிட்டியவன் வசீகரமாக புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.

"இவன் திருந்த மாட்டான், இவன் எங்க போன எனக்கு என்ன?' என்பது போல விட்ட தூங்கத்தை மீண்டும் தொடர்ந்தாள் வாசுகி.

வெளியே வந்த அர்ஜுன் தொடர்ச்சியாக மூன்று சிகரெட்டுகளை ஊதி தள்ளி இருப்பான். ஏதோ பலத்த யோசனை... மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருக்க உடனே தன் நண்பனுக்கு அழைப்பு விடுத்தான்.

இங்கு உறக்கத்தை தொலைத்து அமர்ந்திருந்த நிலனின் அலைபேசி ஒலித்தது.

திரையில் அர்ஜுனின் எண் ஒளிர இரண்டு நொடி தயக்கம்... அந்த தயக்கத்தை விடுத்து அழைப்பை ஏற்றான் நிலன்.

இறுவருமே சிறிது நேரம் எதுவும் பேசிக்கொள்ள வில்லை.

"நிலன்" என்று மௌனம் விடுத்து அர்ஜுன் பேச ஆரம்பிக்க... நிலனின் கண்களில் அவனே அறியாமல் ஒரு துளி கண்ணீர்.

நண்பனின் துரோகம் வலித்தது... இருந்தும் அவனை வெறுக்க முடியவில்லை.

"ம்ம்ம்"

"உன்னை பார்க்கணும் வீட்டுக்கு வா"

"இன்னிக்கு உனக்கு" என்று நிலன் பேச தடுமாறவும்...

"அதெல்லாம் விடு, நீ கிளம்பி வா கொஞ்சம் பேசணும்"

"இல்லை நான்"

"உனக்கு அரைமணிநேரம் டைம் அதுக்குள்ள வா" என்ற அர்ஜுன் அழைப்பை துண்டித்தான்.

மணி இரவு பதினொன்றாக இருந்தது.

மனம் இடம் கொடுக்கவில்லை இருந்தும் அவனது சொல்லுக்காக அவனது இல்லம் நோக்கி விரைந்தான் நிலன்.

*****

நுழைவாயிலில் கார் சத்தம் கேட்டதும் சிகரெட்டை கீழே போட்ட அர்ஜுன் நேராக நிலன் அருகில் வந்தான். நிலன் குடித்திருக்கிறான் என்பதை அவனது முகமே காட்டிக் கொடுக்க, கண்களை மூடி திறந்த அர்ஜுன்.

"என் கல்யாணம் முடிஞ்சதும் எதுக்கு உடனே கிளம்பி போன?" என்று கேட்டான்..

'எப்படி உன்னால இப்படி கேட்க முடியுது' என்பது போல அவனை ஒரு பார்வை பார்த்தான் நிலன். அந்த பார்வையை கண்டு இதழ் வளைத்து சிரித்த அர்ஜுன்.

"சட்டையை பிடிச்சு இழுத்து பளார்னு ஒண்ணு வைக்கணும்னு தோணுதுல்ல?" என்றான்.

அவன் கூறியது போன்ற எண்ணத்தில் எதிரில் நின்றவனுக்கு கோவம் வரவில்லை மாறாக மேலும் மனம் வலித்தது...

"இல்லை துரோகின்னு சொல்ல தோணுதா? ப்ச் அப்படி தோணினாலும் தப்பில்ல" என்று கூறி சிரித்தவனை, மன வேதனையுடன் பார்த்த நிலன் அங்கிருந்து செல்ல பார்க்க... அவனது தோளில் கரம் போட்ட அர்ஜுன், அடுத்தகணம் அவனை அணைத்து விடுத்தான்.

எதற்கு இந்த அணைப்பு என்று புரியாமல் இயலாமையுடன் நின்றான் நிலன் விக்ராந்த்.


மௌனத்தில் சிறு நாழிகை கழிந்ததும்... தன் கை கடிகாரத்தை உயர்த்தி நேரத்தை பார்த்தான் அர்ஜுன். மென்மையான புன்னகை அவன் இதழில் வழிந்தோட "ஹேப்பி பர்த் டே நிலன், எப்போதும் போல நான் தான் உனக்கு பர்ஸ்ட் விஷ் பண்ணியிருக்கேன்... எதுவும் மாறல, இனியும் எதுவும் மாறாது" என்று அவனிடம் கூறியவன், அங்கு தூரத்தில் தெரிந்த உருவத்தைக் கண்டு வன்மமாக சிரித்துக் கொண்டான்.
 
Last edited:

Mythili MP

Well-known member
Wonderland writer
மௌனம் 3

'எதுவும் மாறாது' என்று கூறிய அர்ஜுனை வலியுடன் பார்த்தவனின் மனது ஊமையாக உரைத்தது 'அது தான் எல்லாம் மாறி விட்டதே' என்று

"இதுக்கு தான் வர சொன்னீயா?" என்று கேட்ட நிலன் வேறு பக்கம் பார்வையை பதிக்க...

"ஏன் நான் விஷ் பண்ணதுல உனக்கு சந்தோசம் இல்லையா?" என்று கேட்டான் அர்ஜுன்.

கண்களை பிடிங்கி விட்டு நடபாதைக்கு வழி சொன்னால் மட்டும் இழந்தவனின் வலி மறந்து விடுமா என்ன?

"ம்ம்ம் ரொம்ப சந்தோஷமா இருக்கு... போதுமா?" என்று கூறி வலுக்கட்டாயமாக சிரித்தவன், சிறிது தூரம் சென்று பின் திரும்பிப் பார்த்தான்.

"நீ ஏன்டா இப்படி பண்ண?" என்று இப்போது வரை தன் மனதை அறுத்துக் கொண்டிருந்த கேள்வியை ஒரு வழியாக அர்ஜுனிடம் கேட்டு விட்டான் நிலன்.

"நான் என்ன பண்ணேன்?" அங்கிருந்த ஒரு தூணில் சாய்ந்து நின்று சாவகாசமாக கேட்டான் அர்ஜுன்.

செய்த பிழையை எண்ணி கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் நிற்கும் இவனிடம் வேறு என்ன பதிலை எதிர்பார்க்க முடியும்? என்று நினைத்துக் கொண்ட நிலன் மேற்கொண்டு அங்கு நிற்காமல் நடக்க ஆரம்பித்தான்.

"நான் பண்ணது சரியா தப்பான்னு எனக்கு தெரியாது... ஆனால் அது எனக்கு தேவைன்னு தோணுச்சு அதனால பண்ணேன். பிடிச்ச விஷயத்தை யாருக்காகவும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது. அது உனக்கே நல்லா தெரியும்" என்று அர்ஜுனின் குரல் அவனை பின் தொடர, திரும்பி பார்த்தான் நிலன்.

"அப்போ என்னை விட உனக்கு இன்னொரு விஷயம் பெருசா இருந்து இருக்கு அப்படி தானே?" என்று வலியுடன் கேட்டவனை கண்களை மூடி திறந்து பார்த்த அர்ஜுன். "உனக்கு அப்படி தோணுதுன்னா அப்படியே நினைச்சிக்கோ" என்று கூற, விரக்தியாக சிரித்துக் கொண்ட நிலன் "நல்லா இரு" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

நகமும் சதையுமா நட்பு கொண்டு வாழ்த்து வந்த அவர்களின் வாழ்க்கை வாசுகி என்ற ஒரு பெண்ணால் தடம் மாறி போயிருந்தது.

எந்த உறவிலும் நம்பிக்கை என்பது மிக முக்கியமான ஒன்று. என்று அந்த நம்பிக்கை குறைகிறதோ அன்றே அந்த உறவு அதன் தன்மையை இழந்து விடுகிறது. என்ன தான் மீண்டும் பேசி பழக முயற்சி செய்தாலும் எந்த ஒரு உறவும் மீண்டும் அதன் பழைய நிலையை எப்போதும் அடைவதில்லை.

*****

அர்ஜுனின் தந்தை கிருஷ்ணனும், நிலனின் தந்தை ராகவனும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள்.

ராகவன் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர், ஏகப்பட்ட சொத்துக்கள். கிருஷ்ணன் அவர் அளவுக்கு இல்லை என்றாலும் தேவைக்கு குறைபாடு இல்லாத நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்.

இருவரும் ஒன்றாக படித்து முடித்தனர், பின்னர் ராகவன் அவரது குடும்ப தொழிலை கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டார். கிருஷ்ணன் ராகவனது அலுவலகத்தில் தான் வேலை செய்து கொண்டிருந்தார்.

நாட்கள் எப்போதும் போல அப்படியே நகர்ந்தது. ராகவனும், கிருஷ்ணனும் ஒரே நேரத்தில் அவரவர்கள் விரும்பிய பெண்களை திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரின் மனைவியும் ஒரே நேரத்தில் கருவுற்றனர்... இருவருக்குமே ஆண் குழந்தை தான் பிறந்தது. ராகவனுக்கு நிலன் பிறந்தான். கிருஷ்ணனுக்கு அர்ஜுன் பிறந்தான்.

காலங்கள் கடந்தன... இந்நிலையில் ஒருநாள் கிருஷ்ணன் தனது அலுவலக பணிக்காக வெளியூர் சென்றபோது அவரது வண்டி விபத்துக்குள்ளானது. அதனை அறிந்த ராகவ் அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார்.

ஏற்பட்ட அந்த விபத்தின் காரணமாக கிருஷ்ணனுக்கு கைகால்கள் முடமானது. இத்தகைய சூழலில் 'இப்படி ஒரு கை கால் விளங்காதவனோடு என்னால் வாழ முடியாது. உனக்கும் உன் பிள்ளைக்கும் ஊழியம் செய்து என் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ள நான் விருப்பவில்லை... எனக்கு பிடித்த வேறோருவரோடு இனி என் வாழ்க்கையை ரசித்து வாழ முடிவு செய்து விட்டேன்' என்று ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு கிருஷ்ணனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டாள்.

கால்கள் முடமாகிய நிலையில், மனைவியும் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டாளே என்ற வருத்தத்தில், கிருஷ்ணனின் உடல்நிலை மிகவும் மோசமானது. நடந்ததை பற்றியே நினைத்துக் கொண்டு மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். இனி தன் மகன் அர்ஜுனை எப்படி வளர்ப்பது என்று எண்ணியே படுத்தப் படுக்கையானார்.

தந்தைக்கு ஏற்பட்ட விபத்தையே ஜீரணித்து கொள்ள முடியாத நிலையில், தாயும் அவர்களது வாழ்க்கையை பார்த்துக் கொண்டு தங்களை தவிக்க விட்டு சென்று விட்டாரே என்று நினைத்து நினைத்து அந்த சிறுவயதிலேயே தனக்கு தானே ஒரு கூட்டுக்குள் ஒடுங்கி கொண்டான் அர்ஜுன்.

சிறிது நாட்களில் கிருஷ்ணனும் மரணமடைந்தார். தனது நண்பனின் இறுதி சடங்கை முடித்து விட்டு
தந்தையையும் இழந்து, தாயும் இல்லாமல் வாடிய தனது நண்பனின் மகன் அர்ஜுனை வளர்க்க முடிவு செய்த ராகவன் அவனை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

தாயும் இல்லை தந்தையும் இல்லை... பெற்றோர்களுக்கு காதல் திருமணம் என்பதால் சொந்தபந்தமும் இல்லை. வேறு எங்கு செல்வது? தனக்கென யாரும் இல்லையே... என்ற தவிப்பில் வேறு வழியில்லாமல் ராகவனின் பின்னால் சென்றான் அர்ஜுன்.

தனது நண்பனின் குழந்தையையும் தனது குழந்தையைப் போலவே அதிக பாசத்துடன் வளர்த்தார் ராகவன். அர்ஜுனை தன் உடன் பிறந்தவன் போல அன்பாக பார்த்துக் கொண்டான் நிலன்.

தனக்கென எது வாங்கினாலும் அதனை முதலில் அர்ஜுனிடம் கொடுத்து அழகு பார்க்கும் குணம் கொண்டவன் நிலன். எந்த சூழ்நிலையிலும் அவனுக்கு இது வேறு ஒருவர் வீடு என்ற எண்ணம் வரக் கூடாது என்று நினைத்தான்.

இந்நிலையில்தான் நிலனுக்கும், அர்ஜுனுக்கும் பிறந்த நாள் வந்தது. இருவரது பிறந்தநாளையும் விமர்சையாக கொண்டாட முடிவு செய்தனர் ராகவன் தம்பதியினர்.

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ராகவின்அழைப்பை ஏற்று அனைவரும் அங்கு வந்திருந்தனர். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அர்ஜுனை கண்ட ராகவனின் தாயுக்கு அது சிறிதும் பிடிக்கவில்லை.

"நீ எதுக்காக இந்த பையனை இன்னும் வீட்ல வச்சுயிருக்க? ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்து அவனைப் பார்த்துக்கலாம்ல... என் பேரனுக்கு சமமா அவனையும் நிற்க வச்சு அழகு பார்க்குற? இதெல்லாம் சுத்தமா நல்லா இல்லை" என்று ராகவின் தாய் அவரிடம் சொன்னார். இதனை கேட்டு அர்ஜுனின் மனம் மிகுந்த காயம் பட்டது. உடனே நிலனை விட்டு சற்று தள்ளி நின்று கொண்டான் அர்ஜுன். அவனது விலக்கத்துக்கான காரணம் புரிந்ததுவோ என்னவோ அவனது கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டான் நிலன்.

"அவன் என் நண்பனோட பையன் மட்டுமில்லை அவனும் எனக்கு ஒரு பையன் மாதிரி தான் அவனுக்கு என்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு நீங்கள் யாரும் எனக்கு சொல்லித் தர வேண்டாம்" என்று கூறியவர் யார் தடுத்தாலும் வெறுத்தாலும் சரி என அர்ஜுனை நிலன் பக்கம் நிற்க வைத்து கேக்கினை வெட்ட வைத்தார் ராகவ்.

இப்படியே நாட்கள் செல்ல ஒருநாள் மர்மமான முறையில் ராகவன் இறந்து கிடந்தார். ராகவின் மனைவியும் மாயமானர். எங்கு சென்றார் அவருக்கு என்ன நேர்ந்தது என்று இப்போது வரை யாருக்கும் தெரியவில்லை. அதனால் எல்லாரும் ராகவனை கொன்று விட்டு அவரது மனைவி தண்டனைக்கு பயந்து தப்பி ஓடி விட்டார் என முடிவு செய்து விட்டனர்.

தனது பதினைந்தாம் வயதில் தாய் தந்தை இல்லாமல் தனியாளானான் நிலன் விக்ராந்த்.

அர்ஜுனும், நிலனும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தனர். அந்த பிறந்தநாள் விழாவுக்கு பிறகு ராகவனின் தாய் அந்த வீட்டு பக்கமே வரவில்லை. மகன் இறந்த தகவல் கிடைத்தபோதும் வந்து பார்க்கவில்லை.

ராகவனின் இறப்புக்கு பிறகு நிலனின் சொத்துக்கள் முழுவதையும் பார்த்துக் கொண்டு அவர்களை வழி நடத்தி வளர்த்து வந்தது நிலன் விக்ராந்தின் அத்தை பத்ரா.

நிலன் படித்து முடித்துவிட்டு தொழிலை கையில் எடுத்துக் கொண்டான். பத்ரா வெளிநாட்டில் உள்ள அவர்களது தொழிலை கவனிக்க சென்று விட்டார்.

அர்ஜுனுக்கு சினிமா படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம அதிகமாக இருந்தது. அதற்கு வாய்ப்பு தேடி ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருந்தான். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. வாய்ப்பு தேடி சலித்து போனவன் நாளடைவில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் குடித்து விட்டு அலைய தொடங்கினான் 'இப்படி அலைந்தால் இவன் வாழ்க்கையே வீணாகிவிடுமே" என்று பயம் கொண்ட நிலன் இதனை பற்றி அவனிடம் பேச முடிவு செய்தான்.

ஒரு நாள் விரக்த்தியாக கடற்கரையில் அமர்ந்து கொண்டிருந்தான் அர்ஜுன்... அவன் தோள் மீது கரம் போட்டபடி அருகில் வந்து அமர்ந்தான் நிலன்.

"என்ன ஆச்சுடா? ஏன் இப்படி இருக்க? பேசாமல் என்கூட ஆபிஸ் வந்திடு" என்று நிலன் கேட்க

"என்னோட விருப்பத்தை தொலைச்சுட்டு கடமைக்கு ஒரு வேலையை பார்த்துட்டு என்னால வாழ முடியாதுடா" என்றான் அர்ஜுன்.

"அது தான் எந்த வாய்ப்பும் கிடைக்க மாட்டிங்குதே"

"உயிர் இருக்கவரை போராடி பார்க்க வேண்டியது தான்... ஆனால் இது இல்லாமல் எனக்கு வேற ஒரு வாழ்க்கை கிடையாது" என்று ஆணி தரமாக கூறினான் அர்ஜுன்.

"அதுக்கு இப்படி குடிச்சிட்டு அழைஞ்சா எல்லாம் சரியாகிடுமா?" என்ற நிலனின் கரத்தை தட்டி விட்டு எழுந்து கொண்டான் அர்ஜுன்.

"என்ன தாண்டா உன் பிரச்சனை?"

"பணம் தான்டா என் பிரச்சனை அதை உன்னால கொடுக்க முடியுமா? முடியாதுல்ல, எல்லாரும் சொல்லுற மாதிரி நீ வேற நான் வேற தான் என்னயிருந்தாலும் நான் உங்க வீட்டு பையன் இல்லையே" என்று சொன்ன அர்ஜுனின் கண்கள் கலங்கி போனது. நிலனிடம் மௌனம் மட்டுமே. தான் பேசியது தவறு என்று அடுத்த நொடி உணர்ந்து கொண்ட அர்ஜுன் அவனை அணைத்துக் கொண்டான்.

"சாரிடா நிலன் என்னோட இயலாமை என்னை இப்படி எல்லாம் பேச வைக்குது. மன்னிச்சிடு" என்றவனை தன்னில் இருந்து பிரித்து நிறுத்தியவன் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டான்.

அடுத்த சில நாட்களில் அர்ஜுன் சினிமா படம் எடுக்க, தானே அதனை தயாரிக்க முடிவு செய்தான் நிலன். 'பணம் தான் பிரச்சனை என்றால் உனக்காக அதனை கொடுக்க நான் தயார்' என்று முன் வந்து நின்ற நிலனை கண்டு அர்ஜுனின் உள்ளம் நெகிழ்ந்தது.

அர்ஜுன் இயக்கிய முதல் படம் படு தோல்வி அடைந்தது. போட்ட முதலில் முக்கால் பங்குக்கு மேல் நஷ்டம். அதனை பற்றி நிலன் சிறிதும் கவலை கொள்ள வில்லை. அவனுக்காக இழந்த பணத்தை கணக்கு பார்க்கவும் இல்லை.

ஆனால் அர்ஜுனுக்கு இது மிகுந்த குற்ற உணர்வாகி போனது. மீண்டும் குடிக்க ஆரம்பித்தான். இவனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று புரியாமல் நின்ற நிலன். மீண்டும் அர்ஜுனை சினிமா எடுக்க சொன்னான். தொல்வியை கண்டு சற்று கலக்கம் கொண்ட அர்ஜுன், நிலனின் சொல்லை மறுத்து விட்டான்.

"இந்த முறை நீ கண்டிப்பா ஜெயிப்ப, இல்லையா மறுபடியும் முயற்சி பண்ணலாம்... எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு... நான் இருக்கேன்டா, தைரியமா முயற்சி பண்ணு" என்று அவனுக்கு ஊக்கமளித்தான் நிலன்.

அர்ஜுனின் வெற்றியிலும், தோல்வியிலும் அவனுக்கு பக்கபலமாக இருந்தான் நிலன்.

அவன் இயக்கிய இரண்டாவது படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற வில்லை என்றாலும் இந்த முறை பெரிதாக நஷ்டம் எதுவும் ஏற்படவில்லை. அதன் பிறகு அவன் மூன்றாவதாக இயக்கியபடம் பெரும் அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகே தயாரிப்பாளர்கள் பலரும் அவனது படத்தை தயாரிக்க முன் வந்தனர். இந்த வெற்றியை இருவருக்குமான வெற்றியாக நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

அடுத்து அர்ஜுன் இயக்க போகும் படத்துக்கு நாயகன் தேர்வு நடைபெற்றது. அவன் நினைத்த கதாபாத்திரத்துக்கு ஒருவரும் சரிவரவில்லை. அர்ஜுனின் ஒரு குணம் என்னவென்றால் அவன் கதையில் வரும் கதாபாத்திரத்துக்கு யார் சரியாக பொருந்துவார்களோ அவர்களை தவிர வேறு யாரையும் படத்தில் அனுமதிக்க மாட்டான்.

நிலனை இந்த படத்தில் நடிக்க வைத்தால் சரியாக இருக்கும் என்று எண்ணிய அர்ஜுன் கட்டாயப்படுத்து நிலனை அடுத்த படத்தில் நடிக்க வைத்தான். அந்த படம் பெரும் அளவில் வெற்றி பெற்றது. ஆரம்பத்தில் அர்ஜுனுக்காக படத்தில் நடிக்க வந்த நிலனுக்கு அந்த இடம் பிடித்து போய்விட்டது. அதனால் தொடர்ந்து படங்களை நடிக்க ஆரம்பித்தான்.

அனைத்தும் நலமுடன் சென்ற போது தான் அவர்கள் இருவரது வாழ்க்கையிலும் குறுக்கே வந்தாள் வாசுகி. அவள் ஒரு பாடகி.

அவர்களது படத்திற்காக அவள் பாடிய பாடலில் ஈர்க்கபட்டு அவளை காண வேண்டும் என்று விருப்பப்பட்டான் நிலன். முதல் பார்வையிலேயே காதல் வந்தது. அப்படியே இருவரும் பேசி பழகி நட்பானார்கள். வாசுகிக்கும் நிலன் மீது காதல் இருந்தது. ஆனால் இருவரும் சொல்லிக் கொள்ள வில்லை.

வாசுகி மீது தனக்கு இருப்பது காதல் தான் என்பதை உணர்ந்து கொண்ட நிலன் உடனே அதனை அர்ஜுனிடம் தெரிவித்தான்.

"நான் வாசுகியை விரும்பிறேன்டா கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்... நீ என்ன நினைக்கிற?" என்று கேட்டான்.

அர்ஜுனின் முகம் நொடியில் மாறியது... பின்னர் வலுக்கட்டாயமாக சிரித்துக் கொண்டவன் "உன் விருப்பம்டா" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அடுத்தநாள் வேறு ஒரு இயக்குனரின் படப்படிப்புக்காக அர்ஜுன் வெளியூருக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. அந்த படத்தில் நிலன் தான் கதாநாயகன்.

படப்பிடிப்பு முடிந்து வந்து வாசுகியிடம் தன் காதலை சொல்லி விடலாம் என்று நினைத்த நிலன் பத்து நாள் ஷூட்டிங் முடிந்து திரும்பி வந்த நாள் அன்று சத்தமின்றி அர்ஜுனுடன், வாசுகிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

***

இதுவரை நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்தபடி வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்த நிலனின் கண்கள் கலங்கி போனது...

நிலனிடம் பேசிவிட்டு திரும்பி தன் அறைக்குள் வந்தான் அர்ஜுன். அவன் உள்ளே நுழையவும் வாசுகியிடம் சிறு அசைவு தெரிந்தது.

"ரொம்ப நடிக்காதடி" என்று உரக்க சொன்ன அர்ஜுன் அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டான். போர்வையால் முகத்தை நன்றாக மூடிக் கொண்ட வாசுகி சுருண்டு படுத்தாள்.

அவள் போர்த்தியிருந்த போர்வையை பிடித்து இழுத்தான் அர்ஜுன்.

"உங்களுக்கு என்ன வேணும்? ஏன் இப்படி என்னை கஷ்டப்படுத்துறீங்க?" என்று சிடுசிடுவென நின்றவள் அவனை அக்னியாக பார்த்தாள். மென்மையாக சிரித்துக் கொண்டான்.

"ஒரு பார்வையிலே என்னை உறையவைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருகவைத்தாய்
அட நான் என்ற ஆணவம் அழியவைத்தாய்
உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய்
நான் பார்த்துவிட்டால்
ஒரு வீழ்ச்சிவரும் நீ பார்த்துவிட்டால்
ஒரு மோட்சம் வரும்... இல்லை இல்லை இந்த லைன் தப்பு நீ பார்த்து விட்டால் ஒரு வீழ்ச்சிவரும், அது தான் உனக்கு சரியா இருக்கும்" என்று அவளது கண்களை பார்த்து பாடியவன் அவளது மடியில் படுத்துக் கொள்ள, தள்ளி விட பார்த்தாள்... முடியவில்லை.

"உன்னால என்னை அசைக்க கூட முடியாது. அப்புறம் இந்த ஒட்டு கேட்குற வேலை, எட்டி பார்க்கிற வேலை எல்லாம் இத்தோட விட்டுடு. அதான் எல்லாருக்கும் நல்லது... புரியுதா? " என்று கட்டளையாக சிரித்துக் கொண்டே சொன்னான்.

"எதுக்கு அதை என்கிட்ட சொல்லுறீங்க? நான் அப்படி எல்லாம் பண்ணல"

"ஓ அப்போ நீ எட்டி பார்க்கலயா? ஒருவேளை அது உன் ட்வின் சிஸ்டரா இருக்குமோ?" என்று அவன் நிதானமாக கேட்க... வாசுகியின் முகம் நொடியில் மாறியது. பின்னர் "உங்க கற்பனைக்கு எல்லாம் என்னால காரணம் சொல்ல முடியாது" என்றவள் எழுந்து சென்று குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். அர்ஜுனின் சிரிப்பு சத்தம் அவளை பின் தொடர்ந்தது.
 

Mythili MP

Well-known member
Wonderland writer
மௌனம் 4

காலை எட்டு மணி போல கண்களை திறந்த அர்ஜுன், முதலில் அழைத்தது என்னவோ நிலனுக்கு தான். ஆனால் அவன் அழைப்பை ஏற்கவில்லை.

'எதுக்கு போன் எடுக்க மாட்டிக்குறான்?' பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு பச்சை பிள்ளையாக யோசனையில் மூழ்கி போனான்.

அந்நேரம் குளித்து முடித்து தலையில் பூந்தூவலை சுற்றிக் கொண்டு குளியலறையில் இருந்து வெளியே வந்த வாசுகி. கூந்தலை காய வைத்து முகத்திற்கு ஒப்பனை செய்ய ஆரம்பித்தாள். அவளது செயல்களை கவனித்தபடியே கட்டிலில் அமர்ந்திருந்தான் அர்ஜுன். அவளோ அவனை சிறிதும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

அலை அலையான கேசம் உலர்ந்ததும், கூந்தலை அள்ளி பின்னலிட்டவள், கண்ணாடியில் ஒருமுறை தன் முகத்தை பார்த்து மிதமாக புன்னகைத்துக் கொண்டாள். பின்னர் அருகில் மேசையின் மீதிருந்த கைப்பையை எடுத்து மாட்டிக் கொண்டபடி, கட்டிலில் அமர்ந்திருந்த அர்ஜுனை ஒரு பார்வை பார்த்து விட்டு, வெளியே போக முயற்சி செய்தவளை அவனது குரல் தடுத்து நிறுத்தியது.

"எங்க போற?" என்று கேட்டபடி எழுந்து அவளை நோக்கி வந்தான் அர்ஜுன்.

"நான் எங்க வேணாலும் போவேன் அதை உங்ககிட்ட சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்லை" கணவனை எதிர்க்க திடீரென வீரம் வந்தது போல?

"அவசியம் இல்லை தான். ஆனால் என்ன பண்ணுறது இப்போ நீ வெறும் வாசுகி இல்லையே... மிஸஸ் வாசுகி அர்ஜுன் ஆச்சே அதனால் கொஞ்சமே கொஞ்சம் எனக்கும் நீ எங்கே போற? எப்போ வரேன்னு தெரிஞ்சுக்க உரிமை இருக்கு"

"அந்த உரிமையை இந்த மஞ்சள் கயிறு உங்களுக்கு கொடுத்ததுன்னு நெனச்சீங்கன்னா... அதை இப்போவே மறந்திடுங்க... கணவன் அப்படிங்குற உரிமையை நான் தான் உங்களுக்கு கொடுக்கணும் இந்த மஞ்சள் கயிறு இல்லை"

"வாவ் வாவ் என்னாமா பேசுறடி நீ? இந்த பாயிண்ட் எல்லாம் வச்சு புதுமை பெண்! புரட்சி பெண்! அப்படின்னு ஒரு காவியத்தையை படைக்கலாம்" என்று நக்கல் பேசியவனை எரிச்சலுடன் பார்த்தவள் அங்கிருந்து செல்ல பார்க்க...

"எங்க போறன்னு சொல்லிட்டு போ"

"முடியாது"

"ப்ச்... சரி விடு அடையாளம் தெரியாமல் லாரில அடிபட்டு தான் நீ சாகனும்னு உன் விதியில் எழுதியிருந்தா அதை யாரால மாத்த முடியும்? உன் மேல இருக்க அக்கறையில் கேட்டாலும் புரிஞ்சுக்க மாட்டிங்குறியே"

"ரொம்ப தான் அக்கறை... பயப்படாதீங்க உங்க அம்மா மாதிரி ஒன்னும் ஓடிப் போயிட மாட்டேன்" என்று சட்டென சொன்னவள் வெளியே செல்ல போக... அவளது கரம் அவனிடத்தில் அகப்பட்டு கொண்டது.

"வலிக்குது கையை விடுங்க"

"இப்போ என்ன சொன்ன?" என்றவன் அவளது கரத்தை பிடித்து முறுக்கினான்.

வலித்தாலும் அவளது கண்கள் அர்ஜுனை கம்பீரமாக ஏறிட்டது. "எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு யோசிக்கிறீங்களா?... ம்ம்ம் இதையெல்லாம் என் காதலன் தான் என்கிட்ட சொன்னான்! அது தான் உங்க ஆருயிர் நண்பன்" என்று அவள் சொன்ன மறுகணம், அவளது கழுத்தை பிடித்து இறுக்கியிருந்தான் அர்ஜுன்.

மூச்சு விட முடியாத போதும் அவளது கண்கள் அவனை முறைத்துக் கொண்டு தான் இருந்தது. அப்படி ஒரு கோவமும், வன்மம் அவளது விழிகளில் வெளிப்பட்டது. ஒருகட்டத்தில் கண்கள் சொருகி அவள் மயக்க நிலைக்கு செல்ல தயாரான போது அவளது கழுத்தில் இருந்து கைகளை எடுத்தவன் "ம்ம்ம் சொல்லி இருப்பான் அதுக்கு வாய்ப்பிருக்கு" என்று கூறியபடி அவளை பார்த்து ஒரு புரியாத புன்னகையை உதிர்த்தான்.

அர்ஜுனுக்கு கட்டுபடுத்த முடியாத அளவுக்கு கோவம் இருந்தது. இருந்தும் அதனை காட்டும் நேரம் இது அல்ல என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

கழுத்தை தடவியபடி அவனை கோவ பார்வை பார்த்தவள்... அருகில் இருந்த நீரை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்.

கண்களில் மெல்லிய கண்ணீர் படலம்... இருந்தும் அதனை மறைத்துக் கொண்டு வெளியே திடமாக நின்றாள்.

"இனி நீ எங்கே போறன்னு நான் கேட்க மாட்டேன்... போ... அப்புறம் அடிக்கடி உன் உண்மையான முகம் வெளியே வருது... அடுத்த முறை கொஞ்சம் கவனமா யோசிச்சு பேசு... முடிஞ்சா வரும் போது ஒரு ரோஜா பூ வாங்கிட்டு வா..." என்று சொன்னவனை புரியாமல் பார்த்த வாசுகியின் கன்னத்தில் மெதுவாக தட்டியவன் "ரொம்ப ரொமான்டிக்கா யோசிக்காத, அதை உன் காதுல வச்சா செமயா இருக்கும் அதுக்கு தான் சொன்னேன்" என்றவன் அவளுக்கு வழி விட்டு விலகி நிற்கவும், அவனது கரத்தை தட்டி விட்டு, அவனை முறைத்து பார்த்தபடி அங்கிருந்து சென்றாள் வாசகி.

*****

"அர்ஜுன் இப்படி பண்ணுவார்ன்னு நான் நினைச்சுக் கூட பார்க்கவில்லை விக்ராந்த்... வாசுகி மேல உங்களுக்கு இருந்த காதலை பத்தி தெரிஞ்சும் எதுக்காக அவர் இப்படி பண்ணினாரு? நான் அப்போவே சொன்னேன் அவரை ரொம்ப நம்பாதீங்கன்னு கேட்டீங்களா? அவர் சரியான பச்சோந்தி" என்று நிலனுடன் காரில் வந்தபடி அன்பு கூற

"போதும் இதுக்கு மேல எதுவும் பேசாதா" என்றான் நிலன்.

"இல்லை அவர்" என்று மேலும் அன்பு எதையோ பேச வரவும்,

"நிறுத்து எனக்கும் அவனுக்கும் இடையில் ஆயிரம் இருக்கும்... அதை பத்தி பேச உனக்கு மட்டும் இல்லை யாருக்கும் உரிமை இல்லை... இதுக்கு மேல இதை பத்தி பேசினா என்னை வேற மாதிரி பார்க்க வேண்டியது வரும்" என்ற நிலன் முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு வண்டியை ஓட்டிச் சென்றான். அன்புவின் வாய் அப்படியே அமைதியானது.

பூனை இளைத்தால் எலிக்கு கொண்டாட்டம் என்பது போல...நண்பர்களுக்கு இடையே பிரச்சனை என்றால் உடனே உள்ளே நுழைந்து உறவை கெடுக்க எப்போதும் மூன்றாவது நபர் தயாராக இருப்பார்கள். அதற்கு நாமே வழி அமைத்து கொடுக்காமல் இருப்பது நலம்.

வாகனத்தை ஓட்டி வந்த நிலன் ஒரு இடத்தில் மகிழ் வதனியை கண்டதும் சட்டென வண்டியை நிறுத்தினான்.

விபச்சார வழக்கில் கைது செய்து விடுதியில் இருந்து மகிழ் வதனியை அழைத்து வந்து ஜீப்பில் ஏற்றினர்கள் காவலர்கள்.

அதனை சற்று தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நிலனுக்கு எதுவும் புரியவில்லை.

அவன் அருகில் இருந்த அவனது மேனஜரும் நண்பனுமான அன்பு "விக்ராந்த் இது அந்த மகிழ் தானே?" என்று குறிப்பிட்டு கேட்டான்.

"ம்ம்ம்" என்ற சொல் கூட அவனிடம் இருந்து வரவில்லை.

"நல்லா பாருங்க அவளே தான். இன்னும் இவள் திருந்தலையா? குடும்ப கஷ்டம் அப்படி இப்படின்னு உங்க கிட்ட கதை சொல்லி பணம் பிடுக்கும் போதே ஏதோ தப்பா இருக்குன்னு எனக்கு தோணுச்சு. இவங்க எல்லாம் கஷ்டதுக்காக இப்படி தப்பு பண்ணுறது இல்லை... தேவைக்காக இப்படி பண்ணிட்டு இருக்காங்க, நான் அன்னைக்கே சொன்னேன் நீங்க தான் கேட்கலை... இப்போ பாருங்க இன்னும் இவள் இதே தொழிலை தான் பண்ணிட்டு இருக்காள். ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுங்குறது உண்மை தான். சுகம் கண்ட பிறகு பழகி போறது இயல்பு தானே" என்று தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தவனை ஒரு பார்வை பார்த்த நிலன் "கீழ இறங்கு" என்று கூறினான்.

"விக்ராந்த்"

"இறங்குன்னு சொன்னேன்" என்று அவன் குரல் உயர்ந்த, காரில் இருந்து கீழே இறங்கினான் அன்பு. அவன் இறங்கியது அடுத்த கணம் வண்டியை திருப்பி ஓட்டிச் சென்றான்.

*****

வாக்கில் ஒருவர் மகிழ் வதனியை அந்த வழக்கில் இருந்து விடுவித்து வெளியே அழைத்து வந்தார்.

"யார் என்னை வெளியே எடுக்க சொன்னது" என்று கேட்டவளின் மனமோ 'அது நிலனாக இருக்க கூடாது... என்னுடைய இந்த நிலை அவனுக்கு எந்த சூழ்நிலையிலும் தெரிந்து விட கூடாது என்று மானசீகமாக வேண்டிக் கொண்டது' அவளது வேண்டிதல் இறைவனின் செவியை அடையவில்லை போல...

"சொல்லுற வாங்க" என்று அவளை சற்று தூரம் அழைத்து வந்தான். அங்கு மறைவாக இருளில் ஒரு கார் நின்றது. உள்ளே இருப்பது யார் என்று மகிழ் வதனிக்கு தெரியவில்லை.

உடனே காரின் உள்ளே விளக்குகளை ஒளிர செய்தான் நிலன். அங்கு அவனை கண்டதும் கூனி குறுகி போனவள் எதுவும் பேசவில்லை. வார்த்தைகள் வற்றிய நிலையில் அவன் முகம் பார்த்தாள்.

"தேங்க்ஸ் ரகு" என்று லாயரிடம் கூறி அவரை அனுப்பி வைத்தவன் "உட்காரு" என்று அருகில் இருந்த கார் கதவை மகிழ் அமர்வதற்க்காக திறந்து விட்டான்.

அவளோ "இல்லை நானே"

"உட்காருன்னு சொன்னேன்" என்றவன் வார்த்தையில் அழுத்தம் கொடுக்க, காரின் பின் பக்க கதவை திறந்து அமர்ந்து கொண்டாள்.

ஆழ்ந்த பெருமூச்சு விட்டு காரின் முன் பக்க கதவை மூடியவன் வாகனத்தை ஓட்டி சென்றான்.

வெகு தூரம் கார் சென்றது. இருவரும் பேசிக்கொள்ள வில்லை.

"எங்க போறோம்?" மௌனம் களைத்து அவளே முதல் வார்த்தை பேசினாள்.

"ம்ம்ம்... லாட்ஜுக்கு" என்று அவன் கூற... இவள் உடலில் மெல்லிய நடுக்கம். உடனே "ஏன்?" என்று கேட்டாள்.

"இன்னிக்கு நீ எதுக்காக அங்க போனியோ அதுக்காக தான். ஏன் நான் கூப்பிட்டா வர மாட்டியா?" என்று சொன்னவன் கண்ணாடி வழியே அவள் முகம் பார்க்க... அவளது விழிகளில் சட்டென ஒரு துளி கண்ணீர் வழிந்தது.

உனக்கும் என் வேதனை புரியவில்லையா? என்ற ஆதங்கத்தில் வெளிப்பட்ட கண்ணீர் அது.
 
Status
Not open for further replies.
Top