ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

'மையவிழிப் பார்வையிலே' - கதை திரி

Status
Not open for further replies.

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 19








தன் எண்ணிற்கு வந்த அழைப்பை புருவ முடிச்சுகளோடு பார்த்தவாறு ஏற்று காதில் வைத்தாள் வைஷ்ணவி.



மறுமுனையில் கேட்ட குரலில் அதிர்ந்து விழித்தவள் வீட்டிலிருந்து வெளியேறி வாசலை நோக்கிச் செல்ல, அதை மற்ற அறையிலிருந்த லலிதாவும் ஆராதியாவும் காணாமல் போனது அவர்களின் துரதிஷ்டவசமாகிப் போனது.



"தியா, எனக்கு ரொம்ப பயமா இருக்கும்மா. என்னாச்சுன்னு எனக்கு எதுவும் சொல்லவும் மாட்டேங்குற, ஹர்ஷா தம்பி வேற ஏதேதோ சொல்றாரு. என்னதான் நடக்குது இங்க, இரண்டு பேரும் என்ன தப்பு பண்ணி தொலைச்சீங்கன்னு மொதல்ல சொல்லுங்க" என்று லலிதா மூக்கை உறிஞ்சியவாறு மகளிடம் கேட்க, சலிப்பாக விழிகளை உருட்டினாள் ஆராதியா.



"அய்யோ அம்மா! நாங்க எந்த தப்பும் பண்ணல, எங்க நேரம். சீக்கிரமா எல்லாமே சரியாகிடும். நீ சும்மா யோசிச்சிட்டு இருக்காத புரியுதா?" என்று அவள் சமாளிக்க, அப்போதும் லலிதாவின் முகம் தெளிந்தபாடில்லை.



"என்னென்னவோ சொல்லுற, நான்தான் இரண்டு பொம்பள புள்ளைங்கள பெத்துட்டு வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கு" என்று அவர் அப்போதும் சிணுங்கலை தொடர, 'இவங்கள திருத்த முடியாது' என்று இரு பக்கமும் சலிப்பாக தலையாட்டியவாறு அறையிலிருந்து வெளியேறியவள் வைஷ்ணவியைத் தேடிச் சென்றாள்.



"வைஷு, ரொம்ப நேரமாகிருச்சு. இன்னும் சாப்பிடாம என்ன பண்ற?" என்று ஆராதியா கேட்டவாறு அவளுடைய அறைக்குள் நுழைய, அங்கு அவளுடைய சகோதரி இருந்தால்தானே!



சிறு பயம் மனதில் தொற்றிக்கொள்ள, வேகமாக வீடு முழுக்க தேட ஆரம்பித்தாள் அவள்.



"வைஷு... வைஷு... அம்மா வைஷ்ணவிய பார்த்தீங்களா, வீட்டுல எங்கேயும் இல்லை. எங்க போனா?" என்று அவள் பதற்றமாகக் கேட்டுக்கொண்டே சுற்றி முற்றி பார்க்க அப்போதுதான் அவளுடைய விழிகளில் வீட்டின் வாசற்கதவு திறந்து வைக்கப்பட்டிருப்பது தென்பட்டது.



"அம்மா, வைஷ்ணவி வெளியில போனாளா என்ன?" என்று கேட்டுக்கொண்டே இதயத்தின் ஓசை காதில் விழ ஒவ்வொரு அடியாக வைத்து வெளியே சென்றுப் பார்த்தாள் ஆராதியா.



அவள் நினைத்தது சரியே!



வைஷ்ணவியின் அலைப்பேசி அனாதையாக வீட்டு வாசலில் கிடக்க, அதை கையிலெடுத்தவளின் விழிகளிலிருந்து விழிநீர் அருவியாக ஓடியது.



"அம்மா..." என்று அவள் பெருங்குரலெடுத்துக் கத்த, லலிதாவோ ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டார்.



அதேநேரம்,



வீட்டு சோஃபாவில் முட்டியில் இரு கைகளைக் கோர்த்து அமர்ந்திருந்தான் ஹர்ஷா. அவனுடைய பார்வை மாடியிலிருந்த அந்த ஒரு அறையை அடிக்கடி நோட்டமிட்ட வண்ணம் இருக்க, சடாரென எழுந்தவன் மாடிப்படிகளில் தாவி குதித்து அந்த அறைக்குள் நுழைந்தான்.



"இல்லை... இருக்காது... இருக்கக் கூடாது..." என்று மட்டுமே மீண்டும் மீண்டும் அவன் மனம் சொல்லிக்கொண்டிருக்க, உடனே அந்த அறையை அலச ஆரம்பித்தவனின் கரங்களில் சிக்கியது அந்த புகைப்படம்.



புகைப்படம் இருக்கலாம் என எதிர்பார்த்தானே தவிர அந்த முகத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்வது போல் சரியாக ப்ரணவிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.



அழைப்பை ஏற்றதுமே "ஹர்ஷா... ஹர்ஷா வூ இஸ் ஹீ?" என்ற ப்ரணவின் குரல் பதற்றமாக ஒலிக்க, "டீஎன்ஏ டெஸ்ட் என்னாச்சு ப்ரணவ்?" என்று மூச்சை இழுத்துப் பிடித்து கடைசி நம்பிக்கையாகக் கேட்டான் ஹர்ஷத்.



"அனிதாவோட உடம்புலயிருந்து எடுத்த டீஎன்ஏ சேம்ப்பிளும் நீங்க கொடுத்த ஹெயார்லயிருந்து எடுத்த டீஎன்ஏ சேம்பிளும் மேட்ச் ஆகியிருக்கு. அவன்... அவன்தான் அந்த கொலைகாரன். இதுக்கு மேல தாமதப்படுத்த வேணாம். யாருன்னு சொல்லுங்க ஹர்ஷா"



என்று ப்ரணவ் அழுத்தமாகக் கேட்க, மற்றவனுக்கோ வார்த்தைகள் தொண்டையை அடைத்தன. அபியின் அறையிலிருந்து எடுத்த மீராவின் புகைப்படம் கையிலிருக்க, ஒருகணம் அவனுக்கு தலையே சுற்றிவிட்டது.



சில சம்பவங்களும் அவனுடைய மனக்கண் முன் வந்து சென்றன.



அன்று க்ரிஷ் இருக்கும் இடத்தைப் பற்றி அபிமன்யுவிடம்தான் சொல்லியிருந்தான் ஹர்ஷா. கூடவே, 'கடைசியா அந்த டூர்லதான் நாங்க ஹேப்பியா இருந்தோம்' என்ற அபியின் வார்த்தைகளும் அவனின் சந்தேகத்தை மேலும் தூண்டின.



தன் சகோதரனாக இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டே ஒரு சந்தேகத்தின் அடிப்படையில்தான் அபிமன்யுவின் சீப்பிலிருந்த அவனின் முடியை டிஎன்ஏ பரிசோதனைக்காக ப்ரணவிடம் அவன் கொடுத்தது.



ஆனால், உச்சகட்ட சந்தேகத்தில் அபிமன்யுவின் அறையை அலசவும் அவனே எதிர்பார்க்காமல் மீராவின் புகைப்படம் கிடைத்திருக்க, அத்தோடு சேர்த்து ப்ரணவின் அழைப்பும் போதுமானது.



அவன் நினைத்தது சரியே!



"அது... அது வந்து ப்ரணவ்... அது அபிமன்யு" என்று ஹர்ஷா வார்த்தைகள் தடுமாற சொல்ல, "அபிமன்யு..." என்று யோசனையோடு இழுத்த மற்றவனுக்கு அந்த பெயர் சுத்தமாக ஞாபகத்தில் இல்லை.



"யார் அது?" என்று ப்ரணவ் புரியாமல் கேட்க, "என்னோட தம்பி அபிமன்யு" என்று ஹர்ஷா சொன்னதும்தான் தாமதம், ஒருகணம் ப்ரணவிற்கே தூக்கி வாரிப்போட்டது.



"என்ன சொல்றீங்க ஹர்ஷா, என்.. என்னால நம்பவே முடியல. அது.. அது எப்படி?" என்று அந்த அதிகாரியே இந்த எதிர்பாராத திருப்பத்தில் தடுமாறிப் போக, சரியாக இரண்டாவது அழைப்பு வருவதற்கான ஒலி ஹர்ஷாவின் அலைப்பேசியில் எழுந்தது.



திரையைப் பார்த்தவன், "வெயிட் ப்ரணவ்!" என்றுவிட்டு தன்னவளின் இரண்டாவது அழைப்பை ஏற்க, மறுமுனையில் ஆராதியாவின் விம்மலுடன் கூடிய அழுகை அவனை ஒருகணம் பதற வைத்துவிட்டது.



"ஆரு, என்னாச்சு... என்னன்னு சொல்லு!" என்று அவன் பதறியபடிக் கேட்க, "வைஷு... வைஷுவ காணோம்டா, வீட்டுல எங்கேயும் இல்லை. வெளியில அவளோட ஃபோன் கிடந்திச்சு. எனக்.. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல ஹர்ஷா. ப்ளீஸ் வைஷுவ எப்படியாச்சும் அழைச்சுட்டு வா ப்ளீஸ்!" என்று அழுகையோடு கெஞ்ச ஆரம்பித்தாள் அவள்.



ஆடவனுக்கோ அடிக்கு மேல் அடி விழுந்தது போலிருந்தது. அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியாமல் அப்படியே நின்றிருந்தவனுக்கு இப்போது தன் சகோதரனை எங்கு சென்று தேடுவது என்று கூடத் தெரியவில்லை.



"என் தம்பியா இருந்தாலும் தப்பு தப்புதான்" என்று அழுத்தமாக சொன்ன ஹர்ஷா, ஒரு முடிவெடுத்தவனாக வீட்டிலிருந்து வெளியேறி தன் புல்லட்டை உயிர்ப்பித்தான்.



போகும் வழியிலேயே ப்ரணவிற்கு அழைத்தவன், வைஷ்ணவி கடத்தப்பட்டதைப் பற்றி சொல்ல, அந்த நொடி ப்ரணவிற்கு மொத்த உலகமும் செயலிழந்து போலாகியது.



கால்கள் தளர அப்படியே அவன் அமர்ந்து விட, அவனின் மனதிற்குள் வைஷ்ணவியின் முகம்தான் விம்பங்களாக தோன்றி மறைந்தன.



"வைஷ்ணவி..." என்று அவனுடைய இதழ்கள் முணுமுணுக்க, விழிகளை அழுந்த மூடித் திறந்தவன் வேகமாக ஆராதியாவின் வீட்டிற்குச் சென்றான்.



அதேநேரம் இங்கு தன்னவளின் வீட்டின் முன் புல்லட்டை நிறுத்தினான் ஹர்ஷா.



"ஆரு..." என்றழைத்த வண்ணம் இவன் புயல் போல் நுழைய, தன்னவனைக் கண்டதும் தாயைக் கண்ட குஞ்சு போல் வேகமாக வந்து அணைத்துக் கொண்ட ஆராதியா விம்மலோடு அவனைப் பார்த்தாள்.



"வை.. வைஷுவ காணோம் ஹர்ஷா, அவ ஃபோன் வீட்டு வாசல்ல கெடந்திச்சு. எனக்.. எனக்கு பயமா இருக்கு, அவளுக்கு ஏதாச்சும்..." என்று இதயம் படபடக்க அவள் சொல்ல வரும் போதே அதைக் குறிக்கிட்டு, "எதுவும் ஆகாது, ட்ரஸ்ட் மீ!" என்றான் அவன் அழுத்தமாக.



லலிதாவோ விழிகளிலிருந்து விழிநீர் ஓட மகளை இழந்துவிட்ட சோகத்தில் சுவற்றில் சாய்ந்தவாறு தரையில் அமர்ந்திருக்க, சரியாக வாசலில் தன் வண்டி விழுந்ததை கூட பொருட்படுத்தாமல் தடாலடியாக நுழைந்தான் ப்ரணவ்.



"அபிமன்யு இப்போ எங்க இருக்கான் ஹர்ஷா?" என்றவனின் கேள்வி அந்த இடத்தையே அதிர வைக்க, "தெரியல, ஆனா கண்டுபிடிச்சிருவேன்" என்று அழுத்தமாக சொன்னான் மற்றவன்.



அதேநேரம், ஆராதியாவின் வீட்டிலிருந்து வெறும் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மானவ்வின் கெஸ்ட் ஹவுஸின் பேஸ்மென்ட்டில் கைக் கால்கள் கட்டப்பட்டு தரையில் பயத்தோடு அமர்ந்திருந்தாள் வைஷ்ணவி.



"அபி... நா.. நான் என்ன பண்ணேன், சத்தியமா என.. எனக்கு எதுவுமே தெரியாது ப்ளீஸ், என்னை விட்டுரு!" என்று வார்த்தைகளைக் கோர்த்து அவள் கெஞ்ச, அவளெதிரே முட்டியில் கைக் கோர்த்து அமர்ந்திருந்த அபிமன்யுவின் இதழ்களோ விஷமமாகப் புன்னகைத்தன.



"ஆஹான், அப்போ.. நீ எதுவுமே பண்ணல்லையா வைஷ்ணவி? இது தெரியாம உன்னை போய் நான் கடத்தி... ச்சே! தப்பு பண்ணிட்டேனே!" என்று போலியாக அவன் நெற்றியில் அடித்துக்கொண்டு ஒரு நாடகத்தை நிகழ்த்த, அவளோ எச்சிலை விழுங்கியவாறு அவனையே பார்த்திருந்தாள்.



முயன்று தைரியத்தை வரவழைத்து மீண்டும் பேச்சை தொடங்கினாள் வைஷ்ணவி.



"அபி அது..." என்று அவள் ஏதோ சொல்ல வர, "ஷட் அப்!" என்று கத்திக்கொண்டு மின்னல் வேகத்தில் அவளை நெருங்கியவன் அவளின் தாடையைப் பற்றி, "என்னை பார்த்தா உனக்கென்ன முட்டாள் மாதிரி தெரியுதா? சொல்லுடீ, அவளுக்கு நடந்தது உனக்கு தெரியாதா என்ன! அதையெல்லாம் விட அவள அந்த டூருக்கு அழைச்சுட்டு வந்ததே நீதான். உன்னாலதான் எல்லாமே..." என்று சிவந்த விழிகளோடு ஆக்ரோஷமாகக் கத்தினான்.



ஒருகணம் அவளுக்கு அவனின் ஆக்ரோஷத்தைப் பார்த்து கைக்கால்கள் உதறிவிட்டன. ஆனால், அபிமன்யுவின் மனக்கண் முன் மீராவை முதல் முதலாக பார்த்த தருணம்தான் விம்பங்களாக ஓடின.



அன்று டூரிற்காக மொத்தப் பேரும் கல்லூரியின் முன்னே பஸ்ஸிற்காக காத்திருக்க, அப்போதுதான் வைஷ்ணவியோடு நின்றிருந்த மீராவைப் பார்த்தான் அபிமன்யு.



பார்த்ததும் அவள் மேல் சிறு ஈர்ப்பு அவனுக்குள். கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் கைகளை பதற்றமாக பிசைந்துக்கொண்டு நின்றிருந்த மீராவின் முகத்தை அவனால் மறக்கவே முடியாது.



ஆனால் அவனே எதிர்பார்க்காத ஒன்று மீராவும் அவனைக் காதலித்தது. இரண்டு நாள் சுற்றுலாவிலேயே அவளுக்கு அபிமன்யுவை பிடித்துப் போய் விட, யாருக்கும் தெரியாமல் தங்களின் எண்களைக் கூட பரிமாற்றிக்கொண்டனர்.



இதை அவள் வைஷ்ணவியிடம் கூட சொல்லவில்லை. ஆனால், அன்றிரவு நடந்ததை அபிமன்யு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.



"நான் இப்போவே உன்னை பார்த்து பேசணும், யாருக்கும் தெரியாம ஸ்விம்மிங் பூலுக்கு வா ப்ளீஸ் மீரா!" என்ற அபிமன்யுவின் கெஞ்சலிலேயே அவள் அறையிலிருந்து வெளியே வந்து அவனைத் தேடிச் செல்ல, அப்போதுதான் அவளை தங்களுடைய அறைக்கு மீரா மறுத்தும் அழைத்துச் சென்றாள் ப்ரீத்தி.



அதன் பிறகு நடந்த சம்பவங்கள் யாருமே எதிர்பார்க்காதது.



இது எதுவுமே அறியாமல் அவள் வரவில்லை என்ற கோபத்தில் அபி சிறு கோபத்தோடு இருக்க, வீட்டிற்கு வந்த மீராவுக்கு தனக்கு நேர்ந்த அநீதியை தாங்கிக்கொள்ள முடியவில்லை.



அவளுடைய பலவீனமான மனம் அப்போது அவளிருந்த மனநிலைக்கு தற்கொலைக்கு உந்த, சரியாக அபிமன்யுவின் ஞாபகமும் அவளுக்கு வந்தது.



அலைப்பேசியை எடுத்தவள் நடந்தது மொத்தத்தையும் சொல்லி முடித்து, "இதையெல்லாம் தாங்கிக்குற அளவுக்கு எனக்கு ஷக்தி இல்லை, ஒவ்வொரு நிமிஷமும் அன்னைக்கு நடந்ததே ஞாபகத்துக்கு வந்துட்டே இருக்கு. என்னால இந்த ப்ரெஷர தாங்க முடியல. அவங்ககிட்ட அந்த வீடியோ கூட இருக்கு, என.. எனக்கு பயமா இருக்கு அபி. இந்த நாலு நாளாதான் எனக்கு உங்கள தெரியும், யூ ஆர் மை ஃபர்ஸ்ட் என்ட் லாஸ்ட் லவ். இந்த புது ஃபீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, தேங்க் யூ ஃபாம் மேக்கிங் மை லாஸ்ட் டேய்ஸ் ஹேப்பி என்ட் ஐ.. ஐ லவ் யூ!"



என்ற இறுதி வார்த்தைகளோடு வாய்ஸ் ரெக்கார்ட்டை அனுப்பி வைத்தாள்.



சரியாக நந்தினியும் கதவை தட்ட ஆரம்பிக்க, இதயத்தை குத்திக் கிழிக்கும் அந்த வலியை சுமந்துக்கொண்டு தன் இறுதி முடிவை தானே தேடிக்கொண்டாள் மீரா.



அதன் பிறகுதான் இந்த வேட்டைக்கான பலி ஆரம்பமானது.



மீரா இறந்து மூன்று நாட்கள் கழித்து நந்தினியின் வீட்டிற்குள் நுழைந்தான் அபிமன்யு.



"யார் நீங்க?" உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தோடு அவனை பார்த்த நந்தினிக்கு அவன் யாரென்று சுத்தமாகத் தெரியவில்லை.



"என் பேரு அபிமன்யு, மீராவ பத்தி உங்ககிட்ட பேசணும்" என்று அவன் சொல்லி அவளின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்துக்கொள்ள, அவனெதிரே குழப்பத்தோடு அமர்ந்துக்கொண்டாள் நந்தினி.



"மீராவ பத்தி பேச எதுவுமே இல்லை, நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியாது. தயவு செஞ்சு வெளியில போங்க, அனுதாபமான வார்த்தைகள் எதுவும் எனக்கு வேணாம்" என்று நந்தினி அழுகையை அடக்கிய குரலில் சொல்ல, "அனுதாபம் வேணாம் நந்தினி, ஆனா மீராவோட சாவுக்கு காரணமானவங்கள பலி எடுக்கணும்ல" என்றவனின் வார்த்தைகளில் அத்தனை வெறி.



இவனின் வார்த்தைகளுக்கான அர்த்தம் புரியாமல் அவள் புருவ முடிச்சுகளோடு நோக்க, மீரா அவனுக்கு கடைசியாக அனுப்பி வைத்த அந்த வாய்ஸ் ரெக்கார்டை போட்டுக் காண்பித்தான் அபிமன்யு.



அதைக் கேட்க ஆரம்பித்தவளுக்கு போகப் போக அதிர்ச்சியில் விழிகள் விரிய, விழிகளிலிருந்து விழிநீர் ஓடின.



"மீரா... மீரா ஏன்டீ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல?" என்று நந்தினி கதறியழ ஆரம்பிக்க, தரையை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு கோபத்தில் நெற்றி நரம்புகள் புடைத்தன.



நந்தினி மெல்ல தன் அழுகையை நிறுத்த, இப்போது தன் பேச்சை ஆரம்பித்தான் அபிமன்யு.



"எவ்வளவு அழணுமோ அவ்வளவு அழுதுக்கோங்க! இதுக்கப்பறம் பலி எடுக்க போறோம், கண்ணுல கண்ணீரோ பயமோ இருக்கக் கூடாது. வாட் டூ யூ சே நந்தினி" என்று அவன் அவளின் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்க, சில கணங்கள்தான் யோசித்திருப்பாள் அவள்.



இரத்த நாளங்கள் துடிக்க, தங்கையின் மரணத்திற்கு பலி தீர்க்க சம்மதித்தாள் அவள். அதன் பின் அவர்களின் திட்டமும் கொலைகளும், மொத்த ஊரையும் போலீஸ் துறையையும் கதிகலங்க வைத்துவிட்டது.



நடந்ததை நினைத்துப் பார்த்த அபிமன்யுவின் விழிகள் தீப்பிழம்பைக் கக்கின. ஆனால், வைஷ்ணவியின் நிலையோ பரிதாபம்!



"அவளோட இழப்பு உன்னை மட்டுமில்ல அபி, என்னையும் பாதிச்சது. அவளோட வீடியோ அவங்ககிட்ட இருந்தது, எங்க அதை ஸ்ப்ரெட் பண்ணிடுவாங்களோன்னு பயத்துல நான் இதை பத்தி வெளியில சொல்ல விடல, ஆனா... ஆனா நான் அப்படி பண்ணியிருக்க கூடாது. எனக்கு புரியுது அபி. நா.. நான் தப்பு பண்ணிட்டேன்"



என்று அவள் இத்தனை நாட்களாக மனதை அரித்த குற்றவுணர்ச்சியில் வெடித்து அழ, அதை இதழ்களில் சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்தான் அபிமன்யு.



"ஓ மை டியர் வைஷு! யூ நோ வாட், நீ ரொம்ப ரொம்ப லக்கி. உனக்காகவே நான் சில க்ளிப்ஸ் வச்சிருக்கேன். மொதல்ல அதை பார்க்கலாம், அப்பறம்..." என்று பேய் போல் அந்த இடமே அதிர சிரித்துக்கொண்டு அவன் அவளுக்கு முன்னே இருந்த டீவியை ஆன் செய்தான்.



அதை விழிகளை சுருக்கி பார்த்தவளின் விழிகள் பிதுங்கி விடுமளவிற்கு விரிய, "நோ! ப்ளீஸ் அபி..." என்று பயத்தில் அடித்தொண்டையிலிருந்து கத்தினாள் வைஷ்ணவி.



*********

மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க ஃப்ரென்ட்ஸ்... 😍
 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 20





"தியா, வைஷுவோட ஃபோன கொடுங்க. மேபீ அதுல நமக்கு ஏதாச்சும் க்ளூ கிடைக்கலாம்" என்று ப்ரணவ் சொன்னதும், உடனே வைஷ்ணவியின் அலைப்பேசியைக் கொடுத்தாள் ஆராதியா.



"பாஸ்வர்ட்" என்று அவன் கேட்க, அவளோ புருவ முடிச்சுகளோடு யோசிக்க ஆரம்பித்தாள்.



"என.. எனக்கு தெரியல ப்ரணவ்" என்று அவள் பதற்றமாகச் சொல்ல, "பாஸ்வர்ட்தானே என்கிட்ட கொடுங்க" என்று ப்ரணவின் கையிலிருந்து அலைப்பேசியை பிடுங்கிய ஹர்ஷா, "வைஷ்ணவியோட டேட் ஆஃப் பர்த் என்ன ஆரு?" என்று கேட்டு அதை கொடுத்துப் பார்த்தான்.



அதில் அது பிழையென்று காண்பிக்க, நாடியை நீவி விட்டவாறு யோசித்தவன், "ப்ரணவ் உங்க பர்த் இயர் சொல்லுங்க" என்று கேட்க, அவனும் யோசனையோடு தான் பிறந்த வருடத்தை சொன்னான்.



அடுத்தகணம் பாஸ்வர்டை உடைத்தான் ஹர்ஷா.



ஆராதியாவோ சட்டென நிமிர்ந்து ப்ரணவைப் பார்க்க, வேறு எங்கோ பார்த்தவாறு தலையை சொரிந்துக்கொண்டான் அவன்.



"நினைச்சதுதான்" என்றவன் அவளுக்கு இறுதியாக அழைப்பு வந்திருந்த எண்ணை புரியாமல் பார்த்தவாறு, "இந்த நம்பர உனக்கு முன்னாடியே தெரியுமா ஆரு?" என்று அந்த எண்ணை சொல்ல, ஆராதியாவோ தெரியாது என்ற ரீதியில் தலையசைத்தாள்.



"அந்த நம்பருக்கு ட்ரை பண்ணி பார்க்கலாம்" என்று ப்ரணவ் உடனே அந்த எண்ணிற்கு தன் அலைப்பேசி மூலமாக அழைக்க, மறுமுனையில் வாடிக்கையாளர் சேவையிலிருந்து ஒரு குரல் அந்த எண் எப்போதோ செயலிழந்து விட்டதாக அறிவித்தது.



"வாட் த ***... அந்த நம்பர் இப்போ இல்லையாம், அதெப்படி?" என்று ப்ரணவ் உச்சகட்ட கோபத்தில் அலைப்பேசியை தூக்கியெறியப் போக, ஹர்ஷாவோ நெற்றியைத் தட்டி தீவிரமாக யோசித்தான்.



"ப்ரணவ், இந்த நம்பர்லயிருந்து வந்த லாஸ்ட் காலோட லொகேஷன் எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்ல!" என்று ஆர்வமாக அவன் கேட்க, "யெஸ் ஹர்ஷா" என்ற மற்றவன் உடனே டிபார்ட்மென்ட்டிலுள்ள தன் ஆட்களில் ஒருவனுக்கு அழைத்தான்.



"வரதா, இப்போவே இந்த நம்பரோட லாஸ்ட் லொகேஷ் எந்த இடத்தை காட்டுதுன்னு சீக்கிரமா சொல்லு, திஸ் இஸ் சீக்ரெட் ஆப்ரேஷன்" என்று அவன் கட்டளையாகச் சொல்ல, "ஓகே சார்!" என்று உடனே தன் மேலதிகாரி சொன்ன வேலையை வேகமாகச் செய்தான் வரதன்.



வெறும் பத்து நிமிடங்கள்தான்.



"சார், இந்த நம்பர ட்ரேஸ் பண்ணதுல இப்போ ரீச் பண்ண முடியல. பட், இதோடா லாஸ்ட் லொகேஷன் இந்த இடத்தை காமிக்குது" என்று அவன் சொன்ன மறுகணம் ஹர்ஷாவும் ப்ரணவும் அவன் சொன்ன இடத்தை நோக்கிச் சென்றனர்.



ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக அந்த இடம் குப்பைகள் கொட்டப்பட்டிருக்க, இருவருக்கும் அத்தனை குழப்பம்.



"ஷீட் ஷீட் ஷீட்! அவன் நம்மள நல்லா டைவர்ட் பண்ணியிருக்கான். ச்சே!" என்று ஹர்ஷா கோபத்தில் தரையை காலால் உதைக்க, தலை முடியை அழுந்தக் கோதிக்கொண்ட ப்ரணவிற்கும் அவனை எப்படி கண்டுபிடிப்பதென்றே தெரியவில்லை.



அதேநேரம் தன் முன்னிருந்த ஸ்க்ரீனில் ஓடிக்கொண்டிருந்த அந்த கொடூர காணொளிகளை பார்க்க முடியாமல் கத்த ஆரம்பித்தாள் வைஷ்ணவி.



"ப்ளீஸ் அபி! வேணாம், ப்ளீஸ்..." என்று அவள் கெஞ்ச, அந்த காணொளியில் இதற்கு முன் அந்த ஐவரையும் கொன்ற காட்சிகள்தான் ஓடிக்கொண்டிருந்தது.



உயிரோடு கட்டப்பட்டிருந்த அவர்களின் நெஞ்சில் துடிக்கத் துடிக்க கூரிய கத்தியொன்றால் ஆழமாக க்ரோஸ் ஷேப்பில் வெட்டியவன், அவர்களின் கதறல் காதில் விழ அவர்களின் ஒரு கண்ணை வெட்டி வெளியில் எடுத்தான்.



அப்போதும் உயிர் பிரியாமல் அவர்கள் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் அதேசமயம் ஆண்களின் ஆணுறுப்பை அவன் அறுத்து எறிய, பெண்களின் ஒவ்வொரு விரல்களையும் கதறக் கதற வெட்டினான்.



அந்த ஐவரும் கொல்லப்படுவதை காணொளியாக பதிவு செய்து வைத்திருந்தவன் இப்போது அவளுக்கு அதை போட்டுக் காண்பிக்க, அதைப் பார்க்க முடியவில்லை அவளால்.



குடல் புரட்டி வாந்தி வருவது போல் இருக்க, தலையெல்லாம் சுற்ற ஆரம்பித்தது வைஷ்ணவிக்கு. கட்டப்பட்டிருந்த நிலையில் அப்படியே அவள் மயங்கி சரிய, அதைக் கூட உணராமல் திரையில் ஓடிக்கொண்டிருந்த காணொளியை சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்தான் அபிமன்யு.



************



"ஹர்ஷா, அபிமன்யு உங்க ப்ரதர். கண்டிப்பா அவன பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். நல்லா யோசிச்சு பாருங்க, அவன உங்களால கண்டுபிடிக்க முடியும்" என்று ப்ரணவ் சொல்ல, நெற்றித் தட்டி யோசித்தவனுக்கு சுத்தமாக எந்த யோசனையும் வரவில்லை.



"நோ ப்ரணவ், ஐ ஹேவ் நோ ஐடியா. அவனோட ஃபோன் ரீச் ஆக மாட்டேங்குது. கண்டிப்பா அப்.. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இதை பத்தி தெரிஞ்சிருக்காது. இதை எப்படி சொல்ல போறேன்னு கூட எனக்கு தெரியல" என்று வார்த்தைகள் தடுமாற நிறுத்தியவன் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டு, "அவனுக்கு சம்பந்தப்பட்ட எல்லா இடங்கள்ளையும் தேடி பார்க்கலாம். சின்ன க்ளூ கிடைச்சா கூட அபிய நம்மளால ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்" என்று தன் திட்டத்தை சொன்னான்.



அதன்படி ப்ரணவ் ஒரு திசைக்கும் அவனோடு இந்த விசாரனையில் சம்பந்தப்பட்டிருக்கும் சில அதிகாரிகள் இன்னுமொரு திசைக்கும் தங்களின் தேடலை ஆரம்பித்திருக்க, தன் சகோதரனைப் பற்றி தேடித் திரிந்தான் ஹர்ஷா.



நேரம் கடக்க ஆராதியாவுக்கு லலிதாவுக்கும் அடி வயிறு கலங்கியது. உடன் நடப்பதை தெரிந்துக்கொள்ள தன்னவனுக்கு அழைத்தாள் அவள்.



"ஹர்ஷா, ஏதாச்சும் தகவல் கிடைச்சதா? ஒவ்வொரு நிமிஷம் தாமதிக்க வைஷுக்கு ஏதாவது ஆகிருமோன்னு பயமா இருக்கு" என்று ஆராதியா பயந்தபடி சொல்ல, ஹர்ஷாவிடமோ பதில் இல்லை.



யோசனையோடு அழைப்பைத் துண்டித்துவிட்டு அவன் ப்ரணவிற்கு அழைக்க, தன்னவளை எப்படி தேடுவதென்று தெரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டு நடுவீதியில் நின்றிருந்தான் மற்றவன்.



"உன்னை நான் விட்டிருக்க கூடாது, உனக்கு இருக்குற ஆபத்து தெரிஞ்சும் நான் கெயார்லெஸ்ஸா விட்டிருக்கேன். என் மேலதான் தப்பு, ஐ அம் சாரி வைஷு! உன்னை எப்படி கண்டுபிடிக்க போறேன்னு தெரியலயேடீ!" என்று மனதில் நினைத்த வண்ணம் அவன் விழிகளை மூடிக்கொள்ள, தன்னவளின் நினைவில் அவனை அறியாமல் விழிநீரும் கசிந்தது.



சரியாக ஹர்ஷாவிடமிருந்து அழைப்பு வர, சட்டென புல்லட்டை நிறுத்திவிட்டு அழைப்பையேற்று பேசினான் ப்ரணவ்.



"என்னாச்சு ஹர்ஷா, ஏதாச்சும் க்ளூ கிடைச்சதா?" என்று அவன் ஆர்வமாகக் கேட்க, "நோ... அவனோட ஃப்ரென்ட் சர்கிள்ல எல்லார்கிட்டேயும் விசாரிச்சுட்டேன். பட் நோ யூஸ். வீட்டுக்கும் அவன் போகல. எங்க இருக்கான்னு கெஸ் பண்ணவே முடியல" என்றான் ஹர்ஷா சோர்ந்துப் போய்.



பற்களைக் கோபத்தில் கடித்துக்கொண்டவன், "ஒருவேள அவன மட்டும் நான் கண்டுபிடிச்சேன்னா, ஐ வில் டெஃபெனெட்லி ஷூட் ஹிம். உங்க தம்பிங்குற பாரபட்சத்த கொஞ்சம் கூட நான் பார்க்க மாட்டேன்" என்று கறாராகச் சொல்ல, "அது இனி என்கிட்டயும் வேலைக்காகாது" என்று நெற்றி நரம்புகள் புடைக்க அழுத்தமாக சொன்னான் ஹர்ஷா.



அதற்குமேல் ப்ரணவும் எதுவும் பேசாமல் அழைப்பைத் துண்டிக்க, சரியாக மானவ்விடமிருந்து அழைப்பு வந்தது.



திரையைப் பார்த்தவன், இடது பக்க புருவத்தை நீவி விட்டவாறு வேறு வழியில்லாமல் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.



"ஹெலோ ஹர்ஷா..." என்ற மானவ்வின் குரலில், "ஆங் சொல்லுங்க டாட்" என்று முயன்று வார்த்தைகளைக் கோர்த்து சொன்னான் அவன்.



"எங்க இருக்க நீ, உன்னை பார்த்தே டூ டேய்ஸ் ஆகுது. இந்த கேஸ் முடியுற வரைக்கும் நீ அதிகமா வெளியில இருக்காத ஹர்ஷா, மே பீ இட்ஸ் டேன்ஜரஸ்" என்று அவர் சொல்ல, "ம்ம்..." என்று மட்டும் சொன்னவனுக்கு பேச நா எழவில்லை.



"ஆமா... அபி எங்க ஹர்ஷா? அவன கான்டேக்ட் பண்ணவும் முடியல. அவன் ரொம்ப பாவம், லவ் ஃபெய்லியர் ஆனதுலயிருந்து ஒரு மாதிரியாவே இருக்கான். அவன நினைச்சுதான் என்னோட கவலையே! எனிவேய்ஸ், லண்டனுக்கு போறேன்னு சொல்லியிருக்கான். அவனுக்கு ஏதாச்சும் ஒரு நல்லது நடக்கணும்டா"



என்று ஒரு தந்தையாக அவர் கவலையோடு சொல்ல, ஏனோ ஹர்ஷாவுக்கு அழுகையில் தொண்டை அடைத்தது.



நாவு வரை வந்த வார்த்தைகளை விழுங்கி உள்ளுக்குள் அடக்கிக்கொண்டவன், "டாட் அது... ஐ ஹேவ் அன் இம்பார்டென்ட் வர்க். நான் உங்க கூட அப்பறமா பேசுறேன்" என்றுவிட்டு அழைப்பைத் துண்டிக்கப் போக, "ஹர்ஷா..." என்று மீண்டும் அழைத்தார் மானவ்.



"என்ன டாட்?" என்று அவன் கேட்க, "ஆர் யூ ஓகே?" என்ற தந்தையின் வார்த்தைகளில் அவனுடைய விழிகள் கலங்க கண்ணீரும் வந்துவிட்டது.



தந்தையிடம் நிலையை சொல்லி அழ மனம் துடிக்க, எச்சிலை விழுங்கிக்கொண்டவன், "ஃபைன் டாட்" என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.



ஆனால், பாசத்துக்காக தவறை மன்னிக்க முடியாதே!



விழிகளை அழுந்த மூடித் திறந்து அவன் உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வர, அப்போதுதான் ஏதோ ஒன்று அவனுடைய மூளைக்குள் உரைத்தது.



உடனே அவன் ப்ரணவிற்கு மீண்டும் அழைக்க, அதேநேரம் தேடித் தேடி களைத்துப் போய் நடுவீதியில் தன் அதிகாரத்தைக் கூட மறந்து மூச்சு வாங்கியவாறு அமர்ந்திருந்தான் ப்ரணவ்.



"அப்போ எல்லாமே அவ்வளவுதானா, என்னால அவள காப்பாத்த முடியாதா?" என்று அவனுடைய மனம் மீண்டும் மீண்டும் அவனிடம் கேட்க, வைஷ்ணவியின் பார்வையும் சிரிக்கும் இதழ்களுமே அவனின் மனக்கண் முன் விம்பங்களாக ஓடின.



அந்த நினைவில் அவனுடைய விழிகளும் கலங்க, கீழுதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கிக்கொண்டான் ப்ரணவ்.



சரியாக, அவனுக்கு ஹர்ஷாவிடமிருந்து அழைப்பு வந்தது.



எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், "சொல்லுங்க ஹர்ஷா..." என்று உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட குரலில் அவன் சொல்ல, "ப்ரணவ், நாம ஏன் இந்த கேஸ்ஸ ரொம்ப க்ரிட்டிக்கல்ல யோசிக்கிறோம். ஈஸியா திங் பண்ணலாமே!" என்றான் மற்றவன் யோசனையோடு.



"என்ன சொல்றீங்க, எனக்கு புரியல" என்று ப்ரணவ் புரியாமல் விழிகளை சுருக்க, "அபி ரொம்ப புத்திசாலி, மே பீ நமக்கே பழக்கப்பட்ட ரொம்ப தெரிஞ்ச இடத்துல கூட வச்சிருக்கலாம். சுத்தி எல்லா இடத்துலயும் தேடுற நாம அந்த குறிப்பிட்ட இடங்கள்ல வாய்ப்பே இல்லன்னு அசால்ட்டா விட்டுருவோம். இப்போ அந்த இடங்களதான் பார்க்கணும்" என்றான் ஹர்ஷா அழுத்தமாக.



ப்ரணவிற்கு அவன் சொல்ல வருவது நன்றாகவே புரிந்தது. 'இருக்கலாம்...' என்று மனம் அடித்துக் கூற, உடனே தன் புல்லட்டை உயிர்ப்பித்தான் அவன்.



"இப்போ எங்க போக போறோம்?" என்று கேட்ட ப்ரணவ், "என்னோட வீடு" என்று மற்றவன் சொன்னதுமே மின்னல் வேகத்தில் அந்த இடத்தை நோக்கி சென்றிருந்தான்.



பைக் விழுந்ததைக் கூட கண்டுகொள்ளாமல் வீட்டிற்குள் வேகமாக நுழைந்த ஹர்ஷா, அந்த பெரிய வீட்டில் ஒரு இடத்தைக் கூட விடாது அலசி ஆராய, ஹால் சோஃபாவிலிருந்த மஞ்சுளாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.



"ஹர்ஷா, என்னாச்சு?" என்று அவர் பதற்றமாகக் கேட்க, "அது... அதெல்லாம் ஒன்னு இல்லம்மா. நான் அபிய தேடி வந்தேன், அவன் கூட பேசணும் அதான்..." என்று அவன் சமாளிக்க முயற்சிக்க, அவரோ தன் மகனை குழப்பமாகப் பார்த்தார்.



"அபியா! நேத்து ராத்திரியில இருந்து அவன் வீட்டுக்கே வரல ஹர்ஷா, என்ன பண்றான் ஏது பண்றான்னு ஒன்னுமே தெரியல. இன்னும் டூ டேய்ஸ்ல லண்டன் கெளம்ப போறான், இதுக்கப்பறம் எப்போதான் பொறுப்புன்னு ஒன்னு வருமோ தெரியல" என்று அவர் புலம்பிக்கொண்டே போக, இதற்குமேல் இங்கு தேடுவது பயனில்லை என வெளியேறப் போனான் ஹர்ஷா.



ஆனால் அடுத்தகணம் மஞ்சுளா சொன்ன வார்த்தைகளில் அவனுடைய நடை சட்டென நிற்க, உடனே திரும்பிப் பார்த்தான்.



"கண்ணா, எனக்கு இப்போதான் ஒன்னு ஞாபகத்துக்கு வருது. நேத்து ராத்திரி கெஸ் ஹவுஸ்ல ஸ்டே பண்றதா சொல்லிதான் கெளம்பினான். க்ளீன் பண்ண வந்த அம்மாவ கூட டூ டேய்ஸ்க்கு வேலைக்கு வர வேணாம்னு அனுப்பி விட்டுட்டானாம். என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்னே தெரியல. கேட்டதுக்கு தனியா இருக்கணும், டிப்ரெஷனா இருக்குன்னு சொல்லியிருக்கான்டா, உங்க இரண்டு பேரையும் பெத்து வளர்த்ததுக்கு நான்தான் டிப்ரெஷனுக்கு போகணும், உங்களுக்கு என்னடா டிப்ரெஷன்?"



என்று அவர் பேசிக்கொண்டே போக, வேறு எதையும் கண்டுகொள்ளாமல் அவன் வெளியேறி பைக்கை உயிர்ப்பிக்கப் போக, அவனின் எதிரே சரியாக வாகனத்தைக் கொண்டு வந்து நிறுத்தினான் ப்ரணவ்.



"ஹர்ஷா, ஏதாச்சும் க்ளூ கிடைச்சதா? அபி எங்க இருக்கான்?" என்று ப்ரணவ் கத்திய கத்தலில் மஞ்சுளாவோ வெளியில் வந்து எட்டிப் பார்க்க, விழிகளால் எச்சரிக்கும் விதமாக சைகை செய்தான் அவன்.



"ஹர்ஷா, இது இன்ஸ்பெக்டர் ப்ரணவ்தானே, இவர் உனக்கு தெரிஞ்சவரா?" என்று பெரியவர் சந்தேகத்தோடுக் கேட்க, "அது... ஆமாம்மா, இப்போதான் கொஞ்சநாளா பழக்கம்" என்றவன், "கம் ஆன் ப்ரணவ், இட்ஸ் கெட்டிங் லேட்" என்று அவனை அவசரப்படுத்தி வேகமாக இழுத்துக்கொண்டு சென்றான்.



"அம்மா அப்பாவுக்கு எதுவும் தெரியாதா?" என்று ப்ரணவ் கூரிய விழிகளோடுக் கேட்க, இல்லையெனும் விதமாக தலையாட்டியவனைப் பார்க்க, அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு.



'ஊஃப்ப்...' என்று ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டவன், "இட்ஸ் பெட்டர் டூ டெல் தெம் ட்ருத், அதுக்கப்பறம் தெரியும் போது ரொம்ப கஷ்டப்படுவாங்க" என்று சொல்ல, இறுகிய முகமாக அவனைப் பார்த்த ஹர்ஷா, "அபி இருக்குற இடத்தை கண்டுபிடிச்சாச்சு" என்றான் உணர்ச்சிகளற்ற குரலில்.



ப்ரணவோ அவனை வெற்றிப் புன்னகையோடு பார்க்க, அதேநேரம் வைஷ்ணவியின் தலையில் அதிக குளிரோடு ஒரு வாளி தண்ணீரை ஊற்றினான் அபிமன்யு.



மயக்கம் தெளிந்து கண் விழித்தவளுக்கு உடல் நடுங்கிவிட்டது. அதிர்ந்துப் போய் தன்னெதிரே நின்றிருந்தவனை அவள் பார்க்க, கையில் சில கத்தி குறடு போன்ற பொருட்களோடு அவளின் அருகே வந்தமர்ந்தான் அவன்.



"அபி, வேணாம் ப்ளீஸ்... என.. என்னை விட்டுரு! கெஞ்சி கேக்குறேன்" என்று வைஷ்ணவி கெஞ்ச ஆரம்பிக்க, "அய்யோ பயப்படாத வைஷு! நாம எல்லாரும் இப்போ ஒன்னுக்குள்ள ஒன்னாகிட்டோம், என் அண்ணா உன் அக்காவ கட்டிக்க போறாரு. தென் வை ஆர் யூ அஃப்ரைட் ஆஃப் மீ? ச்சில்..." என்றான் ஒரு மாதிரி சிரித்துக்கொண்டு.



அவளோ எச்சிலை விழுங்கிக்கொண்டவள் அவனை பயத்தோடு பார்த்துக்கொண்டிருக்க, அவளின் காலை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்ட அபி, "ஆனா இதெல்லாம் நடக்கும் போது நீ உயிரோட இருப்பியோ என்னவோ! ஓ காட்... என்ன இது, நகம் இப்படி வளர்ந்திருக்கு. இரு நானே வெட்டி விடுறேன்" என்றுக்கொண்டே பக்கத்திலிருந்த குறடை கையிலெடுத்தான்.



"அபி வேணாம்! ப்ளீஸ்..." என்று அவள் பயத்தில் அழ ஆரம்பிக்க, குறடால் அவளின் பெருவிரல் நகத்தை அவளின் கதறல் ஒலி காதில் கேட்க பிய்த்து எடுத்தான் அபிமன்யு.



"ஆஆஆ... அம்மா..."



என்ற வைஷ்ணவியின் கதறல் அந்த அறையையே அதிர வைத்தது.



********



 
Status
Not open for further replies.
Top