அத்தியாயம் 09
"அண்ணி, ஹர்ஷா அண்ணா நல்லவன்னு நான் சொல்லல. அவன் தப்பு பண்ணியிருக்கான். ஆனா அன்னைக்கு அண்ணா எந்த தப்பும் பண்ணல. அன்னைக்கு என்னாச்சுன்னா..." என்று நடந்தது அத்தனையும் சொல்லி முடித்தான் அபி.
"அன்னைக்கு அண்ணா உங்ககிட்ட உண்மைய மறைச்சதுக்கான காரணம் கூட எங்க நீங்க ஹர்ட் ஆகிருவீங்களோன்னுதான். அன்னைக்கு நிஜமாவே அவன் மேல தப்பு கிடையாது. என்ட், அவன் கொலை பண்ணல. அந்த சைக்கோ கில்லர் பண்ணிட்டு ப்ளான் பண்ணி அண்ணா மேல பழிய போட்டிருக்கான்" என்று கோபத்தோடு அவன் பற்களைக் கடிக்க, ஆராதியாவோ சில நிமிடங்கள் எதையும் பேசவில்லை.
தரையை வெறித்தவாறு இறுகிய முகமாக அவள் நின்றிருக்க, "தியா அண்ணி, என்னால எதையும் தனியா ஃபேஸ் பண்ண முடியல. அண்ணாவ காப்பாத்தியே ஆகணும். ஹீ ட்ரூலி லவ் யூ, அது மட்டும் எனக்கு நல்லா தெரியும்" என்று அபி சொல்லவும், கீழுதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக்கொண்டவள் விழிகளிலிருந்து கசிந்த விழிநீரை துடைத்துக்கொண்டாள்.
அபியோ அதற்குமேல் முடியாமல் புல்லட்டில் ஏறி வண்டியை உயிர்ப்பிக்க, ஒரு பெருமூச்சுவிட்டு, "அபி நில்லு..." என்றழைத்த ஆராதியா, "ஹர்ஷா வெளியில வர நான் ஹெல்ப் பண்றேன், ஆனா இது காதலுக்காக இல்லை. தப்பு பண்ணாதவன் தண்டனை அனுபவிக்க கூடாதுங்குற ஒரே மனிதாபிமானம்தான்" என்றுவிட்டு மீண்டும் ஆஃபீஸை நோக்கி நடக்க, அவனுக்கோ இதுவே போதுமென்று இருந்தது.
அதே சந்தோஷத்தோடு வண்டியை உயிர்ப்பித்து அவன் அங்கிருந்து நகர, அடுத்தநாள் சிறைச்சாலையில் விட்டத்தைப் பார்த்தவாறு படுத்திருந்த ஹர்ஷாவிற்கு அந்தப் பெண் யாரென்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
அந்த பூங்கொத்திலிருந்த கார்டை கையிலெடுத்தவன் அந்த கையெழுத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.
"யாரா இருக்கும், இந்த கொலைகள பண்ணது ஒரு சீரியல் கில்லரா இல்லன்னா இதுக்கு பின்னாடி ஏதாச்சும் மோட்டிவ் இருக்கா? என்ட் இத்தனை நாள் போலீஸால தேடிக்கிட்டு இருந்தது ஒரு பொண்ணையா? ச்சே! அவளோட வலையில நான் சிக்கிட்டேனே" என்று கோபத்தோடு எழுந்தமர்ந்தான் ஹர்ஷா.
இப்படியொரு நிலை வருமென்று இரண்டு வாரத்திற்கு முன் யாராவது சொல்லியிருந்தால் பைத்தியமென்று ஒதுங்கிப் போயிருப்பான். ஆனால், இப்போது எல்லாமே தலை கீழாக மாறிய உணர்வு.
திடீரென என்ன யோசித்தானோ!
"இந்த கையெழுத்த வச்சு கூட இதை யார் எழுதியிருப்பாங்கன்னு கண்டுபிடிக்கலாம், ஆனா அதுவும் அவ்வளவு ஈஸி கிடையாது. என்ட், உள்ளயே இருந்துகிட்டு எதுவும் பண்ண முடியாது" என்று எரிச்சலாக முணுமுணுத்தவனுக்கு திடீரென தன்னவளின் நினைவில் விழிகளிலிருந்து விழிநீர் ஓட, திடீரென அவனைத் தேடி வந்தார் ஒரு காவல் அதிகாரி.
"ஏய், உன்னை பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு" என்று அவர் சொன்னதும், "மறுபடியும் ஒரு பொண்ணா?" என்ற ஆச்சரியத்தோடு வந்தவன் அங்கு ஆராதியாவை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
"ஆரு..." என்று அவனிதழ்கள் முணுமுணுக்க, அவளோ இறுகிய முகமாக அவனைப் பார்த்திருந்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
இருவரும் தங்களுக்கு நடுவிலிருந்த கம்பியிலான தடுப்பு சுவரால் மட்டுமல்லாது மனதாலும் விலகி நின்றிருந்தனர்.
"நீ.. நீ என்னை பார்க்க வருவன்னு நான் நினைச்சும் பார்க்கல. தேங்க் யூ சோ மச்!" என்று தழுதழுத்த குரலில் ஹர்ஷா சொல்லி கம்பியிலிருந்த அவளுடைய கரத்தின் மீது தன் கரத்தை வைக்க, உடனே அதை இழுத்துக்கொண்டாள் ஆராதியா.
கீழுதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக்கொண்டு, "நான் வந்ததுக்கு காரணம் இருக்கு, நீயா எதையும் தப்பா நினைச்சுக்காத! இந்த கொலைகள பண்ண உண்மையான கொலைகாரன் கண்டிப்பா தண்டனைய அனுபவிக்கணும், நீ இந்த கொலைய பண்ணல, அந்த விஷயத்துல நான் உன்னை நம்புறேன்" என்று உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட குரலில் பேசினாள்.
விரக்தியாகப் புன்னகைத்தவன், "இதுக்கு மேல எதுவும் பண்ண முடியாது, நான்தான் கொலை பண்ணேன்னு கோர்ட்ல கூட தீர்ப்பு கொடுத்துட்டாங்க" என்று வேதனைக் குரலில் சொல்ல, சில நிமிடங்கள் புருவத்தை நெறித்து ஆழ்ந்து யோசித்தாள்.
"தீர்ப்பு கொடுத்திருக்கலாம், ஆனா... மறுபடியும் நீ இந்த கொலைய பண்ணலன்னு உனக்கு சாதகமா ஒரு ஆதாரம் கிடைச்சாலும் இந்த கேஸ்ஸ ரீஓபன் பண்ண முடியும். நான் எவிடென்ஸ்ஸ தேடுறேன். அந்த கொலைகாரன் யாருன்னு நான் கண்டுபிடிக்கிறேன்" என்றவளின் வார்த்தைகளில் அத்தனை உறுதி.
அவள் பேசுவதைக் கேட்ட ஹர்ஷாவுக்கு திகைப்பாக இருந்தது.
"வாட்! வேணாம் ஆரு, இதை விட்டுரு. கண்டிப்பா உனக்கு ஆபத்தா இது முடியலாம். நீ எனக்காக இந்த ரிஸ்க்க எடுக்க தேவையில்ல" என்று அவன் பதற்றமாக சொல்ல, "நான் உனக்காக பண்ணல, ஒரு நிரபராதிக்காக பண்றதா இருக்கட்டும். கண்டிப்பா ப்ரணவ் எனக்கு ஹெல்ப் பண்ணுவான். சீக்கிரம் எல்லா சரியாகும்" என்ற ஆராதியா அங்கிருந்து வெளியேறப் போக, அவளை அழைத்து நிறுத்தினான் ஹர்ஷத்.
அவளோ திரும்பி அவனை கேள்வியாகப் பார்க்க, "யுகா ஏன் என்னை பார்க்கவே வரல, நீ அவன் கூட பேசினியா, அவன் என்னை பத்தி ஏதாச்சும் கேட்டானா?" என்று ஆர்வத்தோடு அவன் கேட்க, அப்போதுதான் யுகனின் ஞாபகமே வந்தது அவளுக்கு.
"இல்லை ஹர்ஷா, இப்போதான் நானே இதை பத்தி யோசிக்கிறேன். ஏன் அவர் உன்னை பத்தி என்கிட்ட கேக்கவே இல்லை?" என்று யோசித்தவாறு அவள் வெளியே செல்ல எத்தனிக்க, "ஆரு..." என்று மீண்டும் அவளை அழைத்தான் ஹர்ஷா.
"ஐ லவ் யூ!" என்று விழிகளில் காதலோடு சொன்னவனுக்கு கண்கள் கலங்கியிருக்க, அவனை அணைக்கத் துடித்த மனதை கடிவாளமிட்டு அடக்கியவள் உடனே அந்த இடத்திலிருந்து நகர்ந்திருக்க, போகும் அவளை ஏக்கத்தோடு பார்த்திருந்தான் ஹர்ஷத்.
அடுத்தநாள்,
இரவு முழுக்க தூங்காமல் யோசித்ததில் சரியான திட்டம் ஆராதியாவின் மூளைக்குள் உதித்திருக்க, அவசர அவசரமாக தயாராகி வெளியேறப் போனவளின் முன்னே வந்து நின்றார் லலிதா.
"அம்மா, எனக்கு இப்போ சாப்பிட எல்லாம் நேரமில்ல. நான் ஒரு முக்கியமான வேலையா அவசரமா போகணும், ஈவினிங் பார்க்கலாம்" என்று பதற்றமாக பேசிவிட்டு லலிதாவை தாண்டி அவள் செல்லப் போக, "அந்த பையன் இனி உனக்கு வேணாம்" என்று சட்டென சொன்னார் அவர்.
உடனே தன் நடையை நிறுத்தியவள் மெல்ல தன் தாயை திரும்பிப் பார்த்தாள்.
"என்னாச்சு இப்போ?" என்று கூரிய பார்வையோடுக் கேட்க, "இனி என்ன நடக்கணும்? அதான் ஊருக்கே தெரிஞ்சிருச்சே. எவளோ ஒருத்தி கூட ஹோட்டல்ல ரூம் போட்டு அவள கொன்னு போட்டிருக்கான். ச்சீ... இவன் எல்லாம் மனுஷனா! நல்லவேள கல்யாணத்துக்கு முன்னாடியே அவன பத்தி தெரிஞ்சு போச்சு. இல்லன்னா கடவுளே! இதுக்கப்பறமாச்சும் அவன் பின்னாடி சுத்துறத நிறுத்து, அம்மா உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்க்குறேன்" என்று லலிதாவோ அவர் பாட்டிற்கு பேசிக்கொண்டே போனார்.
ஆனால், ஆராதியா அவரை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. அமைதியாக கேட்டுக்கொண்டு நின்றிருந்தவள், அவர் பேசி முடித்ததும் அமைதியாக அங்கிருந்து வெளியேறியிருக்க, லலிதாவிற்கு மகளின் செய்கையில் பிபிதான் எகிறியது.
அதேநேரம், இறந்து போனவர்களின் மற்ற இரு நண்பர்களான வினய் மற்றும் க்ரிஷ்ஷின் குடும்பத்தினர் அந்த போலீஸ் ஸ்டேஷனை மொத்தமாக ஆக்கிரமித்திருக்க, உச்சகட்ட கோபத்தோடு தலையில் கை வைத்தவாறு அமர்ந்திருந்தான் ப்ரணவ்.
"எங்களால உங்கள நம்ப முடியாது. இவங்க கூட இருந்தவங்க மூனு பேர் தொடர்ந்து இறந்திருக்காங்க, இவங்களுக்கும் எதுவும் ஆகாதுன்னு என்ன நிச்சயம்? எங்க பசங்க உசுருக்கு எதுவும் ஆகக் கூடாது. நீங்கதான் பாதுகாப்பு கொடுக்கணும்" என்று வினய்யின் தந்தை மிரட்டலாகச் சொல்ல,
"தாராளமா கொடுக்கலாம் சார், இப்போ நாங்க முடியாதுன்னு சொல்லல. ஆனா, உங்க பசங்கள நாங்க இந்த கேஸ்ஸ க்ளோஸ் பண்ற வரைக்கும் வீட்டுக்குள்ளயே இருக்க சொல்லுங்க. அதுதான் அவங்களுக்கு சேஃப்" என்று பற்களைக் கடித்தவாறு அழுத்தமாக சொன்னான் அவன்.
"அதெப்படி! போலீஸ் பாதுகாப்பு சரியா கொடுத்தா எதுக்காக வீட்டுக்குள்ளயே இருக்கணும். அதெல்லாம் முடியாது" என்று க்ரிஷ் கடுப்பாக சொல்ல, அவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்து வைத்தனர் அங்கிருந்த அதிகாரிகள்.
சரியாக, "எக்ஸ்கியூஸ் மீ சார்!" என்ற மெல்லிய குரல் கேட்க, சட்டென நிமிர்ந்துப் பார்த்த ப்ரணவ் அங்கு நின்றிருந்தவளை முறைத்துப் பார்த்தான்.
"நானும் அவங்க ஃப்ரென்டா இருந்தவதான், எனக்கெல்லாம் பாதுகாப்பு கொடுக்க மாட்டீங்களா?"" என்று கேலியாக ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினாள் வைஷ்ணவி.
அங்கிருந்தவர்களோ வாயைப் பிளந்து அவளைப் பார்க்க, அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் தன்னை மீறி ரசித்தான் ப்ரணவ்.
ஆனால் அதுவும் சில கணங்கள்தான்.
"முன்னாடியே சொன்ன மாதிரி முடிஞ்ச அளவுக்கு வீட்டுலயே இருங்க, எங்க ஆளுங்க உங்க வீட்டு பக்கத்துலயேதான் பாதுகாப்புக்காக இருப்பாங்க. நவ் யூ ஆல் காய்ஸ் மே கோ" என்று அவன் சொன்னதும், அவர்களும் தங்களுக்குள் கிசுகிசுத்தவாறு அங்கிருந்து நகர, வினய்யும் க்ரிஷும் வைஷ்ணவியை மனுஷியாகக் கூட மதிக்கவில்லை.
முகத்தைக் கூட பார்க்காது அவர்கள் பாட்டிற்கு நகர்ந்து விட, "அவங்க உன் ஃப்ரென்ட்தானே வைஷ்ணவி, ஏன் முகத்தை திருப்பிக்கிட்டு போறாங்க?" என்று சந்தேகமாகக் கேட்டான் ப்ரணவ்.
அவனின் எதிரே இருந்த இருக்கையில் உரிமையோடு அமர்ந்தவள், "அதான் முன்னாடியே சொன்னேனே சார், அவங்க கூட இப்போ அவ்வளவா பழக்கம் இல்லன்னு" என்று சொல்லிவிட்டு அவனையே பார்க்க, அவனும் பதிலுக்கு அவளின் விழிகளையே பார்த்திருந்தான்.
"அப்பறம் கேஸ் எல்லாம் எப்படி போகுது?" என்று ஏதோ பெரிய மனுஷி தோரணையில் மேசையில் இரு கைகளைக் கோர்த்து வைத்து அவள் கேட்க, சுற்றிமுற்றிப் பார்த்தவன் "இந்த இடத்தையும் என்னையும் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? ஒழுங்கு மரியாதையா இங்கயிருந்து போயிரு" என்று விழிகளை உருட்டி எச்சரித்தான்.
அதில் குறும்பாகப் புன்னகைத்தவள், "எதுக்கு இம்புட்டு டென்ஷன் போலீஸ்காரரே, உங்ககிட்ட ஒன்னு சொல்லணும். சொல்லிட்டு நான் போயிடுறேன்" என்று சொல்லி சற்று முன்னோக்கி வர, "என்ன?" என்று கேள்வியாகப் பார்த்தான் ப்ரணவ்.
"நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்ற அவளின் திடுதிப்பென்ற கேள்வியில் அவனுக்கே ஒருகணம் திக்குமுக்காகி விட்டது.
"வா.. வாட்!" என்று அந்த இடமே அதிர அவன் கத்திவிட, சுற்றியிருந்த அதிகாரிகளின் பார்வையும் அவர்கள் இருவரின் மீது சந்தேகத்தோடு படிந்தது.
"சா.. சாரி!" என சுற்றியிருந்தவர்களைப் பார்த்து சொன்னவன் வைஷ்ணவியைப் பார்த்து ஏதோ பேச வர, அதற்குள் ஸ்டேஷனுக்குள் நுழைந்தாள் ஆராதியா.
அங்கு தன் சகோதரியை எதிர்பார்க்காதவளின் விழிகள் சந்தேகத்தில் அவளைத் துளைத்தெடுத்தன.
அவர்களுக்கருகே சென்று, "வைஷு, நீ.. நீ இங்க என்ன பண்ற?" என்று அவள் புரியாமல் கேட்க, "அது.. ஒன்னுஇல்லை அக்கா. சும்மாதான், இந்த கேஸோட நிலைமை எப்படி போகுதுன்னு கேக்கலாம்னு வந்தேன். மிச்சம் மீதி இருக்குற என்னோட ஃப்ரென்ட்ஸ் உயிரோட இருக்கணும்ல, அதான்..." என்று வராத கண்ணீரை துடைத்து விட்டுக்கொண்டு சொன்னாள் மற்றவள்.
ப்ரணவோ அவளின் நடிப்பைப் பார்த்து ஒற்றைப் புருவத்தைத் தூக்கி முறைத்தவன், ஆராதியாவின் பார்வை தன் மீது படிந்ததுமே உடனே முகபாவனையை மாற்றி அவளை கேள்வியாக நோக்கினான்.
"ப்ரணவ், ஐ நீட் யூவர் ஹெல்ப். ப்ளீஸ்!" என்று விழிகள் கலங்கக் கேட்டாள் தியா.
சுற்றிமுற்றிப் பார்த்துவிட்டு, "இங்க வேணாம் தியா, வெளியில போய் பேசிக்கலாம்" என்றவன் அவன் பாட்டிற்கு முன்னோக்கி நடக்க, அவன் பின்னாலேயே சென்ற இருவரும் அவன் ஓரிடத்தில் நின்றதும் சட்டென நின்றனர்.
"என்னால இந்த விஷயத்துல ஹெல்ப் பண்ண முடியாதுன்னு நான் முன்னாடியே சொல்லிட்டேன், எல்லா ஆதாரமும் ஹர்ஷாவுக்கு எதிரா இருக்கு. என்ட் மறுபடியும் நீ அவன நம்ப போறியா?" என்று ப்ரணவ் சிறு கோபத்தோடுக் கேட்க, "நான் அவன் கூட அஞ்சு வருஷத்துக்கு மேல பழகியிருக்கேன். ஐ அம் டேம்ன் ஷுவர், கண்டிப்பா அவன் கொலை பண்ணியிருக்க மாட்டான். எனக்கு தெரியும். அவன் மேல எனக்கு கோபம் இருக்கு, ஆனா தப்பே பண்ணாம தண்டனை அனுபவிக்க என்னால விட முடியாது. நான் ஹர்ஷாவ காப்பாத்தணும் ப்ரணவ்" என்று தன் நிலையை புரிய வைத்தாள் அவள்.
"வாட் அ லவ்!" என்று ஓரக்கண்ணால் வைஷாலி ப்ரணவைப் பார்க்க, தன் தோழி கூற வருவதை உணர்ந்துக்கொண்டவன் சில நிமிடங்கள் ஆழ்ந்து யோசித்துவிட்டு ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டான்.
"இப்போ உனக்கு என்ன ஹெல்ப் வேணும்?" என்று அவன் கேட்டதும், "ப்ரீத்தி கொலை நடந்த ஹோட்டல் ரூம்ம போய் நான் பார்க்கணும், மே பீ உண்மையான கொலைகாரனுக்கு சம்பந்தப்பட்ட ஏதாச்சும் ஒரு எவிடென்ஸ் எனக்கு கிடைக்கலாம். நீயும் என் கூட வா!" என்று அவள் சொல்ல, அவளை அதிர்ந்துப் பார்த்தான் அவன்.
"அங்க போறது அவ்வளவு ஈஸி கிடையாது, நான் போன விஷயம் தெரிஞ்சாலே என்னை சஸ்பென்ட் பண்ணிருவாங்க. என்ட் பாரன்சீக் ஆளுங்க அந்த இடத்தை நல்லா அலசி பார்த்துட்டாங்க. எந்த எவிடென்ஸுமே கிடைக்கல" என்று பதற்றமாக சொன்னவன் தியாவின் கலங்கிய விழிகளைப் பார்த்து 'ஊஃப்...' என பெருமூச்சு விட்டுக்கொண்டான்.
"ஓகே, நீ சொல்ற மாதிரி ட்ரை பண்ணி பார்க்கலாம். இன்னைக்கு ராத்திரி ரெடியா இரு, அங்க போகலாம்" என்று வைஷாலியை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு ப்ரணவ் அங்கிருந்து நகர, ஆராதியாவோ சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்காத குறையாக நின்றிருந்தாள்.
திடீரென ப்ரணவ் உட்பட மொத்த அதிகாரிகளும் பரபரப்பாக உள்ளிருந்து வந்து ஜீப்பில் ஏறி மின்னல் வேகத்தில் வண்டியை செலுத்த, நின்றிருந்த இருவருக்கும் எதுவுமே புரியவில்லை.
"என்னாச்சு அக்கா, ஏன் எல்லாரும் டென்ஷனா போறாங்க?" என்று வைஷாலி தமக்கையின் காதில் கிசுகிசுக்க, "அதான்டீ எனக்கும் புரியல, இரு கேக்கலாம்" என்ற ஆராதியா அங்கு வாசலில் நின்றிருந்த அதிகாரியிடம் விசாரித்தாள்.
"அதுவாம்மா... பீச்சுக்கு பக்கத்துல ஒரு பாடி கிடைச்சிருக்கு. அதான்" என்று அவர் சொல்ல, அடுத்தகணம் வைஷாலியை இழுத்துக்கொண்டு அந்த இடத்திற்கு ஓடினாள் தியா.
அங்கு சுற்றியிருந்தவர்கள் அந்த இடத்தில் கூடியிருக்க, போலீஸ் அதிகாரிகளும் பரபரப்பாக இருந்தனர். உடனே அந்த இடத்திற்கு ஆம்பியூலன்ஸும் கொண்டு வரப்பட்டது.
"அக்கா, என.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. யாரா இருக்கும்னு. நா.. நாம போயிடலாம். ப்ளீஸ்!" என்று வைஷாலி தியாவின் கரத்தை இறுகப் பற்றி இழுக்க, "இல்லை வைஷு, நான் பார்க்கணும்" என்ற மற்றவள் ஒவ்வொரு அடியாக வைத்து கூட்டத்தை விலக்கி இறந்தது யாரென்றுப் பார்த்தாள்.
அடுத்தகணம் அவளுடைய விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிய, தலையே சுற்றிவிட்டது.
உடல் பலவீனமாகி விழப் போனவளை தாங்கிக்கொண்ட வைஷாலி, "அக்கா... என்னாச்சு உனக்கு? அய்யோ... ப்ளீஸ் நகருங்க" என்று அங்கிருந்து நகர்ந்துச் சென்று உடனே தன் பையிலிருந்த தண்ணீர் போத்தலை அவளுக்கு பருகக் கொடுக்க, உடலெல்லாம் வியர்த்துப் போய் கைக்கால்கள் நடுங்க நின்றிருந்த ஆராதியாவின் விழிகளிலிருந்து விழிநீர் விடாமல் ஓடியது.
"அக்கா, என்னாச்சு, ஏன் அழுற? ஏன்னு சொல்லு... இறந்தவரு உனக்கு ரொம்ப தெரிஞ்சவரா?" என்று வைஷாலி பதற்றமாகக் கேட்க, அழுதுக்கொண்டே தலையசைத்தவளின் இதழ்கள், "யுகன்..." என்று முணுமுணுத்தன.
***********

"அண்ணி, ஹர்ஷா அண்ணா நல்லவன்னு நான் சொல்லல. அவன் தப்பு பண்ணியிருக்கான். ஆனா அன்னைக்கு அண்ணா எந்த தப்பும் பண்ணல. அன்னைக்கு என்னாச்சுன்னா..." என்று நடந்தது அத்தனையும் சொல்லி முடித்தான் அபி.
"அன்னைக்கு அண்ணா உங்ககிட்ட உண்மைய மறைச்சதுக்கான காரணம் கூட எங்க நீங்க ஹர்ட் ஆகிருவீங்களோன்னுதான். அன்னைக்கு நிஜமாவே அவன் மேல தப்பு கிடையாது. என்ட், அவன் கொலை பண்ணல. அந்த சைக்கோ கில்லர் பண்ணிட்டு ப்ளான் பண்ணி அண்ணா மேல பழிய போட்டிருக்கான்" என்று கோபத்தோடு அவன் பற்களைக் கடிக்க, ஆராதியாவோ சில நிமிடங்கள் எதையும் பேசவில்லை.
தரையை வெறித்தவாறு இறுகிய முகமாக அவள் நின்றிருக்க, "தியா அண்ணி, என்னால எதையும் தனியா ஃபேஸ் பண்ண முடியல. அண்ணாவ காப்பாத்தியே ஆகணும். ஹீ ட்ரூலி லவ் யூ, அது மட்டும் எனக்கு நல்லா தெரியும்" என்று அபி சொல்லவும், கீழுதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக்கொண்டவள் விழிகளிலிருந்து கசிந்த விழிநீரை துடைத்துக்கொண்டாள்.
அபியோ அதற்குமேல் முடியாமல் புல்லட்டில் ஏறி வண்டியை உயிர்ப்பிக்க, ஒரு பெருமூச்சுவிட்டு, "அபி நில்லு..." என்றழைத்த ஆராதியா, "ஹர்ஷா வெளியில வர நான் ஹெல்ப் பண்றேன், ஆனா இது காதலுக்காக இல்லை. தப்பு பண்ணாதவன் தண்டனை அனுபவிக்க கூடாதுங்குற ஒரே மனிதாபிமானம்தான்" என்றுவிட்டு மீண்டும் ஆஃபீஸை நோக்கி நடக்க, அவனுக்கோ இதுவே போதுமென்று இருந்தது.
அதே சந்தோஷத்தோடு வண்டியை உயிர்ப்பித்து அவன் அங்கிருந்து நகர, அடுத்தநாள் சிறைச்சாலையில் விட்டத்தைப் பார்த்தவாறு படுத்திருந்த ஹர்ஷாவிற்கு அந்தப் பெண் யாரென்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
அந்த பூங்கொத்திலிருந்த கார்டை கையிலெடுத்தவன் அந்த கையெழுத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.
"யாரா இருக்கும், இந்த கொலைகள பண்ணது ஒரு சீரியல் கில்லரா இல்லன்னா இதுக்கு பின்னாடி ஏதாச்சும் மோட்டிவ் இருக்கா? என்ட் இத்தனை நாள் போலீஸால தேடிக்கிட்டு இருந்தது ஒரு பொண்ணையா? ச்சே! அவளோட வலையில நான் சிக்கிட்டேனே" என்று கோபத்தோடு எழுந்தமர்ந்தான் ஹர்ஷா.
இப்படியொரு நிலை வருமென்று இரண்டு வாரத்திற்கு முன் யாராவது சொல்லியிருந்தால் பைத்தியமென்று ஒதுங்கிப் போயிருப்பான். ஆனால், இப்போது எல்லாமே தலை கீழாக மாறிய உணர்வு.
திடீரென என்ன யோசித்தானோ!
"இந்த கையெழுத்த வச்சு கூட இதை யார் எழுதியிருப்பாங்கன்னு கண்டுபிடிக்கலாம், ஆனா அதுவும் அவ்வளவு ஈஸி கிடையாது. என்ட், உள்ளயே இருந்துகிட்டு எதுவும் பண்ண முடியாது" என்று எரிச்சலாக முணுமுணுத்தவனுக்கு திடீரென தன்னவளின் நினைவில் விழிகளிலிருந்து விழிநீர் ஓட, திடீரென அவனைத் தேடி வந்தார் ஒரு காவல் அதிகாரி.
"ஏய், உன்னை பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு" என்று அவர் சொன்னதும், "மறுபடியும் ஒரு பொண்ணா?" என்ற ஆச்சரியத்தோடு வந்தவன் அங்கு ஆராதியாவை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
"ஆரு..." என்று அவனிதழ்கள் முணுமுணுக்க, அவளோ இறுகிய முகமாக அவனைப் பார்த்திருந்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
இருவரும் தங்களுக்கு நடுவிலிருந்த கம்பியிலான தடுப்பு சுவரால் மட்டுமல்லாது மனதாலும் விலகி நின்றிருந்தனர்.
"நீ.. நீ என்னை பார்க்க வருவன்னு நான் நினைச்சும் பார்க்கல. தேங்க் யூ சோ மச்!" என்று தழுதழுத்த குரலில் ஹர்ஷா சொல்லி கம்பியிலிருந்த அவளுடைய கரத்தின் மீது தன் கரத்தை வைக்க, உடனே அதை இழுத்துக்கொண்டாள் ஆராதியா.
கீழுதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக்கொண்டு, "நான் வந்ததுக்கு காரணம் இருக்கு, நீயா எதையும் தப்பா நினைச்சுக்காத! இந்த கொலைகள பண்ண உண்மையான கொலைகாரன் கண்டிப்பா தண்டனைய அனுபவிக்கணும், நீ இந்த கொலைய பண்ணல, அந்த விஷயத்துல நான் உன்னை நம்புறேன்" என்று உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட குரலில் பேசினாள்.
விரக்தியாகப் புன்னகைத்தவன், "இதுக்கு மேல எதுவும் பண்ண முடியாது, நான்தான் கொலை பண்ணேன்னு கோர்ட்ல கூட தீர்ப்பு கொடுத்துட்டாங்க" என்று வேதனைக் குரலில் சொல்ல, சில நிமிடங்கள் புருவத்தை நெறித்து ஆழ்ந்து யோசித்தாள்.
"தீர்ப்பு கொடுத்திருக்கலாம், ஆனா... மறுபடியும் நீ இந்த கொலைய பண்ணலன்னு உனக்கு சாதகமா ஒரு ஆதாரம் கிடைச்சாலும் இந்த கேஸ்ஸ ரீஓபன் பண்ண முடியும். நான் எவிடென்ஸ்ஸ தேடுறேன். அந்த கொலைகாரன் யாருன்னு நான் கண்டுபிடிக்கிறேன்" என்றவளின் வார்த்தைகளில் அத்தனை உறுதி.
அவள் பேசுவதைக் கேட்ட ஹர்ஷாவுக்கு திகைப்பாக இருந்தது.
"வாட்! வேணாம் ஆரு, இதை விட்டுரு. கண்டிப்பா உனக்கு ஆபத்தா இது முடியலாம். நீ எனக்காக இந்த ரிஸ்க்க எடுக்க தேவையில்ல" என்று அவன் பதற்றமாக சொல்ல, "நான் உனக்காக பண்ணல, ஒரு நிரபராதிக்காக பண்றதா இருக்கட்டும். கண்டிப்பா ப்ரணவ் எனக்கு ஹெல்ப் பண்ணுவான். சீக்கிரம் எல்லா சரியாகும்" என்ற ஆராதியா அங்கிருந்து வெளியேறப் போக, அவளை அழைத்து நிறுத்தினான் ஹர்ஷத்.
அவளோ திரும்பி அவனை கேள்வியாகப் பார்க்க, "யுகா ஏன் என்னை பார்க்கவே வரல, நீ அவன் கூட பேசினியா, அவன் என்னை பத்தி ஏதாச்சும் கேட்டானா?" என்று ஆர்வத்தோடு அவன் கேட்க, அப்போதுதான் யுகனின் ஞாபகமே வந்தது அவளுக்கு.
"இல்லை ஹர்ஷா, இப்போதான் நானே இதை பத்தி யோசிக்கிறேன். ஏன் அவர் உன்னை பத்தி என்கிட்ட கேக்கவே இல்லை?" என்று யோசித்தவாறு அவள் வெளியே செல்ல எத்தனிக்க, "ஆரு..." என்று மீண்டும் அவளை அழைத்தான் ஹர்ஷா.
"ஐ லவ் யூ!" என்று விழிகளில் காதலோடு சொன்னவனுக்கு கண்கள் கலங்கியிருக்க, அவனை அணைக்கத் துடித்த மனதை கடிவாளமிட்டு அடக்கியவள் உடனே அந்த இடத்திலிருந்து நகர்ந்திருக்க, போகும் அவளை ஏக்கத்தோடு பார்த்திருந்தான் ஹர்ஷத்.
அடுத்தநாள்,
இரவு முழுக்க தூங்காமல் யோசித்ததில் சரியான திட்டம் ஆராதியாவின் மூளைக்குள் உதித்திருக்க, அவசர அவசரமாக தயாராகி வெளியேறப் போனவளின் முன்னே வந்து நின்றார் லலிதா.
"அம்மா, எனக்கு இப்போ சாப்பிட எல்லாம் நேரமில்ல. நான் ஒரு முக்கியமான வேலையா அவசரமா போகணும், ஈவினிங் பார்க்கலாம்" என்று பதற்றமாக பேசிவிட்டு லலிதாவை தாண்டி அவள் செல்லப் போக, "அந்த பையன் இனி உனக்கு வேணாம்" என்று சட்டென சொன்னார் அவர்.
உடனே தன் நடையை நிறுத்தியவள் மெல்ல தன் தாயை திரும்பிப் பார்த்தாள்.
"என்னாச்சு இப்போ?" என்று கூரிய பார்வையோடுக் கேட்க, "இனி என்ன நடக்கணும்? அதான் ஊருக்கே தெரிஞ்சிருச்சே. எவளோ ஒருத்தி கூட ஹோட்டல்ல ரூம் போட்டு அவள கொன்னு போட்டிருக்கான். ச்சீ... இவன் எல்லாம் மனுஷனா! நல்லவேள கல்யாணத்துக்கு முன்னாடியே அவன பத்தி தெரிஞ்சு போச்சு. இல்லன்னா கடவுளே! இதுக்கப்பறமாச்சும் அவன் பின்னாடி சுத்துறத நிறுத்து, அம்மா உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்க்குறேன்" என்று லலிதாவோ அவர் பாட்டிற்கு பேசிக்கொண்டே போனார்.
ஆனால், ஆராதியா அவரை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. அமைதியாக கேட்டுக்கொண்டு நின்றிருந்தவள், அவர் பேசி முடித்ததும் அமைதியாக அங்கிருந்து வெளியேறியிருக்க, லலிதாவிற்கு மகளின் செய்கையில் பிபிதான் எகிறியது.
அதேநேரம், இறந்து போனவர்களின் மற்ற இரு நண்பர்களான வினய் மற்றும் க்ரிஷ்ஷின் குடும்பத்தினர் அந்த போலீஸ் ஸ்டேஷனை மொத்தமாக ஆக்கிரமித்திருக்க, உச்சகட்ட கோபத்தோடு தலையில் கை வைத்தவாறு அமர்ந்திருந்தான் ப்ரணவ்.
"எங்களால உங்கள நம்ப முடியாது. இவங்க கூட இருந்தவங்க மூனு பேர் தொடர்ந்து இறந்திருக்காங்க, இவங்களுக்கும் எதுவும் ஆகாதுன்னு என்ன நிச்சயம்? எங்க பசங்க உசுருக்கு எதுவும் ஆகக் கூடாது. நீங்கதான் பாதுகாப்பு கொடுக்கணும்" என்று வினய்யின் தந்தை மிரட்டலாகச் சொல்ல,
"தாராளமா கொடுக்கலாம் சார், இப்போ நாங்க முடியாதுன்னு சொல்லல. ஆனா, உங்க பசங்கள நாங்க இந்த கேஸ்ஸ க்ளோஸ் பண்ற வரைக்கும் வீட்டுக்குள்ளயே இருக்க சொல்லுங்க. அதுதான் அவங்களுக்கு சேஃப்" என்று பற்களைக் கடித்தவாறு அழுத்தமாக சொன்னான் அவன்.
"அதெப்படி! போலீஸ் பாதுகாப்பு சரியா கொடுத்தா எதுக்காக வீட்டுக்குள்ளயே இருக்கணும். அதெல்லாம் முடியாது" என்று க்ரிஷ் கடுப்பாக சொல்ல, அவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்து வைத்தனர் அங்கிருந்த அதிகாரிகள்.
சரியாக, "எக்ஸ்கியூஸ் மீ சார்!" என்ற மெல்லிய குரல் கேட்க, சட்டென நிமிர்ந்துப் பார்த்த ப்ரணவ் அங்கு நின்றிருந்தவளை முறைத்துப் பார்த்தான்.
"நானும் அவங்க ஃப்ரென்டா இருந்தவதான், எனக்கெல்லாம் பாதுகாப்பு கொடுக்க மாட்டீங்களா?"" என்று கேலியாக ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினாள் வைஷ்ணவி.
அங்கிருந்தவர்களோ வாயைப் பிளந்து அவளைப் பார்க்க, அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் தன்னை மீறி ரசித்தான் ப்ரணவ்.
ஆனால் அதுவும் சில கணங்கள்தான்.
"முன்னாடியே சொன்ன மாதிரி முடிஞ்ச அளவுக்கு வீட்டுலயே இருங்க, எங்க ஆளுங்க உங்க வீட்டு பக்கத்துலயேதான் பாதுகாப்புக்காக இருப்பாங்க. நவ் யூ ஆல் காய்ஸ் மே கோ" என்று அவன் சொன்னதும், அவர்களும் தங்களுக்குள் கிசுகிசுத்தவாறு அங்கிருந்து நகர, வினய்யும் க்ரிஷும் வைஷ்ணவியை மனுஷியாகக் கூட மதிக்கவில்லை.
முகத்தைக் கூட பார்க்காது அவர்கள் பாட்டிற்கு நகர்ந்து விட, "அவங்க உன் ஃப்ரென்ட்தானே வைஷ்ணவி, ஏன் முகத்தை திருப்பிக்கிட்டு போறாங்க?" என்று சந்தேகமாகக் கேட்டான் ப்ரணவ்.
அவனின் எதிரே இருந்த இருக்கையில் உரிமையோடு அமர்ந்தவள், "அதான் முன்னாடியே சொன்னேனே சார், அவங்க கூட இப்போ அவ்வளவா பழக்கம் இல்லன்னு" என்று சொல்லிவிட்டு அவனையே பார்க்க, அவனும் பதிலுக்கு அவளின் விழிகளையே பார்த்திருந்தான்.
"அப்பறம் கேஸ் எல்லாம் எப்படி போகுது?" என்று ஏதோ பெரிய மனுஷி தோரணையில் மேசையில் இரு கைகளைக் கோர்த்து வைத்து அவள் கேட்க, சுற்றிமுற்றிப் பார்த்தவன் "இந்த இடத்தையும் என்னையும் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? ஒழுங்கு மரியாதையா இங்கயிருந்து போயிரு" என்று விழிகளை உருட்டி எச்சரித்தான்.
அதில் குறும்பாகப் புன்னகைத்தவள், "எதுக்கு இம்புட்டு டென்ஷன் போலீஸ்காரரே, உங்ககிட்ட ஒன்னு சொல்லணும். சொல்லிட்டு நான் போயிடுறேன்" என்று சொல்லி சற்று முன்னோக்கி வர, "என்ன?" என்று கேள்வியாகப் பார்த்தான் ப்ரணவ்.
"நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்ற அவளின் திடுதிப்பென்ற கேள்வியில் அவனுக்கே ஒருகணம் திக்குமுக்காகி விட்டது.
"வா.. வாட்!" என்று அந்த இடமே அதிர அவன் கத்திவிட, சுற்றியிருந்த அதிகாரிகளின் பார்வையும் அவர்கள் இருவரின் மீது சந்தேகத்தோடு படிந்தது.
"சா.. சாரி!" என சுற்றியிருந்தவர்களைப் பார்த்து சொன்னவன் வைஷ்ணவியைப் பார்த்து ஏதோ பேச வர, அதற்குள் ஸ்டேஷனுக்குள் நுழைந்தாள் ஆராதியா.
அங்கு தன் சகோதரியை எதிர்பார்க்காதவளின் விழிகள் சந்தேகத்தில் அவளைத் துளைத்தெடுத்தன.
அவர்களுக்கருகே சென்று, "வைஷு, நீ.. நீ இங்க என்ன பண்ற?" என்று அவள் புரியாமல் கேட்க, "அது.. ஒன்னுஇல்லை அக்கா. சும்மாதான், இந்த கேஸோட நிலைமை எப்படி போகுதுன்னு கேக்கலாம்னு வந்தேன். மிச்சம் மீதி இருக்குற என்னோட ஃப்ரென்ட்ஸ் உயிரோட இருக்கணும்ல, அதான்..." என்று வராத கண்ணீரை துடைத்து விட்டுக்கொண்டு சொன்னாள் மற்றவள்.
ப்ரணவோ அவளின் நடிப்பைப் பார்த்து ஒற்றைப் புருவத்தைத் தூக்கி முறைத்தவன், ஆராதியாவின் பார்வை தன் மீது படிந்ததுமே உடனே முகபாவனையை மாற்றி அவளை கேள்வியாக நோக்கினான்.
"ப்ரணவ், ஐ நீட் யூவர் ஹெல்ப். ப்ளீஸ்!" என்று விழிகள் கலங்கக் கேட்டாள் தியா.
சுற்றிமுற்றிப் பார்த்துவிட்டு, "இங்க வேணாம் தியா, வெளியில போய் பேசிக்கலாம்" என்றவன் அவன் பாட்டிற்கு முன்னோக்கி நடக்க, அவன் பின்னாலேயே சென்ற இருவரும் அவன் ஓரிடத்தில் நின்றதும் சட்டென நின்றனர்.
"என்னால இந்த விஷயத்துல ஹெல்ப் பண்ண முடியாதுன்னு நான் முன்னாடியே சொல்லிட்டேன், எல்லா ஆதாரமும் ஹர்ஷாவுக்கு எதிரா இருக்கு. என்ட் மறுபடியும் நீ அவன நம்ப போறியா?" என்று ப்ரணவ் சிறு கோபத்தோடுக் கேட்க, "நான் அவன் கூட அஞ்சு வருஷத்துக்கு மேல பழகியிருக்கேன். ஐ அம் டேம்ன் ஷுவர், கண்டிப்பா அவன் கொலை பண்ணியிருக்க மாட்டான். எனக்கு தெரியும். அவன் மேல எனக்கு கோபம் இருக்கு, ஆனா தப்பே பண்ணாம தண்டனை அனுபவிக்க என்னால விட முடியாது. நான் ஹர்ஷாவ காப்பாத்தணும் ப்ரணவ்" என்று தன் நிலையை புரிய வைத்தாள் அவள்.
"வாட் அ லவ்!" என்று ஓரக்கண்ணால் வைஷாலி ப்ரணவைப் பார்க்க, தன் தோழி கூற வருவதை உணர்ந்துக்கொண்டவன் சில நிமிடங்கள் ஆழ்ந்து யோசித்துவிட்டு ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டான்.
"இப்போ உனக்கு என்ன ஹெல்ப் வேணும்?" என்று அவன் கேட்டதும், "ப்ரீத்தி கொலை நடந்த ஹோட்டல் ரூம்ம போய் நான் பார்க்கணும், மே பீ உண்மையான கொலைகாரனுக்கு சம்பந்தப்பட்ட ஏதாச்சும் ஒரு எவிடென்ஸ் எனக்கு கிடைக்கலாம். நீயும் என் கூட வா!" என்று அவள் சொல்ல, அவளை அதிர்ந்துப் பார்த்தான் அவன்.
"அங்க போறது அவ்வளவு ஈஸி கிடையாது, நான் போன விஷயம் தெரிஞ்சாலே என்னை சஸ்பென்ட் பண்ணிருவாங்க. என்ட் பாரன்சீக் ஆளுங்க அந்த இடத்தை நல்லா அலசி பார்த்துட்டாங்க. எந்த எவிடென்ஸுமே கிடைக்கல" என்று பதற்றமாக சொன்னவன் தியாவின் கலங்கிய விழிகளைப் பார்த்து 'ஊஃப்...' என பெருமூச்சு விட்டுக்கொண்டான்.
"ஓகே, நீ சொல்ற மாதிரி ட்ரை பண்ணி பார்க்கலாம். இன்னைக்கு ராத்திரி ரெடியா இரு, அங்க போகலாம்" என்று வைஷாலியை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு ப்ரணவ் அங்கிருந்து நகர, ஆராதியாவோ சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்காத குறையாக நின்றிருந்தாள்.
திடீரென ப்ரணவ் உட்பட மொத்த அதிகாரிகளும் பரபரப்பாக உள்ளிருந்து வந்து ஜீப்பில் ஏறி மின்னல் வேகத்தில் வண்டியை செலுத்த, நின்றிருந்த இருவருக்கும் எதுவுமே புரியவில்லை.
"என்னாச்சு அக்கா, ஏன் எல்லாரும் டென்ஷனா போறாங்க?" என்று வைஷாலி தமக்கையின் காதில் கிசுகிசுக்க, "அதான்டீ எனக்கும் புரியல, இரு கேக்கலாம்" என்ற ஆராதியா அங்கு வாசலில் நின்றிருந்த அதிகாரியிடம் விசாரித்தாள்.
"அதுவாம்மா... பீச்சுக்கு பக்கத்துல ஒரு பாடி கிடைச்சிருக்கு. அதான்" என்று அவர் சொல்ல, அடுத்தகணம் வைஷாலியை இழுத்துக்கொண்டு அந்த இடத்திற்கு ஓடினாள் தியா.
அங்கு சுற்றியிருந்தவர்கள் அந்த இடத்தில் கூடியிருக்க, போலீஸ் அதிகாரிகளும் பரபரப்பாக இருந்தனர். உடனே அந்த இடத்திற்கு ஆம்பியூலன்ஸும் கொண்டு வரப்பட்டது.
"அக்கா, என.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. யாரா இருக்கும்னு. நா.. நாம போயிடலாம். ப்ளீஸ்!" என்று வைஷாலி தியாவின் கரத்தை இறுகப் பற்றி இழுக்க, "இல்லை வைஷு, நான் பார்க்கணும்" என்ற மற்றவள் ஒவ்வொரு அடியாக வைத்து கூட்டத்தை விலக்கி இறந்தது யாரென்றுப் பார்த்தாள்.
அடுத்தகணம் அவளுடைய விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிய, தலையே சுற்றிவிட்டது.
உடல் பலவீனமாகி விழப் போனவளை தாங்கிக்கொண்ட வைஷாலி, "அக்கா... என்னாச்சு உனக்கு? அய்யோ... ப்ளீஸ் நகருங்க" என்று அங்கிருந்து நகர்ந்துச் சென்று உடனே தன் பையிலிருந்த தண்ணீர் போத்தலை அவளுக்கு பருகக் கொடுக்க, உடலெல்லாம் வியர்த்துப் போய் கைக்கால்கள் நடுங்க நின்றிருந்த ஆராதியாவின் விழிகளிலிருந்து விழிநீர் விடாமல் ஓடியது.
"அக்கா, என்னாச்சு, ஏன் அழுற? ஏன்னு சொல்லு... இறந்தவரு உனக்கு ரொம்ப தெரிஞ்சவரா?" என்று வைஷாலி பதற்றமாகக் கேட்க, அழுதுக்கொண்டே தலையசைத்தவளின் இதழ்கள், "யுகன்..." என்று முணுமுணுத்தன.
***********