ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

'மையவிழிப் பார்வையிலே' - கதை திரி

Status
Not open for further replies.

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 04





"வைஷு, என்ன சொல்லுற? இவள... இவள உனக்கு தெரியுமா?" என்று ஆராதியா அதிர்ந்த குரலில் கேட்க, விழிகளில் கண்ணீரோடு ஆமென தலையசைத்தாள் வைஷ்ணவி.



சற்று நேரத்திற்கு முன் குப்பைகள் நிறைந்திருந்த இடத்தில் பிணமாகக் கிடந்த பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்துதான் அவள் இவ்வாறு இருப்பதே.



"அவ பேரு அனிதா. இதுக்கு முன்னாடி இறந்து போன கரண் கூட என் ஃப்ரென்ட்தான் அக்கா. இதை.. இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. என்ன நடக்குது இங்க?" என்று அவள் தலையில் கை வைத்துக்கொள்ள, அவள் சொல்வதைக் கேட்ட ஆராதியாவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.



"அப்போ இறந்து போன இரண்டு பேரும் உன்னோட ஃப்ரென்ட்ஸ்தானா, இரண்டு பேரையும் கொன்னதும் ஒரே ஆள். எனக்கே ரொம்ப குழப்பமா இருக்கு வைஷு, இதையெல்லாம் யார் பண்றாங்கன்னு உனக்கு யார் மேலயாச்சும் சந்தேகம் இருக்கா?" என்று அவள் கேட்க, சில கணங்கள் யோசித்த வைஷ்ணவி இல்லையெனும் விதமாக தலையசைத்தாள்.



"சரி, நீ எதுக்கும் கவலைப்படாத! கண்டிப்பா போலீஸ் கண்டுபிடிச்சுருவாங்க. உனக்கும் யார் மேலயாச்சும் சந்தேகம் வந்துச்சுன்னா உடனே எனக்கு இன்ஃபார்ம் பண்ணு" என்று ஆராதியா சொல்ல, லலிதாவுக்குதான் இதையெல்லாம் கேட்க அடி வயிறு கலங்கியது.



அன்றைய நாள் கழிந்து அடுத்தநாளும் விடிய, காலையிலயே கமிஷ்னர் ஆஃபீஸில் மேலதிகாரி விக்ரமனுக்கு முன் நின்றிருந்தான் ப்ரணவ்.



"இந்த கேஸ் பத்தி ஏதாச்சும் தெரிஞ்சதா மிஸ்டர் ப்ரணவ், இரண்டு கொலைகள் தொடர்ந்து ஒரே மாதிரி நடந்திருக்கு. அந்த பொண்ணு வேற பெரிய இடம் போல, கொலை பண்ணவன சீக்கிரம் கண்டுபிடிக்க சொல்லி ப்ரஷர் பண்றாங்க. அந்த கரணோட கொலை நடந்து பத்து நாளைக்கு மேலாகுது. ஒரு சின்ன க்ளூ கூடவா இன்னும் கண்டுபிடிக்கல, அப்போ நம்ம டிபார்ட்மென்ட் ஆளுங்க என்னதான் பண்ணிட்டு இருக்காங்க?" என்று விக்ரமன் கத்திக்கொண்டே போக, ப்ரணவிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.



"சார், டிபார்ட்மென்ட்ல கொலையாளி யாருன்னு தேடிட்டுதான் இருக்கோம், நிஜமாவே இந்த கேஸ்ல ஒரு சின்ன க்ளூ கூட கிடைக்கல. கரண் கொலையப்போ கிடைச்ச ஃபாரன்சீக் ரிப்போர்ட் என்ட் ஆட்டோப்ஸி ரிப்போர்ட் எதை வச்சும் எதுவும் பண்ண முடியல. சின்னதா ஒரு தடையம் கிடைச்சா கூட அதை வச்சு கொலையாளிய நெருங்கலாம். ஆனா..." என்று அவன் நிறுத்தி ஒரு பெருமூச்சை இழுத்துவிட, சலிப்பாக இரு பக்கமும் தலையாட்டினார் அவர்.



"லுக் மிஸ்டர் ப்ரணவ், மக்கள்கிட்டயும் மீடியாகாரங்க கிட்டயும் இதை எல்லாம் காரணமா சொல்ல முடியாது. இது ஒன்னும் உங்களோட ஃபர்ஸ்ட் கேஸ் கிடையாது" என்று விக்ரமன் கறாராகப் பேச, "ஐ நோ சார், இந்த கேஸ்ல இருக்குற ஒரே ஒற்றுமை மொதல்ல இறந்த கரணும் இப்போ இறந்திருக்குற பொண்ணும் ஃப்ரென்ட்ஸ்ஸுன்னு" என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டுப் பேசினார் அவர்.



"இதுவே பெரிய க்ளூதான். இதை வச்சே அவங்களுக்கு யாராச்சும் எதிரிங்க இருக்காங்களான்னு தேடி கண்டுபிடிங்க. அவங்கள விசாரிச்சா தெரிஞ்சிர போகுது. க்ளோஸ் திஸ் ஃபைல் ஆஸ் சூன் ஆஸ் பாஸிபள், கொட் இட்!" என்று விக்ரமன் முடிவாக சொல்ல, மரியாதை நிமித்தமாக செல்யூட்டை அடித்துவிட்டு வெளியில் வந்த ப்ரணவிற்கு அத்தனை குழப்பமாக இருந்தது.



இவன் வெளியே வர அங்கு கமிஷ்னர் ஆஃபீஸுக்கு முன் நின்றிருந்தாள் ஆராதியா. அவளைப் பார்த்ததும் தன் காரை விழிகளால் காட்டி விட்டு ப்ரணவ் அவளைக் கடந்து சென்று காரில் ஏறிக்கொள்ள, அதைப் புரிந்துக்கொண்டவள் அவன் பின்னே சென்று காரில் ஏறிக்கொண்டாள்.



"தியா, உன்னைதான் இந்த மாதிரி வராதன்னு சொன்னேன்ல, டிபார்ட்மென்ட்ல யாராச்சும் பார்த்தாங்கன்னா என் வேலையும் சேர்ந்து போயிரும்" என்று அவன் சிறு கோபத்தோடு பேச, "அய்யோ ப்ரணவ், இந்த கேஸ்ல ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லதான் வந்தேன். இறந்து போன கரணும் அனிதாவும் ஃப்ரென்ட்ஸ்தான்" என்று அவள் சொல்ல, அவனோ ஆராதியாவை மேலிருந்து கீழ் ஒரு பார்வைப் பார்த்தான்.



"ஜெர்னலிஸ்ட்டான நீயே கண்டுபிடிக்குறப்போ போலீஸ் நாங்க இந்த சின்ன விஷயத்தை கண்டுபிடிக்காமலா இருந்திருப்போம்? இதுக்கப்பறம் இவங்க படிச்ச காலேஜ்ல விசாரிக்குறதுலதான் இருக்கு" என்று ப்ரணவ் அலைப்பேசியை நோண்டியவாறு சொல்ல, "அவங்க இரண்டு பேருமே என் தங்கச்சி வைஷ்ணவி கூட படிச்சவங்க" என்று ஆராதியா சொன்னதும் பட்டென்று நிமிர்ந்துப் பார்த்தான் அவன்.



"வாட்! என்ன சொல்லுற, அப்போ உன் சிஸ்டர இன்வெஸ்டிகேட் பண்ணாலே மே பீ சில விஷயங்கள தெரிஞ்சிக்கலாம் தியா" என்று அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு பக்கென்று இருக்க, "நோ.. நோ ப்ரணவ், வைஷ்ணவிய இதுல இன்வோல்வ் பண்ண எனக்கு சுத்தமா இஷ்டமில்ல" என்று சிறு தயக்கத்தோடு சொன்னாள் அவள்.



அதில் சில கணங்கள் யோசித்தவன், "அப்போ இஃப் யூ டோன்ட் மைன்ட், நான் பர்சனல்லா வீட்டுக்கு வந்து வைஷ்ணவிகிட்ட பேசுறேன் தியா. கண்டிப்பா உன் சிஸ்டர இதுல இன்வோல்வ் பண்ண மாட்டேன். ட்ரஸ்ட் மீ!" என்று உறுதியாக சொல்ல, யோசனையோடு எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தாள் அவள்.



அதன் பின் ப்ரணவே ஆராதியா சொன்ன கட்டிடத்திற்கு முன் வண்டியை நிறுத்த, யுகனின் ஃப்ளாட்டுக்கு சென்றவள் அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருக்க, கதவைத் திறந்தான் யுகன்.



ஆராதியாவைப் பார்த்ததும் அவனுடைய முகமோ பேயறைந்தது போலாக, "வா.. வா தியா, என்ன இந்த பக்கம்?" என்று சில கணங்களில் முகபாவனையை மாற்றி வராத புன்னகையை வரவழைத்துப் பேச, அவனின் முகமாற்றத்தை சரியாக கண்டுகொண்டாள் ஆராதியா.



"என்னாச்சு அண்ணா, ஏதாச்சும் பிரச்சனையா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" என்று அவள் புரியாமல் கேட்க, "அது... அது ஒன்னு இல்லம்மா. நீ என்ன இங்க வந்திருக்க? ஐ திங் ஹரி அவனோட வீட்டுல இருக்கானா இருக்கும்" என்று யுகன் பதற்றமாகப் பேசியவாறு கதவை மெல்ல சாத்தப் போக, ஆராதியாவுக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்று மட்டும் தோன்றியது.



"ஓ... சரி அண்ணா, அப்போ நான் வரேன்" என்று விழிகளில் சந்தேகத்தோடு அவனை ஒரு பார்வைப் பார்த்தவள் அதற்கு மேல் அங்கு நிற்காமல் அங்கிருந்து வெளியேறி ஹர்ஷத்திற்கு அழைத்தாள்.



அவனோ திரையைப் பார்த்துவிட்டு தன்னை சுற்றி நின்றிருந்தவர்களைதான் ஒரு பார்வைப் பார்த்தான்.



அதேநேரம் ஹர்ஷத்துடைய வீட்டில் அவனை சுற்றி அவனுடைய மொத்த குடும்பமும் ராகுலின் நெருங்கிய நண்பரின் குடும்பமும் அமர்ந்திருக்க, எரிச்சலோடு அமர்ந்திருந்தவனுக்கு தன்னவளுடைய அழைப்பைக் கூட ஏற்க முடியவில்லை.



"ஹர்ஷா, மீட் மிஸ்டர் வரதராஜன், இவங்களோட பொண்ணு அமெரிக்காவுல எம்பீஏ முடிச்சுட்டு இப்போ அவங்களோட கம்பனிய நடத்திட்டு இருக்கா. ஷீ இஸ் சோ பிஸி, அதான் வர முடியல. அவ உன்னை க்ளப்ல எங்கேயோ பார்த்திருக்கா போல, ரொம்ப பிடிச்சிருக்காம்" என்று கடைசி வசனத்தை மஞ்சுளா ஹர்ஷத்தின் காதில் கிசுகிசுக்க, அவனோ தன் தாயை முறைத்துப் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டான்.



"என்ன மிஸ்டர் ஹர்ஷத், எதுவுமே பேச மாட்டேங்குறீங்க. ஒருவேள அதிகமா பேச மாட்டீங்களோ?" என்று வரதராஜன் கேட்க, "அப்படியெல்லாம் இல்லை அங்கிள். ஹர்ஷா அண்ணா ரொம்ப நல்லாவே பேசுவாரு. நீங்க வேற மாப்பிள்ளை பார்க்க வந்திருக்கீங்கல்ல. அதான் வெட்கப்படுறாரு" என்று அடக்கப்பட்ட சிரிப்போடு அபிமன்யு சொல்ல, தன் தம்பியை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்தான் ஹர்ஷத்.



ராகுலுக்கும் மஞ்சுளாவுக்கும் எப்படியாவது தங்களின் அந்தஸ்த்துக்கு ஏற்ப வரனை பேசி முடித்தால் போதும் என்றிருக்க, ஆடவனுக்கு தான் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.



ஆராதியாவும் தொடர்ந்து அழைத்துக்கொண்டிருக்க, ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் அழைப்பையேற்று, "ஆரு, இருக்குற இடத்தை வாட்ஸ்அப்ல அனுப்பி விடு. பத்தே நிமிஷத்துல அங்க இருப்பேன்" என்றுவிட்டு ஹர்ஷத் அழைப்பைத் துண்டிக்க, வரதராஜனோ புரியாமல் பார்த்தார் என்றால், ராகுலோ தன் மகனை தீப்பார்வைப் பார்த்தார்.



"ஐ ஹேவ் டூ கோ, நான் உங்கள அப்பறமா மீட் பண்றேன் அங்கிள். உங்க பொண்ணையும்தான்" என்றுவிட்டு அவன் அங்கிருந்து நகர எத்தனிக்க, "ஹர்ஷா, நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல" என்றார் மஞ்சுளா கோபமாக.



"நீங்க பண்றதை விட ஒன்னும் கிடையாது" என்று பதிலுக்கு பற்களைக் கடித்தவன், அபிமன்யுவின் கார் சாவியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி, சொன்னது போல் பத்தே நிமிடங்களில் ஆராதியாவின் முன் வண்டியை நிறுத்தியிருந்தான்.



"எவ்வளவு நேரம் இங்கேயே வெயிட் பண்றது, ஏன் இவ்வளவு நேரம்?" என்று திட்டிக்கொண்டே ஆராதியா காரில் ஏறிக்கொள்ள, "ஏன்னு தெரிஞ்சுக்கணுமா, என்னை மாப்பிள்ளை பார்க்க வந்திருந்தாங்க. அப்பா ஃப்ரென்டோட பொண்ணாம், பிஸ்னஸ் பண்றாளாம். பிடிச்சிருக்காம் கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்னு கேட்டாங்க" என்று இறுகிய குரலில் சொல்லி முடித்தான்.



அதைக் கேட்டவளுக்கு தலையில் பெரிய இடியை இறக்கியது போல இருக்க, தன்னவனை அதிர்ந்துப் பார்த்தாள்.



"அதுக்கு நீ என்ன சொன்ன?" என்று அதே அதிர்ச்சி குரலில் ஆராதியா கேட்க, அவளை நெருங்கியவன் அவள் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்து, "என் வாழ்க்கையில ஒரு பொண்ணு இருக்கா, கூடிய சீக்கிரம் அவள கழட்டி விட்டுடுவேன், அதுக்கப்பறம் வச்சுக்கலாம்னு சொன்னேன்" என்று தீவிர முகபாவனையோடு சொன்னான் ஹர்ஷத்.



அவளோ விழி பிதுங்கி விடுமளவிற்கு மேலும் திகைத்துப் போய் பார்க்க, அவளுடைய பாவனையில் பக்கென்று சிரித்துவிட்டான் ஆடவன்.



"என்ன பேபி பயந்துட்டியா, சும்மா லுல்லுல்லாய்க்கு..." என்று ஹர்ஷத் சொல்லி ஒற்றைக் கண்ணை சிமிட்ட, புருவத்தை தூக்கி அவனை முறைத்துப் பார்த்த ஆராதியா, கோபமாக காரிலிருந்து இறங்கப் போனாள்.



"ஏய் ஆரு, சாரிடீ சும்மா விளையாடினேன். பொசுக்கு பொசுக்குன்னு கோபப்பட்டுக்கிட்டு..." என்று அவள் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்த ஹர்ஷத், "அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டேன், என்னை மீறி அவங்களால எதுவுமே பண்ண முடியாது" என்று அழுத்தமாக சொல்ல, திடீரென ஏதோ ஒரு யோசனைக்குத் தாவினாள் அவள்.



"அது... உங்க வீட்டுல என்னை சுத்தமா பிடிக்கல. நான் வேற உங்க ஸ்டேட்டஸுக்கு ஏத்தவ கிடையாது. கடைசி வரைக்கும் இப்படியே இருந்துச்சுன்னா என்ன பண்றது ஹர்ஷா?" என்று ஆராதியா அதே யோசனையோடுக் கேட்க, "உன் அம்மாவுக்கு கூடத்தான் என்னை பிடிக்கல. இரண்டு ஃபேமிலியும் ஒத்துக்கலன்னா வேற என்ன பண்றது, அலைபாயுதே மாதவன் ஷாலினி மாதிரி கோயில்ல வச்சு தாலி கட்டிக்க வேண்டியதுதான்" என்றான் ஹர்ஷத் சாதாரணமாக.



ஆராதியாவோ மனதில் சிறு பயத்தோடு பார்த்துக்கொண்டிருக்க, அவள் கன்னத்தை தன் இரு கரங்களால் தாங்கிக்கொண்டவனோ அவளுடைய நெற்றியில் தன்னிதழை பதித்துவிட்டு விலகி அவள் முகத்தை காதல் பொங்க பார்த்தான்.



"உன்னை எப்போவும் விட்டுர மாட்டேன் ஆரு, ட்ரஸ்ட் மீ! எனக்கு நீ வேணும், உன்னை ரொம்ப ரொம்ப காதலிக்கிறேன். எனக்கு ஒரு நல்ல ஜாப் கிடைக்கட்டும், சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று வார்த்தைகளில் நிதானத்தோடு சொல்ல, அவன் விழிகளையே பார்த்துக்கொண்டிருந்தவள் அவனே எதிர்பார்க்காது அவனின் சட்டைக் காலரைப் பிடித்திழுத்து அவனிதழில் அழுந்த முத்தமிட்டாள்.



இந்த ஐந்து வருடங்களில் ஆராதியா அவளாகவே முத்தம் கொடுப்பதெல்லாம் அரிதுதான். இன்று அந்த பாக்கியம் இந்த ஆடவனுக்கு கிடைத்திருக்க, அவளிடையில் கைக்கொடுத்து தன்னோடு நெருக்கிக்கொண்டு விழிகளை மூடி அதை அனுபவித்தான் அவன்.



அவளும் தன்னவனின் பின்னந்தலை முடியை பிடிமானத்திற்குப் பற்றிக்கொண்டு முத்தமிட்டவள் மெல்ல அவனிதழிலிருந்து தன்னிதழை பிரிக்க, இப்போது தன்னவளின் இதழை தன்வசமாக்கிக்கொண்டான் ஆடவன்.



அவளிதழை சுவைத்தவனுடைய இதழ்கள் மெல்ல அவளுடைய கழுத்திற்கு தாவ, அவனுடைய மீசை முடி செய்யும் குறுகுறுப்பில் ஆராதியா நெளிய, இடையிலிருந்த அவனுடைய கரங்களிலும் அழுத்தம் கூடியது.



"ஹர்.. ஹர்ஷா என்ன பண்ற, விடு என்னை!" என்று அவள் கூச்சத்தில் நெளிந்தவாறு அவனிடமிருந்து விலகப் பார்க்க, அதில் சிரித்த ஹர்ஷா அவளின் கழுத்தில் தன் சிறு சிறு முத்தங்களை பதித்துக்கொண்டே போனான்.



ஆராதியாவுக்கு வெட்கத்தில் முகம் குங்குமப்பூவாய் சிவந்திருக்க, அவனுடைய முத்தம் கொடுக்கும் இன்பத்தில் மூழ்கியிருந்தவளுக்கு அப்போதுதான் அந்த ஒரு விடயம் மூளைக்குள் உதித்தது.



"ஓ ஷீட்!" என்று பதறிக்கொண்டு அவள் ஹர்ஷத்திடமிருந்து விலகியமர, மாயவலை அறுபட்ட எரிச்சலோடு தன்னவளைப் பார்த்தவன், "என்னாச்சுடீ?" என்று கேட்டான் அதே எரிச்சலோடு.



"இல்லை ஹர்ஷா, அது... செகன்ட் மர்டர் நடந்துச்சுல்ல! அந்த இடத்துக்கு பக்கத்துல சிசிடீவி கேமரா இருக்கு. அதை செக் பண்ணா ஏதாச்சும் க்ளூ கிடைக்கலாம்ல!" என்று ஆராதியா சொல்ல, உள்ளுக்குள் கடுப்பாக இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு, "ஆமா, கிடைக்கலாம்" என்றான் அவன் வேண்டா வெறுப்பாக.



"இதை மொதல்ல வருண்கிட்ட சொல்லணும், நீ என்னை ஆஃபீஸ்ல ட்ரோப் பண்ணு ஹர்ஷா. நான் வருண் கூட போய் இதை பத்தி இன்வெஸ்டிகேட் பண்றேன்" என்று அவள் அலைப்பேசியில் வருணுக்கு அழைத்தவாறு சொல்ல, "எதுக்கு இப்போ வருண், உனக்கு விசாரிக்கணும் அவ்வளவுதானே! நானே வரேன், நாம போய் சிசிடீவி கேமராவ செக் பண்ணலாம்" என்று பதறிக்கொண்டு சொன்னான் ஹர்ஷத்.



அவனின் வார்த்தைகளில் தன்னவனை குறும்பாகப் பார்த்தவள் அவனின் உரிமை உணர்வில் சற்று கர்வமாகத்தான் உள்ளுக்குள் நினைத்துக்கொண்டாள்.



அதே புன்னகையோடு அவள் தலையாட்ட, அனிதாவின் உடல் கிடைத்த இடத்திற்கே வண்டியை விட்டான் ஹர்ஷா. அந்த இடத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்க, ஆராதியாவோ தன் நிறுவனத்தின் ஐடியை காட்டிவிட்டு அங்கிருக்கும் சிசிடீவி கேமராக்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்.



அவர்களின் துரதிஷ்டமோ என்னவோ அந்த இடத்தை சுற்றியிருந்த அரசாங்கத்தின் இரண்டு சிசிடீவி கேமராக்களும் செயலற்று கிடக்க, அதை தெரிந்துக்கொண்டவளுக்கு அத்தனை எரிச்சலாக இருந்தது.



"ச்சே! அரசாங்கத்தோட எந்த பொருள்தான் ஒழுங்கா வர்க் பண்ணியிருக்கு? எப்போ பாரு ரிபேயர்லயேதான் இருக்கும், அரசாங்கத்தோட பொடுபோக்கு தனத்தால இன்னைக்கு நம்மளால கண்டுபிடிக்க முடியாம போயிருச்சு" என்று ஆராதியா எரிச்சலாக சொல்ல, ஹர்ஷத்தோ சுற்றி விழிகளை சுழலவிட்டுப் பார்த்தான்.



சரியாக அவனுடைய விழிகளில் சிக்கினான் அந்த ஒருவன்.



"அபி..." என்று தன் சகோதரனைக் கண்டதும் முணுமுணுத்தவன், அவனருகே சென்று நிற்க, அலைப்பேசியில் பேசிவிட்டு திரும்பிய அபிமன்யுவோ அந்த இடத்தில் தன் அண்ணனை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.



"நீ இங்க என்ன பண்ற?" என்று ஹர்ஷத் புரியாமல் கேட்க, "இறந்து போனது என் ஃப்ரென்டு அண்ணா, அதான் என்னன்னு விசாரிக்கலாம்னு வந்தேன்" என்றான் அபிமன்யு சாதாரணமாக.



"அப்போ அபி, வைஷ்ணவியும் உன் ஃப்ரென்ட்தானா?" என்று ஆராதியா ஆச்சரியக் குரலில் கேட்க, ஒருகணம் அவளை அமைதியாகப் பார்த்தவன் பின் ஆமென தலையசைக்க, "ஓ..." என்றதோடு நிறுத்திக்கொண்டாள் அவள்.



ஹர்ஷத்தும் அபியிடம் இந்த கொலையைப் பற்றி பேச ஆரம்பிக்க, இவர்கள் பேசிக்கொள்வதை மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தன அந்த விழிகள்.



**************

மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க Friends... 😍😍
 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 05







"கரண் என்ட் அனிதா இவங்கள உனக்கு எத்தனை வருஷமா தெரியும் வைஷ்ணவி?" என்று ப்ரணவ் கேட்க, "ஒரு அஞ்சு வருஷமா தெரியும்" என்று சில கணங்கள் யோசித்து விட்டு பதில் சொன்னாள் வைஷ்ணவி.



ஆராதியாவோ பக்கத்திலேயே அமர்ந்திருக்க, லலிதாவோ பதற்றமாக ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்தார். திடீரென போலீஸ் விசாரனை என்று ஆராதியா ப்ரணவ்வை வீட்டிற்கு அழைத்து வந்ததிலிருந்து அவருக்குள் தொற்றிக்கொண்ட பதற்றம்தான் அது.



"ரொம்ப க்ளோஸ் ஃப்ரென்ட்ஸ்ஸா, இல்லன்னா ஜஸ்ட் அவங்க கூட பழகியிருக்கியா?" என்று ப்ரணவ் கேட்டதும், "காலேஜ் படிக்கும் போது நான், அனிதா, ப்ரீத்தி, கரண், க்ரிஷ், வினய் என்ட் அபி எல்லாரும் நல்லா பழகியிருக்கோம். ஆனா இப்போ காலேஜ் முடிஞ்சு ஒரு வருஷம் ஆகுது, நான் அவங்க கூட இப்போ அவ்வளவா கான்டேக்ட்ல இல்லை" என்று தரையை வெறித்தவாறு சொன்னாள் அவள்.



"அது ஏன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்று அவன் கேட்க, "அது அவங்க..." என்று யோசித்தவள் ஏதோ சொல்ல வாயெடுத்து பின் அதை விழுங்கியவாறு, "அது அவங்க க்ளப் பார்ட்டீன்னு அதிகமா போவாங்க, எனக்கு அதெல்லாம் அவ்வளவா பழக்கம் இல்லை. அதனால அவங்க கூட பழகுறது கம்மியாகிட்டு" என்று தெரியாதவாறு சமாளித்தாள்.



ஆராதியாவுக்கு தங்கை ஏதோ மறைப்பது நன்றாகவே புரிய, வைஷ்ணவியை கூரிய பார்வைப் பார்த்தான் ப்ரணவ்.



"அவங்களுக்கு எதிரிங்க யாராச்சும் இருந்திருக்காங்களா, உங்கள தவிர மத்த ஆறு பேருமே பெரிய இடத்து பசங்க வேற, கண்டிப்பா அவங்களுக்கு எதிரா யாராச்சும் இருந்திருக்கலாம். நல்லா ஞாபகப்படுத்தி சொல்லுங்க" என்று தன் சந்தேகத்தைக் கேட்க, ஆழமாக யோசித்தாள் அவள்.



"அப்படி இருக்காங்களா வைஷு?" என்று ஆராதியாவும் தன் பங்கிற்கு கேட்க, "அது... ஆமா காலேஜ் படிக்கும் போது எங்க கூட சீனியர் கேங் ஒன்னு அதிகமா பிரச்சனை பண்ணுவாங்க. போலீஸ் கேஸ் வரைக்கும் சண்டை போயிருக்கு. அவங்க காலேஜ் விட்டு போனதுக்கு அப்பறம் கூட ரோட்ல நாலஞ்சு தடவை சண்டை ஆகியிருக்கு. ஆனா... அவங்க கண்டிப்பா கொலை பண்ற அளவுக்கு போக மாட்டாங்க. ஐ அம் டேம்ன் ஷுவர்" என்றாள் வைஷ்ணவி உறுதியாக.



"அதை நாங்க பார்த்துக்குறோம்" என்றுவிட்டு எழுந்த ப்ரணவ், "தேங்க் யூ சோ மச் வைஷ்ணவி, எனக்கு காப்பரேட் பண்ணதுக்கு. அப்போ நான் வரேன் தியா" என்று அங்கிருந்து வெளியேற, பதற்றமாக கைகளைப் பிசைந்துக்கொண்டு அவனைப் பார்த்தார் லலிதா.



அவரைப் பார்த்தவனுக்கு அப்போதுதான் ஆராதியா சொன்னதற்கான அர்த்தம் புரிய, "டோன்ட் வொர்ரி ஆன்ட்டி, சின்ன இன்வெஸ்டிகேஷன்தான். வேற ஒன்னுமில்ல" என்று ஆறுதலாக சொல்லிவிட்டு வெளியேற, ஆராதியாவின் கரத்தைப் பற்றி நிறுத்தினாள் வைஷ்ணவி.



"ஆமா... அது யாரு? உன்னை கூட உரிமையா தியான்னு கூப்பிடுறாரு. உனக்கு ரொம்ப பழக்கமோ?" என்று அவள் கேட்க, "என்னோட க்ளோஸ் ஃப்ரென்ட் வைஷு, இங்கதான் இன்ஸ்பெக்ட்டரா இருக்கான். பேரு ப்ரணவ், இந்த கேஸ் பத்தின இன்வெஸ்டிகேஷன அவன்தான் பண்றான். ஏற்கனவே இரண்டு மர்டர் ஆகிட்டு, சீக்கிரமா கொலைகாரன கண்டுபிடிச்சே ஆகணும்" என்று தீவிர முகபாவனையோடு சொன்னாள் ஆராதியா.



"ஆமா அக்கா, இறந்து போனது என்னோட ஃப்ரென்ட்ஸ் அப்படிங்குறதையே என்னால ஏத்துக்க முடியல. ரொம்ப பயமா இருக்கு" என்று வைஷ்ணவி சிறு பதற்றத்தோடு சொல்ல, "நீ எதுக்கு பயப்படுற? அதெல்லாம் ஒன்னும் ஆகாது, சரி நான் ஆஃபீஸுக்கு கெளம்புறேன். அம்மாவுக்கு துணையா பத்திரமா இருந்துக்கோ!" என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறப் போன ஆராதியாவை மீண்டும் தடுத்தாள் மற்றவள்.



"ஆமா... ப்ரணவ் சாருக்கு கல்யாணம் ஆகிருச்சா என்ன?" என்று அவள் கேட்டு வைக்க, தன் தங்கையை மேலிருந்து கீழ் ஒரு பார்வைப் பார்த்தவள், "இல்லை, ஏன் நீ கட்டிக்க போறியா! உன் கேள்வியே சரியில்ல, இப்படியெல்லாம் போய் அவன்கிட்ட கேட்டு தொலைச்சிராத, சொல்லிட்டேன்" என்று எச்சரிக்கை செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.



ஏனோ வைஷ்ணவியின் இதழ்கள் குறும்பாக புன்னகைத்தன. அதேநேரம் இங்கு ஹர்ஷத்தோ யுகனின் அறையில் சிகரெட் புகையை ஊதித் தள்ளியவாறு ஜன்னல் வழியே வெளியே வெறித்துக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த யுகனின் அலைப்பேசி ஒலித்தது.



அலைப்பேசியை கையிலெடுத்து திரையைப் பார்த்தவன் அதில் தெரிந்த நந்தினியின் புகைப்படத்தை உற்றுப் பார்த்து, "ஓஹோ... இதுதான் உன் நந்துவா!" என்று ஆச்சரியக் குரலில் கேட்க, வேகமாக வந்து அவன் கையிலிருந்த அலைப்பேசியை பிடுங்கிக எடுத்தான் யுகன்



"எதுக்குடா ஏன் ஃபோன எடுத்த?" என்று அவன் கோபமாகக் கேட்க, "கால் வந்துச்சு எடுத்தேன், அதுக்கு ஏன்டா மூஞ்ச இப்படி வச்சுக்குற. பார்க்க முடியல நாராசமா இருக்கு" என்று அவனின் கோபத்தை எல்லாம் பொருட்படுத்தாது கேலி செய்தான் ஹர்ஷா.



ஆனால், எதுவும் பேசாமல் நகர்ந்தவனின் செயல் மற்றவனுக்கு வித்தியாசமாகத்தான் தெரிந்தது.



அதேநேரம் ஆராதியாவிடமிருந்து அழைப்பு வர, ஹர்ஷத்தோ யுகனையே பார்த்தவாறு அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.



"ஹெலோ ஹர்ஷா, இம்மீடியட்டா என் ஆஃபீஸுக்கு வா" என்று சொல்லிவிட்டு அவள் அழைப்பைத் துண்டிக்க, அடுத்தகணம் சிகரெட்டை தூக்கிப் போட்டு விட்டு வேகவேகமாகத் தயாராகியவன் ஸ்கை சேனல் நிறுவனத்திற்கு வண்டியை பறக்கவிட்டான்.



அவன் ஆஃபீஸ் வளாகத்துக்குள் வண்டியை நிறுத்த வருணோடு ஆஃபீஸ் வாசலிலேயே நின்றிருந்தாள் ஆராதியா.



"என்னாச்சு ஆரு?" என்று கேட்டுக்கொண்டே அவளருகே ஹர்ஷத் செல்ல, "இப்போ இவன எதுக்கு கூப்பிட்ட தியா? நம்ம வேலையில வெளியாளுங்கள கூப்பிட கூடாதுன்னு தெரியும்ல உனக்கு?" என்று கடுப்பாகக் கேட்டான் வருண்.



"அவ என்னை கூப்பிட்டதுல உனக்கு என்னடா பிரச்சனை?" என்று ஏற்கனவே இருக்கும் பழைய கோபத்தில் அவனை அடிப்பது போல் ஹர்ஷத் செல்ல, வருணும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அவனை அடிக்க வந்தான்.



"அய்யோ! இரண்டு பேரும் நிறுத்துறீங்களா?" என்று கத்திய ஆராதியா, "லுக் வருண், நம்ம ஜாப்ல இருக்குற ரூல்ஸ் எனக்கு நல்லாவே தெரியும். அதை நீ எனக்கு சொல்லி தர வேண்டிய அவசியம் இல்லை. ஹர்ஷாவோட ஹெல்ப் இப்போ நமக்கு தேவைப்படுது. சோ, ஐ நீட் ஹிம். உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு" என்று கறாராகச் சொன்னாள்.



அதில் ஹர்ஷத்தோடு வாயைப் பொத்தி நக்கலாக சிரிக்க, "ச்சே!" என்று எரிச்சலாக முணுமுணுத்தவன் அதற்குமேல் எதுவுமே பேசவில்லை.



"ஹர்ஷா, இறந்து போன அனிதாவோட உடல்ல இருந்து அந்த உடலுக்கு சம்பந்தமே இல்லாத டீஎன்ஏ சாம்பிள் எடுத்திருக்காங்க. அதை பத்தி விசாரிக்கணும், மோர்ச்சரியில இருக்குறது உன்னோட ஸ்கூல்மேட்தான். நீதான் எப்படியாச்சும் பேசி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண ஹெல்ப் பண்ணணும்" என்று அவள் சொல்ல, "ஓகே ஆரு, ஆனா இவன் வந்தா என்னால எதுவும் பண்ண முடியாது" என்று சிறுபிள்ளைப் போல் சொன்னான் ஹர்ஷத்.



"இங்க பாரு ஹர்ஷா, அவனுக்கு சொன்னதுதான் உனக்கும். வருண் என்னோட ஃப்ரென்ட், என்ட் என்னோட டீம். அவன் என் கூடத்தான் இருப்பான். அவன வரக்க கூடாதுன்னு நீ சொல்லவே முடியாது" என்று அவள் கட் என்ட் ரைட்டாக சொல்ல, இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டு கேலியாக இதழை வளைத்தவனைப் பார்க்க பற்றிக்கொண்டு வந்தது ஹர்ஷத்திற்கு.



அதன் பிறகு மூவரும் மோர்ச்சரிக்கு செல்ல, ஹர்ஷா மோர்ச்சரி வாசலில் வைத்தே ஒரு எண்ணிற்கு அழைத்துப் பேசினான்.



"ஹெலோ மைக்கேல், நான் வெளியிலதான் இருக்கேன். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்று ஹர்ஷா சொல்லி விட்டு அழைப்பைத் துண்டிக்க, அடுத்த சில நிமிடங்களில் வெளியில் வந்தான் ஹர்ஷாவின் நண்பனான மைக்கேல். மோர்ச்சரிக்கு பொறுப்பான டாக்டர்.



"என்னடா, என்னா விஷயமா என்னை பார்க்க வந்த?" என்று மைக்கேல் கேட்க, "அது மைக்கேல்... இது ஆராதியா, ஸ்கை சேனல் கம்பனியில ஜெர்னலிஸ்ட்டா இருக்கா. கரண் என்ட் அனிதா கொலை பத்தி இவங்களுக்கு சில விஷயங்கள் தெரியணும். அதான் உன்னை கான்டேக்ட் பண்ணேன். அவங்களுக்கு பாஸ்மாட்டம் பண்ணது நீதானே?" என்று கேட்டான் ஹர்ஷத்.



"ஆமாடா, நான் பார்த்ததுலயே ரொம்ப கொடூரமான ஒரு கொலை இதுதான். பாஸ்மாட்டம் பண்ணும் போது என்னாலயே முடியல. இரண்டு கொலையும் ஒரே பெட்டர்ன்ல பண்ணியிருக்காங்க" என்று அவன் சொல்ல, "இப்போ ரீசன்ட்டா அனிதாவோட உடம்புல வேற ஒருத்தங்களோட டீஏன்ஏ கிடைச்சிருக்குன்னு டிபார்ட்மென்ட்டால சொல்லியிருக்காங்க. அது உண்மை தானா?" என்று வேகமாகக் கேட்டாள் ஆராதியா.



"ஆமா, அது யாருடோதுன்னு இன்வெஸ்டிகேஷன் போயிக்கிட்டு இருக்கு. பட் ரொம்ப காம்ப்ளிகேடட்டான கேஸ்ஸா இருக்கு. கரணோட உடம்புல இருந்து எந்த தடையமும் கிடைக்கல. ரொம்ப ஜாக்கிரதையா கொலைகாரன் ஹேன்டில் பண்ணியிருந்தான். ஆனா... அனிதாவோட உடம்புல அவன் தெரியாம விட்ட டீஎன்ஏதான் இப்போ கிடைச்சிருக்குற ஒரே தடையம். பட் அது யாரோடதுன்னு கண்டுபிடிக்குறது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை" என்று மைக்கேல் சொல்ல, ஹர்ஷத்தும் ஆராதியாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.



"தேங்க் யூ சோ மச் மைக்கேல்" என்ற ஹர்ஷத் அங்கிருந்து நகர்ந்து வெளியில் வர, வருணோ அவனை நக்கலாகப் பார்த்தான்.



"தெரிஞ்ச விஷயமே கொஞ்சம் ப்ரீஃபா தெரிஞ்சிருக்கு அவ்வளவுதான். இதுக்காகவா இவ்வளவு தூரம் வந்தோம்" என்று அவன் கேலியாகக் கேட்க, ஹர்ஷத்தோ அவனை தீப்பார்வைப் பார்த்தவாறு ஒரு அடி முன்னே வைக்க, தன்னவனின் மார்பில் கை வைத்து தடுத்தாள் ஆராதியா.



"ஹர்ஷா ப்ளீஸ்!" என்று அவனிடம் சொன்னவள் வருணின் புறம் திரும்பி, "அவனால இதை பண்ண முடிஞ்சதுன்னா உன்னால எந்த யூஸும் இல்லை வருண். இதுக்கப்பறம் ஓவரா பேசினேன்னா ஃப்ரென்டுன்னு கூட பார்க்க மாட்டேன், உன் மேல நான் வச்சுருக்குற நல்ல எண்ணத்தை நீயே கெடுத்துக்காத!" என்று விட்டு ஹர்ஷத்தின் வண்டியை நோக்கி நடந்ததாள்.



அவனை நக்கலாகப் பார்த்துவிட்டு மற்றவன் தன் வண்டியை நோக்கிச் செல்ல, முகம் இறுக அவர்களை கொலை வெறியோடு பார்த்துக்கொண்டிருந்தான் வருண்.



ஹர்ஷத்தோ ஆராதியாவை அவளுடைய ஆஃபீஸுக்கு அழைத்து செல்லாமல் வேறொரு பாதையில் செல்ல, சிறிது நேரம் யோசனையில் இருந்தவள் அப்போதுதான் அவன் செல்லும் பாதையை கவனித்தாள்.



"ஹேய் என்ன பண்ற ஹர்ஷா, இது ஆஃபீஸ் போறதுக்கான வழி இல்லை. அந்த பக்கமா போகணும்" என்று ஆராதியா அவசரமாக சொல்ல, "அதெல்லாம் தெரியும், தெரிஞ்சேதான் உன்னை கூட்டிட்டு போறேன்" என்று அவன் சொன்னதும், இவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை.



"என்ன! விளையாடுறியா ஹர்ஷா, நான் ஆஃபீஸுக்கு போகணும், நீ என் வேலைக்கு உலை வைக்காம விட மாட்ட போல!" என்று பேசிக்கொண்டே சென்றவளின் வார்த்தைகள் அவன் நிறுத்திய இடத்தைப் பார்த்ததும் சட்டென நிற்க, விழிகள் இரண்டும் தெறித்து விடுமளவிற்கு விரிந்தன.



"இங்க என்னை எதுக்கு கூட்டிட்டு வந்த?" என்று ஆராதியா அதிர்ச்சி குறையாத குரலில் கேட்க, "ஃப்யூச்சர்ல எப்படியும் வர போற, அதான் ஒரு ட்ரயல் பார்க்கலாமேன்னு..." என்று ஒற்றைக் கண்ணை சிமிட்டிச் சொன்னவன், அவள் கரத்தைப் பற்றி உள்ளே அழைத்துச் செல்ல, சோஃபாவில் அமர்ந்திருந்த மஞ்சுளாவோ இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.



"ஹர்ஷா, என்ன இது? இதெல்லாம் தெரிஞ்சுதான் பண்றியா?" என்று அவர் கோபமாகக் கேட்க, ஆராதியாவுக்குதான் பயத்தில் வியர்க்க ஆரம்பித்துவிட்டது.



"அது... நான் வேணாம்னுதான் சொன்னேன், ஹர்ஷாதான்..." என்று ஆராதியா திக்கித்திணறி சொல்ல, அவளைக் குறுக்கிட்டு "உங்க வருங்கால மருமக மாம், உங்களால ஜீரணிக்க முடியலன்னா ஐ டோன்ட் கெயார் அபௌட் இட்" என்றான் அவன் அலட்சியமாக.



"என்ன மருமகளா! உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருக்காடா? நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி உன் அப்பா உனக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்காரு, ஆனா நீ..." என்று அவர் ஆராதியாவை மேலிருந்து கீழ் பார்த்து முகத்தை சுளிக்க, அவளோ அவமானத்தில் விழிகள் கலங்க தலையை குனிந்துக்கொண்டாள்.



"நீங்களும் அப்பாவும் இந்த வீட்டுக்கு மருமகள தேடல, உங்களுக்கு சொத்து சேர்க்குற பிஸ்னஸ் பார்ட்னர கொண்டு வந்திருக்கீங்க. உங்க இஷ்டத்துக்கு எல்லாம் ஆட நான் ஒன்னும் பாப்பா கிடையாது, ஐ லவ் ஹெர் தட்ஸ் இட். இதுக்கப்பறம் ஆருவ ஏதாச்சும் சொன்னீங்கன்னா அவ்வளவுதான்" என்று நிதானமாகவும் அதேசமயம் அழுத்தமாகவும் ஹர்ஷத் சொல்லி முடிக்க, மஞ்சுளாவோ ஸ்தம்பித்துப் போய் நின்றார் என்றால், தன்னவனை காதலோடு பார்த்திருந்தாள் ஆராதியா.



ஹர்ஷத்தும் தன்னவளின் கரத்தை இறுகப் பற்றி தனதறைக்கு அழைத்துச் செல்ல, அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றவள், அவன் அறைக்குள் அழைத்து வந்து கதவை சாத்தியதும்தான் நடப்புக்கு வந்தாள்.



"ஹர்ஷா, என்ன பண்ற?" என்று அவள் பதறிக்கொண்டு கதவைத் திறக்கப் போக, அவள் கரத்தைப் பற்றியிழுத்து பின்னாலிருந்து அணைத்துக்கொண்டவன் அவனின் அறையிலிருந்த பெரிய ஆளுயர கண்ணாடியின் முன் நிற்க, தன்னவனை அமைதியாகப் பார்த்தாள் அவள்.



ஹர்ஷத்தோ அவளிடையை தன் வலிய கரங்களால் வளைத்து அவளின் பின் கழுத்தில் அழுந்த முத்தமிட்டவன், "ஏதோ யோசிக்குறன்னு தெரியுது, என்ன யோசிக்குற?" என்று தன்னிதழ் அவளின் காது மடலில் உரசக் கேட்டான்.



"அதான் இங்க யாருக்கும் பிடிக்கலல்ல, அப்பறம் ஏன் ஹர்ஷா?" என்று கேட்டவளின் குரல் தழுதழுத்தது.



"அதுக்காக அப்படியே விட முடியுமா, ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுர மாட்டேன்" என்று ஹர்ஷா அழுத்தமாக சொல்லி அவள் கழுத்தில் முகத்தைப் புதைக்க, மென்மையாகப் புன்னகைத்தவளுக்கு அந்த வார்த்தைகள் அத்தனை ஆறுதலைக் கொடுத்தது.



மெல்ல அவனின் கரங்கள் அத்து மீறத் தொடங்க, இதழ்களோ அவள் கழுத்தில் ஊர்வலத்தை தொடங்கின.



"ஹர்ஷா வேணாம்..." என்று கூச்சத்தில் நெளிந்தவளின் ஹஸ்கி குரலில் இவனுக்கோ போதை தலைக்கேறியது.



அவனின் கை வளைவுக்குள் இருந்தவாறே அவனை நோக்கி அவள் திரும்ப, அடுத்தகணம் அவளிதழைக் கவ்விக் கொண்டவன் மீண்டும் மீண்டும் அவளிதழையே நாட, இருவரும் நடப்பை மறந்து மாய உலகில் சஞ்சரித்தனர்.



அதேநேரம், "நெக்ஸ்ட் ப்ரீத்தி..." என்ற குறுஞ்செய்தி அந்த ஒரு அலைப்பேசிக்கு வர, திரையைப் பார்த்த அந்த முகமோ கோபத்தில் சிவந்து இறுகியது.



***************
 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 06









அடுத்த இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், ப்ரணவும் இரண்டு போலீஸ் அதிகாரிகளும் சென்னையின் பிரபலமான அந்த ஆஃபீஸில் இரண்டு பேருக்கு முன்னே கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க, கைகளைப் பிசைந்தவாறு பதற்றமாக நின்றிருந்தனர் அந்த இரு ஆடவர்களும்,


"யாதவ்...ரிஷி... ரைட்?" என்று இருவரையும் சுட்டிக்காட்டி அவன் கேட்க, எச்சிலை விழுங்கியவாறு தலையசைத்த ரிஷி, "இப்போ எதுக்கு சார் ஆஃபீஸ்ல வந்து விசாரணை பண்றீங்க, நாங்க என்ன பண்ணோம்?" என்று சிறு பயத்தோடு கேட்க, அவர்களை கூர்மையாகப் பார்த்தான் ப்ரணவ்.


"நீங்க நாலு பேர் ஒன்னா இருப்பீங்கல்ல, மத்த இரண்டு பேர் எங்க வேலை பார்க்குறாங்க?" என்று அவர்கள் கேட்டதற்கு பதில் கொடுக்காமல் தன் சந்தேகத்தைக் கேட்க, "அது... க்ரிஷ்ணா ஃபாரின் போயிட்டான். மதுவுக்கு கல்யாணம் ஆகிருச்சு. அவ இப்போ ஊட்டில இருக்கா. எங்க இரண்டு பேருக்கும் இங்க வேலை கிடைக்க இங்கேயே இருந்துட்டோம்" என்றான் யாதவ்.


"சார், எதுவா இருந்தாலும் வெளியில பேசிக்கலாம். இப்படி போலீஸ் வந்து எங்கள விசாரணை பண்றாங்கன்னு மேனேஜ்மென்ட்டுக்கு தெரிஞ்சா பிரச்சனையாகும்" என்று ரிஷி தைரியத்தை வரவழைத்து சொல்ல, "இதை கொலை பண்ண முன்னாடி யோசிச்சிருக்கணும்" என்று ப்ரணவ் சொன்னதும் அவர்களோ அதிர்ந்து விழித்தனர்.


"என்ன சார் பேசுறீங்க, நாங்க கொலை பண்ணோமா? அதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?" என்று ரிஷி பொங்கி எழ, கரண் மற்றும் அனிதாவின் புகைப்படங்களை மேசையில் தூக்கிப் போட்டவன், "இவங்க உன்னோட காலேஜ்தானே, ஏற்கனவே இவங்க கூட நீங்க ரொம்ப பிரச்சனை பண்ணியிருக்கீங்க ரைட்? இப்போ இவங்கள ரொம்ப கொடூரமா கொலை பண்ணியிருக்காங்க. ஏன் இவங்க மேல இருக்குற கோபத்துல நீங்க பண்ணியிருக்க கூடாது?" என்று கேட்டான் நாடியை நீவி விட்டபடி.


ப்ரணவின் வார்த்தைகளில் அந்த இரு ஆடவர்களுக்கும் ஒருகணம் தலையே சுற்றிவிட்டது.


"என்ன.. என்ன பேசுறீங்க சார், அவங்கள எங்களுக்கு பிடிக்காதுதான். ஆனா கொலை பண்ற அளவுக்கு கிடையாது. க்ரிஷ்ணா ஒரு வருஷத்துக்கு முன்னாடியே ஃபாரின் போயிட்டான். மதுவும்தான். இப்போ ஆறு மாசமாதான் எங்களுக்கு இந்த கம்பனியில வேலை கிடைச்சு லைஃப் நல்லா போயிக்கிட்டு இருக்கு. ஆனா நீங்க ஏதேதோ சொல்லி..." என்று யாதவ் மூச்சு வாங்கியவாறு பேச, மேசையிலிருந்த தண்ணீர் க்ளாஸை அவனிடம் நீட்டினான் ப்ரணவ்.


"ரிலாக்ஸ்! இப்போ என்கிட்ட ஆதாரம் எதுவும் இல்லை, ஆனா இன்வெஸ்டிகேஷன் இன்னும் முடியல. இந்த விசாரனை முடியுற வரைக்கும் நீங்க இந்த ஊரை விட்டு போகவே கூடாது. சந்தேகப்படுற மாதிரி உங்களுக்கு சம்பந்தமான ஆதாரம் என் கைக்கு கிடைச்சதுன்னா, நோ வன் வில் சேவ் யூ, கொட் இட்!" என்று எச்சரிக்கை குரலில் சொல்லி விட்டு அவன் அங்கிருந்து வெளியேற, "சார், என்ன நீங்க. சும்மா விட்டுட்டீங்க. ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விசாரிக்குற விதத்துல விசாரிச்சா சொல்ல போறாங்க" என்றான் அவனின் பின்னால் வந்த போலீஸ் அதிகாரி ஒருவன்.


"நான் ஜஸ்ட் அவங்கள வார்ன் பண்ணேன், அவ்வளவுதான். பட், அந்த இரண்டு பேர் இந்த கொலைகள பண்ணல. ஐ அம் டேம்ன் ஷுவர்!" என்று ப்ரணவ் உறுதியாக சொல்ல, அந்த அதிகாரியோ இவனை கேள்வியாகப் பார்த்தான்.


"அவனுங்க கண்ணுல தப்பு பண்ணவே இல்லைங்குற கான்ஃபிடன்ட் தெரிஞ்சது, கூடவே வேலை பறி போயிடுமோன்னு ஒரு பயம் தெரிஞ்சது. அதை வச்சுதான் சொல்றேன்" என்ற ப்ரணவ் கூலிங் க்ளாஸை மாட்டியவாறு தன் புல்லட்டில் ஏறியமர, திடீரென அவன் முன்னே மூச்சு வாங்கியவாறு ஓடி வந்து நின்றாள் வைஷ்ணவி.


"என்ன ப்ரணவ் சார், இந்த பக்கம்? கேஸ் விஷயமா வந்திருக்கீங்களா?" என்று அவள் ஏதோ பல வருடமாக பழகியவர்கள் போல் பேச, அவனோ ஒருகணம் அதிர்ந்தவன் பின்னால் பார்த்துவிட்டு, "என்கிட்டயா பேசுற?" என்று கேட்டான் சந்தேகமாக.


"உங்க முன்னாடிதானே இருக்கேன், அப்போ நான் யார் கூட பேச போறேன்! உங்களை எல்லாம் எப்படி டிபார்ட்மென்ட்ல சேர்த்தாங்க?" என்று வைஷ்ணவி கேலி செய்ய, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு அவளை முறைத்துப் பார்த்தவன், "நேத்து நான் பேசும் போது வார்த்தையே வரல, இப்போ என்னாச்சு?" என்று கேட்டான் ஒற்றைப் புருவத்தை தூக்கிய தோரணையில்.


அவளோ குறும்பாகப் புன்னகைத்தவள், "அது... காவல்துறை உங்கள் நண்பன்னு சொல்வீங்கல்ல, அதான்..." என்று சொல்ல, பைக்கை ஸ்டார்ட் செய்தவாறு, "லுக், எனக்கு இதெல்லாம் ஒத்து வராது. இனிமே இந்த மாதிரி முன்னாடி வராத, சொல்லிட்டேன்" என்று கண்டிப்பு குரலில் சொல்லிவிட்டு அவன் பாட்டிற்கு சென்றுவிட, போகும் அவனையே புன்னகையோடு பார்த்திருந்தாள் வைஷ்ணவி.


"டேய் யுகா, இன்னைக்கு ராத்திரி பப்புக்கு போறேன், வர்றீயா என்ன?" என்று யுகனின் பெர்ஃபியூமை ஏதோ ரூம் ஸ்ப்ரே அடிப்பது போல் பயன்படுத்திக்கொண்டு ஹர்ஷத் கேட்க, "இல்லை ஹர்ஷா, நீ போயிட்டு வா..." என்ற யுகனோ தீவிரமாக எதையோ யோசித்தவாறு ஜன்னல் வழியே வெறித்துக்கொண்டிருந்தான்.


அவனை குழப்பமாகப் பார்த்த மற்றவன், "என்னாச்சுடா, உன் நந்து உன்னை ப்ரேக்கப் பண்ணிட்டாளா என்ன?" என்று அவனை வெறுப்பேற்றவே கேட்க, வெடுக்கென்று திரும்பி தன் தோழனை முறைத்துப் பார்த்தவனோ எதுவும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொள்ள, நாடியை தட்டி யோசித்தான் ஹர்ஷத்.


"ஒருவேள... நந்து பொண்ணே இல்லை ரைட்டா?" என்று அவன் வேண்டும் என்றே மீண்டும் அவனை வெறுப்பேற்ற, யுகன் பதில் சொல்வதற்கு முன் அவனைக் குறுக்கிட்டு வாசலில் ஒலித்தது ஒரு குரல்.


இருவரும் ஒருசேர திரும்பிப் பார்க்க, "அதுல டவுட்டே வேணா அண்ணா, நான் அக்மார்க் பொண்ணுதான். வேணும்னா யுகன்கிட்ட கேட்டுக்கோங்க..." என்று வாசலில் நின்றிருந்த நந்தினி சொல்லி விட்டு ஒற்றைக் கண்ணை கேலியாக சிமிட்ட, ஹர்ஷத்தோ ஏற்கனவே யுகனின் அலைப்பேசியில் நந்தினியை பார்த்த ஞாபகத்தில், "யூ நந்தினி ரைட்?" என்று கேட்டான் அவசரமாக.


யுகனோ தன்னவளை இங்கு எதிர்பார்க்காததில் அதிர்ந்துப் போய் நிற்க, "ஆமா அண்ணா, யுகனோட நந்தினியேதான்" என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தவள், "ஏன்டா என் கால மூனு நாளா அட்டென்ட் பண்ண மாட்டேங்குற, என்னதான் பிரச்சனை உனக்கு யுகா?" என்று விழிகள் கலங்கக் கேட்க, யுகனோ எதுவும் பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டான்.


ஹர்ஷத்தோ அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறப் போக, சரியாக தன்னவனை தேடி அங்கு வந்தாள் ஆராதியா.


யுகனின் ஃப்ளாட்டில் வேறொரு பெண்ணை எதிர்பார்க்காததில் அதிர்ந்து நின்றவள், "ஹர்ஷா...," என்று பற்களைக் கடித்துக்கொண்டு தன்னவனைப் பார்க்க, "ஆனா ஊன்னா என்னையே எல்லாத்துக்கும் பிடிக்க வேண்டியது, இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைடீ நம்பு! அந்த பொண்ணுக்கும் அதே நிக்குறானே உன் பச்ச மண்ணு அண்ணணுக்கும்தான் சம்பந்தம் இருக்கு, பேரு நந்தினி" என்று ஹர்ஷத் அறிமுகப்படுத்தி வைத்தான்.


அவளோ சங்கடமாக கைகளைப் பிசைந்தவாறு, "சாரிங்க, என் பேரு ஆராதியா" என்று தன்னை அறிமுகப்படுத்திவிட்டு புன்னகைக்க, "ம்ம் தெரியும்" என்ற நந்தினியை குழப்பமாகப் பார்த்தாள் அவள்.


அவளுடைய விழிகளைப் பார்த்து கேள்வியைப் புரிந்துக்கொண்ட நந்தினி, "அது... யுகன் சொல்லியிருக்கான். ஹர்ஷத்துக்கும் உங்களுக்கும் இடையில நடக்குற ஃபன்னியான விஷயங்கள பத்தி அடிக்கடி சொல்லுவான்" என்று சொல்லிவிட்டு யுகனின் முகத்தைப் பார்க்க, அவனோ எதுவும் பேசவில்லை.


ஹர்ஷத்தோ ஆராதியாவின் கரத்தைப் பற்றி, "சரி நந்தினி, அப்போ நாங்க வரோம். அப்பறமா பார்க்கலாம் யுகா" என்று வேகமாக அங்கிருந்து வெளியேற, "இப்போதானே வந்தேன், கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம்" என்று சிணுங்கலாக சொன்னாள் அவள்.


"அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை, அதான் அதை அவங்க பேசி தீர்க்கட்டும்னு ப்ரைவசி கொடுத்து உன்னை வெளியில அழைச்சுட்டு வந்துட்டேன். ஆமா... நீ இப்போ ஏன் இங்க வந்த ஆரு, ஆஃபீஸ் போகலையா?" என்று அவன் கேட்க, "போகணும் ஹர்ஷா, அதுக்கு முன்னாடி உன்கிட்ட பேசணும்" என்று சிறு தயக்கத்தோடு அவள் ஆரம்பிக்க, தன்னவளை கேள்வியாகப் பார்த்தான் ஹர்ஷத்.


"அது... அம்மா என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேக்காம என்னை பொண்ணு பார்க்க வர சொல்லியிருக்காங்க. நான் உன்னைதான் காதலிக்கிறேன்னு தெரிஞ்சும் அவங்க ஏன் இப்படி பண்றாங்கன்னு தெரியல. எனக்.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல ஹர்ஷா. நீ வேணா ராத்திரி வீட்டுக்கு வந்து அம்மாட்ட பேசுறியா?" என்று சோர்ந்த முகத்தோடு கேட்டாள் ஆராதியா.


'அய்யய்யோ இவகிட்ட ராத்திரி க்ளப்புக்கு போறேன்னு சொல்லவும் முடியாது, இதை எப்படியாச்சும் சமாளிச்சிரு ஹர்ஷா...' என்று உள்ளுக்குள் யோசித்தவன், "அது ஆரு... அவங்களுக்கு இன்னும் என் மேல நம்பிக்கை இல்லை. இப்போ பேசினாலும் எதுவும் சரியாக போறதில்ல. நடக்குறது நடக்கட்டும். எனக்கு வேலை கிடைச்சதும் நான் வந்து பேசுறேன். வேணும்னா வீட்டோட மாப்பிள்ளையா கூட வந்துடுறேன்னு சொல்லுறேன்" என்று குறும்புப் புன்னகையோடு சொன்னான்.


அவனின் கேலிப்பேச்சில் இதழ் பிரித்து சிரித்தவள், "நீ எதைதான் சீரியஸா எடுத்திருக்க. சரி விடு! மேனேஜ்மென்ட்ல ரொம்ப பெரெஷர் பண்றாங்க, இந்த கேஸ் பத்தி ஏதாச்சும் முக்கியமான தகவல கொண்டு வரச் சொல்லி. ஆனா... டிபார்ட்மென்ட்டுக்கே எதுவுமே கிடைக்காத பட்சத்துல ஜெர்னலிஸ்ட் எங்களால எப்படி கண்டுபிடிக்க முடியும்?" என்று சலிப்பாக சொல்ல, ஹர்ஷத்துக்கும் அவளின் நிலை நன்றாகவே புரிந்தது.


"ஆரு, இந்த கேஸ்ல நீ இன்வோல்வ் ஆனதுலயிருந்நு ஒரு மாதிரி ப்ரெஷரா இருக்க. எப்போவுமே பதட்டமா, டென்ஷனா... ஐ கென் ஃபீல் தட். நான் ஒன்னு சொல்லட்டுமா, நீ இதை விட்டுரு ஆரு, இதுலயிருந்து விலகிரு" என்று ஹர்ஷத் சொல்ல, ஒருகணம் அதிர்ந்துப் பார்த்தவள் பின் யோசனைக்குத் தாவினாள்.


"முதல் தடவை எனக்குன்னு கொடுத்த கேஸ் இது, அப்படி இருக்குறப்போ நான் விலகினா அது நல்லாவா இருக்கும்" என்று அவள் கேட்க, "நான் என்னோட ஒபீனியன சொன்னேன், தட்ஸ் இட். மத்தபடி உன்னோட விருப்பம்" என்று அவளிதழில் அழுந்த முத்தமிட்டு அவன் முன்னோக்கிச் செல்ல, அவனைத் தொடர்ந்து சென்ற ஆராதியாவுக்கும் ஏனோ தன்னவன் சொல்வது சரியென்று தோன்ற ஆரம்பித்தது.


அன்று மாலை, ஹர்ஷத்தின் வீட்டில்...


"அவளுக்கு எவ்வளவு திமிரு இருக்கணும், அவளோட தகுதி என்னன்னு கூட மறந்து ஏதோ மகாராணி மாதிரி வீட்டுக்குள்ள வந்தா. எல்லா நான் பெத்ததை சொல்லணும்" என்று மஞ்சுளா புலம்பிக்கொண்டிருக்க, தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தார் மானவ்.


சரியாக இறுகிய முகமாக வீட்டிற்குள் நுழைந்தான் அபிமன்யு.


அவன் வருவதைப் பார்த்ததும், "அபி, ஹையர் ஸ்டடீஸ்க்கு லண்டன் யூனிவெர்ஸிட்டிக்கு அப்ளே பண்றேன்னு சொன்னியே, என்னாச்சு? ஆல் ஓகே?" என்று மானவ் கேட்க, "எல்லாம் ஓகேதான் டாட், பட் எனக்கு இங்க சில கமிட்மென்ட்ஸ் இருக்கு. அதை முடிச்சதும் போயிடுவேன்" என்று அபிமன்யு சொல்ல, மஞ்சுளாவோ புருவ முடிச்சுகளோடு அவனைப் பார்த்தார்.


"என்ன, நீயும் உன் அண்ணன் மாதிரி இல்லாத எவளயாச்சும் பார்த்து வச்சிருக்கியா?" என்று அவர் கடுப்பாகக் கேட்க, "மாம் ப்ளீஸ்! இந்த மாதிரி பேசி என்னை கடுப்பாக்காதீங்க" என்று எரிச்சலாக கத்தியவாறு அவன் நகரப் போக, "அபி நில்லு!" என்று கத்தினார் மானவ்.


"இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்கியா?" என்று உள்ளுக்குள் ஒன்றை நினைத்து அவர் கேட்க, அவரை சில கணங்கள் வெறித்துப் பார்த்தவன் எதுவும் பேசாமல் மாடிப்படிகளில் ஏறி தனதறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றிவிட, பூட்டிய கதவை வேதனையோடு பார்த்து நின்றார் பெரியவர்.


இங்கு அறைக்குள் நுழைந்த அபிமன்யு தன் ஆடைகளுக்கு நடுவே மறைத்து வைத்திருந்த புகைப்படத்தை கையிலெடுத்தான். விழிகளிலிருந்து விழிநீரோட பார்த்தவாறு நின்றிருந்தவனுக்கு அழுகை தொண்டையை அடைத்தது.


கண்ணீரை அழுந்தத் துடைத்தவன் மீண்டும் குளித்து முடித்து தயாராகி வீட்டிலிருந்து வெளியேற, அன்றிரவு பணக்காரர்கள் மட்டும் வருகைத் தரும் அந்த ஹோட்டலிலுள்ள க்ளப்புக்குள் ஸ்டைலாக நுழைந்தான் ஹர்ஷத்.


"ஹேய் ப்ரீத்தி..." என்று அவளைப் பார்த்ததுமே இவன் குரல் கொடுக்க, ஆண்களுக்கு மத்தியில் அரைகுறை ஆடையோடு நடனமாடிக் கொண்டிருந்தவளோ ஹர்ஷத்தைப் பார்த்ததும் அவனை நோக்கிச் சென்று தாவி அணைத்துக்கொண்டாள்.


"இதை மட்டும் தியா அக்கா பார்த்தாங்கன்னா அவ்வளவுதான்" என்று அவள் சொல்லி சிரிக்க, ஹர்ஷத்தும் தலையை சொரிந்தவாறு சிரித்தவன், "ஏன்... இல்ல ஏன்னு கேக்குறேன், அதான் பார்க்கலல்ல!" என்றான் கேலியாக

பின்

அவளை அழைத்துக்கொண்டு பார் இருக்கும் பகுதிக்கு சென்றவன், மூக்கு முட்ட மதுவை அருந்திவிட்டு ப்ரீத்தியோடு நடனமாட, அவளோ ஹர்ஷத்தையே பார்த்திருந்தாள்.


"ஹர்ஷா, யூ நோ வாட்? எனக்கு காலேஜ்லயிருந்து உன் மேல கண்ணுதான். ஆனா உன் கண்ணுக்கு அந்த தியாவ தவிர வேற யாருமே தெரியல்லையே!" என்று ப்ரீத்தி மனதில் வன்மத்தோடு சொல்ல, "ஆமா, ஐ லவ் ஆரு.. அவன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்றான் ஹர்ஷத் போதையில் துள்ளிக் குதித்து நடனமாடியபடி.


ப்ரீத்திக்கு அத்தனை எரிச்சலாக இருந்தது. 'ச்சே! இன்னைக்கு ஒரு நைட்டாச்சும் இவன் கூட இருக்கணும். அதுக்கு என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும்' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவள், மெல்ல அவனின் கழுத்தை சுற்றி கரங்களைக் கோர்த்து அணைத்தவாறு அவனின் இதழை நோக்கி நெருங்க, தலையை பின்னோக்கி சரித்தான் ஹர்ஷத்.


"நோ ப்ரீத்தி, திஸ் இஸ் ஒன்லி ஃபார் ஆரு" என்று வாய் குளறியபடி சொன்னவன், அவளை விட்டு தள்ளி சென்று எல்லாருடனும் இணைந்து நடனமாட, விஷமமாகப் புன்னகைத்தவள், மீண்டும் ஹர்ஷத்தை நெருங்கினாள்.


"ஹர்ஷா, என் கூட வா.. இதை நீ கண்டிப்பா ட்ரை பண்ணணும்" என்று அவனை இழுத்துக்கொண்டு சென்றவள் உச்சகட்ட போதையூட்டம் மது பானங்களை அவனுக்கு குடிக்கக் கொடுக்க, "ஓ காட்! ப்ரீத்தி இனாஃப்... என்னால இதுக்கு மேல முடியல" என போதுமென்ற அளவிற்கு குடிக்க ஆரம்பித்தவனுக்கு அதிக போதையில் இருந்த கொஞ்சநஞ்ச நிதானமும் இல்லாமல் போனது.


ப்ரீத்தியும் இதுதான் சாக்கென்று அவனை அழைத்துக்கொண்டு மேடைக்கு சென்றவள் அவனின் உடலோடு உடல் உரச நடனமாட, இதை விஷம சிரிப்போடு பார்த்தவாறு தன் அலைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டன அந்த விழிகள்.


***************

மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க மக்களே... 😍
 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 07








"ஏய் ப்ரீத்தி இப்.. இப்போ என்னை எங்க கூட்டிட்டு போற?" என்று போதையில் தள்ளாடியபடி ஹர்ஷத் கேட்க, "நீயும் நானும் நிதானமா இல்லையே ஹர்ஷா பேபி, அதான் இதே ஹோட்டல்ல இன்னைக்கு வன் நைட் மட்டும் ஸ்டே பண்ண ரூம் புக் பண்ணியிருக்கேன், இன்னைக்கு ராத்திரி இங்க இருந்துட்டு நாளைக்கு மார்னிங்கே கெளம்பிடலாம்" என்று அவனை தாங்கியபடி அறையை நோக்கி அழைத்துச் சென்றாள் ப்ரீத்தி.



கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து அவன் மேல் ஒரு ஈர்ப்பில் இருந்தவளுக்கு இது ஒரு வாய்ப்பாக போக, நழுவ விடுவாளா அவள்!



அறைக்குள் நுழைந்து அவள் கதவைத் தாளிட, தலையைத் தாங்கியவாறு அப்படியே தரையில் அமர்ந்த ஹர்ஷத்திற்கு போதையில் தன்னை சுற்றி நடப்பது எதுவும் தெரியவில்லை.



"சாரி தியா அக்கா, இன்னைக்கு வன் நைட் மட்டும் நான் உரிமை எடுத்துக்குறேன்" என்று மனதில் பேசிக்கொண்டு அவள் அவனை நெருங்கி அணைக்கப் போக, "ஆரு..." என்றுக்கொண்டு அவளை அணைத்துக்கொண்டவனுக்கு அந்த போதையிலும் அவள் தன்னவள் இல்லை என்று மட்டும் நன்றாகவே புரிந்தது.



உடனே விலகி நின்றவன், "அய்யோ சா.. சாரி ஆரு.. ஆரு... என்னை மன்னிச்சிருடீ..." என்று போதையில் குளறியபடி அப்படியே தரையில் சரிந்து உறங்கிவிட, அவனை அதிர்ந்துப் பார்த்தவளோ கடுப்பில் பற்களைக் கடித்துக்கொண்டாள்.



"இந்த போதையிலும் அவ நினைப்புல தெளிவாதான் இருக்கான்" என்று அவனுக்கு கேட்காது என்ற தைரியத்தில் வாய்விட்டே சொன்னவள் மீண்டும் அவனை நாட, ஹர்ஷத்தோ எதற்கும் உடன்படவில்லை.



ஒருகட்டத்தில் முடியாமல், "ச்சே! பழம் நழுவி தரையில விழுந்த கதையாகிருச்சு. தட்ஸ் ஓகே, இவன் இல்லன்னா என்ன, நமக்கு வேற ஆளா இல்லை! நாளைக்கு இவன் எழுந்துக்குறதுக்கு முன்னாடி எழுந்து போயிடணும்" என்று நினைத்தவள் கட்டிலில் சாய்ந்துக்கொள்ள, நேரம் கடந்து ஒருமணி நேரம் கழிந்தது.



திடீரென ஹர்ஷத்தின் எண்ணிற்கு அழைப்பு வர, பாக்கெட்டில் இருந்த அலைப்பேசியின் வைப்ரேட்டில் அரைத்தூக்கமும் போதையுடனும் அலைப்பேசியை ஏற்று காதில் வைத்தான்.



"ஹெலோ..." என்று அவன் சொன்னதும்தான் தாமதம், மறுமுனையில் அபிமன்யு சொன்ன செய்தியில் மொத்த தூக்கமும் பறந்துவிட்டது அவனுக்கு.



"என்ன.. அபி.. அபி என்னாச்சுன்னு சொல்லு..." என்று அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்து அவன் பதறியபடிக் கேட்க, "ஆமா அண்ணா, திடீர்னு அப்பாவுக்கு பெயின் வந்துருச்சு. சீக்கிரம் க்ரிஷ்ணா ஹாஸ்பிடலுக்கு வா" என்றுவிட்டு அழைப்பைத் துண்டிக்க, அப்போதுதான் தான் இருக்கும் அறையை கவனித்தவன் கட்டிலில் படுத்திருந்த ப்ரீத்தியைப் பார்த்ததும் பதறிவிட்டான்.



சில விடயங்கள் மட்டும் அவனுக்கு ஞாபகத்தில் வந்து போக, தலையைத் தாங்கிக்கொண்ட ஹர்ஷத், "இப்போ இதை பத்தி யோசிக்க நேரமில்ல, மொதல்ல கெளம்புவோம்" என்று ஒரு முடிவு எடுத்தவனாக அங்கிருந்து வெளியேறிச் சென்றான்.



அதேநேரம் போகும் அவனை கேலிப் புன்னகையோடு பார்த்திருந்த அந்த விழிகள் ப்ரீத்தி இருந்த அறைக் கதவைத் தட்ட, சட்டென விழித்துக்கொண்டாள் ப்ரீத்தி.



"ஹர்ஷா எங்க போனான்?" என்று சுற்றி முற்றி தேடியவாறு கதவை நோக்கிச் சென்றவள், வேகமாக கதவைத் திறந்து யாரென்றுப் பார்க்க, முகத்தை மறைத்திருந்த அந்த உருவமோ தான் அணிந்திருந்த மாஸ்க்கை விலக்கியதும் அடுத்தகணம் அவளுடைய விழிகள் யோசனையில் சுருங்கி பின் அதிர்ச்சியில் விரிந்தன.



"நீ.. நீயா!" ப்ரீத்தியின் வார்த்தைகள் தடுமாற அவளுடைய கால்கள் பயத்தில் தானாக பின்னோக்கி நகர்ந்தன. ஒவ்வொரு அடியாக வைத்து அறைக்குள் நுழைந்த உருவமோ கதவை சாற்ற, அதேநேரம் அபிமன்யு சொன்ன ஹாஸ்பிடலுக்கு கேப்பில் சென்று இறங்கினான் ஹர்ஷத்.



வேகமாக உள்ளே ஓடியவன், ரிசெப்ஷனில் விசாரித்துவிட்டு மானவ்வை அனுமதித்திருக்கும் அறையை நோக்கிச் செல்ல, அங்கு பவ்லியனில் விழிகளை மூடி தலையை பின்னே சாய்த்து அமர்ந்திருந்தான் அபிமன்யு.



"அபி, டாடிக்கு என்னாச்சு?" என்று பதறியபடி வந்த தன் சகோதரனைப் பார்த்த அபிமன்யு சட்டென அழுதுக்கொண்டே அவனை அணைத்து, "அப்.. அப்பா திடீர்னு நெஞ்சு வலின்னு ரொம்ப துடிச்சுட்டாரு அண்ணா, இதுவரைக்கும் அப்பாவ நான் அப்படி பார்த்ததே இல்லை. என.. எனக்கு பயமா இருக்கு" என்று சொல்ல, ஹர்ஷத்திற்கும் விழிகள் கலங்கிப் போயிருந்தன.



"நா.. நான் அப்பாவ பார்க்கணும் அபி" என்று அவன் சொன்னதும், அபிமன்யுவும் அவனை அறைக்குள் அழைத்துச் செல்ல, அங்கு கணவரின் கைகளைப் பற்றி சிவந்து வீங்கிய முகத்தோடு அமர்ந்திருந்தார் மஞ்சுளா.



ஏனோ இதுவரை தன் தந்தையை கம்பீரமாகப் பார்த்து வளர்ந்த ஹர்ஷத்திற்கு தோய்ந்துப் போய் படுத்திருந்த மானவ்வை பார்த்ததும் மனம் நிலைக்கொள்ளவில்லை. கீழுதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக்கொண்டவன், தந்தையின் கரத்தைப் பற்றி "டாட்..." என்று அழைத்தான் தழுதழுத்த குரலில்.



அவரோ மயக்கத்தில் இருக்க, அதற்குமேல் அவரைப் பார்க்க தெம்பில்லாமல் அறையிலிருந்து வெளியேறியவன், அங்கிருந்த பவ்லியனில் விழிகளிலிருந்து விழிநீர் கசிய அப்படியே அமர்ந்திருக்க, தன் சகோதரனை சிறிதுநேரம் வெறித்துப் பார்த்தான் அபிமன்யு.



சில கணங்களில் தன்னை சுதாகரித்து தொண்டையை செறுமியவன், "டாக்டர் என்ன சொன்னாரு?" என்று தரையை வெறித்தவாறுக் கேட்டான்.



"அப்பாவுக்கு இது மொதல் தடவை கிடையாது. இதுக்கு முன்னாடி ஒரு தடவை ஹார்ட் அட்டேக் வந்திருக்கு, ஆனா ஒரு வார்த்தைக் கூட அவர் எங்ககிட்ட சொன்னதில்ல. இதுக்கப்பறம் சீக்கிரமா ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கலன்னா அவர காப்பாத்த முடியாதுன்னு சொன்னாங்க" என்று அபிமன்யு சொல்ல, விழிகளை அழுந்த மூடித் திறந்தான் ஹர்ஷத்.



"ட்ரீட்மென்ட்ட ஆரம்பிக்க சொல்லு அபி" என்று அவன் அழுத்தமாக சொல்ல, "ஆனா அண்ணா... அம்மா பயப்படுறாங்க" என்று அபி தயக்கத்தோடு சொல்ல, ஹர்ஷத்தோ விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தான்.



"ஆரம்பிக்க சொல்லு அவ்வளவுதான், என்னால அவர இப்படி பார்க்க முடியல" என்று பேசிக்கொண்டே சென்றவனுக்கு அழுகையில் தொண்டை அடைக்க, அபிமன்யுவுக்கு தன் சகோதரனின் மனநிலையை நன்றாகவே புரிந்துக்கொள்ள முடிந்தது.



ஹர்ஷத்தின் முதுகை ஆறுதலாகத் வருடியவன் அவனுக்கு தனிமைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துச் செல்ல, அன்றைய நாள் கழிந்து அடுத்த நாளும் விடிந்தது.



"ஹர்ஷா, ரொம்ப நேரமா இங்க இருக்க. வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ஃப்ரெஷ் ஆகிட்டு வா, மதியத்துக்கு அப்பறம் அப்பாவுக்கு ஆப்ரேஷன் ஸ்டார்ட் ஆகுது. நீதான் இங்க இருக்கணும்" என்று மஞ்சுளா சொல்ல, இரவு முழுக்க உறங்காததில் அத்தனை களைப்பில் இருந்தவனுக்கு உறக்கம் தேவைப்பட்டது போலும்!



அவரின் வார்த்தைகளை மறுக்காமல் அங்கிருந்து வெளியேறி வீட்டிற்குச் சென்றவன் உடையைக் கூட மாற்றாது அப்படியே கட்டிலில் விழ, அடுத்தகணமே அவனை ஆழ்ந்த உறக்கம் தழுவியது.



ஆனால், அதுதான் அவனுடைய இறுதி நிம்மதியான உறக்கம் என்று அவனுக்கு அப்போது தெரியவில்லை.



இரண்டுமணி நேரங்கள் கடந்திருக்க, அவனின் அறைக் கதவை யாரோ வேகமாக தட்டும் சத்தம் கேட்க, கஷ்டப்பட்டு விழிகளைத் திறந்துப் பார்த்தவனுக்கு கட்டிலிலிருந்து எழக் கூட மனமில்லை.



ஆனால் கதவைத் தட்டும் வேகமும் சத்தமும் அதிகரித்துக்கொண்டே போக, முயன்று எழுந்துச் சென்று கதவைத் திறந்தவனுக்கு தன் முன்னே நின்றிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்ததும் மொத்த தூக்கமும் கலைய, காரணம்தான் சுத்தமாகத் தெரியவில்லை.



"என்னாச்சு சார்?" என்று அவன் புரியாமல் கேட்க, "ஹோட்டல்ல ப்ரீத்தி அப்படிங்குற பொண்ண கொடூரமா கொலை பண்ணதுக்காக உங்கள நாங்க அர்ரெஸ்ட் பண்றோம் மிஸ்டர் ஹர்ஷத். மானவ் சாரோட பையன் அப்படிங்குறதாலதான் இவ்வளவு மரியாதையா அழைச்சுட்டு போக வந்திருக்கோம். இல்லன்னா எங்க நடவடிக்கையே வேற மாதிரி இருந்திருக்கும்" என்று சொன்ன அதிகாரியை அதிர்ந்துப் பார்த்தான் ஹர்ஷத்.



அவர் சொன்னதை கிரகிக்கவே அவனுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட, "கொலை பண்ணேனா?" என்று அதிர்ந்து ஒலித்தது அவனுடைய குரல்.



"கொலைய பண்ணிட்டு தெரியாத மாதிரி கொலைகாரன் நடிக்கிறதை எல்லாம் நாங்க பல தடவை பார்த்துட்டோம். எங்களுக்கு அவ்வளவா நேரமில்ல, நீங்க காப்பரேட் பண்ணீங்கன்னா சீக்கிரமா போயிடலாம்" என்ற அதிகாரி வாசலைக் காட்ட, இவனுக்கோ தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. கிட்டத்தட்ட தலையே சுற்றிவிட்டது.



"நா.. நான் எந்த கொலையும் பண்ணல சார், திஸ் இஸ் அன்ஃபெயார்! நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு..." என்று ஹர்ஷத் தடுமாற, "அதையெல்லாம் ஸ்டேஷன்ல போய் பேசிக்கலாம்" என்ற அதிகாரி அவனை இழுத்துக்கொண்டு சென்று போலீஸ் வண்டியில் ஏற்றினார்.



மொத்த உலகமும் சூனியமானது போலாக நடப்பது புரியாமல் ஸ்டஷனுக்கு சென்றான் ஹர்ஷத்.



அரை மணித்தியாலம் கழித்து,



"சார், நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க, சத்தியமா எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று ஹர்ஷத் அந்த அதிகாரிகளோடு போராடிக்கொண்டிருக்க, அங்கிருந்தவர்களோ தத்தமது வேலைகளை செய்தனரே தவிர அவனை கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை.



"ப்ளீஸ்! நான் பேசுறத கொஞ்சமாச்சும் கேளுங்க... சார்... சார்..." என்று அவன் அங்கிருந்த சிறைக்குள் நின்று கம்பிகளைப் பிடித்தவாறு கத்திக்கொண்டிருக்க, சரியாக ஸ்டேஷனுக்குள் அதிரடியாக நுழைந்தான் ப்ரணவ்.



"ப்ரணவ் சார்... உங்களுக்கு என்னை நல்லா தெரியும்ல, நா.. நான் சத்தியமா இந்த கொலைய பண்ணல. ப்ளீஸ் ட்ரஸ்ட் மீ!" என்று இவன் கத்தவும், "சார், உங்களுக்கு இவன தெரியுமா என்ன, வந்ததுலயிருந்து வாய மூடுறானே இல்லை, கத்திக்கிட்டே இருக்கான். எந்த கொலைக்காரன்தான் அவன் பண்ண தப்ப ஒத்துக்கிட்டிருக்கான் இவன் ஒத்துக்க!" என்று சலிப்பாக சொல்லிவிட்டு ஒரு அதிகாரி அவர் பாட்டிற்கு செல்ல, ஹர்ஷாவின் அருகே சென்றான் ப்ரணவ்.



"ஐ அம் சாரி ஹர்ஷா, என்னால இந்த விஷயத்துல எதுவுமே பண்ண முடியாது. நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க" என்று அவன் சொல்ல, மற்றவனோ கேள்வியாக விழிகளை சுருக்கினான்.



"நேத்து ராத்திரி நீங்க பரீத்தி கூட ஹோட்டல் ரூம்ல ஸ்டே பண்ணியிருக்கீங்க ரைட்?" என்று ப்ரணவ் விழிகளில் கூர்மையோடுக் கேட்க, "அது சார்..." என்று விளக்கப்படுத்த வந்தவனைக் குறுக்கிட்டு கை நீட்டி தடுத்தான் மற்றவன்.



"கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க" என்று அழுத்தமாக அந்த அதிகாரி சொன்னதும், ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு, "யெஸ் சார்" என்று ஹர்ஷா நிறுத்தியது மட்டும்தான் அடுத்தகணம் அலட்சியமாக தோளைக் குலுக்கிவிட்டு அவன் நடந்துச் செல்ல, சரியாக அபிமன்யுவோடு பதற்றமாக உள்ளே நுழைந்தாள் ஆராதியா.



"ஆரு..." என்ற ஹர்ஷத்தின் குரல் அதிர்ச்சியோடு ஒலிக்க, "அண்ணா என்னாச்சு? வீட்டுலயிருந்த கண்ணம்மா கால் பண்ண போய்தான் எனக்கும் அம்மாவுக்கும் விஷயமே தெரியும். என்னதான் பண்ணி தொலைச்சீங்க?" என்று கேட்டான் அபிமன்யு.



தியாவோ தன்னவனையே விழிகள் கலங்க பார்த்துக்கொண்டிருக்க, அவளுடைய விழிகளைப் பார்க்க வெட்கப்பட்டு முகத்தை திருப்பிக்கொண்ட ஹர்ஷத், "அது... நேத்து ராத்திரி நான் க்ளப்புக்கு போன ஹோட்டல்ல ஒரு மர்டர் நடந்திருக்கு, அதுக்கு நான்தான் காரணம்னு நினைச்சு என்னை பிடிச்சுட்டாங்க" என்று தான் செய்ததை மறைத்து சொன்னான்.



"ஓ ஷீட்! அண்ணி, உள்ள இருக்குற ப்ரணவ் சார உங்களுக்கு தெரியும்ல, அவர்கிட்ட கொஞ்சம் பேசி பாருங்க ப்ளீஸ்!" என்று அபி சொல்ல, தியாவோ அங்கிருந்த அதிகாரிகளிடம் சொல்லி அனுமதி வாங்கிவிட்டு அவனின் அறைக்குள் நுழைந்தாள்.



அவளைப் பார்த்ததும், "ஹாய் தியா, தயவு செஞ்சு இந்த விஷயத்துல என்கிட்ட ஹெல்ப்னு கேக்காத, என்ட் எஃப் ஐ ஆர் கூட ஃபைல் பண்ணியாச்சு, சிசிடீவி கேமரா எவிடென்ஸ் இருக்கு. எதுவுமே பண்ண முடியாது" என்று ஒரே முடிவாக ப்ரணவ் சொல்லிவிட, ஆராதியா இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.



அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அவளுக்கு. இருந்தும், முயற்சியை விடவில்லை அவள்.



"அதெப்படி ப்ராபர் இன்வெஸ்டிகேஷன் இல்லாம இந்த கொலை பழிய ஹர்ஷா மேல போடுவீங்க? எனக்கு தெரியும், இதை ஹர்ஷா பண்ணியிருக்க வாய்ப்பே இல்லை" என்று ஆக்ரோஷமாக அவள் கத்த, 'ஊஃப்..' என்று பெருமூச்சுவிட்டான் ப்ரணவ்.



"ஹவ் கென் யூ ப்ளீவ் திஸ்? என்ட் அபார்ட் ஃப்ரொம் திஸ், அவன் இவ்வளவு பண்ணியும் உன்னால எப்படி அவன் கூட இருக்க முடியுது தியா? அவனுக்கு சார்பா நீ பேசுறத என்னால ஏத்துக்கவே முடியல" என்று அவன் ஒருவித ஆதங்கத்தோடுப் பேச, இவளுக்கோ அவன் இவ்வாறு சொல்வதற்கான காரணம் சுத்தமாகத் தெரியவில்லை.



"இல்லை எனக்கு புரியல.. என்ன சொல்ற?" என்று ஆராதியா புருவ முடிச்சுகளோடுக் கேட்க, அந்த ஹோட்டல் ரூமில் எடுத்த புகைப்படத்தைக் காட்டிய ப்ரணவ், "லுக் தியா, இன்னைக்கு காலையில எடுத்த ஃபோட்டோ இது. அந்த ஹோட்டல்ல இருந்த ரூம்லதான் கொலை நடந்திருக்கு. இதுக்கு முன்னாடி கரண் என்ட் அனிதாவுக்கு நடந்த மாதிரி.. சேம் பெட்டர்ன்ல" என்று சொல்லிவிட்டு சிசிடீவி கேமரா காணொளியைக் காட்டினான்.



அதில் ஹர்ஷத் மற்றும் ப்ரீத்தி போதையில் தள்ளாடியபடி அந்த அறைக்குள் செல்வது போலும் இன்னொரு காணொளியில் அவன் அறையை விட்டு பதற்றமாக வெளியே வருவதும் தெளிவாக இருக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஆராதியாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிய இதயத்தை குத்திக் கிழிக்கும் வலி அவளுக்குள்.



பெண்களோடு அவன் நெருக்கமாக பேசுவதும் அவனைப் பற்றிய அரசல் புரசலாக சில விடயங்கள் அவளின் காதுக்கு வருவது உண்மைதான். ஆனால், வேறொரு பெண்ணுடன் அறைக்குள் ஒன்றாக இருப்பது வரை தன்னவன் செல்வான் என அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.



"நீ என்ன பண்ணாலும் ஹர்ஷத்த காப்பாத்த முடியாது தியா, என்ட் இப்போ இந்த மொத்த கேஸும் ஹர்ஷத்துக்கு எதிராதான் இருக்கு. அவன் உனக்கு பண்ணது துரோகம், அவன்கிட்டயிருந்து தப்பிச்சிட்டேன்னு சந்தோஷப்படு! இதுக்கப்பறம் இந்த கேஸ்ல நீ தலையிடாத, நாளைக்கு கோர்ட்டுக்கு போனா கன்ஃபார்ம் இனி வாழ்க்கை பூரா ஜெயில்தான்" என்று அழுத்தமாக ப்ரணவ் சொல்ல, நடைபிணம் போல் அவனின் அறையிலிருந்து வெளியேறினாள் ஆராதியா.



அதேநேரம் தன் சகோதரனிடம் புலம்பித் தள்ளிக்கொண்டிருந்தான் ஹர்ஷத்.



"ஆனா அண்ணா, நீ பண்ண காரியம் மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சதுன்னா நீ காலி" என்று அபிமன்யு சொல்ல, "டேய் அந்த ரூமுக்கு போகும் போது நான் நானாவே இல்லை, எல்லா அவ வேலைதான். ஆனா இப்படி செத்து தொலைஞ்சு அந்த பழி என் மேல வரும்னு நான் நினைச்சும் பார்க்கல. வாழ்க்கையே தலைகீழான மாதிரி இருக்கு. நான் தப்பு பண்ணல, ஐ ஸ்ட்ரோங்லி பிளீவ், ஆரு என்னை நம்புவா" என்றவனின் வார்த்தைகளில் அத்தனை உறுதி.



சரியாக அவன் முன்னே வந்து நின்ற ஆராதியாவின் விழிகள் சிவந்து கலங்கிப் போயிருக்க, அவளின் பார்வைக்கான அர்த்தத்தைப் புரிந்துக்கொண்ட ஹர்ஷத்திற்கு மொத்த உலகமும் சூனியமானது போலாகிவிட்டது.



***********


உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க மக்களே... 👇
https://aadvikapommunovels.com/threads/மையவிழிப்-பார்வையிலே-கதை-திரி.2551/post-61396
 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 08







ஹர்ஷத்தின் முன்னே நெற்றி நரம்புகள் புடைக்க ஆராதியா நின்றிருக்க, அவளின் பார்வைக்கான அர்த்தத்தைப் புரிந்துக்கொண்டவனின் இதயமோ படுவேகமாகத் துடித்தது.


"ஆரு..." என்று ஒருவித தயக்கத்தோடு ஹர்ஷத் அவளை அழைக்க, "வாய மூடு!" என்ற ஆராதியாவின் கத்தலில் மொத்த ஸ்டேஷனும் அவளைதான் திரும்பிப் பார்த்தது.


"ஆரு ப்ளீஸ் நான் சொல்றதை கேளு..." என்று விழிகளை சுருக்கி கெஞ்சியவாறு அவன் ஏதோ பேச வர, "ச்சீ... எதுவும் பேசாத! உன்னை போய் நான் காதலிச்சேன் பாரு, என்னை சொல்லணும். துரோகி, எப்படிடா உனக்கு என்னை ஏமாத்த மனசு வந்துச்சு? நமக்கு நடுவுல மட்டும் இந்த கம்பிங்க இல்லன்னா சத்தியமா உன்னை அறைஞ்சிருப்பேன்" என்று விழிகள் சிவக்கக் கத்தினாள் அவள்.


அபிமன்யுவுக்கும் தன் சகோதரன் சார்பாக எதுவும் பேச முடியவில்லை. அவன் அமைதியாக நின்றிருக்க, "ஆரு, ப்ளீஸ்! நிஜமாவே தப்பு என் மேல இல்லைடீ. நான் உன்கிட்ட பொய் சொல்லியிருக்கேன்தான், நிறைய தப்பு பண்ணியிருக்கேன். ஆனா இந்த ஒரு தடவை என்னை நம்புடீ, ப்ரீத்திதான் என்னை..." என்று அவன் அவளை நம்ப வைக்க முயற்சிக்க, விரக்தியாகப் புன்னகைத்தாள் ஆராதியா.


"உன்னை திரும்பத் திரும்ப நம்பி நான்தான் முட்டாளா இருக்கேன். இப்போ கூட என்ன ஏதுன்னு தெரியாம துடிச்சு போயிட்டேன்டா. ஆனா நீ... ச்சீ! எல்லாமே வெறுத்துப் போயிருச்சு, போதும் எல்லாமே போதும்" என்று அவள் விழிகளிலிருந்து விழிநீர் ஓட வலி நிறைந்த பார்வையோடு சொல்ல, ஏனோ ஹர்ஷத்திற்கு அவளின் பார்வையால் உள்ளுக்குள் சுள்ளென்று வலி எடுத்தது.


"ஆரு ப்ளீஸ்டீ, இப்படி பேசாத! என்னால தாங்க முடியலடீ. என்னை விட்டு போயிராதடீ! டேய் அபி சொல்லுடா" என்ற ஹர்ஷத்தின் விழிகளும் கலங்க, இமை சிமிட்டி அதை அடக்க முயற்சித்தவனின் விரல்கள் கம்பிகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டன.


"அண்ணி அது..." என்று அபிமன்யுவும் ஏதோ சொல்ல வர, "எதுவும் பேசாதீங்க அபி, இனி எல்லாமே முடிஞ்சு போச்சு. உங்க அண்ணன இந்த கேஸ்லயிருந்து காப்பாத்த முயற்சி பண்ணுங்க. எவ்ரிதிங் இஸ் ஓவர்" என்றுவிட்டு தன்னவனை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்தவள் அதற்குமேல் ஒருகணம் இருந்தால் கூட மனம் மாறி விடுவேனோ என்று பயந்தே அழுதுக்கொண்டே அங்கிருந்து வெளியேறி விட, ஹர்ஷத்திற்கு இதயத்தை ஈட்டியால் குத்திக் கிழிக்கும் வலி.


"ஆரு... ஆரு ப்ளீஸ் என்கிட்ட வாடீ! ஆரு என்னை விட்டு போகாத, ஆரு..." என்று சுற்றி முற்றி எதையும் கண்டுகொள்ளாது தன்னவளின் பெயரை சொல்லி கத்திக்கொண்டிருந்த ஹர்ஷத் விட்டால் அந்த கம்பிகளைக் கூட தகர்த்தெறிந்து விட்டு தன்னவளை நோக்கி ஓடி விடுவான்.


ஆனால், எல்லாமே அவனின் கையை மீறி நடக்க, எதுவுமே செய்ய முடியாத நிலையில் போகும் தன்னவளையே பார்த்தவாறு நின்றிருந்தான் ஹர்ஷத்.


இங்கு வீட்டிற்கு வந்த ஆராதியாவோ லலிதா அழைப்பதைக் கூட கண்டுகொள்ளாது அறைக்குள் நுழைந்தவள், அறையிலிருந்த மொத்தப் பொருட்களையும் தூக்கி போட்டு உடைக்க, வைஷ்ணவியும் லலிதாவும் பதயபடி வந்தனர்.


"என்னாச்சு தியா, ஏன்டீ எல்லாத்தையும் இப்படி உடைக்கிற? என்னன்னு சொல்லுடீ!" என்று லலிதா பதற்றமாகக் கேட்க, "அக்கா, நிறுத்து! ஏன் இப்படி பைத்தியம் பிடிச்ச மாதிரி நடந்துக்குற" என்று ஆராதியாவின் கரத்தைப் பிடித்தாள் வைஷ்ணவி.


அவளை உதறிவிட்டவள், "வெளியில போங்க, இரண்டு பேரும் வெளியில போங்க. யாரும் தேவையில்ல எனக்கு, என்னை கொஞ்சம் தனியா விடுங்க!" என்று கத்திக்கொண்டு இருவரையும் வெளியே தள்ளி கதவை அடித்து சாத்த, லலிதாவோ தன் சின்ன மகளை திகைத்துப் போய் பார்த்தார்.


வைஷ்ணவிக்கும் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பூட்டிய கதவை அவள் வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, உள்ளே கதவை சாற்றிவிட்டு கதவில் சாய்ந்தவாறு அப்படியே தரையில் அமர்ந்தவள் கண்ணீர் தீர்ந்துவிடும் அளவிற்கு தன் நிலையை நினைத்து கதறியழுதாள்.


அவளால் ஹர்ஷத் செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வாய்விட்டு அழுதால் மனதிலுள்ள பாரம் இறங்கும் என்று சிலர் சொல்லுவர்,


ஆனால் ஆராதியாவின் விடயத்தில் அதுவும் பொய்யாகித்தான் போனது.
அவனுடனான நினைவுகள் அவள் மனதிலுள்ள பாரத்தை மேலும் ஏற்ற, அவளை கொல்லாமல் கொன்றன.


அதேநேரம் விஷயத்தை கேள்விப்பட்ட மஞ்சுளாவுக்கு தலையில் இடி விழுந்த உணர்வு.


"என்ன அபி சொல்லுற, அப்.. அப்பாவுக்கு இப்போதான் ஆப்ரேஷன் முடிஞ்சிருக்கு. இன்னும் மயக்கத்துலயிருந்து கூட விழிக்கல. இப்போ போய் இந்த மாதிரி... அய்யோ!" என்று அவர் தலையில் கை வைத்தவாறு அப்படியே தொப்பென்று அமர, "ஆமாம்மா, எதுவுமே பண்ண முடியல. எல்லா எவிடென்சும் அண்ணாவுக்கு எதிரா இருக்கு. என்ட் அப்பா கண் விழிச்சாலும் இதை பத்தி சொல்ல கூடாது. அண்ணா எங்கன்னு கேட்டாருன்னா ஏதாச்சும் சொல்லி சமாளிச்சிருங்க" என்றான் அபி.


மஞ்சுளாவுக்கும் அதுதான் சரியென்று தோன்றியது. ஒரு பக்கம் கணவன் படுக்கையில் கிடக்க, இன்னொரு பக்கம் மகன் சிறையில் இருக்க என உடைந்துப் போய் அமர்ந்திருந்தார் அவர்.


அடுத்தநாள் எல்லா செய்தி சேனல்களிலும் ஹர்ஷத்தை பற்றிதான் பரபரப்பாக பேசப்பட்டது. மக்களுக்கிடையிலும் பாதி பொய்யும் பாதி மெய்யுமாக பல தகவல்கள் பரப்பப்பட, இங்கு நீதிமன்றத்தில் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தான் ஹர்ஷத்.


அத்தனை ஆதாரங்களும் அவனுக்கு எதிரா இருந்ததாலும் முதல் இரண்டு கொலைகள் போல ப்ரீத்தியின் கொலை அமைந்ததாலும் மூன்று கொலைகளும் ஹர்ஷத் செய்ததாக பழி சுமத்தப்பட்டு பதினைந்து வருடங்கள் அவனுக்கு சிறை தண்டனை கொடுக்கப்பட, அவனோ எதையும் நிரூபிக்க முடியாத நிலையில் இருந்தான்.


இங்கு தொலைக்காட்சிக்கு முன் அதிர்ந்துப் போய் அமர்ந்திருந்தான் யுகன். தன் நண்பனைப் பற்றி செய்தியைக் கேட்டவனுக்கு கிட்டத்தட்ட எதுவுமே புரியவில்லை.


'இல்லை, கண்டிப்பா ஹர்ஷா மேல தப்பில்ல. ஏதாச்சும் பண்ணியே ஆகணும்' என்று வாய்விட்டே முணுமுணுத்தவன் உடனே நந்தினிக்கு அழைக்க, சில கணங்களிலேயே அழைப்பை ஏற்றாள் அவள்.


"ஹெ.. ஹெலோ நந்தினி, ஹர்ஷா இப்போ ஜெயில்ல இருக்கான், அந்த மூனு கொலையோட பழியும் இப்போ அவன் மேல விழுந்திருக்கு. ஆனா அவன் தப்பு பண்ணல" என்று யுகன் பேசிக்கொண்டே போக, மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ!
உடனே வீட்டிலிருந்து வெளியேறி அவன் தன்னவளை தேடிச் செல்ல, இங்கு மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டான் ஹர்ஷத்.


அவனுக்கான வெள்ளை ஆடை வழங்கப்பட்டு அவனுக்கான அறைக்கு சிறை காவலாளி அழைத்துச் செல்ல, "வெயிட்!" என்ற ப்ரணவ், ஹர்ஷத்தின் அருகே வந்து "நீ தியாவுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லை. நீ பண்ண காரியத்தால அவ ரொம்ப உடைஞ்சு போயிட்டா, இதுக்கப்பறமாச்சும் நிதர்சனத்த புரிஞ்சுகிட்டு அவ நிம்மதியா இருக்கட்டும்" என்று கோபத்தோடு சொல்ல, விழிகளை மட்டும் உயர்த்தி அவனை ஒரு பார்வைப் பார்த்தான் அவன்.


அவனின் பேச்சுக்கு மறுவார்த்தை ஒன்று கூட பேசவில்லை. இறுகிய முகமாக அவனுடைய விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தவன், எதுவும் பேசாமல் அந்த காவலாளி அதிகாரியோடு முன்னோக்கி செல்ல, ப்ரணவ்வோ இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிக்கொண்டான்.


ஒரே இரவு, யாரும் எதிர்பார்க்காத மொத்தப் பேரின் தலையெழுத்தையும் மாற்றிவிட, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையில் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.


கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிந்த நிலையில்,


"இப்போவாச்சும் அவன பத்தி புரிஞ்சுக்கிட்டியே, அதுவே போதும் தியா. இதுக்கப்பறமாச்சும் அவன மாதிரி ஆளுங்ககிட்ட ஏமாறாத!" என்று வருண் பேசிக்கொண்டே போக, ஆராதியாவோ எதுவும் பேசவில்லை. லேப்டாப்பை தட்டியவாறு இறுகிய முகமாக திரையிலேயே பார்வையைப் பதித்திருந்தாள்.


"ச்சே! அவன பத்தி அப்போவே நான் உன்கிட்ட சொன்னேன், அவன் பொண்ணுங்க விஷயத்துல சரியே இல்லை தியா. உன்னை மாதிரி பொண்ணுங்க நம்புறதாலதான் அவன மாதிரி ஆளுங்க அட்வான்டேஜ் எடுத்துக்குறாங்க. தேங்க் காட், நீ தப்பிச்சுட்ட. ஆமா... நியூஸ்ல சொல்ற மாதிரி அந்த பொண்ணு இறந்து போறதுக்கு முன்னாடி ஹோட்டல்ல ரூம் போட்டிருக்கானா என்ன!" என்று அவன் வேண்டுமென்றே அவளின் கோபத்தை தூண்ட, அவளோ தன் கோபம் மொத்தத்தையும் கீபோர்டில்தான் காண்பித்தாள்.


அதை திருப்தியாகப் பார்த்த வருண் மெல்ல அவளருகே தன் கதிரையை இழுத்துப் போட்டு, "தியா, யூ நோ வாட்! எனக்கு எப்போவுமே உன் மேல அக்கறை இருக்கு. அதனாலதான் நீ வேணாம்னு சொன்னாலும் நான் உன் பின்னாடியே வரேன். அந்த ஹர்ஷத் எல்லாம் ஒரு ஆளா! ஐ கென் ஃபீல் யூவர் பெயின். டோன்ட் வொர்ரி, நான் உனக்காக இருக்கேன், ஐ வில் ஆல்வேய்ஸ் பீ தெயார் ஃபார் யூ" என்று சொல்லியவாறு அவளின் கரத்தின் மேல் தன் கரத்தை வைத்தான்.


தன் கரத்தின் மீதிருந்த அவனின் கரத்தை அதிர்ச்சியாகப் பார்த்த ஆராதியா, ப

க்கவாட்டாகத் திரும்பி அவனை ஒரு பார்வைப் பார்த்தாள்.


வருணோ அவளுடைய பதிலை ஆர்வமாக எதிர்பார்க்க, "ஹர்ஷா சொன்னது கரெக்ட்தான்" என்று இறுகிய குரலில் அவள் சொன்னதும், "என்ன சொன்னான்?" என்று புரியாமல் கேட்டான் அவன்.


அடுத்தகணம் கொஞ்சமும் யோசிக்காமல் அவனின் கன்னத்தில் அவள் ஓங்கி அறைந்திருக்க, அவள் அறைந்த கன்னத்தைப் பொத்திக்கொண்டவனோ இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.


"தியா..." அவனுடைய குரல் அதிர்ந்து ஒலிக்க, "இதுக்கப்பறம் என் முன்னாடி வந்துராத, கொன்னுருவேன்" என்று மிரட்டியவள் தன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி கேன்டீனில் சென்று அமர்ந்துக்கொள்ள, மீண்டும் ஹர்ஷாவின் முகமே அவளின் மனக்கண் முன் தோன்றி மறைந்தது.


விழிகளை அழுந்த மூடித் திறந்தவள் திடீரென என்ன நினைத்தாளோ ப்ரீத்தியின் மரணம் குறித்து செய்திகளில் வந்த புகைப்படங்களை அவசரமாக எடுத்துப் பார்த்தாள்.


சில கணங்கள் அந்த புகைப்படத்தையே புருவ முடிச்சுகளோடு அவள் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, அதேநேரம் ஹர்ஷத்தின் வீட்டில் கட்டிலில் சாய்ந்திருந்த மானவ்வோ தன் விழிகளை பார்க்க தயக்கப்பட்டு எங்கோ முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்த தன் மனைவியைதான் கூரிய பார்வையோடு பார்த்துக்கொண்டிருந்தார்.


"நான் உன்கிட்டதான் கேக்குறேன் மஞ்சுளா, ஹர்ஷா எங்க? நான் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனப்போ அவன கடைசியா பார்த்தது, ஒரு வாரமா அவன நான் பார்க்கவே இல்லை. டிஸ்சார்ஜ் ஆனப்போ கூட அவன் வரல, இங்க என்னதான் நடக்குது?" என்று அவர் கத்திக்கொண்டிருக்க, அந்த கத்தலை கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தான் அபிமன்யு.


"அப்பா ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க, அண்ணா அப்ரோட் போயிருக்கான், சீக்கிரமா வந்துடுவான்" என்று அவன் சொல்லி சமாளிக்க முயற்சி செய்ய, "என்ன! அன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ற அன்னைக்கு அவன் வேலை விஷயமா எங்கேயோ போயிருக்கான்னு சொன்னீங்க, இப்போ அப்ரோட். நான் ஒரு அட்வகேட்னு மறந்துட்டு பேசுறீங்கன்னு நினைக்கிறேன்" என்று விழிகளை கூர்மையாக்கிச் சொன்னார் மானவ்.


அபிமன்யுவோ தன் அம்மாவைப் பார்க்க, "இதுக்கு மேல மறைக்க தேவையில்ல அபி, நடந்தத சொல்லிரு" என்று மஞ்சுளா அழுதபடி சொல்ல, மானவ்விற்கு ஒன்றுமே புரியவில்லை.


"என்னாச்சு அபி, என்னன்னு சொல்லு" என்று இப்போது மானவ் பதற, உடனே அவரின் அருகே அமர்ந்து அவரின் கரத்தைப் பற்றிக்கொண்டான் அபிமன்யு.
"டாட், இப்போதான் உங்களுக்கு ஆப்ரேஷன் பண்ணியிருக்கு, ரொம்ப ஷாக்கான இல்லன்னா எமோஷனலான எதையும் உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு சொன்னாங்க. அதனாலதான் பயத்துல நான் உங்க ஃபோன கூட உங்ககிட்ட கொடுக்கல. ஆனா... இப்போ சொல்லாம இருக்க முடியல" என்றுவிட்டு ஹர்ஷத் தொடர்பான செய்தியை தன் அலைப்பேசியில் அவருக்கு காண்பித்தான் அவன்.


அதைப் பார்த்த பெரியவருக்கு ஒருகணம் இது கனவாக இருக்கக் கூடாதா என்றுதான் தோன்றியது. அதிர்ந்துப் போய் அமர்ந்திருந்தவரின் தோளில் சாய்ந்து மஞ்சுளா அழ ஆரம்பிக்க, மானவ்விற்கு எதையும் உணர முடியவில்லை.


அடுத்தநாள்,


வேலை செய்ய மனமில்லாமல் தன்னவனைப் பற்றி யோசித்தவாறு விழிகளை மூடி தலையை பின்னே சாய்த்து அமர்ந்திருந்த ஆராதியாவுக்கு திடீரென ஒரு அழைப்பு வந்தது,


திரையைப் பார்த்தவள் அதில் தெரிந்த பெயரை யோசனையோடுப் பார்த்துவிட்டு அழைப்பை ஏற்க, "ஹெலோ தியா அண்ணி, நான் உங்க ஆஃபீஸ் வெளியிலதான் இருக்கேன்" என்று அபிமன்யு சொல்ல, அழைப்பைத் துண்டித்தவள் விழிகளை மூடி சில கணங்கள் யோசித்துவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.


அவளுடைய ஆஃபீஸுக்கு முன்னே தன் புல்லட்டில் சாய்ந்தவாறு அவன் நின்றுக்கொண்டிருக்க, அவனருகே சென்றவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள் என்றால், அபிமன்யுவோ கைகளை தயக்கமாக பிசைந்தவாறு பேச்சை ஆரம்பித்தான்.


"அது அண்ணி... ஹர்ஷா அண்ணா இந்த கொலைய பண்ணலன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்ல, அவர வெளியில எடுக்க ட்ரை பண்ணலாமே!" என்று அபி தயங்கித் தயங்கிக் கேட்க, "நான் எதுக்கு பண்ணணும், எனக்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தனுக்காக என்னோட நேரத்தை நான் வேஸ்ட் பண்ண விரும்பல" என்றாள் அவள் வெடுக்கென்று.


அபிமன்யுவுக்கு ஆராதியாவிடம் எப்படி பேசுவதென்றே தெரியவில்லை. "அண்ணி என் அண்ணா எப்படிபட்டவன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அவனுக்காக நான் என்னைக்கும் பேசினது கிடையாது. ஆனா... இப்போ பேசுறேன்னா அதுக்கு காரணம் இருக்கு" என்று சொல்ல, அவனை கேள்வியாகப் பார்த்தாள் அவள்.


******************


அதேநேரம் இங்கு சிறைச்சாலை கம்பிகளில் சாய்ந்திருந்த ஹர்ஷத்தின் ஒற்றை விழியிலிருந்து ஒரு சொட்டு விழிநீர் வழிந்து தரையைத் தொட, "ஆரு..." என்று அவனுடைய இதழ்கள் முணுமுணுத்தன


கடைசியாக அவள் பார்த்த வலி நிறைந்த பார்வையே அவனின் மனக்கண் முன் வந்து செல்ல, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த விழிகளை அழுந்த மூடித் திறந்தான் அவன்.


திடீரென அவன் சாய்ந்திருந்த கம்பிகளை தடியால் தட்டிய அதிகாரி, "உனக்கு ஒரு பார்சல் வந்திருக்கு" என்று சொல்லி பூட்டைத் திறந்து கையிலிருந்த பூங்கொத்தை அவனிடம் கொடுக்க, புருவ முடிச்சுகளோடு அதை கையில் வாங்கிக்கொண்டவனுக்கு யார் இதை அனுப்பியது என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுந்தது.


அந்த பூங்கொத்தை வெறித்துப் பார்த்தவன், "இதை யார் கொண்டு வந்தது?" என்று கேட்க, "தெரியல, ஒரு பொண்ணு கொண்டு வந்து கொடுத்திச்சு. முகத்தை மறைச்சிருந்ததால யாருன்னு தெரியல" என்றுவிட்டு அந்த அதிகாரி சென்றுவிட, அந்த பூங்கொத்தில் இருந்த சிறிய கார்டை பார்த்தான் ஹர்ஷத்.


அதில் "தேங்க் யூ.." என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்க, அதை புரியாமல் பார்த்தவாறு நின்றிருந்தவனின் இதழ்கள், "யாருடீ நீ?" என்று முணுமுணுக்க, பற்களைக் கடித்துக்கொண்டான் அவன்.

**************


Waiting for ur comments... 😍😍
 
Status
Not open for further replies.
Top